சினிமாப் படம் கிளைமாக்ஸை நெருங்கியிருந்தது.
அந்த பக்கம் இருந்த ரூபா படத்தின் காட்சியில் முழுமையாக ஒன்றிப் போயிருந்தாள். அல்லது இவர்கள் பக்கமே திரும்பக் கூடாது என்றிருந்தாள்.
ஆனால் தமிழின் நிலை வேறாக இருந்தது.
ஆரம்பத்தில் அவனை மறுத்து பிகு செய்து கொண்டிருந்தவள்.. இப்போது அவன் மடியில் சரிந்த நிலையில் உட்கார்ந்திருந்தாள். அவளின் உடல் முழுக்க இன்ப அலை பரவிய பரவசத்தில் கிறங்கியிருந்தது.
நிருதியின் உதடுகள் அவளின் கன்னத்தை மட்டுமல்ல, கழுத்தோரத்தையும் சேர்த்தே முத்தமிட்டுப் பதம் பார்த்தன.
அவள் அதை எதிர்க்காமல் சிணுங்கியபடி அவனுடன் இழைந்து கொண்டிருந்தாள்.
அவனுக்கு துணிவு வந்து விட்டது. அவனே எதிர்பார்க்காத அளவுக்கு தமிழ் இப்போது அவனுடன் இழைந்து கொண்டிருப்பதால் கிடைத்த துணிவு.
காதல் என்கிற உணர்ச்சிப் பிரவாகம் அவளுக்குள்ளும் பொங்கிப் பூரித்துப் போயிருந்தது. கரையைக் கடந்து விட்ட காதல் அதன் அடுத்த கட்ட நகர்வுக்கு அவளைத் தூண்டி விட்டிருந்தது.
அவன் யாரோ அல்ல. அவனும் தனது மனதுக்கினியவன்தான். அவன் தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டு அவளிடம் நெருக்கம் காட்டும்போது தான் மட்டும் ஏன் ஒதுங்கி நின்று அவஸ்தைப் பட வேண்டும் என்கிற நல்லெண்ணணத்துக்குக் கட்டுப்பட்டுப் போயிருந்தாள்.
அவனது வருடலும் முத்தமும், அணைதலும் தொடுதலும் அளிக்கும் இன்பச் சுகத்தை அவள் மனம் இழக்கத் தயாரில்லை.
அவனது ஒரு கை அவளின் முதுகில் படர்ந்து அவளை வளைத்து அணைத்திருந்தது.
இன்னொரு கை முன்புறமாக நகர்ந்து வந்து, அவளின் நெஞ்சப் பரப்பில் விளையாடி, அவளின் இளமையான பெண்மை அழகின் விம்மல்களைத் தொட முயற்சி செய்து கொண்டிருந்தது.
அவன் கை தன் இளமைச் செழிப்பைத் தொட முயற்சிப்பதை தமிழும் உணர்ந்தே இருந்தாள்.
அந்த உணர்வே அவளுக்கு படு கிளர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அவன் தொடுகை ஆரம்ப நிலையில்தான் அவளுக்கு மிகுந்த கூச்சத்தைக் கொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களை நெருங்கவிட்ட. இந்த நிலையில், அவன் தொடுகை அவளது இளமைக்குப் பழகிப்போனதாக மாறியிருந்தது.
அவனது கையைத் தடுக்கும் எண்ணம் இப்போது அவளுக்கு துளியும் இல்லை. அவன் கை தன் மார்பகத்தைத் தொட்டு என்ன செய்யும் என்று அறிந்து கொள்ளத்தான் ஆவலாக இருந்தாள்.
படம் முடியப் போகிறது என்பதை உணர்ந்த நிருதியின் கை சட்டெனக் கிளர்ந்து விட்ட ஓர் உத்வேகத்தில்.. அவளின் நெஞ்சில் தவழ்ந்த துப்பட்டாவுக்குள் புகுந்து அதன் மறைவில் விம்மிக் கொண்டிருந்த தமிழின் மென்மையான இளமை வீக்கத்தைத் தொட்டது.
