வியாழன், 18 ஜூன், 2020

இனி இவள் -2

''இப்ப நா மட்டும்..'' எனச் சொன்ன செல்வியின் முகம் கலையிழந்து சோகம் தாங்கியிருந்தது. 

இவ்வளவு நேரமும் சிரிப்புடனிருந்த அவளின் முக மாற்றம் எனக்குள் மெலிதான ஒரு வருத்தத்தை உண்டாக்கியது.

''உங்களுக்கு பேமிலி இருக்கும்.. குழந்தைங்கள்ளாம்கூட இருக்கும்னு நெனச்சேன் செல்வி" என்று அவள் முகம் பார்த்துச் சொன்னேன்.

இதழ்களைத் தடவிக் கொண்டு வறட்சியாக சிரித்தாள்.
''ப்ச்ச்.. எதுமே இல்ல..''

"என்ன பிரச்சனை? "

"அது வேண்டாம்.  விடுங்க. விட்டாச்சு. அவ்வளவுதான்" என்றாள்.. !!

அதன்பின் அதைப் பற்றிப் பேசவில்லை. பேச்சை மாற்றிப் பொதுவாகப் பேசியபடி ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். 

அதன்பின் செல்வியின் முகம் மீண்டும் இயல்புக்கு வந்து விட்டது. ஆனாலும்  என் மனதின் ஓரத்தில் அவளின் கலையிழந்த முகமே தங்கியது.. !!

மீண்டும் பஸ் ஸ்டாப் போகும்போது செல்வி என்னிடம் கேட்டாள்.
''அந்த பழைய ரூம எப்ப காலி பண்ணீங்க.?''

''அது.. ஒரு வருசத்துக்கு மேலயே இருக்கும்..''

''நான் ஒரு தடவ உங்க பழைய ரூம்க்கு போனேன்.  உங்கள பாக்கலாம்னு..  ஆனா நீங்க காலி பண்ணிட்டு போய்ட்டதா சொன்னாங்க. எங்க இருப்பீங்கனு கேட்டுப் பாத்தேன். அவங்களுக்கு உங்க புது அட்ரஸ் தெரியல..''

''என்னை பாக்கவா.. எப்ப போனீங்க?" லேசான வியப்புடன் அவளை கேட்டேன்.

''ம்ம்.. ஒரு ஆறு மாசம் இருக்கும்..! இப்ப நீங்க தனியாவா இருக்கீங்க..?''

"ஆமாங்க.. நான் மட்டும்தான். சிங்கிள்  ரூம்.''

''கூட யாரும் இல்லயா..?''

''ம்கூம்.. இல்ல.. அவன் போனதோட சரி.. இப்ப யாருகூடயும் கூட்டு இல்ல..''

மறுபடி பஸ் ஸ்டாப் போய் நின்றதும் ஒரு பஸ் வந்தது.

''பஸ் வருதுடி.. போலான்டி..'' என்று பரபரத்தாள் புவனா.

''ஏன்டி பறக்கற போலாம் இரு..'' என்றாள் செல்வி.

''அவன் போன் பண்ணிட்டே இருக்கான்டி டென்ஷனாகிட்டான்..''

''அப்பன்னா நீ போ.. நான் வரல..'' 

"ஏய்.. என்னடி.. நீயும் வரேன்ன?"

"ஆமா.. போ.."

''வாடி..!''

''இன்னொரு நாள் வரேன்..''

பஸ்ஸில் ஆட்கள் ஏறத் தொடங்கினர்.

''சரி.. அப்ப நான் போகட்டுமா.. ??" புவனா போகத் தயாராகி விட்டாள். 

''போ..!'' என்றாள் செல்வி. 

''ஓகே பை..! நா போன் பண்றேன்.!'' என்றவள் என்னைப் பார்த்து ''பைங்க..!'' எனச் சொல்லி கையை ஆட்டி விட்டு ஓடிப் போய் பஸ் ஏறிக் கொண்டாள்.. !!

பஸ் போனதும் செல்வியைக் கேட்டேன்.
''ஏங்க நீங்க போகல .?''

''இல்லங்க.. ரொம்ப நாள் கழிச்சு உங்கள பாத்துருக்கேன். எனக்கு உங்கள பாத்தது ரொம்ப சந்தோஷம்.  அவ வீட்டுக்கு எப்ப வேணா போகலாம். ஆனா இப்ப விட்டா அப்றம் உங்கள புடிக்க முடியாது..'' எனச் சிரித்தாள்.

''நெஜமாவே.. உங்க பிரெண்டு ரெண்டு பேர லவ் பண்றாங்களா..?' என நான் லேசான தயக்கத்துடன் கேட்டேன்.

பக்கெனச் சிரித்தாள் செல்வி.
''ஏங்க.. ட்ரை பண்லான்னு இருந்தீங்களா..?''

