வியாழன், 18 ஜூலை, 2019

நீ இல்லா நேரம் -2

மறுநாள்.. !!  

சௌமியா  காபி போட்டு எடுத்துக்கொண்டு போனபோது.. அவளது அண்ணன் பூந்துகிலன் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள் ஷாலினி.. !!

ஷாலினி.. பக்கத்து வீட்டு பெண்களில் ஒருத்தி..! அவளது அண்ணனுக்கு சிறுவயது தோழியும் கூட..!!

காபியை அவர்களுக்கு கொடுத்து விட்டு.. எதிர் சோபாவில் உட்கார்ந்தாள் சௌமி. 

சாதாரணமாக ஷாலினியின் பேச்சுக்கள் அப்படி ஒன்றும் ரசிக்கும்படியாக இருக்காது என்பது சௌமியின் அபிப்ராயம்..!! 

ஷாலினி உதட்டில் புன்னகை தவழ.. நுனி நாக்கு ஆங்கிலத்தை சற்று அலட்டலாக பேசுவாள்..!! 

அந்தவிதமான அலட்டலான பேச்சுக்களில் எல்லாம் சௌமிக்கு எப்போதுமே உடன்பாடு இருக்காது..!!

தன் அண்ணனுடன் பேசும்  ஷாலினியின் தன்முனைப்பான பேச்சைக் கேட்டு.. சௌமி சட்டென வாய்விட்டு சிரித்து விட்டாள்..!!

 அவளது கேலிச் சிரிப்பை பார்த்து.. தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள் ஷாலினி.
''என்ன சௌமி.. திடீர் சிரிப்பு..??''

வெறுமனே தலையை அட்டிச் சிரித்தாள்.
''நீ பேசு..''

பூந்துகிலும் கேட்டான்.
''இப்ப எதுக்கு சிரிச்ச நீ..?? ஷாலு அப்ப்படி ஒண்ணும் நீ சிரிக்கற மாதிரி பேசலயே..??''

அவர்களது பேச்சுக்கு தடையாக இருக்க சௌமி விரும்பவில்லை. தலையை ஆட்டிக் கொண்டே.. எழுந்தாள்..!

''நீங்க பேசுங்க..!!'' என அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.

''சௌமிய புரிஞ்சுக்கவே முடியாது..! நிருதிதான் பாவம்..!!'' தன் அண்ணனிடம் ஷாலினி சொல்வது கேட்டது..!!

தன் அறைக்குள் போய்.. கட்டிலில் உட்கார்ந்தாள்.

 செய்வதற்கும் வேலைகள் ஒன்றும் இல்லை. கட்டிலில் கால் நீட்டிப் படுத்து கண்களை மூடினாள்..!!

 அவளது இளம் மார்பகங்கள் விம்மியெழ.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்..!!

 சில நொடிகளில் அவளது எண்ணச் சிதறல்களை முழுமையக்கி.. அவளது கவனத்தை.. அவள் உடம்பின்மீது நிலை கொள்ளச் செய்தாள்..!!

அவளின் இதயம் துடிப்பதை.. துள்ளியமாக கவனித்தாள்..!!

 அப்படியே எந்தவித எண்ணங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல்.. அவளது இதயம் துடிக்கும்.. வெறும் உணர்வுடன் கலந்து போனாள்..!!

 எத்தனை நேரம் அப்படி இருந்தாள் என்று தெரியவில்லை.. !!

''சௌமி..!!'' கௌரியின் குரல் கேட்டு கலைந்தாள். கண்களை திறந்து கௌரியை பார்த்தாள்.

''தூங்கிட்டிருந்தியா.. ஸாரி..'' பக்கத்தில் வந்தாள் கௌரி.

சௌமி எழுந்து உட்கார்ந்தாள்.
''தூங்கல.. 'சும்மா ' படுத்திட்டிருந்தேன்..! ஸ்ருதி..??''

''தூங்கிட்டிருக்கா..!! பக்கத்துல அம்மா இருக்கு..! உன்ன பாக்கலாம்னு வந்தேன்..!!''

''உக்காரு..''

''ஒரு சின்ன டவுட் சௌமி..'' கட்டிலில் உட்கார்ந்தாள் கௌரி.

''என்ன..??''

''கனவுகளுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா..??''

''ஒரு கோப்பை தேனீர்..!!'' சிரித்தாள் சௌமி.

''அது.. கனவா நெஜமான்னே.. எனக்கு புரியல...''

'' எதுவானாலும் அதை ஒதுக்கிரு..!! விழிச்சிக்கோ..!! அதான் அழகு..!!''

''ஆனா.. சௌமி.. இப்பவும் அது எனக்கு கனவா தோணல..''

