வியாழன், 8 ஆகஸ்ட், 2024

ஜோதிடம்.. !!

 ஜோதிடத்தில் பரிகாரம் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ஒன்றுதான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லை அளவில்தான் பலிக்கும்.  


உங்களுக்கு நடக்க வேண்டிய ஒன்று அவயோக கிரகங்களாலோ, தசா புக்திகளாலோ தடை பட்டிருந்தால், அந்த தடையை நீக்கி, செயலை நடத்திக் காட்ட பரிகாரம் உதவும். அதையும் முறையாக, உளமாற நம்பி கடைபிடிக்க வேண்டும். 


ஆனால் அதுவும் பணமாகவோ, பொருளாகவோ, ஆயிரக் கணக்கிலோ லட்சக் கணக்கிலோ செலவழித்தால் மட்டும் சரியாகிவிடாது.  அதற்கு தேவை முழுமையான தெய்வ, கிரக காரக நம்பிக்கை. எதையும் மனமுவந்து முன் வந்து செய்தல்.


பரிகாரம் சொல்லும் ஜோதிடருக்கு காணிக்கை கொடுக்கலாம், தட்சணை கொடுக்கலாம், ஆனால் ஜாதகர் நம்பிப் பிடிக்க வேண்டியது தெய்வத்தின் பாதங்களைத்தான். 


யாராக இருப்பிணும் எவராக இருப்பிணும் முதலில் பிடிக்க வேண்டியது அவரவர் குலதெய்வத்தின் பாதங்களைத்தான். அதன்பிறகே மற்ற தெய்வங்கள் துணை புரியும்.


அதே சமயம் அந்த பரிகார முறைகள் எல்லாம்  நடக்கவே நடக்காத ஒன்றையோ, உங்கள் ஜாதகத்தில் இல்லாத ஒன்றையோ நடத்த உதவவே உதவாது. 


உதாரணமாக, ஒருவர் ஜாதகத்தில் திருமண அமைப்பு இருந்து, அந்த தசா புக்தி காலங்களும் வந்து திருமணம் தடைபட்டால்.. அப்போது பரிகாரம் உடனே பலிக்கும். ஆனால் திருமண அமைப்பே இல்லை என்றால் எந்த பரிகாரமும் திருமணத்தை நடத்தி வைக்காது. இதேபோலத்தான் குழந்தை அமைப்புக்கும். 


குறிப்பாக "சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்" என்பதைப்போல, தடைகளை நீக்க பரிகாரம் உதவும். ஆனால் இல்லாததைக் கொடுக்க எந்த பரிகாரமும் உதவாது என்பதே ஜோதிட உண்மை.


அதையும் மீறி பரிகாரத்தால் ஒன்றை நிகழ்த்திக் காட்ட முடியும் என்று சொல்லும் ஜோதிடரை நம்பி ஏமாறுபவர்களின் கிரக நிலைகள் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


உண்மையில் ஜோதிட பரிகாரத்தால் எதையும் சாதிக்க முடியும் என்றால் இன்றைய தினப்படி உலகின் அனைத்து துறையிலும் ஜோதிடரே முதன்மை நபராக இருப்பார்.


ஒரு பரிகாரத்தால் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியும் எனும்போது எந்த நாட்டிலும் முதல்நிலை குடிமகனாக, அதாவது பிரதமராகவோ, குடியரசு தலைவராகவோ ஒரு ஜோதிடர்தான் இருந்திருக்க வேண்டும்.


 அதைப்போலவே அடுத்தடுத்த உயர் நிலைகளிலும் ஒரு ஜோதிடரே அம்பானி, அதானியாக, பல நிறுவன அதிபர்களாக மாறியிருப்பார்கள். 


இந்த பதிவை ஒரு கேலிக் கூத்தாக நினைப்பவர்கள் கடந்து சென்று விடுங்கள். இது உங்களுக்கானது இல்லை. 


 அதேசமயம் இதில் உள்ள உண்மையை மறுப்பவர்கள் ஜோதிட பரிகாரத்தால் எதையும் சாதித்துக் காட்டலாம்.. !!

புதன், 7 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம்பூ -3

 


"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.. உன்னை மொத.. கழுத்த நெறிச்சு கொல்லனும்டா.." என்றாள்.


நான் கோபப்படவில்லை. அடி வாங்கிய கன்னத்தை இடது கையால் தேய்த்தபடி சிரித்தேன்.


"சிரிக்கறியா..?" என்று மீண்டும் அடித்தாள்.


"நீ என்னை இப்படி அடிக்கறதால அந்தாளு மாறிருவார்னு நெனைக்கறியா கிரி? நீ அடிக்க வேண்டியது என்னையில்ல, அவரை"


முறைத்துப் பார்த்தாள்.  லைட் வெளிச்சம் பட்டு அவளது மூக்குத்தி மினுக்கியது. 


அவள் மூக்கு அழகாத்தான் இருக்கும். அதில் மினுக்கும் மூக்குத்தி சில சமயம் அவளை செக்ஸியாகக் காட்டும்,


"சரி.. உன் ஆத்திரம் தீரனும்னா என்னை அடிச்சுக்கோ.. ஏன்னா நான் உன் வீட்டு உப்பைத் திங்கறேன்ல" என்றேன். 


சட்டென அவள் கண்கள் கலங்கி கண்ணீர் வெளியேறி விட்டது. 


