சனி, 28 அக்டோபர், 2023

உன்னைச் சுடுமோ -5

 தன் வீட்டுக்கு ஓடிவந்துவிட்ட கிருத்திகா படபடத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன செய்வது என்று எதுவும் தெரியவில்லை. 


ஆசையா பயமா என்று தெரியவில்லை. தவிப்பா ஏக்கமா என்றும் புரியவில்லை. 


அவனைப் பிடிக்காது என்றில்லை. அதே சமயம் பிடிக்கும் என்று சொல்லுமளவுக்கும் பழகியிருக்கவில்லை. பொதுவான பேச்சு வார்த்தைகளைத் தாண்டி பேசிப் பழகியதில்லை. 


இன்றுதான் அவனோடு நன்றாக பேசியிருக்கிறாள். நெருக்கமாக பழகியிருக்கிறாள். 


இன்னும் சொல்லப் போனால் அவனது ஆண் உடம்பு வெளிப்படுத்தும் வாசனையைக் கூட தான் நுகர்ந்ததை அவள் இப்போதுதான் உணர்ந்தாள்.


இப்படிபட்ட ஒரு நெருக்கம் அவளை என்னவோ செய்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மைதான். 


அவன் தன் உதடுகளைத் தொட்டதோ கன்னம் கிள்ளி வாயில் வைத்து முத்தம் கொடுத்ததோ அவள் அவன் கண்ணுக்கு முத்தம் கொடுத்ததோ அவளுக்கு தவறென்றே தோன்றவில்லை. 


ஆனால் அவன் சட்டென அவளின் உதட்டில் முத்தமிட்டுவிட்டது அவளை அதிரச் செய்துவிட்டது. 


அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை. 


காலையில் பாத்ரூமில் தன் உடலை சுத்தப் படுத்திக்கொண்டபோது அவனை நினைத்து சுய இன்பம் கண்டதுதான் அவனோடு தன்னை இவ்வளவு நெருக்கமாக பழக வைத்து விட்டதோ என்று தோன்றியது.


ஆனால்.. இப்போதும் அவள் உடம்பு வெடவெடத்து இதயம் படபடத்துக் கொண்டிருப்பதை அவளால் நன்றாக உணர முடிந்தது. 


அவன் தன் உதட்டில் கொடுத்த முத்தத்தை சாதாரண முத்தமாக அவளால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை.. !!



***



அதே நேரம் நிருதியும் பெரும் குழப்பத்துக்கும் கவலைக்கும் ஆளாகியிருந்தான்.


'இப்போது என்ன செய்வது? அவள் ஏதாவது வம்பை இழுத்து விட்டு விடுவாளோ? இந்த பெண்களை மட்டும் நம்பவே முடியாது. ஆண்களின் ஆசையை தூண்டி விட்டு அவனை வில்லங்கத்தில் சிக்க வைப்பதில் வல்லவர்கள்.. !! உடனே போய் மன்னிப்பு கேட்டு விடுவதே நல்லது.. !!' ஒரு முடிவுக்கு வந்து கண்ணாடி முன் நின்று தலைவாரினான் நிருதி. 


ஐந்து நிமிடத்தில் ரெடியாகி வெளியே போனான். 


கதவுக்கு வெளியே போக.. தெரிந்தவர் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்தார். தவிர்க்க முடியாமல் அவருடன் பேசிக் கொண்டிருக்க.. கிருத்திகா பேகுடன் தன் வீட்டில் இருந்து வெளியே வந்தாள். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டைப் பூட்டினாள்.


அவனை அவள் அப்படி பார்த்த நொடி அவனுக்குள் பக்கென ஓர் அதிர்வு ஓடியது. தன் செயலின் விளவு தவறாகப் போயிருப்பதை உணர்ந்தான்.


  அவள் தலைவாரி ஜடை பின்னி மேக்கப் செய்திருந்தாள். வீட்டைப் பூட்டி துப்பட்டாவை சரி செய்து கொண்டு பேகை எடுத்து தோளில் போட்டபடி அவனிடம் வந்தாள்.


