வியாழன், 28 மார்ச், 2024

சாலையோரப் பூக்கள் -1

 விடுமுறை நாள்.. என்றாலும் ஓய்வில்லை. வாரம் முழுவதும் மில்லில் வேலை..! இப்போதோ வீட்டில் வேலை, இந்த வேலை செய்வது மிகவும் அலுப்பாக இருந்தது விழிமலருக்கு..!


'ச்சை' என்று வெறுப்புத் தட்டியது.!


அம்மா... அப்பா.. உடைகள் உட்பட... அடங்க மாட்டாமல் அவர்கள் பெத்துப் போட்ட.. அவளது இரண்டு தம்பிகள்... ஒரு தங்கையின் உடைகள் எல்லாம் இப்போது.. அவள்தான் துவைத்தாக வேண்டும். !!


நிறையத் துணிகள் இருந்ததால் கை வலியே எடுத்து விட்டது.! 


சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு.. ஒரு வழியாகத் துவைத்து.. அலாசி எடுத்துக் கொண்டு துணிகளைக் காயப் போடுவதற்காக.. மாடிக்கு எடுத்துப் போனாள். !!


மாடியில் சின்னதாக ஒரு ரூம்.. அதை வாடைகைக்கு விட்டிருந்தனர.! அதில் இப்போது தங்கியிருப்பவன், துகிலன்..!!


மலரின் அப்பாவுக்கு வேண்டியவன். இந்த ஊரில் வேலை கிடைத்து வந்து இங்கேயே தங்கி இருந்தான்..!!


இப்போது அந்த மாடி ரூம் திறந்திருந்தது.


 பக்கெட்டிலிருந்த துணிகளை எடுத்து உதறி உலரப் போட்டுத் திரும்பிய போது... அறைக்குள் அவனது முதுகு தெரிந்தது. !!


'' அலோ...'' மெள்ள அழைத்தாள்.


அவள் பக்கம் திரும்பினான். அவன் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது.


புன்னகைத்து, ''விழி மலரா.. ? வாங்க..'' என்றான்.


'' லீவா.. இன்னிக்கு. .?''


'' ஆமாங்க... நீங்க. ?''


'' லீவ்தான்..!! ''


அவளுக்கு வெள்ளிக் கிழமைதான் வார விடுமுறை.! அன்றுதான் கம்பெனியில் சிப்ட் மாறும்.!!


'' சாப்டாச்சா..?'' அவன் கேட்டான்.


''ம்..ம்ம்..! நீங்க. .?'' தலையாட்டிக் கேட்டாள்.


''ஓ..!! சாப்பிட்டேன்..!!'' எனப் புன்னகைத்தான்.


அவளைப் பொருத்தவரை.. இவன் கொஞ்சம் டீசண்டான பேர்வழி..! அனாவசியமாக அரட்டையடிப்பதோ.. வீண் வாதங்களில் ஈடுபடுவதோ இல்லை.! முக்கியமாகப் பெண்களைக் கண்டால் வழியும் பழக்கம் சுத்தமாகவே இல்லை..!!


பார்க்கும் போது.. ஒரு  'ஹாய் ' அல்லது.. ஒரு  'ஹலோ.' அவ்வளவுதான்..!!


அதனால் அவனை அவளுக்குப் பிடிக்கும்..!! அண்மைக் காலமாக அவனைக் காதலிக்கலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறாள்...!!


ஆனால் அவளுக்கு இந்தக் காதல் மீதெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அது ஒரு வகையான காய்ச்சல். அந்தக் காய்ச்சலுக்கென்று ஒரு மருந்து இருக்கிறது. அந்த மருந்தை எடுத்துக் கொண்டால்.. அதன்பின் காய்ச்சலாவது கத்திரிக்காயாவது.. ?? எல்லாம் காணாமல் போய் விடும்.. !!


''அப்பறம்...?'' என்றாள்.


''சொல்லுங்க..'' என்றான் துகிலன்.


''புக்ஸ்லாம் நெறைய படிப்பிங்களா...?''


''ம்.. ம்ம்..!!''


''என்ன புக்.. இது...?'' அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


''வெற்றுப்படகு..!!'' என்றான்.


