வியாழன், 21 டிசம்பர், 2023

உன்னைச் சுடுமோ -15

தொடர்ந்து ஒரு வாரமாக கிருத்திகாவை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு நிருதிக்குக் கிடைக்கவில்லை. 


வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதைவிட அவள் அவனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்க விரும்பவில்லை.


அவளுக்கு அவனைப் பிடித்திருந்தாலும், அவனுடன் பேசினாலும், அவளின் பெண் உள்ளம் மிகுந்த எச்சரிக்கையுடன்தான் செயல் பட்டுக் கொண்டிருந்ததது. 


ஆனாலும் இரவுகள் அவளை இம்சை செய்தன. உடல் சூடாகி இளமை தாபம் பொங்கியது. மனசு தறிகெட்டு அலைந்தது. 


தனக்கு கணவனாக வரப் போகிறவனை நினைத்து சூடாகத்தான் முடிந்ததே தவிர சூட்டைத் தணிக்க முடியவில்லை. 


அந்த மாதிரி ஓவர் மூடாகி தவிக்கும் இரவில் மட்டும் சில நேரங்களில் நிருதியுடன் வாட்ஸப்பில் பேசுவாள். அந்த பேச்சு நீண்டு செக்ஸ் சாட்டிங்கில் போய் முடியும்.


அது அவளுக்கு உச்சபட்ச இன்பத்தையே அளிக்கும்.. !!


அதே நேரம், அவளது அம்மா குணமைடந்து வேலைகளை கவனித்துக் கொள்ள, அவளது திருமண வேலைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தன.. !!


அவளும் அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டு தன் தோழிகளுக்கு பத்திரிக்கை கொடுக்கப் போவது கடைகளுக்குப் போவது என்று பிஸியாக இருந்து கொண்டிருந்தாள்.. !!


பொதுவாக மாலை நேரமோ அல்லது இரவு நேரமோ அவளது வருங்கால கணவன் அவளுக்கு போன் செய்து அவளுடன் சிறிது நேரம் பேசுவான். 


அன்று இரவு பேசும்போது பேச்சு வாக்கில் சொன்னான்.

"எனக்கு உன்னை பாக்கணும் போலருக்கு கிருத்திகா"


"எப்போ?"


"இப்பதான்"


"இப்போ எப்படி?"


"அப்ப காலைல பாக்க வரட்டுமா?"


"ம்ம்.. அப்ப வேலைக்கு?"


"கல்யாணம் முடியறவரை வேலை முக்கியம் இல்லை.."


சிரித்தாள். "என்ன சொல்லிட்டு வருவீங்க?"


"கல்யாணம்னா எத்தனை வேலை இருக்கு. அதுல ஒரு காரணம்.. அவ்வளவுதான்"


"சரி.. இங்க எப்படி என்னை பாக்கதான் வரேனு சொல்வீங்களா?"


"வெளிய போலாமா நாளைக்கு?" சட்டெனக் கேட்டான்.


"வெளியவா எங்க?" யோசனையாகக் கேட்டாள்.


"சும்மா.. ஜாலியா எங்காவது.."


"நோ.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம் பாத்துக்கலாம். இப்பவே இப்படி போனா வீட்ல எங்கப்பா கொன்னே போட்றுவார்"


"எனக்கு உன்கூட ஒரு கொஞ்ச நேரம் தனியா மனசு விட்டு பேசனும்"


"மேரேஜ்க்கு அப்றம்.. லைஃப் லாங் பேசிட்டே இருக்கலாம்"


"அது சரிதான். எனக்கு நீ உனக்கு நான்னு முடிவாகியாச்சு. அதுல எந்த மாற்றமும் இல்ல.. ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி.. கொஞ்சம் அப்படி இப்படினு திருட்டுத்தனமா பாக்கறது சுத்தறதுனு இருந்தா அதுல ஒரு த்ரில் இருக்கும்" என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 


அவன் சொல்வது அவளுக்கும் சரியென்றுதான் தோன்றியது. ஆனாலும்,

"அப்போ.. கல்யாணமாகிட்டா த்ரில் இருக்காதா?" என்று அப்பாவிபோலக் கேட்டாள்.


"அப்படி இல்ல.. அப்போ அன்பு இருக்கும் பாசம் இருக்கும்.. ஆனா த்ரில் அவ்ளோ இதா இருக்காது"


"எதை த்ரில்னு சொல்றீங்க?"


"எல்லாம்தான்"


"எல்லாம்னா?"


"எல்லாமேதான்பா.."


அவளுக்குப் புரிந்தது. 


திருமணத்துக்கு முன்பாகவே அவளைத் தொட்டுப் பார்க்க ஆசைப் படுகிறான். அதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால்.. அப்படி இடம் கொடுத்தால் அவன் தன்னைப் பற்றி தவறாக நினைத்து விடுவானோ என்று ஒரு பக்கம் பயமாக இருந்தது. 


மெல்ல, "நமக்குதான் கல்யாணம் ஆகப் போகுதில்ல? அப்றம் என்ன பயம்?" என்று கேட்டான்.


"பயமில்ல.." இழுத்தாள்.


"சரி.. நாளைக்கு உன்னை பாக்க உன் வீட்டுக்கு வரேன். ரெடியா இரு.. ஜாலியா எங்காவது போய்ட்டு வரலாம்"


"இல்லங்க.. அது வேண்டாம். கல்யாணத்தை வெச்சுட்டு நாம அப்படி சுத்தறதும் நல்லதில்ல" என்றாள்.


"ஏய்.. நாம சுத்த போக வேண்டாம். ஒரு காபி ஒரு கூல்ட்ரிங்க்ஸ் ஒரு ஐஸ்க்ரீம் இப்படி சாப்பிட்டு.. சின்னதா ஷாப்பிங் பண்ணிட்டு வரலாம் ஓகேவா?"


"இது ஓகே" என்றாள். 


"கோபமில்லயே..?"


"எதுக்கு கோபம்?"


"என்னடா கல்யாணத்துக்கு முன்னயே இப்படி கூப்பிடறானேனு?"


"சே சே.. நான் உங்க உரிமைதான?"


"உரிமை மட்டும் இல்ல..  இனி நீ என் சொத்து"


"ம்ம்.. ஆமா.."


"நீ எனக்கு மட்டும்தான்"


"ம்ம் சரி.."


அரைமணி நேரம் பேசி போனிலேயே முத்தம் கொடுத்துக் கொண்டு காலை கட் பண்ணினர். 


அவளுக்கு உள்ளமெல்லாம் பூரித்து பேருவைகையாக இருந்தது.. !!


அன்றிரவு கலர் கலராக கனவுகள் கண்டாள்.  உடல் முழுக்க காமம் ஏறி அவளைப் பாடாய் படுத்தியது. 


முதல் இரவு, முதல் உறவு, இரண்டாம் நாள் இரவு உறவுகளின் அனுபவங்கள் எல்லாம் எப்படி எப்படி இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து இன்பம் கண்டு தூக்கம் தொலைத்தாள்.


மறுநாள் காலை பத்து மணிக்கு மேல் அவளது வருங்கால கணவன் அவள் வீட்டுக்கு வந்தான். 


அவளது அம்மா அவனை வரவேற்று உட்கார வைத்து உபசரித்தாள். 


அதன்பின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு அவனுடன் வெளியே கிளம்பினாள் கிருத்திகா. 


முதலில் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்றான். இருவரும் எதிரெதிரே அமர்ந்து பேசியபடி ஐஸ்க்ரீம் சுவைத்தனர். 


அவன் கண்களில் காதலும் அவள் மீதான ஆசையும் அப்பட்டமாகத் தெரிந்தது. 


"உனக்கு ஓகேதானே?" எனக் கேட்டான். 


"ம்ம்.." தலையை ஆட்டினாள்.


"உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு" என்றான்.


அவள் சிரித்தாள். 


"எங்க வீட்லயும் எல்லாருக்கும் உன்னை பிடிச்சுருக்கு" என்று துவங்கி அவனது குடும்ப உறவுக் கதைகளைச் சொன்னான். 


இருவரின் குடும்ப உறவுக் கதைகளையும் பேசி பகிர்ந்து கொண்டனர்.


அதன்பின் அவளை மாலுக்கு அழைத்துச் சென்றான். அவளுக்கு தேவையானவைகளை எல்லாம் உடனிருந்து கவனித்து எடுத்துக் கொடுத்தான். அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்து.


இறுதியாக பத்திரிக்கை கொடுக்க ஜோடியாகப் போக வேண்டும் என்று சொல்லி தன் நண்பன் ஒருவனின் வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றான். 


அவன் நண்பன் மட்டும்தான் வீட்டில் இருந்தான். பார்க்க நன்றாக இருந்தான். 


இவர்களை சிரித்த முகமாக வரேவேற்றான்.

"ஹாய் வெல்கம்.. ரெண்டு பேரும் ஜோடியா வந்து எனக்கு சர்ப்ரைஸ் குடுத்துட்டிங்க"


அவர்களை உட்கார வைத்து விட்டு கூல்ட்ரிங்க்ஸ் வாங்கப் போனான். 


"வீட்ல உங்க பிரெண்டை தவிர வேற யாரும் இல்ல போலருக்கு?" எனக் கேட்டாள் கிருத்திகா. 


