வியாழன், 27 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -15

 துகிலன் மலரைப் பார்த்தவாறு சிரித்தான்.


''ஹா.. ஹா..!! காமசூத்ராவா..? என்ன மலர் நீங்க..? பலான புக்கு.. அது இதுனு சொல்லி என்னை பயமுறுத்திட்டிங்களே..?''


''அது.. உங்ககிட்ட இருக்கா.. இல்லையா..?'' அவன் சிரிப்பை ரசித்துக் கொண்டே கேட்டாள்


''இருக்கு..! இருக்கு..!!'' தலையை அசைத்து ஒத்துக்கொண்டான் ''பட்.. அது நீங்க நெனைக்கற மாதிரி பலான புக் இல்லைங்க..''


''ஆஹா.. அப்றம் என்ன.. அதுலாம்.. பக்தி பாடல்களா..?'' எனக் கிண்டல் செய்தாள்.


''இல்லதான்..! ஆனா.. மலர்.. அது.. வாழ்வியல் சம்பந்தப்பட்ட புத்தகம்ங்க..! நீங்க அத தப்பா தெரிஞ்சு வெச்சிருக்கீங்கனு நெனைக்கறேன்..! குடும்பத்துல.. கணவன் மனைவிக்குள்ள.. காதல்.. காமம் இதெல்லாம் எப்படி அன்பா கொண்டு போறதுன்னு.. சொல்ற புத்தகம்ங்க அது..! அதப்போயி.....'' என்றான்.


''அப்ப அது.. தப்பான புக் இலலேன்றிங்களா..?'' தன் கண்களை விரித்து.. ஆச்சரியம் காட்டி.. அவனைக் கேட்டாள்.


''இல்ல மலர்..! ஸாரி மலர்.. அதப்பத்தி... இப்ப நாம ஏன் தேவையில்லாத விவாதம் பண்ணிக்கனும்..? ஆமா.. இப்ப ஏன் நீங்க அத.. என்கிட்ட கேட்டிங்க..?'' எனக் கேட்டான்.


''இல்ல.. அந்த புக் இப்ப எங்க..?'' என்று மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டாள்.


''ரேக்லதான் இருக்கும்..!! ஏன்..?'' அவன் பார்வை அவள் மார்பில் பட்டுத் தெரித்தது.


''இருக்கா பாருங்க..'' என்றாள்.


''ஒரு நிமிசம்..!''  அவன் போய் புத்தக செல்பில் தேடினான்.  இல்லை. !

''இங்கதாங்க இருக்கும்.. இப்ப காணம்..'' என்று மீண்டும் தேடினான்.


''அது இப்ப எங்கருக்குனு.. எனக்கு தெரியும்..''


கழுத்தைத் திருப்பி.. அவளைப் பார்த்தான்.

''எங்க இருக்கு..?''


''என் தம்பிகிட்ட..'' என மலர் சொல்ல...


அவன் கண்கள் சுருங்கி.. முகம் வெருண்டது.


''வாட்.. உங்க தம்பிகிட்டயா..? அவருகிட்ட எப்படி..?''


''அதான்.. நானும் கேக்கறேன்..? அவன்கிட்ட எப்படி போச்சு..?''


''அப்படி போக வாய்ப்பே இல்ல மலர்..! எனக்கு தெரிஞ்சு.. உங்க தம்பி நந்தா.. என் ரூம்க்கெல்லாம் இன்னிக்குவரை வந்ததே இல்ல..! ஆனா.. அவருகிட்ட எப்படி..??'' யோசனையாகத் தாடையைத் தடவினான்.


''அலோ.. அலோ..'' என்றாள் ''நான் என் தம்பினு சொன்னது.. நந்தாவை இல்ல..! சின்னவன்.. மதி..!!''


''மதியா..?'' திகைத்தான் ''அவன்கிட்ட எப்படி..?''


''அத.. நான் கேக்கனும் சார்..?''


''அவன் அடிக்கடி வருவான்..! ஆமா.. மார்னிங் வந்திருந்தான்.. நான் குளிக்கப் போனப்ப.. புக்ஸ் எல்லாம் எடுத்து பாத்துட்டிருந்தான்.. ஓ.. ஷிட்... எடுத்துட்டானா..? அய்யய்யோ.. அதுனால எதும் பிராப்ளமா..?''


''நான் மட்டும் தான் பாத்தேன்..'' என்றாள்.


இதில் தன் தங்கையை இழுக்க அவள் விரும்பவில்லை.


''ஸாரிங்க..'' என்றான் ''அவன் படிக்கற பையன்.. இதெல்லாம் எடுக்க மாட்டான்னு.. கொஞ்சம் அசால்ட்டா விட்டுட்டேன்..! இப்ப எங்க அவன்..?''


