திங்கள், 30 அக்டோபர், 2023

என்னை நேசித்தவள் -3

 ''ஆமாடா.. அவ சொல்றதும் சரிதான். அந்த புள்ள மாமியா ஒரு மாதிரி பேசுவா. நீ எப்படியாச்சும் பணத்தை பெரட்டி குடுத்துரு..!!'' என்றாள் அம்மா.


'' ம்ம். கவலை படாத.. ரெண்டு நாள்ள உன் பணம் வந்துரும்.. !!'' என்று எனக்குள் எழுந்த வலியை அடக்கிக் கொண்டு சொன்னேன்.


''சொன்னா பத்தாது. அது மாதிரி நடந்துக்கனும்.'' என்றாள் தங்கை.


'' கம்பெனிலயே கேளு '' அம்மா சொன்னாள்.


'' முடிஞ்சவரை கம்பெனில எல்லாருகிட்டயும் வாங்கியாச்சும்மா..! அங்கல்லாம் கிடைக்காது. இவ கல்யாணத்துக்கு வாங்கினதுலயே இன்னும் வட்டி கட்ட முடியாம திணறிட்டிருக்கேன். இதுல உன் செலவு வேற.. வெளிலதான் வாங்கனும்.. !!''


'' வெளில.. யாருகிட்ட.. ??''


'' யாரையும் நம்பறதுக்கில்ல.. !'' என்று விட்டு மெல்லச் சொன்னேன். ''வண்டிய வித்துரலாம்னு இருக்கேன்..!!''


அம்மா முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

'' பைக்க விக்கறியா ??''


'' வேற வழி இல்ல. வாங்குன பணத்துக்கு வட்டி கட்ட வேண்டியதே நெறைய நிக்குது. வண்டிய வித்துட்டா.. முடிக்க வேண்டிய பாதி பிரச்சினை முடிஞ்சிரும்.. !!''


'' பைக்க வித்துட்டு நீ எதுல போவ..??'' என் தங்கை.


'' நான் எதுல போனா உனக்கு என்ன..? உன் பிரச்சினை தீந்தா அது போதும்ல உனக்கு ??''


'' பாத்தியாம்மா உன் பையன் எப்படி பேசுறான்னு..??'' என அம்மாவிடம் ஆரம்பித்தாள்.


அம்மாவும் அதே கேள்வியைக் கேட்டாள்.

''நீ வேலைக்கு எப்படிடா போவ.. ??''


'' பஸ்ல போறேன் ''


'' சிரமமா இருக்குன்னுதான வண்டி வாங்கின.. ??''


'' என்ன பண்றது அதுக்கு..??'' எனது உள்ளக் குமுறலை எல்லாம் அடக்கிக் கொண்டு சொன்னேன்.


தங்கை. ''எப்படியோ.. போ.. ! எங்களுக்கு என்ன.??''


அம்மா. ''எதுக்கும் கடனா கெடைக்குமானு கேட்டுப் பாரு ''


'' அதெல்லாம் வேஸ்ட்மா.. வண்டி போனா கெடக்குது. எனக்கு பிக்கல் ஒழிஞ்சா சரி. கொஞ்சம் நிம்மிதியாவாவது இருப்பேன்..'' என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க விருப்பமில்லாமல். ''சரி நான் போறேன். நாளைக்கு வந்து பாக்கறேன் '' எனச் சொல்லி விட்டு கனத்த மனதுடன் ஆஸ்பத்ரியை விட்டு வெளியே வந்தேன்.. !!


நான் வீடு போனபோது இரவு பத்தரை மணி.. !! 


சத்யாவின் வீட்டில் விளக்கணைக்கப் பட்டிருந்தது. 


நான் பைக்கை நிறுத்தி.. வீட்டுக்குள் போய் உடை மாற்றி வந்து பாத்ரூம் போனேன். 


முகம் கை கால் கழுவி வெளியே வந்தபோது சத்யாவின் அம்மா வெளியே வந்தாள்.

'' இப்பதான் வரியா.. ??'' என்றாள்.


'' ஆமாங்க்கா..!!'


என் அம்மாவைப் பற்றி விசாரித்தாள்.


 நான் சொல்லி முடித்து அவளிடம் கேட்டேன்.

'' அப்றம் சத்யாவ பொண்ணு பாக்க வந்தது என்னாச்சுங்க்கா.. ??''


'' நல்ல படியாதான் வந்து பாத்துட்டு போயிருக்காங்கப்பா..!! எல்லாம் கலந்து பேசிட்டு சொல்றேன்றுக்காங்க..! அனேகமாக இந்த எடம் அவளுக்கு அமைஞ்சிரும்னுதான் என் மனசுக்கு படுது..'' என்றாள்.


'' ஏதாவது எதிர் பாக்கறாங்களாக்கா.. ??''


'' இந்த காலத்துல யாருப்பா சும்மா கட்டுவாங்க.. ?? நம்மனால என்ன முடியும்னு சொல்லியாச்சு. அப்றம் அவங்க விருப்பம்தான். பாக்கலாம் என்ன சொல்றாங்கனு.. !!'' என்றாள்.


மேலும்  கொஞ்ச நேரம் பேசி விட்டு நான் உள்ளே போய் விட்டேன்.. !!


மறுநாள் காலை.. நான் தூக்கம் கலைந்த போது மணி எட்டே கால்.! 


நான் அவசரமாக எழுந்து ஓடி.. காலைக் கடன்களை முடித்து.. குளித்து வேலைக்கு கிளம்பியபோது.. சத்யாவும் புறப்பட்டு வெளியே வந்தாள்..! இளஞ் சிவப்பு சுடிதாரில் அம்சமாக இருந்தாள்..!!


'' இன்னிக்கும் லேட்டா.. ??'' எனச் சிரித்தாள்.


'' லேட்டாதான் தூங்கினேன் ''


'' டெய்லியுமா..? இன்னிக்கு ஏழரை மணிக்கு கதவை தட்டி எழுப்பி விடலாமானு பாத்தேன். அப்பறம் பாவம் தூங்கட்டும்னு விட்டுட்டேன்..!!''


'' தனியா இருந்தா நேரத்துக்கு தூக்கம் வரதில்ல..!! சரி.. நேத்து வந்தது என்னாச்சு..??''


புன்னகைத்தாள்.

'' ம்ம்... பாத்துட்டு போயிருக்காங்க..''


'' உனக்கு புடிச்சுதா.. ?''


அவள் முகத்தில் லேசான வெட்கம்.

''ம்ம்.. தேவல..''


'' பேசுனியா ?''


'' சே.. இல்ல..! இது என்ன சினிமாவா..?''


'' சினிமா இல்ல... இப்பல்லாம் நேச்சுரல்லயும் பேசிக்கறாங்க.. !!''


'' இல்லப்பா.. நான் பேசல.. ''


'' அப்ப.. உனக்கு ஓகேதான்.. ??''


'' ம்ம்.. !!'' முகத்தில் படர்ந்த மெல்லிய வெட்கத்துடன் தலையை ஆட்டினாள். துப்பட்டாவை இழுத்துப் போட்டாள். 


அது அவள் மார்புக்கு மேலே போயிருக்க.. அவளது விம்மிய மார்பின் திரட்சியைக் கண்டு ஒரு கணம் அசந்தேன்..!!


சத்யா உடனே.. ''ஓகே.. பை..!!'' என்று இடது கையின் மூன்று விரல்களை மட்டும் அசைத்தாள்.


நானும் கை அசைத்தேன்.

'' பை.. !!''


அவள் பின்னழகு அசைய வேகமாக நடந்து போக.. நான் பெருமூச்சுடன் பைக்கை ஸ்டார்ட் பண்ணினேன்.. !!

சனி, 28 அக்டோபர், 2023

உன்னைச் சுடுமோ -5

 தன் வீட்டுக்கு ஓடிவந்துவிட்ட கிருத்திகா படபடத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன செய்வது என்று எதுவும் தெரியவில்லை. 


ஆசையா பயமா என்று தெரியவில்லை. தவிப்பா ஏக்கமா என்றும் புரியவில்லை. 


அவனைப் பிடிக்காது என்றில்லை. அதே சமயம் பிடிக்கும் என்று சொல்லுமளவுக்கும் பழகியிருக்கவில்லை. பொதுவான பேச்சு வார்த்தைகளைத் தாண்டி பேசிப் பழகியதில்லை. 


இன்றுதான் அவனோடு நன்றாக பேசியிருக்கிறாள். நெருக்கமாக பழகியிருக்கிறாள். 


இன்னும் சொல்லப் போனால் அவனது ஆண் உடம்பு வெளிப்படுத்தும் வாசனையைக் கூட தான் நுகர்ந்ததை அவள் இப்போதுதான் உணர்ந்தாள்.


இப்படிபட்ட ஒரு நெருக்கம் அவளை என்னவோ செய்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மைதான். 


அவன் தன் உதடுகளைத் தொட்டதோ கன்னம் கிள்ளி வாயில் வைத்து முத்தம் கொடுத்ததோ அவள் அவன் கண்ணுக்கு முத்தம் கொடுத்ததோ அவளுக்கு தவறென்றே தோன்றவில்லை. 


ஆனால் அவன் சட்டென அவளின் உதட்டில் முத்தமிட்டுவிட்டது அவளை அதிரச் செய்துவிட்டது. 


அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை. 


காலையில் பாத்ரூமில் தன் உடலை சுத்தப் படுத்திக்கொண்டபோது அவனை நினைத்து சுய இன்பம் கண்டதுதான் அவனோடு தன்னை இவ்வளவு நெருக்கமாக பழக வைத்து விட்டதோ என்று தோன்றியது.


ஆனால்.. இப்போதும் அவள் உடம்பு வெடவெடத்து இதயம் படபடத்துக் கொண்டிருப்பதை அவளால் நன்றாக உணர முடிந்தது. 


அவன் தன் உதட்டில் கொடுத்த முத்தத்தை சாதாரண முத்தமாக அவளால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை.. !!



***



அதே நேரம் நிருதியும் பெரும் குழப்பத்துக்கும் கவலைக்கும் ஆளாகியிருந்தான்.


