வெள்ளி, 21 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -14

 விழிமலர் பாத்ரூம் போய் முகம் கழுவிக் கொண்டு தன் அம்மாவிடம் போனாள். அவளுக்குள் பொசுபொசுவென ஒரு கோபம் உண்டாகியிருந்தது.


''உன் சின்ன பையன்.. என்ன பண்ணான் தெரியுமா..?''


''என்னடீ பண்ணான்..?'' குழம்புச் சட்டியில் கரண்டியை விட்டுக் கிளறியவாறே கேட்டாள் அம்மா.


''என் மூஞ்சில எச்சியை துப்பிட்டு போய்ட்டான்..''


''அவனா... ஏன்..?'' அவளைத் திருப்பிக் கேட்டாள்.


''ஏனா..?” முறைத்து,  “இருக்கு அவனுக்கு. கொட்டிக்க இங்கதான வருவான்..? வரட்டும்.. அவனை என்ன பண்றேன் பாரு..''


''சின்ன பசங்ககிட்ட உனக்கெதுக்குடி தேவையில்லாத வம்பு..? அவனப் பத்தித்தான் தெரியுமில்ல..?'' என்றாள் அம்மா.


''ஆமா.. நீ என்னைக்கும் அவன விட்டுக் குடுத்து பேச மாட்டியே..? என் கைக்கு சிக்காமயா போவான்.. உன் மகன்..? அப்ப பாரு..!'' என்று அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போய் டிவி முன்னால் உட்கார்ந்து சீரியலில் மூழ்கினாள்.


அரைமணி நேரத்தில் வீடு வந்த அசுவினி மலரிடம் மாட்டிக் கொண்டாள்.


''வா..'' தன் பக்கத்தில் அவளை அழைத்தாள்.


தயக்கத்துடன் சிரித்துக்கொண்டு வந்தாள்.


''ஏதுடி அந்த புக்கு..?''


''எனக்கு தெரியாது..'' எனச் சிரித்தாள்.


'பட்' டென அவள் கன்னத்தில் ஓர் அறை விட்டாள். 

 ''பொய் சொன்ன.. கொன்றுவேன்..! ஒழுங்கு மரியாதையா சொல்லிரு..''


''சத்தியமாக்கா.. எனக்கு எதுவும் தெரியாது.  மதிதான் வெச்சிருந்தான்..'' கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே சொன்னாள்.


''அத எடுத்துட்டு ஓடினியே.. என்ன பண்ண அதை..?''


''வாங்கிட்டான்..''


''என்ன சொல்லி.. படிக்க தந்தான் உன்கிட்ட..?''


''அவன் எனக்கு படிக்கத் தரல. தனியா வெச்சி படிச்சிட்டிருந்தான்.. என்ன புக்குடானு கேட்டேன்.  கதை புக்குன்னான்..! அந்த புக்க தொடாம படிச்சா.. நானும் படிக்கலாம்னு சொன்னான்.! மொதல்ல கதை புக்குன்னுதான் நானும் நெனைச்சேன்க்கா.. அப்பறம் பாத்தா..  அதுல அம்மணக்குண்டி படமெல்லாம் போட்றுக்கு..'' எனச் சிரித்தாள் ''அத பாத்துட்டிருந்தப்பத்தான் நீ வந்துட்ட...''


''அத பாத்ததுமில்லாம சிரிக்கறியா..?'' அவள் காதைப் பிடித்து திருகினாள். ''உங்கள அப்ப நான் இல்லாம நந்தான் பாத்துருக்கனும்... உங்க ரெண்டு பேரையும் தோல உறிச்சு காக்காய்க்கு போட்றுப்பான்..! சொல்லட்டுமா..?''


''ஐயோ.. வேண்டாம்க்கா.. அண்ணங்கிட்ட சொல்லிடாத ப்ளீஸ்..'' எனக் கெஞ்சினாள்.