அதை எதிர் பார்த்தே இருந்தாலும், அவன் தொட்ட அந்த நொடியில் அவள் திடுக்கிட்டுச் சிலிர்த்தாள்.
ஒரு நொடி உடம்பில் மின்னதிர்வு பட்டதுபோல உடல் முழுக்க பரவசத்தில் நடுங்கியது.
சட்டெனக் கண் மூடி அவன் கையைப் பிடித்து விட்டாள். அதை இறுக்கினாள்.
தன்னை மீறி.. “ப்ளீஸ்..” என முனகினாள்.
அந்த ப்ளீஸ் மறுப்பா வேண்டுதலா என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவள் அவன் கையை அங்கிருந்து தள்ளிவிடவில்லை.
அவன் விரல்கள் அவளின் மார்பின் முனையைத் தொட்டன.
அதிரும் இதயத்துடன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு நடுங்கும் உதடுகளை வாய்க்குள் இழுத்துக் கவ்விக் கொண்டபோது அவளது மூச்சின் சீற்றத்தில் மூக்கின் உள் மடல் சுடுவதை அவளால் உணர முடிந்தது.
உடல் முழுக்கவே ஒரு பதட்டம், படபடப்பு, உள்ளே உஷ்ண அலை. கை கால்களில் நடுக்கமும் விதிர்ப்புமாக இருந்தது. அதை அடக்க பெரும்பாடு படவேண்டியிருந்தது.
‘இதுதான் காதலா? இதுதான் காதலா?’ என்று உள்ளே ஓர் அரற்றல் உண்டானது.
‘இந்தத் தொடுகைக்கு எப்படி வந்தது இத்தனை உணர்வெழுச்சி? இதை ஏன் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.’
‘இது எனக்குப் பிடிக்கிறதா இல்லையா? பிடித்தால் இது ஏன் இப்படிப் பதற வைக்க வேண்டும். பிடிக்காவிட்டால் அவனை ஏன் ஒதுக்கித் தள்ள முடியவில்லை?’
அவன் கை மெள்ள அவளது பெண்மை மலர்வின் இளமைச் செழிப்பைத் தொட்டு வருடியது.
மூக்கு, மூச்சுத் துருத்தியைப்போல உணர்ச்சிப் பிரவாகத்தை சீற்றமாய் வெளியேற்றிக் கொண்டிருந்தது.
விம்மும் இளமைத் தவிப்புடன் அவன் கையை இறுக்கிப் பிடித்தாள். அழுத்திப் பிடித்துக் கொண்டால்கூட இந்த அவஸ்தை நீங்கிவிடும் போலிருந்தது.
அவனிடம் அந்த அவசரம் இல்லை. அவளது இளமைச் செழிப்பின் பூரணப் பரிமாணத்தை உணர்வதைப் போல அவனது விரல்கள் தொடுகையில் அறிந்து கொண்டிருந்தன.
படம் முடியப் போகும் கடைசி நிமிடம் என்பதால்.. தன் நெஞ்சப் பூரிப்பில் விளையாடும் அவன் விரல்களை அவள் தடுக்கவில்லை.
அவனது ஆர்வக் கிளர்ச்சி அதிகமாகி அவளின் மென்சதை வீக்கத்தை மொத்தமாகப் பற்றிப் பிடித்து, ஆண்மை கிளர்ந்து எழுந்த நிமிடம் படம் முடிவை தொட்டது.
பளிச் பளிச்சென விளக்குகள் எரிந்தன.
சட்டென அவனது நெருக்கத்தில் இருந்து விலகிக் கொண்டாள் தமிழ். உடனே நேராக உட்கார்ந்து துப்பட்டாவை தோளுக்கு இழுத்துவிட்டுக் கொண்டாள்.
அப்போதுதான் ரூபா இவள் பக்கம் திரும்பிப் பார்த்தாள். தமிழ் சிரித்தாள். நிருதி எழுந்து நின்றான்.
