சனி, 14 செப்டம்பர், 2024

மாறுதல் சில நேரங்களில்-5

 மாலை,  தலைவாரி பவுடர் அடித்து பொட்டு வைத்துக் கொண்டபோது மனசுக்குள் மெலிதான பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது.


“என்னங்க?”


“என்ன திலகம்?”


“எங்க போனீங்க?”


“இங்கதான் பெட்ரூம்ல இருக்கேன்”


“அங்க என்ன பண்றீங்க.?”


“என்னை ரிலாக்ஸ் பண்ணிட்டிருக்கேன். ஏன்மா?”


“என்ன ரிலாக்ஸ்?”


“மணி ஆகுதில்ல? இன்னிக்கு உன்னை சந்தோசப் படுத்தணுமில்ல? அதான்.. அதுக்கு ப்ரிப்பேர்டாகிட்டிருக்கேன்”


“அப்படியென்ன ப்ரிப்பேர்டா..?” கேட்டுக் கொண்டே ஆர்வமாக எழுந்து போய் பெட்ரூமில் பார்த்தாள் திலகம்.


அவள் கணவர் தியாகு படுக்கையை ஒட்டி தரையில் உட்கார்ந்து சம்மணமிட்டு மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டிருந்தார். 


“என்ன இது தியானமா?” உள்ளே போனாள். 


“யோகா. ஒடம்புக்கு மனசுக்கு ஒரு தெம்பையும் கட்டுப்பாட்டையும் கொடுக்கும்”


“ஐயோ” தலையில் தட்டிக் கொண்டாள்.  “அதுக்கும் இதுக்கும் என்ன?”


“சம்பந்தம் இருக்கு. உனக்கு தெரியாது. நீ பாரு.. இன்னிக்கு நான் உன்னை ரேப் பண்ணத்தான் போறேன்”


சிரித்து விட்டாள்.

“எதுக்கு ரேப்பாம்? படுடின்னா எல்லாத்தையும் அவுத்து போட்டு காலை விரிச்சு படுக்கப் போறேன். ஏறி செய்ய வேண்டியதுதான?”


கட்டிலில் கணவரைப் பார்த்து உட்கார்ந்து கொண்டாள். அவர் இப்படி மெனக்கெடுவது ஒரு வகையில் மகிழ்ச்சியாகக் கூட இருந்தது. ஆனால் அது வெற்றி பெறுமா என்றுதான் தெரியவில்லை. 


“எவ்வளவு நேரம் செய்விங்க?”


“செய்வேன். அப்ப பாரு..?”


“ப்ச்.. அதில்லை. அதை அப்பறம் பாக்கலாம். இந்த தியானம்?”


“பத்து நிமிசம்”


“இப்படி பேசிட்டே பண்ணலாமா?”


“கூடாது. அமைதியா பண்ணனும்”


“அப்பறம் என்கூட பேசிட்டே பண்றீங்க?”


“நீ பேசினதுக்கு நான் பேசினேன். பாவம் நீ.. அதான்”


“சரி சரி.. எவ்வளவு நேரமோ பண்ணிட்டு வாங்க. நான் போய் தோசை ஊத்தறேன். செரியா? சாப்பிட்டு நேரம் காலம் படுக்கலாம்”


“செரி.. போ வரேன்”


குனிந்து கணவர் கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு வெளியே போனாள். 

“பெரியவளுக்கு போன் பண்ணப் போறேன்”


“ம்ம்”


டிவியை ஓடவிட்டு, பேனை மட்டும் ஆப் பண்ணிவிட்டு கிச்சனுக்குப் போய் அடுப்பில் தோசைக் கல்லை எடுத்து வைத்தாள் திலகம்.


கலக்கிய தோசை மாவு ப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைக்கப் பட்டுத் தயாராக இருந்தது.


போனை எடுத்து பெரிய மகள் ஸ்வாதிக்கு அழைத்தாள்.


“மம்மி..”


“சுவா.. என்னடி தங்கம் பண்ற?”


“ப்ராஜெக்ட் ஒர்க் மம்மி. நீ என்ன பண்ற?”


“இப்பதான் அடுப்புல தோசைக் கல்லு வெச்சிருக்கேன். சட்னி மொதவே அரைச்சு வெச்சுட்டேன்”


“அப்பா என்னமா பண்றார்?”