'இப்போது என்ன செய்வது? அவள் ஏதாவது வம்பை இழுத்து விட்டு விடுவாளோ? இந்த பெண்களை மட்டும் நம்பவே முடியாது. ஆண்களின் ஆசையை தூண்டி விட்டு அவனை வில்லங்கத்தில் சிக்க வைப்பதில் வல்லவர்கள்.. !! உடனே போய் மன்னிப்பு கேட்டு விடுவதே நல்லது.. !!' ஒரு முடிவுக்கு வந்து கண்ணாடி முன் நின்று தலைவாரினான் நிருதி. 


ஐந்து நிமிடத்தில் ரெடியாகி வெளியே போனான். 


கதவுக்கு வெளியே போக.. தெரிந்தவர் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்தார். தவிர்க்க முடியாமல் அவருடன் பேசிக் கொண்டிருக்க.. கிருத்திகா பேகுடன் தன் வீட்டில் இருந்து வெளியே வந்தாள். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டைப் பூட்டினாள்.


அவனை அவள் அப்படி பார்த்த நொடி அவனுக்குள் பக்கென ஓர் அதிர்வு ஓடியது. தன் செயலின் விளவு தவறாகப் போயிருப்பதை உணர்ந்தான்.


  அவள் தலைவாரி ஜடை பின்னி மேக்கப் செய்திருந்தாள். வீட்டைப் பூட்டி துப்பட்டாவை சரி செய்து கொண்டு பேகை எடுத்து தோளில் போட்டபடி அவனிடம் வந்தாள்.


“போலாமா?” நிருதி கேட்டான்.


அவன் முகத்தை நேராகப் பார்க்காமல் தலையை ஆட்டினாள். 


அவள் முகம் இன்னும் இறுகித்தான் இருந்தது. அதில் ஒரு மெலிதான சோகம் இருப்பதைப் போலிருந்தது. அவள் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறாள்.


பேசிக் கொண்டிருந்தவரிடம் சொல்லி விட்டு அவனும் வீட்டைப் பூட்டிக் கிளம்பினான்.


 மனதை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு பைக்கை எடுத்தான்.


அமைதியாக வந்து அவன் பின்னால் ஒரு பக்கம் பார்த்து உட்கார்ந்தாள். அவளை ரியர்வு மிரரில் பார்த்து விட்டு மெதுவாக பைக்கை ஓட்டினான்.


“ஏய்.. வெரி ஸாரி கிருத்து” தலையை திருப்பி சைடில் பார்த்துச் சொன்னான்.


அவள் பேசவே இல்லை. உம்மென்றிருந்தாள்.


சிறிது நேரம் கழித்து மீண்டும் சொன்னான்.

“நீ கோபமா இருக்கேனு தெரியுது. என்னை மன்னிச்சிரு”


“…… ”


“ஸாரிப்பா”


“பேசாதிங்க..” கோபமாய் சொன்னாள்.


” வெரி ஸாரி”


“ச்ச.. ஏன் அப்படி பண்ணீங்க?”


“……. ”


“நீங்க எவ்ளோ நல்ல அண்ணாவா இருந்தீங்க.. அதை நம்பித்தானே நானும் உங்க கூட பழகினேன்.? சே.. நீங்க இப்படி செய்வீங்கனு நான் கொஞ்சம் கூட நெனைக்கவே இல்ல..” என்று மிகவும் வருந்திச் சொன்னாள்.


அவனுக்கும் வருத்தம் உண்டானது.

“வெரி ஸாரிம்மா” மிகவும் தணிந்த குரலில் சொன்னான்.


“அந்தக்காகிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா?”


“நான் பண்ணது தப்புத்தான்.. அதுக்காக மனசார மன்னிப்பு கேக்கறேன். என்னை மன்னிச்சிரு. இதுக்கு மேல உன் விருப்பம்”


அதன்பின் அவன் பேசவில்லை. அவளும் பேசவில்லை. அமைதியாக பைக்கை ஓட்டினான். ஸ்பீடு பிரேக்கர்களில் பொறுமையாகவே ஏறி இறங்கினான். அவள் அவன் மீது டச்சாகிவிடும்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை.


 ஆஸ்பத்திரி போனதும் அவனுக்குப் பின்னாலிருந்து இறங்கி எதுவும் பேசாமல் பேகை தூக்கிக் கொண்டு நடந்தாள். 


வண்டியைப் பூட்டிவிட்டு இடைவெளி விட்டு அவளைப் பின்தொடர்ந்தான்.


 அவளைத் தொடர்ந்து அவளது அம்மா இருக்கும் வார்டுக்குப் போனான். அவளது அம்மா படுக்கையிலிருந்தாள். அப்பா பக்கத்திலேயே இருந்தார்.


அவனை வரவேற்று பேசினர். நலம் விசாரித்தான். 


அவளது அம்மா, அப்பாவுடன் பேசிவிட்டு சிறிது நேரத்தில் கிளம்பினான்.


 அவன் கிளம்பி வரும்வரை கிருத்திகா அவனுடன் பேசவே இல்லை. அவனைப் பார்க்கவும் இல்லை. அவன் பார்வைகளை அவள் மதிக்கவும் இல்லை.. !!


