ஞாயிறு, 5 நவம்பர், 2023

என்னை நேசித்தவள்-4

 இரவு பத்து மணிக்கு நான் அந்த பாரை விட்டு வெளியே வந்த போது மழை தூரிக் கொண்டிருந்தது. 


அது அரை மணி நேரமாக இப்படியேதான் தூரிக் கொண்டிருக்கிறது.!! 


மழையை பொருட் படுத்தாமல் நான் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.. !!


என் வீடு போனபோது நன்றாகவே நனைந்திருந்தேன். சத்யா வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 


நான் பைக்கை நிறுத்தி இறங்க.. சத்யா வந்து எட்டிப் பார்த்தாள்.. !!


''மழை பெய்து '' என்றாள்.


'' ஆமா.. சத்யா..!!'' சிரித்தேன்.


அவளும் சிரித்து விட்டாள்.

''குட்.. !! எப்படி நனையாம வந்தீங்க.. ??''


'' துளிக்கு துளி.. தப்பிச்சு வந்தேன்..!! நீ தூங்கல..??''


'' தூக்கம் வரல..! தலையை தொடைங்க மொதல்ல.. !!''


நான் சாவி எடுத்து கதவைத் திறக்க முயன்ற போது கொஞ்சம் தள்ளாடினேன்.


 என் நிதானம் தவறுவதை என்னால் உணர முடிந்தது. ஆனால் சத்யா முன்பாக அதைக் காட்டிக் கொள்ளக் கூடாது என என்னை நானே நிலைப் படுத்திக் கொண்டிருந்தேன். 


ஆனால் நான் முதலில் தள்ளாடியபோதே அவள் கவனித்து விட்டாள்.!


'' நிரு.. குடிச்சிருக்கீங்களா..?'' என சன்னமாகக் கேட்டாள்.


சட்டென..'' இல்ல..'' என்றேன்.


''அப்றம் நிக்க முடியாம தள்ளாடறீங்க..? பொய் சொல்லாதிங்க.. ? ட்ரிங்க்ஸ் அடிச்சிருக்கீங்கதானே..?''


'' யாரு.. நானா..? மழைல நனைஞ்சதால.. உடம்புலாம் கொஞ்சம் நடுங்குது... தட்ஸ் ஆல்..!!''


நான் பூட்டைத் திறக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தேன்.


'' தட்ஸ் ஆல்..!!'' அவள் வீட்டில் இருந்து இறங்கி ஓடி வந்தாள். ''ஆமா நீங்க குடிக்கல.!! குடுங்க இப்படி..!!''


என்னிடமிருந்து சாவியை வெடுக்கென பிடுங்கி.. பூட்டைத் திறந்து விட்டாள்.


'' தைரியமா வரே..? வீட்ல யாரும் இல்லையா ?''


'' ஹப்பா... என்ன ஒரு கப்பு.. ?? ம்ம்ம்ம்..!!'' மூக்கை பொத்திக் கொண்டாள், ''காசில்லேனு மட்டமான சரக்க வாங்கி அடிச்சிங்களா.. ??''


'' விக்கறதே மட்டமான சரக்குதான்..! காசெல்லாம் இருக்கு.. எத்தனை வேணும் உனக்கு..?'' என் சட்டை பாக்கெட்டில் தேவை இல்லாமல் கை விட்டேன்.


'' குடிக்கலேனு கதை வேற.. இதுல..??''


'' சும்மா சொன்னேன்.. ஸாரி...!!'' என்று சிரித்தேன். ''ஆமா.. உன் வீட்ல ஆள் இல்லையா ?''


'' இல்ல.. ''


'' ஏன்.. எங்க போனாங்க..?''


'' எங்க சொந்தத்துல ஒரு சாவு..! சாயந்திரமே போய்ட்டாங்க ரெண்டு பேரும்.. !!''


'' அப்ப நீ தனியாவா இருக்க..?''


'' ஆமா.. ''


'' ஏன்.. நீ போகல..?''


'' அது என்ன கல்யாண வீடா.. குடும்பத்தோட போறதுக்கு..? எழவு வீடு..!!''


