சனி, 30 டிசம்பர், 2023

அனல் -2







 து என் அத்தை வீடு.. !! இங்கு ஒரு விசேசமும் இல்லை.. !!


அத்தை வீட்டிலும் ஒரு நான்கு நாட்கள்.. உண்டு விட்டு போகலாம் என்கிற எண்ணத்தில் சும்மாதான் வந்திருக்கிறேன்.. !!


என் அத்தைக்கு.. ஒரு மகள்.. ஒரு மகன்.. !! இரண்டு பேருக்குமே திருமணமாகி விட்டது.. !! இருவரும் வேறு வேறு ஊர்களில் போய் செட்டிலாகி விட்டார்கள்.. !!


 இப்போது இந்த வீட்டில் என் அத்தையும் மாமாவும் மட்டும்தான்..!! அவர்கள் இரண்டு பேருமே இன்னும் வேலைக்கு செல்லக் கூடியவர்கள்..!!


மறு நாள் காலை.. பத்து மணி.. !!


 நான் அப்போதுதான் குளித்து விட்டு வந்தேன். என் அத்தை.. மாமா இரண்டு பேருமே வேலைக்கு சென்று விட்டனர். இப்போது நான் மட்டும்தான் வீட்டில்.. !!


அடுப்பில் இருந்த காபியை சூடு பண்ணி.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு போய்.. அறைக்குள் நின்றபடி உறிஞ்சத் தொடங்கிய போது.. ஜன்னலுக்கு பக்கத்தில் அந்தப் பெண் வந்தாள்.!


பின் பக்க வீட்டின் கொல்லை பக்கத்தில்.. கையில் ஊற வைத்த துணி பக்கெட்டுடன்.. மெரூன் கலர் நைட்டியில் வந்த அந்தப் பெண்.. ஜன்னல் வழியாக என்னை ஒரு பார்வை பார்த்தாள். இயல்பான பார்வைதான்.. !!


இரவில் இங்கு காமக் கத்தல் கத்தியவள் இவளாக இருக்குமோ.. ? என்று என்னுள் ஒரு கேள்வி எழுந்த நொடியில் அவள் பார்வை என்னை சற்று துணுக்குற வைத்தது.. !!


அவள் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டு.. வந்த வேலையை கவனிக்கத் தொடங்கினாள். !


 நான் மெலிதான ஆர்வத்துடன் அவளைக் கவனித்தேன்..!!


கழுத்தில் தாலி.. !! மா நிறம்.. !! மெலிந்த தேகம்.. !! நீள மூக்கு.. !! உப்பல் இல்லாத வற்றின கன்னங்கள்.. !! சரிந்து தொங்கும் தளர்ந்த முலைகள்.. !! சிறுத்த இடை.. !! திரட்சியான கெண்டைக் கால்கள்.. !!


 ஆனால் இவள்தானா.. அவள்.. ?? இல்லை இவள் வேறா.. ?? அதை எப்படி தெரிந்து கொள்வது.. ??


அவள் என்னை லட்சியம் பண்ணியது போல் தெரியவில்லை..! 


துவைக்கும் கல்லை தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். நைட்டியை உதறித் தூக்கி இடுப்பில் சொருகினாள்..! சிவப்பு கலர் உள் பாவாடை போட்டிருந்தாள். அது அவளது முழங்கால் வரை ஏறிக் கொண்டது..!! 


அதன் பின் அவள் என் பக்கம் கூட திரும்பாமல்.. அவளது வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டாள்.. !!


நான் காபியை குடித்துக் கொண்டே அவளை பார்வையால் வருடிக் கொண்டிருந்தேன்.. !!


 அவளது சரிந்து தொங்கும் முலைகள் எனக்கு தரிசனம் ஆகவில்லை என்றாலும்... நைட்டிக்குள்ளாக இருந்த படி.. ஆடும் அதன் அழகு.. ஈர்க்கவே செய்தது.. !!


 மெலிந்த அவள் கால்களையும் அதில் சிணுங்கும் கொலுசையும் என் பார்வை ரகசியமாக விழுங்கியது. 