'' ம்.. ம்ம்..!!''

''ஆனா.. அது நிஜமும் இல்ல..!!''

''கரெக்ட்...''

''அப்ப அது என்ன..??''

''எனக்கும் தெரியாது..!!''

''சரி.. சொல்றேன் கேளு..!! நேத்து மிட் நைட்டுக்கு மேல இருக்கும்.. எண்ணங்களை வேற நான் கவனிச்சிட்டு இருக்கேனா.. ஒரே கனவு மயமா இருக்கு. தூக்கம் கூட நிறைவா தோணல. படுத்து ஒரு பத்து நிமிசத்துல எழுந்துட்ட மாதிரி இருக்கு..! ஆனா.. காலைலதான் எந்திரிச்சுருக்கேன்..! என் கனவு என்னன்னா... நேத்து நைட்.. எங்க ரூம் புல்லா பிரைட் ஆகிருச்சு.. பகல் மாதிரியே.. அப்படி ஒரு பிரைட்னஸ்.. நான் கீழ படுத்துருக்கேன்.. ஆனா.. என்னை போலவே இன்னொரு கௌரி.. என் முன்னால நின்னுட்டு டான்ஸ் பண்றா.. என்னை நானே பாக்கறதுல எனக்கு ஏக பயம்..! அந்த பயத்தோடவே என் மனசுல ஒரு அசட்டு தைரியம்.. என்ன நடக்குதுனு பாக்கலாங்கற மாதிரி..!! அப்ப என் சுய உணர்வு எனக்கு நல்லாவே இருக்கு.. நான் பயப்படறது எனக்கு தெரியுது..! எனக்கு நானே தைரியம் சொல்லிக்கறேன்.! அப்பதான் என் முன்னால நிக்கற கௌரி டான்ஸ் பண்றா.. பண்ணிட்டே கீழ படுத்துருக்கற எனக்கு கை குடுக்கறா.. நானும் கை கொடுக்கறேன்.. ஆனா ரெண்டு பேரும் இணைய முடியல.. எனக்கு ரொம்ப பயமாகி நான் கத்திட்டேன்..!! அதுல படுத்துருக்கற கௌரியாதான் என்னை நான்  பீல் பண்ணேன்..!! பயத்துல சட்னு முழிச்சிட்டேன்..!! முழிச்சு பாத்தா.. ரூம் நார்மலாதான் இருக்கு.. சந்தர் என் பக்கத்துல சாதுவா படுத்து தூங்கிட்டிருக்காரு..!! இப்பவரை அதை என்னால ஒரு கனவா ஏத்துக்க முடியல..!! அதான் உன்ன கேக்க வந்தேன்..?? உனக்கு இந்த மாதிரி நடந்திருக்கா..??''

சிரித்தாள் சௌமி.
''நெறைய தடவை நடந்துருக்கு..!! இப்ப கூட சமயத்துல எப்பவாவது வரும்..!! ஆனா நான் அதுலாம் ஆராய்ச்சி பண்றதே இல்ல..!! உனக்கு மறுபடி அந்த மாதிரி மயக்க நிலை வரும்.. அதுல பயப்பட ஒன்னுமே இல்ல..!! உனக்குள்ள என்னமோ நடக்குதுனு நெனச்சிட்டு அப்படியே மறந்துரு அத..!!''

''ம்..ம்ம்.. சரி..!!''

''முடிஞ்சவரை கடந்த காலத்தை கை விட்டர்றது நல்லது..! அதாவது காலத்தை கடந்த நிலை..!! நிகழ்காலம் ஒன்னு மட்டும் நிஜம்..!! கடந்த காலம் ஒரு கனவு..!! எதிர் காலம் ஒரு கனவு..!! நிகழ் காலம் மட்டுமே நிஜம்..!! அத கூட... காலத்தோட அடிப்படைல இல்ல..!! உண்ர்வு நிலைலதான் நிஜம்..!! காலத்த கடந்த நிலைல என்னிக்கும் இருக்கறது நம்ம உணர்வுகள் மட்டும்தான்.. அதுதான் நிஜம்..!! அங்க காலமே கிடையாது..!! நீ புரிஞ்சிக்க வார்த்தை வேனும்ங்கறதால நிகழ்காலம் ன்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டியிருக்கு..!! அதெல்லாம் தர்க்க ரீதியான பிரச்சினைக்கு கொண்டு போகும்..!! ஸோ.. எல்லாத்தையும் ஒரு சாட்சியா மாத்திரம் மட்டும் நின்னு கவனிச்சு பாரு..!! காலமற்ற.. அந்த நிகழ்கால உணர்வு.. உனக்கும் கை வரலாம்..!!''  என்று விளக்கினாள் சௌமி.