''இனிமே.. நீ அந்த மாதிரி புக்கு ஏதாவது படிக்கறத பாத்தேன்.. நானே உன்ன கொன்றுவேன்..!'' 


''என்ன புக்குக்கா அது..?'' என அப்பாவியாகக் கேட்டாள் அசுவினி.


''அதெல்லாம் தப்பான புக்கு..! நீ படிக்கக் கூடாது..'' 


“தப்பான புக்குன்னா அதை நீ எதுக்கு படிச்ச?”


“அதிகப்பிரசிங்கி” நங்கென்று அவள் மண்டையில் கொட்டினாள். 


மண்டையைத் தேய்த்துக் கொண்ட அசுவினி, அவளை லேசாக முறைத்துப் பார்த்தாள். 


“நீ பெரியவன்னுதான என்னை அடிக்கற?”


“ஆமா.. மூடிறி வாயை”


அதன்பின் மலரின் பக்கத்திலேயே உட்கார்ந்து அவளும் சீரியல் பார்த்தாள்.


விளம்பர இடைவேளையில் அவளைக் கேட்டாள் மலர்.

''நீ யாரையாவது லவ் பண்றயாடி..?''


''ஐயோ.. இல்லக்கா..'' என்றாள் அலறலாக.


''பொய் சொன்ன.. தோல உறிச்சிருவேன்..''


''சத்தியமாக்கா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல...''


''சரி.. மதி...?''


சிரித்தாள்.! சொல்லத் தயங்கினாள்..!


அவள் தோளில் கை போட்டாள் மலர்.


''அடிக்க மாட்டேன். சொல்லு..''


சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

''நான்தான் சொன்னேனு தெரிஞ்சா அவன் என்னை அடிப்பான்..''


''உன்ன போட்டுக் குடுக்க மாட்டேன்..''


''என் பிரெண்டு விகாசினி இருக்கா இல்ல..? அவள லவ் பண்றான்..'' என்றாள்.


''விகாசினியா..?'' இதே தெரு.


''ம்.. ம்ம்..!!''


''அவளும் பண்றாளா..?''


''ஆமா..''


''எத்தனை நாளா..?''


''ஆறு மாசமா.. லவ் பண்றாங்க ரெண்டு பேரும்..''


''நீதான் தூதா.. அவங்களுக்கு..?''  


அஸ்வினி சிரித்தாள்.


அதே நேரம்.. காம்பௌண்டுக்குள் பைக்கைக் கொண்டு வந்து நிறுத்தினான் துகிலன்.!


விழிமலருக்கு சட்டென ஒரு கோபம் எழுந்தது.


அவன் பைக்கை நிறுத்திவிட்டு மேலே போக... சில நிமிடங்களுக்குப் பிறகு.. மலரும் எழுந்து மேலே போனாள்.. !!


அவள் மொட்டை மாடிக்குப் போனபோது பாத்ரூமிலிருந்து வந்தான் துகிலன்.


முகம் கழுவியிருந்தான்.

''ஹாய் மலர்..'' புன்னகைத்தான்.


''ஹாய்..!!'' என்றாள். ''இப்பதான் வரீங்களா.?''


''ஆமா.. நீங்க..?''


''நான் ஆறுமணிக்கு முன்னயே வந்துருவேன்..''


அவன் அறைக்குள் நுழைந்து..

''உள்ள வாங்க..''  அவளை அழைத்தான்.


அவள் உள்ளே போனாள்.


அவன் டவல் எடுத்து முகம் துடைத்தான்.

''உக்காருங்க மலர்..''


அந்த புத்தகம் இருந்த இடம் நோக்கி அவள் பார்வை போனது. 

அங்கே இருக்குமா என்று தெரியவில்லை. உடனே போய் பார்ப்பது அவ்வளவு நல்லதும் இல்லை.


''உங்ககிட்ட ஒரு விசயம் பேசனும்..'' தயங்கிச் சொன்னாள். 