"போலாமில்ல?" தமிழ், ரூபாவைக் கேட்டாள்.
"பின்ன.. இங்க என்ன குடும்பமா நடத்த வந்துருக்கோம்.?" என்று சிரித்தபடி சொன்னாள் ரூபா.
தமிழும் எழுந்தாள். நிருதி முன்னால் நகர்ந்தான். தமிழின் கையைப் பிடித்து அவளது காதைக் கடித்தாள் ரூபா.
"செம ரொமான்ஸ்.. "
"என்ன.. படமா?"
"ஏன் தெரியாதா?"
"ஆமா.."
"எப்படி தெரியும்? "
"என்ன?"
"அண்ணா.. அண்ணானு சொல்லிட்டு.. செம ரொமான்ஸ் பண்ணிட்டிருக்க"
"ஏய்.. யாரு?"
"நீதான்டி எருமை. எல்லாம் கவனிச்சிட்டுதான் இருந்தேன். நீங்க பண்ண எல்லா சேட்டைகளையும்"
"ச்சீ.. சும்மாரு. நாங்க ஒண்ணுமே பண்ணல.. படம் மட்டும் தான் பாத்தோம்.."
"ஆஹா.. அடியேய்..”
"மூடிட்டு வா" என்று உள்ளுக்குள் சிரித்தபடி நிருதியிடம் நகர்ந்தாள் தமிழ்.
ரூபாவும் தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டு தமிழைப் பின் தொடர்ந்தாள்.. !!
தியேட்டரை விட்டு அவசரமில்லாமல். வெளியேறினர்.
பார்க்கிங்கில் இருக்கும் பைக்கை எடுக்கப் போனான் நிருதி.
வெளியேறும் கூட்டத்துக்கு வழி விட்டு ஓரமாகப் போய் நின்றனர் தமிழும் ரூபாவும்.
தமிழின் உடம்பும் மனசும் மிக மோசமாக கெட்டுப் போயிருந்தது. நிருதி மீது அவளுக்கு காதல் உண்டு. ஆனால் காமம் பெரியதாக இருந்ததில்லை.
இப்போது அவன் தியேட்டர் இருட்டில் அவளின் உணர்ச்சிகளைத் தூண்டி அவளை மோக வயப் பட வைத்திருந்தான்.
அவனது விரல்கள் இன்னும் அவளின் உடை மூடிய உடலை தீண்டிக் கொண்டிருப்பதைப் போன்ற பிரம்மையில் அவள் உடம்பு சூடாகி கொதித்துக் கொண்டிருந்தது.
நெருக்கமாக நின்று தமிழின் கையைத் தொட்ட ரூபா வியப்புடன் கேட்டாள்.
"ஏய்.. என்னடி இது உன் கை இப்படி சுடுது"
"சுடுதா..? இல்லையே"
"ஏய் லூஸு.. பின்ன என்ன இது?" ரூபா தமிழ் உடம்பின் மற்ற இடங்களிலும் தொட்டுத் தொட்டுப் பார்த்து உறுதி செய்தாள்.
தமிழும் தொட்டு பார்த்துக் கொண்டாள். அவள் உடல் சூட்டுக்கான காரணம் அவளுக்கு தெரிந்தே இருந்தது. எல்லாம் நிருதியின் விரல்கள் இருட்டில் ரகசியமாக செய்த லீலை.. !!
"காச்சலடிக்குற மாதிரி இருக்குடி" என்றாள் தமிழ்.
"காச்சலடிக்குதா?"
"ஆமா.."
"நல்லாதான இருந்த.. இப்ப என்ன திடீர்னு?"
"காச்சலெல்லாம் லெட்டர் போட்டுட்டா வரும்? திடீர்னுதான் வரும்.." என்று கிண்டலாகச் சிரித்து, பின் கூலாகச் சொன்னாள், "ரெண்டு எடத்துல ரெண்டு விதமான ஐஸ்கிரீம் சாப்பிட்டமில்ல? அப்பறம் ஏசி தேட்டர் வேற..”
