புதன், 4 செப்டம்பர், 2024

மாறுதல் சில நேரங்களில் -4

 வீட்டை அடைந்தபோது தியாகு சற்றே உற்சாகமாக இருந்தார். 


“திலகம் திலகம்” வண்டியை நிறுத்தி தாளிடாத கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் தன் தர்மபத்தினியை அழைத்தார். 


திலகம் அப்போது பாத்ரூமில் இருந்தாள். தலைக்கு ஷாம்பு போட்டுக் கழுவி குளித்துக் கொண்டிருந்தாள். 


தண்ணீர் சத்தம் கேட்டு பாத்ரூம் அருகே சென்றார்.

“திலகம்.. என்ன பண்ற? குளிக்கறியா?”


“ஆமாங்க. ஏன்?”


“வா சொல்றேன்”


“என்ன அவசரம் இப்ப?”


“சரி சரி.. நீ குளிச்சிட்டு வா”


“குளிக்கப் போறேனு சொன்னேன்ல?”


“குளிச்சுட்டு வா”


“குளிப்பாட்டி விடப் போறீங்களா?”


எதுவும் சொல்லாமல் புன்னகைத்துக் கொண்டு விலகிப் போய் விட்டார்.


திலகம் பளிச்செனக் குளித்து தலை துவட்டி, கூந்தலுக்கு மட்டும் டவல் சுற்றிக் கொண்டு பாத்ரூம் கதவை மெதுவாகத் திறந்து கணவன் எங்கே என்று எட்டிப் பார்த்தாள்.


ஆள் கண்ணிலேயே தட்டுப்படவில்லை. 


“என்னங்க?” கூப்பிட்டுப் பார்த்தாள். 


சத்தம் இல்லை. டிவியும் ஓடவில்லை. பேன் கூட சுழலவில்லை. 


“இருக்கீங்களா?”


இல்லை.! சத்தமே இல்லை.!


‘அதுக்குள்ள எங்க போச்சு இந்த ஆளு?’


கதவைப் பார்த்தாள். தாளிடப்படவில்லை. வெளியே போயிருக்க வேண்டும். மாடியில் உலாத்திக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தாள்.


‘அப்படி என்ன அவசரம்? போன் பண்ணப்ப ஒண்ணும் சொல்லலையே?’


அதே நேரம் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார் அவள் கணவர்.


“குளிச்சுட்டியா?” அவளை மொத்தமாகப் பார்த்தார். 


அவர் பார்க்காத அவள் இல்லை. 


அவளை அவர் முதன் முதலாகப் பார்த்தபோது அவளுக்கு இருபது வயது. இளமையாக இருந்தாள். பூரித்த பெண்மையுடன் வசீகரமாக இருந்தாள். நாளெல்லாம் அவளைப் பார்த்துப் பார்த்து ரசித்தார்.


திருமணமான நான்காவது நாளிலேயே அவளை முழுசாகப் பார்க்க ஆசைப்பட்டு, குளிக்கப் போனவர் பாத்ரூமுக்குள் அவளையும் இழுத்துக் கொண்டு குளிக்கறேன் பேர்வழி என்று பெயர் பண்ணிக் கொண்டு அடித்த கூத்தெல்லாம் எவ்வளவோ உண்டு.


 இப்போது இருபது வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அவரால் அவளை, அப்படி ஒன்றும் ரசிக்க முடியவில்லை.


“ஆச்சு. மொத கதவை சாத்துங்க. என்ன இப்போ?”


“வா.. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்”


“என்ன?” 


அவள் அருகில் வந்தபோது அவளின் தாராள உடலின் சதைக் கோளங்களை இயல்பாக ஒரு பார்வை பார்த்தார்.


“மொதல்ல போய் ட்ரஸ் பண்ணிட்டு வா. இப்படி அம்மணக்கட்டையா நின்னுட்டு கேக்காதே.  ஒடம்பெல்லாம் பாரு ஒரே ஈரம். மொதல்ல தொடைச்சிட்டு லட்சணமா சேலை கட்டிட்டு வா”


“நைட்டிதான். இப்பப் போய் சேலையெல்லாம் யாரு கட்டிட்டு இருப்பா?”


