ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

மாறுதல் சில நேரங்களில் -7

 


“வாங்க தம்பி.. அம்மா நல்லாருக்காங்களா?”


“நல்லாருக்காங்க. அம்மாதான் உங்களை ஒரு எட்டு பாத்துட்டு வரச் சொன்னாங்க”


“அப்படியா? உக்காருங்க. எங்கயாவது போயிட்டு வராப்லயா?”


“ஆமாங்க. பிரெண்டோட சிஸ்டருக்கு கல்யாணம். நேத்து ராத்திரியே போயிட்டேன். காலைல கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன். சரி போற வழில அப்படியே உங்களையும் ஒரு எட்டு பாத்துரலாம்னு”


“அப்படியா? ரொம்ப நல்ல விசயம்தான். ஒரு சுபமுகூர்த்த காரியத்துக்கு போயிட்டுதான் வந்துருக்கீங்க. நேரா இங்கதான வரீங்க?”


“ஆமாங்க. இன்னும் வீட்டுக்குக்கூட போகல. பஸ் விட்டு எறங்கி.. உங்களை பாத்துட்டு போயிரலாம்னு..”


“ரொம்ப நல்ல காரியம் பண்ணீங்க. உங்களுக்கு சுப முகூர்த்த நேரம் வந்துருச்சு தம்பி. அதனாலதான் ஒரு சுப முகூர்த்தம் முடிஞ்ச கையோட இங்க வரீங்க. இதுவே ஒரு நல்ல சகுனம்தான். இருந்தாலும் உங்க ஜாதகம் என்ன சொல்லுதுன்னும் ஒரு பார்வை பாத்துரலாம். ஜாதகம் கொண்டு வந்தீங்களா?”


“இல்லைங்க. கொண்டு வரலை. ஜாதக கட்ட போட்டோ இருக்கு. இல்ல விவரம் வேணும்னாலும் சொல்றேன்”


“உங்க ஜாதகம் என்கிட்டயே இருக்கும் தம்பி.. இருங்க பாத்துரலாம். நி.. ரு.. தி….. இதோ இருக்கே.. ரைட்.. ஓபன் பண்ணிட்டா வேலை முடிஞ்சுது. பாருங்க.. ம்ம்.. இப்ப என்ன போயிட்டிருக்கு. அட்டமச்சனி வெலகியாச்சு.. தசா புக்தி.. ஆஆ.. வந்தாச்சே.. தம்பி இப்பவே உங்களுக்கு கல்யாண வேலை வந்தாச்சே. போன பத்து நாளோட உங்க கஷ்டம் போயிருச்சு. இப்பவே உங்களுக்கு நேரம் வந்தாச்சு தம்பி. ரைட்.. இனி நீங்க எதுக்கும் தயக்கம் காட்ட வேண்டியதே இல்ல. சுறுசுறுப்பா பொண்ணு பாருங்க. நீங்க என்ன போய் பாக்கறது? உங்களைத் தேடி தானா வரும். ஆமா.. தம்பிக்கு இப்பவே.. தாம்பத்யத்துக்கு வேளை வந்தாச்சே.. நீங்க இனி தனியா படுக்க முடியாதே..”


“போங்க.. தனியா படுத்துட்டு தவிக்கிறது எனக்கில்ல தெரியும்?”


“பொய்யில்ல தம்பி. இதெல்லாம் ஒரு ஜோசியனா நான் சொல்லக் கூடாது. ஆனாலும் உண்மை அதான். நீங்க நம்ம பையன்றதால சொல்றேன். கவலையே படாதிங்க தம்பி. இனி நீங்க வேண்டாம்னு சொன்னாலும் அந்த சுக்கரன் உங்களை சும்மா இருக்க விடமாட்டாரு. கெடாத சந்திரன்கூட சேந்த சுக்கரன். அழகான பொண்ணாவே கொண்டு வந்து குடுப்பாரு போங்க.. அம்மாகிட்ட சொல்லுங்க. அப்படியே குலதெய்வத்துக்கு ஒரு நடை போய்ட்டு வாங்க”


“போன அமாவாசைக்கு போயிட்டு வந்தாங்க அம்மா..”


“மறு விவாக நேரம் வந்தாச்சு. ஒண்ணும் கவலைப் பட வேண்டாம்னு சொல்லிருங்க.  குடும்பத்தோட போய் ஒரு பூஜையை போட்டுட்டு மனசார வேண்டிட்டு வாங்க. நல்ல வழியா அமையும். ரெண்டாவதா வரப் போற மனைவியும் உங்களுக்கு மனசுக்கு புடிச்ச மாதிரி.. உங்க மனசையும் புரிஞ்சு நடந்துக்கும். கவலையேபடாதிங்க”


“ஒரு சின்ன டவுட் கேக்கலாங்களா?”


“கேளுங்க தம்பி?”


“மொத பண்ணதுதான் அப்படி ஆகிப் போச்சு. அது போகட்டும். இப்ப ரெண்டாவதா வரது என்னைப் புரிஞ்சுகிட்டு எனக்கு புடிச்ச மாதிரியும் இருக்கும்னு சொன்னீங்க..”


“கண்டிப்பா தம்பி! பதினொண்ணுல இருந்து நடத்தி குடுக்கற சுக்கிரன். அழகா இருக்கும் ஆனா.. கொஞ்சம் ஒடம்பா இருக்கும். மத்தபடி நல்ல பொண்ணாதான் இருக்கும். நீங்க நல்லா விசாரிச்சுப் பாத்தே கல்யாணம் பண்ணலாம்”


“அது சரிங்க.. வரப்போற பொண்ணு.. எப்படினு.. அதாவது.. என்ன சொல்லிட்டாலும் இது எனக்கு செகண்ட் மேரேஜ்தான். அதே மாதிரி வரப்போற அந்தப் பொண்ணு..”


“ஓஓ.. அதை கேக்கறீங்களா? ஆமா தம்பி நீங்க கேக்கறது சரிதான். அந்த ஒச்சம்கூட இல்லாம வராது. உங்களுக்கு நல்ல மனைவியா வேணும்னா அப்படித்தான் வரும். பொண்ணு நல்ல பொண்ணாதான் இருக்கும். ஆனா.. அதுவும் ஒரு வகைல உங்களைப்போலதான் இருக்கும்”


“என்னை மாதிரின்னா? கல்யாணமாகி.. டிவோர்ஸ் ஆகி..”


“ஆமா தம்பி. அதும் செகண்ட் மேரேஜ் பண்ணிக்கற பொண்ணாத்தான் இருக்கும். ஆனா அதுக்கு உங்க மூலமாத்தான் கொழந்தை பொறக்கும்.  அதான் கட்டம் சொல்லுது. கட்டத்தை யார்னாலயம் தடுக்க முடியாது. ஜோசியர்கள் பொய் சொல்லலாம். ஜோதிடம் பொய் சொல்லவே சொல்லாது. என் அனுபவத்துல இதை நான் நிறைய பாத்துட்டேன்” 


“சரிங்க. சந்ததோசம். அப்ப நான் அம்மாகிட்ட போய் சொல்றேன். அம்மாவே உங்களுக்கு போன் பண்ணி பேசுவாங்க”


“சரி தம்பி. ஒண்ணும் கவலைப்படாம குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க. எல்லாம் நல்லதாவே நடக்கும்”


அவருக்கான பணத்தைக் கொடுத்து விட்டு விடைபெற்றுக் கொண்டான் நிருதி.. !!


வியாழன், 26 செப்டம்பர், 2024

மென் மோகம்-14

 ஒரு மாதமே ஆகிவிட்டது. கமலி வாட்சப்பில் மீண்டும் வழக்கம்போல காதல் பாடல்களை ஸ்டேட்டஸாக வைத்துக் கொண்டிருந்தாள். 


ஒரு சில சந்தர்ப்பங்களில் நிருதி அதை பார்க்கவும் செய்தான். அவன் மனசு ஏனோ அவளை  அடிக்கடி நினைத்து வருந்தியது.. !!


அன்று பண்டிகை நாள். காலையில்  அவனுக்கு வாட்ஸப்பில் வாழ்த்து அனுப்பியிருந்தாள் கமலி. 


முதலில் அதைப் பார்த்ததும் அவனுக்கு வெறுப்புதான் வந்தது. 


அவளுக்கு பதில் அனுப்பக் கூடாது  என்றுதான் நினைத்தான். ஆனால் குளித்து சாப்பிட்டு ஓய்வில் இருந்தபோது மனசு அவளை நாடியது.


'தேங்க்ஸ்' என்று மட்டும் பதில்  அனுப்பினான். 


அன்று  இரவு பதினொரு மணிக்கு வாட்ஸப்பில் அவனுக்கு 'குட்நைட்' அனுப்பியிருந்தாள். 


அதை அவன் பார்த்தபோது பன்னிரெண்டு மணி. கொஞ்சம் யோசித்து பின்னர் அவனும்  ஒரு 'குட்நைட்' அனுப்பினான். 


சிறிது நேரம் கழித்து பதில் வந்தது. 


'இது a m'


மணி பார்த்தான். பன்னிரெண்டு  இருபது.


'குட் மார்னிங்' என்று அனுப்பினான்.


'வெரி குட் மார்னிங்' அவளும் உடனே அனுப்பினாள். 


அவன் அனுப்பவில்லை. 


அவளே கேட்டாள்.


'என்ன தூங்கலையா?'


'நோ'


'ஏன்?'


'சும்மா '


'ம்ம்'


காத்திருந்தான். நெஞ்சில் ஏதோ ஒரு கணம். அழுத்தம்.


இரண்டு நிமிடங்கள் ஆனது. 


'எப்படி போச்சு?' என்று கேட்டாள். 


'என்ன?'


'பண்டிகை'


'சூப்பர்'


'யார்கூட?'


'மை பிரெண்ட்ஸ்'


'ஜென்ட்ஸா?'


