வியாழன், 11 ஜனவரி, 2024

பட்டு ரோஜா- 4

 மாலை நேரத் தென்றல் காற்று.. மிதமாக வீசிக் கொண்டிருந்தது. 


அறையை விட்டு வெளியே வந்து.. வேடிக்கை பார்த்தவாறு மொட்டை மாடியில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருந்தான் நந்தா..!


கையில் ஒரு புத்தகத்துடன் மொட்டை மாடிக்கு வந்தாள் கமலி. 


அவன் பார்த்ததும்.. அவனைப் பார்த்து அவளும் உதடுகள் விரியாமல் ஒரு புன்னகை சிந்தினாள்.


''ஹாய்..''  அவன்.. அவளைப் போலல்லாமல்.. வாய் நிறையப் புன்னகை காட்டினான்.


''ஹாய்..'' என்றாள் ''என்ன பண்றீங்க..?''


''காத்து வாங்கறேன்..! நீ..?''


''படிக்கனும்..!''


தலைவாரி.. மேக்கப் செய்து பளிச்சென்றிருந்தாள். கண்ணாடிக்குள்ளிருந்த அவளது முட்டைக் கண்கள் பளபபத்தன. இன்று நைட்டி அணிந்திருந்தாள். அதற்கு மேலே ஷால் போட்டிருந்தாள்.


''காலைல எங்கயோ போனீங்க..?'' அவனைப் பார்த்துக் கேட்டாள்.


''பிரெண்ட பாக்க போனேன்..''


''யாரு அந்த பிரெண்டு..?''


''கம்ப்யூட்டர் செண்டர்ல.. என்கூட வொர்க் பண்றாரு..''


அவளும் ஓரமாக வந்து நின்றாள். மேலிருந்து.. கீழே வீதியை வேடிக்கை பார்த்தாள். டர்ரென சத்தமெழுப்பிப் போன பைக்கை, அது கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்தாள்.


அவனும் பார்த்த பின் அவளைப் பார்த்தான்.

''இன்னிக்கு.. உங்க வீட்ல.. என்ன சன்டே ஸ்பெஷல்..?'' என அவளைக் கேட்டான் நந்தா.

''மட்டனா.. சிக்கனா..?''


''சே.. நாங்க.. சைவம்..!!'' அவன் பக்கம் திரும்பிச் சொன்னாள்.


''சை..வ்வமா..? ஓ.. ! அய்யரா.. நீங்க..? ''


''ம்கூம்..'' மறுத்துத் தலையசைத்தாள். ஆனாலும் ''சைவம்தான்.! சைவமா இருக்க.. அய்யரா இருக்கனும்னு அவசியம் இல்ல..!'' என்றாள்.


''ம்.. குட்..!!'' என்றான். 


''நீங்க..?''


''நான்.. அசைவம்தான்.! ஒருவேளை.. இனிமேல் மாறலாம்..!!'' என்று அவளை லுக்கு விட்டுக்கொண்டு புன்னகைத்தான்.


''அது.. ஏன்..?'' அவள் கண்களும்.. அவனை லுக்கு விட்டது.


''ஏனோ..'' நாசூக்காய் கண் சிமிட்டினான், ''நமக்கு புடிச்சவங்களுக்காக.. மாறினா.. தப்பில்லையே..?''


''புடிச்சவங்களா..? அப்படி யாரு..?'' புரிந்து கொண்ட.. கேள்வியில் வெட்கம் தெரிந்தது.


''என்.. பிரெண்டு..!''


''யாரு.. அந்த பிரெண்டு..?'' 


''இருக்காங்க.. அழகான ஒரு பிரெண்டு..! இப்பதான் சொன்னாங்க. அவங்க சைவம்னு..!!''


வெட்கப் புன்னகை சிந்தினாள். எங்கோ வேடிக்கை பார்ப்பது போல.. அவனுக்கு பக்கத்தில் நகர்ந்து வந்து நின்றாள். 


அவளிடமிருந்து.. சுவாசத்துக்கு இனிமையான ஒரு சுகந்த மணம் வீசியது.


'' உங்கம்மா என்ன பண்றாங்க..?'' அவள் பக்கமாக அவனும் கொஞ்சம் நகர்ந்தான்.


''வெளில போயிருக்காங்க..! அப்பாவும்.. அம்மாவும்..!''


''ஓ..!! பிரதர்..?''


''வெளையாட போய்ட்டான்.!''


''அப்ப தனியாவா இருக்க..?''


''ம்..ம்ம்..! படிச்சிட்டிருந்தேன்.! ஒன் ஹவர் முன்னாடிவரை என் பிரெண்டு என்கூட இருந்தா..! ரெண்டு பேரும் பேசிட்டே.. படிச்சிட்டிருந்தோம்.!''


''க்ரூப் ஸ்டடியா..?''