''என்னால முடிஞ்சவரை.. நீ சொல்றதை ஃபாலோ பண்றேன்..!!'' சௌமியின் கையை பிடித்துக் கொண்டு சொன்னாள் கௌரி.

பூந்துகில் அறைக்குள் நுழைந்தான்.

''நீ ஏதேதோ பேசற சௌமி..! எனக்கு சுத்தமா ஒன்னும் புரியல..!!''

''நீ எப்ப வந்த..??'' கௌரி கேட்டாள்.

''நீ உள்ள வந்ததும் ஷாலினி போய்ட்டா.. சரி உங்க கூட பேசலாம்னு வந்தேன்..! நான் டிஸ்டர்ப்பா இருப்பனோன்னு.. நீங்க ரெண்டு பேரும் பேசறத கேட்டுட்டு.. அப்படியே நின்னுட்டேன்..!!''

சௌமி சிரித்தபடி தன் அண்ணனிடம் சொன்னாள்.
''இதெல்லாம் பைத்தியங்களோட சம்பாஷனை.. நீ காதுல வாங்கிக்காத..!!''

'' எது..??'' உள்ளே வந்து சேரில் உட்கார்ந்தான்.

''நாங்க பேசினது..!!''

''ம்கூம்..!! உன்ன பாத்தா அப்படி தெரியல..!! உன்கிட்ட ஏதோ ஒரு அற்புதம் நடந்துருக்கு.. ஆனா அது என்னன்னுதான் புரியல..!!''

'' வெரி சிம்பிள்.. நான் ஒரு பைத்தியம்ங்கறத இப்ப நான் உணர்ந்துட்டேன்..!!'' என்று  சிரித்தாள் சௌமி.

''உன் பேச்சு பைத்தியக்காரத் தனமானது இல்ல..''

கௌரி குறுக்கிட்டாள்.
''பூ.. ஒரு பைத்தியம் தன்னை பைத்தியம்னு உணர ஆரம்பிச்சிட்டா அது.. சுத்தமா தெளிஞ்சிருச்சுனு அர்த்தம்..!! நம்ம சௌமி இப்ப தெளிஞ்சவ..!! ஆனா நாம..?? நாமதான் ரொம்ப அறிவாளி.. ரொம்ப தெளிவானவங்கனு நினைச்சிட்டு இருக்கோம்..!! லாஜிக் புரியுதா..?? சௌமி நம்மள மாதிரி இல்ல..!!''

'' ஓ..ஓ..!!'' புரிந்து கொண்டதாய் வியப்பைக் காட்டினான் பூந்துகில்.
''என்னை நான் அறிவாளின்னில்ல நெனச்சிட்டு இருக்கேன்..!!''

''என்ன பண்ண.. நான்கூட இன்னும் அறிவாளிதான்..!!'' எனச் சிரித்தாள் கௌரி..!

சௌமி சிரித்தபடி மீண்டும் சொன்னாள்.
''நாம அறிவாளியா நடிச்சிட்டு இருக்கோம்ன்றத உணர்ந்துட்டா நமக்கு நல்லது..! அப்படி இல்லாம நாம நெஜமாவே அறிவாளிதான்னு உறுதியா நம்பினா.. அது ரொம்ப ஆபத்து..!! உண்மையான அறிவாளி தன்னோட முட்டாள்தனத்தையும் தெரிஞ்சு வெச்சிருப்பான்..! சமயத்துல அதை மதிக்கவும் செய்வான்..!! ஆனா முட்டாள் அப்படி இல்ல..! அவனோட முட்டாள்தனம் பத்தி அவனுக்கு எதுவும் தெரியாது.! எப்பவும் அவன் ஒரு அறிவாளின்னும்.. மத்தவங்களைவிட.. தான் உயர்ந்த மனுஷன்னும்.. உறுதியா நம்பிட்டிருப்பான்..!!''

''ஓ...!!''

''நாம எப்படி இருக்கோம்னு பாக்கறதுதான் சாட்சி..!! அப்படி இல்லாம.. நாம நல்லா படிச்சிருக்கோம்.. பட்டம்.. பேரு.. புகழ் எல்லாம் வாங்கிருக்கோம்னு.. மேதமையான அபிப்ராயத்துக்கு போய்டக் கூடாது..!!''

''எப்படி.. எப்படி..??''

''நாம எப்படி இருக்கோம்னு பாக்கறது அகநிலை..!! அதாவது நம் எண்ணங்கள்.. சிந்தனைகள்.. என்ன ரீதியா இருக்குனு பாக்கறது..!! உன் எண்ணங்கள் எப்படிவேனா இருக்கட்டும்.. நீ நல்லவனா இருக்கனும்னு அவசியமில்ல..! அத அப்படியே பாத்தா.. அது.. அகம்..!!"