மகளிடம் உண்மையை மறைக்கத் தோன்றவில்லை. 


“உங்கப்பாவா? அதை ஏன் கேக்கற..  என்னமோ சொன்ன கதையா… தியானம் பண்ணிட்டிருக்காரு”


“தியானமா என்னமா திடீர்னு?”


“யாரோ சொன்னாங்களாம் தியானம் பண்ணா சுகர் பிரஷர் எல்லாம் கண்ட்ரோல்ல இருக்கும்னு. அதான் களத்துல எறங்கிட்டார்”


“இப்போ பேச முடியாதா அப்பாகிட்ட?”


“முடிச்சுட்டு வருவாருடா கண்ணு. குட்டிகிட்ட பேசுனியா?”


“பேசினேன்மா. அவளே கால் பண்ணியிருந்தா. ஒரு டவுட் கேக்கணும்னு கேட்டா. சொன்னேன்”


“கண்ணு.. அப்பா உன்கிட்ட ஒரு சந்தோசமான செய்தி சொல்லணும்னு துடிச்சிட்டிருக்காருடா”


“என்னம்மா அது?”


“ஆனா மொத மொத என்னைவே உன்கிட்ட சொல்லச் சொல்லிட்டாரு”


“சொல்லும்மா… என்ன?”


“உனக்கு மாப்பிள்ளை ரெடியா இருக்குடா கண்ணு. அப்பாவோட காலேஜ் பிரெண்டாம் மேகவாணினு பேரு. அவங்க பையன் ஸ்டேட்ஸ்ல நல்ல வேலைல இருக்கானாம். அவனுக்கு பொண்ணு தேடிட்டு இருக்காங்களாம். உங்கப்பாவை இன்னிக்கு எதேச்சையா பாத்து பேசறப்ப உன்னைப் பத்தி விசாரிச்சுட்டு உன் போட்டோ கேட்றுக்காங்க. இவரும் குடுத்திருக்காரு. அவங்களுக்கு புடிச்சுப் போயி உன் போட்டோவை மகனுக்கு அனுப்பியிருக்காங்க. இப்ப அவனும் உன் படத்தை பாத்துட்டு ஓகே சொல்லிட்டானாம்டா கண்ணு. உனக்கு இந்த வருச படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தைப் பண்ணிரலாம்னு அப்பா சொல்றார். கல்யாணமான கையோட நீயும் ஸ்டேட்ஸ் போயிரலாமாம்டா கண்ணு.. உங்கப்பா சந்தோசத்துல தலை கால் புரியாம குதிக்கறார். எனக்குதான் உன்னை அவ்வளவு தூரம் அனுப்பிட்டு எப்படி இருக்கப் போறேனு கவலையா இருக்கு”


“அம்மா.. அம்மா.. என்னமா இது..? இப்படி ஒரு குண்டை தூக்கி என் தலைல போடுற? அப்பாவ யாருமா அவங்ககிட்ட என்னைப் பத்தி பேசச் சொன்னது?”


“அழாதடா கண்ணு.  உண்மையா சொல்லு நீ லவ் ஏதாவது பண்றியா என்ன?”


“ச.. இல்லமா. நான் அதெல்லாம் பண்ணலமா. அப்படி பண்ணா உங்ககிட்ட சொல்ல எனக்கு ஒரு பயமும் இல்லமா.”


“பின்ன என்னடா கண்ணு? அப்பா உனக்கு நல்லதுதான செய்வாரு. நீ ஃபாரினெல்லாம் போய் வாழ்ந்தா அது எங்களுக்கு பெருமைதானேடா கண்ணு?”


“அதெல்லாம் சரிதான்மா. ஆனா உங்களை எல்லாம் பிரிஞ்சு இருக்கணுமில்லைமா? அதை நெனைச்சு பாத்திங்களா?”


“நெனைக்காம இருப்பமாடா கண்ணு.? நீ இதுக்கெல்லாம் போய் கவலைப்படாத. இப்பதான் எந்த நாட்ல இருந்தாலும் நெனச்ச நேரம் வீடியோ கால்ல பாத்து பேசிக்கலாமில்ல? கவலைப்படாதடா கண்ணு.. எனக்கும் கவலையாதான் இருக்கு. ஆனா நீ நல்லா வாழ்ந்தா அது நம்ம எல்லாருக்கும் பெருமைதான்டா..”