''மனசுல ஒரு ஓரமா ஆசை வந்துச்சு..'' என்று நெளிந்தபடி நானும் சிரித்தேன். "ஆளும் நச்சனு இருக்கு"
 
''அவள்ளாம் உங்களுக்கு ஒத்து வரமாட்டா.. விடுங்க..!!"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

'' அவ அப்படித்தான். அவளை விடுங்க.  என்னை உங்க ரூம்க்கு கூப்பிட மாட்டிங்களா..?'' என்று அவளே கேட்டாள்.

''ஓஓ.. தாராளமா.. இப்பயே வாங்களேன் போலாம்..!'' என்றேன்.

''நான் வரலாம் இல்ல..?''

''என்னங்க இப்படி கேக்கறீங்க..? வாங்க..!'' எனக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது.. !!

என் ஏரியா பஸ் வர இருவரும் ஏறினோம். உட்கார சீட் இருந்தது. 

நான் தனியாக உட்கார போக.. அவளே என்னைக் கூப்பிட்டு தன் பக்கத்தில் உட்காரச் சொன்னாள். டிக்கெட் நான் எடுத்தேன். 

என் உடம்பு அவள் உடம்பில் பட்டபோது.. என்னையும் மீறி எனக்குள் ஒரு பரவசம் உண்டானது. பஸ்ஸின் ஜன்னல் காற்றில், அவள் கூந்தல் மயிரிழை வந்து என் முகத்தில் மோதிப் போனது.

 பஸ்ஸில் ஆட்கள் இருந்ததால் எங்கள் பர்ஸ்னல் பற்றி அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.

பொதுவாக பேசியபடி பயணித்தோம்.. !!

நான் அவளை பார்த்துப் பேசினேன். அவளும் ஜன்னலில் பார்க்காமல் என் பக்கம் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசினாள்.

 எங்கள் கண்கள் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டதில்.. எனக்குள் என்னென்னவோ ஆனது. அவள் உதடுகளின் அசைவையும்.. கண்களின் ஈர்ப்பையுமே அதிகம் பார்த்தேன்.! 

அவள் அதை உணர்ந்தாளா இல்லையா என்று தெரியவில்லை.  ஆனால் என்னிடம் மிகவும் அன்னியோன்யம் காட்டினாள்.  

இறங்குவதற்கு கொஞ்சம் முன்னால் சொன்னாள்.
''என்னை வாங்க போங்கனு சொல்லாதிங்க.. வா போனே பேசுங்க..!''

''இல்ல.. ஆரம்பத்துல இருந்தே.. அப்படி கூப்பிட்டு பழக்கமாகிருச்சு..'' என்றேன்.

''மாத்திக்குங்க.. எல்லாம் ஆரம்பத்துல இருந்த மாதிரியேவா இருக்கு..?''

''அப்படியா..?'' சிரித்தேன்.

''ம்ம்..! அவன பண்ணதுக்கு.. பேசாம நான் உங்கள லவ் பண்ணிருக்கலாம்.. என் லைப் நல்லாருந்துரூக்கும்..!''  என்று அவள் இயல்பாகச் சொன்னாள். 

எனக்கு ஒரு நொடி.. திகைப்பாக இருந்தது. முன்பே அவள் இப்படி சொன்னவள்தான். தன் காதலன் முன்பாக இப்படிச் சொல்லி கிண்டல் செய்வாள். ஆனால்  இப்போதும் அவள் அதைச் சொல்வது எனக்கு வேறு மாதிரி உணர்வைக் கொடுத்தது. 

''செல்வி.. என்ன சொல்ற..?''

''ஹ்ம்ம்.. இதுக்கு மேல.. என்ன சொல்றது..?'' எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அவள் திரும்பி வெளியே பார்த்தாள்.  

பஸ் ஸ்டாப் பக்கத்தில் வந்து விட்டதால் நான் எழுந்தேன்.
''ஸ்டாப் வந்தாச்சு.. வாங்க...''

முந்தானையே சுருட்டிப் பிடித்து கொண்டு எழுந்தாள்.
''வாங்க இல்ல.. வா..!'' என்று எனக்கு மட்டும் கேட்கும்படி மிகவும் சன்னக் குரலில் சொன்னாள். 

எனக்குள் எங்கோ மணியடித்தது.. !!

"சரி. வா" என்று மெல்லச் சிரித்தபடி படியை நோக்கிப் போனேன்.. !!

பஸ் விட்டு இறங்கி கூல்ட்ரிங்க்ஸ்ம் கொஞ்சம் ஸ்னாக்ஸ் அயிட்டங்களும்
வாங்கிக் கொண்டேன். 

அவளை என் ரூம்க்கு அழைத்துப் போனேன். தனி ரூம் என்பதால் பயம் இல்லை.  பூட்டை திறந்து செல்வியை உள்ளே அழைத்தேன்.. !!

