புதன், 24 ஏப்ரல், 2024

சாலையோரப் பூக்கள் -5

 லாவண்யாவும்.. நிம்மியும்.. அவர்கள் ஏரியாவில் பிரிந்தனர்.


''ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..'' என நந்தாவைப் பார்த்துச் சொன்னாள் நிம்மி.


''ஹேய்.. இதுக்கெல்லாம் எதுக்குப்பா தேங்க்ஸ் சொல்ற..?'' எனக் கேட்டாள் விழிமலர்.


''பாவம்க்கா அந்தண்ணா.. என்னால தனியா உக்காந்து சினிமா  பாத்தங்கள்ள..? அப்றம் டிபன் வாங்கிக் குடுத்தாங்க..? ஒரு தேங்க்ஸ் சொல்றதுல நான் என்ன கொறஞ்சா போயிருவேன்..?'' என்றாள் நிம்மி.


''ஆமா.. நந்து..! நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லிக்கறேன்..!'' என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் லாவண்யா.


அக்கா தங்கை இருவரும்  விடை பெற்றுப் போக... நந்தாவின் கை விரலைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் மலர்.


''உன்ன நெனச்சாதான்டா எனக்கு பாவமா இருக்கு..'' என்றாள்.


''எதுக்கு..?''


''அந்த காக்கா மூக்கிய.. உனக்கு வேற புடிக்காது..! ஆனா.. அவ என்னடான்னா.. உன்கிட்ட நெருங்கி நெருங்கிப் பேசறா..!'' எனச் சிரித்தாள்.


''அதுக்கு நிம்மியே பரவால்ல..'' என்றான் நந்தா.


''அவள நீ கரெக்ட் பண்ணிருக்கலாம்..''


''அவ என்னமோ.. மூச்சுக்கு முன்னூரு தடவ.. அண்ணா.. அண்ணாங்கறா..? அப்பறம் எங்க.. அவள போய் கரெக்ட் பண்றது..?''


''லாவண்யாளுக்கு மூக்கு ஒன்னு மட்டும் நல்லாருந்தா உனக்கு ஓகேவாடா..?'' எனக் கேட்டாள்.


''அப்படித்தான் நெனைக்கறேன்.! மத்தபடியெல்லாம்.. ஆளு இப்ப கொஞ்சம்.. நல்லாதான் இருக்கா..! அந்த மூக்கு ஒன்னுதான்.. கண்ண உறுத்தது..! ஆமா.. நீ ஏதாவது அவகிட்ட சொன்னியா..?''


''என்ன..?''


''நான் அவள காக்கா மூக்கினு.. சொல்றேனு..?''


''சே.. சே..! என்னடா நீ.. இதெல்லாம் போய் நான் அவகிட்ட சொல்வனா..? ஆனா அத இப்படி வேணா.. மாத்தி சொன்னேன்..!'' என்றாள்.


''எப்படி..?''


''என் தம்பிக்கு.. உன் மூக்கு ரொம்ம்ம்ம்ப புடிச்சிருக்குனு சொன்னான்டினு..'' எனச் சொல்லி விட்டு அவள் வாய் பொத்திச் சிரித்தாள்.


''அடிப்பாவி..!!'' என்றான் நந்தா, ''அதானா..?''


லாவண்யாவின் பார்வை.. பேச்சு.. நடவடிக்கைக்கு எல்லாம் இப்போது அர்த்தம் புரிந்தது..!


''என்ன அதானா..?''


''ஒன்னுல்ல.. விடு..!! ஆமா.. அதுக்கு என்ன வயசு..? உன்னோட வயசா..?''


''என்னைவிட.. மூனு மாசம் என்னவோ சின்னவடா..! ஏன்டா.. அவள கரெக்ட் பண்றியா..?''


''அட.. ச்சீ... அவளப் போயி.. அதுக்கு நிம்மிய கேட்டின்னாக்கூட ஒரு நியாயம் இருக்கு..! இவ உன் பிரெண்டு வேற.. என்னைவிட.. வயசுலயும் பெரியவ..!!''


''ஆனா.. அவளப் பாத்தா அப்படி தெரியாதுடா.. ஒடம்ப சிக்குனுதான வெச்சிருக்கா..?''


''அட... ச்சீ... அடங்கு..! வேற எவளாவத பத்தி பேசு..!!'' என்றான் நந்தா..!!


ஆனாலும்.. லாவண்யாவின் தொடை இடுக்கில்.. அவன் விரல் பட்டு அழுந்திய இடம் மெத்து மெத்து என்று இருந்ததை.. இப்போதும் உணர்ந்தான் நந்தா..!!


அவர்கள் வீடு போனபோது.. வீட்டில் யாரும் தூங்கியிருக்கவில்லை. 


டிவி முன்னால் உட்கார்ந்திருந்த அம்மா கேட்டாள்.

''எங்கடி போன..? அவனக் கூட்டிட்டு.. சினிமா போனியா..?''


''நான் ஒன்னும் அவன கூட்டிட்டு போகல.. அவன்தான் என்னைக் கூட்டிட்டு போனான்..'' என்றாள் விழிமலர்.


''திருந்தவே மாட்டேடி.. நீ மட்டும்..! தறுதலைகளா..! சரி.. சாப்பிட்டு.. சாப்பாடு மிச்சமான தண்ணி ஊத்தி வெச்சிரு..'' என்றாள் அம்மா.


''நாங்களாம் சாப்பிட்டாச்சு..! நீயே தண்ணி ஊத்தி வெச்சிரு.. போ..!!''


''எங்கடி சாப்பிட்டிங்க..?''


''கடைல.. நந்தா செலவு..''


நந்தாவைப் பார்த்தாள் அம்மா.

''ஏன்டா.. இப்படி கடைல திண்ணு அழிக்கற காச.. கொஞ்சம் வீட்டுக்கும் தரக்கூடாதா..?''


''நீயும் உன் புருஷனும் சம்பாரிக்கற காசுக்கெல்லாம் என்ன வேலைனு வேண்டாமா..? உன்கிட்டருந்து புடுங்கலேனு சந்தோசப்படு..'' என்று விட்டு அறைக்குள் போனான்.


விழிமலர் ''பேசாம போம்மா.. அவன் செலவு பண்றதே பெருசு.. நீ அதையும் இதையும் பேசி.. அதையும் கெடுத்து வெச்சிராத..'' என்று அம்மாவிடம் சொன்னாள்.


''ஆமாடி.. உங்களையெல்லாம் பெத்து வளத்துனேன் பாரு..! என்னை போடனும் மொத செருப்பால..!!''


''அப்படியா..? செருப்பு வேணுமா..? யாரு செருப்பு..? சின்னு.. அம்மா கேக்கற செருப்ப எடுத்துட்டு வா..! நம்மள பெத்ததுக்கு.. நாம அதுகூட செய்யலேன்னா.. நல்லாருக்காது..'' என்று அவள் தங்கையைப் பார்த்துச் சொன்னாள்.


தங்கை அசுவினி சிரித்தாள்.

''எந்த செருப்பு வேணும்மா..?''


''அப்பா செருப்புதான் கரெக்ட்..! அதுதான் ரொம்ப பிஞ்சு போன செருப்பு..!'' எடுத்துக் காட்டினான் சின்னத் தம்பி மதி.!


ஆக மொத்தம்.. உடன் பிறப்புகள் எல்லாம் சேர்ந்து.. அம்மாவை ஓட்ட... அவர்களைத் திட்டிக் கொண்டே அம்மா எழுந்து படுக்கையறைக்குள் போய்விட்டாள்..!!


''ஏன்டி.. யாரும் தூங்கலையா..?'' தங்கையைக் கேட்டுக் கொண்டே.. நந்தா சோபாவில் வந்து உட்கார.. அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள் அசுவினி.


''அக்காள மட்டும்தான் சினிமா கூட்டிட்டு போவியா..?''


''படிக்கற புள்ளைக.. ஓவரா சினிமா பாக்கக் கூடாது..'' என்றான்.


''இந்த கதையெல்லாம் சொல்லாத. நான் படிச்சிக்குவேன்.. என்னையும் சினிமா கூட்டிட்டு போ..'' என்று சிணுங்கினாள்.


விழிமலரைப் பார்த்தான் நந்தா.

''பாத்தியா.. இப்ப இவளும் கூட்டிட்டு போகச் சொல்றா..''


''அதெல்லாம் எனக்கு தெரியாது..! நீயாச்சு.. அவளாச்சு..'' என்றாள் விழிமலர், ''ஓகேடா.. நான் போய் படுக்கறேன்..!'' பக்கத்தில் இருந்த அறைக்குள் போய் விட்டாள்.


நந்தாவின் கையைப் பிடித்தாள் அசுவினி.

''நாளைக்கு போலாமா நந்துண்ணா..?''


''அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்..''