“என்னமோ போம்மா.. எனக்கு மூடே போச்சு”


“பார்ரா.. இதே வார்த்தையைத்தான் ஆபீஸ் விட்டு வந்ததும் உங்கப்பாவும் சொன்னாரு. அப்பனுக்கும் மக்களுக்கும் ஒரே மாதிரி பேச்சு வருது”


“அப்பாக்கு என்னமா மூடு அவுட்?”


“இந்த விசயத்த சந்தோசமா என்கிட்ட சொல்ல வந்தாரு. நான் அப்பதான் குளிச்சுட்டிருந்தேனா ஏதோ மூடுல அவரை கொஞ்சம் பேசிட்டேன். சண்டை வந்துருச்சு. அப்பதான் இப்படி சொன்னாரு. அப்பவே அது செரியாவும் போச்சு” அவளது கணவர் பின்னால் வந்து அவளை அணைக்க, “இதோ உங்கப்பா வந்துட்டார். பேசறியா?” என்றாள். 


“குடு.. அந்த அப்பாவை நல்லா திட்டணும்”


திலகம் சிரித்துக் கொண்டே போனை தனது கணவரிடம் கொடுத்தாள்.

“உங்களை திட்டப் போறாளாம்”


“என் மகதானே. நல்லா திட்டட்டும். ஹலோ.. மை பேபி.. கண்ணுக்குட்டி.. ஒரு சந்தோசமான நியூஸ்டா.. ஹாஹா.. அப்பாவை திட்டு. நல்லா திட்டு..” சிரித்தபடி பேசிக்கொண்டே அங்கிருந்து. மெள்ள நகர்ந்து போனார். 


திலகம் மகளுக்கு ஆறுதலாகப் பேசினாலும், மகளைப் பிரிய வேண்டியதிருக்குமே என்று உள்ளுக்குள் கவலையாகத்தான் இருந்தது.


கணவர் பேசி மகளை சமாதானம் செய்து போனை மீண்டும் திலகத்திடமே கொடுத்தார். 


“அம்மா.. பாரும்மா இந்த அப்பாவை.. எங்க ரெண்டு பேரையும் வெளிநாட்ல புடிச்சு தள்ளி விடறதுல உறுதியா இருக்காரு” 


“அது என்ன ஆசையோ தெரியல. அவருக்கு அப்படி ஒரு ஆசை..”


“நேர்ல பாக்கட்டும் அப்பாவை.. என்ன பண்றேன் பாரு”


பேச்சு நீண்டது. ஸ்வாதி கான்ஃபரன்ஸ் கால் போட்டு சின்ன மகளையும் இணைத்துக் கொள்ள குடும்பமாக மாறி மாறிப் பேசினர். 


தோசை சுட்டு சாப்பிட்டு கணவருக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்துவிட்டுப் படுக்கையில் போய் படுத்துக் கொண்டும் மகள்களுடன் போனில் பேசினாள் திலகம்.


அவள் கணவர் சிறிது நேரம் மொட்டை மாடிக்குப் போய் நடந்துவிட்டு வந்து அவளுடன் இணைந்து கொண்டார். 


மகள்களை தூங்கச் சொல்லி குட்நைட் சொல்லி போனை வைத்தபோது தியாகு அவளை அணைத்துக் கொண்டு வாசனை பிடிக்கத் தொடங்கி விட்டார்.


 “என்ன சாரு ரெடியா?” திலகம் கேட்டாள். 


“தெம்பாதான் இருக்கேன். ட்ரை பண்லாமா?”


அவர் முகத்தைப் பார்த்தாள். 

“முடியுமா?”


“முடியும்னு நம்பறேன். நம்பிக்கை இருந்தா எதையும் சாதிக்கலாம்”


“இருங்க பாத்ரூம் போயிட்டு வரேன்”


அவரை விலக்கிவிட்டு எழுந்து உள்ளே படரத் தொடங்கிய மெலிதான கிளர்ச்சியுடன் பாத்ரூம் சென்றாள்.


