மகிழ் வதனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகிழ் வதனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூலை, 2019

மகிழ் வதனி -1

இரவு நேரத்து நிலா முற்றம்..!! கிழக்கு வானில்.. ஆரஞ்சு வண்ணத்தில் உதயமாகி.. கொஞ்சம்.. கொஞ்சமாக மேலெழுந்து வந்து கொண்டிருந்த.. எழில் மிகுந்த.. பௌணர்மி நிலைவயே.. நான் கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தேன்..!!

நிலவில் எப்போதும் காணப்படும் கலங்கம் இப்போது காணப்படவில்லை.. அதை யார் துடைத்தது என்று புரியவில்லை..! அல்லது ஆரஞ்சு வண்ணம் திரைத் துணியாக.. களங்கத்தை மறைத்துக் கொண்டிருக்கிறதோ..??

உதயமாகும்போது.. கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இந்த.. களங்கமற்ற.. வண்ண நிலவு.. மேலே மேலே என நகரும் போது.. கொஞ்சம்.. கொஞ்சமாகச் சிறியதாகி.. தூரமாகிக் கொண்டே போவது.. ஏன்..? என்பது.. எனது நீண்ட நாள் கேள்விகளில் ஒன்று..!!

ஆனாலும் நான் இந்த நிலவை ரசிக்க மறப்பதில்லை..!! நிலவு என்பது.. உண்மையில் ஆணா.. பெண்ணா.. என்கிற குழப்பத்தில்.. நான் பல நாள் உழன்றிருக்கிறேன்..! பெரும்பாலான கவிகள்.. நிலவைப் பெண்ணாகப் பாவித்துக் கவிதைகள் வடித்தாலும்.. அதற்கு 'சந்திரன்' என்கிற ஒரு ஆண் பெயரும்.. அதற்கேற்ற ஒரு கதையும் இருக்கிறதே...??

நிற்க..... இந்த ஆராய்ச்சி எல்லாம் நான் ஏன் செய்கிறேன் என்றால்.....?? என் பெயர்.. உதய சந்திரன்..! குடகு நாட்டு.. இளவரசன்..! என் பெயரில் சந்திரன் இருப்பதால்.. என்னை இந்தக் கேள்வி.. பல நாட்களாகக் குடைந்து கொண்டிருக்கிறது.. ஆனால் இன்றுவரை விடைதான் கிடைக்கவில்லை..!!

''நிலா உதயம் காண்கிறீர்களோ.. இளவரசே..?'' என எனக்குப் பின்னால்.. ஒரு கிள்ளை மொழிக் குரல் கேட்டு.. என் எண்ணச் சிறையிலிருந்து நான் மீண்டேன்..!

என் பின்னால் திரும்பினேன். பட்டுத் தூரிகையில் வரைந்த ஓவியம் போல.. மெல்லிய பட்டாடை காற்றில் ஆட.. மேன்மாடத்தில்.. என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மகிழ்வதனி..!!

ஆரஞ்சு வண்ண நிலவொளியில் அவள் வதனம்.. இன்னொரு நிலவாக பிரகாசித்தது..!!

''நான்தான்.. இளவரசே..!!'' என் மௌனம் கண்டு.. மென்னகை புரிந்தாள்.

''நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன..?'' என்றேன்.

முனுமுனுப்பாக. ''நிலவுக்கா..? கண்களா..? ஆ..! என்ன சொல்கிறீர்கள் இளவரசே..?'' என் கேள்வியின் அர்த்தம் புரியாமல்.. குழம்பி விட்டாள்.

''ஆஹ்ஹாஹா..!!'' என நான் வாய்விட்டுச் சிரித்தேன்.

''ஹ்ம்ம்.. போங்கள் இளவரசே..'' சினுங்கினாள் மகிழ்வதனி. ''நிலா உதயம் காண்கிறீர்களா.. என்று நான் கேட்டால்.. என்னென்னவோ.. சொல்கிறீர்கள் நீங்கள்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை...''

'' பேரெழில் பொங்கும்..உன் களங்கமற்ற வதனத்தைக் கண் இமைக்காமல்... கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தேன்.. இளவரசி..''

''என் முகத்தைக் கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தீர்களா..? நான் இங்கில்லாத போது.. எப்படி.. நீங்கள்...??'' அவள் என்னை குழப்பத்துடன் பார்த்தாள்.

என் வலது கரத்தை உயர்த்தி.. கிழக்கு நோக்கிச் சுட்டிக் காட்டினேன்.
'' அதோ..''

''ஓஓ..!!'' என்று வியப்பில்.. சிவந்த இதழ்களையும்.. பின் நயன விழிகளையும் அகல விரித்தாள்.
''இப்போதல்லவா புரிகிறது..!!''