“போலாமா?” நிருதி கேட்டான்.


அவன் முகத்தை நேராகப் பார்க்காமல் தலையை ஆட்டினாள். 


அவள் முகம் இன்னும் இறுகித்தான் இருந்தது. அதில் ஒரு மெலிதான சோகம் இருப்பதைப் போலிருந்தது. அவள் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறாள்.


பேசிக் கொண்டிருந்தவரிடம் சொல்லி விட்டு அவனும் வீட்டைப் பூட்டிக் கிளம்பினான்.


 மனதை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு பைக்கை எடுத்தான்.


அமைதியாக வந்து அவன் பின்னால் ஒரு பக்கம் பார்த்து உட்கார்ந்தாள். அவளை ரியர்வு மிரரில் பார்த்து விட்டு மெதுவாக பைக்கை ஓட்டினான்.


“ஏய்.. வெரி ஸாரி கிருத்து” தலையை திருப்பி சைடில் பார்த்துச் சொன்னான்.


அவள் பேசவே இல்லை. உம்மென்றிருந்தாள்.


சிறிது நேரம் கழித்து மீண்டும் சொன்னான்.

“நீ கோபமா இருக்கேனு தெரியுது. என்னை மன்னிச்சிரு”


“…… ”


“ஸாரிப்பா”


“பேசாதிங்க..” கோபமாய் சொன்னாள்.


” வெரி ஸாரி”


“ச்ச.. ஏன் அப்படி பண்ணீங்க?”


“……. ”


“நீங்க எவ்ளோ நல்ல அண்ணாவா இருந்தீங்க.. அதை நம்பித்தானே நானும் உங்க கூட பழகினேன்.? சே.. நீங்க இப்படி செய்வீங்கனு நான் கொஞ்சம் கூட நெனைக்கவே இல்ல..” என்று மிகவும் வருந்திச் சொன்னாள்.


அவனுக்கும் வருத்தம் உண்டானது.

“வெரி ஸாரிம்மா” மிகவும் தணிந்த குரலில் சொன்னான்.


“அந்தக்காகிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா?”


“நான் பண்ணது தப்புத்தான்.. அதுக்காக மனசார மன்னிப்பு கேக்கறேன். என்னை மன்னிச்சிரு. இதுக்கு மேல உன் விருப்பம்”


அதன்பின் அவன் பேசவில்லை. அவளும் பேசவில்லை. அமைதியாக பைக்கை ஓட்டினான். ஸ்பீடு பிரேக்கர்களில் பொறுமையாகவே ஏறி இறங்கினான். அவள் அவன் மீது டச்சாகிவிடும்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை.


 ஆஸ்பத்திரி போனதும் அவனுக்குப் பின்னாலிருந்து இறங்கி எதுவும் பேசாமல் பேகை தூக்கிக் கொண்டு நடந்தாள். 


வண்டியைப் பூட்டிவிட்டு இடைவெளி விட்டு அவளைப் பின்தொடர்ந்தான்.


 அவளைத் தொடர்ந்து அவளது அம்மா இருக்கும் வார்டுக்குப் போனான். அவளது அம்மா படுக்கையிலிருந்தாள். அப்பா பக்கத்திலேயே இருந்தார்.


அவனை வரவேற்று பேசினர். நலம் விசாரித்தான். 


அவளது அம்மா, அப்பாவுடன் பேசிவிட்டு சிறிது நேரத்தில் கிளம்பினான்.


 அவன் கிளம்பி வரும்வரை கிருத்திகா அவனுடன் பேசவே இல்லை. அவனைப் பார்க்கவும் இல்லை. அவன் பார்வைகளை அவள் மதிக்கவும் இல்லை.. !!


அவன் விடை பெற்று வெளியேற கிருத்திகா அவன் பின்னால் வந்தாள்.

“ஒரு நிமிசம்” என்றாள்.


