சனி, 24 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம் பூ -6

 

இரவு,


 கடையின் ஷட்டரை இறக்கியதும்,

"சரி.. நீ வீட்டுக்கு போ நிரு.." என்று இன்றும் சொன்னார். 


எனக்கு உண்மையாகவே கோபம் வந்தது. என்ன ஆளுயா நீ என்று சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் போலிருந்தது.


"நீங்க..?" அவரைக் கேட்டேன்.


"உனக்கே தெரியும்.." என்று அலட்சியமாகச் சொன்னார்.


கொஞ்சம் தயங்கிவிட்டு, 

"இது.. தப்பில்லையா.. அண்ணா..?" எனக் கேட்டேன்.


சட்டென்று என்னை முறைத்தார்.


"என்னது.. பேச்செல்லாம் வேற மாதிரி இருக்கு..?"


"இல்ல.. நான் போனதும்.. கிரி கேக்கும்"


"போ..! அப்படி ஏதாவது பேசினான்னா.. ஊருக்கு போயிரு.. அவளையும் கூட்டிட்டு.." என்று சொன்னார்.


நான் அதிர்ச்சியோடு அவரைப் பார்க்க.. கடையைப் பூட்டி விட்டு.. என் பக்கம் கூட திரும்பாமல் பைக்கில் ஏறி கிளப்பிக் கொண்டு டர்ரெனப் போய்விட்டார் சீனு.. !!


நான் கவலையோடு போய் வீட்டுக் கதவைத் தட்டினேன்.


‘கிரி இன்றும் அடிப்பாளோ..? பட்டினி என்பாளோ?’


கதவைத் திறந்த கிரிஜா எனக்குப் பின்னால்தான் பார்த்தாள். உடனே அவள் முகம் ஏமாற்றத்துக்குப் போனது.


"வரலையாடா ?"


"ம்கூம்.." நான் தயக்கத்துடன்  மண்டையை ஆட்டினேன்.


அவள் என்னை முறைத்தாள். அந்த முறைப்பு கடுமையாக இருந்தது. 


மதியத்திற்கு மேல் குளித்து உடை மாற்றியிருப்பாள் போலிருக்கிறது. பழைய சுடிதார் ஒன்றைப் போட்டிருந்தாள் கிரிஜா. 


 இள மஞ்சளில் சாயம் போனதைப் போலிருந்த சுடிதார் அவள் உடம்புக்கு மிகவும் டைட்டாகத் தெரிந்தது.. ! 


அதில் இறுக்கமாகி திமிறிக் கொண்டிருந்த செழுமையான மார்பகங்கள் வேகமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.


அதை இரண்டு நொடிகள் பார்த்து விட்டு நான் சட்டென தலையைக் கவிழ்த்துக் கொண்டேன்..!


"என்ன சொன்னாரு?" உஷ்ணமாகக் கேட்டாள். 


நான் மீண்டும் அவளை நிமிர்ந்து பார்த்தேன்.


"வரலேனு சொன்னாரு" என்று முனகினேன்.


அவள் என்னை இப்போது, இதே இடத்தில் சுட்டெரித்து விடுவதைப் போல மிகக் கடுமையாக முறைத்தாள்.


முறைப்பில் அவளது முட்டைக் கண்கள் வெளியே வந்து விடும் போலிருந்தது. 


அவள் பார்வையின் உக்கிரம் தாங்க முடியாமல் என் பார்வையை மெதுவாகக் கீழே இறக்கினேன். 


அவள் கழுத்துக்கு கீழே கும்மென புடைத்துக் கொண்டிருந்த அவளின் செம்மாங்கனிகள் வழக்கம் போல இன்றும் என்னை ஏதோ செய்தன.


"தட்டி கேக்க துப்பில்ல..? கேக்கறதுதானே..??"  உஷ்ணம் குறையாமலே சொன்னாள்.


"கேட்டேன்.  அதுக்கு கோபத்துல என்னை திட்டிட்டு.. ஊருக்கு போகச் சொல்லிட்டாரு "


"உன்னைவா ?"


"ம்ம்" தலையை ஆட்டினேன்.. 

"ஆனா.. தனியா இல்ல. உன்னையும் கூட்டிட்டு.. "


திகைத்துப் பார்த்தாள்.


"என்னையும் கூட்டிட்டா?"


"ஆமா.."


"என்னையும் கூட்டிட்டுன்னா..?"


"புரியலயா? நாம ரெண்டு பேரும் அவருக்கு தேவை இல்லையாம். ஊர் பக்கம் போய் சேருங்கனு சொல்லிட்டாரு"


"ஓஓ.. அப்படி வரானா அந்த ஆளு? நீ அவருகிட்ட என்ன கேட்டே.. ?"