இருபது வருடங்களுக்கு மேலாக தாம்பத்ய வாழ்க்கையை வாழ்ந்தவள்தான் அவள். ஆனால் அது அவளைப் பொறுத்தவரை கொண்டாடி மகிழும் அளவுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. 


அலுப்பும் சலிப்புமான வாழ்க்கைக்கு இடையே கிடைக்கும் ஒரு சிறு ஆறுதலான ஒன்றாகத்தான் அவளால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.


இப்போது கணவருக்கு சுகர் என்கிற ஒன்று வந்து, கடந்த சில வருடங்களாகவே அவளுக்கு தாம்பத்யம் என்பது இல்லாமலாகிவிட்டது. அதனாலேயோ என்னவோ எப்போதாவது சில நேரம் அவளையறியாமல் அது அவளுக்குள் தலை காட்டிச் செல்லும். அதைக் கொண்டாட ஆள் இல்லை என்பதால் அவளும் அதைக் கண்டுகொள்வதில்லை.


இப்போது என்னவோ செய்கிறேன் என்கிறார். பார்ப்போம்!


தண்ணீர் குடித்து கணவருக்கும் கொண்டுபோய் கொடுத்துவிட்டு விளக்கணைத்துவிட்டுக் கட்டிலில் உட்கார்ந்தாள். 


அவளைப் பார்த்தபடி மல்லாக்கப் படுத்துக் கொண்டிருந்தார். 


“முடியும்ங்கறீங்களா?”


“முடியும்மா..”


“ஒண்ணும் பிரச்சினை வராதே”


“அப்படி எல்லாம் ஒண்ணும் வராது. நீ வா”


“நைட்டிய கழட்டிர்றதா?”


“கழட்டிரு”


“நீங்க?”


“நானும்தான்”


“என்னங்க இது? சொங்கி மாதிரி இருக்கு?”


“இப்பதான ஆரம்பிச்சிருக்கோம். ஒடனே எழுந்துக்குமா? மெல்ல மெல்லத்தான் எழுந்துக்கும்”


அவள் தடவிக் கொடுத்தாள். அசைத்துப் பார்த்தாள். எழுவதாகக் காணோம்.


அவளைக் கட்டிக் கொண்டு உடம்பு முழுக்கத் தடவினார். முத்தம் கொடுத்தார். மார்புகளில் முகத்தைப் போட்டு தேய்த்தார். 


அவள் எதிர்பார்த்த மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. அவள் மூச்சுக்குத் திணறியதுதான் மிச்சம்.!


அரைமணி ஆயிற்று. 


“என்னங்க பண்றிங்க? மூச்சு. முட்டுது”


“இம்சையா இருக்கா?”


“இருக்காதா பின்ன? தடவுனது போதும். ஏதாவது செய்ங்க”


“இல்ல திலகம் முடியாது. எந்திரிக்கவே மாட்டேங்குது.. ஸாரி..”


வெறுத்துப் போனாள் திலகம்.


“என்னங்க இது? விட்றுந்தாக்கூட நான் பாட்டுக்கு பேசாம தூங்கிருப்பேன். ரேப் பண்றேன் அப்படி இப்படின்னுட்டு.. அரைமணி நேரமா போட்டு தடவு தடவுனு தடவி நல்லா சூட்டை ஏத்தி விட்டுட்டு இப்ப முடியலேனு சொல்றீங்களே.. உங்களை என்ன பண்றது? ஒரு நாள் இல்ல ஒரு நாள் பாருங்க.. நான் எவன்கிட்டயாவது போயி.. படுக்கத்தான் போறேன். என்னால தாங்கவே முடிய மாட்டேங்குது. இப்படி ஒரு கொடுமையை அனுபவிக்கவே வேண்டாம். நான் உத்தமியா பத்தினியா இல்லாம நரகத்துக்கு போனா போயிட்டு போறேன். இந்த நரகத்துக்கு அந்த நரகம் எவ்வளவோ மேல்.. இங்க சந்தோசத்தை அனுபவிச்சுட்டு அந்த நரகத்துக்கு போனா ஒண்ணும் தப்பில்லை” கோபத்தில் திட்டிக் கொண்டே திரும்பிப் படுத்தவளை அவளது கணவர் தொடக்கூட இல்லை.. !!


