வெள்ளி, 26 ஜூலை, 2019

மகிழ் வதனி -1

இரவு நேரத்து நிலா முற்றம்..!! கிழக்கு வானில்.. ஆரஞ்சு வண்ணத்தில் உதயமாகி.. கொஞ்சம்.. கொஞ்சமாக மேலெழுந்து வந்து கொண்டிருந்த.. எழில் மிகுந்த.. பௌணர்மி நிலைவயே.. நான் கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தேன்..!!

நிலவில் எப்போதும் காணப்படும் கலங்கம் இப்போது காணப்படவில்லை.. அதை யார் துடைத்தது என்று புரியவில்லை..! அல்லது ஆரஞ்சு வண்ணம் திரைத் துணியாக.. களங்கத்தை மறைத்துக் கொண்டிருக்கிறதோ..??

உதயமாகும்போது.. கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இந்த.. களங்கமற்ற.. வண்ண நிலவு.. மேலே மேலே என நகரும் போது.. கொஞ்சம்.. கொஞ்சமாகச் சிறியதாகி.. தூரமாகிக் கொண்டே போவது.. ஏன்..? என்பது.. எனது நீண்ட நாள் கேள்விகளில் ஒன்று..!!

ஆனாலும் நான் இந்த நிலவை ரசிக்க மறப்பதில்லை..!! நிலவு என்பது.. உண்மையில் ஆணா.. பெண்ணா.. என்கிற குழப்பத்தில்.. நான் பல நாள் உழன்றிருக்கிறேன்..! பெரும்பாலான கவிகள்.. நிலவைப் பெண்ணாகப் பாவித்துக் கவிதைகள் வடித்தாலும்.. அதற்கு 'சந்திரன்' என்கிற ஒரு ஆண் பெயரும்.. அதற்கேற்ற ஒரு கதையும் இருக்கிறதே...??

நிற்க..... இந்த ஆராய்ச்சி எல்லாம் நான் ஏன் செய்கிறேன் என்றால்.....?? என் பெயர்.. உதய சந்திரன்..! குடகு நாட்டு.. இளவரசன்..! என் பெயரில் சந்திரன் இருப்பதால்.. என்னை இந்தக் கேள்வி.. பல நாட்களாகக் குடைந்து கொண்டிருக்கிறது.. ஆனால் இன்றுவரை விடைதான் கிடைக்கவில்லை..!!

''நிலா உதயம் காண்கிறீர்களோ.. இளவரசே..?'' என எனக்குப் பின்னால்.. ஒரு கிள்ளை மொழிக் குரல் கேட்டு.. என் எண்ணச் சிறையிலிருந்து நான் மீண்டேன்..!

என் பின்னால் திரும்பினேன். பட்டுத் தூரிகையில் வரைந்த ஓவியம் போல.. மெல்லிய பட்டாடை காற்றில் ஆட.. மேன்மாடத்தில்.. என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மகிழ்வதனி..!!

ஆரஞ்சு வண்ண நிலவொளியில் அவள் வதனம்.. இன்னொரு நிலவாக பிரகாசித்தது..!!

''நான்தான்.. இளவரசே..!!'' என் மௌனம் கண்டு.. மென்னகை புரிந்தாள்.

''நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன..?'' என்றேன்.

முனுமுனுப்பாக. ''நிலவுக்கா..? கண்களா..? ஆ..! என்ன சொல்கிறீர்கள் இளவரசே..?'' என் கேள்வியின் அர்த்தம் புரியாமல்.. குழம்பி விட்டாள்.

''ஆஹ்ஹாஹா..!!'' என நான் வாய்விட்டுச் சிரித்தேன்.

''ஹ்ம்ம்.. போங்கள் இளவரசே..'' சினுங்கினாள் மகிழ்வதனி. ''நிலா உதயம் காண்கிறீர்களா.. என்று நான் கேட்டால்.. என்னென்னவோ.. சொல்கிறீர்கள் நீங்கள்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை...''

'' பேரெழில் பொங்கும்..உன் களங்கமற்ற வதனத்தைக் கண் இமைக்காமல்... கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தேன்.. இளவரசி..''

