செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

பட்டு ரோஜா -10

 கயல்விழி உற்சாகமாகக் காணப் பட்டாள். ஆனாலும் அவனைப் பார்த்தும்.. உடனே சிரிக்கும் கண்களும். . இதழ்களும்.. இன்று சிறிது தாமதம் காட்டியது.!


அதை உணர்ந்து.. அவளிடம் கேட்டான் நந்தா.

'' என்னாச்சு கயல்..?''


''எப்படி இருக்கீங்க..?'' எனக் கேட்டாள்.


''நான் ஓகே.! எங்க போனீங்க.. நாலு நாளா.?''


''ஊருக்கு போய்ட்டேன்.! ஒரு மாரேஜ்...'' என்றாள். 


"கல்யாணமா..? யாருக்கு.?"


"எங்க பெரியப்பா பொண்ணு.." விளக்கமாகச் சொன்னாள். 


''ஒரு போனாச்சும் பண்ணிருக்கலாமில்ல..? என்கிட்ட உங்க நெம்பர் வேற இல்ல..?''


அவள் ஒன்றும் சொல்லவில்லை.


'' மிஸ் யூ கயல்.. எப்ப வந்தீங்க..?''


''லாஸ்ட் நைட்...''


''எந்த ஊரு..?''


'' ஊட்டி..!'' என்றாள். 


சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பின் சொன்னாள்.


'' அப்றம் நந்தா.. உங்களுக்கு ஒரு சேட் நியூஸ்..''


''என்ன..?''


''எனக்கு.. ஃபிக்சாகிருச்சு..''


''என்னது.?''


''மேரேஜ்..!!'' என்றாள்.


''வ்வாட்... அலோ.. என்ன சொல்றீங்க..? வெளையாடாதிங்க..?''


''வெளையாடலை நந்தா..! மாரேஜ்க்கு போனோம் இல்ல.? அங்க ஒருத்தர் என்னை பாத்து ரொம்ப புடிச்சுப் போயி.. எங்கப்பா அம்மாகிட்ட பேசினாங்க.. எல்லாம் ஓகேவாகி.. கன்ஃபாரம் பண்ணியாச்சு..!'' என இடது கை விரலைக் காட்டினாள், ''அவரு போட்டு விட்ட ரிங்கு..''


''நிச்சயமும் பண்ணியாச்சா..?''


''அதில்ல...! இது.. அவரு கைலருந்து... போட்டு விட்டது.! நிச்சயம் பண்ண ரிங் இல்ல..!'' என்றாள். 


''அப்ப.. நீங்களும்.. ஓகேதான்..?'' என மன வருத்தத்துடன் கேட்டான்.


''வீட்ல எல்லாருக்கும் புடிச்சுப் போச்சு.. அவரை.! நல்ல எடம்.. நல்ல வசதி..!''


''ஓகே..! என்ன பண்றாரு.. உங்க.. அவரு..?''


''பிசினஸ்..!"  என்றாள். "போறாமை போலருக்கு..?''


''இருக்காதா.. பின்ன.? இப்படி ஒரு தேவதையை.. சொந்தமாக்கிகப் போற அந்த புண்ணியவான் குடுத்து வெச்சவன்..!''


''ஹலோ.. ஹலோ..! எப்படி இருந்தாலும்.. நான் யாருக்காச்சும் சொந்தமாகத்தான் வேணும்..! நான் ஒன்னும் உங்கள ஏமாத்திடலயே..? ஜஸ்ட்.. பிரெண்டா பழகினோம்.! அவ்ளோதான..? நம்ம பிரெண்ட்ஷிப்.. லைப் லாங் இருக்கும்.. ஓகே.?'' என்றாள்.


''ஓகே..! வாழ்த்துக்கள்..!!'' என்று கை நீட்டினான்.


அவளும் கை நீட்டினாள்.

''தேங்க்ஸ்..''


''நான் உங்கள.. மிஸ் பண்றேன்..!''


''உங்க ஃபீல்.. புரியுது..!'' எனச் சிரித்தாள். ''ஃபிக்ஸ் பண்ணியாச்சு.. ஸோ...''


''போங்க..!!'' என்றான் பின் மெதுவாக..

'' இந்த பொண்ணுங்களே இபபடித்தான் தெரிஞ்சு போச்சுடா..'' எனப் பாடியபடி.. அவளுக்கு பை சொல்லிக் கிளம்பினான் நந்தா..!!


      காயத்ரியை மிரட்டிய மேல் வீட்டு தேவி, திருமணமானவள். அவளுக்கு  இரண்டு பையன்கள்.! ஆனால் நல்ல அழகி.! 


சராசரியை விடவும் சிறிது உயரம்.. சிவந்த நிறம்.. அகன்ற விழிகள்.. நீண்ட மூக்கு.. மெல்லிய உதடுகள்.. வெள்ளைப் பல் வரிசை.. அவள் சிரிக்கும்போது கூடுதல் அழகைக் கொடுக்கும்.! நீண்ட கழுத்து.. அகன்ற மார்பு.. அதில் பருத்த.. இரு பனம் பழங்கள் கனத்துத் தொங்கும்.. அதன் அழகு.. ஆண்களின் மனதில் காமப் புயலை வீசும்..!!