“இந்த நைட்டி வந்தாலும் வந்துச்சு.. எந்த பொம்பளைய பாரு அதை மாட்டிட்டு பைலர் மாதிரி தெரியறாங்க. ஒடம்பை பத்தின ஒரு கவலையே இல்லை. என் பிரெண்டு மேகவாணி ஒருத்தங்க. தெரியுமில்ல? அவங்களும் இப்படித்தான் நான் ரெண்டு வருசம் முன்ன பாத்தப்ப ரொம்ப குண்டா இருந்தாங்க. இப்ப கலர்ஸ் போய் இளைச்சு ஸ்லிம்மாகி முப்பது வயசு பொண்ணு மாதிரி ஆகிட்டாங்க”


“இப்ப என்ன நானும் உங்க பிரெண்டு மாதிரி.. ஸ்லிம்மா.. முப்பது வயசு பொண்ணு மாதிரி ஆகணுமா? அப்பதான் என்கூட குடும்பம் நடத்துவீங்களா..?” சட்டென கோபமாகி விட்டாள் திலகம். 


“குடும்பம் நடத்த புதுசா என்ன இருக்கு? நான் சொல்ல வந்தது ஒடம்பைப் பத்தின கான்ஸியஸ்..”


“உங்களுக்கு இருக்கா அது.?”


“இதபார்.. நான் சொல்ல வரது..”


“உங்களுக்கும் தொப்பை.. வழுக்க மண்டை.. சுகர் எல்லாம் வந்து எழுபது வயசு கெழமாட்ட இருக்கீங்க. ஆனா உங்களுக்கு நான் இருபது வயசு பொண்ணு மாதிரி இருக்கணும் இல்லையா? மேல் ஷாவனிஸ்ட் புடிச்ச மனுசா.! அப்படி இருந்தா மட்டும் நீ என்னை என்ன செஞ்சு ஆண்டு அனுபவிச்சிரப் போறே? ஹா னு வாயப் பொளந்துட்டு மூச்சு வாங்குவே.. உனக்கெல்லாம் பாரு.. இந்த வயசுல என்ன ஒரு இது கேக்குதுனு” திலகம் சூடாகிக் கத்தத் தொடங்கிவிட்டாள்.


அவளுக்குள் இருந்த ஆத்திரம் கோபம் வன்மம் எல்லாம் பொத்துக்கொண்டு வந்து விட்டது. 


அவளை அடக்கப் பார்த்த அவரால் சமாளிக்க முடியாமலாகி அவரும் கத்தினார். அதன்பின் இருவருக்கும் சிறிய சண்டை நடந்து மூடு அப்செட்டாகி விட்டது.


திலகம் மெலிதான கண்ணீரைக் கசியவிட்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டு கிச்சன் போய் காபி ஊற்றி வைத்தபோது கிச்சனுக்குள் வந்து அவளைப் பின்னாலிருந்து கட்டிக் கொண்டு பக்கக் கழுத்தில் உதடு பதித்து, 

“ஐ ஆம் வெரி ஸாரி திலகம்ம்மா” என்றார் தியாகு.


“ப்ச்.. விடுங்க. இப்ப வந்து நச்சு நச்சுனு எச்சில் பண்ணிட்டு. நான்தான் தின்னு தின்னு மாடு மாதிரி கொழுத்துப் போயிருக்கேனே. உங்களுக்கு வேணும்னா ஸ்லிம்மா.. ஃபிட்டா எவளையாவது போய் செட் பண்ணிக்குங்க. நான் இதுக்கு மேல உங்ககூட வாழ்ந்து என்ன சுகத்தை குடுத்துரப் போறேன் உங்களுக்கு?”


“ப்ச்.. அதெல்லாம் விடுமா. நான் ஏதோ சொல்ல வந்தேன். நீ ஏதோ பேசி அது இப்படி ஏடாகூடமாகி சண்டையாகிருச்சு. விடு. மேல மேல பேசி மூடைக் கெடுத்துக்க வேண்டாம். ஸாரி ஸாரி ஸாரி.. போதுமா?”


“சரி.. தொலையுது. நீங்க என்ன சொல்ல வந்தீங்க?”


“அதை சொல்ல நான் எவ்வளவு ஆசையா.. நல்ல மன நிலைல வந்தேன் தெரியுமா?”


“விடுங்க. மறுபடி அதைவே பேசிட்டு. நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க”


முன் பக்கமாக கைகளைக் கொண்டு வந்து அவளது தொப்பை வயிற்றை இறுக்கி அணைத்துக் கொண்டார்.


 “நம்ம பெரிய பொண்ணு சுவாதி இருக்கா இல்லையா? அவளுக்கு படிப்பை முடிச்ச கையோட கல்யாணத்தையும் முடிச்சிரலாம். மாப்பிள்ளை ரெடி”


“மாப்பிள்ளை ரெடியா? யாரு?”


