வெள்ளி, 14 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -13

 வேலை முடிந்து, கூட்டத்தோடு கூட்டமாக வேனில் வரும்போது லாவண்யா.. அருகிலிருந்த மலரிடம் கேட்டாள்.

''நந்தா எப்படி இருக்கான்..?''


''என்ன திடீர்னு..?'' அவளைப் பார்த்துக் கேட்டாள் மலர்.


''ஏன்டி.. கேக்கக்கூடாதா..?''


''ஓ.. தாராளமா கேக்கலாம்..'' எனச் சிரித்தாள், ''நல்லாருக்கான்.. வேற என்ன தெரியனும்..?''


''வேறெல்லாம் ஒன்னுல்ல..! நீ எதுவும் சொல்ல வேண்டாம்..!'' என்றாள்.


 அவள் தோளில் தன் தோளை இடித்தாள்.

''நேத்துகூட உன்னப்பத்தி ஒன்னு கேட்டான்..''


''என்ன கேட்டான்..?'' ஆவலாகப் பார்த்தாள்.


''நீதான் ஒன்னும் சொல்ல வேண்டாம்ன..?''


தோழியின் தோளில் கை வைத்தாள்.

''ஆ.. சும்மா சொல்லுடி.. பிகு பண்ணாத..?''


''உன் பிரெண்டு யாரையாவது லவ் பண்றாளானு கேட்டான்..''


''என்னைவா..?''


''உன்னைத்தான்”


''அதுக்கு நீ என்ன சொன்ன..?''


''வேற என்ன..? இல்லேன்னுதான்..''


''எதுக்கு அப்படி கேட்டானாம்..?''


''தெரியலப்பா.. நான் கேட்டதுக்கு.. 'சும்மா' ன்னான்..!!''


சிரித்தவாறு ''சரி.. நானும் கேட்டேனு சொல்லு..'' என்றாள்.


''என்ன.. அவன் எவளையாவது லவ் பண்றானான்னா..?''


''சீ.. எரும..! அதில்லடி.. சும்மா விசாரிச்சதா சொல்லு..!!'' என்றாள்.


“என்னது புதுசாருக்கு?”


“அவன் என்னை கேக்கறப்போ நானும் கேக்கறதுதான மொறை”


“ஆக.. என்னை தூதுபோகச் சொல்ற?”


“ஏய்.. எரும. அவன் உன் தம்பிடி”


“இப்ப யாரு இல்லேன்னா?”


“நீயா ஏதாவது அர்த்தம் பண்ணிக்காத”


“நான் எந்த அர்த்தமும் பண்ணிக்கல. நீ கேசு.  அவன் திருடன். ரெண்டு பேருமே பிராடுக. அதை வெச்சு சொன்னேன்” என்றாள். 


லாவண்யா வாயை மூடிக் கொண்டாள்.


விழிமலர் வீட்டிற்குப் போனபோது அம்மா சமைத்துக் கொண்டிருந்தாள். ஹாலில் டிவி சத்தமாகப் பாடிக் கொண்டிருந்தது.


பேகைத் தூக்கி சோபாவில் வீசிவிட்டு.. அம்மாவின் பின்னால் போய் நின்றாள்.

''சாப்பாடு ஆச்சா..?''


''என்னடி இது வந்ததும்.. வராததுமா கேக்கற..?'' எனக் கேட்டாள் அம்மா.


''பசிக்குது..'' வயிற்றைத் தொட்டுக் கொண்டு சொன்னாள்.


''டீ இருக்கு பாரு.. ஊத்தி குடி..''


''தொட்டுக்க என்ன இருக்கு..?''


''விட்டு வெச்சாத்தான இருக்கும்.. சின்னதுக ரெண்டுமே முட்டிக்குது.. ஏதாவது வேணும்னா அசுவினிகிட்ட சொல்லியனுப்பு வாங்கிட்டு வருவா '' என்றாள்.


மலர் டீயை ஊற்றினாள்.

''எங்க அவங்க ரெண்டு பேரையுமே காணம்..?''


''இருந்துச்சுங்களே.. ரூம்ல பாத்தியா..? அசு...'' எனக் கத்திக் கூப்பிட்டாள் அம்மா.


பதில் இல்லை.