குனிந்து நின்று துணி துவைக்கும் அந்த பெண்ணின் சாட்டை போன்ற நீளக் கூந்தலின் பின்னழையும்.. பெண்மை அழகு மிகுந்த பின்னழகின் வளைவுகளையும் நான் மிகவும் விரும்பி ரசித்தேன்.. !!


சிறிது நேரம் கழித்து.. குனிந்தபடியே அவள் கழுத்தை மட்டும் வளைத்து.. முகத்தை பின்னால் திருப்பி என்னைப் பார்த்தாள்.


 ஓரு நொடி திடுக்கிட்டு நானும் பார்த்தேன். 


என் கண்களை சந்திக்க அவள் கண்கள்  சங்கோசப் படவில்லை. வெட்கமடையவில்லை.. !!


 அமர்த்தலான ஒரு பார்வை... ஹாட் லுக் கொடுத்து விட்டு.. உதட்டோரம் ஒதுக்கிய சிரிப்புடன் மீண்டும் முகம் திருப்பி தன் வேலையை கவனித்தாள்.. !!


எனக்கு சற்று வியப்பாகத்தான் இருந்தது..!! 


 இவ்வளவு பக்கத்தில் இருந்து கொண்டு ஒரு ஆண்.. அவளது பின்னழகை ரசிக்கும் போது.. இயல்பான ஒரு கூச்ச உணர்வு கூட உண்டாகாதா.. என்ன.. ??


இன்னொரு அன்னிய ஆண் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்தும் இப்படி குனிந்த வாக்கில் தூக்கிய புட்டத்தைக் காட்டிக் கொண்டு நிற்பாளா எந்தப் பெண்ணாவது.. ??


இவள் நிற்கிறாளே. ? இவளுக்கு கூச்ச உணர்வு இல்லையா? அல்லது என்னை ஒரு ஆணாக மதிக்கவே இல்லையா.. ??


காபி தீர்ந்த பின்னும் நான் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. 


 சில நிமிடங்களுக்கு பிறகு.. அவள் மீண்டும் என்னைத் திரும்பி பார்த்தாள். அவள் பார்வையில்.. ஒரு முறைப்போ.. கோபமோ இல்லை..!! 


இந்த முறை அவள் முகம் திரும்பும் முன்.. அவள் சிரிப்பது நன்றாகத் தெரிந்தது.. !!


எனக்குள் ஒரு வியப்பு. என்னை இயல்பாகத்தான் பார்க்கிறாள்.. கமுக்கமாக சிரிக்கிறாள்.. !!


 சிக்னல் கொடுத்துப் பார்க்கலாமா.. ?? தவறாகப் போய் விடுமோ.. ??


சமாளிப்போம்.. ! துணிந்தேன்.!


"க்கும்ம்" லேசாக தொண்டையைச் செருமி இறுமினேன்..!!


நான் கொடுத்த சிக்னல் உடனே வேலை செய்தது. 


 அவள் என் பக்கம் திரும்பிப் பார்த்தாள்..!! 


நான் மெலிதாகச் சிரித்தேன்.. ! அவளும் சிரித்தாள்.!!


என்னுள் குப்பென ஒரு மலர்ச்சி.. !!


"காபி சாப்பிடறிங்களா.. ??'' நான் துணிந்து  கேட்டேன்.


'' சாப்பிட்ட அப்றமா கோப்பாங்க.. ??'' அவள் இயல்பாக என்னுடன் பேசினாள்.


'' ஓ.. ஸாரிங்க.. !!''


'' பரவால்ல.. பரவால்ல.. !! குடிச்சப்பறமாவது.. கேக்கனும்னு ஒரு எண்ணம் வந்துச்சே.. !!'' எனச் சிரித்தபடி முகத்தில் தவழ்ந்து மயிரை இடது கையால் ஒதுக்கி விட்டு லேசாக நிமிர்ந்து நின்றாள்.


