வெள்ளி, 21 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -14

 விழிமலர் பாத்ரூம் போய் முகம் கழுவிக் கொண்டு தன் அம்மாவிடம் போனாள். அவளுக்குள் பொசுபொசுவென ஒரு கோபம் உண்டாகியிருந்தது.


''உன் சின்ன பையன்.. என்ன பண்ணான் தெரியுமா..?''


''என்னடீ பண்ணான்..?'' குழம்புச் சட்டியில் கரண்டியை விட்டுக் கிளறியவாறே கேட்டாள் அம்மா.


''என் மூஞ்சில எச்சியை துப்பிட்டு போய்ட்டான்..''


''அவனா... ஏன்..?'' அவளைத் திருப்பிக் கேட்டாள்.


''ஏனா..?” முறைத்து,  “இருக்கு அவனுக்கு. கொட்டிக்க இங்கதான வருவான்..? வரட்டும்.. அவனை என்ன பண்றேன் பாரு..''


''சின்ன பசங்ககிட்ட உனக்கெதுக்குடி தேவையில்லாத வம்பு..? அவனப் பத்தித்தான் தெரியுமில்ல..?'' என்றாள் அம்மா.


''ஆமா.. நீ என்னைக்கும் அவன விட்டுக் குடுத்து பேச மாட்டியே..? என் கைக்கு சிக்காமயா போவான்.. உன் மகன்..? அப்ப பாரு..!'' என்று அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போய் டிவி முன்னால் உட்கார்ந்து சீரியலில் மூழ்கினாள்.


அரைமணி நேரத்தில் வீடு வந்த அசுவினி மலரிடம் மாட்டிக் கொண்டாள்.


''வா..'' தன் பக்கத்தில் அவளை அழைத்தாள்.


தயக்கத்துடன் சிரித்துக்கொண்டு வந்தாள்.


''ஏதுடி அந்த புக்கு..?''


''எனக்கு தெரியாது..'' எனச் சிரித்தாள்.


'பட்' டென அவள் கன்னத்தில் ஓர் அறை விட்டாள். 

 ''பொய் சொன்ன.. கொன்றுவேன்..! ஒழுங்கு மரியாதையா சொல்லிரு..''


''சத்தியமாக்கா.. எனக்கு எதுவும் தெரியாது.  மதிதான் வெச்சிருந்தான்..'' கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே சொன்னாள்.


''அத எடுத்துட்டு ஓடினியே.. என்ன பண்ண அதை..?''


''வாங்கிட்டான்..''


''என்ன சொல்லி.. படிக்க தந்தான் உன்கிட்ட..?''


''அவன் எனக்கு படிக்கத் தரல. தனியா வெச்சி படிச்சிட்டிருந்தான்.. என்ன புக்குடானு கேட்டேன்.  கதை புக்குன்னான்..! அந்த புக்க தொடாம படிச்சா.. நானும் படிக்கலாம்னு சொன்னான்.! மொதல்ல கதை புக்குன்னுதான் நானும் நெனைச்சேன்க்கா.. அப்பறம் பாத்தா..  அதுல அம்மணக்குண்டி படமெல்லாம் போட்றுக்கு..'' எனச் சிரித்தாள் ''அத பாத்துட்டிருந்தப்பத்தான் நீ வந்துட்ட...''


''அத பாத்ததுமில்லாம சிரிக்கறியா..?'' அவள் காதைப் பிடித்து திருகினாள். ''உங்கள அப்ப நான் இல்லாம நந்தான் பாத்துருக்கனும்... உங்க ரெண்டு பேரையும் தோல உறிச்சு காக்காய்க்கு போட்றுப்பான்..! சொல்லட்டுமா..?''


''ஐயோ.. வேண்டாம்க்கா.. அண்ணங்கிட்ட சொல்லிடாத ப்ளீஸ்..'' எனக் கெஞ்சினாள்.


''இனிமே.. நீ அந்த மாதிரி புக்கு ஏதாவது படிக்கறத பாத்தேன்.. நானே உன்ன கொன்றுவேன்..!'' 


''என்ன புக்குக்கா அது..?'' என அப்பாவியாகக் கேட்டாள் அசுவினி.


''அதெல்லாம் தப்பான புக்கு..! நீ படிக்கக் கூடாது..'' 


“தப்பான புக்குன்னா அதை நீ எதுக்கு படிச்ச?”


“அதிகப்பிரசிங்கி” நங்கென்று அவள் மண்டையில் கொட்டினாள். 


மண்டையைத் தேய்த்துக் கொண்ட அசுவினி, அவளை லேசாக முறைத்துப் பார்த்தாள். 


“நீ பெரியவன்னுதான என்னை அடிக்கற?”


“ஆமா.. மூடிறி வாயை”


அதன்பின் மலரின் பக்கத்திலேயே உட்கார்ந்து அவளும் சீரியல் பார்த்தாள்.


விளம்பர இடைவேளையில் அவளைக் கேட்டாள் மலர்.

''நீ யாரையாவது லவ் பண்றயாடி..?''


''ஐயோ.. இல்லக்கா..'' என்றாள் அலறலாக.


''பொய் சொன்ன.. தோல உறிச்சிருவேன்..''


''சத்தியமாக்கா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல...''


''சரி.. மதி...?''


சிரித்தாள்.! சொல்லத் தயங்கினாள்..!


அவள் தோளில் கை போட்டாள் மலர்.


''அடிக்க மாட்டேன். சொல்லு..''


சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

''நான்தான் சொன்னேனு தெரிஞ்சா அவன் என்னை அடிப்பான்..''


''உன்ன போட்டுக் குடுக்க மாட்டேன்..''


''என் பிரெண்டு விகாசினி இருக்கா இல்ல..? அவள லவ் பண்றான்..'' என்றாள்.


''விகாசினியா..?'' இதே தெரு.


''ம்.. ம்ம்..!!''


''அவளும் பண்றாளா..?''


''ஆமா..''


''எத்தனை நாளா..?''


''ஆறு மாசமா.. லவ் பண்றாங்க ரெண்டு பேரும்..''


''நீதான் தூதா.. அவங்களுக்கு..?''  


அஸ்வினி சிரித்தாள்.


அதே நேரம்.. காம்பௌண்டுக்குள் பைக்கைக் கொண்டு வந்து நிறுத்தினான் துகிலன்.!


விழிமலருக்கு சட்டென ஒரு கோபம் எழுந்தது.


அவன் பைக்கை நிறுத்திவிட்டு மேலே போக... சில நிமிடங்களுக்குப் பிறகு.. மலரும் எழுந்து மேலே போனாள்.. !!


அவள் மொட்டை மாடிக்குப் போனபோது பாத்ரூமிலிருந்து வந்தான் துகிலன்.


முகம் கழுவியிருந்தான்.

''ஹாய் மலர்..'' புன்னகைத்தான்.


''ஹாய்..!!'' என்றாள். ''இப்பதான் வரீங்களா.?''


''ஆமா.. நீங்க..?''


''நான் ஆறுமணிக்கு முன்னயே வந்துருவேன்..''


அவன் அறைக்குள் நுழைந்து..

''உள்ள வாங்க..''  அவளை அழைத்தான்.


அவள் உள்ளே போனாள்.


அவன் டவல் எடுத்து முகம் துடைத்தான்.

''உக்காருங்க மலர்..''


அந்த புத்தகம் இருந்த இடம் நோக்கி அவள் பார்வை போனது. 

அங்கே இருக்குமா என்று தெரியவில்லை. உடனே போய் பார்ப்பது அவ்வளவு நல்லதும் இல்லை.


''உங்ககிட்ட ஒரு விசயம் பேசனும்..'' தயங்கிச் சொன்னாள். 


''என்ன மலர்..?'' அவள் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.


''நீங்க.. கொஞ்சம்.. ஒரு மாதிரியான புக்கெல்லாம் படிப்பிங்களா..?'' என லேசான தயக்கத்துடன் கேட்டாள்.


''ஒரு மாதிரியான புக்குன்னா..??''


''இந்த… பலான... பலான....''


சிரித்தான், ''ஏன் மலர்..?''


''படிப்பிங்களா.. சொல்லுங்க..?''


''ம்..'' தலையை ஆட்டினான்.


''நீங்க..  இங்க வாங்கி.. வெச்சிருக்கீங்களா..?''


''ம்கூம்..! அந்த மாதிரி இல்ல மலர்.. ஏன்..?''


''பொய் சொல்லாதிங்க..? அன்னிக்கு நானே பாத்தேன்..! உங்ககிட்ட ஒரு புக் இருந்துச்சு..''


''என்கிட்டயா..? பலான புக்கா..? சான்ஸே இல்ல..?'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னான். 


''ஏன் இப்படி அப்பட்டமா பொய் சொல்றீங்க.. நான்தான் பாத்தேனு சொல்றேன் இல்ல..?''


''என்ன மலர்..? சரி.. நீங்க பாத்தது.. என்ன மாதிரி.. தலைப்பு..?'' எனக் கேட்டான்.


''காமசூத்ரா..!!'' என்றாள்.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!