அகல்யை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகல்யை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 மார்ச், 2021

உறையும் விழிகளில்.. !!

 வணக்கம் நண்பர்களே.. !!

இதுவரை எழுதிய கதைகளில் இருந்து இது ஒரு மாறுபட்ட கதை. இதிகாசக் கதையை மையப் படுத்திய புனை கதை. இது யாரையும், எவரையும், எதன் பொருட்டும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படுவதில்லை.. !!


வால்மீகியாலும், கம்பராலும் ராமாயணத்தில் வேறு வேறு கோணத்தில் காவிய நடையில் சொல்லப்பட்ட இக்கதை பல்வேறு விதமான கருத்தியல்களைக் கொண்டிருப்பதை இணையத்தில் தேடினால் நீங்களே கண்டடையலாம்.  பொதுவாக இதிகாசக் கதைகளே அவ்வாறு வடிவங்கள் மாறியவைதான். உண்மைக்கதை ஒன்றிருக்க அதன் வடிவில் பல கதைகள் புனைவாகப் பின்னப் பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே இதுவும் எழுதப்பட்டிருக்கிறது.. !!


இதைப் போன்றே இன்னும் வேறு சில கதைகளும் வெளிவரக் கூடும். அவைகளைப் பின்னால் பார்க்கலாம்.. !!


- நிருதி.. !!









    

  கானகக் கோழியின் அகவல் குரல் கேட்டுக் கண் விழித்தார் கௌதவ முனிவர். அதுவே புலரியின் முதல் பறவைக் குரலாய் அவரின் செவிகளைத் தொட்டது. அவர் எப்பொழுதுமே ஆழ்ந்து உறங்குபவரல்ல என்பதால் உடனேயே விழித்துக் கொண்டார். கண் விழித்தவர் தன் உடல் ஒட்டியும் ஒட்டாமலும் படுத்து ஆழ் துயிலில் இருந்த, நெஞ்சுறையும் கற்புள்ள தன் அழகிய மனைவியைப் பார்த்தார். அகல் சுடரின் செவ்வொளியில் அவள் சற்று அசந்து தூங்குவதை அவளின் ஆடை தளர்ந்த மென்முலை உணர்த்தியது. கன்னிப் பெண்ணின் சிறுமுலை போன்ற மென் முலைகள் அவளுக்கு. மெல்லிய சிற்றிடையும், கன்னியெனத் தோன்றும் பெண்ணங்கமும் அமையப் பெற்றவள். 

அகல்யை அழகே உருவானவள். நிகரில்லாத அழகுடைய அழகியவள். தேவ, அசுர, மானுட வயிற்றில் பிறக்காதவள். தேவ, அசுரர்களின் வார்ப்பில் பாற்கடலில் உதித்த அழகியவள்.

 இந்திரனைத் தோற்கடித்து அவர் அடைந்த வெற்றிக் கனி. அவள் தன் அன்பு நிறைந்த கற்புக்கரசியுமானவள். அவளை அடைந்ததை எண்ணி அவரின் உள்ளம்  காதலில் கரைந்தது.

மீண்டும் சேவலின் அகவல் கேட்டு எழுந்தவரின் அசைவொலியில் கண் விழித்தாள் அகல்யை. மருண்ட விழிகளுடன் அவரை நோக்கினாள்.

"முதல் பறவை கூவியது" என்றார்.

அதன் தொடர் குரலை அவளும் கேட்டாள். துயில் கலையாத உடலைப் புரட்டி அவள் எழுந்து விட்டாள். கலைந்திருந்த உடை திருத்தி அவர் நீராடச் செல்வதற்காக மரவுரி ஆடைகளை எடுத்துக் கொடுத்தாள்.