'' ஸாரி.. !! நான் கேட்றுப்பேன்.. !! முன்ன பின்ன அறிமுகமில்லாம நான் கேட்டு.. அதை நீங்க தப்பா ஏதாவது எடுத்துக்குவிங்களோனுதான்.. ''


'' அப்றம் இப்போ.. எப்படி பேசினிங்க.. ??'' என்னை நேராகப் பார்த்துக் கேட்டாள்.


'' நீங்க சிரிச்சிங்க..!! என்னை மொறைக்கல.. !! ரொம்ப நல்ல டைப்பா தோணுச்சு..!! சரி.. பேசி வெப்போமேனு... !!''


'' என்னை சைட்டடிச்சிட்டு இருக்கீங்கதானே.. ??'' பட்டெனக் கேட்டாள். 


ஒரு நொடி நான் திடுக்கிட்டு தடுமாறிப் போனேன்.


அவள் சொல்வது உண்மைதான். ஆனாலும்..


'' அயோ.. என்னங்க.. ??'' என்று தடுமாறினேன்.


"எனக்கு தெரியும்.. பொய் சொல்லாதிங்க.."


"பொய்யில்லங்க.. வந்து.. உங்களை பாத்தேன்தான்.. ஆனா.."


வளைந்து இடுப்பை நெளிந்து கொண்டாள். தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு என்னைக் கேட்டாள்.


''பார்வதி ஆண்ட்டி இல்லைங்களா.. ??'' பேச்சை மாற்றினாள்.


எனக்குள் ஒரு நிம்மதியுணர்வு படர்ந்தது. அவளே பேச்சை மாற்றி விட்டாள். பரவாயில்லை. இயல்பாகப் பேசக் கூடியவள்தான்.


'' வேலைக்கு போய்ட்டாங்க.. !!''


"தனியா இருக்கற தைரியம்.. ??"


"அய்யய்யோ.." மீண்டும் என்னைப் பதற வைத்தாள். 


சிரித்து, '' சாப்பிட்டிங்களா.. ??''


'' இல்லங்க... இப்பத்தான் எழுந்து.. குளிச்சிட்டு வந்து.. அப்படியே காபி குடிச்சிட்டு நின்னேன்.. !!''


'' காபியோட.. சைட்டடிக்க நான் வந்துட்டேன்.. ??''


அவள் பேச்சில் விபரீதம் இல்லை. கேலி கிண்டலுடன் ஜாலியாகத்தான் பேசுகிறாள். தேவலை.. !!


'' பரவால்ல.. நல்லா பேசறீங்க.. !! கேசுவலா.. !!'' இயல்புக்கு மீண்டு சொன்னேன்.


'' ம்ஹ்ம்ம்.. ??'' சிரிப்பு.


'' ஸோ நைஸ்.. !! நீங்க சாப்பிட்டிங்களா.. ??''


'' ம்ம்..!! சாப்பிட்டேன்.. !!'' தலையை ஆட்டினாள். 


'' என்ன சாப்பிட்டிங்க.. ??''


'' இட்லி.. தோசை.. ''


"ரெண்டுமா?"


"ஆமா.."


''வேலைக்கு ஏதாவது போறிங்களா.. ??'' 


'' இல்ல.. !!'' தலையாட்டி மறுத்தாள். ''என்னை தவிர எல்லாரும் போவாங்க.. !!'' 


எனக்கு சொல்லி விட்டு மீண்டும் குனிந்து ஈரத் துணிகளை கும்மினாள்.


நான்  மெல்லக் கேட்டேன்.

'' உங்க பேரு என்னங்க.. ??'' 


கழுத்தை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தாள்.


'' சுவாதி.. !!''


'' நைஸ் நேம்.. !!''


''தேங்க்ஸ்.. !! புடிச்சிருக்கா.. என் பேரு.. ??''


"பொறந்த ராசி நட்சத்திரம் பாத்து பேரு வெச்சாங்களா.. ?"


"ஆமா.. ஏன் கேக்குறீங்க.. ??"