''ம்..ம்ம்..! படிக்க.. இன்னும் நெறைய்ய.. இருக்கு..!''


''அப்ப.. வீட்லயே உக்காந்து படிக்கலாமே..?''


''காலைலேர்ந்து.. படிச்சிட்டேதான் இருக்கேன். கண்டினியூவா படிச்சிட்டே இருந்தா.. தலைவலி வருது..! அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போலாம்னு.. மேல வந்தேன்.!'' அவன் கண்களை ஒரு வசீகரத்துடன் பார்த்து, புன்னகையுடன் சொன்னாள்.


அவனுக்குள்ளிருந்த தயக்கம் சற்று விலகியது. மெதுவாக அவள் பக்கத்தில் நெருங்கி அவளது கையைத் தொட்டான்.


''டீ குடிக்கறியா..?''


''ம்கூம்..''


''வாயேன்.. ஒரு டீ.. குடிக்கலாம்..''  அவள் கையைப் பிடிக்க... சட்டென அவன் கையை உதறினாள் கமலி.


'' ஹலோ.. நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல..'' 


உடனே ''ஸாரி.. ஸாரி..!!'' என்றான் நந்தா, ''நான் தப்பா.. கூப்பிடல.. ஒரு பிரெண்டா.. ஸாரி..'' என அவன் குழைய.... அவளுக்கு விக்கல் எடுத்தது.!


அந்த விக்கல் தொடர...

''தண்ணி கொண்டு வந்து தரலாமில்ல..?'' எனக் கேட்டான்.


''ம்..ம்ம். .!'' லேசான முறைப்புடன் தலையாட்டினாள்.


நந்தா உள்ளே போனான்.

'குட்டி செம சோக்குதான். ஆனால் என்ன சுலபமாக மடியாது போலருக்கு.' கண்ணாடியில் பார்த்துக் கொண்டான்.

'ம்ம் பார்ப்போம்.. கல்லை வீசுவோம். விழுந்தால் கனி.. விழாவிட்டால்.. காய்..'


அவன் டம்ளரில் தண்ணீர் எடுத்துத் திரும்பியபோது அறை வாயிலில் வந்து நின்றிருந்தாள் கமலி.


 அவன் புன்னகையுடன் தண்ணீரைக் கொடுத்தான். 


''தேங்க்ஸ்..'' சொல்லி வாங்கிக் குடித்தாள்.


அவள் அண்ணாந்து தண்ணீர் குடிக்க.. அவளின் கழுத்தையும், கழுத்துக்கு கீழே திமிறிக் கொண்டிருக்கும் சதைக் கோலத் திரட்சசியையும் ரசித்துப் பார்த்தான்.


பருவத்திமிரின் அழகிய.. எழில் வடிவம் அது.! நிமிர்வு மட்டுமல்ல, சற்றே சரிந்தும் போயிருக்க வேண்டுமெனத் தோன்றியது. அவ்வளவு கனம் ஏறியிருக்கும் சதை பிடிப்பான உடல்.!


தண்ணீர் குடித்து.. டம்ளரை அவனிடம் நீட்டினாள். வாயோரத்தை இடக் கை விரலால் துடைத்துக் கொண்டாள்.


''டிவி இருக்கில்ல..?'' எனக் கண்களைச் சுழல விட்டுக் கேட்டாள்.


அறையின் தோற்றம் அவளுக்கு முன்பே தெரியும் என்பதைப் போல ஓர் அலட்சியபாவனை.


''ம்ம்..! இருக்கு.!''


டிவியைப் பார்த்தாள்.

''ஏன் ஆப் பண்ணி வெச்சிருக்கிங்க.?''


''நான் வெளில இருந்தேன்..''


''ஏதாவது சாங் போட்டு விடுங்க..''


''படிக்கலயா..?''


''சாங் கேட்டுட்டே.. படிப்பேன்..''


''அப்படி படிச்சா எப்படி.. படிக்கறது மைண்ட்ல ஏறும்..?''


''எனக்கு அதெல்லாம் நோ பிராப்ளம்.. எங்க வீட்ல நான் சாங் கேட்டுட்டேதான்.. படிப்பேன்..! போட்டு விடுங்க..'' என்றாள்.


அவளுக்காக டிவியை ஆன் செய்தான் நந்தா. மியூசிக் சேனல் போட்டு விட்டான்.


''தேங்க்ஸ்.. ஆப் பண்ணிராதிங்க. நான் கேட்டுட்டே.. படிப்பேன்..!!'' அவன் கண் பார்த்துச் சிரித்துவிட்டு மொட்டை மாடிச் சுவர் ஓரமாகப் போய் நின்று.. புத்தகத்தை விரித்தாள்.


அவனும் வெளியே போய்,  அவளுக்கு எதிர்பக்கச் சுவற்றில் கைகளைப் பதித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதாய் நடித்தான்.. !!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!