''எங்கயோ போய்ட்டா போலருக்கு..''


 டீயை ஊற்றி எடுத்துக் கொண்டு.. அவள் ஹாலுக்குப் போக... அறைக்குள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.


டீயை உறிஞ்சியபடி.. அறை வாயிலில் போய் நின்று எட்டிப் பார்த்தாள்.


அவளது தம்பியும் தங்கையும் தரையில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு.. கவிழ்ந்து படுத்துப் படித்துக் கொண்டிருந்தனர்.


அவர்களது பாடப்புத்தகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தொந்தரவு செய்யாமல்.. அவள் சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு டீயைக் குடித்தாள்.


டீ குடித்த பின்பு.. அறைக்குள் போனாள். 


 அவர்கள் இரண்டு பேரும் இன்னும் அதேபோலப் படித்துக் கொண்டிருக்க.. சத்தமில்லாமல் போய் அவர்களுக்குப் பின்னால் நின்று.. புத்தகத்தைப் பார்த்த மலர் திடுக்கிட்டாள்..!!


அரை நிர்வாணக் கோலத்தில்.. ஆணும்.. பெண்ணுமான.. ஓவியங்கள்..!!


காமசூத்ரா...!!


மலர் வந்திருப்பதை உணர்ந்து.. திரும்பி அவளைப் பார்த்தாள் அசுவினி.


அவள் கண்கள் மிரள.. சட்டெனத் துள்ளி எழுந்தாள்.

''அக்காடா...'' எனக் கத்தினாள்.


அவள் சொல்லும் முன்பே.. மலரைப் பார்த்துவிட்டான் மதி.


அவன் அப்படியே சட்டென உருண்டு.. புத்தகத்தை எடுத்து மறைத்தான்.


''என்னடா அது..?'' மலர் அவனை நோக்கி நகர்ந்தாள்.


பின்னால் மறைத்தான்.

''கதை புக்கு..''


''மரியாதையா குடுத்துரு..'' சுட்டு விரலை நீட்டி எச்சரித்தாள்.


''ம்கூம்..'' வெளியே ஓடப் பார்த்தான்.


''குடுறா..'' அவனைத் தடுத்துப் பிடித்தாள்.


 புத்தகத்தை அவளிடம் கொடுக்காமல் லாவகமாகக் கை மாற்றினான்.


அவள் அவனை வளைத்துப் பிடிக்க.. அவன் அவளிடம் மாட்டிக் கொண்டதும்.. புத்தகத்தை சட்டென அசுவினியிடம் வீசினான்.


''தூக்கிட்டு ஓடிருடி..'' எனக் கத்தினான்.


மலர் அவனை விட்டு.. தங்கையின் பக்கம் திரும்ப.. மதி அவளை நகர விடாமல் இழுத்துப் பிடித்துக் கோண்டான்.


''ஓடிருடி..'' மீண்டும் கத்தினான்.


அசுவினி புத்தகத்தை எடுத்துக் கொண்டு.. ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவிட்டாள்.


''ஏய்ய்.. வாடீ இங்க..'' விழிமலர் கத்தியதை அவள் மதிக்கவில்லை.


அவள் சட்டெனத் திரும்பி மதியைப் பிடித்துக் கொண்டாள்.


''ஏதுடா அந்த புக்கு..?''


''சொன்னா.. அடிப்ப...'' எனச் சிரித்தான்.


''சொல்லலேன்னா தோளவே உறிப்பேன்..'' அவன் காதைப் பிடித்தாள்.


''என்னைவிடு.. சொல்றேன்..'' திமிறினான்.


''சொன்னாத்தான் விடுவேன்..''


அவன் துள்ளித் திமிறினான்.


அவள் விடாமல் பிடித்துக் கொண்டாள்.

''சொல்லுடா..? ஏது அந்த புக்கு..?''


அவன் வசமாக தன் அக்காளிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்து..

'தூ..' என அவள் முகத்தில் அவனது எச்சிலைத் துப்பினான்.


இதை அவள் எதிர்பார்க்கவில்லை.


அவனை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் முகத்தைத் துடைக்கப் போக.. அவன் அவளது நெஞ்சில் கை வைத்து அவளைப் பின்னால் தள்ளிவிட்டு.. வெளியே ஓடினான்.