'கேர்ள்சும்'


'ஏன் தூங்கல?'


'சும்மாதான்'


'அது என்ன சும்மா?'


'..........'


'அலோ?'


'எஸ்?'


'ஆன்ஸரிங் மீ?'


'நான் ஏன் சொல்லணும்?'


'ஏன் சொல்லக் கூடாது?'


'புடிக்காதவகிட்ட எதுக்கு சொல்லணும்?'


'யாரு என்னை புடிக்காதா?'


'........'


'டேய்.. கேக்கறனில்ல?' உரிமையாய். 


அவனுக்கு கடுப்பானது.


'ஆமாடி. உன்ன புடிக்காது'


'ஹோ.. ஏன் புடிக்காது?"


'நீதான் பெரிய பருப்பாச்சே'


'பருப்புன்னா?'


'பெரிய இவ'


'கோபமா பேசாத. எனக்கும் கோபம் வரும்'


'உனக்கு  என்ன கோபம்?'


'உனக்கு மட்டும்  என்ன கோபம்?'


'நான் எத்தனை கெஞ்சினேன்?'


'எதுக்கு? '


'என்கிட்ட ரெண்டு வார்த்தை பேச மாட்டியானு?'


'இப்ப பேசறேன்ல?'


'நேர்ல பாத்தாலும் பாக்காதவளாட்ட போற? போன் பண்ணா கட் பண்ற? இப்ப என்ன திடீர்னு?'


'பாவமா இருந்துச்சு'


'தேவையில்லாம பாவப்டடாத'


'தப்புதான்.. இப்ப புரியது'


'புரியுதில்ல மூடிட்டு அடங்கு'


'ச்சீ போ' சட்டென  ஆப் லைன் போய் விட்டாள்.. !!


அவனுக்கு மேலும் கோபம் வந்தது. இரண்டு நிமிடங்கள் மனசு ஆற்றாமையுடன் குமைந்தது. 


அவனுக்கும் அவளைத் திட்ட வேண்டும் என்று கொதித்தது. கெட்ட வார்த்தை எழுதி அழித்தான்.


'போடி பருப்பு' என்று அனுப்பினான். 


அப்போதும் மனசு சமாதானம்  ஆகவில்லை.. !!


அரைமணி நேரம்  கழித்து  எடுத்துப் பார்த்தான். அவள் பார்த்திருந்தாள். ஆனால் பதில் இல்லை. 


ஒரு மணி நேரம் கழித்து அவன் கோபம் தணிந்து அவள் மீது ஒரு காதல் வந்தது. எல்லாம் மறந்து வாழ்த்து சொல்லி பேச வந்தவளுடன் சண்டை போட்டது தன் தவறு என்று தோன்றியது. சிறிது நேரத்தில் சரிதான் என்றும் தோன்றியது. குழப்பத்துடனே தூங்கிப் போனான்.. !!


மறுநாள் முழுக்க கமலியின் நினைவாகவே இருந்தது. அவள் என்னை நினைக்கவாவது செய்வாளா என்று யோசித்துக் கொண்டிருந்தான். 


மதியத்துக்கு மேல் 'சாரி' என்று மட்டும்  ஒரு மெசேஜ் அனுப்பினான். 


மாலையில்  அவனுக்கு பதில் வந்தது. 


'உன் சாரிய நீயே வெச்சிக்கோ'


இரவு அவளை ஆன்லைனில் பார்த்தபோது பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் சுய கவுரவம் தடுத்தது. அலுப்பில் தூங்கிப் போனான். 


பாத்ரூம் போக எழுந்தபோது மூன்று மணி. 


பாத்ரூம் போய் வந்து படுத்து போனை எடுத்துப் பார்த்தான். 


வாட்ஸப்பில் ஒரு கோப முகம் அனுப்பியிருந்தாள் கமலி. அவள் அதை பதினொரு மணிக்கு  அனுப்பியிருந்தாள். இப்போது ஆப்லைனில்தான் இருந்தாள். 


இப்போது அவனும்  அதையே திருப்பி  அனுப்பினான். ஆச்சரியமாக உடனே அவளிடமிருந்து இரண்டு கோப முகம் வந்தது. அவன் நான்கை அனுப்பினான். அவள் அனுப்பவில்லை. 


அவன்  எதிர் பார்த்துக் காத்து ஏமாந்து தூங்க முயன்ற நேரம் அவளிடமிருந்து மெசேஜ் வந்தது. 


'தூங்கலயா?'


'இல்ல'


'ஏன்?'


'சும்மா'


'ம்ம்'


'நீ தூங்கல?'


'இல்ல'


'ஏன்?'


'சும்மா'


'கிண்டலா?'


'ம்ம்'


'ஓகே நான் தூங்கப் போறேன்'


'ம்ம்'


'நீயும் தூங்கு'


'ப்ச்'


'ஏன்?'


'கொஞ்சம் மனசு சரியில்ல' என்ற அவள் சொன்னதைக் கேட்டு வியப்பானான்.. !!



விரும்பிப் படித்தவை.. !!