சனி, 28 அக்டோபர், 2023

உன்னைச் சுடுமோ -5

 தன் வீட்டுக்கு ஓடிவந்துவிட்ட கிருத்திகா படபடத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன செய்வது என்று எதுவும் தெரியவில்லை. 


ஆசையா பயமா என்று தெரியவில்லை. தவிப்பா ஏக்கமா என்றும் புரியவில்லை. 


அவனைப் பிடிக்காது என்றில்லை. அதே சமயம் பிடிக்கும் என்று சொல்லுமளவுக்கும் பழகியிருக்கவில்லை. பொதுவான பேச்சு வார்த்தைகளைத் தாண்டி பேசிப் பழகியதில்லை. 


இன்றுதான் அவனோடு நன்றாக பேசியிருக்கிறாள். நெருக்கமாக பழகியிருக்கிறாள். 


இன்னும் சொல்லப் போனால் அவனது ஆண் உடம்பு வெளிப்படுத்தும் வாசனையைக் கூட தான் நுகர்ந்ததை அவள் இப்போதுதான் உணர்ந்தாள்.


இப்படிபட்ட ஒரு நெருக்கம் அவளை என்னவோ செய்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மைதான். 


அவன் தன் உதடுகளைத் தொட்டதோ கன்னம் கிள்ளி வாயில் வைத்து முத்தம் கொடுத்ததோ அவள் அவன் கண்ணுக்கு முத்தம் கொடுத்ததோ அவளுக்கு தவறென்றே தோன்றவில்லை. 


ஆனால் அவன் சட்டென அவளின் உதட்டில் முத்தமிட்டுவிட்டது அவளை அதிரச் செய்துவிட்டது. 


அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை. 


காலையில் பாத்ரூமில் தன் உடலை சுத்தப் படுத்திக்கொண்டபோது அவனை நினைத்து சுய இன்பம் கண்டதுதான் அவனோடு தன்னை இவ்வளவு நெருக்கமாக பழக வைத்து விட்டதோ என்று தோன்றியது.


ஆனால்.. இப்போதும் அவள் உடம்பு வெடவெடத்து இதயம் படபடத்துக் கொண்டிருப்பதை அவளால் நன்றாக உணர முடிந்தது. 


அவன் தன் உதட்டில் கொடுத்த முத்தத்தை சாதாரண முத்தமாக அவளால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை.. !!



***



அதே நேரம் நிருதியும் பெரும் குழப்பத்துக்கும் கவலைக்கும் ஆளாகியிருந்தான்.


'இப்போது என்ன செய்வது? அவள் ஏதாவது வம்பை இழுத்து விட்டு விடுவாளோ? இந்த பெண்களை மட்டும் நம்பவே முடியாது. ஆண்களின் ஆசையை தூண்டி விட்டு அவனை வில்லங்கத்தில் சிக்க வைப்பதில் வல்லவர்கள்.. !! உடனே போய் மன்னிப்பு கேட்டு விடுவதே நல்லது.. !!' ஒரு முடிவுக்கு வந்து கண்ணாடி முன் நின்று தலைவாரினான் நிருதி. 


ஐந்து நிமிடத்தில் ரெடியாகி வெளியே போனான். 


கதவுக்கு வெளியே போக.. தெரிந்தவர் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்தார். தவிர்க்க முடியாமல் அவருடன் பேசிக் கொண்டிருக்க.. கிருத்திகா பேகுடன் தன் வீட்டில் இருந்து வெளியே வந்தாள். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டைப் பூட்டினாள்.


அவனை அவள் அப்படி பார்த்த நொடி அவனுக்குள் பக்கென ஓர் அதிர்வு ஓடியது. தன் செயலின் விளவு தவறாகப் போயிருப்பதை உணர்ந்தான்.


  அவள் தலைவாரி ஜடை பின்னி மேக்கப் செய்திருந்தாள். வீட்டைப் பூட்டி துப்பட்டாவை சரி செய்து கொண்டு பேகை எடுத்து தோளில் போட்டபடி அவனிடம் வந்தாள்.


“போலாமா?” நிருதி கேட்டான்.


அவன் முகத்தை நேராகப் பார்க்காமல் தலையை ஆட்டினாள். 


அவள் முகம் இன்னும் இறுகித்தான் இருந்தது. அதில் ஒரு மெலிதான சோகம் இருப்பதைப் போலிருந்தது. அவள் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறாள்.


பேசிக் கொண்டிருந்தவரிடம் சொல்லி விட்டு அவனும் வீட்டைப் பூட்டிக் கிளம்பினான்.


 மனதை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு பைக்கை எடுத்தான்.


அமைதியாக வந்து அவன் பின்னால் ஒரு பக்கம் பார்த்து உட்கார்ந்தாள். அவளை ரியர்வு மிரரில் பார்த்து விட்டு மெதுவாக பைக்கை ஓட்டினான்.