அவன் விடை பெற்று வெளியேற கிருத்திகா அவன் பின்னால் வந்தாள்.

“ஒரு நிமிசம்” என்றாள்.


வெராண்டாவில் நின்று அவளைப் பார்த்தான். இன்னும் அவள் கூந்தலால் அடி பட்ட அவன் கண் சிவந்துதானிருந்தது. 


அதைப் பார்த்து கொஞ்சம் வருத்தப் பட்டாள்.

“இனிமே இப்படிலாம் பண்ணாதிங்க”


“ஸாரி”


“எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது”


“என்னை அடிச்சிரு”


“அடிச்சா.. ??”


“உன் கோபம் ஆறிடும்”


முறைத்தாள்.

“ம்ம்.. போங்க.. பை” எனச் சொல்லிவிட்டு சட்டென திரும்பிப் போனாள்.. !!



கொஞ்சம் கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினான் நிருதி. 


நடந்ததை நினைக்க அவமானமாகத்தான் இருந்தது. ஆனாலும் இது சபலத்தால் உண்டான ஆசைக்கு கொடுத்த விலை என்று மனதை சமாதானம் செய்தான். 


பெண்ணாசை பொல்லாதது. வில்லங்கமானது. மனைவி இருக்க மற்ற பெண்களை நாடினால் இப்படித்தான் அசிங்கப் பட வேண்டியிருக்கும். மனைவி இருந்தால் மட்டுமில்லை. இல்லாவிட்டாலும் இதே நிலைதான்.


அதுவும் இவள் ஓர் இளம்பெண். திருமணமாகாதவள். அவள் அழகா அழகில்லையா என்பதைத் தாண்டி அவளுக்குப் போய் முத்தம் கொடுத்தது மிகப்பெரிய தவறுதான்.


யோசனைகளும் குழப்பமும் அவனை நிம்மதியிழக்கச் செய்தது.. !!


வியாழன், 26 அக்டோபர், 2023

நீலவானப் பறவை -4

 மறுநாள் காலை,


மருத்துவமனையை அடைந்த வருண் சுற்றிலும் பார்த்தான். பணியாளர்கள் செவிலியர்கள் யாரும் அவர்களது இடத்தில் இல்லை. 


காசுவாலிட்டியில் நாலு படுக்கைகள் இருந்தன, ஒன்றைத் தவிர அனைத்தும் காலியாக இருந்தன, 


வருண் அந்த இளையவனிடம் சென்று ஆர்வமாக பார்த்தான். அவன் இன்னும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.


 இன்னும் பதினெட்டு வயது ஆகாத வாலிபனாக இருக்க வேண்டும் என்று அவன் முகத்தைப் பார்த்த வருண் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.


மென்மையான தலைமயிர், அடர்ந்த கருமையான புருவம், சமீபத்தில் வளர ஆரம்பித்த மெல்லிய மீசையுடன் கூடிய கூர்மையான மூக்கு, இறுக்கமாக மூடிய உதடுகள், சதுர தாடை. அவன் ஆரோக்யமான பையன் என்று வருண் யூகித்தான்.


ஆனந்தி போன் செய்ய, திடீரென்று வருணின் மொபைல் அடிக்க ஆரம்பித்தது.


"ஹாய் டியர்" என்றான் வருண்.


"வருண் போயிட்டியா..? அந்த பையன் எப்படி இருக்கான்.. எழுந்திரிச்சாச்சா?" ஆனந்தி ஆர்வமாக கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.


வருணின் பேச்சு சத்தம் காரணமாக, அந்த இளைஞன் சில அசைவுகளைக் காட்டி கண்களைத் திறக்கத் தொடங்கினான்.


 வருண் அதைக் கவனித்து தன் மனைவிக்கு பதிலளித்தான்.


"பையன் இப்போதான் எந்திருக்கிறார், நான் உனக்கு மறுபடியும் கால் பண்றேன்.. இரு"


அவன் படுக்கையில் இருந்து எழ முயன்றான். வருண், அவன் எழ உதவினான்.


எழுந்தவன் திடுக்கிட்டதுபோல தான் இருக்கும் இடத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.


தான் இருப்பது ஆஸ்பத்திரியில் என்பைதை புரிந்து கொண்டு லேசான திகைப்புடன் வருணைப் பார்த்தான்.


"ஹாய், நான் வருண், நேத்து நான்தான் உன்னை இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணேன். உன்னை சாலையோர கல் பெஞ்ச்ல பாத்தோம். உன் பேர் என்ன.. உனக்கு என்ன நடந்துச்சுனு எனக்கு எதுவும் தெரியாது"


அவன் பேசத் துவங்கும் முன், ஒரு மத்திம வயது கடந்த தாராள நர்ஸ் உள்ளே வந்தாள். 


இரவு ட்யூட்டி பார்த்தவள். அவள் முகம் சோர்வாக இருந்தாலும் கன்னங்கள் உப்பி, பார்க்க அழகாகவே இருந்தாள். 


அவர்களைப் பார்த்து "குட்மார்னிங்" சொன்னாள்.


வருணும் அவளுக்கு "குட்மார்னிங்" சொன்னான்.