''அதெல்லாம் முடியாது.. நாளைக்கு கூட்டிட்டு போ..'' என்றாள்.


''மூடிட்டு போடி..! உன்ன சினிமாக்கே கூட்டிட்டு போக மாட்டேன்..!'' என்றான்.


மெதுவாக ''சரி.. பணம் குடு நானே போய்க்கறேன்..'' என்றாள்.


''பணமும் இல்ல..''


''ப்ளீஸ்ஸ்.. நந்துண்ணா...'' அவள் கெஞ்சினாள்.


''அம்பது போதுமா..?'' எனக் கேட்டான்.


''நூறு குடுண்ணா..'' என்றாள்.


நூறு ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தான் நந்தா......!!!!!



வெள்ளி, 19 ஏப்ரல், 2024

சாலையோரப் பூக்கள் -4

 தியேட்டரில்.. நல்ல கூட்டம் இருந்தது.


  முன்னதாகவே தியேட்டருக்குப்  போய்விட்ட நந்தா.. டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு தனது அக்காளுக்கும் அவளது தோழிக்காகவும் காத்திருந்தான்..!!


தனது தோழியை மட்டும் அழைத்து வருவதாகச் சொல்லி விட்டுப் போன விழிமலர்.. தோழியின் தங்கையையும் சேர்த்தே  அழைத்து வந்திருந்தாள்..!


அவனிடம் வந்த விழிமலர்.

''டிக்கெட் எடுத்துட்டியாடா..?'' எனக் கேட்டாள்.


''மூனுதான் எடுத்துருக்கேன்.'' என்று.. காக்கா மூக்கியான.. லாவண்யாவைப் பார்த்து.. கொஞ்சமாகப் புன்னகைத்தான்.


அவளும் புன்னகைத்தாள். 


''எப்படி இருக்கீங்க.?'' நந்தா கேட்டான். 


''ஓ..! சூப்பரா இருக்கேன் நந்து.. நீ..?'' எனக் கேட்டாள்.


''சூப்பர்..!!'' அவள் தங்கையைப் பார்த்து.. ''நிம்மி வரும்னு நான் எதிர் பாக்கல..'' என்றான்.


நிம்மியும் அவனுக்கு அறிமுகம்தான். ஆனால் அக்கா அளவுக்குப் பழக்கம் இல்லை.


''டிக்கெட் தீந்து போச்சா..?'' எனக் கூட்டத்தை ஆராய்ந்தவாறு கேட்டாள் நிம்மி.


''செமக் கூட்டமா இருக்குடா..? ஆனா டிக்கெட் கெடைக்கும்..! போடா.. ஒரே ஒரு டிக்கெட் மட்டும் எப்படியாவது வாங்கிட்டு வந்துரு..'' என்று அவன் கையைப் பிடித்துச் சொன்னாள் விழிமலர்.


அவளை முறைத்து விட்டு.. மற்ற இரண்டு பெண்களின் முகத்தையும் பார்த்தான்.


லாவண்யா அவனை மிக ஆர்வமாகப் பார்த்தாள். அவள் பார்வை அவனை ஈர்த்தது. 


அவளது தங்கையைப் பார்த்தான். அவளும் அவனையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். 


அக்காளைவிட தங்கை நன்றாகவே இருக்கிறாள். ஆனால் தனக்கு செட்டாவாளா என்கிற கேள்வி எழுந்தது. எதற்கும் வலை வீசிப் பார்க்கலாம் என்று தோன்றியது. 


அக்கா தங்கை இருவரும் நன்றாகவே மேக்கப் செய்திருந்தார்கள். கண்களுக்கு கூட மை தீட்டி குட்டியாக நெற்றியில் பொட்டு ஒட்டிப் பூ வைத்து.. கிட்டத்தட்ட இரண்டு பேரும் ஒரே அளவிலான மேக்கப்தான். 


நந்தா தலையிட்டு விட்டு மீண்டும் கூட்டத்தில் காணாமல் போனான்.!


''உன்ன மொறச்சிட்டே போறான்டி.. உன் தம்பி..'' எனச் சிரித்தாள் லாவண்யா..!


''டிக்கெட்டோட வந்துருவான்.. கவலப்படாத..'' என்றாள் விழிமலர்.


''டிக்கெட்டுக்கு காசு குடுக்கவே இல்ல..? அவன்கிட்ட இருக்குமா..?''


''அதெல்லாம் வெச்சிருப்பான்..! காசில்லேன்னா.. இப்படி போக மாட்டான்..!!''