வியாழன், 12 செப்டம்பர், 2024

மென் மோகம்-13

 அவனது தவறு அப்போதுதான் அவனுக்கு புரிந்தது. 


கமலியுடன் கொஞ்சம் அந்தரங்கமாகப் பேசியதில் மூடாகிப் போனவன், அவள் சொன்னதை மீறி தன் ஆசையைச் சொல்லி விட்டான். அது  அவளைக் கோபப் படுத்தி விட்டது.


'ஓ ஷிட்'


உடனே கால் செய்தான். ரிங் போனது. ஆனால்  அவள் எடுக்கவே இல்லை.


 மீண்டும் மீண்டும் முயன்று பலனின்றி மனம் வருந்தினான். 


தன்மீதே அவனுக்கு சினமும் கவலையும் எழுந்தது. 


 அதன்பின் மாலைவரை நான்கைந்து முறைகளுக்கு மேல் கால் செய்து ஏமாந்தான். 


அவள் தவறாக நினைத்து  அவன் தொடர்பை துண்டித்துக் கொள்ள முடிவு செய்து விட்டாளோ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டான்.. !!


 அன்று இரவும் அவள்  அவனுக்கு பதில் அனுப்பவில்லை. 


 ஏமாற்றத்திலும், முன்தின இரவில் அவளுடன் பேசியதை நினைத்ததிலும் அந்த நாளும் தூக்கத்தை இழந்தான்.. !!


திங்கள் கிழமை. மிகவும் சோர்வுடன் வேலை செய்தான். காலையில் வழக்கம் போல  அவளுக்கு  குட்மார்னிங் அனுப்பினான். ஆனால் பதில் இல்லை. 


அன்று தன் மொபைல் அடித்த ஒவ்வொரு முறையும்  அவளாக இருக்குமோ என்று ஆவலுடன்  எடுத்துப் பார்த்து  ஏமாந்தான். 


அன்று மாலை, வேலை முடிந்து வந்தபோது அவள் அலுவலக வளாகம் வெறிச்சோடிக் கிடந்தது. 


அவள் வீட்டுக்கே போனால் என்ன என்று  ஒரு வேகம்கூட வந்தது. ஆனால்  அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும் என்பதால் சோகத்துடன் அடங்கிக் கிடந்தான்.. !!


மூன்று நாட்கள் கடந்தன. 


கமலி தன்னுடன் பேசுவாள் என்றிருந்த அவனது நம்பிக்கை அவனை ஏமாற்றியதை உணர்ந்து மிகவும் வேதனைப் பட்டான். 


அவள் அவனை நேசிக்காவிட்டாலும் இந்த சில நாள் பழக்கத்தில் அவன்  அவளை ஆழமாக நேசித்திருந்தேன். 


நேரில் ஒரு முறை மட்டுமே பார்த்து பழகியிருந்தாலும் அவளுடன் போனில் பேசிப் பழகிய பழக்கமே அவனை அவள் மீது ஆழமாய் ஆசை கொள்ள வைத்திருந்தது. 


அந்த ஆசை அவனது எண்ணச் சிதறல்களின் ஒவ்வொரு துளியும் பரவியிருப்பதை உணர முடிந்தது. 


அவன் எண்ணங்கள் கற்பனைகள் காட்சிகள் கனவுகள் அனைத்திலும் அவளேதான். 


இது காதலா, காமமா என்கிற போராட்டம் ஒரு பக்கம், அவள் மணமானவள் எனக்குரியவள் அல்ல என்கிற நியாய தர்மம் மறு பக்கம்  என எந்த நிலையிலும் நிலைக்க முடியாமல் தடுமாறித் தவித்தான். 


பெண் பித்து என்பது எவ்வளவு பெரிய வலை என்று கலங்க வைத்தது..!!


 அத்துடன் கடைசி நாள் இரவு அவளுடன் போனில் பேசியது, உச்சம் தொடடு அடங்கியது எல்லாம் அவன், அவளுடன் நேரடியாக உறவு கொண்டு அவளுடன் வாழ்ந்து விட்ட உணர்வையே அவனுக்குள் ஏற்படுத்தியிருந்தது.


 அந்த  உணர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அவன் மிகவும் நொருங்கிப் போனான் என்றே சொல்லலாம்.. !!


