திங்கள், 29 மார்ச், 2021

பிழையான வரம் -4

 அவன் கண்கள் அவள் பெண்மைச் செழிப்பின் பூரண அழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தன. நீரள்ளி வாயிலிட்டு உமிழிந்தபின் அவனைச் சீண்டினாள் குந்தி.  "நீரைக் கண்டு அஞ்சுகிறீர்போல?"

"இல்லை. உன் அழகைக் கண்டு அஞ்சுகிறேன்" என்றபடி அவனும் அவளைப் போலவே ஆடைகளைக் களைந்து இடையாடையுடன் வந்து நீரில் இறங்கினான். ஒரு கணம் நீர் கொந்தளித்தடங்கியது. அவன் உடலில் இருந்த வெம்மை முற்றாய் அணைந்து நீரின் தண்மையை ஏற்றது. மெதுவாக நீரை அளைந்தபடி நடந்து குந்தியை நெருங்கி வந்து அவள் இடையைப் பற்றி இழுத்தான். 

"அச்சமின்றி தொடுகிறீர்கள்" சிலிர்த்த குந்தி மெல்லிய குரலில் சொன்னாள்.

"உன் அழகு என் அச்சத்தை போக்கி விட்டது" அவளின் மெல்லிய இடையை இரு கைகளிலும் பற்றித் தூக்கி நீருக்கு மேலே இடை தெரிய சுழற்றினான். சிறு பய அலறலை எழுப்பியபடி அவனின் பரந்த தோள்களைப் பற்றினாள் குந்தி. அவள் முலைகள் அவன் முகத்தைத் தொட்டணைந்தன. அவன் மூக்கு அவள் முலைக்குவையை அழுத்திப் புதைந்தது. அவள் முலை வாசணையில் சூரியனின் காமம் கட்டற்றதாய் கிளர்ந்தது.. !!

கைகளை உந்தி அவன் பிடியிலிருந்து விலகிச் சென்றாள் குந்தி. கைகளை நீரில் கொடிபோல வீசி நீந்தினாள். நீரில் மூழ்கி எழுந்து முலைகள் எழு மூச்சு விட்டுச் சிரித்தாள். நீரில் துள்ளி விளையாடும் அவள் விண்ணகத்து அப்சரஸ் பெண்ணாய் தோன்றினாள்.. !!

அவள் அச்சமற்ற சிறுமியாய், ஆயர் குலத்தில் கன்று மேய்த்த பிருதையாய் மாறி நீரில் மூழ்கி நீந்தி விளையாடினாள். சிறு பெண்ணாய் அவன் மீது நீரள்ளித் தெளித்துச் சிரித்தாள். அவள் பெண்மை காமத்தில் கனிந்து வந்ததை ஒவ்வொரு நொடி தோறும் உணர்ந்து கொண்டிருந்தன அவன் கண்கள்.. !!

குந்தி சற்று மூச்சிரைத்து நின்றபோது அவளை நெருங்கி அவளின் மெலிந்து வழுக்கும் இடையைப் பற்றி தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். உடல் சிலிர்க்கும் காமத்துடன் அவனைக் கட்டிக் கொண்டாள் குந்தி. அவளை அள்ளித் தூக்கி இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டான். நனைந்த அவள் கூந்தல் பறந்து வந்து அவன் முகத்தை மூடியது. முத்தச் சுவையில் கண் மயங்கி நீள் மூச்சுடன் பின்னால் விழுந்து நீரில் அமிழ்ந்தாள். 'என்னைப் பிடி' என்று மனதுள் கூவியபடி விலகி நீந்தினாள்.. !!

நீரலைகள் சுழல்போல ஓசையெழப் பரவ அவளைத் துரத்திப் பிடித்தான். அவன் கரங்கள் அவள் உடலின் ரகசிய இடங்களைத் தொட்டுத் தீண்டின. நீரில் ஊறிய அவளின் உள்ளாடைகள் அவனின் தீண்டலில் இளகி மெல்லத் தளர்ந்தன. அவன் விரல்கள் அவைகளின் முடிச்சுக்களை தேடிப் பற்றின. அவள் அதை உணர்ந்தாள். ஆனால் தடுக்கவில்லை. தடுக்கும் எண்ணம் அவளில் எழவேயில்லை.

 சில கணங்களில் அவள் தடையற்ற உடலாய் மாறினாள். அவள் முழுதுடலை அள்ளி அணைத்து முத்தமிட்டான். அங்கங்கே தீண்டும் அவன் உதடுகளின் கவ்வலில் அவள் பெண்மை முற்றாய் கிறங்கிக் கனிந்தது. நீரில் மூழ்கிய அவன் உதடுகள் அவளின் தொடையிணைவில் பதிந்து பெண்ணங்கத்தை முத்தமிட்டபோது துள்ளி விழுந்து விலகி ஓடினாள் குந்தி.. !!

அவன் எழுந்து நீரை உமிழ்ந்தபடி பாய்ந்து அவளை அள்ளினான். துள்ளி பின் அவன் தோள்களைக் கட்டிக் கொண்டாள். அவளின் முலைக் கண்களை நாகம் தீண்டியதுபோல உணர்ந்து சிறு முனகலுடன் அவனை இறுக்கினாள். அவன் நாக்கு நாகமென நீண்டு அவளின் முலைக் கண்களை உறிஞ்சின.. !!

சில கணங்கள் நீரில் பின்னிப் பிணைந்தபின் அவளை கைகளில் அள்ளியபடி கரையேறினான். அவள் உடல் மேலும் ஒளிகொண்டு நீரழைகளாய் மின்னியது. அவளை பசும் புற்கள் மீது கிடத்தினான். அவள் பெண்மை முழுவதுமாக மலர்ந்து அவனை ஏற்கும் நிலையிலிருந்தது. அவன் தன் மீது படர்ந்தபோது கண்களை மூடினாள். அவன் தன் ஆண்மையின் வீரியத்தால் அவளின் கன்னித்திரையை உடைத்து அவளுள் பிரவேசித்தான். அவள் தொண்டையிலிருந்து சிறு முனகல் எழுந்தடங்கியது. கை கால்கள் விரைத்துப் பின்ன அவன் உடலை தன் பலம் கொண்ட மட்டும் வளைத்து இறுக்கிக் கொண்டாள் குந்தி.. !!


கன்னியென மலர்ந்திருந்த தன் பெண்மைக்கு கிடைத்த ஆண்மையின் திடமான முதல் அழுத்தத்தில் அவள் மூச்சு சில கணங்கள் நின்று பின் அதிர்வுடன் வெளியேறியது. இதயம் நின்று துடிப்பதின் வேகத்தை அடைந்தது. அவள் கன்னியுடல், தன்னை ஆளும் ஆண்மையின் ஆளுமையில் மயங்கி கருவறை வாயில் திறந்தது.. !!

வானில் மின்னிச் சிரிக்கும் விண் மீன்களை, அவைகளை திரையிட்டு மறைத்துச் செல்லும் முகில் கூட்டங்களை எல்லாம் அரைக் கண் செருக கிறக்கத்துடன் பார்த்தபடியிருந்தாள்.. !!


தன் உள்ளம் விரும்பியதுபோல ஆசைக் கனவுகள் நிறைவேறப் போவதாய் நினைத்து மகிழ்ந்த அவளின் பேதை உள்ளத்துக்கு அப்போது தெரியாது. தன் கருவில் துளிர்த்து சூரியனின் சகல அம்சங்களுடனும் பிறக்கவிருக்கும் வெய்யோன் மகனை, கர்ணன் என கருவில் கொஞ்சிக் குலவும் அவனை,  அரசியலின் பொருட்டு தன்னை அடைய நினைக்கும் கம்சனின் சிறையெடுப்பிலிருந்து தப்பிக்க முயலும்போது தவிர்க்க முடியாமல் ஆற்றில் தொலைக்கப் போகிறோம் என்பது.. !!


-  முற்றும்.. !!

ஞாயிறு, 28 மார்ச், 2021

பிழையான வரம் -3

 குந்தியின் முன் தோன்றியது அழகிய இளைஞன். பரந்தகன்ற பொன்னிற மேனி. அவனை இந்த கணம் காணும் எவரும் அவன் அழகில் விழிகளை இழந்துதான் ஆகவேண்டும்.. !!

"யா.. யார்?" திகைப்புடன் கேட்டாள் குந்தி.

"என்னை உன் வரத்தால் அழைத்தாய் குந்தி"

"நான் அழைத்தது.. சூரியனை.." 'என் குழந்தையை' என்று அவளுள் ஒரு வரியோடியது.