''தாயோலீ... கைல கெடைச்ச...'' எனக் கத்தினாள் மலர்.


அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே போய்ப் பார்த்தாள். 


இரண்டு பேருமே இல்லை.   ஓடிவிட்டார்கள்..!!


அந்த புத்தகத்தை துகிலன்தான் கொடுத்திருக்க வேண்டும் என்பது அவளுக்குப் புரிந்தது.. !!

புதன், 12 ஜூன், 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -3

 கலைந்து போன மேகங்கள் மீண்டும் இணைவதைப்போல அவனது காதல் உணர்வுகள் மீட்டெடுக்கப்பட்ட நெகிழ்வைக் கொடுத்திருந்தது. 


முன்னாள் காதலியா இல்லை இன்னாள் காதலியா.. ? இவளை எப்படி எடுத்துக் கொள்வது என்கிற குழப்பத்துக்கிடையில் இருந்தான் நிருதி. 


"இன்னும் ஏதாவது சாப்பிடறியா?" அவளைக் கேட்டான்ஃ


"இல்ல போதும்.. வேண்டாம்" உடனே தலையாட்டி மறுத்தாள்.


"உன்னை பாத்ததுல பேசினதுல ரொம்ப சந்தோசம்.."


"எனக்கு அதைவிட சந்தோசம்.." கண்கள் ஒளிவிட்டு உள்ளம் பூரிக்கச் சிரித்தாள். 


"போலாமா?"


"ம்ம்" தலையை ஆட்டிவிட்டு எழுந்தாள். புடவைத் தலைப்பை தேடிப் பிடித்து இழுத்து இடது கையில் பிடித்து, வலது பக்க முந்தானையை சரியாக எடுத்து விட்டுக் கொண்டாள். 


நிருதி எழுந்து சென்று பில் கொடுத்தான். பக்கத்தில் இருந்த கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்து பெரிய சாக்லெட் இரண்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். 


கமலி தன் புடவைத் தலைப்பைப் பற்றியபடி அவனைப் பார்த்துக்கொண்டு ஸ்கூட்டியருகே நின்றிருந்தாள். 


அவள் நிற்பதிலேயே பெண்மைக்கான ஓர் ஈர்ப்பு இருந்தது. 


அவளின் திரண்ட தனங்களின் மதர்ப்பும் சரிந்திறங்கி அகலும் இடுப்பும் அவளின் தோற்ற மாற்றத்தை பெரிதும் வியக்க வைத்தது. 


ஒரு காலை நன்றாக ஊன்றி மறுகாலை சற்று அகட்டி வைத்தபடி நின்றிருக்கும் அவளின் பருத்த உடலின் உயரத்தை கண்களால் அளந்தான். 


ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு உரிய உடல் தோற்றம் என்று தனக்குள் நினைத்து வியந்தபடி அவளின் அந்த உடல் மீதெழுந்த இதமான காமக் கிளர்ச்சியுடன் அவளை அணுகினான். 


கையில் இருந்த சாக்லெட்டை அவளிடய் நீட்டினான். 

"உன் பையனுக்கு குடுத்துரு"


வாங்கிக்கொண்டு மெல்லத் தயங்கிக் கேட்டாள். 


''உங்க போன் நெம்பர் தரீங்களா?''


''ஏன்?''


''பேசத்தான்..''


அவள் கண்களுள் பார்த்தான். அவளும் பார்த்தாள். 


அவளின் தடித்த உதடுகள் பிரிந்து இணைந்தன. மெதுவாக நுனி நாக்கை நீட்டி கீழிதழை வருடி ஈரம் செய்து புன்னகைத்தாள். 


அவளின் இதழ் மீது முத்தமிடும் ஆவல் எழுந்து அவன் ஆண்மையை உசுப்பியது.


 'இவளைப் புணரும் இவளின் கணவன் எப்படி இருப்பான்? இவளைப் போலவே திடமாகவா? இல்லை...' என நினைத்தபோதுதான் சட்டெனத் தோன்றியது. 


அவள் கணவனைப் பற்றி எதுவும் விசாரிக்கவே இல்லை.


''ஆமா.. உன் வீட்டுக்காரர் எப்படி.?'' எனக் கேட்டான்.