அவள் பையனுக்கு சலைன் பாட்டிலை மாற்றி விட்டாள். 

 "நல்லா இருக்கியா? வலிக்குதா?" என்று பையனிடம் கேட்டாள்.


பதிலுக்கு அவன் லேசாக தலையசைத்தான்.


அதே நேரம், போலீஸ் கான்ஸ்டபிளும் உள்ளே வந்து, வருணுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, வருண் முன்பு கேட்டதையே அந்தப் பையனிடம் அவரும் கேட்கத் தொடங்கினார். 


"என் பெயர் விஜய், நான் அனாதை, அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன். அங்கிருந்து வெளியே வந்து லேத் பேக்டரியில் வேலை பார்த்துட்டிருந்தேன். அங்க கூட வேலை செய்றவங்க என்னை அடிச்சு போட்டுட்டு என் பணத்தை எல்லாம் எடுத்துட்டு போயிட்டாங்க. நான் மயக்கமாகிட்டேன்" என்று அந்தப் பையன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்றபடி கரகரப்பான குரலில் சொன்னான்.


கான்ஸ்டபிள் சம்பவம் பற்றி விசாரிக்க, வருண் வெளியே வந்து தனது அலுவலகத்திற்கு போன் செய்து, இரண்டு மணி நேரம் அனுமதி வாங்கினான்.


 பையனின் அனைத்து விவரங்களையும் இரண்டு அடையாளக் குறிகளையும் பதிவு செய்து, இறுதியாக வருணின் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார் கான்ஸ்டபிள்.


 மருத்துவர் வந்து அவன் உடல் நிலையை பரிசோதித்து, செவிலியருக்கு அறிவுரைகளை வழங்கினார். 


பிறகு வருணின் பக்கம் திரும்பி விளக்க ஆரம்பித்தார்.


"இந்த பையன் சுயநினைவில்லாம இருந்திருந்தாலும், அவனோட CT  ஸ்கேன் அறிக்கை நார்மலாதான் இருக்கு. அவனை இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணலாம். ஆனாலும் ஒரு வாரமாவது அவனை கவனிக்க வேண்டியிருக்கும். ஒரு வாரத்துக்கு அப்பறம் அவனை அடுத்த செக்கப்புக்கு கூட்டிட்டு வரணும்"


 டாக்டர் சென்றதும், அந்த தாராள நர்ஸ் வருணிடம்,

 "நீங்க கேன்டீனுக்குப் போய் காபி சாப்பிடலாம் வருண்" என்றாள்.


"தேங்க் யூ.. பட் என் வொய்ப் கையால காபி குடிச்சிட்டுதான் வந்தேன்." புன்னகையுடன் சொன்னான்.


அவள் தன் கன்னங்கள் குழையச் சிரித்தாள். 

"வொய்ப் மேல அவளோ பிரியமோ?"


"யெஸ்" என்றான்.


"லக்கி" 


"ஏன்?" லேசாக வியந்தவனாகக் கேட்டான்.


"ஹீரோ மாதிரி இருக்கீங்க.. பட் உங்க வொய்ப்பும் ஹீரோயின் மாதிரிதான் இருக்காங்க.. மேட் ஃபார் ஈச் அதர்.." அவனையும் அவனது மனைவியையும் புகழ்ந்து சொன்னாள்.


*தேங்க் யூ"  வருண் அந்தப் பையனைப் பார்த்தான். அவன் பலவீனத்தில் கண்களை மூடினான்.


"எங்க வொர்க் பண்றீங்க?" நர்ஸ் மெல்லிய குரலில் கேட்டாள்.


தன் நிறுவனத்தின் பெயரைச் சொன்னான். 


"உங்களை மாதிரி உதவுற குணம் இருக்கறவங்களை நிச்சயம் பாராட்டணும்" என்று அவன் கண்களைப் பார்த்தபடி கனிந்த புன்னகையுடன் சொன்னாள்.


"அப்ப.. நீங்க என் மனைவியைத்தான் பாராட்டணும். இந்த பையனை முதல்ல பாத்ததும் ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணியே ஆகணும்னு கம்பெல் பண்ணதும் அவங்கதான்" என்றான் வருண். 


"அப்போ அவங்களை நான் பாராட்டினதா சொல்லுங்க.. உங்களுக்கு ஒரு நல்ல பெண் மனைவியா கிடைச்சிருக்காங்க"


"நிச்சயமா.. அவங்க ரொம்ப நல்ல பெண்தான்"


"இப்படி சொல்ற ஆண்கள் ரொம்ப கம்மி"


"நான் பொய் சொல்லலை.."


"எனக்கு பிடிச்சிருக்கு" எனச் சிரித்தாள். "எப்பவும் இந்த லவ் இருக்கணும்"


"ஷ்யூர்.."


பையன் கண்களை மூடி மயக்கத்துக்குள் போய் விட்டதைப் பார்த்த அந்த நர்ஸ் மீண்டும் மெல்லிய குரலில் சொன்னாள்.  

"பையன் தூங்கறான். அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.."


"ஓகே, இப் யூ டோண்ட் மைண்ட்.. உங்க பேர் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" அவளைக் கேட்டான். 