''என்ன மலர்..?'' அவள் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.


''நீங்க.. கொஞ்சம்.. ஒரு மாதிரியான புக்கெல்லாம் படிப்பிங்களா..?'' என லேசான தயக்கத்துடன் கேட்டாள்.


''ஒரு மாதிரியான புக்குன்னா..??''


''இந்த… பலான... பலான....''


சிரித்தான், ''ஏன் மலர்..?''


''படிப்பிங்களா.. சொல்லுங்க..?''


''ம்..'' தலையை ஆட்டினான்.


''நீங்க..  இங்க வாங்கி.. வெச்சிருக்கீங்களா..?''


''ம்கூம்..! அந்த மாதிரி இல்ல மலர்.. ஏன்..?''


''பொய் சொல்லாதிங்க..? அன்னிக்கு நானே பாத்தேன்..! உங்ககிட்ட ஒரு புக் இருந்துச்சு..''


''என்கிட்டயா..? பலான புக்கா..? சான்ஸே இல்ல..?'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னான். 


''ஏன் இப்படி அப்பட்டமா பொய் சொல்றீங்க.. நான்தான் பாத்தேனு சொல்றேன் இல்ல..?''


''என்ன மலர்..? சரி.. நீங்க பாத்தது.. என்ன மாதிரி.. தலைப்பு..?'' எனக் கேட்டான்.


''காமசூத்ரா..!!'' என்றாள்.. !!



திங்கள், 17 ஜூன், 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -4

 


தன் ஸ்கூட்டியை எடுத்தபோது கமலி படபடத்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளம் பெரும் உவைகையை அடைந்திருந்தது. 


"வாங்க.."


"முன்னால போ.." 


அவளை முன்னால் விட்டுப் பின்தொடர்ந்தான். 


பத்து நிமிட பயணத்துக்குப் பின் மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து சென்ற ஒரு கிளைச் சாலையில் அழைத்துச் சென்றாள் கமலி. 


அது புதிதாக உருவான ஏரியா என்பது பார்த்தவுடனே தெரிந்தது. நிறைய புது வீடுகள் ஆகியிருந்தன.


''இப்ப அவரு இங்க பக்கத்துலதான் வேலை செய்றாரு. பாக்கறீங்களா?" வண்டியை மெதுவாக ஓட்டியபடி திரும்பி அவனைக் கேட்டாள் கமலி.


''எங்க?'' எனக் கேட்டான் நிருதி.


''பாக்கறீங்களா அவரை?'' 


அவன் யோசித்தான். 


'இவ என்கூட செக்ஸ் வெச்சிக்க என்னை கூட்டிட்டு போறா. இந்த நேரத்துல போய் அவ புருஷன  பாக்கறது அவ்வளவு நல்லாவா இருக்கும்? வேண்டாம்'


அவளே சொன்னாள்.


''வாங்க. அஞ்சு நிமிசம்கூட ஆகாது. உங்களை பாத்தாருனா அவரும் ரொம்ப சந்தோசப் படுவாரு"


"இல்ல.. இப்ப அது வேண்டாமே.."


"நீங்க குழப்பமா இருக்கீங்க.. வாங்க.. அவரைப் பாத்திங்கனா.. உங்க குழப்பம் தீந்துரும். அப்பதான் ரிலாக்ஸா இருப்பீங்க.. வாங்க.."


தயங்கி, ''அப்படியா.. சரி'' என்று தலையசைத்தான். 


அவள் மகிழ்ந்தாள். தன் ஸ்கூட்டியை ஒரு சந்துக்குள் திருப்பினாள். 


நிருதி அவளைப் பின் தொடர்ந்தான். 


சில நிமிடங்களில் ஓரம் கட்டி ஒரு சிறிய வீதிக்குள் நுழைந்து, புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த பெரிய கட்டிடத்தின் முன் நிறுத்தினாள்.  