அவள் சிறிது குழம்பி, இமை சுருக்கி அவனைக் கேட்டாள்.


''ஏன்? ''


''இல்ல.. உன்ன மாதிரி ஹைட்டு வெய்ட்டா இல்ல..?''


'' ஓஓ'' முகம் தூக்கிச் சிரித்தாள். பின் ''என் வீட்டுக்கு ஒரு தடவை வந்து பாருங்க தெரியும்'' என்றாள்.


''அப்படியா?"


''வருவீங்களா?'' ஆவலாய் கேட்டாள்.


''வரேன். நான் வரதுனால எதுவும்..''


''நீங்க வந்தா ரொம்ப ரொம்ப சந்தோசப் படுவேன்''


''வரேன். சரி..  இப்ப நீ எப்படி.. கொஞ்சம் வசதியாத்தான இருக்க?''


''ம்ம்.. அதெல்லாம் பரவால்ல. சொந்த வீடு. பெருசா இல்லேன்னாலும் எனக்கு அது பெருசுதான். அப்பறம் இந்த வண்டி. நான் பொறந்தது வளந்தது எல்லாம் கஷ்டத்துலதான். ஆனா இப்ப அப்படி இல்ல. நல்லா வசதியாவே இருக்கேன்''


''இப்பவும் வேலைக்கு போறியா?''


''இல்ல. சொந்தமா மளிகை கடை மாதிரி வெச்சிருக்கேன். என் வீட்டுக்காரர்தான் வெச்சு குடுத்தாரு. அது போதும் எனக்கு. நீங்க எப்ப வந்தாலும் நான் வீட்லதான் இருப்பேன்''


''அவரு?''


''உங்களை பத்தி அவருகிட்டகூட சொல்லியிருக்கேன்''


''என்னது ?'' திகைத்தான்.


சிரித்தாள், ''நீங்க ஒரு தடவை என் வீட்டுக்கு வாங்க.. தெரியும்''


''சரி.. வரேன். ஆமா என்னைப் பத்தி என்னன்னு சொல்லியிருக்க?''


''நான் மொத மொத லவ் பண்ணவர் நீங்கன்னு. ஆனா உங்களை தவிர நான் வேற யாரையும் லவ் பண்ணதுமில்ல. அது ஏன்னு உங்களுக்கு புரியும்''


''இல்ல.. புரியல.. ஏன்?"


"என்னோட ஏழ்மைதான்"


"ஓஓ.."


"நாங்க இருந்த அந்த வீடுகூட வாடகை வீடுதான். அது மோசமான கன்டிசன்ல இருந்துச்சு. எனக்கும் அம்மாவ தவிர சொந்தம்னும் யாருமில்ல. அப்படி இருக்குற என்னை யாரும் உண்மையா விரும்ப மாட்டாங்க. அப்படியே தப்பித் தவறி என்மேல ஆசைப்பட்டு விரும்பினாலும் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. அதனால நான் யாரையுமே லவ் பண்ல. என்னமோ உங்களை மட்டும் விரும்பினேன். அதே போதும்னு உங்களை நெனச்சு மட்டும் சந்தோசப் பட்டுக்குவேன்'' அவள் சொல்லில் துளியும் பொய்யில்லை என்பதை அவள் கண்களில் இருந்து அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.


''ஆச்சரியமாருக்கு'' என்றான்.. !!


தன் நெம்பர் கொடுத்து அவள் நெம்பர் வாங்கிக் கொணடான் நிருதி. 


அவள் நெம்பரை சேமிக்கும் போது திடுக்கிட்டவன்போலக் கேட்டான்.


''ஆமா உன் பேரு என்ன சொன்ன?''


''கமலி" என்றாள்.


"கமலி.. ம்ம்.. என் பேரு தெரியுமா?''


''தெரியும்." தலையசைத்தாள். முகம் மலரச் சிரித்தாள்.

 "நிருதி கிருஷ்ணா''


''எப்படி தெரியும்?''


''என் கிளாஸ்மேட் ஒருத்தி உங்க வீட்டு பக்கத்துலருந்தா. அவகிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன். நீங்க ஊரை விட்டு போனதையும் எனக்கு அவதான் சொன்னா''


''அப்ப.. நான் ஏன் ஊரை விட்டு போனேனு உனக்கு தெரியும்?''