''என் முகத்தைக் கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தீர்களா..? நான் இங்கில்லாத போது.. எப்படி.. நீங்கள்...??'' அவள் என்னை குழப்பத்துடன் பார்த்தாள்.

என் வலது கரத்தை உயர்த்தி.. கிழக்கு நோக்கிச் சுட்டிக் காட்டினேன்.
'' அதோ..''

''ஓஓ..!!'' என்று வியப்பில்.. சிவந்த இதழ்களையும்.. பின் நயன விழிகளையும் அகல விரித்தாள்.
''இப்போதல்லவா புரிகிறது..!!''

''என்ன புரிகிறது.. இளவரசி..?''

''என்னைப் பார்த்ததும் கேட்டீர்களே.. நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன.. என்று..?''

''புரிந்தது கொண்டாயா..?''

''ம்ம்.. நன்றாகப் புரிந்து கொண்டேன்..! தங்களுக்கு என் மேல் உள்ள... அன்பையும்..!!'' அவள் வார்த்தை உச்சரிப்பில்.. ஒரு வெட்கத் திணறல் இருந்தது.

மெல்லடிகள் வைத்து.. அவள் என்னை நெருங்கி நின்ற போது.. அவளிடமிருந்து கமழ்ந்த.. அவள் பூ மேனியின்.. நறுமணம்.. என்னைக் களிப்படையச் செய்தது.
இளங் குமரியான.. ஒரு கன்னிப் பெண்ணின் பொன்மேனி வாசம்.. வாசனைத் திரவியங்கள் கலந்து.. வந்து.. என் சுவாசத்தில் புகுந்து.. என் உள்ளத்தை மிகவும் களிப்படையச் செய்தது..!!

''மண்டபத்தில் தங்களைக் காணாமல்.. நான்... இங்கு... தேடிக் கொண்டு வந்தேன் இளவரசே...!! ஏன் தனியாக இங்கு வந்து விட்டீர்கள்..??'' என்னைக் கேட்ட.. அவளின் இனிமையான குரல் என் செவியை இன்புறச் செய்தது.

''அமைதியை விரும்பி..!!'' என்றேன்.

''ஆ.. !!அப்படியெனில்  தங்கள் அமைதிக்கு நான்.. குந்தகம் விளைவித்து விட்டேனா..?''

''அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்..!'' என்றேன் குறும்பாக.

''ஓ..!! அப்படியானால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் இளவரசே..!! நான் வருகிறேன்..!!'' எனச் சொல்லி விட்டுத் திரும்பியவளின்.. மென் வளைக் கரத்தை எட்டிப் பிடித்தேன்.

''வருகிறேன்.. என்று விட்டு போகிறாயே..??''

''நீங்கள்தான்.. அமைதி வேண்டி.. அதை நான் கெடுப்பதாக...'' முதல் முறையாக நான் அவளைத் தொடுவதால்.. அவள் சிறிது நாணத்துடன் தலை கவிழ்ந்து நிலம் நோக்கி.. நின்றவாறு.. முனகினாள்.

''ஆம்.. இளவரசி..! என் அமைதி.. தனிமை.. எல்லாம் சீர்குலைந்து போனது.. உன்னால்..!!'' அவள் கரம் ஒரு பட்டாடை புழுபோல.. மிகவும் மிருதுவாக இருந்தது.

''அதனால்தான்.. நான் இங்கிருந்து... செல்லலாம் என்று..''

''நீ இங்கிருந்து செல்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டு விடாது.. மாறாக.. மேலும் என் மனம் அவதியுறவே செய்யும்..!!''

மிகுந்த தயக்கத்துடன்.. முகம் உயர்த்தி.. என்னைப் பார்த்தாள் மகிழ்வதனி. நான் மெலிதாகப் புன்னகை புரிந்தேன். அவள் மலர்க் கரத்தை விட்டு விடாமல் பிடித்தபடி கேட்டேன்.
''உன் கரத்தை நான் தொடலாம் அல்லவா..? அதைச் சொல்லிவிடு முதலில்..?''

வெட்கம் நிறைந்த முகத்தைச் சற்றுத் திருப்பிக் கொண்டாள்.
''சொல் இளவரசி.. உன் மலர்க் கரத்தைப் பற்றியது குற்றமா..?''

''உரிமையுள்ளவளின் கரங்களைத் தானே.. பற்றுகிறீர்கள் இளவரசே..? அது எந்த வகையில் குற்றமாகும்..??'' உள் அமுங்கிய குரலில் முனுமுனுப்பாகச் சொன்னாள்.

''காதல் வழக்காடு மன்றத்தில்.. அது அப்படித்தான் இருக்கிறது.. இளவரசி..!!''

''எனில்.. தங்களுக்கு.. காதலில் தேர்ந்த அனுபவம்.. இருப்பது போல் தெரிகிறது..??'' எனக் கேட்ட.. அவள் கேள்வியின் பொருள்.. என்னைச் சற்றுத் திணறச் செய்து விட்டது.

''ஓ.. நான் சொன்னதற்கு இப்படிக் கூட ஒரு பொருள் இருக்கிறதல்லவா..?? சரிதான்.. ஆனால் இளவரசி.. நான் இன்னும்.. எந்தப் பெண்ணின் காதல் வளையிலும் விழாதவன்.. என்பதை.. சற்று பெருமையுடனே சொல்லிக் கொள்கிறேன்..!!'' என்றேன்.

''பிறகு எப்படி...அப்படிச் சொன்னீர்கள்..??''

''நான் படித்த.. காதல் கதைகள் எல்லாம் அவ்வாறுதான் இருக்கின்றன.. இளவரசி..! தவிறவும் நான் பேசியது.. ஒரு சிலேடைக்காகத்தான்.....''

''அதற்கு.. பெண்களாகிய நாங்கள்தான் கிடைத்தோமா..?? காதல் வழக்காடு மன்றத்தில்.. ஆண் - பெண் இரண்டு பேர்தானே..?? மனம் கவர்ந்தவன் தன் மலர்க்கரம் பற்றும் போது.. எந்தப் பெண்.. அதைக் குற்றமெனச் சொல்லுவாள்..?? எப்போதடா.. நம்மைத் தொடுவார் என்றல்லவா.. எந்தப் பெண்ணின் மனமும்.. ஏக்கமுறும்.. ??''

''மன்னிக்க வேண்டும்.. இளவரசி மகிழ்வதனி.. அவர்களே..! நான் ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில்... ம்கூம்... இல்லை.. இல்லை... தங்களின்.. தளிர்க்கரம் பற்றிய.. காதல் மயக்கத்தில்.. தவறுதலாக ஏதோ உளறிவிட்டேன்..!!'' என்றேன்.

என்னைச் சரணடையச் செய்து விட்ட.. மகிழ்ச்சியில்.. வெற்றிப் புன்னகை சிந்தினாள்.
''உரிமை உள்ள இடத்தில்.. ஐயம் வரக் கூடாது.. இளவரசே..!!''

'' மன்னிக்க வேண்டும்.. மகிழ்வதனி..!! அப்படியானால்......''

''ஹ்ம்ம்.. அப்படியானால்...??''

''என் உரிமை என்பது.. குற்றமாகாது..??''

''ம்கூம்..!! என்னிடத்தில்.. அனைத்து உரிமைகளும் தங்களுக்கு உண்டு..!!'' அவள் குரலில்.. அவளது அபிலாசை தெரிந்தது.

அவளின் பட்டுக்  கரத்தை சற்று இறுக்கிப் பிடித்தேன். அவளை  என் பக்கத்தில் இழுத்து.. நிறுத்தினேன். என் மார்பில் அவள் பட்டாடை தொட்டு விளையாடியது.

''மகிழ்வதனி...''

''நீளமாக வேண்டாம்..! மகிழ் என்றே அழைக்கலாம்..!!'' எனச் சொன்னாள்.

ஒருவர் பெயரை நீட்டிச் சொல்வதை விட.. சுருக்கி அழைப்பதே.. மிகவும் நெருக்கமான.. ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும்..! காதலில்.. அதை எவ்வளவு சுருக்க முடியுமோ.. அவ்வளவு சுருக்கி கொள்ள வேண்டும். !