'' குட்..'' என்றேன். ''பட்.. நான்தான் பேட்.. இன்னிக்குன்னு பாத்து குடிச்சிட்டு வேற வந்துருக்கேன்..!!''


'' ஏன்.. அதனால என்ன...?''


'' நத்திங்..''


'' சரி.. சரி உள்ள போய் துணிய மாத்துங்க மொதல்ல..! பாருங்க உங்க ட்ரெஸ்ஸெல்லாம் எப்படி நனைஞ்சிருக்குனு..??'' என்று மிகவும் அக்கறையுடன் சொன்னாள் சத்யா. !!


என் வீடு உள்ளே இருளாக இருந்தது. 


சத்யா உள்ளே பார்த்து விட்டுச் சொன்னாள்.

'' உள்ள இருட்டா இருக்கு.! நில்லுங்க நானே போய் லைட் போடறேன். இருட்ல போய் எது மேலயாவது மோதி விழுந்துட போறிங்க..''


'' ஹே.. சத்யா எனக்கு அவ்ளோ மப்பெல்லாம் இல்ல..''


'' ஆமா.. தெரியும். பேசாம நில்லுங்க..!!''


நின்றேன். 


 சில நொடிகளில் விளக்குகள் பளிச்சென எரிந்தது.


சத்யா இப்போது நைட்டியில் இருந்தாள். அதிலும் அவள் அழகாகவே இருந்தாள். 


அவளை நான் பார்க்கும் பார்வை தவறாகப் போய் விடக் கூடாது என்று மிகுந்த கவனத்துடன் இருந்தேன்.!


'' தேங்க்ஸ் சத்யா..!!''


'' சாப்பிட்டிங்களா..?''


'' சாப்பிட்டேனா..? நானா..? ம்ம்ம்ம்... இரு.. யோசிக்கறேன்..!! ம்ம்ம்ம்.. தெரியலை சத்யா..! என்னை பாத்தா சாப்பிட்ட மாதிரி ஏதாவது தெரியுதா..?'' என்று  நான் கேட்க, அவள் வாய் விட்டுச் சிரித்தாள்.


'' இல்ல..சாப்பிட்ட மாதிரி தெரியல.! குடிக்க போறதுக்கு முன்ன சாப்பிட்டிங்களா.. ??''


'' ஹே.. சாப்பிட்டு யாராவது போய் சரக்கடிப்பாங்களா..? நெவர்..!!''


'' அப்போ நீங்க சாப்பிடலை.! ஓகே... ட்ரஸ் சேஞ்ச் பண்ணுங்க நான் போய் சாப்பிட கொண்டு வரேன்..!!'' என்று விட்டு அவள் வெளியே போக.. அவளுக்குப் பின்னால் நானும் போனேன்.


சத்யா திரும்பி என்னைப் பார்த்தாள்.

''எங்க வரீங்க? ''


'' நீ போ..''


'' பாத்ரூம்க்கா.. ? கொடை புடிச்சிட்டு போலாமில்ல.?''


ஆனால் நான் பாத்ரூம் போகவில்லை. நடு வாசலில் போய் நின்றேன். 


அண்ணாந்து வானம் பார்த்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் மழைத் துளிகள் என் முகத்தில் சிலலென்று அறைந்தன. 


வேகமாக வந்து முகத்தில் அறையும் மழைத் துளிகளின் சிலிர்ப்பை ரசித்தவாறு கண்களை மூடிக் கொண்டு கைகளை விரித்தேன்.


'' நிரு.. என்ன பண்றிங்க..??'' சத்யா கத்திக் கேட்டாள்.


வானம் பார்த்து நீட்டிய கைகளை சட்டென அவளை நோக்கி நீட்டினேன்.

''மண்ணில் சொர்க்கம் மீளுவாய்..'' பாடினேன்.


சத்யா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

'' மழைல நனையாதிங்க நிரு..! வாங்க பேசாம..!!''


அவள் சொன்னதை நான் கேட்கவில்லை.


'' மழைல நனைய ரொம்ப புடிச்சிருக்கு.."


'' நிரு.. பைத்தியமா உங்களுக்கு..?''


'' ஆமா.. அதும் பிடிச்சிருக்கு..''


'' இப்ப நீங்க வரப் போறிங்களா இல்லையா ??''


