வியாழன், 6 ஜூன், 2024

கேள்வி - பதில்

 கேள்வி, 


நிரு.. நீங்க காமக்கதைகள் எழுதினாலும், உங்க கதைகள்ள உளவியல் ரீதியா பெண்களை மட்டம் தட்டியும் அறிவைவிட உணர்ச்சியை மிகையாக கொண்டாடுபவர்களாகவும் சித்தரிக்கரிங்களே ஏன்?


பதில்,


சிம்ப்பிள் நண்பா. பெண்களை சாதனைப் பெண்மணிகளாக உயர்த்தியும், கொண்டாடியும் எழுத பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்காங்க. அதிலும் குறிப்பா ஒவ்வொரு பெண் எழுத்தாளரின் கடமையும் அதுவாகத்தான் இருக்கு.!


ஆனால் இங்கே ஓர் ஆணே எழுத்தாளனாகி கதை எழுதினாலும் ஆண்களை ஓர் எல்லைக்கு மேலாக உயர்வாவோ உளவியல் ரீதியாக உயர்த்தி எழுதவோ அவர்கள் தயாராக இல்லை. 


சமூகக் கட்டமைப்புக்கு உட்பட்டே கதை எழுதி அவர்கள் பெயர்பெற வேண்டியிருக்கிறது. அதுவே பத்திரிக்கை தர்மமாகவும் இருக்கிறது. 


குடிக்கும் ஆண்கள் மட்டமானவர்கள், இந்த சமூகத்தில் நடக்கும் அத்தனைக் குற்றங்களுக்கும் காரணம் குடிகார ஆண்களே.. என்பது போன்ற மாயையை உருவாக்கி கதை எழுதுகிறார்கள்.   


அப்படிப்பட்ட எழுத்தாளர்களை குறை சொல்வதோ, குடிக்காத ஆண் உத்தம புத்திரன் அல்ல என்று எழுதவோ நான் ஒருபோதும் தயாராக இல்லை. 


அதிலும் குறிப்பாக நான் எழுத்தாளன் இல்லை. வெறும் கதை சொல்லி.! அதில் பாதிக்கப்பட்ட ஓர் ஆணாக இருந்து என் பக்கத்துக் கோணத்தை கதையாகச் சொல்கிறேன். அவ்வளவுதான்.!


இதில் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் இல்லை. பெரும்பாலும் ஆண் பெண் உளவியல் மட்டுமே உண்டு. ஆனாலும் என்ன.. காமக்கதை என்பதால் ஆண் மேலாகவும் பெண் கீழாகவும் தெரிவார்கள். 


ஆண் மேலிருந்து இயங்குவதால் உயர்ந்தவனும் இல்லை, பெண் கீழிருந்து உள்வாங்குவதால் தாழ்ந்தவளும் இல்லை. 


என் எழுத்து பெரும்பாலும் சமகால ஆண், பெண் இணைவு, அல்லது குடும்ப வாழ்வியலில் இருக்கும் உளவியலை மையப்படுத்தியே இருக்கும். 


இதன் குறை என்னவென்றால் அதை நான் சொல்வது காமக்கதை வழியாக என்பது மட்டும்தான். 


மற்றபடி இதையே ஆன்மிக வழியில் சொன்னால் அது உயர்வாக மதிக்கப்படலாம், அல்லது பேசப்படலாம். ஆனால் அது, என் இயல்புக்கு மாறானதாகவோ, அல்லது கீழ்நிலை மக்களை இன்னும் கீழானவர்களாக எண்ண வைக்கவோ காரணமாக அமைந்து விடலாம். 


அதைச் செய்ய நான் விரும்பவில்லை. அதற்கு என் மன, அறிவும் ஒத்துழைக்கவில்லை.


ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது இந்திய அரசியல் சட்ட மாமேதைகளின் கூற்று. இன்றும் அதுதான் நடைமுறை. 


ஒரு. நிரபராதி தண்டிக்கபடுகிறானோ இல்லையோ, லட்சம் குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 


என் எழுத்தும் இந்த அடிப்படையிலேயே இருக்கும். இது என் பக்க நியாயம் மட்டும்தான். நீங்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயமில்லை.. !!

