வியாழன், 3 செப்டம்பர், 2020

கோளாறு -1

பக்காசூர மலையை ஒட்டிப் பெருகி வரும் பவானி ஆறு செந்நிறக் குழம்பாக மாறி கரைபுரண்டு ஓடத்தொடங்கியிருந்தது.

 கரையோரங்களில் அகப்பட்ட மரம் செடி கொடி தலைகளையெல்லாம் வாரிச் சுருட்டியெடுத்து சுழற்றியடித்துக் கொண்டோடியது. 

அதன் கரையோர மக்களுக்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி பறையறிவிக்கப்பட்டது. டிவி வானொலிகளிலும் அறிவுறுத்தப்பட்டது. அப்படி இருந்தும் தாழ்வான பகுதிகள் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருந்தது.. !!

மழைக்காலம் ஆரம்பித்து மிகச் சில நாட்களே ஆகியிருந்தன. ஆற்றின் கரையோரப் பகுதி நகரங்களுக்கெல்லாம் இன்னும் போதுமான மழைகூட பெய்யவில்லை. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி நீலகிரி மலைத் தொடரில் பெய்து கொண்டிருக்கும் பருவ மழையின் நீர்வரத்தால் இப்போதே ஆறு கரைபுரண்டோடத் தொடங்கி விட்டது.. !!

ஆற்றோரத்தை ஒட்டி இருக்கும் நிறைய வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கத் தொடங்கியிருந்த சமயம், மிதமான மெல்லிய தூரலில் குடை பிடித்தபடி ஆற்றுப் பாலத்தின் மேல் நின்று கரைபுரண்டோடும் ஆற்று நீரைப் பார்த்து திகைப்பும் வியப்புமாய் பேசிக் கொண்டிருந்த ஊர் பொது மக்களுக்கு நடுவே நின்றிருந்த நிருதி தனக்குப் பின்னால் அந்த மெல்லிய குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். 

"நிருதியண்ணா"

 அழைத்தவள் கோமதி. கருப்பு நிறக் குடை பிடித்து இன்னொரு கையில் நைட்டியை மேலே தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தாள்.

 செருப்பணிந்த அவள் கால்கள் ஈரமாயிருந்தன. நீளமான பாதங்களுக்கு மேல் இன்னும் மெருகு கலையாத புது வெள்ளிக் கொலுசு ஒயிலாய் வளைந்து கிடந்தது. அவளின் கால்களில் பாதங்களுக்கு மேலிருந்தே மெலிதான கருநிற மென்மயிர்கள் படரத் துவங்கியிருந்தன. அவள் கையில் நிறைய கண்ணாடி வளையல்கள் கலகலத்தன. கழுத்தில் தொங்கும் தாலி முலைகளைத் தழுவிய நைட்டியின்மேல் தவழ்ந்து, அதை மறைத்த துப்பட்டாவுக்கு கீழே கொஞ்சமாய் தெரிந்து கொண்டிருந்தது. காதில் மின்னும் தங்கக் கம்மல் ஜிமிக்கியும் நீண்ட மூக்கின் இடது பக்க மூக்குத்தியும் அவள் முகத்தில் டாலடிப்பது போல ஒரு ஒளியைக் கொடுத்திருந்தது.. !!

"அட.. வாம்மா கோமு, நீ எங்க வந்த?" லேசாக விழி விரித்துக் கேட்டான் நிருதி. 

"ஊரே வேடிக்கை பாக்குது. நான் வரக் கூடாதுங்களா?" வெண்பற்கள் பளிச்சிட அவன் முகம் பார்த்துச் சிரித்தாள். 

"ஊரும் நீயும் ஒண்ணாம்மா?"

"ஏன்.. நான் இந்த ஊர் இல்லையா?"

"நீ இந்த ஊருதான். ஆனா இப்ப நீ இருக்குற நிலமை...."