"......."

" பணம்...வசதி.. பட்டம்.. படிப்பு.. பேரு.. புகழ் இது எல்லாம் புறநிலை..!! நாம அந்தஸ்தோட இருக்கறது நம்ம அறிவாளித்தனம் இல்ல..!! அறிவுங்கறது மெய்ப்பொருள் காண்பது..!! புற நிலைல அடையற.. மேதமைக்கும்.. அக நிலைல அடையற.. அறிவுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்ல..!! உண்மையான அறிவுன்றது அக நிழைல இருந்து தானே.. மலர்ந்து வரது.. ஒரு பூ மலர்றது மாதிரி..!! அதை வரவழைக்க முடியாது..!!''

''வரவழைக்க முடியாதுன்னா.. அப்பறம் எப்படி...நீ... இப்படி...??''

''நம்மோட இருப்பு நிலையே ஒரு பூ மாதிரி இயல்பு நிலைதான்..!! அத நம்ம நாட்டு சட்ட திட்டங்கள்.. சம்பிரதாய குல வழக்கங்கள்னு.. ஏகப்பட்ட திரைகள போட்டு மூடி வெச்சிருக்கோம்..!! அந்த திரைகள அகற்றினா போதும்..!! நம்ம அகநிலை இயல்பு நமக்கு புரிஞ்சுரும்..!!''

''ஓ..ஓ..!!''

''ஏதாவது புரிஞ்சுதா..??'' கௌரி கேட்டாள்.

''சரியா தெரியல..! பட் ரொம்ப நல்லா.. பேசறா..!! இந்த பேச்சு சும்மா வராது..! கிரேட்..!!'' என்று தன் தங்கையைப் பார்த்து வியந்து சொன்னான்  பூந்துகில்.

சௌமி சிரித்துக் கொண்டே மீண்டும் சொன்னாள்.
''ஒருத்தர இப்படி பாராட்டக் கூட.. ஒரு தகுதி வேனும் தெரியுமா..??''

இந்த இடத்தில் கேள்வியை சரியாக அமைக்க.. போதுமான வார்த்தைகள் இல்லை என்பது போல தோன்றியது அவளுக்கு.  வார்த்தை பற்றாக் குறையால்.. அவள் பேச்சின் அர்த்தம் மாற்றி புரிந்து கொள்ளப்படும் என்பதும் அவளுக்கு புரிந்தது..!!

அவள் நினைத்தது போலத்தான் நடந்தது..!

''ஏன்.. உன்ன பாராட்டற தகுதி எனக்கு இல்லையா..??'' என்று கேட்டான் பூந்துகில்.

''ஓ.. நீ எல்லாம் தெரிஞ்ச மேதை இல்ல..??'' கௌரி சிரித்தாள்.

''நான் மேதை இல்ல.. ஆனா நான் பாராட்டினதுல என்ன தப்பு..??'' பூந்துகில் கேட்க.. அதை விளக்கத் தெரியாமல் சௌமியை பார்த்தாள் கௌரி.

சௌமி உதட்டைப் பிதுக்கிப் புன்னகைத்தாள்..!!
''இதான் வார்த்தைகள்ள இருக்கற பிரச்சினை.. நாம ஒன்னு நெனைச்சு பேசினா.. அது வேற ஒரு பொருளை கொண்டு சேர்க்கும்..!!''

''இப்ப உன் அண்ணனுக்கு எப்படி புரிய வெக்கறது..??'' கௌரி கேட்டாள்.

''இங்க உதாரணம்தான் கை குடுக்கும்..!!'' என்றவள் மெல்லிய புன்னகையுடன் தன்  அண்ணனை பார்த்துக் கேட்டாள்.
''வானம் எல்லை இல்லாததுனு சொல்வாங்க இல்லையா..??''

''ம்ம்..??''

''அதை நம்பறியா..??''

யோசித்து சொன்னான்.
''ஆ.. நம்பறேன்.!!''

'' எப்படி..??''

''வானத்தோட எல்லைய இதுவரை யாருமே கண்டு பிடிச்சது இலலையே..??''

''அப்பறம் எப்படி வானத்துக்கு எல்லை இல்லேன்னு சொல்ல முடியும்..?? இது தர்க்கம்தான்..!! அவங்க சொல்றத யோசிக்காம  இருந்தா.. அப்படியே ஒப்புக்கற மாதிரிதான் இருக்கும்..!! ஆனா அத எப்படி உறுதி படுத்த முடியுது..??''