''கதையா..?'’


''இல்லைங்க.. இது ஓஷோவோட புக்...!!''


''ஓஷோவா... யாரு அது..?'' என்று அவள் புரியாமல் கேட்க... அட்டைப் படத்தைக் காட்டினான்.


நீண்ட தாடியும், தலையில் கம்பளிக் குல்லாயுமாக ஒரு தாடி வைத்த ஆளைப் பார்த்தாள். 


''யாரு இது..?'' எனக் கேட்டாள்.


''ஓஷோ..!!'' என்றான் மறுபடியும்.


''விஞ்ஞானி மாதிரி இருக்காரு..?'' 


''விஞ்ஞானி இல்லங்க.. மெஞ்ஞானி..!'' எனப் புன்னகைத்தான், ''இதெல்லாம் அவரோட சொற்பொலிவு..!!''


''ஓ..!! இவ்ளோ பெரிய புக்கா...? எப்படி இதெல்லாம் படிக்கறீங்க..?''


''ஏன். .நீங்க படிக்க மாட்டிங்களா...?''


''படிக்கறதா..?'' சிரித்தாள், ''புக்க கைல எடுத்தாலே... நமக்கெல்லாம்.. தூக்கம் பிச்சுகிட்டு வந்துரும். ..''


''ஓ... அப்ப உங்களுக்கு தூக்க மாத்திரையே தேவைப்படாது..?'' எனச் சிரித்தான்.


அவன் சிரிப்பை அவள் விரும்பி ரசித்தாள். 


''இவ்ளோ.. பெரிய புக்கை எப்படி.. ஒரே நாள்ள படிச்சிருவீங்களா..?'' எனக் கேட்டுக் கொண்டே.. அவனது அறைக்குள் நுழைந்தாள்.


''உக்காருங்க..'' எனச் சேரை நகர்த்திப் போட்டான், ''ஒரே நாள்ள படிக்க.. இது நாவல் இல்லீங்க..! உளவியல் சார்ந்த ஆன்மிக விசயம்..! பொருமையாத்தான் படிக்கனும்..!!''


அவள் இப்போது நைட்டியிலிருந்தாள். கருப்பில் சாயம் போய் லேசாக வெளுத்து விட்ட நைட்டி. அதன் ஜிப் போய்விட்டிருந்தது. அதற்குப் பின்னூசி குத்தி கவர் செய்திருந்தாள். 


மலர் சேரில் உட்காரவில்லை. 


ஜன்னல் ஓரமாக.. அவனது புத்தக செல்ஃப் இருந்தது. அதன் பக்கத்தில் போய்.. மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தாள். எல்லாமே பெரிய.. பெரிய புத்தகங்களாக இருந்தன..!!


அவைகளில்.. மேலே இருந்த சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள்.! அதில்.. கதை புத்தகங்கள் ஒன்றைக் கூடக் காணோம்..! அதிகமாக.. அந்த தாடிக்காரக் கிழவனின் புத்தகங்களாகவே இருந்தன.!


'ஓஷோ... ஓஷோ..' என்றிருந்தது. 


அந்தக் கண்கள் பளிச்சென்று மின்னுவதைப் போலத் தோன்றியது.


 ‘இதெல்லாம் நமக்கு ஒத்து வராதவை..!’ என நினைத்துக் கொண்டு புத்தகங்களை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அவனைக் கேட்டாள்.!


''கதை புக்கெல்லாம் படிக்க மாட்டிங்களா..?''


''படிப்பேன்..!!'' என்றான் ''ஆனா.. அதிகமா இருக்காது..!!''


''ஒன்னுமே இல்ல..! நீங்க இந்தாளோட.. ஃபேனா..?''


சிரித்தான், ''ஃபேன்லாம் இல்லிங்க...! அந்தாளப் புடிக்கும்..!!''


''ஓ..!! அப்படி என்ன பண்ணிருக்கான்.. இந்த ஆளு..?''


''அதெல்லாம்.. சொன்னா.. உங்களுக்குப் புரியாது...! விடுங்க.. கதை புக் வேணுமா..?'' எனக் கேட்டான்.


