புதன், 7 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம்பூ -3

 


"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.. உன்னை மொத.. கழுத்த நெறிச்சு கொல்லனும்டா.." என்றாள்.


நான் கோபப்படவில்லை. அடி வாங்கிய கன்னத்தை இடது கையால் தேய்த்தபடி சிரித்தேன்.


"சிரிக்கறியா..?" என்று மீண்டும் அடித்தாள்.


"நீ என்னை இப்படி அடிக்கறதால அந்தாளு மாறிருவார்னு நெனைக்கறியா கிரி? நீ அடிக்க வேண்டியது என்னையில்ல, அவரை"


முறைத்துப் பார்த்தாள்.  லைட் வெளிச்சம் பட்டு அவளது மூக்குத்தி மினுக்கியது. 


அவள் மூக்கு அழகாத்தான் இருக்கும். அதில் மினுக்கும் மூக்குத்தி சில சமயம் அவளை செக்ஸியாகக் காட்டும்,


"சரி.. உன் ஆத்திரம் தீரனும்னா என்னை அடிச்சுக்கோ.. ஏன்னா நான் உன் வீட்டு உப்பைத் திங்கறேன்ல" என்றேன். 


சட்டென அவள் கண்கள் கலங்கி கண்ணீர் வெளியேறி விட்டது. 


"ச்ச.. போடா.." எனச் சொல்லிவிட்டு முந்தானையால் மூக்கைத் துடைத்தபடி எழுந்து போய்விட்டாள். 


சாப்பிட்டு முடித்த நான் தட்டைக் கழுவி வைத்து விட்டு மீண்டும் என் அறைக்குப் போய் படுத்து விட்டேன்.  


கிரிஜாவை நினைக்க கவலை வந்ததுதான். ஆனால் இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றே தோன்றியது.. !!


மீண்டும் நான் சத்தம் கேட்டு கண்விழித்த போது விடிந்து விட்டிருந்தது.


சீனு அண்ணா வந்திருந்தார். கிரிஜா அவருடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.


நான் விழிக்கும் முன்பாக என்னென்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.


"ஆமாடி.. நான் ஆம்பளை அப்படித்தான் இருப்பேன். நீ பொம்பளைன்னா.. ஒரு புள்ளைய பெத்துக் காட்டு பாக்கலாம். ஊரெல்லாம்.. என்னை பொட்டப் பையன்னு பேசறாங்க உன்னால.." என்று சத்தமாக கத்திக் கொண்டிருந்தார் சீனு.


"அதுக்காக.. நான் என்ன கண்டவன் கூடவா போய் படுத்து புள்ள பெத்துக்க முடியும்..? நீ குடுத்தாத்தான் புள்ளை.. உன்னால குடுக்க முடியலேன்னு என்னை மலடியாக்காதே" என்று கிரியும் திருப்பிக் கத்தினாள். 


நான் எழுந்து அறையை விட்டு வெளியே போனபோது சண்டை முற்றியிருந்தது.


கிரிஜாவின் கன்னத்தில் "பளார்.. பளார்" என இரண்டு அறை விட்டார் சீனு.


சட்டென என்னைப் பார்த்தவர் அவளை அடிப்பதை நிறுத்திவிட்டு மேலும் கோபமாகக் கத்திவிட்டு வெளியேறிப் போய் விட்டார்.


கிரிஜா மனமுடைந்து போய் தரையில் உட்கார்ந்து, கால்களை கட்டிக்கொண்டு கோவென அழத் தொடங்கினாள். 


நான் மெல்ல நடந்து அவள் அருகில் போய் நின்றேன்.


"கிரி.."


அவள் தலை குனிந்து தொடர்ந்து அழுதாள். 


நான் மீண்டும் "கிரி." என்று கூப்பிட்டேன்.


என்னை நிமிர்ந்து பார்த்தாள்.


அவள் கண்களிலிருந்து வழிந்த நீரைவிட மூக்கிலிருந்து அதிகம் ஒழுகியது. முந்தானையால் மூக்கைத் துடைத்துப் பிழிந்தாள். சத்தமாகவே உறிஞ்சிக் கொண்டாள். 


"நீ எதுக்கு காலைலயே வம்பிழுத்த?"


"எரிச்சலை கிளப்பாம மூடிட்டு போடா உன் வேலையை பாத்துட்டு" என்றாள்.