''மகி.. என்றுகூட அழைக்கலாமே..?''

''ஓ..!! அழைக்கலாமே..!!'' என்றாள.

''ம..! என்று கூட.....''

''போங்கள்.. கிண்டலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது..!!'' செல்லமாக என் நெஞ்சில் குத்தினாள்.

முதல் முறையாக அவள் என்னைத் தொடும் உணர்வு... அவளுக்கும் அது உவப்பாகவே இருக்கும்..! அவளின் அந்தக் கரத்தையும் நான் பற்றினேன்.

'' என்னைத் தேடிக் கொண்டு...இங்கு வந்ததாக.. சொன்னாயே மகிழ..?''

''ஆ.. ஆமாம்...''

''என்ன காரணமோ..? அதை நான் அறிந்து கொள்ள.. தடை ஒன்றும் இருக்காது.. என்றே நம்புகிறேன்..?''

''இ... இல்லை..!! ஏதாவது பேசிக் கொண்டிருக்கலாமே.. என்று...''

''ஏன்.. கீழே என் தங்கை.. அவளது தோழிகள்.. உன் தமக்கை.. இன்னும் அன்னையர்கள் எல்லோரும் இருக்கிறார்களே.. அவர்களுடன்...'' எனச் சொல்லிக் கொண்டே.. அவள் வளைக் கரங்களை வளைத்து.. மெதுவாக என்னுடலுடன்.. அவள் பூ உடலைச் சேர்த்து அணைத்தேன்..!

மார்க்கச்சை கவ்விய.. முகிழ்த்து வரும்.. அவளின் இளம் கொங்கைகள்.. மெத்தென்று வந்து என் மார்பில் அணைய... அந்த நொடியில்... நான் பேச்சை மறந்தேன்.. !! 

மகிழ் வதனி -3

''உஷ்.. சூ..!! என்ன இளவரசே.. இது..? விடுங்கள்.. யாராவது வரக்கூடும்..!!'' மெல்லிய சிணுங்கலுடன்.. அவளது அழகிய சுழியுடன் இருந்த  நாபிக் கமலத்தை வருடிய என் விரல்களை  அங்கிருந்து அப்புறப் படுத்தினாள் மகிழ்வதனி.

''யார்.. வருவார்கள்..?''

நிலவுப் பேரொளியில் அவள் பூ மேனி.. பொன்னில் வார்த்த.. பொற்சிலையென பிரகாசிக்க.. அவள் மீது கொண்ட காதலால்.. நான் உன்மத்தம் கொண்டிருந்தேன். என் திருமேனியால்.. அவள் பூ மேனியை.. மேவிப் புணர்ந்திட.. என் ஆண்மை ஏக்கம் கொண்டிருந்தது.

''யார் வேண்டுமானாலும் வருவார்கள்.. !! ஏன்.. முதலில் உங்கள் தங்கைதான்.. என்னைத் தேடிக் கொண்டு வருவாள்..!! உங்களை விடவும்.. உங்கள் தங்கை என்னை அதிகம் விரும்புகிறாள்..!! என்னை விட்டு ஒரு நொடி கூட பிரிந்து இருப்பதில்லை..!! நல்ல வேளை... அவள் ஒரு பெண்ணாக பிறந்தாள். அவளும் தங்களைப் போல ஒரு  ஆணாகப் பிறந்திருந்தால்.. என்னாவது என் நிலமை..!!'' என்று புன்னகைத்தாள்.

அவளது கிள்ளை மொழி.. சிலேடைப் பேச்சில் இருவரும் நகைத்தோம். அந்த நகைப்பின் இடையில் நான் .. அவளை அணைக்கத் தவறவில்லை..!

''என்னாகும்.. உன் நிலமை..?? ஒரே அரண்மனையில்.. இரண்டு இளவரசர்களுடன்...'' நான் முடிக்கும் முன்.....

''அய்யோ... ச்சீய்..!! என்ன உளறுகிறீர்கள்..?'' என்றாள்.  தட்டென தன் உடம்பை விறைத்தது.