அவனும் அவள் பக்கத்தில் நிறுத்தி அந்த பில்டிங்கைப் பார்த்தான். 


முக்கால்பாக கட்டிட வேலை முடிந்து உள்பக்க வேலை நடந்து கொண்டிருந்தது.


''இங்கயா?'' அவளைப் பார்த்தான்.


''ஆமா'' சிரித்து ''இருங்க வரேன்'' என்று விட்டு ஒரு சிறுமியின் துள்ளலுடன் அவளே இறங்கி நடந்து, வாயில் வழியாக உள்ளே சென்று மறைந்தாள்.


அவள் கணவன் கட்டிட வேலை செய்பவனாக இருக்கலாம் என்று நினைத்தான். 


அவளும் கட்டிட வேலைக்குச் சென்றவள் என்பதால் அந்த தொழில் சம்பந்தப்பட்டவனையே மணந்திருக்கலாம்.. !!


சில நிமிடங்கள் கழித்து வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் சொட்டை விழுந்து முடி நரைத்து, உயரம் குறைவாக உடல் பருத்து தொப்பையுடனிருந்த பெரியவர் ஒருவருடன் வெளியே வந்தாள் கமலி. 


அவளுடன் வந்த அவரைப் பார்த்ததும் திகைத்து நின்றான் நிருதி. 


அருகில் வந்து மலர்ந்த முகத்துடன் கமலி சொன்னாள். 


''இவருதான் என் வீட்டுக்காரரு''


திகைப்பிலிருந்தவனை அந்த வார்த்தை அதிரச் செய்தது.


''நல்லாருக்கீங்களா தம்பி?'' எனக் கேட்ட அந்த மேஸ்தியை அவனுக்கு முன்னமே தெரியும்.


 'இவரா இவள் கணவன்? என்ன கொடுமை இது?' திகைப்பில் விழிகளை விரித்தான்.


''நல்லாருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? ''


''நல்லாருக்கேன் தம்பி. கமலி சொல்லுச்சு உங்களை பத்தி.. ஆனா எனக்கு அது நீங்கதானு அப்ப தெரியல'' வாய் நிறைந்த புன்னகையுடன் சொன்னார்.


''அப்ப அவரை தெரியுமா உங்களுக்கு?'' என்று தன் கணவரைப் பார்த்து வியப்புடன் கண்களை விரித்துக் கேட்டாள் கமலி.


''அவங்க வீட்டை கட்டிக் குடுத்ததே நான்தானே. நல்லா தெரியும். ஆனா இவரு பேருதான் மறந்து போச்சு. அதனாலதான் நீ சொன்னது இவருதான்னு எனக்கு தெரியாமப் போச்சு'' என்றார். 


திகைப்பும் வியப்புமாக அவர்கள் அறிமுகத்துடன் பேசிக்கொண்டனர். கால் மணி நேரம் பேசியபின் அவர் சொன்னார். 


"கமலிக்கு நீங்கன்னா உசுருனு என்கிட்ட பல தடவை சொல்லியிருக்கு தம்பி. அது சின்ன புள்ளைல உங்களைத்தான் உசுரா லவ் பண்ணியிருக்கு. அந்த கதை எல்லாம் என்கிட்ட அடிக்கடி சொல்லும். ஆனா அந்த ஆளு நீங்கதானு எனக்கு தெரியாம போச்சு. சரி இப்பவாவது அது உங்களை மீட் பண்ணுச்சே.. அதுக்கு இப்பவே தலை கால் புரியல. உங்களை நல்லா கவனிக்கறேனு சொல்லுது. நடங்க வீட்டுக்கு போலாம்"


அவருக்கு எல்லாம் தெரியும் என்கிற உண்மையை விடவும் அவரின் பேச்சுதான் அவனை வியப்படைய வைத்தது. 


அவளின் அன்பையும், அவரின் அழைப்பையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. 


