அவள்.... செல்வி.!!
எடுத்திருக்கிறான்.. !!
என் நெஞ்சில் எரிதனலை ஊற்றியிருக்கிறான்.. !!
அப்பறம் ஒரு நாள், இருவரும் சண்டை போட்டு பிரிந்து போய் விட்டார்கள். அதன்பிறகு இவளுக்கும் திருமணமாகி விட்டது என்பது மட்டும் எனக்கு தெரியும்.. !!
என் நண்பனும் இப்போது அவன் சொந்த ஊருக்கு போய் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டான்.. !!
ரொம்ப ஆசைப்படறா..'' என்பான்.. !!
அவன் திருமணத்துக்கு போயிருந்தேன். அவன் மனைவி அழகாகத்தான் இருந்தாள்.!
மனதார அவனை வாழ்த்திவிட்டு வந்தேன்.. !! இந்த நிலையில்.. இதோ.. அவனது முன்னால் காதலி.. எனக்கு பக்கத்தில்... ஆனால்.. அவள் இன்னும் என்னை பார்க்கவில்லை.. !!
தன் மார்பில் ஒரு கருப்பு கைப் பையை அணைத்துப் பிடித்துக் கொண்டு அதற்கு பால் கொடுத்தபடி அவளுக்குப் பக்கத்தில் இருந்த, அவளை விட சின்ன பெண்ணாக தெரிந்த.. இன்னொரு கருங்குயிலுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.. !!
செல்வியைப் பார்த்த எனக்கு மனசு நிலை கொள்ளவில்லை..!!
நிற்க.. நான் நிருதி..!! இப்போது நான் சொன்ன இந்த சம்பவம் நிகழ்ந்து
கொண்டிருப்பது.. தமிழகத்தின் பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரின்.. ஒரு பேருந்து நிறுத்தத்தில்..!!
இன்று.. நான் வேலைக்கு என கம்பெனிக்கு போன பின்னர்தான் தெரிந்தது. பீஸ் வரவில்லையாம்..
'நோ வொர்க் '
காண்ட்ராக்ட் காரனிடம் பீஸ் வந்ததும் போன் பண்ணச் சொல்லிவிட்டு.. சோர்வுடன் பஸ் ஸ்டாப் போய் நின்றபோதுதான்.. அவளைப் பார்த்தேன்.. !!
அவள்தான் என்பது ஊர்ஜிதமாகி விட்டது. அவளுடன் பேசலாம் என எண்ணி.. நான் அவள் பக்கம் நகர்ந்தபோது.. எதற்கோ திரும்பிய அவளும் அதே நொடியில் என்னைப் பார்த்து விட்டாள்.
சிரித்தாள்.. !!
''ஹலோ.. நிரு.. எப்படி இருக்கீங்க..?''
அவள் குரல் அத்தனை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் என்னைக் கேட்கும் என்று நான் எதிர் பார்த்திருக்கவில்லை.
''ஹலோ செல்வி.! நான் நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..?''
''ஓ.. சூப்பர்..!'' அவள் என்னை நெருங்கி வர.. பஸ்க்காக காத்திருக்கும் மற்றவர்களில் சிலர் எங்களை பார்த்தனர்.
சட்டென எனக்குள் ஒரு கூச்ச உணர்வு உண்டாகி.. என்னை சற்று தள்ளி நின்று பேச வைத்தது.. !!
''அப்பறம்.. எங்க இருக்கீங்க.. இப்ப..?'' நான் அவளை கேட்டேன்.
''இங்கதான்..! நீங்க..?'' என்றாள்.
நான் என் ரூம் இருக்கும் இடம் சொன்னேன்.
'' உங்க பிரெண்டு எப்படி இருக்காரு..?'' சற்றே குரலை தழைத்துக் கேட்டாள்.
உதட்டை பிதுக்கி சிரித்தேன்.
''தெரியலே..''
''ஏன்..??'' அவள் கண்களில் அத்தனை கேள்விக் கணைகள்.
''இப்ப அவன் இங்க இல்ல.."
''அப்றம்..?'' அவள் பார்வை கூர்மையானது.
''ஊருக்கே போய்ட்டான்..!'' என்றதும் சட்டென அவள் முகம் வாடியது.
''மேரேஜ் பண்ணிட்டு.. லைப்ல செட்டிலாகிட்டான்..''
மலர்ந்த அவளது முகம் பொலிவிழந்து விட்டது. அவள் முகத்தில் கவலை மேகம் கருக்கொண்டது.
''ஆமா.. செல்வி.. நீங்க எப்படி இங்க..?'' அவள் கழுத்தில் தாலியை தேடினேன்.
மஞ்சள் கயிறு எதுவும் தென்படவில்லை. ஒரு செயின் மட்டும் தெரிந்தது. அவளின் மார்பகம் விம்மித் தணிய.. ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டாள்.