''ஓடிட்டான் புக்க தூக்கிட்டு.. இன்னும் வீட்டுக்கு வரலே..! அவன்கிட்ட அத பாத்ததும்.. அத நீங்கதான் அவனுக்கு படிக்க குடுத்துருப்பிங்கனு.. உங்க மேல கோபப்பட்டேன்..''


''ரியல்லீ… ஸாரி மலர்..!! உங்க கோபம் நியாயமானதுதான்..! ஆனா அந்த புக்க.. அவன் எனக்கு தெரியாமத்தான் எடுத்திருக்கான்.! நான் குடுக்கலே..''


''உங்கள நம்பறேன்..!! அவன அனாவசியமா உள்ள விடாதிங்க.. அவன் சின்னப் பையன்.. அவனுக்கு எதுவும் தெரியாது..! பின்னால.. உங்களால கெட்டேனு சொல்லிருவான்..!''


''ஓகே மலர்..! ரொம்ப தேங்க்ஸ் மலர்..! அவன்கிட்டருந்து அந்த புக்க.. எப்படி வாங்கறது..?'' எனக் கேட்டான்.


''உங்களுக்கு தெரியாத மாதிரியே. மெய்ண்டென் பண்ணுங்க..! அவன நான் கவனிச்சிக்கறேன்..! ஆனா இனிமே கவனமா இருங்க..!'' எனச் சொல்லிவிட்டு கீழே வந்தாள்..!!



☉  ☉  ☉


முற்பகல் நேரம்.. நந்தா டீக்கடையில் நண்பர்களுடன் உட்கார்ந்து வெட்டி அரட்டையில் ஈடுபட்டிருந்த போது.. அவனது மொபைல் அழைத்தது.


அழைத்திருப்பது..

லாவண்யா..!!


''ஹாய்..'' என்றான் நந்தா.


''ஹாய்.. நந்து..! என்ன பண்ற.?'' எனக் கேட்ட அவள் குரல் இனிமையாக இருந்தது.


அவளது குரலுக்காகவே.. அவளை லவ் பண்ணலாம் போலிருந்தது.


''டீ.. அடிச்சிட்டிருக்கேன்..'' என்றான்.


''டீ..யா..? எங்க..?''


''டீக்கடைல..?''


'' எந்த கடைல..?''


''ஐயங்கார் பேக்கரி..! நீ என்ன பண்ற..?''


''வீட்லதான் இருக்கேன்..''


''ஏன் வேலைக்கு போகல..?''


''ஆஃப் நைட் சிப்ட்.. ரெண்டு மணிக்கு போகனும்..''


''ஓ.. வீட்ல யாரு இருக்கா..?''


''யாரும்... இல்ல..! நான் மட்டும்தான் இப்ப..''


''தனியா இருக்கியா.? வரட்டுமா..?''


''எதுக்கு..?'' எனச் சிரித்தவாறு கேட்டாள்.


''உன்ன மேட்டர் பண்ணத்தான்.. வேற எதுக்கு..?'' என்றான் நந்தா.


''பச்சையா பேசறடா..'' எனச் சிரித்தாள்,  ''வா..!!''


''வெய்ட் பண்ணு.. வந்தர்றேன்..!!''


''ஏய்ய்.. நந்து...''


''சொல்லு..டி..?''


''நீ இங்க வரேனு.. யாருகிட்டயும் சொல்லாத..!''


''நான் யாருகிட்ட சொல்லப் போறேன்..?''


''இல்ல.. உன் பிரெண்டுககிட்டல்லாம் சொல்லிட்டிருக்காத..! ம்.. ம்ம்..?''


''ம்.. ம்ம்..!!''


''ஆ... அப்றம் ..?''


''சொல்லு...''


''வரப்ப.. அது வாங்கிட்டு வா..''


''எது..? சாப்பிட ஏதாவது வேணுமா..?''


''சீ.. சாப்பிடலாம் ஒன்னும் வேண்டாம்..! முக்கியமானது.. வாங்கிட்டு வா..!''


''முக்கியமானதா..?''


''ம்.. ம்ம்..!!''


''அது என்ன.. அவ்ளோ முக்கியமானது..?''


''நீ எதுக்கு வர..?''


'' உன்ன மேட்டர் பண்ண வரேன்..''


''அதுக்கு சேப்டினு ஒன்னு வேணுமா இலலையா..?''


''ஓ..'' எனச் சிரித்தான் ''காண்டமா..? அத நேரடியா சொல்ல வேண்டியதுதான..? இப்படி சுத்தி வளைச்சு சொல்ற..?''


''வாங்கிட்டு வந்துரு..!!'' எனச் சிரித்துக்கொண்டே.. காலை கட் செய்தாள் லாவண்யா.....!!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!