"நீங்க பண்றது தப்புனு சொன்னேன் "


" அப்படியே சொன்னியா ?"


"இதெல்லாம் நல்லதுக்கில்லைனும் சொன்னேன்”


"நீ சரியாத்தான் சொல்லியிருக்கே.! அதுக்குதான் அப்படி சொன்னானா?"


"ஆமா.."


"ஏன் அவகிட்ட போறதுக்கு நாம எடைஞ்சலா இருக்கமாமா..?" எனக் கேட்டபடி விலகி எனக்கு வழி விட்டாள்.

 "உள்ள வா..! அதையும் பாத்துரலாம். ஊருக்கு போன் பண்ணா காலைல எல்லாரும் வந்துருவாங்க. என்ன பண்றேன் பாரு அந்த ஆளை.. அப்படியா சங்கதி? இரு இரு.. என்னை என்னன்னு நெனைச்சே? கேனச் சிறுக்கி இல்ல. காட்றேன் யாருனு.. ஓஹோ..”


“இப்பவே போன் பண்றியா கிரி?”


“ஆமா எல்லாருக்கும் பண்ணிர்றேன். எல்லாரையும் வரச் சொல்றேன். அவங்கப்பா அம்மா எல்லாரும் வரட்டும். நாயம் பேசட்டும். அப்ப தெரியும் அவன் லச்சணம் என்னன்னு”


“இந்த ராத்திரில போன் வேண்டாம். என்னமோ ஏதோனு பதறிப் போயிருவாங்க. தூங்கி எந்திரிச்சு காலைல சொல்லு. அப்பறம் வேணா வரட்டும். இப்ப போய் போன் பண்ணி அவங்க தூக்கத்தை கெடுக்கணுமா?”


“இப்படியே விடக்கூடாதுடா இதை. அவங்கதான நல்ல மாப்பிள்ளைனு சொல்லி வயசு வித்தியாசம் கூட பாக்காம எனக்கு கட்டி வெச்சாங்க? அனுபவிக்கட்டும். ஒரு ராத்திரிதானே தூக்கம் போகுது அவங்களுக்கு? எனக்கு எத்தனை நாள் தூக்கமில்லாம போயிருக்கு? விட மாட்டேன்”


“என்னமோ செய்”


வியாழன், 22 ஆகஸ்ட், 2024

மாறுதல் சில நேரங்களில் -2

 காலிங் பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது லேசாக வியர்த்தது. உள்ளுக்குள் ஒருவித படபடப்பு. 


கர்ச்சீப்பை எடுத்து முகத்தை ஒருமுறை துடைத்துக் கொண்டான் நிருதி.


பெண் எப்படி இருப்பாள்? 


"பேரு ஸ்ரீகலா. வயசு இருபத்தியாறு. ஒரே பொண்ணுதான். படிச்சிருக்கு. சொத்து பத்துனு பெருசா இல்ல. ரெண்டு வீடு இருக்கு. ஒரு வீட்டை வாடைகைக்கு விட்றுக்காங்க. இன்னோரு வீட்ல அவங்களே குடியிருக்காங்க. அந்தம்மா படுத்த படுக்கையா இருந்து போன வருசம்தான் தவறிட்டாங்க. இப்ப அப்பாவும் மகளும் மட்டும்தான். அப்பா ரிடையராகி பென்ஷன் வாங்கிட்டிருக்காரு. பொண்ணு ஒரு நகைக் கடைக்கு சேல்ஸ் கேர்ளா போயிட்டிருக்கு. கல்யாணமாகி மூணு மாசத்துல புருஷன் சரியில்லேனு விட்டுட்டு வந்துருச்சு. பொண்ணு கொஞ்சம் கலரா இருக்கும். ஒடம்பு மட்டும் கொஞ்சம் ஒல்லியாதான் இருக்கும். போய் பாருங்க. பேசுங்க. அப்பறம் உங்க முடிவை சொல்லுங்க. நீங்க இந்த மாதிரி வரீங்கனு அவங்களுக்கு போன்ல சொல்லியிருக்கேன்"


புரோக்கர் சித்ரமுத்து சொன்ன தகவல்கள் எதுவும் அவனுக்கு மறக்கவில்லை.


வீதியில் பார்த்தான். ஞாயிறின் முற்பகல், காய் கறி மார்க்கெட் சமாச்சாரங்களுக்காக வண்டி வாகன அலைச்சல்களை அதிகப் படுத்தியிருந்ததைப் போலத் தெரிந்தது. இன்னும் சிலர் இன்றுதான் ஒய்வு நாள் என்று வீதிக்கு வந்து எதிர்ப்படுபவர்களுடன் வெட்டி அரட்டையில் இருப்பதாகத் தோன்றியது.


