ஞாயிறு, 27 ஜனவரி, 2019

இடையினம் -2

நான் மிகவும் களைத்துப் போய்.. ஸ்ரீமதியின் கையால்.. சூடாக.. மணக்க மணக்க காபி குடிக்கலாம் என்று ஆவலாக வீட்டுக்கு வந்தால்.. இங்கே நிலமை தலை கீழாக மாறிப் போயிருந்தது.. !!

ஹால் ஒரு பக்கம் அலங்கோலமாக கிடக்க.. நவன் ஒரு மாதிரி தளர்ந்து கிடக்கிறான். அதை விட.. தன் மனைவியை அறைக்குள் வைத்து கதவை வேறு பூட்டி வைத்திருக்கிறான்..!!

அப்படி என்ன நடந்து விட்டது இந்த வீட்டில்.. ?? அவளுக்கு ஏதாவது பைத்தியம் பிடித்து விட்டதோ.. ?? அவளுக்கு ஏன் பைத்தியம் பிடிக்க வேண்டும்...?? அப்படி வெறி வந்த நிலைக்கு அவள் போயிருந்தால்.. இவன் என்ன காரியம் செய்திருக்க வேண்டும்.. ?? இவன் ஆபீஸ் போனானா இல்லையா.. ??

'' ப்ரோ... இப்ப கதவ தெறக்க போறிங்களா இல்லையா.. ??'' கதவை 'படார்.. படார் ' என அடித்துக் கொண்டு கத்திக் கேட்டாள் ஸ்ரீமதி.

நான் நவனை பார்த்தேன்.
''என்னடா பண்ணி வெச்சிருக்க.. ?? ஏன் இப்படி பூட்டி வெச்சிருக்க.. ?? என்னாச்சு உனக்கு.. ?? இங்க என்ன நடந்துச்சு.. ??'' என நான் அவனைப் பார்த்துக் கேட்ட எந்த கேள்விக்குமே அவன் பதில் சொல்லவில்லை. !!

ஒரு பக்கம் ஸ்ரீமதி தொடர்ந்து கதவை இடித்தபடி.. என்னைத் திறக்கச் சொல்லி கத்திக் கொண்டிருந்தாள். !! 

சாவி சோபாவில் அவனுக்கு பக்கத்தில்தான் கிடந்தது.! நான் சாவியை எடுக்கப் போனேன்.!!

''ப்ளீஸ்.. வேணாண்டா.." என்று  என்னை தடுத்தான்.


"டேய்.. ஏன்டா.. ??"


" அவ இப்ப நார்மல் மூடுல இல்ல.. செம காண்டுல இருக்கா..! வெளில வந்தான்னா.. என்னை இங்கயே கொலை பண்ணிருவா..!!'' என பரிதாபமாகச் சொன்னான் நவன்.

அவன் முகத்தில் உண்மையான ஒரு பயம் தெரிந்தது. !!

'' சரி.. என்ன பிரச்சினை சொல்லு.. ??'' என்றேன்.

அவன் சொல்லவில்லை. என்ன நடந்தது என்று என்னிடம் சொல்ல முடியாதவன் போல திணறினான்.. !!

'' சரிடா.. நான் இருக்கேன் இல்ல.. ? விடு நான் பாத்துக்கறேன்.. !! அதுக்காக நீ இப்படி டோர்லாம் லாக் பண்ணி வெக்க கூடாது.. !!'' எனச் சொல்லி விட்டு சாவியுடன் போய் கதவை திறந்து விட்டேன்.. !!

உள்ளே பத்ரகாளி மாதிரி உக்கிரமாக நின்று கொண்டிருந்தாள் ஸ்ரீமதி. 

அவள் முகமெல்லாம் வியர்த்து.. தலை முடி எல்லாம் கலைந்து.. கண்கள் கோபத்தில் சிவக்க.. வேகவேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.. !

 இப்போதும் அவள் மார்பை மறைக்க துப்பட்டா  இல்லை.  நவன் சொன்னதை போல.. அவனைக் கொன்று விடுவாளோ என்று ஒரு நொடி அச்சப் படும்படியாக.. நின்று கொண்டு இருந்தாள்.. !!

'' எ.. என்னாச்சு.. ஸிஸ்.. ??'' அவள் வெளியே வராதபடி.. வாயிலை அடைத்து நின்று கொண்டு கேட்டேன்.


'' இருக்கானா அவன்.. ?? தள்ளு.. !! நான் ஜெயிலுக்கு போனாலும் பரவால்ல.. !! அவனை நான் இன்னிக்கு கொலை பண்ணத்தான் போறேன்.. !!'' என கோபமாக கத்திப் பேசினாள்.

கோபத்தில் அவள் முகம் சிவந்திருந்தது.  அவள் மார்புகள் குபுக் குபுக் என வேகமாக ஏறி இறங்க.. தொண்டை நரம்புகள் புடைத்து அடங்கின. !!

'' ஸிஸ்.. கூல் டவுன் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. எனக்காக.. என்னாச்சுனு சொல்லுங்க.. ??''