"ஜூலி" உடனே சொன்னாள்.


"நைஸ் நேம்.. நேட்டிவ் கேரளாவா?"


"ஆமா.." லேசாக விழிகளைத் தூக்கினாள். "எப்படி தெரியும்?"


"உங்களை பாத்தாலே தெரியுது"  என்று அவளின் நிமிர்ந்த தாராள மார்புகளைப் பார்த்தபடி புன்னகைத்தான். 


அவள் சட்டென, "ஹேய் மேன்" என்று எட்டி அவன் தோளில் அடித்தாள். 

 "யூ லுக் மி நாட்டி"


நோ.. யூ ஆர் ராங்.. நான் உங்க அழகை ரசிச்சேன்" சட்டெனக் கண்ணடித்தான். 


அவள் முகம் மலர்ந்து புன்னகை விரிந்தது. 


இரவில் கண் விழித்து வேலை பார்த்த, அவள் முகத்தில் இருந்த சோர்வு நீங்கியதைப் போல அவனைப் பார்த்தாள்.


"ஈஸிட்..?"


"யா.. யூ ஆர் ஸோ ப்யூட்டி"


"நிஜமாவா.?"


"வெள்ளை உடை தேவதை மாதிரி இருக்கீங்க.." 


"ஹலோ.. நான் நைட் ட்யூட்டி பாத்துருக்கேன். சரியான தூக்கமில்லே. குளிக்கலே.."


"ஸோ வாட்.. அதுக்காக உங்க அழகு காணாம போயிடாது.."


"நான் குண்டு.. தெரியுமா..?"


"அப்படி ஒண்ணும் குண்டா இல்ல.. பட்.. அதுவும் ஒரு அழகுதான்" அவளை முழுதாக ரசித்தபடி சொன்னான்.


அவள் முகம் கனிந்து இதழ்கள் மலரச் சிரித்தாள். அவன் அருகில் உரசும்படி நின்றுகொண்டு மீண்டும் பையனைப் பார்த்துவிட்டு மெல்லக் கேட்டாள்.

"ஆர் யூ லைக் மீ வருண்..?"


"யா.. யு ஆர் வெரி செக்ஸி"


"யூ ஆர் ஹேண்ட்ஸம்.. மேன்" என்று அவன் தோளில் கை வைத்தாள்.


அவளின் தொடுகையில் அவன் கிளர்ந்தான். மிக அருகில் அவளின் முதிர் மாங்கனிகள். 


அவளின் மொபைல் நெம்பர் வாங்க நினைத்தான்.


"நீங்க மேரிடா?" அவளைக் கேட்டான்.


"ஏன்..? மேரீடுனா பிடிக்காதா?"


"நோ நோ.. கல்யாணமான பெண்களுக்குனு ஒரு தனி அழகு இருக்கு. அது உங்களுக்கும் இருக்கு. அதனால கேட்டேன்"


"ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. என் ஹஸ்பெண்ட் ஃபாரின்ல இருக்கார்." என்று மெல்லிய குரலில் சொன்னாள்.


அவனுக்கு அவளின் நிலை புரிந்தது. 

"ஹோ.. ஸாரி.."


"ஏன்?"


"ஹஸ்பெண்ட் கூட இல்லாத உங்களோட உணர்வுகளுக்காக. தனிமை இல்ல.. ஆனாலும் துணை பக்கத்துல இல்லாத நிலை மோசமானது.."


"எக்ஸாக்ட்லி.." அழுத்தமான குரலில் சொன்னாள்.


அவளிடம் உண்டாகியிருக்கும் பெண்மைத் தேவைக்கான மாற்றத்தை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.


அவள் கண்களையும் முகத்தையும் பார்த்தான். அவளும் பார்த்தாள். இருவரின் கண்களும் ஒரே நேர்க் கோட்டில் சந்தித்துக் கொண்டன.

 

"இளமை போனா திரும்ப வராது.." மெதுவாகச் சொன்னான்.


"நான் அந்த இளமையை கடந்துட்டேன்"


"ஆனா அந்த உணர்வுகளை கடக்கல.."


"நைஸ்" என்றாள். "என்னை பிடிச்சிருக்கா?" மீண்டும் கேட்டாள்.


"ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க கன்னம் அழகு.." சட்டென அவள் கன்னத்தை கிள்ளினான்.


அவள் ஆட்சேபிக்கவில்லை. துணிந்து அவள் முகத்தருகே முகம் கொண்டு போனான். 


அவளே தன் கன்னத்தைக் காட்டினாள். அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.


"லவ் யூ ஜூலி.."


"லவ் யூ டூ வருண்.." எனச் சொன்னவள் தன் உதட்டைக் காட்டினாள்.

"கிஸ் மீ.."


அவன் தயங்கவில்லை. சட்டென அவள் உதட்டில் முத்தமிட்டான். திருப்பி அவளும் அவன் உதட்டை முத்தமிட்டாள்.


இவ்வளவு எளிதாக இப்படி ஒரு பெண் கிடைப்பால் என்று அவன் நினைத்திருக்கவில்லை.. !!