''ம்கூம்.  அது தெரியாது. ஆனா நீங்க ஊர்ல இல்லேனு தெரியும்''


''என்னைப் பத்தி அப்பவே விசாரிச்சு தெரிஞ்சு வெச்சிருக்க?''


''ம்ம்'' தலையசைத்துச் சிரித்தாள்.


''சரி. பாக்கலாம்'' என்றான், அவளிடம் விடைபெறும் எண்ணத்துடன்.


அவள் தயங்கி நின்றாள். அவள் முகம் பார்த்தான். அவள் ஆழப் பார்த்தாள். அவள் முகத்தசைகள் நெகிழ்ந்து குழைந்து விரிந்தது. 


அவள் உதடுகள் மெலிதாக நடுங்குவதை கவனித்து மெல்லக் கேட்டான். 


"என்ன கமலி?"


''இப்ப எங்க போறீங்க?'' எனக் கேட்டாள்.


''வீட்டுக்கு''


''முக்கியமான வேலை ஏதாவது இருக்கா?"


"அப்படி எதுவும் இல்ல.."


"அப்ப.. ப்ரீதானா?"


''ம்ம்.. வீட்ல போய் ரெஸ்ட்தான். ஏன்?''


''ப்ரியாருந்தா வாங்களேன்''


''எங்க? ''


''என் வீட்டுக்கு''


''இப்பாவா?''


''இப்பதான்.." தயங்கி விழியசைத்தாள். 

''வேலை இருந்தா வேண்டாம்''


"அப்படினு இல்ல.."


"அப்ப வாங்களேன். என் வீட்டை வந்து பாத்த மாதிரி இருக்கும்"


"அதுக்கென்ன.."


"நீங்க வந்தா எனக்கு ரொம்ப சந்தோசம்.."


''இப்பவே வரணுமா?''


''எப்ப வேணா வரலாம்''


அவள் விழிகளைக் கூர்ந்து பார்த்தான். அவள் விழிகள் அவனைக் காதலுடன் அழைத்தன. அது வெறும் நட்பின் அழைப்புதான் என்று சொல்ல முடியாது. அதற்கும் மேலானது. 


உள்ளார்ந்த ஒரு முன்னால் காதலியின் அழைப்பாகத் தோன்றியது. அவளின் அந்த விருப்பத்தை தவிர்க்க அவன் ஆண்மையும் விரும்பவில்லை. 


அவள் உடல் மீது அவனுக்கு பாலுறவுக் கிளர்ச்சி உண்டானது. அவனுக்குள் எழுந்த அந்த சிறு சபலம் அவனைத் தடுமாற வைத்தது. 


''இன்னொரு நாள் வரேனே.'' அவள் விழி பார்த்துச் சொன்னான்.


காதோர சுருள் முடி அசைய மெதுவாக தலையசைத்தாள்.


''கண்டிப்பா வரணும்''


''நிச்சயமா.. உனக்காக வரேன்''


''எனக்காகவா?''


''உனக்காக மட்டும்'' என்பதை சற்று அழுத்திச் சொன்னான். 


''சரி'' புரிந்து கொண்ட உள்ளத்தின் தவிப்பு அவளின் கொழு கன்னங்களில் செம்மையாகப் படர்ந்தது. 

''எனக்காக மட்டும்''


''ஆமா.. உனக்காக மட்டும்''


வெட்கிய விழிகளை உடனே மாற்றி அசைத்து மீண்டும் அவனைப் பார்த்தாள். 


அவளின் உளத் தவிப்பு அவள் பெண்மையை பேரழகாக்கியதைப் போலிருந்தது.


 உதடுகள் பிரித்து இணைத்து, மெல்லிய தடுமாற்றத்துக்குப் பின் நீள் மூச்சு விட்டாள். 


கைகள் பரவசத்தில் சிலிர்க்க அவன் விழி பார்த்து மெல்லக் கேட்டாள். 


"எனக்காகன்னா?"


"உனக்காகத்தான்.."


"இப்பவும்.. என்னை பிடிச்சிருக்கா?" தயங்கிக் கேட்டாள்.