'' ஏன்.. என்ன உளறி விட்டேன் இப்போது..? ஒரே அரண்மனையில் இரண்டு இளவரசர்களுடன்.. நீ...''

''ம்..ம்ம்.. நான்..??'' என் முகம் ஏறிட்டாள்.

''ஒரு இளவரசனை நீ காதலனாகவும்.. இன்னோர் இளவரசனை.. மகனாகவும் பாவிக்கலாமே.. என்று சொல்ல வந்தேன்..! அது ஒரு குற்றமா..??'' என் ஒரு கரத்தை விம்மியிருக்கும்  அவளின் மலர்க் கொங்கை மீது... மென்மையாகப் பட  வைத்தேன்.

''போங்கள்.. பேச்சிலும் வல்லவர்தான் நீங்கள்..! நான் போகிறேன்..!!'' என் கரத்தை நகர்த்தி விட்டு.. என்னிடமிருந்து போலிக் கோபத்துடன் விலக முற்பட்டாள்.

''காதலுக்கு அழகு.. விலகி விலகிப் போவதல்ல.. என் கண்மணியே..! இணை பிரியாத அன்றில்களாக எப்போதும்.....'' சட்டென அவள் கரங்களை எடுத்து என் முகத்தில் பதித்தேன்.

''நீங்கள் மோசக்காரர்தான்..!! வாய்ப் பேச்சில்.. மிகவும் வல்லவர்.. என்பது நன்றாக தெரிகிறது..!! விடுங்கள் என்னை.. நான் போகிறேன்..!!'' அவள் சிணுங்கல் அதிகமானது.

''ஆஹா.. இதைச் சொல்லிப் போகத்தான் திரும்பி வந்தாயோ.. தேவி..??'' அவளது வலக் கரத்தை என் உதட்டில் பதித்து.. அதில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

''நீங்கள் குறும்பு செய்யாவிட்டால்.... உங்களுடனேயே இருக்கத்தான் விரும்புகிறேன்..! ஆனால்.. தாங்கள்தான்... நான் கொஞ்சம் ஏமாந்தாலும்...'' என் முத்தம் அவள் பெண்மைக்குள்ளும்.. அதிர்வலைகளைக் கிளப்பும்.

''சரி.. சரி.. உன்னிடம் இப்போது நான் குறும்பு ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை.. என்று வாக்குறுதி அளிக்கிறேன்.. போதுமா..?'' என நான் சொன்னேன்.

''இப்போது என்றால்..??''

''பொல்லாத சந்தேகம்..? இப்போது என்றால்... இந்த இடத்தில்.. இங்கே... இந்த நொடியில்... என்று பொருள்..!!"

" அதாவது.. நாம் இங்கிருந்து போகும்வரை..??''

மிகவும் சமயோஜிதமாகத்தான் இருக்கிறாள் கள்ளி..! ஆனால் அந்தக் கள்ளியையும் கவிழ்ப்பவன்தானே.. கள்வன்..!!

''சரி..அப்படியே ஆகட்டும்..!!''

''அய்யோடி.. இப்போதுதான்.. என் நெஞ்சுக்கு நிம்மதி..!!'' என தன் மார்பில் கை வைத்துச் சொன்னாள்.

''எங்கே.. அந்த நெஞ்சை நானும்.. சற்று...'' என் கையை அவள் கொங்கைமீது வைக்க முயல.. தட்டென என் கரத்தைத் தட்டி விட்டாள்.

''ஹ்ம்ம்.. என்ன ஒரு பொல்லாத்தனம்..? ச்சி.. தங்களைக் காண வரும்போதெல்லாம்.. எப்போதும் என்னுடன் மெய்க்காவல் படையை வைத்துக் கொள்ள வேண்டும்..! அப்போதான்.. தாங்கள் ஒழுக்கமானவராக இருப்பீர்களா..!!''

''மெய்க் காவல் படையை துணைக்கு வைத்துக் கொண்டு புரியும் செயல் காதல் ஆகாது.. என் கட்டிக் கரும்பே..!!'' என நான் அவளைக் கொஞ்ச முயன்ற நேரம்..... மகிழ்வதனி சொன்னது போல... என் தங்கை மகிழ்வதனியைத் தேடிக் கொண்டு மேன்மாடத்திற்கு வந்து விட்டாள்..!!

''இரண்டு பேரும் இங்கே என்ன செய்கிறீர்கள்.. அண்ணா..?'' என் தங்கை கேட்க... மகிழ்வதனி முந்திக் கொண்டு சொன்னாள்.

''உன் அண்ணா.. தனிமையை நாடி வந்து.. அமைதியை விரும்புகிறாராம்..! விழா மண்டபத்து கொண்டாட்டங்களில் அவர் மனம் லயிக்கவில்லையாம்..! அதோ தெரிகிறதே.. தூரத்து நிலா.. அதைக் கண்டு அவரது மனம் ஆனந்தமடைகிறதாம்..! அதுதான்... நானும் அவர் மோன லயத்தைக் களைக்க முயன்று கொண்டிருந்தேன்..! நல்லவேளை.. நீ இங்கு வந்தாய்.. எனக்குத் துணையாக..!''

'' ஆம்.. தேவி..! என் அண்ணாவுக்கு.. இளம்பிராயம் முதலே.. அந்த நிலா மீது ஏனோ.. அவ்வளவு காதல்..!! நிலா உதயமாகும் நேரம் எல்லாம்.. என் அண்ணா.. மேன் மாடத்தில்தான் தனித்திருப்பார்..!! அந்த நேரத்தில் அவரை யார் தொந்தரவு செய்தாலும்.. அவருக்கு பிடிக்காது..!!'' என.. தன் பங்குக்கு.. என்னைப் பற்றித் தம்பட்டம் அடித்தாள் என் தங்கை.. அலைக்குமரி..!!

இப்படி இரண்டு வாயாடிப் பெண்கள் இருக்குமிடத்தில்.. எந்த ஆண் மகனுக்குத்தான்.. காதல் உண்ர்வு தழைத்தோங்கும்..??

அதன்பிறகு.. நான் அதிகம் பேசாமல் அமைதியை கடை பிடித்தேன்.  மகிழ்வதனியின்.. மேனி அழகை.. நிலவொளியில் என்னால் ரசிக்க மட்டுமே முடிந்தது..!!

இரவு....!! 

அரண்மனை நந்தவனத்தில் நான் தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். பலவகை மலர்களும்.. இரவில் பூத்துக் குலுங்க.. மலர்களின் சுகந்த மணத்தில் என் மனம் மயங்கியிருந்தது. இளந் தென்றலின்.. இதமான தாலாட்டில் என் மேனி சிலிர்த்துக் கொண்டிருந்தது..! வானத்து நிலவு இப்போது நடுவானில் இருந்தது..!

நிலா பெரிய வட்டமாக இல்லை.. இப்போது..! உதயமான போது இருந்ததிலிருந்து.. பாதி நிலவு இளைத்து விட்டது போல.. சின்ன வட்டமாகக் காணப்பட்டது..! அதில் களங்கமும் இப்போது சேர்ந்து கொண்டிருந்தது..! தூரத்தில் தாரகைகள் எல்லாம்.. அழகழகாய் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன..!!

சிறிது நேர உலாவலுக்குப் பின்.. பனித்துளி படர்ந்த.. நுனிப்புல்மீது.. உட்கார்ந்து.. கரங்களால் தடவிப் பார்த்து.. உள்ளங்கையில் படர்ந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு.. மெதுவாகப் பின்னால் சாய்ந்து மல்லாந்து படுத்தேன்.!

ஒரு வித மோன லயிப்பில்.. வானத்தையும்.. அதனடியில் காணப்படும்.. வான மண்டலக் காட்சிகளையும்.. ரசித்துக் கொண்டிருந்த என்மேல்.. திடுமென எதுவோ ஒன்று வந்து விழுந்தது..!

'என்ன அது..?' திடுக்கிட்டு.. பின்.. நிலவொளியில் தெரிந்த அதைக் கையிலெடுத்தேன். அது ஒரு பூச்செண்டு..!!