ஐந்தாவது நாள், வியாழக்கிழமை மாலை ஏழு மணிக்கு மொபைலில் பார்த்தபோது கமலி ஆன்லைனில் இருந்தாள். 


அவனுக்குள் குப்பென ஒரு பரவசம். அவள் பேசுவாளா மாட்டாளா என்கிற கேள்வியையும் தான்டி  உடனே அவளுக்கு மெசேஜ் அனுப்பி விட்டான்.


'ஹாய் '


அவளிடமிருந்து பதில் இல்லை. ஆனால் படித்து விட்டாள்.


'ஹலோ மேடம். எப்படி இருக்கீங்க? '


அதற்கும் பதில் இல்லை. 


'நான்  ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிருங்க ப்ளீஸ் '


அதைத் தொடர்ந்து அவன் அனுப்பிய மெசேஜ்களுக்கும் பதிலே இல்லை. ஆனால் ஒவ்வொன்றையும் படித்து விடுகிறாள் என்பது தெரிந்தது. 


அவள் படிக்கவில்லை  என்றால்கூட அவன் மெசேஜ் செய்வதை நிறுத்தி விடுவான். ஆனால் படிக்கிறாள் என்று தெரிந்த பின் அவனால் நிறுத்தவே முடியவில்லை.. !!


அரைமணி நேரம் கழித்து அவளிடம்  இருந்து  ஒரு மெசேஜ் வந்தது. 


'நான் கோபமா இருக்கேன்'


'வெரி ஸாரி.  பட் என்ன கோபம்?'


'ஏன் தெரியாதா?'


'ப்ளீஸ் சொல்லுங்க? '


'உனக்கே தெரியும்'


'என்னை மன்னிச்சிருங்க. ப்ளீஸ். கெஞ்சி கேட்டுக்கறேன். உங்க கோபம் எனக்கு புரியுது. நான் வேணும்னு எந்த தப்பும் பண்ணல. ஆனா.. அன்னிக்கு ஒரு ஆர்வக் கோளாறுல அப்படி நடந்து போச்சு. இந்த  நாலஞ்சு நாளா நீங்க  என்கூட பேசாம நான் நானாவே இல்ல. சரியா தூங்கல, சாப்பிடல, சரியா வேலை செய்ய முடியல, கிட்டத்தட்ட  ஒரு பைத்தியக்காரன் மாதிரி ஆகிட்டேன்


'தப்பு'


'சரி.. தப்புத்தான். ஆனா என்னால உங்ககூட பேசாம இருக்க முடியல. வெரி வெரி ஸாரி'


'முடியணும். நான்  இன்னொருத்தர் ஒய்ப்'


'அறிவுக்கு புரியுது. மனசுக்கு புரியல'


'அப்ப அனுபவிக்க வேண்டியதுதான்'


'நோ.. நோ.. என்னால தாங்க முடியாது. என்கிட்ட பேசாம இருக்காதீங்க'


'டேக் கேர் நிரு.. பை' ஆப்லைன் போய் விட்டாள். 


'அலோ.. ஸாரி. கமலி..' அவன் மெசேஜ்களை அதன்பின் அவள் பார்க்கக்கூட இல்லை.. !!


அன்றைய இரவும் அவனுக்கு பாழானது. தூக்கமே பிடிக்கவில்லை. கண்ணை மூடிப் படுத்தாலும் கமலியின் கிசுகிசுப்பான மெல்லிய குரல்தான் அவன் காதில்  ஒலித்தது. 


சிரிப்பு நிறைந்த குரல், காதல் வழியும் குரல், காமம் கசியும் குரல். அரை விழிப்பில் வரும் கனவில்கூட அவள் குரலே ஒலித்தது. 


அதன் அவஸ்தைகள் தாளாது அவள் தன்னை இப்படி திடுதிப்பென கழற்றி விட்டு விட்டாளே என்று மனதுக்குள் நிறைய அழுதான்.. !!


 அடுத்து வந்த  ஒவ்வொரு நாளும் அதே நிலை. தொடர்ந்து  ஒரு வாரம் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானான். 


உணவும், உறக்கமும் தொலைத்து, மனதை வருத்தி நோயுற்றவன் போலானான். பின்னர் அவனாகவே தன் மனதை மாற்ற முயற்சி செய்தான். 