'' நான்.. நல்லா... மனாசார நனையனும் சத்யா.. !!''


'' அட ஆண்டவா..! குடிச்சிட்டு வந்து ஏன் நிரு இப்படி அலும்பு பண்றிங்க..?'' நிஜமாகவே கவலைப் பட்டாள்.


'' இது அலும்பு இல்ல சத்யா. அசிங்கம்.! அதான் கழுவறேன்..!!''


'' அசிங்கமா..? என்ன ஒளர்றிங்க. ?''


'' என் பீலிங்க்ஸ் எல்லாம் உனக்கு புரியாது சத்யா..! சொன்னா நம்ப மாட்ட.. இப்ப மட்டும் ஒரு இடி வந்து அப்படியே என் நடு மண்டைல நச்சுனு எறங்குச்சுனு வையேன்.. அப்படியே சொர்க்கத்துக்கு போயிருவேன்.. அப்படி ஒரு... ஒரு... இதுல இருக்கேன்.. !!''


'' ஹையோ நிரு..? என்ன ஒளர்றீங்க.? எல்லாம் செரியா போகும்.. ! நனைஞ்சது போதும் வாங்க வீட்டுக்குள்ள.. ''


'' அது உனக்குலாம் புரியாது சத்யா..! நீ போய் தூங்கு போ...!!''


'' உங்க பீலிங்க்ஸ எல்லாம் என் கிட்ட சொல்லுங்க.. கேக்கறேன் நனையாம வாங்க..!!''


''போ.. போ.. ! நீ போ.! கல்யாணமாகப் போற பொண்ணு.. !!'' சொல்லி விட்டு நான் முகம் அண்ணாந்து கண்களை மூடினேன்.


சில நொடிகளில் என் கை தொடப் படுவதை உணர்ந்து நான் கண் திறந்து பார்த்த போது.. சத்யாவும் என் பக்கத்தில் நின்று என்னுடன் சேர்ந்து மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.. !!

வெள்ளி, 3 நவம்பர், 2023

உன்னைச் சுடுமோ -6

 நேராக பாருக்குப் போய் பியர் வாங்கி உட்கார்ந்தான் நிருதி. பாதி பியர் குடித்தபின் கிருத்திகாவிடமிருந்து போன் வந்தது. 


சிறு ஆச்சரியத்துடன் எடுத்தான்.

“ஹலோ?”


“வீட்டுக்கு போயிட்டிங்களா?” அவள் குரல் இறுக்கமாகவே இருந்தது.


“ஏன்ப்பா?”


“எங்கருக்கீங்க? ஒரே சத்தமா இருக்கு?”


“வீட்ல போய் தூங்கணுமில்ல.. அதான் ஒரு பீரு அடிச்சிட்டு போய் நல்லா தூங்கிடலாம்னு”


“பீரா?”


“நல்லா தூக்கம் வரும். ஈவினிங்வரை நல்லா தூங்கலாம்.” இயல்பாகப் பேசினான்.


“ஏன் இப்படி பண்றீங்க? நல்ல ஆளுதானே நீங்க? ” அவள் குரல் சூடானது.


“……” அவன் பேசவில்லை.


“அலோ.. கேக்குதா?”


“கேக்குது. சொல்லு?”


“இன்னிக்கு நீங்க சுத்தமா செரியில்ல”


“அப்படியா?”


“ஏன் அப்படி செஞ்சீங்க..?”


“என்னது?”


“வீட்ல.. என்னை லிப் கிஸ்ஸடிச்சீங்க. அப்றம் இங்க வந்தும் சும்மா சும்மா என்னைவே பாத்துட்டிருந்தீங்க.. இப்ப பார்ல போய் உக்காந்துட்டு…”


“……….”


“சொல்லுங்க? ”


“என்ன சொல்றது?”


“இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? ”


“அதெல்லாம் உனக்கு புரியாது விடு”


“என்ன புரியாது?”


“என் பீலிங்”


“என்ன பீலிங்?”


“……….”


“ஆஸ்பத்ரினு கூட பாக்காம என்னை திங்கற மாதிரி பாத்திங்க”


“ஏய்.. இல்லப்பா.. நான் அப்படிலாம் பாக்கல”


“நீங்க பாத்திங்க. அதை நான் பாத்தேன்”


“…….”