'ஆ... இது எப்படி.. என்மேல்..? யார்..? எங்கிருந்து..?' படுத்தவாக்கிலேயே.. சுற்றிலும் என் பார்வையை ஓட்டினேன். சற்றுத் தள்ளி.. பூச்செடி மறைவில் இருந்து.. அந்த மெலிதான அசைவு தெரிந்தது..! கூடவே.. நந்தவனப் பூக்களின் வாசணை மிகுந்த நறுமணங்களையும் கடந்து.. வந்த.. அந்த புனுகு பூனை வாசணை...?? அது.. என் அன்புக்குரியவளின்.. பூ மேனி வாசணையல்லவா..!!

மகிழ்வதனி.. என்னைக் காண வந்திருக்கிறாள் என்கிற.. உணர்வே.. என்னை மிகவும் களிப்படையச் செய்தது.! எதையும் நான் அறியாதவன் போல.. மீண்டும் மல்லாந்து படுத்து.. வானத்தை நோக்கினேன். சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு பூச்செண்டு காற்றில் பறந்து வந்து என் மேல் விழுந்தது. அதை எடுத்து முகர்ந்தவாறு..

''விளையாடியது போதும்..!! மரியாதையாக என்னிடம் வந்து விடு.. மோகினிப் பெண்ணே..!! நீ யாருடன் விளையாடுகிறாய்.. என்று தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறாய்..!!'' என்றேன்.

செடி மறைவில் இருந்து.. 'க்ளுக் ' கென அவளது சிருங்காரச் சிரிப்பொலி கேட்டது.
''யாருடன் விளையாடுகிறதாம்.. இந்த மோகினிப் பெண்..??''

''தெரிந்து கொள்ள ஆவலா.. மோகினியே..?''

''ஆமாம்..!!''

''சரி.. கேட்டுக்கொள்..! நான் உதய சந்திரன்.. என்.. உயிரில் கலந்த.. அன்புக் காதலியின் பெயர் மகிழ்வதனி..!! மகிழ்வதனி என்கிற பெயரைக் கேட்டு.. அவளை நீ.. மெல்லினம் படைத்தவள் என்று எண்ணி விடாதே..!! அவள் பார்க்கத்தான்.. பூ போல இருப்பாள்..!! பழக்கத்தில் அவள் ஒரு ராட்சசி.. மனதைக் கொள்ளை கொண்டு விடுவாள்..!! பேச்சில் அவள் ஒரு அரக்கி.. மனதை நார் நாராக கிழித்து விடுவாள்..!! கோபத்தில அவள் ஒரு பத்ரகாளி.. ருத்ரதாண்டவமே ஆடி விடுவாள்..!! அகில உலகத்தையும் காத்தருளும்.. உமை மணாளனாகிய.. அந்த சிவ பெருமானே.. அவளைக் கண்டால் அஞ்சி விடுவார்.. அவ்வளவு கோபக்காரி அவள்..!! அவளது ஆருயிர்க் காதலனான.. என்னுடன் சாதாரன ஒரு இரவு மோகினிப்பெண் விளையாடுகிறாள்  என்று தெரிந்தால்... அவ்வளவுதான்.. உன் நிலமை..!!'' என நான்.. அளந்து விட்டேன்.

இப்படிச் சொன்னால் எந்தக் காதலிக்குத்தான் கோபம் வராது..? வந்தது...!!

தொடர்ந்து நான்கைந்து பூச்செண்டுகள் என்மேல் வேகமாக வந்து விழுந்த வண்ணமிருந்தது..!!

''இங்கிருந்து.. நீ கோபப்படாமல் போய்விடு மோகினிப் பிசாசே..! பொருமையில்தான் அவள் பூமாதேவி.. அவளுக்கு கோபம் என்ற ஒன்று வந்துவிட்டதோ..?? அவ்வளவுதான்..!! தரை தொடும் உன் பத்தடிக் கூந்தலில் ஒற்றை மயிர்கூட மிஞ்சாது..!! பிறகு மொட்டைத் தலையுடன் உலா வரும் உன்னை எவரும் சீந்தக் கூட மாட்டார்கள்..!! ஓடிவிடு இங்கிருந்து..!!'' என்றேன்.

