விஜய் டுட்டோரியலில் சேர்ந்து தீவிரமாகப் படிக்கத் தொடங்கினான். அவனுக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது.
வருண் தன் இருசக்கர வாகனத்தின் சாவியை அவனுக்குக் கொடுத்தான். அதை பயன்படுத்தி வகுப்புகளில் கலந்து கொண்டான் விஜய்.
அடுத்ததாக அவனுக்கு நான்கு சக்கர வாகனமும் ஓட்ட கற்றுக் கொடுத்தான் வருண்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, சூரியன் தனது மேற்குப் பயணத்தைத் தொடங்கியிருந்தான்.
கார் ஓட்டி முடிந்து வருணும் விஜய்யும் வீட்டிற்கு சென்றனர். விஜய் நேராக கழிவறைக்கு சென்றான்.
ஆனந்தி இரவு உணவிற்கு கோதுமை மாவை தயார் செய்து கொண்டிருந்தாள்.
தலைவாரி பொட்டு வைத்து பூ வைத்திருந்தாள். நைட்டியில் இருந்தாள்.
அவளைத் தேடி சமையலறைக்குள் சென்றான் வருண்.
அவளை பின்னால் இருந்து அணைத்தான். அவள் கழுத்தில் அழுத்தமான முத்தம் கொடுத்தான்.
அவள் தன் முழங்கையால் அவன் வயிற்றில் குத்தி அவனை தவிர்க்க போராடினாள்.
"நான் உன் மேல கோபமா இருக்கேன்" என்றாள்.
"கோபமா? அச்சோ.. ஏன் பேபி?" அவளை வாசம் பிடித்தபடி கொஞ்சினான்.
"ரொம்ப நாளாவே எனக்கு கார் ஓட்ட கத்துக் குடுனு கேட்டுட்டு இருக்கேன். ஆனா நீ என்னை கண்டுக்கல.. இப்ப பாரு அவனுக்கு கத்து தரே.." தன் பொறாமையை அவள் மாவைப் பிசைவதில் காட்டினாள்.
கோபமாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் தன் அழகு மனைவியை புன்னகையுடன் தன் பக்கம் திருப்பினான் அருண்.
ஆனால் அவள் அவனைப் பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. வாய்விட்டே சிரித்தான்.
"சிரிக்காத போ.. உன்கூட பேச எனக்கு புடிக்கல" கடுகடுப்பாகச் சொன்னாள்.
"ஐயோ.. என் அழகு பொண்டாட்டியே.. என்னைப் பாரு"
"மாட்டேன். எனக்கும் ட்ரைவிங் கத்து குடு"
"இப்ப வேண்டாம். விஜய் நல்லா ஓட்றான். நீ கவலையே பட வேண்டாம். அவன் உனக்கு நல்ல ஒரு ட்ரைவரா இருப்பான்"
"ஹூம்.." அவனை முறைத்தபடி நகர ஆரம்பித்தாள்.
"இப்படி கோபமா இருக்கப்ப நீ இன்னும் ரொம்ப அழகா இருக்க பேபி" என்று அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் அருண்.
“விடு என்னை.." சிணுங்கினாள்.
"கார் ஓட்றது கொஞ்சம் சிரமம்தான் பேபி. உனக்கு ஏதாவது ஒரு சின்ன விபத்து நடந்துட்டா கூட அதை என்னால தாங்க முடியாது பேபி. அதனாலதான் உனக்கு ட்ரைவிங் சொல்லி தரலை. சரி.. இப்ப என்ன.. நீயும் கார் ஓட்டணும் அவ்வளவுதானே.? அடுத்த தடவை வா.. ட்ரை பண்ணு" அவளை இறுகத் தழுவி காதோரம் முத்தமிட்டுக் கிசுகிசுத்தான்.
"ப்ராமிஷ்?" தன் கணவன் கண்களைப் பார்த்தபடி ஆசையாகக் கேட்டாள்.
"ப்ராமிஸ்.." அவள் மூக்கில் தன் மூக்கைத் தேய்த்து செல்லம் கொஞ்சி உதட்டில் முத்தமிட்டான்.
ஆனந்தி மகிழ்ந்து போனாள். சட்டென அவள் கோபம் காணாமல் போய் கணவன் மீது காதல் பொங்கியது. மாவுக் கையை அவன் கழுத்தில் போட்டுச் சுற்றி வளைத்தாள்.
அவளைத் தழுவி அவளது சிவந்த இதழைக் கவ்வினான். அவள் கண்களை மூடினாள்.
அந்த நேரம்..
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த விஜய், அவர்கள் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டு, சட்டெனத் திரும்பி தன் அறைக்குப் போய் விட்டான்.
"ச்சீ.. போச்சு.. அவன் பாத்துட்டான்.. விடு.. வெக்கமால்ல?" சிணுங்கி அவனை உதறினாள்.
"இதுல என்ன வெக்கம். நான் என் பொண்டாட்டியைத்தானே கிஸ் பண்ணேன்?" என்று சிரித்தான் வருண்.
"அய.. அவன் சின்னப் பையன்.. விடு" தள்ளிவிட்டு விலகினாள் ஆனந்தி..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக