வியாழன், 11 ஜூலை, 2024

மென் மோகம் -3

 டாக்டரிடம் பையனைக் காட்டி, மருந்து தடவி கட்டுப்போட்டு, அவன் கத்தக் கத்த ஊசி போட்டு, மாத்திரை மருந்துகளை வாங்கிக்கொண்டு அவனைத் தூக்கிக் கொண்டு குடைபிடித்து நடந்தபோது கமலிக்கு அலுப்பாகத்தான் இருந்தது. 


‘நாளைக்கு லீவ் போட வேண்டியிருக்குமோ?’ என்று கவலையாகவும் இருந்தது. 


குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் போயவிட்டதே என்று மாமியார் மீது ஒரு பக்கம் கோபம் வந்தது.  ஆனால் மாமியார் இங்கிருப்பதைக் காட்டிலும் இல்லாமலிருப்பதே கொஞ்சம் சுதந்திரமாக இருப்பதை உணர்த்தியது.


என்ன செய்வது, ஒரு நல்லது இருந்தால் கூடவே ஒரு கெட்டதும் இருக்கிறதே.!


ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போனபோது சுத்தமாக மழை விட்டிருந்தது.


பையனைப் படுக்க வைத்து விட்டு புடவை ரவிக்கை எல்லாம் அவிழ்த்து உள்ளாடைகளைக் கூட கழற்றிப் போட்டுவிட்டு நைட்டியைப் போட்டுக்கொண்டு பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தபோது மிகுந்த ஆயாசமாக இருந்தது.


பெண்ணையும் கூட்டி வந்து பூஸ்ட் கலக்கிக் கொடுத்து தனக்கும் டீ வைத்துக் குடித்தாள்.


கணவனுக்கு போன் செய்தாள். 

“என்னங்க?”


“சொல்லு?”


“எத்தனை மணிக்கு வருவீங்க?”


“வழக்கம் போலதான். பத்தாகும். ஏன்?”


“உங்க பையன் என்ன பண்ணி வெச்சிருக்கான் தெரியுமா?”


“என்ன பண்ணான்?”


“கீழ விழுந்து காலை ஒடச்சு வெச்சிருக்கான். வந்து மழைல நனஞ்சிட்டே ஆஸ்பத்ரி கூட்டிட்டு போயிட்டு வந்தேன். உங்கம்மா இல்லாம எவ்வளவு சிரமம் பாத்திங்களா?”


“நல்லா சொல்லு? காலை ஒடச்சு வெச்சிருக்கானா?”


“கீழ விழுந்துருக்கான். புண்ணாகிருச்சு. பெருசா இல்ல. கட்டுப்போட்டு ஊசி போட்றுக்கேன். இப்பதான் பூஸ்ட் கலக்கி குடுத்தேன். தோசை சுட்டுக் குடுத்து மாத்திரை குடுத்து தூங்க வெக்கணும்”


“வேற ஒண்ணும் இல்லயே?”


“உங்கம்மாகிட்ட சொல்லுங்க. சீக்கிரம் வந்தா நல்லது. இல்லேன்னா எனக்குத்தான் கஷ்டம். லீவும் போட முடியாது. என்ன பண்ணுறதுனே புரியல”


“அவசியம்னா லீவ் போட்டுத்தான் ஆகணும். குழந்தைக நமக்கு முக்கியம். அப்பறம்தான் வேலை”


“தெரியும். இதைத்தான் சொல்விங்கனு.. சரி வாங்க பேசிக்கலாம். எனக்கு தலை வலிக்குது. நானும் கொஞ்ச நேரம் படுக்கறேன். சீக்கிரம் வாங்க”


மழை விட்டாலும் காற்றின் குளிர் இதமாகத்தான் இருந்தது. குழந்தைகளை பக்கத்தில் படுக்க வைத்து அவளும் படுத்துக் கொண்டாள்.. !!


அன்றிரவு, தன் தோழியுடன் பேசும்போது சொன்னாள் கமலி.


