ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

அதிர்ஷ்டமும் உழைப்பும்.. !!

 ஒருவனுக்கு நல்ல நேரம் கூடி வந்தால் குப்பையில் கிடப்பவனையும் கோபுரத்தில் ஏற்றி வைக்கும். 

அதே நேரம் அதிர்ஷ்டம் என்பது வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். உழைப்பு என்பது அதில் வெற்றியைத் தேடித் தரும்.

அதிர்ஷ்டமும் உழைப்பும் கைகூடினால் பேரையும் புகழையும் அள்ளிக் கொடுக்கும்.

அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி, சோம்பிக் கிடப்பவனுக்கு வெற்றி நீடிப்பதில்லை, என்பதற்கு உதாரணம் இந்தக் கதை. 

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு.. வீட்டில் ஏழ்மை.. தொடர்ந்து பல நாட்களாக பசி... வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு... ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன். 

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.

பையனிடம், ”டேய் இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

ஆஹா… இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். 

நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். 

சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான்.

மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா..? நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.

அறிவு தாகம் ஏற்படாமல் போயிருந்தால் அவர் உலகப் புகழ் பெற்றிருக்க முடியாது. குதிரை லாய முதலாளியாக மட்டுமே இருந்திருப்பார்... !!


ஈரமான தாழம் பூ -2

 


"நிரு.. டேய் நிரு" கிரிஜா என்னைத் தட்டி எழுப்ப சட்டென தூக்கம் கலைந்தேன்.


"ம்ம்?"


"அவரு இன்னும் வரலடா. டைம் பாரு என்னாச்சுனு.." என்றாள்.


அதுக்கு நான் என்ன பண்ண?’ என்று மனதுக்குள் நினைத்தபடி, வாட்சைப் பார்த்தேன். 


சரியாக பன்னிரெண்டு மணி. நள்ளிரவு. அதனால்தான் என்னை எழுப்பியிருக்கிறாள். 


அவளது கணவர் வீட்டுக்கு வரவில்லை. வரப் போவதும் இல்லை. அதைச் சொல்லவும் முடியாது. 


அறைக்குள் வந்து லைட்டைப் போட்டு விட்டிருந்தாள். பளிச்சென எரிந்த விளக்கின் வெளிச்சத்தில் கண்கள் கூசின.


நான் தூக்கக் கலக்கத்துடன் அவளைப் பார்த்தேன்.


முகம் பளபளத்தது. ஆனால் அவள் கோபமாக என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். 


அந்த முறைப்பு என்னையும் கடுப்பாக்கத்தான் செய்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டேன். 


"நெஜமா சொல்லு.. எங்க போனாரு..?" எனக் கேட்டபடியே என் பக்கத்தில் உட்கார்ந்தாள்.


"தெ.. தெரியல.. கிரி.."


"நறுக்" கென என் மண்டையில் கொட்டினாள்.


"வந்து வாச்சிருக்கியே.. எனக்குனு..! ம்..! எந்திரிச்சு வா.. சாப்பிட்டு படு..!" என்றவள் ஒரு ஆழப் பெருமூச்சை வெளியேற்றினாள். 


அவளின் நெஞ்சக் கனிகள் திடுமென மேலேறி இறங்கி தன் அதிர்வுகளைக் காட்டியது.


நான் மண்டையைத் தேய்த்தபடி அவளை முறைத்துப் பார்த்தேன். 


"என்ன மொறைக்கற?" குரலில் சூடு தெரிந்தது. 


"அவரு வரலேனா அதுக்கு நானா பொறுப்பு?"


"கூடதானே இருக்க?"


"கூட இருந்தா..?"


"நீயும் ஆம்பளை பையன்தானே.. கேக்க துப்பில்ல? உன்னை எதுக்கு கூட வெச்சிருக்கறதுனு வேண்டாமா? தடி முண்டமே"


நான் மேலே பேசவில்லை. 


மீண்டும் என் மண்டையில் மெல்லமாக ஒரு கொட்டு வைத்து,

"எந்திரிச்சு வந்து தின்னுட்டு படு" என்றுவிட்டு எழுந்து போனாள்.