"அப்படி பாத்தா.. அப்ப எனக்கும் காச்சல் வந்துருக்கனுமில்ல?"
"ஆமா.. ஏன் வரல உனக்கு?"
"அதான் தெரியல"
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நிருதி பைக்கை எடுத்து வந்து அவர்கள் அருகில் நிறுத்தினான்.
"உக்காருங்க"
“ப்ரோ.. ஒரு நிமிசம்" என்றாள் ரூபா.
"என்ன ரூபா?"
"உங்காளுக்கு பீவர் வந்துருச்சு"
"என்னது.. பீவரா?" திடுக்கிட்டு தமிழைப் பார்த்தான்.
அவள் முகத்தில் வாட்டம் எதுவும் தென்படவில்லை. சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள்.
"ஆமா நீங்களே தொட்டுப் பாருங்க"
நிருதி கை நீட்டி தமிழின் நெற்றியில் தொட்டுப் பார்த்தான். உண்மைதான்.
தமிழின் நெற்றி சூடாக இருந்தது. கண்களில் கலங்கிய நீர்.
"என்னாச்சு திடீர்னு?" அவள் கண் பார்த்துக் கேட்டான்.
"நானும் இதான் கேட்டேன். திடீர்னு வராம காச்சல் என்ன லெட்டர் போட்டுட்டா வரும்னு கேக்கறா" என்றாள் ரூபா.
"என்ன தமிழ் ஆச்சு? "
"அதை விடுங்கப்பா.. போலாமா?" என்று சிரித்து கொண்டு சாதாரணமாகக் கேட்டாள் தமிழ்.
"காச்சலு?"
"ஐஸ்கிரீம் சாப்பிட்டேன் இல்ல.. அதான் வந்துருக்கு"
"எனக்கு வரலியே " என்றாள் ரூபா.
"மூடிட்டு வா.. உனக்கும் வர வேண்டிய நேரத்துல வரும்" என்று விட்டு நிருதியின் தோளைப் பிடித்து பைக்கில் ஏறி அவன் பின்னால் நெருக்கமாக உட்கார்ந்தாள்.
அதன்பின் ரூபாவும் உட்கார்ந்தாள்.
"இப்ப எங்க போலாம்?" நிருதி கேட்டான்.
"எங்க வேணா போலாம்" தமிழ்.
"ஹாஸ்பிடல் போங்க.. இவளுக்கு டிக்கில ஒரு ஊசியை போட்டாத்தான் இவ திமிரு அடங்கும்” எனச் சிரித்தாள் ரூபா.
"அதெல்லாம் வேண்டாம். மொத இவளைக் கொண்டு போய் இவ வீட்ல தள்ளிரலாம்" என்றாள் தமிழ்.
"ஏய் ஏன்டி?"
"செம டிஸ்டர்பன்ஸ் உன்னால.."
"அடிப்பாவி.."
"பின்ன வாய மூடிட்டு இருக்கியா.. தொனதொனனு நீதான் சும்மா பேசிட்டே இருக்கே.."
"ம்ம்.. ஏன்டி சொல்ல மாட்ட.. ஓகே நிரு ப்ரோ.. என்னை கொண்டு போய் என் வீட்ல விட்டுட்டு இவளை எங்காச்சும் தள்ளிட்டு போங்க.. பார்க் பீச்னு.. அப்படி ஒன்னு நம்ம ஊர்ல இல்லன்னாலும்.. தனியா எங்காவது.. ஒரு காடு கரை.. களத்து மேடு மாதிரி..”
பின்னால் கை விட்டு நறுக்கென ரூபாவைக் கிள்ளினாள் தமிழ்.
நிருதி வாய்விட்டுச் சிரித்தபடி பைக்கை நகர்த்தினான்.
"மொதல்ல ஏதாவது ஒரு ரெஸ்டாரண்ட் போயி லஞ்ச் சாப்பிடலாம். அப்பறம் வெச்சுக்குங்க.. உங்க சண்டைய.."