''என்ன புக் இருக்கு..? இந்த.. ராஜேஷ்குமார்.. கதை இருக்கா..?'' என்று அவள் கேட்க... அவன் வாய்விட்டுச் சிரித்தான்.


''அதெல்லாம் இல்லிங்க...''


''அதுக்கு ஏன்.. இப்படி சிரிக்கறீங்க..?'' எனத் திரும்பி அவனைப் பார்த்துக் கேட்டாள். 


அவன் சிரிப்பு அவளுக்கு வியப்பாக இருந்தது.


''இல்ல.. ராஜேஷ்குமார் நாவல் கேட்டிங்களா.. அதான்..! உங்களுக்கு க்ரைம் ஸ்டைல்தான் புடிக்குமா..?'' என்று கேட்டான்.


''ஏன்.. க்ரைம் கதை.. சூப்பராத்தான இருக்கும்..? அதும் ராஜேஷ்குமார் கதைகள்.. டீ வில கூட சீரியலா வருதே.. நான் அதெல்லாம் பாப்பேன்..!!''


''அய்யோ.. நான் தப்பா சொல்லலீங்க..!'' அவன் விவாதம் பண்ணத் தயாரில்லாதவன் போலச் சொன்னான். ''அந்த ரகமான கதைகள்.. என்கிட்ட இல்ல..''


''வாங்கி வெக்கலாமில்ல..! சரி.. வேற எந்த ரகமான கதை இருக்கு..?''


''அதெல்லாம் நீங்க படிக்க மாட்டிங்கனு நெனைக்கறேன்..'' என்று புத்தக செல்ப் பக்கத்தில் வந்தான்.


''ஏன்.. என்ன மாதிரி கதை..?''


''சமூக நாவல்..!!'' என்று அவன் செல்ப்பின் அடியிலிருந்து சில புத்தகங்களை உருவ.. இரண்டு புத்தகங்கள் தவறிக் கீழே விழுந்தன


''புதுமைப் பித்தன்.. ஜெயகாந்தன்.. கா நா சு.. தி ஜா.. பிரபஞ்சன்.. வேணுகோபால்.. அசோகமித்ரன்.. எண்டமூரி.. வைக்கம் முகமது.. ராகுல் ஜி.....'' என அவளுக்கு அறிமுகமே இல்லாத பெயர்களை அவன் சொல்லிக் கொண்டே போக.... 


அவள் குனிந்து கீழே விழுந்த.. இரண்டு புத்தகங்களையும் எடுத்தாள்..!! 


அதில் ஒன்று.... 'காம சூத்ரா..!!'



 என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !! 

ஞாயிறு, 17 மார்ச், 2024

சிபு -5

 முதலில் அவன்தான் வந்தான். திரும்பி வந்தபோது அவன் கூடாரம் சற்று அமிழ்ந்திருந்தது. விரைப்பான புடைப்பில்லை. ஆற்றுப்படுத்திவிட்ட மென்புடைப்பு. 


அஸ்மா சிறிது கூசிய நடையுடன் வந்தாள்.


 அவள் முகம், சிவந்து தலை கலைந்திருந்தது. ஈர உடையில் பச்சைப் புற்களும் மண்ணுமாய் இருந்தது. கை கால்களில் எல்லாம் மணல் திட்டுகள். பின்கழுத்து, முதுகெல்லாம் மணல் அப்பியிருந்தது.  ஆனால் மிகுந்த வெட்கத்திலிருந்தாள். 


என்னைப் பட்டும் படாமல் பார்த்தாள்.


 வெகு சில நொடிகளில் தொட்டுக்கொண்ட அந்தக் கண்களில் கள்ளத்தனம் தெரிந்தது. 


அவள் மீண்டும் சென்று நீரில் இறங்கினாள். உட்கார்ந்து பின் படுத்து அப்படியே நீரில் அமிழ்ந்தாள்.


 அவள் துணைக்கென மீண்டும் அவன் சென்றான். பேசிக்கொள்ள இயலாத சூழலை நீர் விளையாட்டில் கடந்தனர். சிறிது நீந்தினர்.


 அவள் உடைகளைக் கழுவினாள். அவனும் அங்கங்கே கழுவிவிட்டான். 