“பெருசா எதுவும் இல்லை. கட்டுப் போட்டு ஊசி போட்டு வலிக்காம இருக்க மாத்திரையும் ஆயின்மென்ட்டும் குடுத்தாங்க. இப்ப வலி தெரியலை. சாப்பிட்டு நல்லா தூங்கறான். நாளைக்கு எப்படினு தெரியல. பையனுக்கு நல்லாருந்தா ஸ்கூலுக்கு அனுப்பி விட்டுட்டு வேலைக்கு வந்துருவேன். வலிக்குதுன்னானா கஷ்டம். நான் இருந்தே ஆகணும். என்ன கொடுமை பாரு..  இப்ப பாத்து இந்த மாமியாக்காரி மக வீட்டுக்கு போய் தொலைஞ்சுட்டா..”


“சொல்லிட்டியா அவங்களுக்கு?”


“இல்ல. சொன்னா அவ்வளவுதான். அவங்க இல்லேன்னா நாங்கள்ளாம் வாழவே முடியாதுங்கற மாதிரி பேசுவாங்க”


“எப்போ வராங்களாம்?”


“தெரியல. ஒரு வாரமாவது ஆகும்னு நெனைக்கறேன்”


“இதைச் சொல்லி கொஞ்சம் முன்னயே வரச் சொல்லலாம்ல? தனியா நீ என்ன பண்ணுவே? ஒரு வாரம் லீவும் போட முடியாது”


“கஷ்டம்தான். அவருகிட்ட சொல்லி ஏதாவது செய்யணும்”


பேசி முடித்து, “சரி நான் தூங்கறேன். எதுன்னாலும் காலைல போன் பண்றேன்” என்றாள். 


“ஆமா கேக்க நெனைச்சேன். அவனோட பேரு கேட்டியா?”


“எவனோட பேரு?”


“அதான் நம்மளை ட்ராப் பண்ணானே.. ஆஸ்பத்ரில கொண்டு வந்து விட்டானு சொன்னியே.. அவன் பேரு”


சட்டென ஒரு நொடி தடுமாறிப் போனாள் கமலி.

“தெரியலயே.. பேரு கேக்கவே மறந்துட்டேன்.” 


பெயர் கேட்டுத் தெரிந்து கொண்டதை அவளிடம் சொல்ல இவளுக்கு ஏனோ மனசு வரவில்லை. பேருக்கே இப்படி, போன் நெம்பரைச் சொன்னால்…


“விடு நம்ம ஆபிஸ் லைன்ல போக வர இருக்கற ஆளுதான? மீட் பண்ணி பிரெண்டாக்கிக்கலாம். இப்படிப்பட்ட ஆளுங்க நட்பு நமக்கு பல நேரத்துல உதவியாக்கூட இருக்கும்” சிரித்தபடி சொன்னாள் தோழி.


“அட ச.. இதுலென்ன உதவி? இப்பல்லாம் உதவிங்கற பேர்ல தொல்லை பண்ற ஆளுங்கதான் அதிகம். அதும் எனக்கென்னவோ அவங்களுக்கு கல்யாணமாகியிருக்கும்னுதான் தோணுச்சு”


“கல்யாணம் ஆகியிருக்கும்ங்கறியா?”


“ஆமா. ஆளப் பாத்தா அப்படித்தான் தெரிஞ்சுது.”


“என்ன வயசிருக்கும்னு நெனைக்கற?”


“மொத மழைக்கு வந்து ஆபீஸ்ல நிக்கறப்ப பாத்தமே.. ஒரு முப்பது பக்கம் இருக்கலாம்”


“ஆனா என்னவோ எனக்கு கல்யாணம் ஆன மாதிரி தோணல”


“எப்படி சொல்ற?”


“கல்யாணமான ஆளுக பார்வை பேச்சு வேற மாதிரி இருக்கும்”


“கல்யாணம் ஆனமாதிரிதான். எனக்கு தோணுது. எதுக்கு வம்பு? பேசாம ஒதுங்கிக்க.. கண்டதெல்லாம் நெனைக்காத”


“அட சே.. நான் என்ன கண்டத நெனைச்சேன்? கல்யாணமாகத பசங்கன்னா கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து ஹெல்ப் பண்ணுவாங்க. அதான்.. மத்தபடி நீ சொல்ற மாதிரி கல்யாணம் ஆனவன்னா.. ரைட்தான். பாவம்.. அவனோட வாழ்க்கைல வெளையாடக் கூடாது”


“ஏன்.. உனக்கு இப்படி புத்தி போச்சு?”


“போடி.. இப்ப அப்படி என்ன சொல்லிட்டேன் நான்?”


“சரி சரி.. டென்ஷனாகாத விடு” சிரித்து, “மாமா கூட டூயட் பாடிட்டு படு”


“இன்னிக்கு டூயட் மட்டும் இல்ல”


“பின்ன?”


“மேட் பண்ணியே ஆகணும். இந்த மழைக்கும் அதுவும் செம மூடா இருக்கு”


“என்ஜாய்..”


“நீ என்ன செய்யப் போற?”


“ப்ச்..  அப்படி எந்த ஐடியாவும் இல்ல”


“சும்மா அலட்டிக்காம ஒரு மேட் போடு.. செம கிக்கா இருக்கும். மழை சீசன்தான் அதுக்கெல்லாம் ஏத்த சீசன்.. ஷ்ஷ்.. என்ன ஒரு க்ளைமேட்? செமையா என்ஜாய் பண்ணலாம்”


“நீ இப்பவே செம மூடுலதான் இருக்க போல?”


“ஆமா.. பெட்ல ட்ரெஸ்ஸே இல்லாம படுத்து செமையா என்ஜாய் பண்ணிட்டு அந்த சுகத்தோட அப்படியே கட்டிப் புடிச்சுப் படுத்து தூங்கனும்”


“செய்..”


சட்டென கட் பண்ணி விட்டாள் கமலி. தோழி சொன்னதைக் கேட்டு அவளுக்கும் மனசு தவிக்கத் தொடங்கியது. 


‘உனக்கு மட்டும்தான் புருஷன் இருக்கானா என்ன? போடி இவளே’




வெள்ளி, 5 ஜூலை, 2024

மென் மோகம் -2

 மழை குறையவும் இல்லை. கூடவும் இல்லை. அவர்கள் நனையாமலுமில்லை. ஆனாலும் அதிகமின்றி, கொஞ்சமாக நனைந்திருந்தனர்.


மெல்லிய மழைத் தூரலில் நனைந்தபடியே ஐந்து கிலோ மீட்டர் தொலைவு தான்டி நிருதிக்குப் பின்னால் இரண்டாவதாக  உட்கார்ந்திருந்த பெண்,

 "அந்த பஸ் ஸ்டாப்ல என்னை எறக்கி விட்றுங்க" என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னாள். 


கண்ணாடியில் பின்னாடி பார்த்துவிட்டு அவள் சொன்ன இடத்தில் பைக்கை நிறுத்தினான். மெல்லக் குலுங்கித்தான் நிற்க முடிந்தது.


இரண்டாவதாக  இருந்த பெண் இறங்கிக் கொண்டாள். 


நடுவில் இருந்தவள் ஆசுவாசப்பட்டுக்கொண்டு சிறிது பின்னால் நகர்ந்து தாராளமாக உட்கார்ந்தாள்.


"ரொம்ப தேங்க்ஸ்ங்க" என்று இறங்கியவள், இடை துவளும் முலையெழுச்சியை மறைத்தபடி தலைக்கு மேல் முந்தானைக் குடையுடன் அவன் பக்கத்தில் வந்து நின்று ஹெல்மெட்டிலிருந்த அவனது  கண்களைப் பார்த்துச் சிரித்தாள். 


கழுத்தில் தாலியுடன் இணைந்த தங்கச் சங்கிலி அவளைத் தனித்தழகுடன் காட்டியது.


''இங்கதான் உங்க வீடா?" அவனும் அவள் முகத்தை சிறிது  உற்றுப் பார்த்தான். 


நீண்டமைந்த முகவெட்டில் அவளின் மூக்கு மட்டுமே கூர்மையாகத் தெரிந்தது. சுருங்கிய சிறு கண்களும் மெல்லிதழ்களும் சிரிப்பில் பளிச்சிடும் வெண்பற்களும் பெண்மையின் இயல்பெனவே ஈர்ப்பு கொண்டிருந்தது. 


"உள்ள போகணும்'' திரும்பி கை காட்டிச் சொன்னாள். பின் தன் தோழியைப் பார்த்து, "நல்லா உக்கோந்துக்கோடி. நீ சீக்கிரம் போய் பையன ஆஸ்பத்திரி கூட்டிட்டு போ. நான் போன் பண்றேன்" என்றாள். 