'' நீ தள்ளு ப்ரோ.. மொதல்ல நான் அவனை கொலை பண்ணிட்டு.. அப்பறம் உனக்கு பதில் சொல்றேன்.. !!'' அவள் என்னை தள்ளி விலக்க முயல வந்தாள்.

நான் நன்றாக அடைத்து நின்று கொண்டேன்.
''ஸிஸ்.. நீ இப்ப நார்மலா இல்ல.. தயவு செய்து நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்.. !! இரு.. என்ன ஆச்சு சொல்லு.. ??''

இப்போது என்னைக் கடுமையாக முறைத்தாள் ஸ்ரீமதி. அவளது கண்களின் கோபக் கனல் அத்தைனையும் திரட்டி என்னை சுட்டெரிப்பது போல முறைத்தாள்..!!
''ப்ரோ.. மரியாதையா சொல்றேன்.. விலகு... ''


'' ஒரு நிமிசம் இரு ஸிஸ்... '' நான் சொல்லி முடிக்க...


'' ஆஆஆஆ.. ச்சீ தள்ளு... '' என அடுத்த நொடி ஆவேசமாக என்னை இடித்துத் தள்ளிக் கொண்டு வெளியே போனாள் ஸ்ரீமதி.!!

நான் சுதாரித்து.. அவளுக்குப் பின்னால் ஓடினேன். எனக்கு முன்னால் வேங்கை போல பாய்ந்து போன ஸ்ரீமதி..

 நவனை சோபாவில் தள்ளி.. தன் இரண்டு கைகளாலும் வெளுத்து வாங்கத் தொடங்கினாள்.. !!

தன் மேல் விழும் அடிகளை வாங்கிக் கொண்டு.. தடுக்க முயன்று கொண்டிருந்தான் நவன்..!! அவன் திருப்பி எல்லாம் தாக்கவில்லை..!!

'' ஸிஸ்.. ஸிஸ்.. ஸிஸ்.. ஸிஸ்... '' என நான் அவளை தடுக்க முயற்சி செய்தபடி.. நவனுக்காக கெஞ்சிக் கொண்டிருந்தேன்.. !!

ஒரு பத்து நிமிடங்களுக்கு பக்கமே அவனைப் புரட்டி எடுத்திருப்பாள். அப்பறம் ஆவேசம் தனிந்தவளாக.. அவள் சோர்ந்து போய்.. எதிர் சோபாவில் தொப்பென விழுந்த போது.. நவனின் கன்னம் ஆப்பிள் போல சிவந்து போயிருந்தது..!!

பின்ன.. சும்மாவா.. தர்ம அடி அல்லவா.. ?? அதுவும் கன்னம் கன்னமாக... !!

அப்பறம் கொஞ்ச நேரம் மயான அமைதி.. !! 

நவன் சோபாவின் பின்னால் தலை சாய்த்து.. கண்களை மூடியிருந்தான்.! அவன் சட்டை பட்டன்கள் தெறித்து.. அங்கங்கே கிழிந்து போயிருந்தது..!! அவன் மார்பில் கூட தன் விரல் நகங்களால் கீறி வைத்திருந்தாள்.. !!

அதே போலத்தான்.. எதிர் சோபாவில் விழுந்த ஸ்ரீமதியும்.  பின்னால் சாய்ந்து இன்னும் வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். 

அவள் டாப்சு தளர்ந்து.. அவளது  கிளிவேஜையும் தான்டி.. நெருக்கமான மார்புகளின் கோடு என் கண்களுக்கு படு கவர்ச்சியாக தெரிந்தது.. !!

இத்தனை களேபாரத்திலும்.. இவள் அழகு மட்டும் எத்தனை அழகாக ஜொலிக்கிறது.. ?? அந்த தங்க் கனிகளின் தரிசனம் என்னை இன்பமாய் தழுவியது.. !!

'ச்ச.. எந்த நேரத்தில் என்ன காரியம் செய்கிறேன்..நான் ?' சட்டென சுதாரித்தேன்.

அவர்கள் இரண்டு பேரும் கண்களை மூடிக்கொண்டு இருக்க.. நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.. !!

முதலில் நவன்தான் கண்களை திறந்தான். தன் மனைவியைப பார்த்து விட்டு.. அப்பறம் என்னைப் பார்த்தான்.. !!

' என்னடா ஆச்சு ?' கண்களாலேயே கேட்டேன்.

அந்த நிலையிலும் மெலிதாக புன்னகை காட்டினான்.. !! 

இவ்வளவு அடிகளை வாங்கிக் கொண்டு அவனால் எப்படி சிரிக்க முடிகிறது என எனக்கு வியப்பாக இருந்தது.. !!

அவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்ள... நான் மெதுவாகப் போய்.. ஹாலில் சிதறிக் கிடந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தேன்.. !! 

சில உடைந்த பொருட்களை விட்டு விட்டு.. உடையாத பொருட்களை எடுத்து வைத்து விட்டுப் பார்த்த போது.. ஸ்ரீமதி எங்கோ வெறித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தாள்.. !!

'' ஸிஸ்... !!'' நான் மெதுவாக அழைக்க... மெல்ல முகம் திருப்பி என்னைப் பார்த்தாள்.