தேவியைப் பார்க்கும் போதெல்லாம் நந்தா புன்னகைக்கத் தவறமாட்டான். அவன் புன்னகைக்கு.. அவளும் பதில் புன்னகை காட்டிப்போவாள்.! 


யாருமற்ற தருணத்தில்.. அவள் மொட்டை மாடிக்கு வந்தபோது.. அவளிடம் கேட்டான் நந்தா.!


''காயத்ரி விஷயத்துல.. நீங்க ஏன் தேவையில்லாம ஆஜராகரீங்க..?''


'அதெல்லாம் ஒன்னுமில்லயே..'' என்றாள் தேவி.


''அப்படியா..? சரி.. இப்படியே விட்றுங்க..!'' என்றான்.


''ஹலோ.. என்ன மெரட்ற..?'' எனச் சட்டென சீறினாள்.


''நீங்க.. ஏன் அவளை மெரட்ரீங்க..?''


''ஆமா.. மெரட்டினேன். சின்ன பொண்ணு.. பாவம்.. கெட்டுப் போனா என்ன பண்றதுனு..? கொஞ்சம் கண்டிச்சு வெச்சேன். ஒரு  படிக்கற சின்னப் பொண்ண.. உஷார் பண்றயே.. அது தப்பா தெரியல.?''


''உங்களுக்கு ஏங்க இத்தனை பொறாமை.? யாரு எப்படி போனா.. உங்களுக்கென்ன..?''


''அலோ.. உன்மேல எனக்கென்ன பொறாமை.? நான் எதுக்கு உன்மேல பொறாமை படனும் சொல்லு..?''


''எனக்கென்ன தெரியும்..? என்ன காரணமா இருக்கும்னு உங்களுக்குத்தான தெரியும்..?''


''தூ.. கருமம்..!'' என்றாள் ''எனக்கு புருஷன் இருக்கப்ப நான் எதுக்கு.. கண்டவன்மேல ஆசைப்படனும்..? அதோட நீ ஒன்னும் அழகன் இல்ல. உன் மூஞ்சிய போய் கண்ணாடில பாரு மொதல்ல..'' என்று திட்டிவிட்டுப் போய்விட்டாள்..!!


அடுத்த நாளே.. அந்த விசயம் கயல்விழிக்குப் போய்விட்டது. 


நந்தா பஸ்க்கு போய் நின்றபோது.. கயல்விழி அவனிடம் கேட்டாள்.


''உங்கள பத்தி.. ஒரு நியூஸ் வந்துச்சே.. உண்மையா.. நந்தா..?"


''என்ன நியூஸ் கயல்..?'' நந்தா கேட்டான்.


''உங்க ரூம்க்கு.. கீழ் வீட்ல இருக்கற பொண்ண.. லவ் பண்றீங்களாமே.. உண்மையா..?'' என அவள் கேட்க... திகைப்பானான் நந்தா.


''சே.. என்ன ஒரு வதந்தி..? யாரு சொன்னது.. உங்களுக்கு. .?''


''வதந்தியா..?'' சிரித்தாள் ''நம்பகமான ஆளுதான் சொன்னாங்க.! டெய்லி அந்த பொண்ணு.. உங்க ரூம்க்கு வந்து.. பேசிட்டு போறாளாமே..?''


''யாரோ உங்களுக்கு ராங் இன்ஃபர்மேஷன் குடுத்துருக்காங்க..! அந்த பொண்ணு என்கிட்ட வந்து... மேக்ஸ்ல டவுட் கேப்பா. அவ்ளோதான். மத்தபடி நீங்க நெனைக்கற மாதிரிலாம் தப்பா எதுவும் இல்ல.! அப்படி யாராவது தப்பா சொன்னா.. அதுக்கு நான் என்ன பண்ண முடியும். ?''


''நீங்க அவள லவ் பண்ல..?''


''ப்ச்.. பண்ல..? சப்போஸ்.. நான் அப்படியே லவ் பண்ணாக்கூட அதுல.. உங்களுக்கு என்ன இருக்கு..?''


''சரி விடுங்க..! நான் கேள்விப்பட்டேன்.! பண்ணுங்க.. எனக்கொன்னும் இல்ல..! என்ன.. சின்ன பொண்ணு.. காலேஜ் போறவ.."


''ஸோ வாட்..?''


கண் சிமிட்டி..'' என்ஜாய்..!!'' என்றாள்.


''அலோ....''


''தெரியும் சார்..! ஆட்டோ விட்டு இறங்கி.. அட்ரஸ் கேக்க வந்த அடுத்த நிமிசமே.. என்கிட்ட மீட்டர் போட்டிங்க..? இப்ப அந்த பொண்ணே உங்ககிட்ட டவுட் கேக்க வந்துருக்கா.. சார்ஜ் பண்ணாமயா விடுவிங்க..?'' என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.


''அப்படியெலலாம் இல்லீங்க.. எல்லாரும்.. கயல் மாதிரி வருவாங்களா..?'' என்று மலுப்பலாகச் சிரித்தான் நந்தா.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!