“பாத்திங்கதான?”


உண்மையில் அவன் அப்படி எல்லாம் அவளைப் பார்க்கவில்லை. அவள் பேசமாட்டாளா என்கின எண்ணத்தில் சில தடவை அவள் முகத்தைப் பார்த்ததுதான். ஆனால் அதை வேறு விதமாகப் புரிந்துகொண்டு  இப்போது அவன் மீது அபாண்டமாக ஒரு குற்றத்தைச் சுமத்துகிறாள்.


"இல்ல" என்றான். 


"பொய் சொல்லாதிங்க.. எனக்கு ரொம்ப நல்லா தெரியும். நீங்க என்னை ஒரு மாதிரியா பாத்திங்க"


"இல்லேனு சொல்றேனில்ல.."


"பொய் சொன்னா எனக்கு மசக் கோபம் வரும்" 


அவனுக்கு கடுப்பானது. இனி என்ன சொன்னாலும் தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கிவர மாட்டாள் என்று தோன்றியது.


“சரி.. அப்படியே வெச்சுக்கோ” என்றான்.


“ஏன் அப்படி பாத்திங்க என்னை?"


“……..”


“அலோ.. சொல்லுங்க?”


"இது என்ன கேள்வி கிருத்து?"


"சொல்லுங்க.. எனக்கு காரணம் தெரியணும்"


"அதை சொன்னா இன்னும் சண்டைதான் போடுவ?"


"சொல்லலேன்னா இன்னும் கடுப்பாவேன்"


“ஓஓ.. சரி. நீ அழகாருந்த. செம அழகு. அதை ரசிச்சேன். போதுமா?” பொய் சொன்னான்.


“நல்லா சைட்டடிச்சீங்க”


இல்லவே இல்லை. 

”ஆமா” என்றான்.


“லொள்ளா உங்களுக்கு. ?”


“ஹா ஹா..”


“அக்கா வரட்டும் சொல்றேன். உங்க ஹஸ்பெண்ட் என்னை இழுத்து வெச்சி கிஸ்ஸடிச்சிட்டாருனு”


“…………”


“அலோ.. ஸார்…”


“ம்ம்”


“சொல்லவா?"


“சொல்லிக்க”


“சொன்னா என்னாகும் தெரியும்ல?”


“என்னாகும்? ரெண்டு நாள் என் கூட சண்டை போடுவா. முடிஞ்சா ஊருல நாலு பேருகிட்ட சொல்லி ஊரைக் கூட்டுவா. அப்படி பண்ணா என் பேரு மட்டுமில்ல.. இதுல உன் பேரும் சேந்துதான் கெடும்”


“எத்தனை திமிரா பேசுறீங்க..?” சட்டென கடுப்பாகி கேட்டாள்.


“சொல்லித்தான் பாரேன். என்ன நடக்குதுனு? உனக்கு அவளை பத்தி சரியா தெரியாது. நீ என்னை சிக்க வெக்கறதா நெனச்சு சொன்னேன்னா.. அவ உன் பேரை நாறடிச்சிருவா. இதுல நான் எதுவும் பேச வேண்டியதே இல்ல. எல்லாம் அவளே பாத்துக்குவா”


“என்ன.. என்னை மெரட்டறீங்களா?”


“ஹ்ஹா.. உன்னை மெரட்டலப்பா.. உண்மையை சொல்றேன். என் பொண்டாட்டி எப்படிப் பட்டவனு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவ உன்னை தப்பா சொல்ல மாட்டா. ஆனா என்னை அசிங்கப் படுத்துறதா நெனைச்சு பண்ற காரியத்துல தன்னால உன் பேரும் சேந்து கெடும். நீயும், அவளும் வேணா உண்மையா பேசலாம். ஆனா இந்த ஊரு என்ன பேசும் தெரியுமா? நெருப்பில்லாம பொகையாதுனு பேசுவாங்க. ஊசி எடம் குடுக்காம நூலு நொலையாதும்பாங்க. எல்லாம் நடந்து முடிஞ்சு கடைசில மாட்டற மாதிரி ஆனதும் அந்த ஆளுமேல பழி போட்டுட்டானு பேசிக்குவாங்க. இப்ப சொல்லு.. இது நடக்காதுனு நெனைக்கறியா?”