"நீங்க முன்னால நடங்க. நான் உள்ள சொல்லிட்டு வரேன். வேலை நடந்துட்டிருக்கு" எனச் சொன்னார்.


"வாங்க.. நாம வீட்டுக்கு போலாம்" என்றாள் கமலி.


அவனும் தலையசைத்தான். 


அவர்கள் வண்டிகளைக் கிளப்ப அவர் மீண்டும் உள்ளே போனார்.. !!


வீதியைத் தாண்டி வெளியே வந்து அவளுக்கு இணையாக வண்டியை ஓட்டியபடி சொன்னான் நிருதி.


"நெஜமா இதை நான் எதிர் பாக்கல கமலி"


சிரித்தாள். "இவரை முன்னாடியே உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியாது"


"இங்க இருக்கப்ப இருந்தே தெரியும. ஆமா.. இவர எப்படி நீ கல்யாணம் பண்ண?''


''வாங்க சொல்றேன்'' என்று சிரித்தாள்.


''இவருக்கு இன்னொரு குடும்பம் இருந்துச்சே?''


''இருக்கு.''


''இவரோட வயசும்...''


''எனக்கு அப்பா மாதிரி..''


"இத நான் கொஞ்சம்கூட எதிரே பாக்கல"


 உள்ளுக்குள் விதியை எண்ணி திகைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.. !!


கமலி சிறிய வீடு என்று சொன்னபோது அதை சாதாரணமாகத்தான் நினைத்தான் நிருதி. 


ஆனால் அதை நேரில் பார்த்த போதுதான் தெரிந்தது. அந்த வீடு அவனை பிரம்மிக்க வைத்தது. 


குட்டியாக இருந்தாலும் மொட்டை மாடியுடன் இருக்கும் ஒரு அழகான வீடு. முன்பக்கம் காம்பவுண்ட் சுவர் கட்டி அதனுள்ளே இரண்டு பக்கத்திலும் ரோஜா செடிகள் வைத்திருந்தாள். 


 அந்த வீட்டைப் பார்த்தவுடனே அது அவள் வீடுதானா என்று ஐயமெழுந்தது. வீட்டின் முன்பாக வலது பக்கத்தில் ஒரு சிறிய மளிகை கடை. கடை இப்போது பூட்டப்பட்டிருந்தது. 


 அவள் வண்டியை நிறுத்தி இறங்கிச் சென்று கேட்டைத் திறந்து மீண்டும் வண்டியை எடுத்து உள்ளே கொண்டு போய் நிறுத்தினாள். 


ஓரமாக நிறுத்தித் திரும்பி கேட்டருகே வந்தாள். இடது கையைத் தூக்கி கேட் மீது வைத்தாள்.


"உள்ள வாங்க. வண்டிய உள்ளயே விட்றுங்க" என்றாள். 


முந்தானை ஒதுங்கி அவளின் இடதுபக்க முலை நன்றாகத் தெரிந்தது. அதன் எழு வீக்கம் அவனைச் சீண்டியெழ வைத்தது. 


முகம் கனியச் சிரித்து அவனை மீண்டும் அழைத்தாள்.


"வாங்க" அந்த அழைப்பின் குழைவில் முற்றான காதல் இருந்ததை உணர்ந்தான். 


தலையசைத்து விட்டு பைக்கை உள்ளே விட்டு நிறுத்தினான். 


கமலி முன்னால் சென்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்து மீண்டும் திரும்பி அவனை உள்ளழைத்தாள்.


"வாங்க.. உள்ள வாங்க.."


லேசான தயக்கத்துக்குப்பின் செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தான். 


வீட்டின் உள்ளமைப்பு மிகவும் அருமையாக இருந்தது. 


சின்ன வீடென்றாலும் நிறைய பணம் செலவழித்திருக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்தது.. !!


விரும்பிப் படித்தவை.. !!