செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

மென் மோகம் -9

 சிறிது யோசித்து, “இருந்தாலும் பேசலாம். என் பிரெண்டு வானதி இருக்கால்ல? அவ இப்படித்தான் வெக்கமே இல்லாம பேசுவா. என்கிட்டயும் கேட்டு என் வாயைப் புடுங்கவா?”


“ஹோ.. அவங்க கொஞ்சம் ப்ரீ டைப் போலருக்கு?”


“ரொம்ப ப்ரீ டைப்தான்”


“அவங்ககிட்டயும் இப்படித்தான் வெக்கப்பட்டு அவாய்ட் பண்ணிருவீங்களா?”


“சிலது சொல்லுவேன்”


“அப்ப என்னை நீங்க ஒரு பெண் பிரெண்டா நெனைச்சுக்கல? ஆணாத்தான் பாக்கறீங்க?”


“ஆமா.. நீங்க ஆண்தான?”


“ஆண்தான். ஆனா இந்த சப்ஜெக்ட் பேசறப்ப ஒரு பொண்ணா நெனைச்சு பேசிக்கலாம்னு பேசினோமில்ல?”


"அது ஓகேதான்"


"ஆனா உங்கனால அப்படி பேச முடியல?”


“முடியலன்னு இல்ல”


"அப்ப ப்ரீயா பேசலாமா?"


"ம்ம்.. ம்ம்.. இப்ப அப்படித்தான பேசிட்டிருக்கோம்?"


"ஓகே.. ஆனா இன்னும் கொஞ்சம் ப்ரீயா..  நீங்க அந்த நேரத்துல எப்படி.. எங்க.. மெத்தட் இப்படிலாம்”


“ஏய்.. இதெல்லாம் பேசணுமாப்பா?”


“வேண்டாம்னா விட்றுங்க. கட்டாயமில்லை. ஒரு ஆர்வம்தான்”


“உங்க ஆர்வத்தை தூக்கி குப்பைல போடுங்க.. ஆர்வமாம் ஆர்வம். எதெதுல ஆர்வம் வருது பாரு. என்ன இருந்தாலும் ஆம்பளை ஆம்பளைதான்” சட்டென திட்டத் தொடங்கிவிட்டாள் கமலி.. !!



“அச்சச்சோ.. கோபம் வந்துருச்சு போலருக்கு, ஸாரி கமலி.” நிருதி மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.


“கோபமில்ல. ஆனா இது என்ன குணம்? ஆண்கள் எல்லாம் இந்த விசயத்துல ஏன் இவ்ளோ சீப்பா பிஹேவ் பண்றாங்க? அது உனக்கும் இருக்கு.. உன் புத்தியை காட்றே” அவள் லேசாக படபடக்கத் தொடங்கியிருந்தாள்.


“ஓகே ஸாரி.. கூல் கமலி. டென்ஷனாகாதிங்க”


“யேய்.. நான் டென்ஷனாகல”


“கேட்டது என் தப்புதான் விட்றுங்க”


“கேக்கறதை கேட்டர்றது.. அப்பறம் தப்புனு சொல்லி மன்னிப்பு கேக்கறது.”


“ஒரு நிமிசத்துல நீங்க இப்படி பொங்கி எழுவீங்கனு நான் எதிர் பாக்கல”


“உன்னை” சிரித்து “ஆமா ஏன் நான் அப்டி டென்ஷனானேனே தெரியல”


மெள்ள மெள்ள இயல்பானாள். அவனிடம் குழைந்து பேசினாள். 


“உனக்கொண்ணு தெரியுமா?”


“என்ன சொல்லுங்க?”


“என் பிரெண்டு இருக்கால்ல வானதி?”


“ஆமா”


“அவ கொஞ்சம் அப்படி இப்படித்தான். அவ டீசன்ட்டா பேசறது என்கிட்ட மட்டும்தான்.”


“ஓஓ..”


“அவளைத் தவிர என்கிட்ட இப்படி இந்த விசயத்தை யாரும் பேசவும் மாட்டாங்க. அதனால எனக்கு சில நேரத்துல அவ மேல கோபமும் வரும். சில நேரம் கொஞ்சம் நல்லாவும் இருக்கும்”


“புரியலயே?”