புதன், 5 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -11

 ''என்ன சொல்றீங்க..?'' லாவண்யாவின் கை விரலைக் கோர்த்தபடி கேட்டான் நந்தா.


அவனுக்கு.. அவள் மீது காதல் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் கிடையாது.


 அவளைப் பார்க்கும் போது.. அவன் மனதில் தோன்றும் ஓர் இச்சை, இப்போதும் அவன் மனதில் தோன்றியது. அதற்கு அவளும் ஒத்துழைப்பாள் என்கிற நம்பிக்கையில் கேட்டுவிட்டான்.


''என்ன சொல்றது..?'' என்று அவனைக் கேட்டாள்.


''லவ் பண்ணலாமா..?'' அவள் தோளில் அவன் தோளை உரசினான்.


''திடீர் லவ்வா..?'' மெல்லிய குறுநகையுடன் கேட்டாள்.


''எப்படி பண்ணா.. என்ன..? லவ்.. லவ்தான..?''


''நான் உன் அக்காளோட பிரெண்டு.. தெரியும்ல..?''


''அக்காளோட பிரெண்ட.. லவ் பண்ணக்கூடாதுனு.. ஏதாவது சட்டமா என்ன..?'' எனக் கேட்டான்.


அவள் எதுவும் பேசவில்லை.  அமைதியாக இருந்தாள்.


''லாவண்யா..'' அவள் விரலை நெறித்தான்.


''சொல்லு..'' என்றாள்.


''லவ் பண்லாமா..?''


''மலருக்கு தெரிஞ்சா..?''


''அவள்ளாம் ஒரு இதுன்னுட்டு.. அவள நான் பாத்துக்கறேன்..!! உங்களுக்கு புடிச்சா சொல்லுங்க நாம லவ் பண்ணலாம்”


“உனக்கு என்னை புடிச்சிருக்கா?”


“அதனாலதான் லவ் பண்லாமானு கேக்கறேன்”


“என்னை கல்யாணம் பண்ணிக்குவியா?”


“அதெல்லாம் பின்னால பாத்துக்கலாம்”


“பின்னாலன்னா.. எப்ப?”


“எனக்கு கல்யாணம் பண்ணிக்கற ஐடியால்லாம் எதுவும் கெடையாது”


“அப்பறம்..?”


“இருக்கறவரை இப்படியே ஜாலியா சுத்திட்டு ஒரு வர சாவை சந்தோசமா ஏத்துட்டு செத்து போயிரனும்”


“அப்ப.. கல்யாணம் பொண்டாட்டி கொழந்தை எல்லாம்”


“தேவையில்லாத தலைவலி. நானெல்லாம் கல்யாணம் பண்ணி கொழந்தை குட்டி பெக்கலேன்னு யாரு அழுதா? நீங்க கல்யாணம் பண்ணி கொழந்தை குட்டி பெத்து வாழணுமா?”


“கண்டிப்பா” என்றாள். 


“அப்ப சரி” அவள் விரலை விட்டான். தலையை கோதிக் கொண்டான்.


“என்னை லவ் பண்ணா கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” லாவண்யா கேட்டாள். 


“மாட்டேன்”


“அப்பறம் எதுக்கு இந்த லவ்வு?”


“லவ் பண்றவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கறாங்களா என்ன?”


“கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு தெரிஞ்சே யாரும் லவ் பண்றதில்லயே. லவ் பண்ணிட்டு அப்பறமா பிரிஞ்சு போயிர்றாங்க”


சிரித்தான். “அப்படித்தான் நம்பிட்டிருக்கீங்களா?”


“ஆமா”


“சரி.. அப்படியே ஒரு ரவுண்டு போலாமா..?''


''எங்க..?'' அவனைப் பார்த்தாள்.


''ஜாலியா.. கொஞ்ச தூரம்.. நடந்துட்டு வரலாம்..''


''ஏய்.. ஏதாவது பிளான் பண்ணியிருக்கியா..?''


''ஆமா..''


''என்ன பிளான்..?''


''உன்ன மேட்டர் பண்ணனும்..'' அவன் சர்வ சாதாரணமாகச் சொன்னான்.


''அடப்பாவி.. இவ்ளோ.. தெனாவெட்டா சொல்ற..?''