"பிடிச்சிருக்கே.. ஏன்?"


"நெஜமாவா?"


"நெஜமாதான்"


"நான்.. குண்டாருக்கேன்" சிரித்தாள். 


"குண்டாருந்தா..?"


"அழகா இல்ல.."


"ஹேய்.. குண்டா இருந்தா அழகு இல்லேனு யாரு சொன்னது?"


"குண்டுங்கறது.. ஒரு மாதிரிதான? பெருசா யாரும் விரும்ப மாட்டாங்க.. கிண்டல்தான் பண்ணுவாங்க.."


"இல்ல.. எனக்கு நீ அப்படி இல்ல.. குண்டாருந்தாலும் நல்லா.. அம்சமா.. ரசிக்ககூடிய ஃபிகராத்தான் இருக்க"


"நெஜமா?"


"நெஜம்மா.."


"தேங்க் யூ.." லேசாக படபடத்துக் கேட்டாள் 

"நீங்க.. என் வீட்டுக்கு இப்ப வர முடியுமா?"


"இப்பவா?"


"ம்ம்.. எனக்காக வரேனிங்க"


"ஆமா"


"இப்பவே வாங்களேன்"


"இப்.... பவேவ்வா?"


"ம்ம்.. உங்களுக்கு இப்பவும் என்னை புடிச்சுதுனா.. அது சந்தோசம்தான். எனக்கு ஓகே"


"என்ன ஓகே?"


"எல்லாமேதான்"


"எல்லாமேன்னா..?"


"உங்களுக்கு.." தயங்கி நெளிந்து தன் பதட்டத்தை மெல்லத் தணித்தாள். மீண்டும் பெருமூச்சு விட்டு மெல்லச் சொன்னாள்.

"என்னை புடிச்சிருக்கில்ல?"


"புடிச்சிருக்கு.."


"என் லவ் பொய்யும் இல்ல.. அது மாறவும் இல்ல.."


"அதனால..?"


"வெட்கத்தை விட்டே சொல்றேன். இப்பவும் நான் சின்னப் பொண்ணு இல்ல.. ஆனா.."


"ஆனா..?"


"நீங்க விரும்பினா.. உங்களுக்காக என்னையே தரேன்"


"ஏய்..?" அதிர்வுடன் திகைத்தான்.


"ஆனா.. என் பையன் மேல சத்தியமா அவரை தவிர வேற யாரும் என்னை தொட்டதில்ல. நான் தப்பான பொண்ணெல்லாம் கிடையாது"


"அது சரி.. அதுக்காக..."


"ஆனா அவருக்கு முன்னயே மனசளவுல நீங்க என்னை பல தடவை தொட்டுட்டிங்க.."


"மை காட்.."


"உங்களுக்காக நான் ரொம்ப ஏங்கியிருக்கேன் தெரியுமா? எனக்கு உறவுனு கூட ஆண் சகவாசமே இருந்ததில்ல. அப்படி நான் மொத மொத ஒரு ஆணோட நட்புக்கும் அன்புக்கும் ஏங்கினது உங்களுக்காகத்தான்"


"அது..."


"இப்பவும் அந்த ஏக்கம் எனக்குள்ள அப்படியேதான் இருக்கு"


"உனக்கு கணவர் இருக்காரே இப்ப?"


"ஆமா.. ஆனா.. அது வேற மாதிரி... அவரை ஒரு தடவை நேர்ல பாத்தா நீங்களே புரிஞ்சுக்குவீங்க"


"அப்படியா?"


"இப்பகூட நீங்க வந்தா அவரை மீட் பண்ணலாம்"


"........" அவன் யோசனையுடன் பார்த்தான்.


"நம்ம உறவுக்கு அவரு எந்த வகையிலும் தடையா இருக்க மாட்டார்" என்று ரகசிய குரலில் சொன்னாள்.


"என்ன சொல்ற?"


"எனக்கு உங்ககூட உறவு வெச்சிக்கணும் போலருக்கு"


"அட..."


"இப்பவே வெச்சிக்க ரொம்ப ஆசை. நீங்க கூப்பிட்டா இப்படியே நான் எங்க வேணா வரேன்"


"ஏய்.. என்ன கமலி நீ.."