அவள் தலையைத் தவிர தன் உடலின் மொத்த பாகத்தையும் உடையையும் இயன்ற அளவு கழுவித் துடைத்து கன்றிச் சிவந்த முகத்துடன் மேலே வந்தாள். 


"இங்க யாராவது வருவாங்களா?" என்று என்னைப் பார்த்து கூசியபடி கேட்டாள். 


"ஏன்?" என்றேன். 


"இல்ல.. ட்ரஸ் ரொம்ப ஈரம். கொஞ்சம் காயணும்"


"ஆனா வேற ட்ரஸ் இல்லையே?"


"உங்க டவல் தருவீங்களா?"


உடனே கழுத்தில் சுற்றியிருந்ததை எடுத்து நீட்டினேன். 


அவளிடம் அதைக் கொடுத்தபின்தான் நீரில் அலசிக் கொடுத்திருக்கலாம் எனத் தோன்றியது. 


"குடுங்க அலாசி தரேன்" என்றேன். 


"பரவால" என்று நீரில் நனைந்த உடையின் சரக் சரக் உரசலுடன் நடந்து மீண்டும் நாணற்புதரின் பின்னால் மறைந்தாள். 


அவன் செல்லவில்லை.


 தன் ஜட்டியில் இருந்த தண்ணீரைச் சுருட்டி பிழிந்தபடி  என்னைப் பார்த்துச் சிரித்தான். 


"செம நண்பா" என்றான்.


"எஞ்ஜாய்"


"முடிஞ்சுது"


"என்ன?"


கண்ணடித்தான் "செம்ம பீசு. சும்மா ஜிவ்வுனு இருக்கா. சான்ஸே இல்ல" 


அவள் சில நிமிடங்கள் கழித்து மறைவிலிருந்து வந்தாள். 


நிறைந்த வெட்கத்தில் அவள் முகமும் உடலும் கூசியிருந்தது. என் துண்டு மட்டும்தான் அவள் உடலில்.


 நீர் சொட்டும் அவள் உடைகள் அனைத்தையும் கையில் சுருட்டிப் பிடித்துத் தொங்கவிட்டு, தன் முன்னுடலை மறைத்தபடி எடுத்து வந்தாள்.


 ரோட்டிலிருந்து ஆற்றுக்கு இறங்கும் வழிப் பாதையைப் பார்த்து விட்டு மெல்ல நடந்து போய் ஆற்றில் இறங்கி குந்தி உட்கார்ந்து தன் உடைகளை அலாசி எடுத்து பிழிந்து தோளிலிட்டபடி மேலே வந்தாள். 


அந்த நேரத்தில் திகைத்திருந்தது நான் மட்டுமல்ல.


 பாஷா திகைப்புடன் மெல்லிய பதட்டத்தையும் அடைந்ததைப் போலிருந்தது. ஆனால் அவள் அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.


 தன் ஈர உடைகளை உதறி அருகில் இருந்த சிறிய பாறைமீது விரித்துக் காயப் போட்டாள். அவளின் ஜட்டி பிரா சிம்மீஸ் எல்லாம்கூட அதிலிருந்தது. 


என் துண்டும் அவ்வளவு பெரியதில்லை. அது அவளின் நெஞ்சின் விளிம்பிலிருந்து மேல் தொடைவரைதான் மறைத்தது. 


அந்தத் துண்டால் முடிந்தது அவ்வளவுதான். 


அப்படிப் பார்க்க அவள் ஒரு பிட்டு படக் கதாநாயகி போலிருந்ததை என் கண்கள் கவனிக்கத் தவறவில்லை. 


அவள் எங்களைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தபோதுதான் நான் சொன்னேன். 


"உன்னோட பனியனை குடு பாஷா போட்டுக்கட்டும்"


உண்மையில் அவனுக்கு அது ஒரு அதிர்ச்சியான காட்சியாகவே இருந்தது.


 அவன் வாய், திறந்த நிலைக்குச் சென்றிருந்தது. அவன் சிறிது பதட்டத்துடனே தன் டீ சர்ட்டையும் ஜீன்ஸையும் எடுத்து கொடுத்தான். 