நவனும் கண்களை திறந்தான்.!

'' எனக்கு ஒரு காபி கிடைக்குமா.. ?? நான் ரொம்ப டயர்டா இருக்கேன்.. !!''  என் மேல் எடுத்து எறிவதற்கு அவள் கை பக்கத்தில் எந்தப் பொருளும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின் கேட்டேன்.

என்னை முறைத்தாள் ஸ்ரீமதி. நான் சிரிக்க.. நவனைத் திரும்பி பார்த்தாள். இரண்டு பேரின் விழிகளும் ஒரு நொடி சந்தித்து விலகியது..!!

ஒரு பெருமூச்சுடன் சோபாவை விட்டு எழுந்தாள் ஸ்ரீமதி.!! டாப்ஸை இழுத்து விட்டுக் கொண்டு  மிகவும் தளர்ந்த நடையுடன் கிச்சன் நோக்கிப் போனாள்.. !!

சோபாவில் அவள் உட்கார்ந்திருந்து இடத்தில் இப்போது நான் உட்கார்ந்தேன். என் குரலை வெகுவாக தனித்துக் கொண்டு கேட்டேன்.

'' என்னடா பிரச்சினை.. ? சொல்லேன்.. ??''
'' இப்ப வேண்டாம். !! நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்தர்றேன்.. !!'' என அவனும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு எழுந்து போனான்.. !!

நான் எழுந்து போய் டிவியை ஆன் பண்ணி.. வால்யூமைக் குறைத்தேன்..!!

 நவன் முகம் கழுவி.. தலை வாரி.. உடை மாற்றிக் கொண்டு வர... கிச்சனில் இருந்து ஸ்ரீமதியும் இரண்டு காபி கப்களுடன் வந்தாள். !!

என் வார்த்தைக்கு அவள் மதிப்புக் கொடுத்து.. எனக்காக காபி கலந்து கொண்டு வந்த அவளது பண்பை எண்ணி.. வியந்தேன்.

'' தேங்க்ஸ் மை டியர் ஸிஸ்... '' என்றேன்.

அவள் இன்னும்  இறுகிய முகத்துடன்  என் பக்கத்தில் உட்கார்ந்து அவள் காபியை உறிஞ்சினாள். 

நவன் பரிதாபமாக எங்களைப் பார்ப்பதைப் போலிருந்தது. !!

'' ஸாரி ஸிஸ்.. காபி இவ்ளோதானா.. ??'' லேசான தயக்கத்துடன் மெதுவாகக் கேட்டேன்.


'' இருக்கு.. போய் எடுத்து குடிக்க சொல்லுங்க. !!'' என அமைதியாகச் சொன்னாள்.

ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வியப்பைக் காட்ட முடியாது. !! நான் சொல்லும் முன்பே.. நவன் எழுந்து கிச்சன் போனான்..! 

அவனும் காபி கப்புடன் வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்து கொள்ள.. மூவரும் அமைதியாக.. டிவியை பார்த்தபடி காபியை உறிஞ்சினோம்.. !!

'' காபி சூப்பர்ப்பா இருக்கு ஸிஸ்.."


".........."


" தேங்க் யூ ஸிஸ்...!!'' நான் அவளை இயல்பாக பேச வைக்க நினைத்தேன். ஆனால்  அவள் என்னைப் பார்க்கக்கூட இல்லை. !!

'' என்னாச்சு ஸிஸ்.. கொஞ்சம் டென்ஷன் ஆகாம.. சொல்லுஙகளேன்.. ப்ளீஸ்ஸ்ஸ்... ??'' நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெஞ்சலாக கேட்டேன்.

காபியை உறிஞ்சியபடியே மெதுவாக எழுந்தாள். ஒரு கையில் காபி கப்பைப் பிடித்தவாறு அவளது பெட்ரூம் நோக்கி  போனாள். 

நான் நவனை கேள்விக் குறியுடன்பார்த்தேன்.  அவனும் புரியாமல் குழப்பமாக உதட்டைப் பிதுக்கினான்.. !!

இடது கையின் இரண்டு விரல்களால்.. ஒரு முனையில் பிடித்தபடி ஒரு ரெட் கலர் பிராவை தூக்கிக் கொண்டு.. பெட்ரூமிலிருந்து  வந்தாள் ஸ்ரீமதி.. !!

அதன் ஒரு பக்கம் ஸ்ட்ராப் அறுந்து போயிருந்தது.. !! அதை நேராக என் முகத்தின் முன்னால் கொண்டு வந்து காட்டினாள்.. !! நான் திகைத்தேன்.. !!

பிராவை எதுக்கு இவள்.. இப்படி என் முகத்தின் முன்னால் பிடித்து ஆட்டிக் காட்ட வேண்டும்.. ??

'' ஸிஸ்.. என்ன இது.. இட்லி துணியை காட்டறீங்க.. ??'' என நான் சிரித்தேன்.

அவ்வளவுதான்.. !!

 அடுத்த நொடி அதை என் முகத்தின் மேல் கோபமாக விட்டெறிந்தாள் ஸ்ரீமதி .... !!!!! 

விரும்பிப் படித்தவை.. !!