"ஹைய்யோ.. போங்க. அஞ்சு மாசம்தான் ஆகுது. இப்பேவேவ்வா? யாரு பாத்தாலும் இதைவேதான் சொல்றாங்க. எனக்கு இதெல்லாம் பெரிய இதாவே தெரியல"

"அப்படி இல்லமா...." 

அவன் சொல்லி முடிக்கும்முன் அவன் பேச்சை காதில் கூட வாங்காமல் அவள் ஆற்றுத் தண்ணீரைப் பார்த்தபடி வாயைக் குவித்து வியப்புடன் கூவுவதைப் போல் சொன்னாள். 
"எவ்ளோ தண்ணிணா. பாலம் தொடுற மாதிரி ஓடுது. எவ்ளோ கிட்டக்க.. கை நீட்னா தொட்றுலாம் போலருக்கே"

"அப்படி கிப்படி கை நீட்டிராதமா.."

"ஏன்?"

"பயத்துல கால் நடுங்கி தவறி விழுந்துடப்போற.."

"ஐயோ...." நிமிர்ந்து அவன் முகம் பார்த்துச் சிரித்தாள் "நான் அவ்ளோ சின்னப்பொண்ணு இல்ல தெரிஞ்சுக்கோங்க.."

பாலத்தின் இரண்டு பக்கத்திலும் ஆற்றை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம்  நிரம்பியிருந்தது. அனைவரின் கைகளிலும் விரிந்த குடைகள் இருந்தன. பல குடைகள் கருப்பு. சில குடைகள் நிறம் மாறியிருந்தன.

 வெண்முகில் பூத்தூவலாய் பொழிந்து கொண்டிருந்த தூரல் மழையை யாரும் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. ஆனால் அந்த மழையில் நனைந்து வந்து உடலைத் தழுவிச் சிலிர்க்க வைக்கும் குளிர் காற்றுக்கு அனைவரிடமும் சிறு சிறு நடுக்கம் இருந்தது.. !!

நிருதி வந்து நீண்ட நேரமாகியிருந்தது. அவன் பார்த்துச் சலித்து திரும்பவிருந்த சமயம்தான் கோமதியும் வேடிக்கை பார்க்க வந்திருந்தாள். 

"தனியாவா வந்த?" அவளைக் கேட்டான்.

"ஆமாங்க?"

"பாப்பா?"

"அவ தூங்கறா. பத்மாவை பாத்துக்கச் சொல்லிட்டு வந்தேன்"

"உன் புருசன்?"

"தூங்குதுங்க"

"இந்த மழைலயா?"

"வந்து சாப்பிட்டதுமே தூங்கியாச்சு. நைட் பூரா தூங்கவே கூடாது. அது தூங்கிட்டா அப்பறம் எனக்கும் வீட்ல போர்தான். அதான் தண்ணியாவது பாக்கலாம்னு வந்தேன். நம்மூருக்காரங்க நெறைய பேரு பாத்துட்டு வந்து கதை கதையா சொல்லிட்டிருக்காங்க. நானும் போய் ஒரு கதை சொல்ல வேண்டாமா?"
"சரிதான்.." புன்னகைத்தபடி அவளை மெலிதான பரவசத்துடன் பார்த்தான் நிருதி.. !!

ஆரஞ்சுநிற நைட்டி அணிந்து அதன் மேல் மார்பை மறைத்தபடி ஒரு துப்பட்டாவைப் போட்டிருந்தாள் கோமதி. மற்றபடி தலைவாரி பூச்சூடி நெற்றித் திலகமிட்டு தன் நீள்வட்ட முகம் மின்னுவதைப்போல பளிச்சென்று இருந்தாள். 

ஐந்து மாத கருவைச் சுமந்திருக்கும் அவளின் மணிவயிறு இளந்தொப்பை போலத்தான் தெரிந்தது. அது அவளின் கர்ப்பமாகத் தெரியவில்லை. அவள் சொன்னாலொழிய யாருக்கும் தெரியாது.. !!