அவள் அழுகைக் குரல் வேறு மாதிரி இருந்தது. தலைமுடி கலைந்திருந்தது. மாராப்பு ஒதுங்கியிருந்தது. ரவிக்கைக்கு நடுவே பிதுங்கியிருந்தது. பிதுங்கிய சதைமேல் தாலி தெரிந்தது.


ஒரு நிமிடம் நின்று அவளைப் பார்த்துவிட்டு பாத்ரூம் சென்றேன்.


நான் முகம் கழுவிக்கொண்டு போனபோது கிரிஜா தன் அறைக்குள் போய்விட்டிருந்தாள்.


இன்று அவள் சமைக்கப்போவதில்லை என்று தெரிந்தது.


 நான் காலைக் கடன்களை முடித்து பல் விளக்கி, குளித்து உடை மாற்றிக்கொண்டு கடைக்குக் கிளம்பினேன்.


நான் கிளம்பிச் செல்லும்வரை கிரிஜா தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. 


அனேகமாக அவள் இன்று ஊருக்குக் கிளம்பிப் போய் விடுவாள் என்று நினைத்துக் கொண்டேன்.


நான் கடைக்குப் போனபோது சீனு எதையோ துடைத்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். 


"சாப்பிட்டியா?" என்று கேட்டார். அவர் முகம் உர்ரென்றிருந்தது. இரவு தூக்கம் இல்லாததை அவர் கண்களைப் பார்த்தவுடனே சொல்லிவிடலாம்.


"இல்ல.."


"ஏன்..? அவ ஒண்ணும் செய்யலியா?" முறைத்துக் கொண்டு கேட்டார்.


"செய்யல. ரூமை விட்டு வரவே இல்ல.."


பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து நீட்டினார். 


"சரவணபவன்ல போய் சாப்பிட்டு வா"


நான் எதுவும் பேசவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் சரவணபவனுக்குச் சென்றுவிட்டேன். 


அவர் கடையைத் திறக்கும் முன்பே அங்கே சென்றிருப்பார் என்று தெரியும்.. !!


சரவணபவனில் காலை நேரக் கூட்டம் இருந்தது. இளையவர்களைவிட முதியவர்கள்தான் அதிகம் சாப்பிட வந்திருந்தனர்.


‘கிரிக்கு இன்று விரதம்தான்’

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

மென் மோகம் -7

 நிருதி ஒரு 'ஹாய்' சொன்னான். 


அவள் உடனே பதில் அனுப்பவில்லை. சில நிமிடங்கள் கழித்து,

'ஹாய்' சொன்னாள். 


'ஹவ் ஆர் யூ?' 


'பைன் வாட் அபவுட் யூ?'


'குட்'


அப்படியே பேச்சு வளர்ந்தது. 


'பையனுக்கு இப்ப எப்படி இருக்கு?' என்று கேட்டான். 


'பரவால. நடக்கறான்' 


'ஸ்கூல் போறானா?'


'எஸ், போறான்'


'உங்க அத்தை வந்துட்டாங்களா?'


'இல்ல.. வரல'


'உங்க ஹஸ்பண்ட்?'


'அவர் வரதுக்கு டென் ஓ க்ளாக் ஆகும்'


'ஓஓ..'


'உங்க வொய்ப் என்ன பண்றாங்க?' என்ற அவள் கேள்வியில் திடுக்கிட்டவனாகச் சற்று தடுமாறினான். 


'என்னதூ.. என் வொய்ப்பா? அடிப்பாவி. நான் கல்யாணம்  ஆனவன் என்றா நினைத்தாய்? ஹூம்.. !!'


'அலோ.. என் வொய்ப்பா? அது யாருங்க?'


'என்ன இப்படி கேக்கறீங்க. உங்களுக்கு மேரேஜ் ஆய்ருச்சில்ல?'


"நல்லா கேட்டிங்க போங்க. ஐ ஆம் ஸ்டில் பேச்சிலர்ங்க..'


'மை காட்.. ஸாரி.. வெரி ஸாரி.  நான்  உங்களுக்கு  மேரேஜ் ஆகிருக்கும்னே நெனைச்சேன்'


'ஏன் அப்படி நெனைச்சிங்க?'


'தெரியலே. மனசுல அப்படித்தான் தோணுச்சு. அப்போ உங்களுக்கு  இன்னும் மேரேஜ் ஆகலையா?'


'ப்ராமிஸ்ங்க'


'பாத்துட்டிருக்காங்களா? இல்ல.. உங்க சைடுல லவ் கிவ் ஏதாவது...?'