''என்னை குழப்பற சௌமி..??''

''திருத்திக்கோ.. நான் குழப்பல.. நீ குழம்பி போயிருக்க..!! உன் நிலையே குழப்பம்தான்..!! உனக்குள்ள நீ தெளிஞ்சிருந்தா.. நான் சொன்னப்பவே உனக்கு உண்மை புரிஞ்சிருக்கும்..!! இந்த உதாரனங்கள் எல்லாம் தேவை பட்டிருக்காது..!!''

பூந்துகில்.. குழப்பத்தில் தவித்த முகத்துடன் அவளையே பார்த்தான்.

 மெதுவாக எழுந்து அண்ணன் பக்கத்தில் போனாள் சௌமி..!!

''ரிலாக்ஸ் ப்ரோ..!! அது வேற உலகம்..!! அந்த பேச்சு வந்ததால அதை பேச வேண்டியதா போச்சு..!!'' சொல்லிக் கொண்டே அவன் தோளில் கை வைத்து மெல்லக் குனிந்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்..!

''எல்லாத்தையும்... எல்லாத்தையும் மறந்துட்டு.. நீ.. நீயா இருக்க பாரு..!! உன் தங்கையோட ஒரு சின்ன அறிவுரை.. முடிஞ்சவரை.. உன்னோட மேதமையை வெளிப்படுத்தற மாதிரி பேசாம.. இயல்பா.. எதார்த்தமா.. பேசப்பாரு.. உனக்கான மாற்றம் உனக்குள்ள நிகழ ஆரம்பிக்கும்..!!''

நீ இல்லா நேரம்- 1

  வணக்கம் நண்பர்களே.. !!

தமிழ் காமவெறி தளத்தில்.. நான் எழுதிய  நூறாவது கதை.. இது.. !! நூறாவது கதை என்பதால்.. சற்றே மாறுபட்ட கோணத்தில்.. எனக்கு பிடித்தமான விதத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கேன்.. !!

இந்தக் கதை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை.. !! உங்களது கருத்துக்களை தவறாது பதிவிடுங்கள்..!!

-நன்றி.. !!




ஓஷோவின் சென் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்து போயிருந்தாள் சௌம்யா.. !!

 சென் சூத்திரங்கள் பற்றிய விளக்கம்.. மிகவும் அற்புதமாக இருந்தது..!! 

பனிப் பிரதேசத்தில் பூத்துக் குலுங்கும் ஒரு புதிய மலரின் இனிய பரவசம் அவளை ஆட்கொண்டது..!! பனி மழையில் நனைந்து மனமே சில்லிட்டுப் போனது போன்ற  புத்துணர்வு..!!

புத்தம் புதிய மலரின்.. மெல்லிய மடலில்.. புள்ளி புள்ளியாய் பொழிந்து கொண்டிருக்கும் பனித்துகள் போல.. அவளது ஆத்ம மலரை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.. அவளை ஆட்கொண்ட அந்த தெய்வீக உணர்வு.. !!

நரம்பு மண்டலங்களில் படர்ந்த.. பஞ்ச பூதங்கள் அவளது உடம்பை.. ஒரு சிறு துகளாக மாற்றி மிதக்க வைத்துக் கொண்டிருந்த... அந்த ஆன்ம உணர்வில்.. நிரம்பிப் போய் ஆழ்ந்து இருந்தவள்.. வீட்டின் முன்.. ஒரு ஆட்டோ படபடத்துக் கொண்டு வந்து நின்றதையோ.. அதிலிருந்து சில வருடங்களுக்கு முன்பு.. திடீரென ஒரு நாள் வீட்டை விட்டு போன.. அவளது உடன் பிறந்த அண்ணன் லக்கேஜுடன் இறங்கியதையோ.. அவள் கவனிக்கத் தவறியிருந்தாள்..!!

''ஏய்.. சௌமி.. அப்படி என்னடி படிச்சிட்டிருக்க..??'' என்ற குரல் கேட்டு.. தன் ஆன்ம பிரதேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள்.. உடலின் பொருட்டு.. சௌமியாக உணர்ந்தாள்..!!

தன் தோளைத் தொட்டு.. கலைத்தது யாரென பார்த்தாள் சௌமி.

 கையில் குழந்தையுடன் கௌரி நின்றிருந்தாள்..!!

அவளது கண்கள் சௌமியின் கையில் இருந்த புத்தகத்தை வருடிப் போனது.!

 கௌரியின் பக்கத்தில்.. உதட்டில் தவழும் புன்னகையுடன் நின்றிருந்தவனை பார்த்த.. அடுத்த நொடியே.. சடாரென எழுந்தாள்.