“இப்ப சொன்னேனில்லையா என் காலேஜ் பிரெண்டு மேகவாணி.. அவங்க பையன் ஸ்டேட்ஸ்ல இருக்கானாம். நல்ல வேலை நல்ல சம்பளமாம். ஆனா நம்ம ஊரு பொண்ணுதான் வேணும்னு கேக்கறானாம். அவங்களும் பல எடத்துல பொண்ணு பாத்தாங்களாம். எதுவும் சரியா அமையலனு.. இப்ப வரப்ப எதேச்சையா மீட் பண்ணப்ப சொன்னாங்க. நம்ம பொண்ணு போட்டோ கேட்டாங்க. குடுத்தேன். ஒடனே அவனுக்கு அனுப்பிட்டாங்க. அவனும் அந்த போட்டோவைப் பாத்துட்டு நான் பேசிட்டு கிளம்பி வரதுக்குள்ளயே புடிச்சிருக்குனு சொல்லிட்டான். என்கிட்ட இதை அவங்க சொன்னதுமே எனக்கு ரெக்கை கட்டி பறக்கற மாதிரி இருந்துச்சு. உன்கிட்ட அதைச் சொல்லத்தான் ஆசை ஆசையா வந்தேன்” 


“அச்சோ… ஸாரிங்க. உங்க மனநிலை புரியாம நான் ஏதேதோ பேசி..”


“ப்ச்.. பரவால விடு. நீ சொன்னதும் தப்பில்லை. நம்ம பொண்ணு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி பாரு. கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேட்ஸ் போகப் போறா..”


“அது சரிதாங்க. ஆனா அதை உறுதியா நம்பலாமா?”


“நம்பலாம் நம்பலாம். மேகவாணி சொன்னா கண்டிப்பா செய்வாங்க. அவங்க பையனுக்கும் நம்ம பொண்ணை புடிச்சுப் போச்சுனு சொல்லிட்டான். மேகவாணிக்கும் போட்டோவ பாத்தவொடனே இவளை  புடிச்சுப் போச்சு. பையனுக்கு மட்டும் புடிச்சுட்டா உன் மகதான் என் மருமகன்னு சொன்னாங்க.. அவ்வளவு அழகு நம்ம பொண்ணு”


“இதை சுவாதிக்கு சொல்லிட்டிங்களா?”


“உனக்கே இப்பதான் சொல்றேன். அவளுக்கு எப்படி மொத சொல்லுவேன்.? ஆயிரம் இருந்தாலும் அவளை ப்ரடியூஸ் பண்ணது நீதானே. உனக்குத்தானே மொத உரிமை”


“பெத்துட்டா போதுமா? அவளை பெக்க வெச்சதே நீங்கதானே? என் வயித்துல நீங்க அவளை வெதச்சதாலதானே அவளை நான் பெத்து அம்மாவானேன்”


“சரி.. ரெண்டு பேருக்கும் சம பங்கு. இதை அவகிட்ட நீயே மொத சொல்லு. இதே மாதிரி சின்னதுக்கும் ஒரு ஃபாரின் மாப்பிள்ள கிடைச்சுட்டா.. அது எவ்ளோ பெரிய பாக்கியம்”


“ஏங்க.. நமக்கென்ன ஆம்பளை பையனா இருக்கான்.? நாம பெத்ததுக ரெண்டும் பொம்பளைப் புள்ளைங்க. அதுக ரெண்டும் ஃபாரின் போயிட்டா கடைசி காலத்துல நாம என்ன பண்றது? நம்மை யார் பாத்துப்பா?”


“அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாத. அவங்களை கட்டிக் குடுத்துட்டு அவங்க கொழந்தை பெத்தப்பறம் நாமளும் அவங்ககூடவே போய் செட்டிலாகிரலாம்”


“வெளிநாடு போய் செட்டிலாகறதா? நல்லா சொன்னீங்க. உங்களோட ஆசைக்கும் ஒரு அளவே இல்ல. அதெல்லாம் நடந்தா பாக்கலாம். இப்ப என்னை விடுங்க. அதைப் போட்டு உருட்ட வேண்டாம்”


“நீ வேணா பாரு. இது நிச்சயமா நடக்கும். அப்ப நீயே வாயைப் பொளப்ப. ஒரு வகைல யூ ஆர் ரைட் திலகம்”


“என்ன?”


“உள்ள ஒண்ணும் போடாம ப்ரியாதான் இருக்கு. எப்படி உருளுது பாரேன். ப்ரா போட்டா மொர மொரனு இருக்கும். இப்ப ஸ்மூத்தா இருக்கு. காம்பைக் கூட புடிச்சு விளையாட முடியுது”


“போதும். அங்க இங்க நோண்டி என் மூடை இப்பவே கிளப்பி விடாதிங்க. அப்பறம் எனக்கு அந்த ஆசை வந்து உங்களை ஏதாவது சொல்லிருவேன்”


கணவர் விலகிக் கொள்ள அவரை இழுத்துப் பிடித்து உதட்டில் முத்தமிட்டாள்.