வெராண்டாவில் நின்று அவளைப் பார்த்தான். இன்னும் அவள் கூந்தலால் அடி பட்ட அவன் கண் சிவந்துதானிருந்தது. 


அதைப் பார்த்து கொஞ்சம் வருத்தப் பட்டாள்.

“இனிமே இப்படிலாம் பண்ணாதிங்க”


“ஸாரி”


“எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது”


“என்னை அடிச்சிரு”


“அடிச்சா.. ??”


“உன் கோபம் ஆறிடும்”


முறைத்தாள்.

“ம்ம்.. போங்க.. பை” எனச் சொல்லிவிட்டு சட்டென திரும்பிப் போனாள்.. !!



கொஞ்சம் கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினான் நிருதி. 


நடந்ததை நினைக்க அவமானமாகத்தான் இருந்தது. ஆனாலும் இது சபலத்தால் உண்டான ஆசைக்கு கொடுத்த விலை என்று மனதை சமாதானம் செய்தான். 


பெண்ணாசை பொல்லாதது. வில்லங்கமானது. மனைவி இருக்க மற்ற பெண்களை நாடினால் இப்படித்தான் அசிங்கப் பட வேண்டியிருக்கும். மனைவி இருந்தால் மட்டுமில்லை. இல்லாவிட்டாலும் இதே நிலைதான்.


அதுவும் இவள் ஓர் இளம்பெண். திருமணமாகாதவள். அவள் அழகா அழகில்லையா என்பதைத் தாண்டி அவளுக்குப் போய் முத்தம் கொடுத்தது மிகப்பெரிய தவறுதான்.


யோசனைகளும் குழப்பமும் அவனை நிம்மதியிழக்கச் செய்தது.. !!


புதன், 25 அக்டோபர், 2023

என்னை நேசித்தவள் --2

 ஆறு மாதம் முன்புதான் என் தங்கையின் திருமணத்தை முடித்து வைத்தோம்.


 அடுத்த தெருவைச் சேர்ந்த ஒருவனை காதலித்து அவனைத்தான் கட்டிக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள்.. !! 


வேறு வழி இல்லாமல் அவனுக்கே இவளைக் கட்டி வைத்தோம்.. !!


எங்களுக்கு அப்பா இல்லை. விபரம் வந்த நாளில் இருந்து அம்மா மட்டும்தான்..!


 இப்போது அந்த அம்மா ஆஸ்பத்ரியில் இருக்கிறாள். பிரெஷ்ட் கேன்சர்..!!


 இரண்டு நாள் முன்பு என் அம்மாவின் இடது மார்பகத்தை அகற்றியாகி விட்டது.. !! இன்னும் அம்மா ஆஸ்பத்ரியில்தான் இருக்கிறாள்..!!


என் அம்மாவுக்கு கேன்ஸர் ஆரம்பித்த பிறகுதான்.. என் தங்கை கல்யாணத்தை அவசரமாக முடிக்க வேண்டியிருந்தது. அதனால் மறுக்க முடியாமல் அவள் காதல் கை கூடி விட்டது.. !! 


ஆனால் இதில் என் அம்மா செலவு உட்பட.. கடனாளியானது நான் மட்டும்தான்..!! 


என் தங்கைக்கு அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலை இல்லை.. !! அவள் கணவனிடம் நான் வாங்கின கடனை அடைக்க முடியவில்லை என்பதுதான் அவளது கவுரவப் பிரச்சினையாக இருக்கிறது.. !!


என் தங்கை போன பின் சத்யா கேட்டாள்.

'' என்ன இது.. இப்படி பேசிட்டு போறா.. ??''


'' அதை ஏன் கேக்கற..? எங்கம்மாவை அட்மிட் பண்ணப்ப.. அவ புருஷன் ஆஸ்பத்ரிக்குனு ஒரு இருபதாயிரம் செலவு பண்ணிட்டான்.. ! அதைக் கேட்டு ஒரே நச்சரிப்பு.. ! அவன்கூட ஒண்ணும் கண்டுக்கறதில்லை  இவளோட பொலம்பலைத்தான் கேக்க முடியறதில்ல.. !!''