"ஆம். நானே அந்த சூரியன்"

சில கணங்கள் விழி விரியப் பார்த்திருந்தாள். அவன் முகம், அந்த உடலின் பொன்னொளி அவளை விழி மயங்க வைத்தது. அவனை விழிகள் விரித்து முழுவதுமாக உள்வாங்கிய பின்னரே அவள் முகத்தை நாணம் வந்தடைந்தது. 'ஆண் மகன். ஆம். அழகிய ஆண் மகன்'

"என்னை மந்திரம் சொல்லி அழைத்தாய் குந்தி" என்றான். "நீ விரும்பும் வண்ணம் குழந்தையைப் பெற வேண்டும் என்பதற்காக துர்வாச முனிவர் உனக்களித்த வரம். அந்த அறிய தவத்தை வைத்து நீ என்னை ஏவல் செய்ய அழைத்திருக்கிறாய். அதை ஏற்று நான் உனக்கு ஒரு குழந்தையை அளிக்கவே வந்திருக்கிறேன்"

அவள் மகிழ்ந்திருந்தாள். அவள் உள்ளம் உவகையில் விம்மிக் கொண்டிருந்தது. "ஆம் கர்ணா.." என்றாள்.

"கர்ணா?"

"என்னில் பிறந்து விட்ட சூரியக் குழந்தைக்கு நான் இட்ட பெயர் கர்ணன்" எனச் சொல்லிச் சிரித்தாள்.

சூரியன் குளிர்ந்து விட்டான். அவனின் பொன் வதனத்தில் புன்னகை விரிந்தது. "அக்குழந்தையை நீ உன் கரு நிறைத்து பெற்றாயா குந்தி?"

விளையாட்டான அவன் கேள்வியில் அவள் திகைத்து விட்டாள் "இல்லை.. இல்லை.. அதை நான்.... சூரிய தேவா.. தங்களையே நான் என் மகனாய்.. கர்ணன் என்று.." திணறினாள்.

"நான் உன் மகன் அல்ல குந்தி. ஆனால் நீ கேட்கும் வரத்தை நான் அளிப்பேன்"

சற்று தடுமாறி மீண்டாள் குந்தி. "ஆம். அறிவேன். தாங்கள் என் மகனாக வேண்டும். கர்ணனாக.. அதுதான் நான் கேட்கும் வரம்"

"நானே உன் மகனாக முடியாது குந்தி. ஆனால் என் அத்தனை குணங்களுடனும் ஆற்றலுடனும் என்னைப் போலவே உனக்கு நான் ஒரு மகனை அளிக்க முடியும்"

"ஆம். நான் கொஞ்சி விளையாடிய குழந்தையே எனக்கு கர்ணானாய் வேண்டும்"

"அதை நான் உனக்கு இப்போதே அளிக்கிறேன் குந்தி. ஆனால் நீ மானிடப் பெண். அதை உன் வயிற்றில் ஒரு கருவாகவே அளிக்க முடியும்"

"ஆம்.. என் கர்ணனை நான் என் வயிற்றிலிருதே பிறப்பிக்க வேண்டும். அவனை என் கருவறை நிறைத்தே இம்மண்ணில் ஈன்றெடுக்க வேண்டும். அவனை பத்துத் திங்கள் என் வயிற்றில் சுமந்து ஒரு அன்னையென நான் ஈன்றெடுத்து முலையூட்டி அவன் வயிற்றை நிறைக்க வேண்டும்"

"எனில் நான் உன்னைக் கூடி உன் கர்பப் பையில் அவனை கருவாய் விதைக்க வேண்டும்"

"அவ்வாறே ஆகுக" என்று மனமுவந்து சொன்னாள் குந்தி.. !!

 அவன் காமத்தில் கனிந்து, அழகின் மொத்த உருவமாய் நின்றிருந்த குந்தியின் கரம் பற்றினான். அவள் அவனின் உடல் வெம்மையை உணர்ந்தாள். ஆனால் அவள் உடலும் அதே வெம்மையில் தகித்திருப்பதையும் உணர்ந்தாள்.. !!

அவளின் அழகிய முகத்தையும் நிமிர்ந்து கூர்ந்த முலைகளையும் விட்டு அவனால் தன் விழிகளை மாற்ற முடியவில்லை என்பதை அவன் முகத்தைப் பார்த்து உணர்ந்தாள். அவள் உடலில் காமம் மிகுந்து பெண்மையின் அழகை பேரழகாக்கியிருந்தது. அவள் அப்பார்வையை உணர்ந்த போது  அவளில் எழுந்த நாணம் காமத்துக்கு அழகு சேர்த்தது.. !!