“டம்ளர எடுங்க காபி ஆகிருச்சு”


அவர் இரண்டு டம்ளர்களை எடுத்து மேடைமீது வைத்துவிட்டு அவள் கன்னத்தை மீசை குத்த முத்ததமிட்டார்.


“ராத்திரி கண்டிப்பா நான் ட்ரை பண்ணப் போறேன்”


“என்ன?”


“உன்னை சந்தோசப் படுத்த. என்னதான் ஆகுதுனு பாக்கலாம்”


“அதுக்காக ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்க வேண்டாம். அப்புறம் உங்க ஹார்ட் பக்கு பக்குனு அடிச்சிக்கும். பயங்கரமா மூச்சு வாங்கறதைப் பாத்தா எனக்கே பயமாகிரும்”


“இல்லை, மெதுவா ட்ரை பண்ணா ப்ராப்ளம் வராது. எமோஷனலானாதான் பிபி கொஞ்சம் அதிகமாப் போயி அப்படி ஆகிருது. நீ பாட்டுக்கு படுத்துக்க. நான் உன் மேல பண்றேன். அதுக்கு மீறி ஏதாவது ட்ரபுள்னா பாத்துக்கலாம்”


“உங்களுக்கு கொஞ்சமாச்சும் தெம்பு வேணுமில்ல?”


“அதெல்லாம் இருக்கு”


 “இருந்து என்ன பண்றது? எந்திரிக்கணுமே?”


“எந்திரிக்கும்னு நெனைக்கறேன்”


“அப்படி நடந்தா சந்தோசம்தான்”


“சுத்தமா ஒண்ணும் முடியாதுனு இல்லை. அப்பப்போ லேசா எழுந்துக்கும். ஆனா அது செகண்ட் கணக்குதான். ஒடனே பொசுக்குனு போயிரும்”


“டாக்டர்கிட்ட இதுபத்தி கேக்கலாமில்ல?”


“டாக்டர்ஸ் எல்லாம் சுகர் கண்ட்ரோல்ல இருந்தா அது வேலை செய்யும்னுதான் சொல்றாங்க. ஆனா அப்படி எதுவும் தெரியல. சுகருக்கு எடுக்கற மாத்திரையே அந்த சைடு எபெக்ட குடுக்குதுன்னும் அனுபவத்துல சிலபேர் சொல்றாங்க. அப்படி இல்லேன்னா டாக்டர் கிட்ட கேட்டு ஒடம்பு கண்டிசனை பொறுத்து செக்ஸ் மாத்திரைகள் ஏதாவது வாங்கி போட்டு அனுபவிச்சுக்கலாம்னும் சொல்றாங்க”


“செக்ஸ் மாத்திரையா? அப்ப அதை ட்ரை பண்லாமில்ல?”


“அதுல பக்க விளைவு இருக்குங்கறாங்க.  நெட்ல சர்ச் பண்ணிப் பாத்தேன். ஹார்ட் ப்ராப்ளம் வந்து.. மொத்தமா முடிஞ்சாலும் முடிஞ்சுருமாம்”


“அயோ.. அப்ப அது போட வேண்டாம். சும்மா படுத்துட்டாலும் பரவால்ல. அந்த மாதிரி வம்பெல்லாம் பண்ணிராதிங்க”


“அதனாலதான் நான் ரிஸ்க் எதுவும் எடுக்கறதில்லை. இல்லேன்னா இவ்வளவு நாளா இந்த அழகு கட்டி வெல்லத்தை கைல வெச்சுட்டு வேடிக்கை பாப்பேனா?”


“ஆமா.. உங்க பிரெண்ட்ஸ்ங்க எல்லாம் இந்த விசயத்துல எப்படி?”


“என்னைத் தவிர யாருக்கும் சுகர் இல்லை. பிபி இருக்கு. ஆனா அது இப்படி பண்றதில்லை. இந்த விசயத்துல நான் மட்டும்தான் வீக்காகிட்டேன். அவங்கள்ளாம் அவங்கவங்க பொண்டாட்டியோட அனுபவிச்சுட்டுதான் இருக்காங்க”


அவள் ஒன்றும் சொல்லாமல் காபியை வடிகட்டி வைத்து டம்ளர்களில் ஊற்றினாள்.. !!


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Captured well aged diabetic persons pain in sex comforting to aged 10 + young wifes

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!