புதன், 25 அக்டோபர், 2023

என்னை நேசித்தவள் --2

 ஆறு மாதம் முன்புதான் என் தங்கையின் திருமணத்தை முடித்து வைத்தோம்.


 அடுத்த தெருவைச் சேர்ந்த ஒருவனை காதலித்து அவனைத்தான் கட்டிக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள்.. !! 


வேறு வழி இல்லாமல் அவனுக்கே இவளைக் கட்டி வைத்தோம்.. !!


எங்களுக்கு அப்பா இல்லை. விபரம் வந்த நாளில் இருந்து அம்மா மட்டும்தான்..!


 இப்போது அந்த அம்மா ஆஸ்பத்ரியில் இருக்கிறாள். பிரெஷ்ட் கேன்சர்..!!


 இரண்டு நாள் முன்பு என் அம்மாவின் இடது மார்பகத்தை அகற்றியாகி விட்டது.. !! இன்னும் அம்மா ஆஸ்பத்ரியில்தான் இருக்கிறாள்..!!


என் அம்மாவுக்கு கேன்ஸர் ஆரம்பித்த பிறகுதான்.. என் தங்கை கல்யாணத்தை அவசரமாக முடிக்க வேண்டியிருந்தது. அதனால் மறுக்க முடியாமல் அவள் காதல் கை கூடி விட்டது.. !! 


ஆனால் இதில் என் அம்மா செலவு உட்பட.. கடனாளியானது நான் மட்டும்தான்..!! 


என் தங்கைக்கு அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலை இல்லை.. !! அவள் கணவனிடம் நான் வாங்கின கடனை அடைக்க முடியவில்லை என்பதுதான் அவளது கவுரவப் பிரச்சினையாக இருக்கிறது.. !!


என் தங்கை போன பின் சத்யா கேட்டாள்.

'' என்ன இது.. இப்படி பேசிட்டு போறா.. ??''


'' அதை ஏன் கேக்கற..? எங்கம்மாவை அட்மிட் பண்ணப்ப.. அவ புருஷன் ஆஸ்பத்ரிக்குனு ஒரு இருபதாயிரம் செலவு பண்ணிட்டான்.. ! அதைக் கேட்டு ஒரே நச்சரிப்பு.. ! அவன்கூட ஒண்ணும் கண்டுக்கறதில்லை  இவளோட பொலம்பலைத்தான் கேக்க முடியறதில்ல.. !!''


'' ஓ.. !!'' வாயைக் குவித்தாள் சத்யா.


'' நான் என்ன வெச்சிட்டா அவளுக்கு குடுக்க மாட்டேங்குறேன். இவ கல்யாணத்துக்கு பண்ண செலவுலயே இன்னும் ரெண்டு லட்சத்துக்கு மேல கடன் இருக்கு. இப்ப எனக்கும் சரியா வேலை வேற இல்ல. வட்டி கட்டவே திண்டாட்டமா இருக்கு..! இதுல அம்மா ஆபரேசன் ஒரு பக்கம்.. !! நான் எதை எதைத்தான் பாக்கறது..?? ஆனா அவ பேசறதை யாராவது கேட்டாங்கனு வெய்யி.. என்னமோ நான் தண்டமா சுத்தற மாதிரியும் அவதான் எல்லாத்தையும் தாங்கறாங்கற மாதிரியும் நினைப்பாங்க.. !!''


சிரித்தாள் சத்யா.!

'' சரி விடுங்க.. உங்க தங்கச்சிதான சொல்றா.. ??''


'' ஒண்ணும் பேச முடியாது.. !!''


'' அது சரி.. இன்னிக்கு என்ன எழுந்துக்க இவ்வளவு நேரம்..?? விஜி சொன்ன மாதிரி.. நைட்டு புல் சரக்கோ.. ??''


'' அட.. நீ வேற சத்யா..! அவனவன் கைல நையா பைசா இல்லாம காஞ்சு போய் கெடக்கான். இதுல புல்லா எங்க போய் அடிக்கறது.. ? தனியா இருக்கற கொழப்பத்துல ரொம்ப நேரம் தூங்காம டிவி பாத்துட்டு இருந்தேன். அதான்... ''


'' ஓ.. ஹ்.. !!'' எனச் சிரித்தாள்.  ''ஆனா உங்கள பாத்தா.. மூஞ்சியே ஒரு மாதிரி.. சரக்கடிச்சாப்லதான் இருக்கு.. !!''


'' இதான் நேரம்ன்றது.. !!''


'' சும்மா.. கோவிச்சிக்காதிங்க.. !!'' சிரித்தாள்.


எனக்கு வேலைக்கு நேரமாகியிருந்தது. அவளுடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை.


'' ஓகே சத்யா.. எனக்கு டைமாகுது.. !! பெஸ்ட் ஆப் லக்.. !! நிச்சயமா உன்ன பாக்க வர மாப்பிள்ளைக்கு உன்னை புடிக்கும்.. !! சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு.. !!'' என்றேன்.


'' தேங்க்யூ நிரு.. !!'' என்று முகம் நிறைய வெட்கத்தை அப்பிக் கொண்டு சிரித்தாள் சத்யா.