நந்தா சிறிது நேரத்தில்  மீண்டும் டிக்கெட்டுடன் வந்தான்.!

''போலாமா..?''


''கெடைச்சிதாடா..?''


''ம்.. ம்ம்..! நாம போய்.. வாங்காம வருவமா..?'' என்று கெத்தாக டிக்கெட்டை விசிறினான்.


''பிளாக்லயாடா வாங்கினே..?''


''கம்பெனி டிக்கெட்தான்.. ஆனா பிளாக்ல..! விக்கறது நம்ம பசங்கதான்..!''


''அவ்ளோ.. கூட்டமா..?'' என்று நிம்மி கேட்டாள்.


''ஹவுஸ்புல் இல்ல..! பிளாக்ல வித்தாத்தான்.. கம்பெனிக்கு லாபம்..! ஆனா.. இப்ப.. இதுல ஒரு சிக்கல்..'' என்றான்.


''என்னடா..?''


''சீட் வரிசைப்படிதான் உக்காரனும்..! லாஸ்ட்டா வாங்கினது.. வேற.. சீட்..!''


''அதுல நீ உக்காந்துக்கோ..'' உடனே சொன்னாள் விழிமலர்.


அவளை முறைத்தான் நந்தா.


லாவண்யா சிரித்து..

''சரி.. நான் உக்காந்துக்கட்டுமா..? நீங்க மூனு பேரும் ஒன்னா உக்காந்து படம் பாருங்க..'' என்றாள்.


''பரவால்ல.. நானே உக்காந்துக்கறேன்..! நீங்க மூனு பேரும் உள்ள போங்க..!'' என்று அவனது அக்காளிடம் டிக்கெட்டைக் கொடுத்தான்.


''ஸாரி.. நந்தாண்ணா.. என்னாலதான் நீங்க.. இப்ப தனியா..'' என்றாள் நிம்மி.


''பரவால்ல விடு.. நிம்மி..! என்ன மொதவே சொல்லிருந்தா.. பிரச்சினை இல்ல..! சரி போங்க.. இண்டர்வெல்ல.. பாக்கலாம்..!''


''ஏன் நந்தா.. நீ இப்ப வரலயா..?'' எனக் கேட்டு.. அவனை இன்னும் கொஞ்சம் கடுப்பேற்றினாள் லாவண்யா.


''வரேன் போங்க..!!''


விழிமலர்.. ''வாடி.. அவன் தம்மடிச்சிட்டு வருவான்..'' என்று லாவண்யாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.


லாவண்யா.. அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்து விட்டுப் போனாள். 


அப்படித் திரும்பிப் பார்த்த.. அவள் கண்களில் தெரிந்த அந்த ஃபீலிங்.. அவனை என்னவோ செய்தது.! 


உள்ளே போகும்வரை.. அவனும் அவளையே பார்த்தான்.


 அவளது முன்னழகு.. அவ்வளவாக.. அவனுக்கு ரசிக்கத்தக்கதாகத் தோன்றவில்லை என்றாலும்.. பின்னழகு.. அட்டகாசமாக இருப்பதுபோல்தான் தோன்றியது.!


'அட..' என்கிற வியப்பு.. அவனுக்குள்ளேயே எழுந்தது..!!


படம் துவங்கியது. தனியாகத்தான் உட்கார்ந்து பார்த்தான் நந்தா. இடைவேளையில்.. அவன் எதுவும் வாங்கவில்லை. ! 


ஐஸ்க்ரீம்.. பாப்கார்ன் எல்லாம்.. அவனுக்கு லாவண்யா வாங்கி வந்து கொடுத்தாள்..!


''உனக்கு கம்பெனிக்கு ஆள் கெடைச்சிதா நந்து..?'' என்று கேட்டாள்.


''ம்கூம்..!''


''உன் பக்கத்து சீட்ல ஆள் இருக்கா..?''


''ஆமா.. ஏன்..?''


''இல்ல.. நான் கம்பெனி குடுக்கலாம்னுதான் கேட்டேன்..! ஸாரி..!!''


''சரி.. பரவால்ல விடுங்க..!!'' என்றான்.


''அப்றம்.. நீ யாரையாவது லவ் பண்றியா.. நந்து..?'' எனக் கேட்டாள்.


''ஏன்..?''


''பண்றியா.. இல்லையானு மட்டும் சொல்லு..''


''இல்ல...'' என அவன் சொல்ல.. நிம்மி.. அங்கிருந்து  தன் அக்காளைக் கூப்பிட்டாள்.