நான் எழுந்து போய் கை கழுவி கொஞ்சமாக தண்ணீர் குடித்துவிட்டு ஹாலில் போய் கீழே உட்கார்ந்தேன். 


இன்னும் டிவி ஓடிக் கொண்டிருந்தது.  பாக்யராஜ் மழையில் நனைந்தபடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். 


கிரிஜா உணவைப் போட்டு வந்து என் முன்னால் வைத்தாள்.


பசியில் என் பட்டினி வயிறு கபகபவென இருந்தது. உணவை பார்த்ததும் நான் சகலத்தையும் மறந்து விட்டேன்..!


கப் கப்பென அள்ளிச் சாப்பிடத் தொடங்கினேன்.


இந்த கிரிஜா என் பெரிய மாமாவின் பெண். அவளுக்கு இருபத்து ஆறு வயது ஆகிறது. கல்யாணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் அவளுக்கு குழந்தை ஆகவில்லை. 


அவள் கணவர் ஒரு   எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருக்கிறார். 


அவருக்கு வயது அதிகம்தான். ஆனால் ஆள் ஜம்மென்று இருப்பார். அவருக்கு என் மாமா பெண்ணான இந்த கிரிஜா அலுத்துப் போனாளோ என்னவோ தெரியவில்லை.  


அவர் இப்போது வேறு ஒருத்தியை செட் பண்ணி விட்டார். இது அவளுக்கும் தெரியும். அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். 


சில சமயம் கிரிஜா கோபித்துக் கொண்டு ஊருக்கு போய் விடுவாள். பிறகு தானே வருவாள். அல்லது நான் போய்.. ஆயிரம் பொய்யைச் சொல்லி அவளை அழைத்து வருவேன்.


மெக்கானிக்கல் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்த என்னை அழைத்து வந்து அவளது கணவன் கடையில் வேலைக்கு சேர்த்து விட்டாள்.


 நான் வந்து ஒரு வருடம் ஆகிறது.. !!


திடுமென.. "நீயுமாடா கூட்டு..?" என்று கேட்டாள் கிரிஜா.


நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். 

 "என்ன கிரி..?"


"அந்த ஆம்பள கூட சேந்துட்டு.. நீயும் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்றியா..?" என்று லேசாக பிசிறடிக்கும் குரலில் கேட்டாள்.


"ச்ச.. அப்படியெல்லாம் இல்ல கிரி.."


"சீ போடா..! நீ என் சொந்தம்.. எனக்கு சப்போட்டா இருப்பேனு.. உன்னை என் வீட்ல சேத்தா.. நீ.. அந்தாளுக்கு சப்போர்ட் பண்ற. அதான்டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.." என்று அழுவது போலச் சொன்னாள்.


அவள் கண்களில் மெலிதான நீர் தேக்கம்.


நான் என்ன சொல்வதெனப் புரியாமல் தடுமாறியபடி அவளைப் பார்த்தேன்.


அவளது வலது பக்க முந்தானை சரிந்திருந்தது. அது மார்பை விட்டு தாராளமாக ஒதுங்கியிருக்க.. கும்மென்று புடைத்த.. அவளின் வலப்பக்க மார்பு.. விம்மியெழ..

"உனக்கு கூட என்மேல பாசமே இல்லடா." என்றாள்..!


அவளின் திமிரும் மார்பின் மீது விழுந்த என் பார்வையை சட்டென மாற்றினேன். 


"அந்தாளு எங்க போறார்னு.. உனக்கு தெரியும்தான..?" என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.


"இ.. இல்ல கிரி.. எனக்கு தெரியாது.." என்று நான் பொய் சொன்னேன்.


எனக்குத் தெரிந்தாலும் நான் உண்மையைச் சொல்லும் நிலையில் இல்லை. 


என்னையே முறைத்து பார்த்தாள்.


நான் சிரித்து மழுப்பினேன்.


அடுத்த நொடி, "பளீ "ரென என் கன்னத்தில் அறைந்தாள் கிரிஜா.. !!




விரும்பிப் படித்தவை.. !!