“அவ என்னைத் தவிர மத்தவங்ககிட்ட எல்லாம் எப்படி வேணா பேசுவா. அவளைக் கண்டா எல்லாருமே அவ வாயைக் கிண்டுவாங்க. என்கிட்ட மட்டும்தான் அவ ஒரு லிமிட்டோட பேசுவா. அவளைப் பொறுத்தவரை அது லிமிட். ஆனா எனக்கு அதுவே ரொம்ப ஓவர்னு தோணும்”


“ஓஓ”


“பட்.. எனக்கே சில நேரம் அப்படி பேசவும் ஒரு ஆள் இருந்தா நல்லாருக்கும்னு தோணும்”


“தோணி என்ன பண்ண? பேச மாட்டிங்களே..”


“உன்கிட்ட பேச மாட்டேன்”


சிரித்தான். “சரி..”


“உனக்கு கொழுப்பு”


“ஹாஹா..”


“என்னை அந்த மாதிரி வம்புக்கிழுக்க நெனைக்கற நீ”


“ஸாரி..”


“கொன்றுவேன். பாத்துக்க. அதானே?”


“எது?”


“ஆண் பெண் உறவு.. அதைப் பத்தி என்கிட்ட பேசணும் உனக்கு.. அப்படித்தான?”


“உண்மைதான்”


“ஏன் அப்படி நெனைச்ச?”


“ஏன்னா நீங்க பெண். கல்யாணமான ஒரு பெண். அதை உங்ககிட்டருந்து கேட்டுத் தெரிஞ்சிட்டா நாளைக்கு எனக்கு ஒருத்தி மனைவியா வருவால்ல.. அவகிட்ட எப்படி நான் நடந்துக்கணும்னு தெரிஞ்சுக்க உதவும்”


“அதுக்குத்தான் உனக்கு நெட்ல படங்கள் கிடைக்குமே? அப்பறமென்ன?”


“படங்கள் கிடைக்கும். அதுல வெரைட்டிகள் இருக்கும். அதெல்லாம் சரிதான். ஆனா ஒரு பெண்ணொட உணர்வோ மனநிலையோ எது பிடிக்கும் பிடிக்காதுங்கறதோ அதுல சொல்லித் தர மாட்டாங்க. அது ஒன்லி மேட்டர்தான் தெரிஞ்சுக்க முடியும்”


அவள் அமைதியாகி புரண்டு படுத்தாள். 


“அலோ..”


“சொல்லு?”


“அதான் நான் உங்களை கேட்டேன். அது தப்புத்தான் ஒத்துக்கறேன்”


“உனக்கு என்ன தெரியணும்”


“தாம்பத்ய உறவுகள்ள ஆண் பெண் மனநிலை, விருப்பு வெறுப்புகள் இந்த மாதிரி. மத்தபடி இன்னொரு பெண்ணை செட் பண்றது என் நோக்கமில்லை. உங்களை நான் அப்படி நெனைக்கவும் இல்லை. உங்களை பிடிச்சிருக்கு. ஆனா அதுக்காக தப்பா பழக நெனைக்கல.”


“அப்படியா?”


“நான் பாத்தவரை நீங்க சராசரியான எல்லா பொண்ணுக மாதிரியும் இல்லை. அறிவு திறமை கூடவே அழகும் இருக்கு. நல்ல பெண்ணாவும் இருக்கீங்க. அதனாலதான். உங்க நட்பு எனக்கு சந்ததோசமானதுதான். அதுல கொஞ்சம் உரிமை எடுத்துகிட்டு ஓவராத்தான் போயிட்டேன் போலருக்கு. தப்புத்தான்”


“நீ நல்லா பேசற” 


“தோணினதை சொல்லிட்டேன்”


“நீயும் மோசமான ஆள் இல்லனு நான் நம்பறேன்”


“யாரையும் மோசம் பண்ற அளவுக்கு மோசமான ஆள் இல்லதான். மத்தபடி நானும் மனுசப் பயல்தானே”


சனி, 17 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம் பூ -5

 கிரிஜா தளர்வான நடையில் உள்ளே வந்தாள். 