''வா செல்வி"

 புன்னகை முகமாக என் பின்னால் உள்ளே வந்தாள். அறையை நோட்டம் விட்டாள். கசகசவென இருந்தவைகளை ஒதுக்கி வைத்தேன்.  அறை வாடகை, பாத்ரூம் வசதி, தண்ணீர் நிலவரம் எல்லாம் விசாரித்தாள்.

''உக்காரு..!'' என சேரை எடுத்து போட்டேன். முந்தானையை சுருட்டிப் பிடித்துக் கொண்டு சேரில் உட்கார்ந்தாள். 

பேனையும் டிவியையும் போட்டு விட்டேன்.

கூல்ட்ரிங்க்ஸை ஓபன் பண்ணி அவளிடம் கொடுத்தேன்.
"ம்ம்.. குடி"

வலது கையில் வாங்கி, இடது கையில் புடவைத் தலைப்பை சுருட்டி பிடித்தபடியே அண்ணாந்து குடித்தாள்.

 என் பார்வை அவள் முகத்தை விட்டு கீழே இறங்கியது. கழுத்தில் செயின் மட்டும்தான். அனுபவத்தால் பெருத்து விட்ட தனது பூரித்த தனங்களை இறுக்கமான பிளவுஸினுள் அடைத்து அழகாக்கியிருந்தாள். 

அப்படி இருந்தும் அவளின் இடது பக்கம் முந்தானையை மீறி வந்து கும்மென்று தெரிந்தது. அதற்கு கீழே லேசாக மடிப்பு விழுந்த அவள் இடுப்பைப் பார்த்தபோது கூல்டிரிங்ஸை எடுத்து வாயைத் துடைத்தாள்.. !!

சட்டென்று பார்வையை மாற்றினேன். கொஞ்சமாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்து விட்டு மீண்டும் அதை என்னிடம் கொடுத்தாள்.

''போதும் நீங்க குடிங்க..''

"நான்  எனக்காக வாங்கல செல்வி. உனக்குத்தான் வாங்கினேன்"

"அப்படியே இருக்கட்டும்.  எனக்காக வாங்கினத நீங்க குடிக்க கூடாதா என்ன? குடிங்க.." எனச் சொன்ன அவள் கண்களைப் பார்த்து, மறுக்க முடியாமல் வாங்கிக் குடித்தேன். 

நானும் கொஞ்சம் குடித்துவிட்டு சேரில் உட்கார்ந்தேன்.. !!

''ரூம் ரொம்ப நல்லாருக்கு..'' என்றாள். பின் "தனியா இருக்க ஒரு மாதிரியா இல்லயா?"

"என்ன மாதிரி? "

"தனியா..? கஷ்டமா..?"

"ஓஓ.. இல்ல.."

கண்களை இடுக்கிச் சிரித்தாள். அவள் சிரிப்பு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. 

என் மனதில் எழும் தவிப்பை அவளிடம் சொல்லிவிட நினைத்தேன். 
'' நீ இன்னும் மாறவே இல்ல.. செல்வி..!'' என்றேன்.

"புரியல?" புருவம் தூக்கி என்னைப் பார்த்தாள்.

"இல்ல.. கல்யாணம் ஆனாலும் நீ அப்படியேதான் இருக்க"

''மாறியிருப்பேனு நெனச்சிங்களா..?'' என சிரித்தபடி கேட்டாள்.

''பொதுவா கல்யாணம் ஆச்சுன்னா ஒரு மாற்றம் வரும் பொண்ணுங்களுக்கு."

''என்கிட்ட அது வரலையா..?''

''ஒண்ணுல மட்டும் மாற்றம் தெரியுது..!மத்தபடி அப்படியேதான்..!''

''எதுல மாறிருக்கேன்..?''

சிரித்தேன். ''அது வேண்டாம்..!''

''பரவால்ல சொல்லுங்க..? என்ன..?''

"சொல்லிருவேன்"

"சொல்லுங்க? "

"திட்டக் கூடாது?"

"சரி.."

''நெஞ்சு..!'' சுருக்கமாய் சொன்னேன்.

புரிந்து கொண்டாள். லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.
"நல்லா சைட் அடிக்கறீங்க.."

''அழகா இருந்தா.. எல்லாம் அடிக்கறதுதான்..!''

''நான் அழகா இருக்கேனா..?''

''செம்மையா இருக்க..! அவன் உன்ன மிஸ் பண்ணிட்டானேனு எனக்கு பீலிங்கா இருக்கு..!''

"நெஜமாவா?"

"ம்ம்.. நானாருந்தா நிச்சயமா உன்ன மிஸ் பண்ணியிருக்க மாட்டேன்"

அவள் என் கண்களை உற்றுப் பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் மனதின் தவிப்பை உணர முடிந்தது.. !! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!