நான் குளிக்க ஆயத்தமானேன்.. !!


பொறுமையாக குளிக்கவெல்லாம் நேரம் இல்லை. அல்லது அதில் ஆர்வமும் இல்லை. பெயருக்கு குளித்தால் போதுமானது என்கிற மனநிலை.


நான் அவசரமாகக் குளித்து.. உடை மாற்றிக் கொண்டு.. வீட்டைப் பூட்டிக் கிளம்பியபோது.. வாசலில் வைத்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த சத்யாவின் அம்மா கேட்டாள்.

''வேலைக்காப்பா.. ??''


'' ஆமாங்க்கா.. ''


'' உன் தங்கச்சி வந்து பாட்டா பாடிட்டு போனாளாமா.. ?? அம்மாவ பாக்க போகலியா.. ??''


'' இப்ப நேரம் இல்லக்கா..! சாயந்திரம் போய் பாத்துக்கறேன்.. !!''


சத்யா மீண்டும் கதவருகே வந்து நின்று என்னைப் பார்த்தாள். கவர்ச்சியாகப் புன்னகைத்தாள்.


'' மேக்கப் கலைஞ்சிர போகுது '' என்றேன்.


''கலைஞ்சா மறுபடி பண்ணிப்பேன்..!!'' என்று சிரித்தாள்.


'' ஒகே.. பெஸ்ட் ஆப் லக்.. !!''


'' தேங்க்ஸ். !!''


சத்யாவின் அம்மா சொன்னாள்.

''என்னவோப்பா.. இந்த எடமாச்சும் நல்லா அமையட்டும் ''


'' அமையும். கவலை படாதிங்க.. !!'' என நான் சொல்ல..


'' ஆமா.. போன வாட்டியும் இதைவேதான் சொன்னீங்க ..?? '' எனக் கிண்டலாகச் சிரித்தாள் சத்யா.


'' இந்த வாட்டி அமையும் பாரு.. !!'' என்று விட்டு.. நான் புன்னகையுடன் விடை பெற்றுக் கிளம்பினேன்.. !!


இரவு.. !! 


அம்மாவைப் பார்க்க ஆஸ்பத்ரி போனேன். அம்மா கொஞ்சம் உடல்நலம் தேறி தெம்பாக இருந்தாள்..!!


'' எப்படிமா இருக்கு.. இப்ப.. ??''


'' ம்ம்.. தேவலப்பா.. ''


'' சாப்பிட்டியா.. ??''


'' இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன்..! நீ என்ன பண்ண.. ??''


'' எனக்கென்ன..? போறப்ப சாப்பிட்டு போய்க்குவேன்.. !!''


என்னையே பார்த்துக் கொண்டிருந்த என் தங்கை மெல்லச் சொன்னாள்.

''நேரங் காலமா வீடு போய்ச் சேரு. வீட்ல ஆள் இல்லேன்னு கண்டபடி தண்ணியடிச்சிட்டு சுத்தாத.. !!''


'' ஏய்.. யார்ரீ சொன்னா உனக்கு.. ??'' எரிச்சலை காட்டினேன்.


'' ஹா.. நீ பண்றது தெரியாது பாரு எங்களுக்கு.. ?? இதை வேற ஒரு ஆளு வந்து சொல்லனுமாக்கும்.. ??'' என முறைத்தபடி சொன்னாள். பின் ''சரி.. சரி.. நீ என்னமோ பண்ணு..! கேட்டா இனி இல்லாத நாயம் பேசுவ..? நான் சொல்லி நீ எதை கேட்றுக்க.. ??''


'' ஏய்.. இது ஆஸ்பத்ரி. உன் வாய மூடிட்டு இருக்கியா.. ??'' எரிச்சலை அடக்கிக் கொண்டு சொன்னேன்.


என் அம்மா இடை புகுந்து எங்களை சமாதானம் செய்தாள். பின் மெலிதான குரலில் சொன்னாள்.

'' இந்த புள்ள புருஷன் வந்துட்டு போனாப்ல.. ! அவுருதான் சாப்பாடு கொண்டு வந்து குடுத்துட்டு போனாரு.. !!''


'' ம்ம்...!!''


என் தங்கை, 

 ''சொல்லிட்டேன் அவருகிட்ட. இன்னும் ரெண்டு நாள்ள தரேனு சொல்லியிருக்கேனு. என்னை கால வாரி விட்றாத..'' என்றாள்.


அவளை முறைத்தேன்.


'' என்ன மொறைக்கிறே..??'' என்றாள், ''மொறைச்சா..? எம் புருஷனுக்கு என்ன விதியா.? நான் அங்க போய் நல்லா வாழனும்னா.. பணத்தை ரெடி பண்ணி குடுக்கற வழிய பாரு. இல்லேன்னா உங்கம்மா ஆபரேசனுக்கு கூட பணம் பெரட்ட முடியலியான்னு என்னைத்தான் கேவலமா பேசுவாங்க.. !!'' என அவள் சொன்னபோது.. அவள் வாழ்வின் மீதான அவளது அக்கறை என்னை செருப்பால் அடிப்பது போலிருந்தது.. !!

விரும்பிப் படித்தவை.. !!