தன் கமண்டலத்துடன் நதிக்கு நீராடக் கிளம்பிச் சென்றார் கௌதமர். அவர் நதிக்கரை சென்று நீராடி ஜெபதபங்களை முடித்த பின்னரே இல்லம் திரும்புவார். இது வழக்கமாக எழும் நேரமில்லை என்பதை அவள் உள்ளம் உணரவில்லை என்றாலும் உடல் உணர்ந்திருந்தது. நெஞ்சில் எழுந்த வெம்மூச்சுடன் அகல்யை மீண்டும் கதவடைத்தாள். அவள் உடல் மீண்டும் மஞ்சத்தையே நாடியது.. !!

கௌதமர் அந்த தவக் குடிலை விட்டு வெளியேறுவதற்காகவே ஆவலுடன் காத்திருந்த இந்திரன் அவர் விலகிச் சென்று இருளில் மறைந்ததும் தன் மாய சக்தியால் அவரின் உருவம் பூண்டு அவராகவே மாறி அகல்யை உறங்கும் குடிலுக்குச் சென்றான்.

 மஞ்சத்தறை வாயிலை மிக மெல்லத் திறந்து பூனை போல உள்ளே நுழைந்து ஓசையின்றி கதவடைத்தான். இவை எதையும் அறியாத அகல்யை மஞ்சத்தில் ஆடை நழுவிய அங்கங்களின் செழிப்புடன், தளர்ந்து எளிதான உணர்வுகளால் இயல்பாக அமைந்திருக்கும் உடல் தோற்றத்துடன் இமை மூடியிருந்தாள். அவள் விழிகள் உறக்கத்தை நாடியிருந்தன. 

 அவளின் பேரெழில் அழகை எட்ட நின்று பார்த்த இந்திரன் காமத்தின் உச்சத் தவிப்பை எட்டினான்.  இந்திரலோகத்தில் அவன் பார்க்காத பெண்கள் இல்லை. அவன் அனுபவித்திராத அழகிகள் இல்லை. ஊர்வசி, ரம்பை, மேனகை என ஆயிரம் அப்சரஸ்கள் உண்டு. அவன் ஒரு விரல் சொடுக்கினால் போதும் அத்தனை அழகிகளும் ஆடையை அவிழ்த்துப் போட்டு விட்டு அவன் முன் அங்க லாவண்யங்கள் அதிர்ந்து குலுங்க ஆடுவார்கள். அவன் விருப்பம்போல கட்டற்ற காமத்துடன் கூடிப் புணர்வார்கள். ஆனால் அத்தனை அழகிகளையும் விஞ்சும் அழகைக் கொண்டவள் இந்த அகல்யை என்றே அவன் எண்ணியிருந்தான்.

அவளை அடைய அவன் எடுத்த முயற்சிகள் கொடுத்த தோல்வி அவனது ஆண்மையின் ஆணவத்துக்கே கிடைத்த தோல்வி. அழகில் சிறந்தவன் இந்திரன் என்று  தேவலோகத்தில் பெயர் பெற்ற அவன் அந்த பெயரின் தகுதியை இவளால் இழந்து விட்டதாகவே எண்ணினான். அந்த தோல்வி ஒவ்வொரு நாளும் அவனை அகல்யையே நினைக்க வைத்தது. இந்திரலோகத்தையே ஆளும் இந்தராணியைக் கூடிப் புணரும்போது கூட அவன் எண்ணங்கள் அகல்யையே நாடின. அதன் விளைவால் எப்படியேணும் ஒருமுறை அவளை அனுபவித்து விட வேண்டும் என்கிற தவிப்பில் அவன் ஆடிய நாடகமே கானகக் கோழியின் அகவல். அதை உண்மையென நம்பி கௌதமரும் வெளியே சென்று விட்டார்.. !!

இந்திரன் தன் உடலை வாட்டி வதைக்கும் கற்றற்ற காமத்துடன் ரிஷி பத்தினியான அகல்யையை நெருங்கினான். ஆடை தளர்ந்த அவளின் முலைகளும் மெலிந்த இடையும் பளபளக்கும் தொடைகளும் அவள் கொண்டிருக்கும் கற்பின் நெறியை உடைக்கத் தூண்டின. 