“க்ளக்” சத்தம் ஒலிக்க, கதவு திறந்தது. 


ஆர்வமாய் நேரானான்.


தலை நரைத்த பெரியவர் ஒருவர் கதவைத் திறந்தார். கண்ணாடி போட்டிருந்ததால் முகத்தை மேலே தூக்கிக்கொண்டு அவனைப் பார்த்தார். மூக்கு நீண்டிருந்தது.


"ஸ்ரீகலா வீடுதானுங்களே?"  


"தம்பி யாரு?" என்றார். 


காது மந்தமோ என்று தோன்றியது. 

"சித்ரமுத்து சொல்லியனுப்ச்சார். பாத்துட்டு போலாம்னு வந்தேன்" சிறிது குரலை உயர்த்திச் சொன்னான். 


"சித்ரமுத்து சொன்ன ஆளா? வாங்க.. உள்ள வாங்க.." அவருக்கு காது நன்றாகத்தான் கேட்கிறது. 


கதவை விரியத் திறந்து கரை படிந்த பற்களைக் காட்டி உள்ளே அழைத்தார். 


தயங்கிவிட்டு உள்ளே போய் ஓரமாக செருப்பைக் கழற்றி விட்டான்.


வீட்டுக்குள் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. 


பெண் பிள்ளை வேலைக்குப் போய்விட்டதோ என்று  நினைத்தான். அப்படிச் சொல்லவில்லையே இன்று லீவ் போட்டுக்கொண்டு வீட்டில்தானே இருக்கும் என்று சொன்னார் சித்ரமுத்து.


டிவி ஓடிக் கொண்டிருந்தது. கூடி கும்மாளமடிக்கும் டிவி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பேன் மிக  மெதுவாக சத்தியத்துக்குக் கட்டுப் பட்டதைப்போல ஓடிக் கொண்டிருந்ததது.


வீட்டுக்குள் அவ்வளவு செழிப்பு இல்லை. 


ஹாலில் போட்டிருந்த சேரைக் காட்டினார். 

"உக்காருங்க"


உட்கார்ந்ததும் மீண்டும் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.


அவரிடம் என்ன சொல்லிக் கேட்பது என்பது சரியாகப் பிடிபடாமல் அவர் முகத்தைப் பார்த்தான். 


அவர் பக்கத்தில் இருந்த ஒரு அறைக்குள் போனார். 

"வாம்மா.. வந்து பாரு வா"


அவர் முன்னே வர அவருக்குப் பின்னால் அந்தப் பெண் வந்தாள். சுடிதார் போட்டிருந்தாள். கையில் காபித் தட்டு வைத்திருந்தாள். அதில் பிஸ்கெட் இருந்தது.


அவனைப் பார்த்து ஒரு புன்னகை காட்டிவிட்டு காபித் தட்டத்தை நீட்டினாள்.


உண்மைதான், பெண் ஒல்லியாக இருந்தாள். கொஞ்சம் நிறமாக இருந்தாள். 


காபியை எடுத்துக் கொண்டான். அவள் தன் அப்பாவுக்கும் கொடுத்தாள். அவர் சற்றுத் தள்ளி உட்கார்ந்துகொண்டார். 


அந்தப் பெண்  ஸ்ரீகலா அப்பாவுக்குப் பக்கத்தில் ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.


காபியை உறிஞ்சியபோது அந்தப் பெண், "பிஸ்கெட் எடுத்துக்கோங்க" என்றாள்.


குரல் மெலியதாக இருந்தது. 


"பரவால்லைங்க" 


அந்தப் பெண்ணை நேராகப் பார்த்தான். அவள் கொஞ்சமே கொஞ்சம் வெட்கப் பட்டதைப் போலிருந்தது. 


அவன் கண்ணோடு கண் பார்த்து அவள் சிரித்தபோது அதில் சேல்ஸ் கேர்ளின் வசீகரம் தெரிந்தது.


சிறிய கண்கள், கூர்மையான மூக்கு, சிவந்த  மெல்லிய அதரங்கள். சதைப் பிடிப்பில்லாத கன்னங்கள். கழுத்து. மார்புகூட மிகச் சிரியவைதான். மெலிந்த இடுப்பு. அளவான உயரம். இறுக்கிப் பிடித்தால் உடைந்து போய்விடுவாள் போலிருந்தது.


அந்தப் பெண்ணைப் பிடித்தது. இவள் போதும் என்றிருந்தது. 


வயசு முதிர்ச்சி பெறாத சின்னப் பெண் போலிருக்கிறாள். இவளுக்கு முதல் திருமணம் நடந்து சில மாதங்கள் கணவோடு கூடி வாழ்ந்திருக்கிறாள் என்று சொனனால் நம்புவது கொஞ்சம் கஷ்டம்.