“……….”


“நானாவது பரவால. கல்யாணம் ஆனவன். நான் அசிங்கப் பட்டாலும் எனக்கு ஒரு அழகான வயசு பொண்ணு கூட டச்சுன்னா அது ஒரு கெத்துதான். ஆனா உன்னை நெனைச்சு பாரு.. உன் ப்யூச்சர்தான் பாதிக்கும்”


“இப்ப என்ன சொல்ல வரீங்க,?” அவள் குரல் உள்ளே போயிருந்தது.


"நான் எப்போ உன்னை இழுத்து வெச்சு கிஸ்ஸடிச்சேன்?"


"பின்ன.. என்ன செஞ்சீங்களாம்?"


"லைட்டாதான் கிஸ் பண்ணேன். இழுத்து வெச்சு கிஸ்ஸடிக்கல"


"அலோ.. என்னை லிப் கிஸ் அடிச்சிங்க"


"ஆமா.. ஆனா அது லைட் கிஸ்தான்"


"அது உங்களுக்கு. எனக்கு கிஸ்தான். நான் ஒண்ணும் உங்க வொய்ப் கிடையாது.."


"ஆமா.."


"அப்புறம் எதுக்கு என்னை லிப் கிஸ் அடிச்சீங்க?"


"நீ ரொம்ப அழகாருந்த. உன் அழகு என்னை பைத்தியமாக்கி அந்த நேரத்துல என் கண்ணை கட்டிருச்சு. ஸாரி.."


"ஸாரி சொல்லிட்டா.. எல்லாம் சரியா போகுமா?"


"போகாதுதான்.."


"எனக்கு கோபம் கோபமா வருது"


"ஏய் ஸாரி…"


"பொல்லாத ஸாரி.. ஏன் அப்படி செஞ்சீங்க..?"


”ஐ மிஸ் யூ.. கிருத்து” சட்டென சொன்னான்.


திகைத்தாள். ”அலோ.. என்ன..?”


“டேக் கேர்.. பை” சட்டென காலைக் கட் பண்ணி விட்டு மீண்டும் பியரை எடுத்து தொண்டைக்குள் சரித்தான் நிருதி.. !!


உண்மையில் கிருத்திகா கலங்கிப் போனாள். அவள் மனசு பதட்டத்துடன் பதறிக் கொண்டிருந்தது. அவளின் நிலை அவளுக்கே புரியவில்லை. அந்த தப்பு அவனுடையது மட்டும் இல்லை. தனக்கும் அதில் பங்குண்டு என்றாலும் அவளால் அதை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.


அவளுக்கு மனசு புழுங்கி உடம்பு வியர்த்தது. பெண்மை கொதித்து நாடி நரம்பெல்லாம் தளர்ந்தவளாக சில நிமிடங்கள் அமர்ந்து விட்டாள்.


உள்ளே என்னென்னவோ செய்தது. அது ஏன் என்றும் புரியவில்லை. இதற்கு முன் அவளுக்கு இப்படி ஒன்று நடந்ததும் இல்லை.


அவளது மனப் போராட்டம் அதிகமானது. அவனையே நினைக்கத் தோன்றியது. அவனுடன் சண்டை போடவேண்டும் போல ஒரு வேகம் வந்தது. அவனை நன்றாக திட்டித் தீர்த்தால்தான் தன் கோபம் அடங்கும் என்று நினைத்து மீண்டும் நிருதிக்கு கால் செய்தாள் கிருத்திகா.


ரிங் போய் எடுத்தான்.

“என்னப்பா?” எனக் கேட்டான்.


“என்ன சொன்னீங்க?” சிடுசிடுப்பாகக் கேட்டாள்.


“எப்ப?”


“லாஸ்ட்டா சொன்னீங்கள்ள?” அதே கோபம்.


“தெரியலப்பா.. என்ன சொன்னேன்?”