"சரிடி" அவர்களின் கண்கள் ரகசியமாக  ஏதோ ஒன்றை பேசிக் கொள்வதைப் போலிருந்தன.


 இருவர் கண்களையும் அவனால் பார்க்க முடியாததால் அது அவனுக்குத் தெளிவாகவில்லை.. !!


மழையின் மென்தூரலில் நனைவதைத் தவிர்க்க உடனே விடைபெற்றுக் கிளம்பினர். 


இவ்வளவு நேரமும்  நிருதிக்குப் பின்னால் நெருக்கமாக முதுகில் மார்பணைந்து உட்கார்ந்து கொண்டிருத்த பெண் இன்னும் சிறிது பின்னால் நகர்ந்து அவர்கள் இருவருக்கும்  இடையில் சிறிது இடைவெளி விட்டு நன்றாக  உட்கார்ந்து கொண்டாள். 


அவன் முதுகுக்கும் அவளின் மென் கலசத்துக்கும் இடையில் நன்றாகவே   இடைவெளி உண்டாகியிருப்பதை அவன் முதுகில் அறையும் ஈரக் காற்று  அவனுக்கு உணர்த்தியது. 


அதன் பின்னும் அவன் மழையின்  தூரலில் நனைந்தபடி மெதுவாக  ஓட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.  


பைக்கின் வேகத்தை சிறிது  அதிகப் படுத்தினான். 


காற்றில் படபடத்துப் பறக்கும் தன் புடவைத் தலைப்பை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் அவள். 


"எத்தனை குழந்தைங்க?" நிருதி பைக்கை ஓட்டிய படி பக்கவாட்டில் திரும்பிக் கேட்டான். 


"ரெண்டு" என்றாள். பின்,  "ஒரு பையன், ஒரு பொண்ணு"


"அடிபட்டது பையனுக்கா?  பொண்ணுக்கா?"


"பையனுக்கு. அடங்கவே மாட்டான். செரியான குறும்பு. என்ன பண்ணி வெச்சிருக்கானு தெரியல. பக்கத்து வீட்டு அக்கா ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகணும்னு சொன்னாங்க.." அவள் குரலில் ஒரு தாயின் தவிப்பிருந்ததை உணர முடிந்தது. 


"எத்தனை வயசு?"


"பையனுக்கு ஏழு, பொண்ணுக்கு அஞ்சு"


"ஓஓ.. குட்டி பசங்களா?"


"ம்ம்.. அதான் கவலை"


"பாத்துக்க யாரும் இல்லையா?"


"மாமியா இருக்காங்க. ஆனா அவங்க ரெண்டு நாள் முன்னதான் பொண்ணு வீட்டுக்கு போனாங்க. இந்த கேப்புல இப்படி.." அவளின் குரலில் நியாயமான கவலை தெரிந்தது.. !!


அடுத்த மூன்று நிமிடத்தில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. 


"அங்க நிறுத்துங்க" என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை கை காட்டிச் சொன்னாள்.


"இங்கதான் வீடா?"


"இல்லங்க.. கொஞ்சம் நடந்து  உள்ள போகணும்"


"மழைல ஏன் நனைஞ்சுட்டு நடந்து போறீங்க.? உக்காருங்க உங்க வீட்லயே விட்டர்றேன்"


"இல்லைங்க.. பரவால. உங்களுக்கு சிரமம்"


"ஏங்க.. இவ்வளவு தூரம் நனைஞ்சுட்டும் வந்துட்டேன். இதுக்கு மேலயும் என்னங்க சிரமம்? உக்காருங்க"


"தேங்க்ஸ்.." சிரித்தாள்.


மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து அவளின் வீடு எங்கிருக்கிறது எனக் கேட்டு நேராக வீட்டின் முன்பே கொண்டு போய் நிறுத்தினான். 


அவள் இறங்கினாள். வரிசையான வீடுகளில் அவள் வீடு கிழக்குப் பார்த்திருந்தது.


"ரொம்ப தேங்க்ஸ்ங்க. வீட்டுக்கு வந்துட்டு போங்க" உளம் கனிந்த அன்புடன் அழைத்தாள். 