''என்ன புரிகிறது.. இளவரசி..?''

''என்னைப் பார்த்ததும் கேட்டீர்களே.. நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன.. என்று..?''

''புரிந்தது கொண்டாயா..?''

''ம்ம்.. நன்றாகப் புரிந்து கொண்டேன்..! தங்களுக்கு என் மேல் உள்ள... அன்பையும்..!!'' அவள் வார்த்தை உச்சரிப்பில்.. ஒரு வெட்கத் திணறல் இருந்தது.

மெல்லடிகள் வைத்து.. அவள் என்னை நெருங்கி நின்ற போது.. அவளிடமிருந்து கமழ்ந்த.. அவள் பூ மேனியின்.. நறுமணம்.. என்னைக் களிப்படையச் செய்தது.
இளங் குமரியான.. ஒரு கன்னிப் பெண்ணின் பொன்மேனி வாசம்.. வாசணைத் திரவியங்கள் கலந்து.. வந்து.. என் சுவாசத்தில் புகுந்து.. என் உள்ளத்தை மிகவும் களிப்படையச் செய்தது..!!

''மண்டபத்தில் தங்களைக் காணாமல்.. நான்... இங்கு... தேடிக் கொண்டு வந்தேன் இளவரசே...!! ஏன் தனியாக இங்கு வந்து விட்டீர்கள்..??'' என்னைக் கேட்ட.. அவளின் இனிமையான குரல் என் செவியை இன்புறச் செய்தது.

''அமைதியை விரும்பி..!!'' என்றேன்.

''ஆ.. !!அப்படியெனில்  தங்கள் அமைதிக்கு நான்.. குந்தகம் விளைவித்து விட்டேனா..?''

''அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்..!'' என்றேன் குறும்பாக.

''ஓ..!! அப்படியானால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் இளவரசே..!! நான் வருகிறேன்..!!'' எனச் சொல்லி விட்டுத் திரும்பியவளின்.. மென் வளைக் கரத்தை எட்டிப் பிடித்தேன்.

''வருகிறேன்.. என்று விட்டு போகிறாயே..??''

''நீங்கள்தான்.. அமைதி வேண்டி.. அதை நான் கெடுப்பதாக...'' முதல் முறையாக நான் அவளைத் தொடுவதால்.. அவள் சிறிது நாணத்துடன் தலை கவிழ்ந்து நிலம் நோக்கி.. நின்றவாறு.. முனகினாள்.

''ஆம்.. இளவரசி..! என் அமைதி.. தனிமை.. எல்லாம் சீர்குலைந்து போனது.. உன்னால்..!!'' அவள் கரம் ஒரு பட்டாடை புழுபோல.. மிகவும் மிருதுவாக இருந்தது.

''அதனால்தான்.. நான் இங்கிருந்து... செல்லலாம் என்று..''

''நீ இங்கிருந்து செல்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டு விடாது.. மாறாக.. மேலும் என் மனம் அவதியுறவே செய்யும்..!!''

மிகுந்த தயக்கத்துடன்.. முகம் உயர்த்தி.. என்னைப் பார்த்தாள் மகிழ்வதனி. நான் மெலிதாகப் புன்னகை புரிந்தேன். அவள் மலர்க் கரத்தை விட்டு விடாமல் பிடித்தபடி கேட்டேன்.
''உன் கரத்தை நான் தொடலாம் அல்லவா..? அதைச் சொல்லிவிடு முதலில்..?''

வெட்கம் நிறைந்த முகத்தைச் சற்றுத் திருப்பிக் கொண்டாள்.
''சொல் இளவரசி.. உன் மலர்க் கரத்தைப் பற்றியது குற்றமா..?''

''உரிமையுள்ளவளின் கரங்களைத் தானே.. பற்றுகிறீர்கள் இளவரசே..? அது எந்த வகையில் குற்றமாகும்..??'' உள் அமுங்கிய குரலில் முனுமுனுப்பாகச் சொன்னாள்.

''காதல் வழக்காடு மன்றத்தில்.. அது அப்படித்தான் இருக்கிறது.. இளவரசி..!!''

''எனில்.. தங்களுக்கு.. காதலில் தேர்ந்த அனுபவம்.. இருப்பது போல் தெரிகிறது..??'' எனக் கேட்ட.. அவள் கேள்வியின் பொருள்.. என்னைச் சற்றுத் திணறச் செய்து விட்டது.

''ஓ.. நான் சொன்னதற்கு இப்படிக் கூட ஒரு பொருள் இருக்கிறதல்லவா..?? சரிதான்.. ஆனால் இளவரசி.. நான் இன்னும்.. எந்தப் பெண்ணின் காதல் வளையிலும் விழாதவன்.. என்பதை.. சற்று பெருமையுடனே சொல்லிக் கொள்கிறேன்..!!'' என்றேன்.