ரெஸ்டாரண்டில் நிருதியின் பக்கத்தில் மிகவும் நெருக்கமாக அவனை ஒட்டி உட்கார்ந்தாள் தமிழ்.
அவளின் தோளை விட்டு சரிந்த துப்பட்டா அவன் கையை தழுவிப் போய் அவன் மடியில் விழுந்து தவழ்ந்தது.
அவர்கள் இருவருக்கும் எதிராக ரூபா உட்கார்ந்து கொண்டாள். அவள் முகத்தில் ஒரு கடுகடுப்பு.
"என்ன ஆர்டர் பண்றீங்களோ பண்ணிக்கோங்க" என்றான் பொதுவாக.
"என்னடி சொல்லலாம்?" தமிழ் ரூபாவைப் பார்த்து கேட்டாள்.
"இன்னிக்கு உனக்குத்தான் ட்ரீட்.. உனக்கு புடிச்சதை சொல்லு"
"பரவால சொல்லுடி.."
சிறிது நேரம் யோசித்து பின் ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள்.
சாப்பிடும் போது நிருதியின் ஒரு தொடையும் தமிழின் ஒரு தொடையும் ஒன்றையொன்று நன்றாக அழுத்திக் கொண்டிருந்தது.
அவ்வப்போது அவளின் காலை தன் காலால் உரசி அவளைத் தீண்டிக் கொண்டிருந்தான்.
"லெக் பீஸ் சூப்பர்" தமிழுக்கு மட்டும் கேட்கும் படி மிகவும் சன்னக் குரலில் சொன்னான்.
"எந்த லெக் பீஸ்..?" சட்டென புரிந்து கொண்டு விட்டாள்.
"என் தமிழோட லெக் பீஸ்.."
"தெரியுது... எதை சொல்றீங்கனு"
"அதை சாப்பிடணும்"
"எதை?"
"என் தமிழோட லெக்கை.."
"ச்சீ.."
"செமையா இருக்கும்"
"நெனப்புதான்.."
"ஏன்.. என் தமிழோட லெக் எனக்கு கெடைக்காதா?"
"கெடைக்காது"
"ஏன்..?"
"அப்படித்தான்.." சிரித்தாள்.
ரூபாவுக்கு தெரியாதவாறு தமிழின் தொடையில் தன் கையை வைத்து மெதுவாகத் தடவினான்.
"செத்துடுவேன்"
"ஏன்?"
"என் தமிழோட லெக் எனக்கு கெடைக்கலேன்னா.."
"கொன்றுவேன்.."
"எதுக்கு?"
"இப்படி பேசினா.."
"சந்தோசம்"
"என்ன சந்தோசம் ?"
"நீயா என்னைக் கொல்றது.."
"வாயை மூடிட்டு பேசாம சாப்பிடுங்க.."
"வாயை மூடினா சாப்பிட முடியாது செல்லம்"
"லொள்ளு.."
அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரூபா அவர்கள் மட்டும் பேசி சிரித்துக் கொள்வதை கவனித்துக் கேட்டாள்.
"அப்படி என்ன பேசிக்கறீங்க ரெண்டு பேரும்? "
"உன்னப் பத்திதான்" என்றாள் தமிழ்.
"என்னைப் பத்தி என்ன?"
"அது டாப் சீக்ரெட்.."
ரூபா உணவை மென்றபடி முறைத்தாள்.
"பேசறது என்னைப் பத்தி.. கேட்டா அது சீக்ரெட்டா?"
"யெஸ்.. டாப் சீக்ரெட்.."
திருப்தியாக சாப்பிட்டு ரெஸ்டாரண்டை விட்டு கிளம்பினார்கள்.
வேறு எங்கும் போகும் எண்ணம் இல்லை. ரூபா தன்னை தன் வீட்டில் கொண்டு போய் விடச் சொன்னதால் ரூபாவின் வீட்டுக்கே சென்றார்கள் மூவரும்.. !!