''அண்ண்ண்ணா...!!''

''சௌமி..!! எப்படி டா இருக்கே..??'' கண்களிலும்.. குரலிலும் அன்பும் பாசமும்.. ஏக்கமும் தவிப்பும் பொங்க கேட்டான் அவளது அண்ணன் பூந்துகில்..!!

''நான்' அப்படியேதான் இருக்கேன்.. உன் தங்கை சௌமிதான் நல்லா வளந்துட்டா..!!'' பக்கத்தில் போய் அண்ணன் கையை பிடித்தாள். ''நீ எப்படி இருக்கே..??''

''நான் நல்லாருக்கேன் சௌமி..!! நீங்க எல்லாம்..?? நீ எப்படி வளந்துட்ட..??'' தன் தங்கையின் அழகான வளர்ச்சியைப்  பார்த்து பரவசமடைந்தான்.

சிரித்தாள்.
''ஸாரிண்ணா.. உன்னை வரவேற்க.. இப்ப அப்பா இல்ல.. அம்மா இல்ல...!! நான் மட்டும்தான் இருக்கேன்..!! அப்பறம் நம்ம கௌரி அக்கா.. இந்த செல்லக் குட்டி.. சுருதி..!!''

''பரவால்ல..!! அப்பாம்மால்லாம்.. எங்க போனாங்க..??''

''அப்பா.. இன்னும் அதே பேங்க்தான்..!! காலைலயே போய்ட்டார்..!!''

''அம்மா..??''

''அம்மா.. டூ லேட்..!! இந்த மண்ணுலகை விட்டே போயாச்சு..!!'' என்று  அவள் மிகவும்  இயல்பாக  சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அந்த செய்தி அவனுக்கு பலமான அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்..!!


''வாட்.. அம்மா.. எறந்துட்டாங்களா..?? எப்போ..??'' அவன் முகத்திலும்.. குரலிலும் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது..!!

''ரெண்டு வருசம் ஆச்சு..!! அம்மா போயி.." சாதாரணமாகச் சொன்னாள் சௌமி.

தலையை பிடித்துக் கொண்டான்..!!
''மை காட்..!!'' அதிர்ச்சியில் தலையை பிடித்துக் கொண்டு அப்படியே மடங்கி.. சோபாவில் உட்கார்ந்தான்..!!

அவனுக்கு இந்த செய்தி புதிது.. என்பதால் அவனது அதிர்ச்சி சற்று குறையட்டும் எனக் காத்திருந்தாள் சௌம்யா. 

உதட்டில் லேசான புன் முறுவலுடன்.. கௌரியின் மார்பில் அணைந்திருந்த குழந்தையின் கன்னத்தை மெல்ல கிள்ளினாள்..!! குழந்தை கைகளை ஆட்டிச் சிரித்தாள்..!!

சில நொடிகள் கழித்து  தன் அண்ணனை பார்த்து..
''காபி கொண்டு வரேன்..!!'' என மெதுவாக சொன்னாள் சௌமி.

கண்களில் நீர் திரள.. அவளை நிமிர்ந்து பார்த்தான் பூந்துகில்.

'' அ.. அம்மா.. எப்படி..??'' அவன் குரல் நடுங்கியது.

''மாரு வலி..!!''

''ஹார்ட் அட்டாக்கா..??'' அவன் குரல் உடைந்தது.

''ம்..ம்ம்..!! பெண்களுக்கும் இப்பல்லாம் சாதாரணமா வர ஆரம்பிச்சிருச்சே..?? அதோட.. அம்மா ஒரு குட்டி யானை மாதிரி....'' மெல்லிய புன்னகையை உதட்டில் தவழ விட்டுக்கொண்டு சொன்னாள்.

அவளது இந்த வினோதமான முக பாவனைகள் அவனுக்கு.. கொஞ்சம் அதிகப்படி என தோன்றியிருக்க வேண்டும்..!! 

அதைப் பற்றி.. சௌமி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. கௌரியை பார்த்து..
''நீ உக்காருக்கா..!!'' என சொல்லி விட்டு.. அவனது லக்கேஜ்களை எடுத்து வைத்தாள்..!!

அவன் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

 சௌமி போய் காபி போட்டுக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்..!!

 வாங்கிக் கொண்டு கௌரியை பார்த்தான்.
''கௌரி.. காபி..??''

''நான் அதிகமா எடுத்துக்கறதில்ல..!! நீ குடி..!!'' என கனிவுடன்  சிரித்தாள் கௌரி.

''குழந்தை யாரோடது..?? உன்னோடதா..??''

''ம்.. ம்ம்..!!'' சிரித்தாள்.