“ஏய்.. வெரி ஸாரி கிருத்து” தலையை திருப்பி சைடில் பார்த்துச் சொன்னான்.


அவள் பேசவே இல்லை. உம்மென்றிருந்தாள்.


சிறிது நேரம் கழித்து மீண்டும் சொன்னான்.

“நீ கோபமா இருக்கேனு தெரியுது. என்னை மன்னிச்சிரு”


“…… ”


“ஸாரிப்பா”


“பேசாதிங்க..” கோபமாய் சொன்னாள்.


” வெரி ஸாரி”


“ச்ச.. ஏன் அப்படி பண்ணீங்க?”


“……. ”


“நீங்க எவ்ளோ நல்ல அண்ணாவா இருந்தீங்க.. அதை நம்பித்தானே நானும் உங்க கூட பழகினேன்.? சே.. நீங்க இப்படி செய்வீங்கனு நான் கொஞ்சம் கூட நெனைக்கவே இல்ல..” என்று மிகவும் வருந்திச் சொன்னாள்.


அவனுக்கும் வருத்தம் உண்டானது.

“வெரி ஸாரிம்மா” மிகவும் தணிந்த குரலில் சொன்னான்.


“அந்தக்காகிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா?”


“நான் பண்ணது தப்புத்தான்.. அதுக்காக மனசார மன்னிப்பு கேக்கறேன். என்னை மன்னிச்சிரு. இதுக்கு மேல உன் விருப்பம்”


அதன்பின் அவன் பேசவில்லை. அவளும் பேசவில்லை. அமைதியாக பைக்கை ஓட்டினான். ஸ்பீடு பிரேக்கர்களில் பொறுமையாகவே ஏறி இறங்கினான். அவள் அவன் மீது டச்சாகிவிடும்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை.


 ஆஸ்பத்திரி போனதும் அவனுக்குப் பின்னாலிருந்து இறங்கி எதுவும் பேசாமல் பேகை தூக்கிக் கொண்டு நடந்தாள். 


வண்டியைப் பூட்டிவிட்டு இடைவெளி விட்டு அவளைப் பின்தொடர்ந்தான்.


 அவளைத் தொடர்ந்து அவளது அம்மா இருக்கும் வார்டுக்குப் போனான். அவளது அம்மா படுக்கையிலிருந்தாள். அப்பா பக்கத்திலேயே இருந்தார்.


அவனை வரவேற்று பேசினர். நலம் விசாரித்தான். 


அவளது அம்மா, அப்பாவுடன் பேசிவிட்டு சிறிது நேரத்தில் கிளம்பினான்.


 அவன் கிளம்பி வரும்வரை கிருத்திகா அவனுடன் பேசவே இல்லை. அவனைப் பார்க்கவும் இல்லை. அவன் பார்வைகளை அவள் மதிக்கவும் இல்லை.. !!


அவன் விடை பெற்று வெளியேற கிருத்திகா அவன் பின்னால் வந்தாள்.

“ஒரு நிமிசம்” என்றாள்.


வெராண்டாவில் நின்று அவளைப் பார்த்தான். இன்னும் அவள் கூந்தலால் அடி பட்ட அவன் கண் சிவந்துதானிருந்தது. 


அதைப் பார்த்து கொஞ்சம் வருத்தப் பட்டாள்.

“இனிமே இப்படிலாம் பண்ணாதிங்க”


“ஸாரி”


“எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது”


“என்னை அடிச்சிரு”


“அடிச்சா.. ??”


“உன் கோபம் ஆறிடும்”


முறைத்தாள்.

“ம்ம்.. போங்க.. பை” எனச் சொல்லிவிட்டு சட்டென திரும்பிப் போனாள்.. !!



கொஞ்சம் கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினான் நிருதி. 


நடந்ததை நினைக்க அவமானமாகத்தான் இருந்தது. ஆனாலும் இது சபலத்தால் உண்டான ஆசைக்கு கொடுத்த விலை என்று மனதை சமாதானம் செய்தான். 


பெண்ணாசை பொல்லாதது. வில்லங்கமானது. மனைவி இருக்க மற்ற பெண்களை நாடினால் இப்படித்தான் அசிங்கப் பட வேண்டியிருக்கும். மனைவி இருந்தால் மட்டுமில்லை. இல்லாவிட்டாலும் இதே நிலைதான்.


அதுவும் இவள் ஓர் இளம்பெண். திருமணமாகாதவள். அவள் அழகா அழகில்லையா என்பதைத் தாண்டி அவளுக்குப் போய் முத்தம் கொடுத்தது மிகப்பெரிய தவறுதான்.


யோசனைகளும் குழப்பமும் அவனை நிம்மதியிழக்கச் செய்தது.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!