சிறிது நேரம் மக்கள் திரளுடன் சேர்ந்து கரை புரண்டோடும் ஆற்றின் பெருஞ்சுழிகளையும் அதனுள் விசையுடன் சுழன்று மறைந்து மீண்டும் வேறிடத்தில் எழும் செடி கொடிகளையும் கண்கள் விரியப் பார்த்து சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தாள் கோமதி.

 அவளுடன் பேசுவதில் அவனின் சலிப்பு காணாமல் போய் மெலிதான ஒரு உற்சாகம் வந்திருந்தது.. !!

அரைமணி நேரம் கழித்துத் திரும்பினர். மழை அப்போதும் எந்த மாறுபாடுமின்றி தூரலாகவே பொழிந்து கொண்டிருந்தது. இருவரும் குடைபிடித்து பேசியபடி நடந்தபோது அவர்களின் குடைகள் அவ்வப்போது முட்டி முத்தமிட்டு பிரிந்தன.

 திரும்பும்போது கோமதி தன் மார்புகளை மறைத்த துப்பட்டாவை மேலேற்றி கழுத்தில் போட்டிருந்தாள். நைட்டியில் விம்மும் அவள் முலைகளைப் பார்த்து அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

 அவள் முலைகள் இரண்டும் நிமிர்ந்து கூராக நீட்டிக் கொண்டிருந்தன. சிறு முலைகள்தான். ஆனால் அவைகள் பால் சுரந்த முலைகள் என்பதால் நன்கு திரண்டிருந்தன. முதல் குழந்தைக்கு இன்னும் இரண்டு வயதுகூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே இரண்டாவதாக இப்போது கர்ப்பம் தரித்திருக்கிறாள். 

வெளியே பொதுவாகப் பேசியபடி நடந்தாலும் நைட்டிக்குள் அவள் எப்படி இருப்பாள் என்கிற ஒரு வியப்பு அவனுள் தனித்து ஓடிக் கொண்டிருந்தது.. !!

கோமதி ஓரளவு நல்ல நிறம்தான். காலை இமள் வெயில் பட்டு அவள் முகம் ஒளிவிடுவதை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறான்.

 நீண்ட முகம், அகன்ற விழிகள், நீள மூக்கு, சிவந்து மெலிந்த கனிந்த உதடுகள், சதைப் பற்றின்றி ஒட்டிய கன்னங்கள், குவிந்த தாடை,  தடித்துத் தெரியும் நரம்புகள் தெரியும் நீண்ட கழுத்து, குறுகிய நெஞ்சு, அதில் தனித்துத் தெரியும் பால் கனிந்த முலைகள், சரிந்த தோள்கள், நீளமான குச்சிகள் போன்ற வெளிர்நிறக் கைகள், மெலிந்து நீண்ட விரல்கள், மெலிந்த இடை, அளவான புட்டங்கள், நீளமான கால்கள், சற்று உயரம்.. !!

அவன் மனதின் எண்ண ஓட்டங்களை அறிந்தவள்போல பக்கவாட்டில் அவன் முகம் பார்த்துச் சிரித்துப் பேசியபடி மெல்லடி வைத்து நடந்தவள் திடுமெனக் கேட்டாள்.
"என்ன.. என்னை சைட்டடிக்கறீங்களா?"

திகைத்துப் பின் சிரித்தான். 
"சைட்டா.. உன்னைவா?"

"ஏன்.. நான் அவ்ளோ மோசமாவா இருக்கேன்?"

"சே.. அப்படி இல்லமா.."

"நான் அழகாத்தானே இருக்கேன்?"

"அதுலென்ன சந்தேகம்?''

"நீங்களும் என்னை ரொம்ப நாளா பாக்கறீங்க"

"ஆமா.."

"ஆனா பாக்க மட்டும்தான் செய்யறீங்க?"

"வேறென்ன செய்யணும்? லவ் பண்ணனுமா?" சட்டெனக் கேட்டான்.

அவள் திகைத்து விழி தூக்கிப் பின் முகம் உயர்த்திச் சிரித்தாள்.
"அந்த ஆசை வேற இருக்கா?"