"அவனோட அப்பா அம்மா ரெண்டு பேருமே வேலைக்கு போறவங்க. அப்பா பேங்க்ல வேலை செய்றார் அம்மா டீச்சரா போறாங்க. இவன் சென்னைல இருக்கான். நேத்துதான் ஊருக்கு வந்துருக்கான்."


"அவங்களை பாத்து பத்திரிக்கை வெக்கலியா?"


"ஆல்ரெடி அவுங்ளை இன்வைட் பண்ணிட்டேன். இவனுக்கு போன்ல சொல்லியிருந்தேன். இப்ப அவனே இங்க வந்துட்டதால நேர்லயே பாத்து இன்வைட் பண்ணிரலாம்னு உன்னையும் கூட்டிட்டு வந்தேன்"


அந்த தனிமை திட்டமிட்டு உருவாக்கப் பட்டதோ என்று சந்தேகப் பட்டாள் கிருத்திகா. 


அப்படி நினைத்தவுடனே அவளுக்குள் மெலிதான ஒரு பதட்டம் உருவாகியது. குப்பென வியர்ப்பதைப் போலானது. ஒரு மாதிரி அவஸ்தைக்கு ஆளாகி நெளிந்தாள். 


'சப்போஷ்.. என்னை தொட்டால்.. அல்லது முத்தமிட்டால்.. என்ன செய்வது? மறுத்தால் கோபிப்பானோ? ஓகே சொன்னால் தவறாக நினைத்து விடுவானோ..?'


இரண்டாவது நிமிடத்தின் முடிவில் அதுதான் நடந்தது. 


அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு உடனே அதை முத்தமிட்டான். 


அவள் சிலிர்த்து கையை பின்னுக்கு இழுத்தாள். 


"ஏன்?" எனக் கேட்டான். 


"ஒரு மாதிரி இருக்கு"


"கைல கிஸ் பண்ணதுக்கேவா?"


"ம்ம்"


"அப்போ உன் லிப்ல கிஸ் பண்ணா?"


"ச்சீ.. அதுக்குதான் என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்களா?" சட்டென கேட்டுவிட்டாள்.


"சே சே.. அதெல்லாம் இல்ல. வந்த எடத்துல கொஞ்சம் தனிமை கெடைக்குது. உன்னை தொட்டுப் பாத்துக்கலாம்னுதான். மத்தபடி தப்பான எந்த எண்ணமும் இல்ல. நீ எனக்கே சொந்தமாகப் போறவ.. உன்னை உரிமையோட முழுசா தொட்டு அனுபவிக்க போறேன்." 


"சரி.. அதை அப்பவே வெச்சுக்கலாமே.." 


"இப்போ தொடக்கூட வேண்டாமா?"


"தொடலாம்.. தப்பில்ல.. ஆனா தப்பா எதுவும்…"


அதே நேரம் அவனது மொபைல் அடித்தது. 


மொபைலை பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தான். 

"பிரெண்டு" எனச் சொல்லிவிட்டு கால் பிக்கப் செய்து பேசினான். 


அவன் போன் பேசி முடிக்கும் முன்பாகவே கூல்ட்ரிங்க்ஸ் வாங்கப் போன நண்பன் ஸ்வீட்ஸ் கேக் எல்லாம் வாங்கி வந்துவிட்டான். 


தன் வருங்கால கணவனைப் பற்றி தவறாக நினைத்துவிட்டதை நினத்து மனதுக்குள் வருந்திக் கொண்டாள் கிருத்திகா.

 மனசுக்குள்ளே ஒரு 'ஸாரி' யும் கேட்டுக் கொண்டாள்..  !!


கிருத்திகா மதியம் வீட்டுக்குச் சென்று விட்டாள். 


அவளின் வருங்கால கணவன் அவளிடம் நல்லவிதமாகத்தான் நடந்து கொண்டான். அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு அவளது அம்மாவிடமும் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றான். 


வெளியே சென்று வந்தது மகிழ்ச்சிதான் என்றாலும் அவள் மனசு ஏனோ அலை பாய்ந்தது. அவன் விரும்பியதைப் போல தன்னை தொட்டுப் பார்க்கவோ அல்லது முத்தம் கொடுக்கவோ விட்டிட்ருக்கலாமோ என்று நினைத்து வருத்தப் பட்டாள்.


தன் வருங்கால கணவனுடன் வெளியே சென்றதையும் தனக்காக அவன் வாங்கிக் கொடுத்தவைகளையும் தன் தோழிகளிடம் சொல்லி பகிர்ந்து கொண்டாள். 


ஆனாலும் அவள் மனதில் ஒரு பெரும் குறை இருப்பதைப் போலவே இருந்தது.


இறுதியாக நிருதிக்கு போன் செய்தாள்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!