'' ஓ.. !!'' வாயைக் குவித்தாள் சத்யா.


'' நான் என்ன வெச்சிட்டா அவளுக்கு குடுக்க மாட்டேங்குறேன். இவ கல்யாணத்துக்கு பண்ண செலவுலயே இன்னும் ரெண்டு லட்சத்துக்கு மேல கடன் இருக்கு. இப்ப எனக்கும் சரியா வேலை வேற இல்ல. வட்டி கட்டவே திண்டாட்டமா இருக்கு..! இதுல அம்மா ஆபரேசன் ஒரு பக்கம்.. !! நான் எதை எதைத்தான் பாக்கறது..?? ஆனா அவ பேசறதை யாராவது கேட்டாங்கனு வெய்யி.. என்னமோ நான் தண்டமா சுத்தற மாதிரியும் அவதான் எல்லாத்தையும் தாங்கறாங்கற மாதிரியும் நினைப்பாங்க.. !!''


சிரித்தாள் சத்யா.!

'' சரி விடுங்க.. உங்க தங்கச்சிதான சொல்றா.. ??''


'' ஒண்ணும் பேச முடியாது.. !!''


'' அது சரி.. இன்னிக்கு என்ன எழுந்துக்க இவ்வளவு நேரம்..?? விஜி சொன்ன மாதிரி.. நைட்டு புல் சரக்கோ.. ??''


'' அட.. நீ வேற சத்யா..! அவனவன் கைல நையா பைசா இல்லாம காஞ்சு போய் கெடக்கான். இதுல புல்லா எங்க போய் அடிக்கறது.. ? தனியா இருக்கற கொழப்பத்துல ரொம்ப நேரம் தூங்காம டிவி பாத்துட்டு இருந்தேன். அதான்... ''


'' ஓ.. ஹ்.. !!'' எனச் சிரித்தாள்.  ''ஆனா உங்கள பாத்தா.. மூஞ்சியே ஒரு மாதிரி.. சரக்கடிச்சாப்லதான் இருக்கு.. !!''


'' இதான் நேரம்ன்றது.. !!''


'' சும்மா.. கோவிச்சிக்காதிங்க.. !!'' சிரித்தாள்.


எனக்கு வேலைக்கு நேரமாகியிருந்தது. அவளுடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை.


'' ஓகே சத்யா.. எனக்கு டைமாகுது.. !! பெஸ்ட் ஆப் லக்.. !! நிச்சயமா உன்ன பாக்க வர மாப்பிள்ளைக்கு உன்னை புடிக்கும்.. !! சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு.. !!'' என்றேன்.


'' தேங்க்யூ நிரு.. !!'' என்று முகம் நிறைய வெட்கத்தை அப்பிக் கொண்டு சிரித்தாள் சத்யா.


நான் குளிக்க ஆயத்தமானேன்.. !!


பொறுமையாக குளிக்கவெல்லாம் நேரம் இல்லை. அல்லது அதில் ஆர்வமும் இல்லை. பெயருக்கு குளித்தால் போதுமானது என்கிற மனநிலை.


நான் அவசரமாகக் குளித்து.. உடை மாற்றிக் கொண்டு.. வீட்டைப் பூட்டிக் கிளம்பியபோது.. வாசலில் வைத்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த சத்யாவின் அம்மா கேட்டாள்.

''வேலைக்காப்பா.. ??''


'' ஆமாங்க்கா.. ''


'' உன் தங்கச்சி வந்து பாட்டா பாடிட்டு போனாளாமா.. ?? அம்மாவ பாக்க போகலியா.. ??''


'' இப்ப நேரம் இல்லக்கா..! சாயந்திரம் போய் பாத்துக்கறேன்.. !!''


சத்யா மீண்டும் கதவருகே வந்து நின்று என்னைப் பார்த்தாள். கவர்ச்சியாகப் புன்னகைத்தாள்.


'' மேக்கப் கலைஞ்சிர போகுது '' என்றேன்.