"பரவால்ல.." அவன் சொல்ல வீட்டினுள்ளிருந்து ஒரு குட்டிப் பெண் ஜன்னல் திறந்து வெளியே பார்த்தது.


"அம்மா வந்தாச்சு" என்று சத்தமாகக் கத்தியது.


உடனே கதவு திறந்தது. 


அவள் உள்ளே போய் கால் அடிபட்டிருக்கும் தன் மகனைப் பார்த்தாள். அருகில்  இருந்த பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசி விட்டு  உடனே வெளியே வந்தாள். 


ஹெல்மெட் கண்ணாடியே மேலே ஏற்றிக்கொண்டு மழையில் நனைந்தபடி பைக்குடன் நின்றிருந்த  நிருதியைப் பார்த்து, 

"வந்துட்டு போங்க" என்று கனிவாக அழைத்தாள். 


அவள் பார்வை அவன் கண்களில் அழுத்தமாய் பதிந்தது. 


அவள் முழுக்க நனையவில்லை என்றாலும் சிறிது நனைந்துதான் இருந்தாள். 


கொஞ்சமாக நனைந்து விட்ட புடவை அவள் தனங்களின் ஏற்ற இறக்கத்தை சற்று இறுக்கமாகக் காட்டியது. 


அவனால் அவளின் பெண்மை மேடுகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.  இருப்பினும் நாகரீகம் கருதி தன் பார்வையை அவள் முகத்துக்கு மாற்றினான். 


"பரவால. பையனுக்கு எப்படி  இருக்கு?"


"நடக்க சிரமப்படறான். ஹாஸ்பிடல் போகணும்" 


"அடி பலமா?"


"முட்டில பட்றுக்கு" அவள் குரலில் கலக்கம் தெரிந்தது. முகத்திலும் ஒருவிதக் குழப்பம். 


"ஆஸ்பத்திரி  எப்படி போவீங்க. இங்க ஆட்டோ கிடைக்குமா?"


"இங்கல்லாம் ஆட்டோ கிடைக்காது. அவரு வரதுக்கும் நைட்டாகிரும். யாரையாவது ஹெல்ப் கேட்டுதான் கூட்டிட்டு போகணும்" திரண்டெழுந்த மார்பரகே கொஞ்சம் சரிந்திறங்கிவிட்ட வலது பக்க முந்தானையை மேலே இழுத்து மூடி சரி செய்தாள்.


"உங்களுக்கு  ஆட்சேபனை இல்லேன்னா கூட்டிட்டு வாங்க. நானே ஹாஸ்பிடல் கொண்டு போய் விட்டர்றேன்" என்றான்.


"உங்களுக்கு சிரமம்" தயக்கத்துடன் சொன்னாள். 


"பரவாலங்க. ஒரு உதவிதானே.? பையனுக்கு அடி பட்றுக்கு.."


"இந்த மழை வேற.."


"பெரிய மழை இல்லீங்க. பையனை மட்டும் பாதுகாப்பா கூட்டிட்டு வாங்க.. போயிரலாம்"


"இங்க முன்னால இருக்குற ஆஸ்பத்திரிக்கு போனா போதும்" என்று விட்டு அவள் மீண்டும் உள்ளே போனாள்.. !!


மழை பெரிய  அளவில் இல்லை என்பதால் அவன் பைக்கை விட்டு இறங்கவில்லை. 


இரண்டு நிமிடங்களில் அவள் தன் பையனுக்கு ஓவர் கோட்  ஒன்றை மாட்டி பையனையும் தூக்கிக் கொண்டு  குடையுடன் வெளியே வந்தாள். 


அவள் உடை மாற்றவில்லை. அதே புடவைதான். 


பையனை அவனுக்குப் பின்னால்  உட்கார வைத்து பையனுக்குப் பின் அவள் உட்கார்ந்தாள். 


தன் பெண்ணைப் பார்த்து,

"ஆண்ட்டி வீட்லயே இரு.. அண்ணாக்கு ஊசி போட்டுட்டு வந்துர்றோம்" எனச் சொல்லி டாடா காட்டினாள். 


ஊசி என்பதால் பயந்து போன குட்டிப்பெண் தலையை ஆட்டி டாடா காட்டியது.. !!