''மறுபடி இங்கதான்.. என் சித்தி வீட்ல இருக்கேன்.! ஆறு மாசமாச்சு நான் வந்து.. இங்க பக்கத்துலதான் கம்பெனி..! கம்பெனிக்கு வந்த பின்னால நோ வொர்க்
குடுத்துட்டாங்க..!'' என்றாள்.
''ஓ.. எந்த கம்பெனி..?'' நான் ஆவலாக கேட்டேன்.
கம்பெனி பெயர் சொன்னாள். பிறகு நான் வேலை செய்யும் கம்பெனி பெயரைச் சொன்னேன்.
''பக்கத்துலதான் நான் செய்யற கம்பெனியும். எனக்கும் நோ வொர்க தான்..!'' என்றேன்.
அவள் முகம் மீண்டும் பளிச்சிட்டது.
அதே நேரம் ஒரு டவுன் பஸ் வந்து நிற்க.. செல்வியின் பக்கத்தில் இருந்த பெண்..
'' ஏய்.. வாடி போலாம்.. பஸ் வந்துருச்சு..'' என செல்வியை அழைத்தாள்.
சில நொடிகள் யோசித்த செல்லி உடனே சொன்னாள்.
'' ஏய்.. இருடி.. அடுத்த பஸ்ல போலாம்..''
என்னை லேசாக முறைத்தாள் அந்தப் பெண்..!
''அவசரமா..?'' என்றேன்.
''ஆமா..!'' முறைப்பாகச் சொன்னாள் தோழி.. !!
பஸ் நகர்ந்து போனதும் பஸ் ஸ்டாப்பில் கூட்டம் குறைந்தது.
''யாரு.. உங்க பிரெண்டா.?'' என்று செல்வியைக் கேட்டேன்.
''ஆமா.. பேரு புவனா.. ஒண்ணாதான் வேலை செய்றோம்.. வேலை இல்லாததால இவ வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போறா..'' என்றாள் செல்வி.
''ஓஓ.. எங்க இருக்காங்க..?'' என்று நான் புவனாவைப் பார்த்தபடி கேட்டேன்.
அவள் என் மீது கடுப்பாகி விட்டாள்.
'' ம்ம்.. ஊருக்குள்ளதான்..'' என எரிச்சலுடன் சொன்னாள் புவனா.
அவளுக்கு இப்போது என்மேல் ஏன் இவ்வளவு காண்டு என்று தெரியவில்லை. செல்வி போகாமல் என்னுடன் பேசிக் கொண்டிருப்பதுதான் காரணம் என்று தோன்றியது.
புவனா கருப்பாக இருந்தாலும் செமக்கட்டையாக இருந்தாள். விண்ணென விடைத்த மார்பும், நச் சென கிறங்கடிக்கும் உடம்புமாக, பார்த்தவுடன் அவள் மேல் ஒரு ஆசை வந்தது.
ஆனால் அதற்குள்.. செல்வி என்னிடம் கேட்டாள்.
''உங்க பிரெண்ட பாப்பிங்களா.?''
''ரொம்ப நாளாச்சு அவன பாத்து.. எப்பயாச்சும் போன் பண்ணி பேசுவான்.''
''கொழந்தை இருக்கா அவருக்கு..?''
''ம்..ம்ம்..! ஒரு பையன்..!''
''ஓஓ..!''
'' சரி.. உங்களுக்கு..?'' என நான் அவளை கேட்டேன்.
சிரித்தபடி உதட்டை பிதுக்கினாள்.
''இல்ல...''
'' ஏன்..?''
''இல்ல.. அவ்ளதான்..'' என்றாள்.
"ஓஓ" எனக்கு ஒரு மாதிரி ஆனது.. !!
புவனா இன்னும் என்னை முறைத்தபடிதான் இருந்தாள். அவள் முகத்தில் ஏதோ ஒரு கோபம் நன்றாகத் தெரிந்தது.. !!
''மறுபடி நான் உங்கள.. இப்படி திடுதிப்புனு பாப்பேனு நெனைக்கவே இல்ல..! உங்களுக்கு எத்தனை கொழந்தைக..?'' என்று கேட்டாள் செல்வி.
''ம்ம்.. நாலு..'' என்றேன்.
சிரித்தாள்.
''பின்ன என்னங்க.. அவனவன் இன்னும் கல்யாணமாகத கட்டை பிரம்மச்சாரிய இருக்கப்ப.. எத்தனை கொழந்தைகனு கேட்டா... கோபம் வராதா..?'' என்றேன்.
''ஓஓ..!'' எனச் சிரித்தாள் ''ஏன் இன்னும் பண்ல..?''
''யாரும் வெத்தல தட்டோட வரலிங்க.?''
இவ்வளவு நேரமும் என்னை
முறைத்துக் கொண்டிருந்த புவனாவும் என் பேச்சைக் கேட்டு தன்னை மீறி சிரித்து விட்டாள்.