அவள் முந்தானை இப்போது இன்னும் கீழே இறங்கி சரிந்த நிலைக்குப் போயிருந்தது. வலது மார்பு வடிவம் காட்டியது. தாலியும் கொடியும் பிணைந்த நிலையில் கழுத்தில் தொங்கி தனங்களுக்கு மேலாக ஊசலாடியது.


பேனைப் போட்டுவிட்டு கட்டிலை நெருங்கினாள். 


"நீ வரப்ப கடைலயா இருந்தான் அந்தாளு?"


"ஆமா.."


"சோறு திங்க வருவானா?"


"தெரியல.."


கட்டிலில் உட்கார்ந்து, தலையணைகளை அடுக்கி அதன் மேல் சாய்ந்தாள். கீழே தொங்கிய கால்களை எடுத்து கட்டிலில் நீட்டி வைத்தாள். 


"இப்படி பக்கத்துல உக்காந்து தேச்சு விட்டுட்டு போ.. நான் அப்படியே தூங்கிருவேன்"


"ரொம்ப வலிச்சுதுனா ஆஸ்பத்ரி போலாமில்ல?"


"அதெல்லாம் வேண்டாம். நீ தேயி"


மூடியைத் திறந்து ஐயோடெக்ஸை எடுத்தபடி அவளை நெருங்கி உட்கார்ந்தேன். 


அவள் என்னைப் பார்க்கவில்லை. கண்களை மூடிக்கொண்டாள். 


மூக்கில் மூக்குத்தி, காதில் கம்மல், கழுத்தில் தாலி, முந்தானைச் சரிவில் திமிறி எழுந்த அழகுகள், கொஞ்சம் தடித்து விரிந்த உதடுகள்.


உயரமாகத் தலையணை வைத்து கால்களை நீட்டி வைத்திருக்கும் அவளின் தோற்றத்தைப் பார்த்த என்னால் அவளை விகல்பமாகப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 


பட்டுப்போன்ற அவள் கன்னத்தைத் தொட்டு மிருதுவாக வருடினேன்.


அடிபட்ட அவளின் கன்னத்துக்கு ஐயோடெக்ஸ் தடவும் போது என்னையும் மீறிய ஒரு மெல்லிய கிளர்ச்சியுணர்வு எழத்தான் செய்தது.


 அவளின் அடிவாங்கிய ஆப்பிள் கன்னத்தை.. ஆசையோடும்.. மெலிதான மோகத்தோடும் தடவினேன்.


நான் தேய்த்ததில் அவளுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது போல் தோன்றியது.


என் கையைத் தடுத்துப் பிடித்து,

"போதும்டா.." என்றாள்.


"ஏன் கிரி..?" 


"என் கன்னம்.. என்னத்துக்குடா ஆகறது.. இத்தனை நேரம் தேச்சா..?" கிண்டலாக ஒரு புன்னகை சிந்தினாள்.


"ஐயோடெக்ஸ்தானே தேய்க்கறேன்?"


"போதும்.. ரொம்ப வேண்டாம்.."


"சரி.. நான் கிளம்பறேன்"


"போறியா?"


"ஏன் கிரி?"


"எனக்கு மனசே செரியில்லடா..  என்னடா வாழ்க்கை இதுனு இருக்கு. வாழவே புடிக்கல. செத்துட்டாத்தான் நிம்மதிபோல"


"யேய்.. பிரச்சினை இல்லாத குடும்பம் எங்க இருக்கு? மனச விடாத கிரி.."


"ப்ச்.. போடா.." சட்டென கண் கலங்கினாள்.


"சரி நீ தூங்கு.. நான் கடைக்கு போறேன்"


"எங்க தூங்கறது?" முந்தானையால் மூக்கைத் துடைத்து உறிஞ்சிக் கொண்டாள்.


"ஏன்?"


"கண்ணை மூடினா கண்டதெல்லாம்ததான் நாபகம் வருது"


நான் பரிதாபமாக அவளைப் பார்த்தேன்.

“கண்டதுன்னா..?”


பெருமூச்சு விட்டாள்.