ஆனாலும்  அடிக்கடி  அவள் நினைவில்  அவனது மனது துவளத்தான் செய்தது. 


பெரும்பாலும் அவள் அவனுடன் போனில் பேசிய வார்த்தைகள் அவன் காதுகளில் ரகசியமாக  ஒலித்துக் கொண்டே இருந்தன.. !!.


அதன்பின்  ஒரு நாள் எதேச்சையாக கமலியைப் பார்த்தான். 


 வழக்கம் போல வேலை முடிந்து வந்த சமயம் அவளும், அவளது தோழியும் அப்போதுதான் அவர்களின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பஸ் ஸ்டாப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தனரர். 


பைக்கில் சென்ற அவன் அவர்களைக் கடக்கும் சமயம்தான் அது அவள்தான் என்பதையே கவனித்தான். 


படக்கென்றிருந்தது. ஆனாலும் உடனே பிரேக் போட்டு சிறிது முன்னால் போய் நின்றான். 


அவன் ஹெல்மெட்  அணிந்திருந்தாலும் கமலி சட்டென  அவனை அடையாளம் கண்டு பிடித்து விட்டாள்.


 அவனைப் பார்த்தவள் திடுக்கிட்டு தட்டென ஒரு கணம் நின்று விட்டாள். பின் உடனே சுதாரித்துக் கொண்டு அவனைத் தெரியாதவள் போலவே ரோட்டுக்கு மறுபக்கம் சென்று அவன் பக்கம் கூடத் திரும்பாமல் அவனைக் கடந்து போய் விட்டாள். 


அவனை யார் என்று  அவள் தோழிக்கு தெரியவில்லை. இவள் சொல்லியிருக்க மாட்டாள் என்று புரிந்தது.


அவளிடம் வலியப் போய் பேசலாம்  என்று நினைத்தான். ஆனால்  கூடவே அவள் தோழி இருப்பதால் மனசு விட்டுப் பேச முடியாது என்று புரிந்தது. 


புறக்கணித்து விட்டுச் செல்பவளிடம் போய் பேசினாலும் மதிப்பிருக்கப் போவதில்லை. 


அவனைப் பார்த்தும் பார்க்காததைப் போல போகிறாள் என்றால் அவள் அவன் நட்பை விரும்பவில்லை என்று அர்த்தமாகிறது


இருப்பினும் அவன்  அவளுக்கு போன் செய்தான்.


 ரிங்கான மொபைலை பேகில் இருந்து வெளியே எடுத்துப் பார்த்து விட்டு காலை கட் பண்ணி விட்டாள் கமலி. 


மீண்டும் கால் செய்தான். அதையும் கட் பண்ணி விட்டாள்.  அவனுக்கு வெறுப்பாய் வந்தது.


'ச்ச.. போடி. நல்லாரு' என்று ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு அதே கோபத்துடன் வண்டியைக் கிளப்பி வேகமாகப் போய் விட்டான். 


மீண்டும்  அவளைக் கடந்தபோது அவளைப் பார்க்கக் கூட இல்லை.. !!


 அன்றிரவு அவனுக்கிருந்த வெறுப்பில் அவளைப் பற்றி நினைக்கவே விரும்பவில்லை. ஆனால் ஆச்சரியமாக அவன் கனவில் வந்து  அவனது அரைகுறை தூக்கத்தையும் கெடுத்துத் தொலைத்தாள்.. !!


அதன்பின் அந்த வாரத்தில் இரண்டு முறை இடைவெளி விட்டு விட்டு  அவளை அதேபோலப் பார்த்தான்.


 அவன் ஆபீஸ் விட்டு வரும் சமயம் அவள் ரோட்டில் நடந்து கொண்டிருப்பாள், வழக்கம் போல அவள் தோழியும் கூடவே இருப்பாள். 


இவளை விட்டு இவள் தோழியை கரெக்ட் பண்ணி விடலாமா என்று கூட ஒரு கோபம் வந்தது அவனுக்கு. ஆனால் வெறுப்பின் உச்சத்தில் இருந்த அவன் அந்தளவுக்கெல்லாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.. !!




விரும்பிப் படித்தவை.. !!