"இத போட்டுக்க ப்ளீஸ்"


அவள் மறுக்கவில்லை. ஆனால் இந்த யோசனை ஏன் முன்பே வரவில்லை என்பதைப்போலப் பார்த்தாள்.


 உணர்ச்சிவசப் பட்டு காதலின் உச்சத்தில் காமத்தையும் சுகித்துவிட்ட அவர்களுக்கு யோசனை வராமல் போனதில் வியப்பொன்றுமில்லை.


 முதல் அனுபவம். அதுவும் ஒரு பரிச்சயமற்ற சூழலில். 


இயற்கை சூழ்ந்த திறந்தவெளி உறவு. உடலும் மனமும் அதிலிருந்து மீளாத நிலையில் இது தோன்றாதது சாதாரணம்தான். 


அவள் மீண்டும் சென்று மறைந்து, திரும்பி வந்தபோது அவனின் ஜீன்ஸையும் பனியனையும் அணிந்திருந்தாள். தொளதொளத்த பனியனில் உள்ளாடையில்லாத மார்புருளைகளின் முனைகள் கண்களை உறுத்தவே செய்தன. 


அதன்பின் சுருட்டிக் கட்டிய கூந்தலைக்கூட அவிழ்த்துப் பிரித்து முதுகில் பரத்தி விட்டாள் அஸ்மா.. !!


தன் உடைகள் அணியத் தகுந்த அளவுக்கு காய்ந்தபின் எடுத்துச் சென்று அணிந்து அவன் உடைகளைக் கொண்டு வந்து கொடுத்தாள்.


 அவன் வாங்கிப் போட்டுக் கொண்டபின் ஆற்றிலிருந்து கிளம்பினோம். 


திரும்பி வரும்போது அஸ்மா மிகவும் களைத்திருந்தாள். அவள் உடலும் முகமும் மிகுந்த சோர்வை வெளிக்காட்டியது. 


அவன் கை பிடித்து தொங்கியபடி நடந்தாலும் பல இடங்களில் உட்கார்ந்து ஓய்வெடுத்தாள். 


ஒரு வழியாக என் வீட்டுக்கு வந்து உடை மாற்றி சிறிது படுத்து ஓய்வெடுத்த பின்பே இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.. !!


அதன்பின் மீண்டும் சுமார் நான்கு வருடங்களுக்குப் பின்னர், தனிப்பட்ட காரணத்துக்காக சேலம் சென்றபோது நான் ஏதேச்சையாக அஸ்மாவைச் சந்தித்தேன்.


 தன் தாயுடன் பொருட்கள் வாங்க வந்திருந்தாள்.


 அவள் அம்மாவிடம் ஓர் ஆண் குழந்தை இருந்தது.


 என்னைப் பார்த்த சில நொடிகளில் அடையாளம் கண்டு கொண்டாள். 


நலன் விசாரித்தாள். நானும். 


பின்னர் தன் குழந்தையைக் கையில் வாங்கிச் சொன்னாள். 


"என் பையன். ரெண்டு வயசாகுது"


"பேரு?" எனக் கேட்டுவிட்டு 'பாஷா' என்று எதிர் பார்த்தேன்.


"நத்தீஃப்" என்றாள். 


தன் வீடு அருகில்தான் என்று என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தாள்.


 வீட்டுக்குள் ஒரு குட்டி நாய் காலடியிலேயே சுற்றிச் சுற்றி வந்தது. அதுவும் என்னுடன் பாரபட்சமின்றி ஒட்டிக் கொண்டது. விசிலடித்து அதை தடவிக் கொடுத்தேன்.


 நான் அவளின் இனிமையான உபசரிப்புக்குப் பின் கிளம்பி வரும்போது அந்த நாய்க்குட்டி என்னுடனேயே காம்பவுண்டு கேட்டைத் தாண்டி ஓடி வந்தது. 


நான் நின்று "போ" எனச் சொன்னபோது கையில் குழந்தையுடன் நின்று அதை அழைத்தாள் அஸ்மா.


"சிபு.. கம் ஹியர்.. !!"





- சுபம்.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

விரும்பிப் படித்தவை.. !!