"பார்வை துளைக்கிறது" என்று தாழ்ந்த குரலில் சொன்னாள் குந்தி.

"காமம் கொண்ட பெண்ணின் அழகை பருகுவதல்லவா ஆண்களின் இயல்பு?" என்றான்.

நாணத்துடன் தன் செவ்விதழ்களை மடித்து வாய்க்குள் குவித்து கன்னங்களில் செம்மை படரச் சிரித்தாள். நதியின் குளிர் காற்றில் அவள் தலைமுடியும் ஆடையும் எழுந்து பரந்தது. அவள் அதை அள்ளிச் சுருட்டிக் கொண்டாள். அவன் பார்வையை தன்மீது அழுத்தமாக உணர்ந்து அவன் கண்களைச் சந்திக்க அஞ்சி நதிநீரைப் பார்த்தாள். அந்த இடம் இரவாகவே இல்லை. பகல்போல பளபளத்தது.. !!

"நதியில் நீராட எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றாள். 

அவள் மீதிருந்த பார்வையை மாற்றி நதியின் தெளிந்த நீரலைகளைப் பார்த்தான். "தெளிந்த நீரில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன"

 இரவில் குளிர்ந்திருக்கும் நதியில் இந்த அழகிய ஆடவனுடன் இணைந்து நீராடினால் எப்படி இருக்கும் என்று அவளில் ஓர் எண்ணம் தோன்றியது. "நீராடலாமா?" தன் மனதில் எழுந்த உவகையில் அந்த கேள்வியை அவள் உதடுகள் உச்சரித்தன. அதன்பின்தான் சட்டென உணர்ந்து திடுக்கிட்டு "தங்களுக்கு நீரை பிடிக்குமா?" எனக் கேட்டாள்.

"ஏன்?"

"தாங்கள் சூரியன். நெருப்பின் வடிவம். இது நீர்... பகை...."

"நான் இப்போது எடுத்திருப்பது மானுட வடிவம். இப்போது எனக்கு நீர் பகையில்லை. உன்னைப் போலவே என்னாலும் நீந்தி விளையாட முடியும்" அவன் அப்படிச் சொன்ன பிறகு அவனை சோதிக்கத் தோன்றியது அவளுக்கு.

"அதை நான் கண்டு மகிழ வேண்டும். தாங்கள் என்னுடன் நீராட வேண்டும்" என்றாள். 

"ஆணை" என்றான். 

"ஆனால் மாற்றுடை இல்லையே?"

"நீராடுவதற்கு மாற்றுடை தேவையில்லை. ஆடைகளை களைந்து விடலாம். நிர்வாணமே நீராடத் தகுந்த உடை" என்றான்.

வெட்கிச் சிரித்தாள். பின் அவள் அவன் முகத்தைப் பார்க்கக் கூசியதுபோல சற்று தயங்கி, திரும்பி நின்று தன் மேலாடையைக் களைந்தாள். அவள் மார்பின், மெல்லிய பொன்னிறத் தோல்பரப்பின் மேல் நீரின் ஒளி மின்னியது. அவனைப் பார்க்காது மெல்ல மெல்ல தன் ஆடைகளைக் களைந்தாள். மேலாடைகளைக் களைந்து பளபளக்கும் பெண்மையின் எழில் மின்ன கரையைத் தொடும் நதியலையில் பாதங்களை வைத்து உள்ளாடைகளுடன் நீரில் இறங்கினாள். உடலின் மெல்லிய மயிர்கள் கூசிச் சிலிர்த்தன. அவனை திரும்பியே பாராது நதியில் மெல்ல மெல்ல நகர்ந்து இடுப்பாளத்தில் நின்றாள். முலைக் கச்சை நனைந்து உள்ளே நீர் புகுந்தபோது அவள் முலைக் கண்களை ஊசி முனை தீண்டுவதைப் போலிருந்தது. மீண்டும் மீண்டும் சிலிர்த்து தோள்களைக் குறுக்கிக் குலுக்கியபடி திரும்பி கரையில் நின்றிருப்பவனைப் பார்த்தாள் குந்தி.. !!

விரும்பிப் படித்தவை.. !!