''உன்ன மாதிரியே.. அழகா இருக்கு..!! பேரு..??''

''சுருதி ..!! உனக்கு மெரேஜ் ஆகிருச்சா பூ..??''

வறண்ட உதடுகளை மலர்த்தி சிரித்தான்.
''ம்கூம்..!! இல்லே..!!''

''உன்ன திரும்ப பாப்போம்னு.. நாங்கெள்ளாம் நெனச்சுக்கூட பாக்கல..!!''

மெலிதாக புன் முறுவல் செய்தான் பூந்துகில். 

அம்மாவின் இறப்பை.. அவன் ஏற்றுக் கொண்டான் என்று புரிந்தது..!! சௌமியை பார்த்தான்..!!
''நான் போட்ட லெட்டர் கெடைச்சுதா..??''

''ம்.. ம்ம்..!! கெடைச்சுது..!!''

''அப்பாகிட்ட சொன்னியா..??'' அவன் ரொம்பவும் எதிர் பார்ப்புடன் வந்திருக்கிறான் என்று புரிந்தது. ஆனால் அவன் எதிர் பார்த்த விதமாக அவனை யாரும் வரவேற்கவில்லை..!!

அதே நேரம்.. கௌரியின் அம்மாவும்.. தம்பியும் வீட்டுக்குள் வந்தார்கள்..!!


பூந்துகில் எழுந்தான்.
''அத்தே..!! நிரு...!!''

''வாடா.. என் மருமகனே..!! பாத்து எத்தனை நாளாச்சு..?? நல்லாருக்கியா..?? எங்களையெல்லாம் அடியோட ஒதறிட்டு போக உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு..?? ஆளு நல்லா ஜம்முனு ஆகிட்டே.. கல்யாணம்லாம் பண்ணிட்டியோ..??'' அத்தை மிகவும் கனிவுடன் அவனை நலன் விசாரிக்க... சிறிது நேரம் அப்படியே போனது..!!

நீண்ட நேரம் கழித்துச் சொன்னான் பூந்துகில்.
'' நான் இருக்கப்ப இந்த வீடு கூட சாதாரண ஒரு வீடாத்தான் இருந்துச்சு..!!''

''இதெல்லாம் நீ போனதுக்கப்பறம்.. மாத்தி கட்னதுதான்..!!''

''அப்ப பாட்டி இருந்துச்சு..??''

''நீ போன ரெண்டாம் மாசம் உன் பாட்டியும் போய்ட்டா..''

எல்லோருடைய முகங்களையும் பார்த்தான் பூந்துகில்..!!

''உங்கள எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்..!! எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ்..!!''

''விடுடா.. நீ வந்ததே பெருசு..!!'' அத்தை அவனை சமாதானம் செய்தபின் சொன்னாள்.
'' உன் தங்கை சௌமியை நீ சாதாரண சௌமினு நெனைச்சிராத..''

சிரித்தாள் சௌமி.
''ஆமா.. எனக்கு ரெண்டு கொம்பு.. ஒரு வாலு.. நாலு காலு எல்லாம் இருக்கு..!! இல்லத்தே..??''

அத்தை.. அவனைப் பார்த்து சிரித்தவாறு சொன்னாள்.
''நீதான் வந்துட்ட இல்ல..?? உன் தங்கச்சியை பத்தி நீயே பாத்து தெரிஞ்சுப்ப..!!''

கௌரியிடமிருந்து குழந்தையை வாங்கினான் பூந்துகில்.
''என்ன பேர் சொன்ன..??''

''சுருதி..!!''

''ஒரே குழந்தைதானா..??'' அவன் குழந்தையின் கன்னத்தை வருடினான்.

நிருதி இடை புகுந்து சொன்னான்.
''இது.. கௌரிக்கு பொறந்த கொழந்தை இல்ல..''

'' அப்பறம்..???''

''இதோட அம்மா.. இறந்துட்டாங்க..'' கௌரியே சொன்னாள்.  ''அப்ப இது ஆறு மாச குழந்தை..!! எதிர்பாராத விதமா.. என்கிட்ட வந்த இந்த குழந்தைனால ஒரு சம்பவம் நடந்துச்சு..!! அன்னிக்கு இந்த குழந்தையை பாத்து.. உருகிப்போய்.. இந்த குழந்தைக்காக.. இவங்கப்பாவை இரண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டேன்..!! இவங்கப்பா ரொம்ப நல்லவர்..!!''

''ஓ...!!''

''எங்க கல்யாணம்கூட.. இப்ப ரெண்டு மாசம் முன்னதான் ஆச்சு..!!''

''கிரேட்..!!'' அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை..!!

அன்று இரவு...!! 