"சத்தியமா.. இப்படி சொல்றதுனால.. நான் தப்பான பொண்ணில்லங்க"


"யேய்.. நான் அப்படி சொல்லல"


"உங்களுக்கு வேற பிரச்சனை எதுவும் வேண்டாம்னுதான் என் வீட்டுக்கே உங்களை கூப்பிடறேன். பத்தே நிமிசத்துல என் வீட்டுக்கு போயிடலாம்"


"உன் கணவர் இருப்பார்னே?"


"ஆமா. ஆனா அவரு வீட்ல இல்ல. அப்படியே இருந்தாலும் அது ஒண்ணும் பிரச்சனை இல்ல. அவரே எனக்கு முழு ரைட்சும் குடுத்துருக்கார்"


"எதுக்கு?"


"உங்களை மீட் பண்ணா.. உங்ககூட உறவு வெச்சிக்கலாம்னு"


"ஹேய்.. என்னபா சொல்ற..?"


"நீங்க வாங்களேன் தெரியும்"


அவனுக்கு குழப்பமானது.


"அவருக்கு ஏதாவது கை கால் ஊனமா?" சட்டெனக் கேட்டான்.


"சே.. அதெல்லாம் இல்ல. நல்லாதான் இருப்பார். நீங்க எனக்காக வரேன்னிங்கள்ள?"


"ம்ம்"


"வாங்களேன் இன்னிக்கே. என்னை முழுசா தரேன். உங்களை நல்லா கவனிக்கறேன். எனக்கு இப்பவே உங்ககூட வாழ்ந்துடணும் போலருக்கு"


"அய்யய்யோ..."


"ஏங்க?"


"இல்ல.. இவ்வளவு இதா.. ஆச்சரியமாருக்கே"


"ஆமா.. ஆனா நீங்க என்னை தப்பா நெனைக்க கூடாது"


"சே.. இல்ல.."


"என்னை பண்ண.. உங்களுக்கு வேற ஏதாவது பிரச்சினை இருக்கா?"


"என்ன பண்ண?"


"அதான்.. என்கூட உறவு வெச்சிக்க..? என்ஜாய் பண்ண..?"


"உறவு வெச்சே ஆகணுமா?"


"ஆமா"


"இப்பவேவா?"


"ஆமா.."


"அவ்ளோ மூடாருக்கியா?"


"இது மூடு மட்டும் இல்ல.."


"சரி.."


"உங்க மேல நான் வெச்ச ஆசை. காதல்.. அன்பு எல்லாம். பல நாள் ஏக்கம், கற்பனை.."


"ஓஓ.."


"உங்களுக்கு.. நான் ஓகேதானே?"


"டபுள் ஓகே"


"அப்ப வாங்களேன்"


"வரணுங்கறியா?"


"வந்தீங்கனா இத விட என் வாழ்க்கைல சந்தோஷமான நாள் வேற இருக்கவே முடியாது"


"எனக்கே புல்லரிக்குதே.."


"இப்படி பேசறேனு என்னை தப்பா நெனைச்சிடாதிங்க. இதெல்லாம் உங்கமேல எனக்கிருக்குற அன்பாலதான். எந்த மாதிரி நேரம் காலாமாருந்தாலும் ஒரு நாளைக்கு ஏதோ ஒரு நேரத்துல.. நான்  உங்கள நெனைக்காம இருந்ததே இல்ல. இப்பவும் டிவில படமோ பாட்டோ கேக்கறப்ப எனக்கு உங்க நெனப்புதான் வரும்"


"ஹையோ.. கொல்றியே கமலி.."


"நெஜமா.. அவ்ளோ பீல் உங்கமேல"


"சரி.. வரேன்"


"தேங்க்ஸ்.. ரொம்ப தேங்க்ஸ்.." உள்ளம் விம்மியெழ கமலி இதழ்களை இறுக்கி விம்மலை வென்றாள்.  


அவள் கண்ணோரங்களில் விழிநீர் தேங்கியது. 


அது அழுகையல்ல ஆனந்த விழிநீர் என்று சிலிர்ப்பாய் இருந்தது. 


தயக்கம் உதறி கமலியுடன் கிளம்பினான் நிருதி.. !!


விரும்பிப் படித்தவை.. !!