”லொள்ளா உங்களுக்கு? ”


“சே… இல்லப்பா”


“பின்ன.. என்ன சொன்னேன்னு என்னை கேக்கறீங்க?” வார்த்தை உஷ்ணமானது.


“நான் சொன்னது உனக்கு எப்படி தெரியும்? ” எனச் சிரித்தபடி கிண்டலாகக் கேட்டான்.


“என்கிட்டதான சொன்னீங்க?”


“அப்பறம் எதுக்கு மறுபடி என்ன சொன்னீங்னு என்னை கேக்கற? ஏன் உனக்கு தெரியாதா?”


அவளை மடக்குகிறான் என்று புரிந்தது. அவளுக்கு கோபம்தான் வந்தது. 


“என்ன.. ஓவர் மப்பா?”


“இன்னும் அடிக்கவே இல்ல”


“அப்பறம்.. ஒரு மாதிரி பேசுறீங்க?”


“அது என் பீலிங்”


“என்ன பீலிங்?”


“விடு. உனக்கு அது புரியாது”


சட்டென அவள் மனதுக்குள் ஒரு ஆற்றாமை வந்தது.

"அலோ"


"என்ன கிருத்து?"


"என்ன பீலிங்?"


"ப்ச்.. விடுப்பா.. நீ சின்ன பொண்ணு.. உனக்கு எதுக்கு அதெல்லாம்"


“பரவால சொல்லுங்க” சற்றே குரலை இறக்கிக் கொண்டாள். "நான் ஒண்ணும் தெரியாத பாப்பா இல்ல"


“ப்ச்.. விடுப்பா..” மீண்டும் சொன்னான்.


எரிச்சலாக வந்தது.

“சரி. ஐ மிஸ் யூ னு சொன்னீங்கள்ள.. அதுக்கு என்ன அர்த்தம்? ”


“ஐ மிஸ் யூனுதான் அர்த்தம்” சட்டென சிரித்தான்.


“ஆஆ.. கடிக்காதிங்க.. நான் ஆல்ரெடி உங்க மேல மசக் கடுப்புல இருக்கேன்”


“ஓகே பை”


“இருங்க"


“என்ன? ”


“குடிக்காம வீட்டுக்கு போங்க”


“ஏன்?”


“நீங்க குடிக்கறது எனக்கு புடிக்கல”


“உனக்கு ஏன் புடிக்கணும்?”


“எனக்கு குடிக்கறவங்களை புடிக்காது”


“சரி.. உனக்கு புடிக்கலேன்னா நான் ஏன் குடிக்காம இருக்கணும்.? உனக்குத்தான் என்னை புடிக்காதே? உனக்கு புடிக்காத..  ஒரு கெட்டவனான நான் குடிச்சா என்ன குடிக்காட்டி என்ன.? எனக்கு குடிக்கறது புடிச்சிருக்கு. குடிக்கறேன். குடிச்சிட்டு போனாத்தான் நிம்மதியா தூங்குவேன்”


“என்னமோ பண்ணி தொலைங்க..”


“ஓகே தேங்க்ஸ்”


”அலோ..”


“ம்ம்?”


“அதுக்கு என்ன மீனிங்?”


“எதுக்கு? ”


“ஐ மிஸ் யூ சொன்னீங்கள்ள..?”


“ஐ மிஸ் யூ னுதான் அர்த்தம்ப்பா”


“வந்தன்னா தொலைச்சிருவேன் பாத்துக்கோங்க”.


“அப்படியா.. ? வாயேன்.. !! வந்து தொலையேன்.."


“என்ன.. என்னை லவ் பண்றீங்களா?” சட்டென அவள் குரல் மாறியது.


”அதுக்கு பேரு லவ்வா?”


“உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்டாட்டியும், ரெண்டு பசங்களும் இருக்காங்க.. ஞாபகமிருக்கா?”


“அப்படியா.. அய்யய்யோ… சொல்லவே இல்ல.”


“ச்சீ வெய்ங்க..” எரிச்சலாகி சட்டென காலை கட் பண்ணி விட்டாள் கிருத்திகா.. !!


அவளுக்கு ஏனோ மனசு மட்டும் இல்லாமல் கண்களும் கலங்கித் தவித்தது.. !!

விரும்பிப் படித்தவை.. !!