''சரி.. நான் போறேன்..'' என்றுவிட்டுப் போய்விட்டாள்..!!


படம் முடிந்து.. தியேட்டரைவிட்டு வெளியேறியதும்..

''சாப்பிட ஏதாவது வாங்கி தாடா..?'' எனக் கேட்டாள் விழிமலர்.


''என்ன வேனும்..?'' நந்தா.


''டிபன்..! லைட்டா..!!'' என்றாள்.


''உன்ன இதுக்குத்தான் நான் எங்கயும் கூட்டிட்டு வரதில்ல..'' என்றான், ''வா..!!''


அருகில் இருந்த ஒரு சின்ன ஹோட்டலுக்குப் போனார்கள். 


விழிமலரும்.. நிம்மியும் கைகழுவி விட்டுப் போய் உட்கார.. நந்தா கை கழுவும்போது.. லாவண்யாவும் கை கழுவினாள்.


''ஆமா.. ஏன் அப்படி கேட்டிங்க..?'' அவளைக் கேட்டான் நந்தா.


அவனை ஓரப் பார்வை பார்த்துப் புன்னகைத்தாள் லாவண்யா.

''நீ.. ஆளு.. சூப்பரா இருக்க..!!''


'ஆனா.. நீ டம்மி பீசா இருக்கியே.?' என மனதுக்குள் நினைத்துக் கொண்டு கேட்டான்.

''நீங்க யாரையாவது லவ் பண்றிங்களா.. என்ன..?''


சிரித்தாள், ''இப்பவரை இல்லை..!''


இருவரும் கை கழுவி.. டேபிளுக்குப் போனார்கள். 


விழிமலரும்.. நிம்மியும் எதிரெதிரே உட்கார்ந்திருக்க.. தங்கை பக்கத்தில் உட்கார்ந்த.. லாவண்யாவுக்கு எதிரில் உட்கார்ந்தான் நந்தா..!!


அவனைப் பார்த்து.. கிண்டலாகச் சிரித்து விட்டு..

''காக்கா.. முட்ட.. காக்கா முட்ட..'' எனச் சன்னமாகப் பாடினாள் விழிமலர்.


அவள் கிண்டல் செய்வதன் அர்த்தம் புரிந்து.. அவளது காலை மிதித்தான் நந்தா.


''யாருக்கு என்ன சாபபிட ஆசையோ அதை ஆர்டர் பண்ணிக்கலாம்..'' என்றான்.


அவரவர் விருப்பத்துக்குத் தகுந்தாற்போல் ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள்.


 சாப்பிடும்போது.. டேபிளுக்கடியில்.. எதேச்சையாக.. லாவண்யாவின் காலில் நந்தாவின் கால் பட்டது..! 


அவன் உடனே காலை நகர்த்தினான். அவள் மெதுவாகப் புன்னகைத்தாள். நிம்மி ஓவராக வாயடித்தாள்..!


சில நொடிகளிலேயே.. நந்தாவின் காலில்.. லாவண்யாவின் கால் பட்டது. அவன் காலை நகர்த்திக் கொண்டான். 


அடுத்த முறையும் அவள் கால்.. அவன் காலில் பட.. அமைதியாக இருந்தான் நந்தா..!


இப்போது படுவது எதேச்சையானது இல்லை.! 


அவன் கண்டு கொள்ளாமல் இருக்க.. அவளது கால் விரல்.. அவன் கால் விரலைத் தடவி.. உறவாடியது..!!


அவள் கண்களைப் பார்த்தான். அவளும் ஒரு நொடி பார்த்து ரகசியப் புன்னகை காட்டினாள்.


விழிமலரும்.. நிம்மியும் பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்தனர். 


லாவண்யாவின் காலோடு.. நந்தாவும் தன் காலை உரசி விளையாடினான். அவள் தாராளமாக ஒத்துழைத்தாள்.


 நந்தா பொருமை காட்டி விளையாடவில்லை. அவள் ஆமோதிப்பது தெரிந்ததும்.. அவன் காலை அவள் முழங்கால்வரை கொண்டு போய் உரசினான். ! 


அவர்களை யாரும் கவனிக்கவில்லை என்பதைக் கவனித்த நந்தா... துணிச்சலாக.. காலை நீட்டி.. மேலே தூக்கி அவளது கவட்டைக்கு நடுவில் வைத்து அழுத்தினான்.. !!



விரும்பிப் படித்தவை.. !!