"சரி. நீ கதவை சாத்திட்டு போயிரு.. நான் இப்படியே தூங்கறேன்"


"கதவை வந்து தாழ் போட்டுக்க"


"ஏன்டா..?"


"எதுக்கும் ஒரு சேப்டிதான்.."


"என்னை வந்து எவனாவது ரேப் பண்ணிருவான்னு நெனைக்கறியா?"


“சொல்ல முடியாதுல்ல? எதுவும் நடக்கலாம்”


“ஆமா.. அப்படியே என்னைப் பாத்து மயங்கிப் போயித்தான்.. போவான்ல போக்கத்தவன்..”


"உனக்கு என்ன குறை? பாக்க ஆளு நல்லா கும்தலக்கவாதான் இருக்க.."


"இருக்கேன் மயிரு மாதிரி.. அதையம் மீறி வந்து எவனாவது என்னை ரேப் பண்ணி.. அதனாலயாவது எனக்கு குழந்தை ஆச்சுனா அது எனக்கு சந்தோசம்தான்டா.." கரகர குரலில் சொன்னாள்.


"ஏய் லூசு.. என்ன பேசுற நீ..?"


"பின்ன என்ன? ஒரு கொழந்தை இல்லாம எவ்வளவு மானக்கேடா இருக்கு? இப்படி ஒரு வாழ்க்கை வாழவே புடிக்கலடா.. ஒரே வெறுப்பா இருக்கு"


"ஏய்.. என்ன கிரி இது.. மறுபடியும்.."


"சரி.. நீ போ. நான் கதவை சாத்திக்கறேன்" கண்களில் தேங்கிய மெல்லிய நீர்த் தேக்கத்துடன் கண்களை மூடிக் கொண்டாள் கிரிஜா. 


“கண்டதையும் நெனச்சு மனசை போட்டு குழப்பிக்காத” எனச் சொல்லிவிட்டு தளர்வான நடையில் வீட்டிலிருந்து கிளம்பினேன்.. !!


ஒரு பக்கம் ஆற்றாமை.. இன்னொரு பக்கம் இயலாமை என்கிற நிலையில் நான் இருப்பதாக எனக்குத் தோன்றியது.. !!


இதில் நான் யார் பக்கம் நிறபது? அல்லது எதற்காகப் பேசுவது? என்று ஒன்றும் புரியவில்லை.. !!


மதிய நேர வெயில் சுள்ளென்றிருந்தது. நடக்கும் போது மூச்சு வாங்கி லேசாக வியர்த்தது.


கீழே வரிசையாகக் கடைகள். டூ வீலர் ஒர்க்ஷாப், ஒரு ஸ்டேஷனரி மார்ட், ஒரு பேக்கரி, சீனுவின் எலக்ட்ரானிக்ஸ் என்று கீழே இருக்க, மேலே கம்ப்யூட்டர் சென்ட்டர், டெய்லர் கடை என்று இருந்தது.


கிரிஜாவின் கணவர் சீனு, கடையில் இருந்தார். போன் பேசிக் கொண்டிருந்தார்.


  என்னைப் பார்த்ததும் போனைக் கட் பண்ணிவிட்டுக் கேட்டார்.


"கிரி என்ன பண்றா?"


"படுத்துட்டிருக்கு"


"சாப்பிட செஞ்சாளா?"


"ம்ம்.. போய் சாப்பிட்டு வாங்க"


"இல்ல. வீட்டுக்கு போனா சண்டைதான் போடுவா. நிம்மதியா சாப்பிடக்கூட முடியாது." என்றவர் எழுந்து "ஹோட்டல்ல போய் சாப்பிட்டு வரேன். பாத்துக்க" என்றுவிட்டு கிளம்பிப் போனார். 


ஆயாசமாக இருந்தது. கணவன் மனைவி உறவு என்பது என்ன? அது ஏன் இப்படி இருக்கிறது? தாலி கட்டி ஒன்றாக வாழ்ந்தாலும் விட்டுக் கொடுத்தலோ புரிதலோ இல்லாமலே போய் விடுகிறதே. பிறகெதற்கு இந்த திருமண பந்தம்? அதற்கு என்னதான் அர்த்தம்.. ??


விரும்பிப் படித்தவை.. !!