அவள் அருகில் சென்று அமர்ந்தபோது அகல்யை விழித்துப் பார்த்தாள். தன் கணவரின் தோற்றம் கொண்ட இந்திரனை அவளால் தன்னை அனுபவிக்க வந்த காமுகனாய் அடையாளம் காண முடியவில்லை. 

"வந்து விட்டீர்களா?"

"பொழுது இன்னும் விடியவில்லை. திரும்பி விட்டேன்" எனச் சொல்லிவிட்டு அவரின் தோற்றத்திலேயே அவளருகே படுத்து அவளின் மெலிந்த இடையைத் தழுவியணைத்தான். அவள் கழுத்தில் முத்தமிட்டான். அவன் கால்கள் அவள் கால்களை நாடிப் பிணைந்தன.

ரிஷியான கௌதமர் காமுகர் அல்ல. காமம் என்பது அவரது இயற்கையான உடல் உபாதை உணர்ச்சிகளில் ஒன்றைப் போன்றது. காமத்தைக் கடக்கவும், தன் வழித்தோன்றல்களை உருவாக்கவும் ஒரு பெண் வேண்டும் என்கிற அளவிலேயே அவரின் காமம் இருக்கும். போற்றதலுக்குரிய இவ்வளவு அழகான மனைவி வாய்த்தும் அவர் ஒருமுறை கூட காமுகனாக மாறி கற்றற்ற காமத்துடன் அவளைக் கூடிப் புணர்ந்ததில்லை. அவள் மீதிருந்த காதலால், கனிந்த அன்பால் இயல்பாக எழும் காமத்துடனே கூடியிருக்கிறார். அவரின் ஒவ்வொரு கூடலும் மென்மையானவையே. அவரின் தொடுகையும் அணைப்பும் முத்தமும்கூட அவளின் உடலை துளியும் நோகச் செய்யாதவையே. 

எப்போதும் வெளிப்படும் அவர் அன்பின் தழுவலையும் கனிவான முத்தங்களையும் சிறுமிபோலச் சிணுங்கி ஏற்கும் அவளின் உடல் இன்றும் தன்னைத் தொடுவது இந்திரன் என்று தெரியாமலே அவனை ஏற்றது. 

அகல்யையின் செவ்விதழ்களை மிகுந்த காமத் துடிப்புடன் கவ்வினான் இந்திரன். அதிகாலைத் துயில் உணர்வில் எழும் அவள் இதழின் அமுதத் துளிகளை அள்ளி அள்ளிப் பருகினான். அவளின் மென் முலைகள் அவன் கைகளில் கசங்கி நோவடைந்தன.

 அவள் விதிர்த்தாள். அவனது முத்தத்திலும் முலை பிசைதலிலும் அகல்யைக்கு சற்று ஐயம் வந்தது. 

தன் ரிஷி கணவர் ஒரு நாளும், ஒரு பொழுதும் இது போன்று வன் காமம் கொண்டவர் அல்ல. மென்மையாகத்தான் கையாளுவார். தபஸ்வி என்பதால் அவரால் உளம் அடக்கி நீண்ட நேரம் புணர முடியும். உளம் இணையாதபோது உடல் தன் முழு ஆற்றலையும் நீண்ட நேரத்துக்கு இயக்கத்தில் வைத்திருக்க முடியும். பெண்மையின் உச்சம் தொட்டடங்கிச் சிலிர்த்து அவள் துவண்டு போகும்வரை அவளை அவர் புணர்வார். ஆனால் அத்தகைய நீண்ட நெடிய புணர்ச்சியின்போதும் ஒருமுறை கூட அவர் வன்மம் காட்ட மாட்டார். பொருளற்ற வார்த்தைகளில் குளறி பிதற்ற மாட்டார். 