  அவளை அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் நனையாத இடத்தில் நிறுத்தி இறக்கி விட்டான். 


அவள் இறங்கி பையனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். 


"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க.. பெரிய  உதவி பண்ணியிருக்கீங்க.  பாவம் மழைக்கு நிக்க வந்தீங்க. உங்களை ரொம்ப சிரமப் படுத்திட்டேன். ஸாரி" என்றாள். 


"பரவால்லீங்க. நல்லதுதானே செஞ்சிருக்கேன். பையனை கூட்டிட்டு போய் காட்டுங்க"


"சரிங்க. ரொம்ப தேங்க்ஸ்"


"போறப்ப எப்படி போவீங்க?"


"இங்க ஆட்டோ கெடைக்கும். நான் போறப்ப ஆட்டோல போய்க்கறேன்"


"சரிங்க.. உங்களுக்கு உதவுனதுல எனக்கும் மகிழ்ச்சி" பையன் கன்னத்தில் கிள்ளினான். "பாத்து விளையாடுங்க செல்லம்.  அடிபட்டா வலிக்குமில்ல?"


பையன் வீங்கிய முகத்துடன் தலையை மட்டும்  ஆட்டினான். 


நிருதி பைக்கைக் கிளப்பினான். 


"சரிங்க வரேன்"


"ஒரு நிமிசம்" என்றாள்.


நிறுத்தினான். "என்னங்க?


"ஸாரி, உங்க பேரு கூட என்னன்னு தெரிஞ்சுக்கல?"


"நிருதி கிருஷ்ணா"


"ரொம்ப நன்றிங்க" 


"உங்க பேரு?"


"கமலி" அவள் பெயர் சொல்லும் போது அவளின் முகத்தில் பொங்கிய வெட்கம் அவனுக்குள் ஒரு மெலிதான சிலிர்ப்பைக் கொடுத்தது. 


அந்த வெட்க முகம் பெண்ணின் அழகை பேரழகாக்கிக் காட்டியது. 


"உங்கள மாதிரியே அழகாருக்கு" என்றான். 


''என் பேரா?"


"இல்லங்க.. உங்க குழந்தை.."


சட்டெனச் சிரித்தாள். சிரித்தான். 


அவளின் சிரிப்பில் எல்லைகளைக் கடந்து விட்ட ஒரு நட்புணர்வு இருப்பதைப் போல் தோன்றியது. அது அவன் மனதுக்கு இதமாய் இருந்தது.


"ப்ரீயா இருக்கப்ப  ஒரு நாள் வீட்டுக்கு வாங்க'' என்றாள். 


"எப்படி வரது?"


"ஏன்..?"


"இல்ல.. பழக்கமில்லாம.. திடுதிப்புனு.."


"பழகிட்டோமே..?"


"சரிதான். பட்.......”


"என்ன?" சிறிது குழப்பமாய் பார்த்தாள். 


"உங்க நெம்பர் குடுத்தா.. பேசி பழகிக்கலாம்" தயக்கத்துடன் கேட்டான். 


அவளும் லேசான தயக்கத்துடன்  அவனைப் பார்த்தாள். நெம்பர் குடுக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம் அவள் முகத்தில் தெரிந்தது. 


"விருப்பமில்லேன்னா வேண்டாம்" என்றான். 


"ச்ச.. அப்படி இல்ல.." என்று தன் நெம்பரைச் சொன்னாள்.


நிருதி தன் மொபைலை எடுத்து எண்கள் அழுத்தி டயல் செய்தான். அவள் கைப்பைக்குள் போன் அடித்தது. 


"என் நெம்பர். சேவ் பண்ணிக்கோங்க"


"ம்ம்" தலையாட்டினாள். 


"சரி. வெட்டி நாயம் பேசிட்டிருக்காம பையனை கூட்டிட்டு போய் டாக்டர்கிட்ட காட்டுங்க. நான் கிளம்பறேன்"


"ரொம்ப தேங்க்ஸ்ங்க"


"இட்ஸ் ஓகேங்க. வரேன்" பையனிடம் டாடா காட்டிவிட்டுக் கிளம்பினான்.. !!


விரும்பிப் படித்தவை.. !!