"சுவாதி.. ராகுவோட நட்சத்திரம். ராகு ஒரு பாம்போட உருவகம்.. ஸோ.. உங்க ஹைட்டு வெய்ட்டு தோற்றம் எல்லாம்  உங்க பேருக்கு சூட்டாகுது. அதான் கேட்டேன். ஆனா நட்சத்திர எழுத்து பேரு வேற வரும்.. ரூ - ரே - ரோ - தா.. வெறும் நட்சத்திரத்தை மட்டும் வெச்சு பேரு வெச்சிட்டாங்க போல.."


நிமிர்ந்தாள்.

"உங்களுக்கு ஜோசியமும் தெரியுமா?" என்று வியந்தபடி என்னைக் கேட்டாள்.


"ஏதோ சுமாரா தெரியும்.. உங்க பேரு... உங்கள..  எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு.. !!'' என்றேன்.


அவள் நன்றாக நிமிர்ந்து  நின்று.. என்னைப் பார்த்து நேராகச் சொன்னாள்.

''எனக்கும் உங்கள ரொம்ப புடிச்சிருக்கு.. !!''


' என்னடா இது.. ?' என நான் வியப்பில் ஆழ்ந்தேன்.. !!


முன் பின் அறிமுகம்  இல்லாத ஓர் இல்லத்தரசிக்கு என்னைப் பார்த்த உடனே பிடித்துப் போனதா.. ?? நான்  ஒன்றும்  அவ்வளவு  அழகன் இல்லையே.. ??


'' என் பேரு தெரியுமா.. ??'' சிரித்துக் கொண்டே நான்.. சுவாதியை பார்த்துக் கேட்டேன்.


கல்லை போடுவது என்று வந்துவிட்டால்.. வெட்டிப் பேச்சை வளர்க்கத்தானே வேண்டும்.


'' ஓ.. தெரியுமே.. !!'' என்று சிரித்தாள்.


என் கண்களில் நான் லேசான வியப்பை காட்டினேன்.


'' தெரியுமா.. ??''


'' தெரியும்.. தெரியும்.. !!''


'' என்ன.. சொல்லுங்க பாப்பம்.. ??''


'' நிருதி.. !! என்ன கரெக்ட்டா.. ??''


''ரொம்ப கரெக்ட்.. !! என் அத்தை சொன்னாங்களா.. ??''


'' நீங்க கதை.. கவிதைகள்கூட எழுதுவீங்கனு தெரியும்.. !!''


'' ஓஓ.. !!''


"ட்ராயிங்லாம் கூட சூப்பரா பண்ணுவீங்களாமே.. ??"


இப்போது நிஜமாக இன்னும்  கொஞ்சம் வியந்தேன்.


'' உங்க கவிதைகள் நான் நெறைய படிச்சிருக்கேன்.. !! அதுல ரீசன்டா படிச்சு.. எனக்கு புடிச்ச கவிதை...

' பூவில் வருவது வாசம்.. இதயத்தில் மலர்வது நேசம்.. ஆனால் நம் நெஞ்சங்களில் மட்டும் எப்போதும் வறட்சி..' ங்கற கவிதைதான்.. !! படிச்சப்ப எனக்கு ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு.. !!'' என்னைப் பார்த்துக் கொண்டு அவள் சொல்ல..  சட்டென நான் வாய் விட்டு சிரித்தேன்.


' அடிப்பாவி.. இப்படி மொக்கையான கவிதைகள் தான் உனக்கு டச்சிங்கா இருக்கா.. ?'


"என்ன சிரிக்கறீங்க?" எனக் கேட்டாள். 


'' நான் கவிதைகள் எழுதுவேனு உங்களுக்கு எப்படி தெரியும்.. ??''


'' உங்க சுபா தான் சொன்னா.. எனக்கு.. !!'' என அவள் சொல்ல நான் துணுக்குற்றேன்.


'' சுபாவா..? சரி.. அது என்னங்க 'உங்க..' சுபா..?? அவ என் சுபா இல்லங்க.. !!"



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!