''பொண்ணு பாக்கவே இல்லயா.?'' செல்வி கேட்டாள்.
நான் புவனாவை பார்த்தவாறு சொன்னேன்.
''பாத்துட்டே இருக்கேன்..!''
புவனா குறுக்கிட்டாள்,
"அப்ப.. இதுவரை பாத்த பொண்ணுக்கு உங்கள புடிக்கல போலருக்கு..?'' என்றாள் கிண்டலாக.
''அப்படி இல்ல.. எனக்குத்தான் மனசுக்கு புடிக்கல..! புடிச்சா ஒடனே
பண்ணிருவேன்..!''
''த்ரிசாவ கூடவா புடிக்கல..?'' எனக் கேட்டாள் புவனா.
''லட்சம் பேருக்கு புடிச்ச பொண்ணு ஆகாது. நம்ம ஒத்த ஆளுக்கு புடிச்ச பொண்ணா இருக்னும்..!'' என்றேன்.
செல்வி ''இவள புடிச்சிருக்கா..?'' என்று கேட்டாள்.
''ரொம்..'' என நான் ஆரம்பிக்கும் முன்.. புவனா சொன்னாள்.
''எனக்கு புடிக்கலே..!''
''ஏய்.. ஏன்டி? ரொம்ப நல்லவருடி. இவர கட்டிட்டா நீ.. லைப் லாங்.. சூப்பரா இருப்ப..!''
''அது சரிடி.. எரும..! நான் என்ன இவர மாதிரி ஆள் இல்லாம.. வெறிச்சு வெறிச்சு பாக்கற ஆளா என்ன?" என்றாள்.
''ஓ.. ஆல்ரெடி ஆள் இருக்கா உங்களுக்கு. ?'' என நான் கேட்க..
''ஆமா..'' எனச் சிரித்தாள் செல்வி.
இடது கையின் இரண்டு விரலைக் காட்டினாள் புவனா.
''என்ன. .?'' என்று கேட்டேன்.
''ரெண்டு பேரு..'' என்றாள் சிரித்தபடி.
''ஓஓ.. பட்.. கம்மிதான்..!'' என்றேன்.
''அட்டன் டைம்ல மட்டும்தான் ரெண்டு பேர்..!'' என்றாள்.
''ஓஓ.. அப்படின்னா..?''
''பிப்டி போட்டாச்சு..!''
''மை காட்.. லவ்வா..?''
''நோ.. இல்லே.. ப்ரபோசல்..''
''அப்ப லவ்வு...?''
''ஜஸ்ட்.. ம்ம்... மினிமம்.. டுவல்வ்னு நெனைக்கறேன்..!'' என்றாள்.
"சூப்பர் கேர்ள்..!''
''யா..!!''
''குட்.. கண்டினியூ..!''
''தேங்க் யூ..!''
''ஏதாவது.. அப்படியே.. சந்துல.. சின்னதா.. நம்மளுக்கு ஒரு கேப்புக்கு ஒரு வாய்ப்பு.. ??" என்றேன்.
சிரித்தாள். "இப்ப நோ ஐடியா... பட். ப்யூச்சர்ல பாக்கலாம்..!''
''ச்சீ.. சும்மார்ரீ..' என அவளை அடக்கினாள் செல்வி ''அவ கதைய விடறாங்க நிரு..!''
''ஜாலியா பேசறாங்க..! வாங்களேன்.. டீ காபி ஏதாவது சாப்பிடலாம்..'' என நான்
அழைத்தேன்.
''நோ டீ காபி. ஐஸ்க்ரீம்னா நா வரேன்.'' என்றாள் புவனா.
''ஆசப்பட்டு கேக்கறீங்க.. சரி வாங்க..'' என்றேன்.
மறுப்பில்லாமல் இரண்டு பேரும் என்னுடன் வந்தார்கள். பக்கத்திலேயே ரோட்டை தாண்டி ஒரு ஐஸ்க்ரீம் பார்லர் இருந்தது.
பேசினாள் புவனா.
அப்போதுதான் நான் செல்வியை கேட்டேன்
''அப்றம்.. கேக்க மறந்துட்டேன்.. உங்க வீட்டுக்காரரு என்ன பண்றாரு..?''
ஐஸ்க்ரீம் சுவைத்த உதடுகளை பிதுக்கினாள் செல்வி.
''யாருக்கு தெரியும்..?''
''அப்படின்னா..?'' திகைப்புடன் அவள் முகம் பார்த்தேன்.
''அவனை பிரிஞ்சு வந்து ஒரு வருசமாச்சு..'' என்றாள்.
''ஓஓ.. ஏங்க...? என்னாச்சு..??''
''ப்ச்.. ஒத்து வரலே.. மூணாவது மாசமே திரும்பி வந்துட்டேன்..!'' என ஒரு
ஆழப்பெருமூச்சுடன் சொன்னாள் செல்வி.. !!