ஞாயிறு, 9 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -12

                    அரைமணி நேரம் கழித்து இருவரும் இருள் நிறைந்த காட்டைவிட்டு வெளியேறி வந்த வழியே.. திரும்பி நடந்தனர்.

அவன் கை கோர்த்து நடந்தவாறு கேட்டாள் லாவண்யா.

''இப்ப சொல்லு.. என்னை லவ் பண்றயா.. நந்தா..?''


''தெரியல..'' என்றான்.


''ஆனா.. என்னை மேட்டர் பண்ணனும்..?''


''ம்.. ஆமா..''


''அப்ப புடிச்சிருக்குதான..?''


''தெரியல..''


''ஏய்.. புடிக்காதவள மேட்டர் பண்ணுவியா..?''


''சரி.. நீ என்னை லவ் பண்றியா..?''


''தெரியல..'' எனச் சிரித்தாள்.


“நீதான சொன்ன என்மேல ஒரு லவ்வுனு?”


“அதுக்கு நீதான் கல்யாணம் பண்ணிக்குவியானு கேக்கறியே?”


“கல்யாணம் வேண்டாம்னா?”


“அப்ப பண்ணலாம்”


பஸ் ஸ்டாப் போனதும்,

''சரி.. நான் இப்படியே போறேன் லாவண்யா..'' என்றான் நந்தா.


''ஏய்.. வீட்டுக்கு வா.. சாப்பிட்டு போவியாம்..?'' அவன் கை பிடித்து அழைத்தாள்.


''அடுத்த தடவ சாப்பிட்டுக்கறேன்.. நீ போ.. நிம்மி வந்துருப்பா..!'' அவளது கையை விலக்கி விட்டான்.


''போறியா..?'' அவனை நெருங்கி நின்று கேட்டாள்.


''ம்..ம்ம்..!!''


''லவ் பண்ணலாம்தான..?'' மீண்டும் கேட்டாள்.


'’பண்ணலாம்..''


''எனக்கு உன்னை புடிச்சிருக்கு..''


''அப்படியா..?''


''ம்..ம்ம்..!! உனக்கும் என்னை புடிச்சிருக்குதான..?''


''சரி.. நான் போறேன்..''


''பதிலே சொல்லல..?''


''சரினு சொன்னனே..''


''அப்ப லவ் பண்ணலாந்தான..?''


''ம்..ம்ம்..!! உன்னை மறுபடி ரெண்டு நாள் கழிச்சு பாக்கறேன்..!!''


''ரெண்டு நாளா..?''


''ஏன்..?''


''இப்பதான்.. நாம லவ் பண்றமில்ல..? டெய்லி பாக்க முடியாதா..?''


சிரித்தான். ''சரி.. பாக்கறேன்..!! நீ போ..!!'' என்றுவிட்டு.. நடந்தான் நந்தா..!!


நந்தா வீட்டுக்குப் போனபோது சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் விழிமலர்.


அவளை இடித்துக்கொண்டு அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

''என்ன பாக்கற..?''


''ம்.. வெங்காயம்..'' என்றாள்.


''கொண்டா ரிமோட்ட..''


''மூடிட்டு போடா...''


''ஏ.. குடுறீ..'' அவள் கையில் இருந்த ரிமோட்டைப் பிடுங்கினான்.


சமையற்கட்டில் உணவு போட்டுக் கொண்டிருந்த அம்மா.. அவனை எட்டிப் பார்த்துக் கேட்டாள்

''சாப்பிடறியாடா..?''


''ஆமா..'' எனக் கத்தினான்.


''இந்தா.. வா..''


''போட்டு வெச்சுரு..'' அவனுக்கு ஏற்ற படமாக.. எந்தச் சேனலிலும் போடவில்லை.


ரிமோட்டைத் தூக்கி விழிமலரின் மேல் வீசினான்.

''இந்தா.. ஒரு மயிறும் நல்லால்ல..''


அவன் எழுந்தான்.


''டேய்.. பணம்டா..?'' எனக் கேட்டாள் விழிமலர்.


''என்னா பணம்..?''


''நேத்து கேட்டேனே..?''