''கலைஞ்சா மறுபடி பண்ணிப்பேன்..!!'' என்று சிரித்தாள்.


'' ஒகே.. பெஸ்ட் ஆப் லக்.. !!''


'' தேங்க்ஸ். !!''


சத்யாவின் அம்மா சொன்னாள்.

''என்னவோப்பா.. இந்த எடமாச்சும் நல்லா அமையட்டும் ''


'' அமையும். கவலை படாதிங்க.. !!'' என நான் சொல்ல..


'' ஆமா.. போன வாட்டியும் இதைவேதான் சொன்னீங்க ..?? '' எனக் கிண்டலாகச் சிரித்தாள் சத்யா.


'' இந்த வாட்டி அமையும் பாரு.. !!'' என்று விட்டு.. நான் புன்னகையுடன் விடை பெற்றுக் கிளம்பினேன்.. !!


இரவு.. !! 


அம்மாவைப் பார்க்க ஆஸ்பத்ரி போனேன். அம்மா கொஞ்சம் உடல்நலம் தேறி தெம்பாக இருந்தாள்..!!


'' எப்படிமா இருக்கு.. இப்ப.. ??''


'' ம்ம்.. தேவலப்பா.. ''


'' சாப்பிட்டியா.. ??''


'' இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன்..! நீ என்ன பண்ண.. ??''


'' எனக்கென்ன..? போறப்ப சாப்பிட்டு போய்க்குவேன்.. !!''


என்னையே பார்த்துக் கொண்டிருந்த என் தங்கை மெல்லச் சொன்னாள்.

''நேரங் காலமா வீடு போய்ச் சேரு. வீட்ல ஆள் இல்லேன்னு கண்டபடி தண்ணியடிச்சிட்டு சுத்தாத.. !!''


'' ஏய்.. யார்ரீ சொன்னா உனக்கு.. ??'' எரிச்சலை காட்டினேன்.


'' ஹா.. நீ பண்றது தெரியாது பாரு எங்களுக்கு.. ?? இதை வேற ஒரு ஆளு வந்து சொல்லனுமாக்கும்.. ??'' என முறைத்தபடி சொன்னாள். பின் ''சரி.. சரி.. நீ என்னமோ பண்ணு..! கேட்டா இனி இல்லாத நாயம் பேசுவ..? நான் சொல்லி நீ எதை கேட்றுக்க.. ??''


'' ஏய்.. இது ஆஸ்பத்ரி. உன் வாய மூடிட்டு இருக்கியா.. ??'' எரிச்சலை அடக்கிக் கொண்டு சொன்னேன்.


என் அம்மா இடை புகுந்து எங்களை சமாதானம் செய்தாள். பின் மெலிதான குரலில் சொன்னாள்.

'' இந்த புள்ள புருஷன் வந்துட்டு போனாப்ல.. ! அவுருதான் சாப்பாடு கொண்டு வந்து குடுத்துட்டு போனாரு.. !!''


'' ம்ம்...!!''


என் தங்கை, 

 ''சொல்லிட்டேன் அவருகிட்ட. இன்னும் ரெண்டு நாள்ள தரேனு சொல்லியிருக்கேனு. என்னை கால வாரி விட்றாத..'' என்றாள்.


அவளை முறைத்தேன்.


'' என்ன மொறைக்கிறே..??'' என்றாள், ''மொறைச்சா..? எம் புருஷனுக்கு என்ன விதியா.? நான் அங்க போய் நல்லா வாழனும்னா.. பணத்தை ரெடி பண்ணி குடுக்கற வழிய பாரு. இல்லேன்னா உங்கம்மா ஆபரேசனுக்கு கூட பணம் பெரட்ட முடியலியான்னு என்னைத்தான் கேவலமா பேசுவாங்க.. !!'' என அவள் சொன்னபோது.. அவள் வாழ்வின் மீதான அவளது அக்கறை என்னை செருப்பால் அடிப்பது போலிருந்தது.. !!

விரும்பிப் படித்தவை.. !!