இருட்டு போர்வைக்குள் ஊர் மொத்தமும்.. உறங்கிக் கிடந்தது..!!

ஆனால்  சௌம்யாவின் அறையில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது..!!

''சௌமி..'' பாசமான குரல் கேட்டு கலைந்தாள் சௌமி.

அவள்  படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து பார்வையை திருப்பினாள். அவளுடைய அண்ணன் பூந்துகில்..!


''வாண்ணா..!!'' அவனை பார்த்து புன்னகைத்தாள்.

அவளருகே வந்து கட்டிலில் உட்கார்ந்தான்.
''இன்னும் நீ தூங்கல..??''

''தூங்கிருவேன்..!! நீ தூங்கல..??'' படுத்துக்கொண்டிருந்தவள் எழுந்து உட்கார்ந்தாள்.

''ப்ச்.. தூக்கம் வரல..!!''

'' ஏன்..??''

''நான் எதிர் பாத்து வந்தது வேற..!! ஆனா இங்க இருக்கற சூழ்நிலை வேற..!!''

'' என்ன எதிர் பாத்து வந்த..??''

''பாட்டி சந்தேகம்னாலும்.. அம்மா இருக்கும்னு நெனச்சு வந்தேன்..!! அம்மா சாவுக்காவது வந்து நான் கொள்ளி வெச்சு.. மொட்டை அடிச்சிருக்கனும்..!! எல்லாம் என் தப்புதான்..!! என்னை பத்தின எந்த விபரங்களும் நான் உங்களுக்கு தரல..!!''

மௌனமாக தன் அண்ணனை பார்த்தாள் சௌம்யா.

ஒரு நீண்ட பெரு மூச்சுக்குப் பின் சொன்னான்.
''நீ கூட ரொம்ப மாறிப் போயிருக்க.. பழைய சௌமி இல்ல..''

'' உண்மைதான்..!!'' சிரித்தாள்.

அவள் முகத்தையே பார்த்தான்.
''நீ ரொம்ப அழகாய்ட்டடா..!! உன் முகமே.. அம்மா முகம் மாதிரி அவ்ளோ அழகா இருக்கு..!!''

சிரித்தாள் சௌமி.
''சத்யா.. என்னை பாக்கறப்பல்லாம்.. உன்னை பத்தி ரெண்டு வார்த்தையாவது பேசுவாங்க..!!"

''அதெல்லாம் நான் மறந்துட்டேன் சௌமி..!! ஏன்.. ? இந்த பந்த பாசங்களே என்னை விட்டு போயாச்சு..!! ஏதோ உன் மேல இருந்த பாசம் மட்டுமதான் என் மனசுல ஒட்டிட்டு.. அப்பப்போ.. உன்னை நெனைச்சு பீல் பண்ண வெக்கும்..!! இப்போ நீ எப்படி வளந்துருப்ப.. எப்படி மாறியிருப்பனு.. உன்ன நெனச்சு பாத்துப்பேன்..!! மத்தபடி இந்த காதல்... கல்யாணம்.. கண்றாவி எல்லாம்.. வேண்டாம்னு விட்டுட்டேன்..!!''

அவன் பக்கம் நகர்ந்து அவன் தோளில் தலை சாயத்துக் கொண்டாள் சௌமி.
''இப்பவும் லவ் இல்ல..??''

''சே.. ச்சே..!!'' அவள் தோளை அணைத்துக் கொண்டு கேட்டான்.
''நிருதியும்.. நீயும் கல்யாணம் பண்ணிக்க போறிங்களா..??''

''ஆமாம்..!! ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம்..!! எங்க கல்யாணம் நடக்க ரொம்ப நாள்கூட ஆகும்..!! நீ திரும்ப வந்ததுல அப்பாவுக்கும் ரொம்ப சந்தோசம்தான்..!! இப்பல்லாம் அப்பா.. முன்ன மாதிரி எதுக்கும் கோபப்படறதில்ல..!! ரொம்ப சாதுவா மாறிட்டாரு..!!''

''ம்..ம்ம்..!! எல்லாமே மாறித்தான் இருக்கு..!!''

மெல்லக் கேட்டாள்.
''சத்யாவுக்கு சொல்லட்டுமா..??''

''என்ன..??''

''நீ வந்துருக்கறதை...??''

''இல்ல.. வேண்டாம்..!! அவ அட்ரஸ் சொல்லு.. நானே போய் பாத்துக்கறேன்..!!!''

''சரி..!!'' என்றபின்  சிரித்தவாறு சொன்னாள் சௌமி.
''அவங்க பையனுக்கு உன் பேருதான்.. பூந்துகிலன்..!!''

விரும்பிப் படித்தவை.. !!