'லவ்லாம் இல்லீங்க. பாத்துட்டிருக்காங்க'


'ஓகே ஸாரி'


'பரவால விடுங்க'


'இப்ப ப்ரீயா இருக்கீங்களா?'


'ப்ரீதான். ஏங்க?'


'மெசேஜ் டைப் பண்ண லேட்டாகுது. கால் பண்ணி பேசலாமா?'


'ஷ்யூர். நானே கால் பண்றேன்'


'ஓகே' என்றாள். 


அவன்  உடனே கால் செய்தான். இரண்டாவது ரிங்கிலேயே பிக்கப் செய்தாள். 


"ஹலோ" என்றான்.


"ஸாரிங்க" என்றாள் மிகவும் மெல்லிய குரலில்.


"பரவால்லீங்க"


"நெஜமா.. என் மனசுல உங்களுக்கு  கல்யாணம்  ஆகியிருக்கும்னுதான் தோணுச்சு"


"ஏங்க அப்படி தோணுச்சு? நான்  என்ன அவ்ளோ ஏஜ்டாவே இருக்கேன்?"


"ஹையோ அப்படி இல்லங்க. எனக்கு  ஏன் அப்படி தோணுச்சுனே தெரியல"


"உண்மைய சொல்லணும்னா எனக்கு  இப்ப இருபத்தியெட்டு வயசுதாங்க ஆகுது"


"ஓஓ" சிரித்தாள். "நம்பறேன்.. நம்பறேன்..! ஸாரி..! நீங்க கல்யாணம்  ஆனவர்னு நெனைச்சிட்டுதான் நான்  உங்களுக்கு போன் பண்ணக்கூட யோசிச்சிட்டிருந்தேன்"


"அதனால என்னங்க..."


"இல்ல.. சப்போஸ் நான் போன் பண்றப்ப உங்க மிஸஸ் இருந்து  அவங்க எடுத்து பேசினா என்னாகும்னுதான்.. ஸாரிங்க"


"நல்லா காமெடி பண்றீங்க.."


"ஸாரிங்க.."


"ம்ம்.. சரி விடுங்க"


"ஓகே.  சாப்பிட்டிங்களா?"


"இல்லீங்க இனிமேதான். நீங்க? "


"ம்ம். சாப்பிட்டாச்சு"


"குழந்தைங்க?"


"குழந்தைகளும் சாப்பிட்டு படுத்தாச்சு"


"குழந்தைங்க எப்பயும் இப்படி நேரத்துலயே தூங்கிடுவாங்களா?"


"அப்படியும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாதிரி"


"நீங்களும் அப்படித்தானா?"


"ம்ம்.."


"அப்பறம்.."


"சொல்லுங்க..?"


"உங்க பிரெண்டு நல்லாருக்காங்களா?"


"எந்த பிரெண்டு?"


"அன்னக்கி உங்க கூட இருந்தாங்களே? நாம மூணு பேரும் ஒண்ணா வந்தமே?"


''ஓஓ.. வானதியா?" சிரித்தாள்.


"வானதியா அவங்க பேரு?"


"ம்ம்.."


"ஆமா.. அவங்கள ஏன் கேட்டிங்க?"


''சும்மா.." என்றான்.


அரைமணி நேரம் பேசினர்.  மேலோட்டமாக அவனைப் பற்றி  அவளும், அவளைப் பற்றி அவனும் நிறைய விசாரித்துத் தெரிந்து கொண்டனர். !!


அது அவனுக்கு மனதில் ஒரு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் கொடுக்கவே செய்தது. 


அதன்பின் தினமும் போனில் பேசத் தொடங்கினர். 


இரவு எட்டு, எட்டரை முதல் ஒன்பது, ஒன்பதரைவரை சமயத்திற்குத் தகுந்தாற்போல பேசிக் கொள்வர்.


 அவள் பக்கம் நடந்ததை அவள்  அவனிடம் சொல்லுவாள். இவன் பக்கம் நடந்ததை இவன்  அவளிடம் சொல்லுவான். 


கிட்டத்தட்ட பத்து நாட்கள்  இதே நிலை நீடித்தது.  இதற்கிடையில் அவர்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை. 


அவன் மனதில் அவளைப் பார்க்க  ஆசை இருந்தது. அந்த ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது.. !!


ஆனால் அதற்கு முன் நட்பை பலப்படுத்திக் கொள்ளலாம் என்று தன்னைத் தானே அடக்கிக் கொண்டான்.. !!


விரும்பிப் படித்தவை.. !!