''மொதல்ல.. சாப்பாடு..'' என்றுவிட்டு சமயலறைக்குப் போனான் நந்தா.. !!


சாப்பிட்டதும்.. தம்மடிக்க மொட்டை மாடிக்குப் போனான் நந்தா.


மாடி ரூம்.. அமைதியாகியிருந்தது.


மொட்டை மாடிச் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு.. லாவண்யாவைப் பற்றி யோசித்தவாறு தம்மடித்தான்..!


அவனுடைய அக்கா சொன்னது போல… லாவண்யாவின் மூக்கை மட்டும் சற்று ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்.. அவளுக்கு அருமையான ட்ரக்சர் இருக்கிறது.

அதற்காகவே அவளை லவ் பண்ணலாம். அவளை எப்போது புடிக்காமல் போகிறதோ.. அப்போதே கழற்றி விட்டு விடலாம்..!


லாவண்யாவைக் காதலிப்பது என முடிவு செய்து கொண்டு அவன்.. தம்மடித்து முடித்துக் கீழே போக.. டிவியை ஆப் பண்ணிவிட்டு.. அறைக்குள் போய் பாயை விரித்துப் படுத்திருந்தாள் விழிமலர்.


அவனது தம்பி.. தங்கை இருவரும்.. அடுத்தத்து படுத்திருக்க.. அக்காளின் அருகில் படுத்தான் நந்தா.


''மலரு..''


''ம்..ம்ம்..?''


''காசு கேட்ட..?''


''குடு..''


''எவ்ளோ..?''


''ஐநூறு..''


''காலைல வாங்கிக்க...''


'' இப்பவே குடு..''


''இப்ப வாங்கிட்டு எங்க போகப் போற..?''


''எங்கயும் போகல.. காலைல நீ தூங்கிட்டிருப்ப.. அனாவசியமா.. உன்ன எதுக்கு எழுப்பிட்டு..? இப்பவே குடுத்துட்டா.. மேட்டர் சால்வ்தான..?'' என்றாள்.


அவன் படுத்துக்கொண்டே பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

''சம்பளம் வாங்கினதும் தந்துடனும்..''


''ம்..ம்ம்..!!'' பணத்தை வாங்கி.. அவளது மார்புக்குள் சொசொருககஅ கொண்டாள்.

 ''ஏன்டா.. இன்னிக்கு போகலியா..?''


அவனது ஒரு காலைத் தூக்கி அவள் மீது போட்டான்.

''எங்க..?''


''திருடறதுக்கு..?'' சிரித்தாள்.


''ரெஸ்ட்..'' என்றான்.


''திருடறதுக்கெல்லாமாடா ரெஸ்ட்டு..?'' என்று அவன் பக்கம் சரிந்து.. அவனைப் பார்த்துப் படுத்தாள்.


''திருடறதுன்னா.. சும்மானு நெனச்சியா..?''


''ரொம்ப கஷ்டமா...?''


''ஆமா...''


''சரி.. என்னெல்லான்டா திருடுவீங்க..?''


'' அது.. தொழில் ரகசியம்..''


''எப்படி..? இந்த வீட்டை ஒடைச்சு.. வீடு பூந்து திருடுவீங்களா..?'' லேசாகச் சிரித்தவாறு கேட்டாள்.


''இதுவரை.. அதெல்லாம் பண்ணதில்ல..''


'' அப்பறம்..?''


''உனக்கெதுக்கு.. அதெல்லாம்..! பேசாம தூங்கு பாக்கலாம்..!''


''சொல்லுடா..! நான் போலீஸ்ல எல்லாம் சொல்ல மாட்டேன்..!'' என்றாள்.


''நீ சொன்னாலும் ஒரு மயிரும்.. புடுங்க முடியாது..''


''போலீஸ் கைல சிக்கி பார்ரீ.. மவனே.. அப்ப தெரியும்..?''


''போலீஸா..?'' சிரித்தான் ''போடி.. லூசு..! நீதான் போலீஸ்க்கு பயப்படனும்.. நாங்க அப்படி இல்ல..''