மொட்டு விரிந்த புதுமலரைத் தீண்டுவதைப் போலத்தான் அவள் பெண்மையின் மென் அங்கங்களையும் அவர் தீண்டுவார். ஒரு அன்னை தன் குழந்தைக்கு அளிப்பது போன்ற முத்தமிடல் இருக்கும். கவ்வல் கடித்தலில் வலியிருக்காது. ஆனால் இது...

இன்று என்னாயிற்று இவருக்கு? வெளியே சென்று வந்ததினால் நிலையழிந்து அதிக மோகம் கொண்டு விட்டாரோ? இல்லை என் அழகை இன்றுதான் முழுமையாக உணர்ந்தாரோ?

அரைத் தூக்கத்தின் மயக்கத்தில் கண்கள் சொக்கியிருக்கும் அகல்யை தன் கணவர் இன்று தன் மீது அதீத காதல் கொண்டு சற்று அதிகப்படியான மோகம் கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள். முத்தங்களிலும் உடல் தழுவி அணைத்தலிலும் அனல் பரப்பதை உணர்ந்தாள். அது புதிதென்றாலும் காமமும் உறக்கத்தின் மயக்கமும் அவளை முற்றாகக் கிறங்க வைத்து விட்டது. 

அவளின் முலைக் கச்சை முடிச்சவிழ்ந்து உடலை விட்டு நழுவியது. அதிகம் வன்காமத்தால் கையாளப்படாத சிறு முலைகள் இறுகி கல்லின் திண்மையுடனிருந்தன. இந்திரன் அவள் அழகிலும் பெண்மையின் இனிய மணத்திலும் மயங்கி தான் ரிஷி வேடத்தில் இருப்பதை மறந்தான். தன் ஆடல் அழகிகளில் ஒருத்தியை தழுவிச் சுவைப்பது போலவே அவளையும் சுவைத்தான்.

தன் கணவரின் அணுகுமுறையில் புதிய புதிய இன்பங்களை அனுபவித்தாள் அகல்யை. காமத்தின் புதுமையின் வெம்பலில் வியர்த்த உடலின் உள் அங்கங்களை மறைத்த ஆடைகளை முற்றிலுமாக இழந்ததினால் மெல்லிய சுடரொளி பட்டுக் கூசிய கண்ணிமைகளை மூடிக் கொண்டு இந்திரனை கணவனெனவே நினைத்து ஆரத் தழுவி முத்தமிட்டு முனகி முயங்கினாள். 

இந்திரன் தன் இச்சைகள் அனைத்தையும் திரட்டி அவளை ருசித்தான். அவளின் ஒவ்வொரு அங்கமும் அவனுக்கு இனித்தது. கட்டழகியான ரிஷி பத்தினிப் பெண்ணின் மணம் அவனின் கட்டற்ற காமத்துக்கு நெய் வார்த்தது. தேவலோக அழகிகளில் அவன் அறிந்திராத பெண் மணமும் பெண்மையின் சுவையும் அகல்யையில் இருப்பதை உணர்ந்தான்.

அகல்யையைப் புணர்ந்தான் இந்திரன். அவள் விழி மயங்கி சொக்கிக் கிடந்தாள். வன்புணர்வை முதன் முறையாக அனுபவிக்கும் அவள் உடல் அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது. அதன் அதிர்வும் சிலிர்ப்பும் அவளுக்கு எல்லையற்ற இன்பத்தையை அளித்துக் கொண்டிருந்தது.

 காமவெம்மையில் கசங்கிய அவளின் வியர்வை உடலைத் தன் முழு ஆற்றலுடனும் புணர்ந்தான் இந்திரன். அவன் உடலாலும் உள்ளத்தாலும் ததும்பி நிறைந்து வழிந்து ஓய்ந்து அகலிகையை அணைத்தபடியே சற்று கண்ணயர்ந்தான்.. !!