"அம்மாவும் வரதா சொன்னாங்க?" என்றார் பெரியவர்.


"வரதாத்தாங்க நேத்து சொன்னாங்க. இன்னிக்கு காலைல இருந்தே கொஞ்சம் ஒடம்பு முடியாம ஆகிருச்சு.  மாத்திரை போட்டுட்டு படுத்துட்டாங்க. அதனால சொன்ன காரியம் நிக்க வேண்டாம்னு நான் மட்டும் வந்தேன்.  நான் பாத்துட்டு போயி மத்ததெல்லாம் அம்மாவை விட்டு பேசிக்கலாம்னுட்டு.."


அவர் தலையை ஆட்டிக்கொண்டு அமைதியாக, அவன் காபியைக் குடித்தான். 


மூவர் மட்டுமே இருப்பதால் பேச்சை எடுத்துக் கொடுக்கக் கூட ஆள் இல்லை என்று தோன்றியது.


மவுனமாக காபியைக் குடித்துவிட்டு கப்பை கீழே வைத்தான்.


அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு பெரியவரைப் பார்த்தான்.


"என் பேரு நிருதி. முழு பேரு நிருதிலிங்கம். தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போயிட்டிருக்கேன்"


அப்பா வாயைத் திறக்கும் முன்,

"சொன்னாங்க" என்றாள் அந்தப் பெண்.


அவளைப் பார்த்தான். 

"இன்னிக்கு கடை லீவு வீட்ல இருப்பிங்கனு முத்து சொன்னார். நேத்தே போன் பண்ணி இன்னிக்கு வரோம்னு வேற சொல்லிட்டோம். அதான்.."


குறுக்கிட்டு, "ஒரு நிமிசம்" என்றாள். "நீங்க என்னை பொண்ணு பாக்க வந்ததுல ஒரு தப்பும் இல்லை. எனக்கு நீங்க வரப் போறீங்கன்ற விசயத்தையே இப்ப ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் அப்பா என்கிட்ட சொன்னார். இதெல்லாம் அப்பா செஞ்ச ஏற்பாடு. முன்னாடியே எனக்கு தெரிஞ்சுருந்தா உங்களை வர வேண்டாம்னு சொல்லியிருப்பேன். ஸாரி.. வந்தது வந்துட்டிங்க. அதனாலதான்.. தப்பா நெனைச்சுக்காதீங்க. எனக்கு.. இப்ப இந்த கல்யாணத்துல உடன்பாடு இல்ல. உங்களை புண்படுத்தியிருந்தா ஸாரி கேட்டுக்கறேன். எங்களை மன்னிச்சிருங்க"


அவன் முகம் சுருங்கிப் போனது.  சட்டென பெரியவரைப் பார்த்தான்.


"மன்னிச்சிருங்க தம்பி. தப்பு என்னோடதுதான். நேத்துவரை இவ என்கிட்ட எதுவும் சொல்லல. நானும் அதை நம்பி சித்ரமுத்துகிட்ட உங்களை வரச் சொல்லிட்டேன். நான் நேத்து ஒரு விசசேத்துக்குப் போனவன் அங்கயே தங்கிட்டு காலைலதான் வீட்டுக்கு வந்தேன். நீங்க இப்படி பாக்க வரப் போறீங்கன்றதை சொன்னதும்தான் என் தலைல குண்டைத் தூக்கிப் போட்டுட்டா" என்றார். 


"அப்பா" என்று அதட்டி விட்டு அவனைப் பார்த்தாள். "ஸாரிங்க. இதுல உங்க தப்பு எதுவும் இல்லை. நான்தான் தப்பு. உங்ககிட்ட உண்மையை சொல்லிர்றேன். இப்ப சில நாளா நான் கடைல கூட வேலை செய்ற ஒருத்தரை விரும்பறேன். அவரும்  என்னை கல்யாணம் பண்ணிக்கறதா வாக்கு குடுத்திருக்கார். இதெல்லாம் அப்பாக்கு தெரியாது. நேரம் கூடி வரப்ப சொல்லிக்கலாம்னு இருந்தேன். இவரு இப்படி ஒரு ஏற்பாடு செய்வாருனு தெரியல. அதனால இன்னிக்கே சொல்ல வேண்டியதாப் போச்சு"


நிருதி எழுந்து கொண்டான். புன்னகை காட்டி, "அப்ப நான் வரங்க. வாழ்த்துக்கள்ங்க" எனச் சொல்லிவிட்டு காலில் செருப்பை அணிந்துகொண்டு விறுவிறுவென வீட்டைவிட்டு வெளியேறி பைக்கை எடுத்தான்..  !!


விரும்பிப் படித்தவை.. !!