''பிறகு எப்படி...அப்படிச் சொன்னீர்கள்..??''

''நான் படித்த.. காதல் கதைகள் எல்லாம் அவ்வாறுதான் இருக்கின்றன.. இளவரசி..! தவிறவும் நான் பேசியது.. ஒரு சிலேடைக்காகத்தான்.....''

''அதற்கு.. பெண்களாகிய நாங்கள்தான் கிடைத்தோமா..?? காதல் வழக்காடு மன்றத்தில்.. ஆண் - பெண் இரண்டு பேர்தானே..?? மனம் கவர்ந்தவன் தன் மலர்க்கரம் பற்றும் போது.. எந்தப் பெண்.. அதைக் குற்றமெனச் சொல்லுவாள்..?? எப்போதடா.. நம்மைத் தொடுவார் என்றல்லவா.. எந்தப் பெண்ணின் மனமும்.. ஏக்கமுறும்.. ??''

''மன்னிக்க வேண்டும்.. இளவரசி மகிழ்வதனி.. அவர்களே..! நான் ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில்... ம்கூம்... இல்லை.. இல்லை... தங்களின்.. தளிர்க்கரம் பற்றிய.. காதல் மயக்கத்தில்.. தவறுதலாக ஏதோ உளறிவிட்டேன்..!!'' என்றேன்.

என்னைச் சரணடையச் செய்து விட்ட.. மகிழ்ச்சியில்.. வெற்றிப் புன்னகை சிந்தினாள்.
''உரிமை உள்ள இடத்தில்.. ஐயம் வரக் கூடாது.. இளவரசே..!!''

'' மன்னிக்க வேண்டும்.. மகிழ்வதனி..!! அப்படியானால்......''

''ஹ்ம்ம்.. அப்படியானால்...??''

''என் உரிமை என்பது.. குற்றமாகாது..??''

''ம்கூம்..!! என்னிடத்தில்.. அனைத்து உரிமைகளும் தங்களுக்கு உண்டு..!!'' அவள் குரலில்.. அவளது அபிலாசை தெரிந்தது.

அவளின் பட்டுக்  கரத்தை சற்று இறுக்கிப் பிடித்தேன். அவளை  என் பக்கத்தில் இழுத்து.. நிறுத்தினேன். என் மார்பில் அவள் பட்டாடை தொட்டு விளையாடியது.

''மகிழ்வதனி...''

''நீளமாக வேண்டாம்..! மகிழ் என்றே அழைக்கலாம்..!!'' எனச் சொன்னாள்.

ஒருவர் பெயரை நீட்டிச் சொல்வதை விட.. சுருக்கி அழைப்பதே.. மிகவும் நெருக்கமான.. ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும்..! காதலில்.. அதை எவ்வளவு சுருக்க முடியுமோ.. அவ்வளவு சுருக்கி கொள்ள வேண்டும். !

''மகி.. என்றுகூட அழைக்கலாமே..?''

''ஓ..!! அழைக்கலாமே..!!'' என்றாள.

''ம..! என்று கூட.....''

''போங்கள்.. கிண்டலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது..!!'' செல்லமாக என் நெஞ்சில் குத்தினாள்.

முதல் முறையாக அவள் என்னைத் தொடும் உணர்வு... அவளுக்கும் அது உவப்பாகவே இருக்கும்..! அவளின் அந்தக் கரத்தையும் நான் பற்றினேன்.

'' என்னைத் தேடிக் கொண்டு...இங்கு வந்ததாக.. சொன்னாயே மகிழ..?''

''ஆ.. ஆமாம்...''

''என்ன காரணமோ..? அதை நான் அறிந்து கொள்ள.. தடை ஒன்றும் இருக்காது.. என்றே நம்புகிறேன்..?''

''இ... இல்லை..!! ஏதாவது பேசிக் கொண்டிருக்கலாமே.. என்று...''

''ஏன்.. கீழே என் தங்கை.. அவளது தோழிகள்.. உன் தமக்கை.. இன்னும் அன்னையர்கள் எல்லோரும் இருக்கிறார்களே.. அவர்களுடன்...'' எனச் சொல்லிக் கொண்டே.. அவள் வளைக் கரங்களை வளைத்து.. மெதுவாக என்னுடலுடன்.. அவள் பூ உடலைச் சேர்த்து அணைத்தேன்..!

மார்க்கச்சை கவ்விய.. முகிழ்த்து வரும்.. அவளின் இளம் கொங்கைகள்.. மெத்தென்று வந்து என் மார்பில் அணைய... அந்த நொடியில்... நான் பேச்சை மறந்தேன்.. !! 

விரும்பிப் படித்தவை.. !!