****


 நதிக்கரை சென்ற கவுதமர் நதி அமைதியாக ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அது விடியலுக்கான பொழுதில்லை என்பதால் வழக்கம்போல நதி அவரை ஆடிப்பாடி வரவேற்கவில்லை. இதில் ஏதோ தவறு நடந்து விட்டிருப்பதை அதன் பின்னரே உணர்ந்தார். வானை அண்ணாந்து பார்த்து விண்மீன்களை கவனித்த பின் தன் குடிலுக்குத் திரும்பினார்.

எல்லையற்ற ஆற்றலுடன் என்றுமில்லாத அளவுக்கு கூடிப் புணர்ந்த முயக்கத்தில் ஆடைகளைக்கூட முழுமையாக அணியாமல் மீண்டும் கண் மயங்கிவிட்ட அகல்யை கதவைத் தட்டும் ஒலி கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள். அதைக் கேட்ட இந்திரன் பதைப்புடன் அவளை விட்டு விலகினான். அவள் கண் முன்பாகவே அவன் சட்டென ஒரு பூனையாக மாறி குடிலின் கூரை வழியாக வெளியேறி ஓடி மறைந்தான்.

தன்னை மீறி ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அதன் பின்னரே உணர்ந்தாள் அகல்யை. சட்டென மார்பைப் பற்றியபடி பதறி எழுந்து தன் உடைகளைத் திருத்தி அணிந்து பதட்டத்துடன் ஓடி கதவைத் திறந்தாள். உண்மையான அவளின் ரிஷி கணவர் நின்றிருந்தார்.

"ஐயனே.. தாங்கள்.. அப்படியானால் என்னுடன் கூடியது..?"

ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த கவுதமர் "இந்திரன்" என்றார்.

 அதிர்ந்த நெஞ்சைக் கையில் பிடித்து அழுத்தியபடி தலைவிரி கோலமாக அவர் காலில் விழுந்து அழுதாள் அகல்யை. "இந்த பேதையை மன்னித்து விடுங்கள் ஐயனே.. அவன் தங்கள் உருக்கொண்டே வந்தான். வந்தது தாங்களே என்றெண்ணித்தான்.." தான் இழைத்தது தவறே என்றுணர்ந்து தன்னை மன்னித்து விடுமாறு கண்ணீர் விட்டாள்.. !!

  பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார் கௌதமர்.

"இந்திரா.. வந்தது நீதான் என்று அறிவேன். ஓடாதே, என் முன் வந்து விடு" 

அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுய உருவில் தோன்றி தலை குனிந்து அவர் முன் வந்து  நின்றான். மாட்டிக் கொண்டாலும் அவர் மனைவியான பேரழகியை அடைந்துவிட்ட ஆணவத்தின் நிறைவில் அவன் மனம் மகிழ்ந்திருந்தது. அகல்யையின் மணம் அவன் நாசியைவிட்டு துளியும் நீங்காமலிருந்தது. 

 அதை உணர்ந்து கோபம் அடங்காத கௌதம முனிவர் "இந்திரனே, பெண் பித்து பிடித்து அலையும் உன்னை நான் சபிக்கிறேன். உன் உடம்பெல்லாம் பெண் குறியாகத் தோன்றட்டும், என்றும் நீ வெளியில் தலைகாட்ட முடியாமதவனாய் அவதிப்படு’" என்றும் சபித்தார்.

அதன் பின்னும் கோபம் தணியாதவராக கை கூப்பி கண்ணீருடன் நின்றிருந்த அகல்யையை நோக்கி "கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத உன் உடம்பு கல்லாகுமாறு சபிக்கிறேன்"  என்றார். 

அகல்யை கல்லாக மாறியபோது உறைந்த அவளின் உதடுகளிலும், உற்று நோக்கிய விழிகளிலும் அவரின் ஞானதிருஷ்டி மீதான கேலிப் பர்வை உறைந்திருந்தது.. !!


- சுபம்.. !!

விரும்பிப் படித்தவை.. !!