''இது தெனாவெட்டு இல்ல..! உன்ன புடிச்சிருக்கு.  நீதான.? உனக்கு இதுலாம் புதுசா என்ன..?''


''ஏய்.. என்னைப் பத்தி தெரியுமா..?''


''உன்ன பத்தியும் தெரியும்.. எஙகக்காள பத்தியும் தெரியும்..'' என்றான்.


ஒரு டவுன்பஸ் வந்து நின்றது. யார் யாரோ இறங்கினார்கள்.


பஸ் நகர்ந்து போனதும்,

''சரி.. வா.. வெட்டி பேச்சு எதுக்கு..'' என்று அவளை அழைத்தான் நந்தா.


''எங்க..பா..?'' என்றாள் லாவண்யா.


''அப்படியே.. மறைவா போய்ட்டு வரலாம்..!! நீ வேற குளிச்சு.. ரொம்ப பிரஷ்ஷா இருக்க..! உன்ன இப்படி பாத்ததுமே.. எனக்கு ஒரு மாதிரி ஆகிருச்சு..! நான் முடிவு பண்ணிட்டேன். நமக்கெல்லாம் லவ் செட்டாகாது. காசு வேணும்னாலும் கேளு தரேன். வா”


''இன்னிக்கு வேண்டாம்..'' 


''ஏன்..?''


''நானே சொல்றேன்..''


''அட.. வா லாவண்யா. உனக்கு அமௌண்ட் வேணும்னாலும் வாங்கிக்க. எவ்வளவு?''


''என்னை லவ் பண்றேன்ன..?''


''ஆமா. ஆனா நீதான் அதெல்லாம் பண்ணா கல்யாணம் பண்ணிக்னும்னு சொல்றியே?”


''கல்யாணத்தை விடு. லவ் பண்றவளுக்கு அமௌண்ட் எல்லாம் குடுப்பியா..?''


''அத நீதான் சொல்லணும். லவ்வோ.. அமௌண்டோ.. எனக்கு நீ வேணும் இப்ப..! அவ்ளோதான்..!!'' என்றான்.


''ஏய்.. இன்னிக்கு உன்னால ஒன்னும் பண்ண முடியாது..''


''ஏன் பண்ண முடியாது..?''


''எனக்கு.. இன்னிக்கு அந்த நாளு..''


''எந்த நாளு..?''


''மூணு நாளு..'' மெலிதாகச் சிரித்தவாறு சொன்னாள்.


''சட்..!! கோவணமா..??'' என சலித்துக் கொண்டான் ''நல்ல நாள் பாத்து.. ஆன போ..''


''ச்சி.. கோவணமெல்லாம் இல்ல.. நான் வேற..''


''எல்லாம் ஒன்னுதான்..! எத வெச்சு அடச்சா என்ன..?'' அவன் சலித்துக் கொண்டு சொல்ல,


இன்னொரு கையால் அவன் இடுப்பில் கிள்ளினாள்.

''ஒரு இதே இல்லாம பேசறடா..''


''எதே இல்லாம பேசறாங்க..?''


''ரா.. வா..!! பச்சை பச்சையா.. கூச்ச நாச்சமில்லாம..! பட்டு பட்டுனு பேசற..?''


''சரி.. இப்ப மேட்டர் வேண்டாம்..! சும்மா பேசிட்டு வரலாம் வா..!!'' அவள் கையைப் பிடித்து இழுத்தான்.


''இங்கயே பேசலாமே..?''


''உன்ன பேச யாரு கூப்பிட்டா..? பேசறதுன்னா வார்த்தைல இல்ல. மத்தது. வா லாவண்யா..!!'' அவன் இழுக்க.. அவனுடன் நடந்து கொண்டே சொன்னாள்.


''ஹைய்யோ.. உன்னால ஒன்னும் பண்ண முடியாதுடா..! மூணு நாள் பொரு..!!''


''மேட்டர்தான பண்ண முடியாது..? மேற்படி மேட்டர் பண்ணலாமில்ல.. வா..!!''


''நீ ரொம்ப மோசம்டா..'' எனச் சினுங்கிக்கொண்டே அவனுடன் நடந்தாள்.


 சாலையோரமாக நடந்து.. மெதுவாக இருளுக்குள் கலந்தனர்.. !!

விரும்பிப் படித்தவை.. !!