சனி, 24 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம் பூ -6

 

இரவு,


 கடையின் ஷட்டரை இறக்கியதும்,

"சரி.. நீ வீட்டுக்கு போ நிரு.." என்று இன்றும் சொன்னார். 


எனக்கு உண்மையாகவே கோபம் வந்தது. என்ன ஆளுயா நீ என்று சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் போலிருந்தது.


"நீங்க..?" அவரைக் கேட்டேன்.


"உனக்கே தெரியும்.." என்று அலட்சியமாகச் சொன்னார்.


கொஞ்சம் தயங்கிவிட்டு, 

"இது.. தப்பில்லையா.. அண்ணா..?" எனக் கேட்டேன்.


சட்டென்று என்னை முறைத்தார்.


"என்னது.. பேச்செல்லாம் வேற மாதிரி இருக்கு..?"


"இல்ல.. நான் போனதும்.. கிரி கேக்கும்"


"போ..! அப்படி ஏதாவது பேசினான்னா.. ஊருக்கு போயிரு.. அவளையும் கூட்டிட்டு.." என்று சொன்னார்.


நான் அதிர்ச்சியோடு அவரைப் பார்க்க.. கடையைப் பூட்டி விட்டு.. என் பக்கம் கூட திரும்பாமல் பைக்கில் ஏறி கிளப்பிக் கொண்டு டர்ரெனப் போய்விட்டார் சீனு.. !!


நான் கவலையோடு போய் வீட்டுக் கதவைத் தட்டினேன்.


‘கிரி இன்றும் அடிப்பாளோ..? பட்டினி என்பாளோ?’


கதவைத் திறந்த கிரிஜா எனக்குப் பின்னால்தான் பார்த்தாள். உடனே அவள் முகம் ஏமாற்றத்துக்குப் போனது.


"வரலையாடா ?"


"ம்கூம்.." நான் தயக்கத்துடன்  மண்டையை ஆட்டினேன்.


அவள் என்னை முறைத்தாள். அந்த முறைப்பு கடுமையாக இருந்தது. 


மதியத்திற்கு மேல் குளித்து உடை மாற்றியிருப்பாள் போலிருக்கிறது. பழைய சுடிதார் ஒன்றைப் போட்டிருந்தாள் கிரிஜா. 


 இள மஞ்சளில் சாயம் போனதைப் போலிருந்த சுடிதார் அவள் உடம்புக்கு மிகவும் டைட்டாகத் தெரிந்தது.. ! 


அதில் இறுக்கமாகி திமிறிக் கொண்டிருந்த செழுமையான மார்பகங்கள் வேகமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.


அதை இரண்டு நொடிகள் பார்த்து விட்டு நான் சட்டென தலையைக் கவிழ்த்துக் கொண்டேன்..!


"என்ன சொன்னாரு?" உஷ்ணமாகக் கேட்டாள். 


நான் மீண்டும் அவளை நிமிர்ந்து பார்த்தேன்.


"வரலேனு சொன்னாரு" என்று முனகினேன்.


அவள் என்னை இப்போது, இதே இடத்தில் சுட்டெரித்து விடுவதைப் போல மிகக் கடுமையாக முறைத்தாள்.


முறைப்பில் அவளது முட்டைக் கண்கள் வெளியே வந்து விடும் போலிருந்தது. 


அவள் பார்வையின் உக்கிரம் தாங்க முடியாமல் என் பார்வையை மெதுவாகக் கீழே இறக்கினேன். 


அவள் கழுத்துக்கு கீழே கும்மென புடைத்துக் கொண்டிருந்த அவளின் செம்மாங்கனிகள் வழக்கம் போல இன்றும் என்னை ஏதோ செய்தன.


"தட்டி கேக்க துப்பில்ல..? கேக்கறதுதானே..??"  உஷ்ணம் குறையாமலே சொன்னாள்.


"கேட்டேன்.  அதுக்கு கோபத்துல என்னை திட்டிட்டு.. ஊருக்கு போகச் சொல்லிட்டாரு "


"உன்னைவா ?"


"ம்ம்" தலையை ஆட்டினேன்.. 

"ஆனா.. தனியா இல்ல. உன்னையும் கூட்டிட்டு.. "


திகைத்துப் பார்த்தாள்.


"என்னையும் கூட்டிட்டா?"


"ஆமா.."


"என்னையும் கூட்டிட்டுன்னா..?"


"புரியலயா? நாம ரெண்டு பேரும் அவருக்கு தேவை இல்லையாம். ஊர் பக்கம் போய் சேருங்கனு சொல்லிட்டாரு"


"ஓஓ.. அப்படி வரானா அந்த ஆளு? நீ அவருகிட்ட என்ன கேட்டே.. ?"


"நீங்க பண்றது தப்புனு சொன்னேன் "


" அப்படியே சொன்னியா ?"


"இதெல்லாம் நல்லதுக்கில்லைனும் சொன்னேன்”


"நீ சரியாத்தான் சொல்லியிருக்கே.! அதுக்குதான் அப்படி சொன்னானா?"


"ஆமா.."


"ஏன் அவகிட்ட போறதுக்கு நாம எடைஞ்சலா இருக்கமாமா..?" எனக் கேட்டபடி விலகி எனக்கு வழி விட்டாள்.

 "உள்ள வா..! அதையும் பாத்துரலாம். ஊருக்கு போன் பண்ணா காலைல எல்லாரும் வந்துருவாங்க. என்ன பண்றேன் பாரு அந்த ஆளை.. அப்படியா சங்கதி? இரு இரு.. என்னை என்னன்னு நெனைச்சே? கேனச் சிறுக்கி இல்ல. காட்றேன் யாருனு.. ஓஹோ..”


“இப்பவே போன் பண்றியா கிரி?”


“ஆமா எல்லாருக்கும் பண்ணிர்றேன். எல்லாரையும் வரச் சொல்றேன். அவங்கப்பா அம்மா எல்லாரும் வரட்டும். நாயம் பேசட்டும். அப்ப தெரியும் அவன் லச்சணம் என்னன்னு”


“இந்த ராத்திரில போன் வேண்டாம். என்னமோ ஏதோனு பதறிப் போயிருவாங்க. தூங்கி எந்திரிச்சு காலைல சொல்லு. அப்பறம் வேணா வரட்டும். இப்ப போய் போன் பண்ணி அவங்க தூக்கத்தை கெடுக்கணுமா?”


“இப்படியே விடக்கூடாதுடா இதை. அவங்கதான நல்ல மாப்பிள்ளைனு சொல்லி வயசு வித்தியாசம் கூட பாக்காம எனக்கு கட்டி வெச்சாங்க? அனுபவிக்கட்டும். ஒரு ராத்திரிதானே தூக்கம் போகுது அவங்களுக்கு? எனக்கு எத்தனை நாள் தூக்கமில்லாம போயிருக்கு? விட மாட்டேன்”


“என்னமோ செய்”


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!