"ச்ச.. போடா.." எனச் சொல்லிவிட்டு முந்தானையால் மூக்கைத் துடைத்தபடி எழுந்து போய்விட்டாள். 


சாப்பிட்டு முடித்த நான் தட்டைக் கழுவி வைத்து விட்டு மீண்டும் என் அறைக்குப் போய் படுத்து விட்டேன்.  


கிரிஜாவை நினைக்க கவலை வந்ததுதான். ஆனால் இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றே தோன்றியது.. !!


மீண்டும் நான் சத்தம் கேட்டு கண்விழித்த போது விடிந்து விட்டிருந்தது.


சீனு அண்ணா வந்திருந்தார். கிரிஜா அவருடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.


நான் விழிக்கும் முன்பாக என்னென்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.


"ஆமாடி.. நான் ஆம்பளை அப்படித்தான் இருப்பேன். நீ பொம்பளைன்னா.. ஒரு புள்ளைய பெத்துக் காட்டு பாக்கலாம். ஊரெல்லாம்.. என்னை பொட்டப் பையன்னு பேசறாங்க உன்னால.." என்று சத்தமாக கத்திக் கொண்டிருந்தார் சீனு.


"அதுக்காக.. நான் என்ன கண்டவன் கூடவா போய் படுத்து புள்ள பெத்துக்க முடியும்..? நீ குடுத்தாத்தான் புள்ளை.. உன்னால குடுக்க முடியலேன்னு என்னை மலடியாக்காதே" என்று கிரியும் திருப்பிக் கத்தினாள். 


நான் எழுந்து அறையை விட்டு வெளியே போனபோது சண்டை முற்றியிருந்தது.


கிரிஜாவின் கன்னத்தில் "பளார்.. பளார்" என இரண்டு அறை விட்டார் சீனு.


சட்டென என்னைப் பார்த்தவர் அவளை அடிப்பதை நிறுத்திவிட்டு மேலும் கோபமாகக் கத்திவிட்டு வெளியேறிப் போய் விட்டார்.


கிரிஜா மனமுடைந்து போய் தரையில் உட்கார்ந்து, கால்களை கட்டிக்கொண்டு கோவென அழத் தொடங்கினாள். 


நான் மெல்ல நடந்து அவள் அருகில் போய் நின்றேன்.


"கிரி.."


அவள் தலை குனிந்து தொடர்ந்து அழுதாள். 


நான் மீண்டும் "கிரி." என்று கூப்பிட்டேன்.


என்னை நிமிர்ந்து பார்த்தாள்.


அவள் கண்களிலிருந்து வழிந்த நீரைவிட மூக்கிலிருந்து அதிகம் ஒழுகியது. முந்தானையால் மூக்கைத் துடைத்துப் பிழிந்தாள். சத்தமாகவே உறிஞ்சிக் கொண்டாள். 


"நீ எதுக்கு காலைலயே வம்பிழுத்த?"


"எரிச்சலை கிளப்பாம மூடிட்டு போடா உன் வேலையை பாத்துட்டு" என்றாள்.


அவள் அழுகைக் குரல் வேறு மாதிரி இருந்தது. தலைமுடி கலைந்திருந்தது. மாராப்பு ஒதுங்கியிருந்தது. ரவிக்கைக்கு நடுவே பிதுங்கியிருந்தது. பிதுங்கிய சதைமேல் தாலி தெரிந்தது.


ஒரு நிமிடம் நின்று அவளைப் பார்த்துவிட்டு பாத்ரூம் சென்றேன்.


நான் முகம் கழுவிக்கொண்டு போனபோது கிரிஜா தன் அறைக்குள் போய்விட்டிருந்தாள்.


இன்று அவள் சமைக்கப்போவதில்லை என்று தெரிந்தது.


 நான் காலைக் கடன்களை முடித்து பல் விளக்கி, குளித்து உடை மாற்றிக்கொண்டு கடைக்குக் கிளம்பினேன்.


நான் கிளம்பிச் செல்லும்வரை கிரிஜா தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. 


அனேகமாக அவள் இன்று ஊருக்குக் கிளம்பிப் போய் விடுவாள் என்று நினைத்துக் கொண்டேன்.


நான் கடைக்குப் போனபோது சீனு எதையோ துடைத்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். 


"சாப்பிட்டியா?" என்று கேட்டார். அவர் முகம் உர்ரென்றிருந்தது. இரவு தூக்கம் இல்லாததை அவர் கண்களைப் பார்த்தவுடனே சொல்லிவிடலாம்.


"இல்ல.."


"ஏன்..? அவ ஒண்ணும் செய்யலியா?" முறைத்துக் கொண்டு கேட்டார்.


"செய்யல. ரூமை விட்டு வரவே இல்ல.."


பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து நீட்டினார். 


"சரவணபவன்ல போய் சாப்பிட்டு வா"


நான் எதுவும் பேசவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் சரவணபவனுக்குச் சென்றுவிட்டேன். 


அவர் கடையைத் திறக்கும் முன்பே அங்கே சென்றிருப்பார் என்று தெரியும்.. !!


சரவணபவனில் காலை நேரக் கூட்டம் இருந்தது. இளையவர்களைவிட முதியவர்கள்தான் அதிகம் சாப்பிட வந்திருந்தனர்.


‘கிரிக்கு இன்று விரதம்தான்’

விரும்பிப் படித்தவை.. !!