"ஆசைக்கு அளவு இருக்கா என்ன?"

"அது சரிதான்"

"சரி நீ ஏன் அப்படி கேட்ட?"

"எப்படி?"

"நான் பாக்க மட்டும்தான் செய்யறேனு?"

"ம்ம்.. ஆமா, நான் எப்படி  இருக்கேன்னு நீங்க ஒரு தடவைகூட சொன்னதில்ல?"

"சூப்பர்மா. நீ அழகா இருக்க"

"பொய் சொல்லாம சொல்லுங்க..?"

"உண்மைதான் கோமு. நெஜமா நீ அழகு"

குளிர் காற்றை உணர்ந்தபடி சிறிது நடந்து உடல் சிலிர்த்து மெல்லக்  கேட்டாள்.
"என்னை புடிக்குமா உங்களுக்கு?"

"என்ன இப்படி கேட்டுட்ட?"

"சொல்லுங்க?"

"புடிக்கும்.."

"தேங்க்ஸ்.."

"ரொம்ப புடிக்கும்.."

"ம்ம்.." விழி திருப்பி அவன் விழி பார்த்து இதழ் மலர்த்திப் புன் சிரித்தாள்.

"ரொம்ப ரொம்ப புடிக்கும்.." அவள் விழிகளின் ஆழத்தில் தன் விழி நாட்டியபடி சொன்னான்.

அவள் இதயம்வரை இறங்கிய அந்த வார்த்தை அவன் மீது அவளுள் நீரு பூத்த நெருப்பாக மறைந்திருந்த பெண்மையின் வேட்கையை மடல் அவிழச் செய்தது. அது உள்ளே மலர்ந்து முகத்தில் நாணமாய் வெளிப்பட்டது. அதை மறைக்க முயன்று தோற்று காதலாய் சிரித்தாள். அவள் நடையில் ஒரு தளர்வேற்பட்டு பின் இயல்பானது.

அவர்கள் பிரியுமிடம் வந்தது.
"அப்றம்.. உங்க மாமியா உங்க வீட்லதான்னு கேள்விப் பட்டேன்?" என்றாள்.

"ஆமா கோமதி"

"என்ன ப்ராப்ளம்?"

"கால் ஆபரேஷன் பண்ணியிருக்கு. மக வீட்ல வந்து ரெஸ்ட்ல இருக்காங்க"

"ஆனா நீங்கதான் பாவம்"

"ஏன்?"

"நைட்லயும் கடைலேயே படுத்துக்கறீங்க"

"சின்ன வீடுதான. எல்லாரும் படுக்க எட வசதியில்ல. தவிர  ஓவர் டிஸ்டபன்ஸ்.."

"கடைல ஒண்ணும் பிராப்ளம் இல்லையே?"

"என்ன ப்ராப்ளம் மா?"

"இல்ல.. தனியா படுக்கறீங்க. நைட்ல..."

"அதெல்லாம் ஒண்ணும் இல்லமா.. ஒரு கட்டிங் அடிச்சிட்டு படுத்தா காலைலவரை தூக்கம்தான்"

"குடுத்து வெச்ச ஆளுதான்"

"யாரு நானா? அட ஏன் கோமு நீ ஒண்ணு"

"ஏன்?"

"சரக்கில்லாம தனியா இப்படி வந்து கடைல படுத்து தூங்க முடியாதுமா" என்றான். 

ஏதோ ஒரு ரகசியத்தைப் புரிந்து கொண்டவளைப் போல வாய் பொத்திச்   வெண் முத்துப் பற்கள் பளிச்சிட சிரித்தாள் கோமதி. 

அவள் கண்களும் கன்னங்களும் பெண்மையின் நாணத்தை வெளிப் படுத்தின. அந்த நளினச் சிரிப்பு அவள் மீதான ஈர்ப்பை அவனுள் ஆழமாகப் பதிய வைத்தது.. !!

விரும்பிப் படித்தவை.. !!