அதற்கு மேலும்.. அவளால் பொருமை காக்க முடியவில்லை. செடி மறைவில் இருந்து.. வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு என்னிடம் வந்தாள்.! நான் கண்களை மூடிக்கொண்டு மேலும் சொன்னேன்.
''நான் இவ்வளவு சொல்லியும் கேட்காமல்.. என் அருகில் வேறு வந்து விட்டாயா..?? அப்படியானால்.. நீ மொட்டைத் தலை மோகினியாகத்தான் அலையயப் போகிறாய்..!! எதற்கும்.. உன்னை ஒருமுறை.. அழகிய மோகினித் தோற்றத்தில் பார்த்து விடுகிறேன்..! அதற்கு பிறகு.. உன்னைக் காணச் சகிக்காது..!! நீ அவ்வளவு கொடூரமாக இருப்பாய்..!!'' என்று என் மூடிய இமைகளைத் திறந்து பார்த்தேன்.

அப்போதுதான்.. அவளைப் பார்ப்பது போல.. சடக்கென எழுந்து உட்கார்ந்து..
''ஓஓ.. என் மகிழ்வதனியா..?? வா தேவி..!! இப்போதுதான்.. சற்று முன்.. இங்கு ஒரு மோகினிப் பிசாசு வந்து என் மீது மலர்ச்செண்டை வீசி விளையாடிக் கொண்டிருந்தது..! உன்னைப் பார்த்ததும் அது பறந்து ஓடி விட்டது போல் இருக்கிறது..!! ஏய்ய்.. மோகினிப் பிசாசே.. எங்கேயாவது இருக்கிறாயா..?? அப்படி எங்காவது ஒளிந்து கொண்டிருந்தால்.. ஓடிவிடு இங்கிருந்து..!! இதோ.. நான் சொன்ன.. என் இதய ராணி வந்து விட்டாள்..! அவள் கண்ணில் பட்டு விடாதே..!!'' என்றேன்.

''மோகினிப் பிசாசிடம் என்னைப் பற்றி ஏதோ சொன்னதாகச் சொன்னீர்களே..??'' என்னை நெருங்கி நின்றாள்.

''ஆமாம்..!! இப்படி  அமர்.. !!" புல் தரையில் தட்டினேன்.

''இருக்கட்டும்..!! அந்த மோகினி பிசாசிடம் என்ன சொன்னீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்..!!'' அவள் குரலில் உஷ்ணம்  தெரிந்தது.

நான் அவளை.. அன்னாந்து பார்த்து... வலது கரத்தின் ஒற்றை விரலை உயர்த்திச் சொன்னேன்.
''உண்மையைச் சொன்னேன்..!!''

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிலவொளியில் என்னை முறைத்தாள்.
''அது என்ன.. வலது கரத்தின் ஒற்றை விரலை உயர்த்தி... சுழற்றி...??''

''ஓ.. அதுவா..?? அது ஒன்றும் இல்லை.. மகிழ்வதனி..!! 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த' என்கிற ஒரு நடிகர்.. பல நூற்றாண்டுகளுக்குப் பின்.. ஒரு திரைப் படத்தில் இப்படித்தான்.. வலது கரத்தை உயர்த்தி... ஒற்றை விரலைச் சுழற்றி.. வசனம் பேசி.. ரசிகர்களை மகிழ்விப்பார் என்று.. இப்போதுதான் இங்கு.. மல்லாந்து படுத்துக் கொண்டு... வானத்தைப் பார்த்து.. வான சாஸ்திரம் சொல்வதை யோக நிஷ்டையில் உணர்ந்து கொண்டிருந்தேன்..!!'' என்றேன்..!!

அவள் எவ்வளவு கடுப்பாகியிருந்தால்... 'ணங்ங்..' கென்று என் மண்டையில் ஒரு கொட்டு வைத்திருப்பாள் என்று.. பார்த்துக் கொள்ளுங்களேன்.. !! 

விரும்பிப் படித்தவை.. !!