''சும்மா அளக்காதடா..! என்ன திருடுவீங்க... எப்படி திருடுவீங்கனு சொல்லு..?''


''ஏ.. எங்க டார்கெட் எல்லாம் கவர்மெண்ட் சொத்துதான்..! மக்கள் சொத்துல கை வெக்க மாட்டோம்.! நாங்க செஞ்சு முடிச்சா.. எங்களுக்கு காசு வரும்..!''


''அடப்பாவி.. அரசாங்க சொத்துலயா கை வெப்பிங்க..? மாட்டிட்டா கொன்றுவாங்களே..?''


''மாட்ட மாட்டோம்..! எங்களுக்கு பிளான் போட்டு தரதே.. அது சம்பந்தப்பட்ட ஆளுகதான்..! கரெக்ட்டா.. கெச் போட்டாப்ல செஞ்சு முடிச்சிருவோம்..!!''


''ஓ.. அப்ப நீங்க அல்லக்கைங்களா..?''


''ஆமா..''


''மெயின் கைங்க... யாருடா..?''


''அரசியல் ஆளுங்க...''


''யாராரு..? சொல்லேன்..?''


''அத தெரிஞ்சு உனக்கு ஒரு மயிரும் ஆகப்போறதில்ல..! பொச்ச கட்டிட்டு தூங்கு..!!'' என்றான்.


''பரதேசி..'' என்று அவள் மேல் கிடந்த அவன் காலைத் தள்ளி விட்டாள், ''இங்க என்ன தொறந்து போட்டா படுத்திருக்காங்க..?''


''ஆமா.. உன்னோட பிரெண்டு யாரையாவது லவ் பண்றாளா..?'' என்று கேட்டான் நந்தா.


''எந்த பிரெண்டு. .?'' அவனைப் பார்த்தாள்.


'' அவதான்.. காக்கா மூக்கி..?''


சிரித்தாள் ''இல்ல.. ஏன்டா..?''


''சும்மா..! ஒரு டவுட்டு.. கேட்டேன்...!! ஆமா.. நீ..?''


''பெரிய லவ்வு.. மூடிட்டு தூங்கற வேலைய பாருடா..'' எனப் புரண்டு படுத்தாள் விழிமலர்..!!


சிறிது அமைதிக்குப் பிறகு...

மீண்டும் அவள் இடுப்பில் தூக்கிக் காலைப் போட்டான் நந்தா.

'' ஏய்...''


''ஏன்டா...? மூடிட்டு தூங்க மாட்டியா..?'' எரிச்சலாகக் கேட்டாள்.


அவளது எரிச்சலை அவன் மதிக்கவே இல்லை.

''மாடி வீட்டு மச்சான்.. இன்னும் செட்டாகலயா..?'' எனக் கேட்டான்.


அவன் காலைத் தள்ளி விட்டாள்.

''அடங்கவே மாட்டியாடா.. பரதேசி...''


''ஏய்.. சொல்லுடி...''


''என்ன சொல்லனும்...?''


''மாடி வீட்டு...''


''போடா பரதேசி..! ஏதோ பேசினத பாத்துட்டு முடிவே பண்ணிட்ட..? அப்படியெல்லாம் ஒரு மயிரும் இல்ல... கொஞ்சம்  மூடிட்டு தூங்கு.. என்ன..? என் எரிச்சலை கெளப்பாத..''


''ஏய்ய்.. மலரு.. உன்கிட்ட ஒன்னு சொல்லலாம்னு நெனைக்கறன்டி..''


''ஒரு மயிரும் நீ சொல்ல வேண்டாம்..! இறுக்கி கட்டிட்டு தூங்கு.. சரியா..? எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்கனும்..!!'' என்றாள்.


''போடி.. மயிரு...'' எனக் கடுப்புடன் சொல்லிவிட்டு அமைதியானான் நந்தா.


லாவண்யாவைக் காதலிப்பது பற்றி.. இவளிடம் அபிப்ராயம் கேட்கலாம் என நினைத்தான்.!!


ஆனால்.. அவனது பேச்சைக் கேட்க... அவள் தயாராக இல்லை. இனி அது அவசியமும் இல்லை.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!