வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

மென் மோகம் -6

 அடுத்த நாள், காலையில் சந்தித்துக் கொண்டதும் வானதி கமலியைக் கேட்ட முதல் கேள்வி,

“நைட் என்ஜாய் பண்ணியா?” என்பதுதான்.


தன் தோழி என்றாலும் அவளிடம் இப்படி ஓபனாகப் பேச கமலிக்கு சற்று கூச்சமாகத்தான் இருந்தது. 


அவள் அப்படித்தான். கூச்சமில்லாமல் எல்லாக் கதையும் சொல்வாள். காலேஜ் படிக்கும்போதே அவள் இரண்டு பேரைக் காதலித்தவள். 


காதல் என்கிற மகத்துவத்துக்கு அப்போதே கற்பை பரிசாகக் கொடுத்து விட்டவள்.


பையன் காலையில் ஓரளவு நன்றாக இருந்ததால் அவனை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு வேலைக்கு வந்து விட்டாள் கமலி.


தோழிக்கு பதில் சொல்லாமல் அவளைத் திருப்பிக் கேட்டாள்.  

“நீ என்ஜாய் பண்ணியா?”


“செம..  ரெண்டு தடவை பண்ணோம். செகண்ட் டைம் நான் பண்ணேன். மேல ஏறி உக்காந்து.. அப்படியே ஒரு செம்ம தூக்கம்..” கண்சிமிட்டிச் சிரித்தாள்.


கமலிக்கு அப்படி எல்லாம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. 


சாதாரணமாக எப்போதும் செய்வது போன்ற உடலுறவுதான். மற்றபடி சிலாகித்துச் சொல்ல அதில் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. 


“கருமத்த” 


“அங்க எப்படி?” வானதி கேட்டாள்.


“ம்ம்.. என்ன.. ஓகேதான். நார்மலா.. பண்ணிட்டு தூங்கிட்டோம்.. எனக்கு ஒரு பக்கம் அலைச்சல், அதுல தலைவலி வேற, மாமியா இல்லாத கவலை ஒரு பக்கம்னு எல்லாம் சேந்து அவ்ளோ இன்ட்ரஸ்ட் குடுக்கல”


“நான் அப்படி இல்லப்பா.. செமையா என்ஜாய் பண்ணேன். நம்மாளே ஆச்சரியபட்டுப் போய் கேட்டுட்டாப்ல”


“என்னன்னு?”


“என்ன டி இது இன்னிக்கு இவ்ளோ இன்ட்ரஸ்டிங்கா இருக்க? நீதானா இதுன்னெல்லாம் கேட்டாரு”


“அவ்ளோ வேலை பாத்தியா என்ன?”


“ஆமா, எல்லா வேலையும்”


“தூங்குனியா?”


“செம்ம தூக்கம். அப்படி ஒரு ஆட்டம் போட்டதுக்கப்றமா வரும் பாரு ஒரு தூக்கம். சொர்க்கம். இன்னுமே ஒடம்புல ஒரு கிறக்கம் இருக்குன்னா பாத்துக்கயேன்”


அலுவலக வேலையின் இடையே அவ்வப்போது பேசிக் கொண்டதிலும் வானதி ஆர்வமாகவும் உற்சாகமாகவுமே இருந்தாள்.. !!







6

 




மாலை கிளம்பி அந்த அலுவலகத்தைக் கடக்கும் போது நிருதிக்கு கமலியின் நினைவு வந்தது. ஆனால் இன்று அந்த அலுவலகத்தில் யாரும்  இல்லை. 


அவள் வீடு தெரியும் என்பதால் அவளை வீட்டுக்குப் போய் பார்க்கலாமா என்று கூட ஒரு  எண்ணம் எழுந்தது. ஆனால் அது மரியாதைக்குரியதாக இருக்காது என்றுணர்ந்தான். 


அவளிடம் அவன் மனது சலனப் பட்டிருப்பதை அவனால் உணர முடிந்தது.


அன்றிரவு வாட்ஸப் ஸ்டேட்டசில் அவள் சில காதல் பாடல்களை வைத்திருந்தாள். அவைகளைப் பலமுறை கேட்டான். 


திருமணம்  ஆனவள் காதல் பாட்டுக்களை ஸ்டேட்டஸாக வைக்கிறாள் என்றால், கணவனைத் தவிர்த்து  பிற ஆணுடன் காதலாகியிருப்பாளோ என்று ஓர் எண்ணம் தோன்றியது. 


பின்னர்  'சீச்சீ.. அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது'  என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டான். 


இரவு பத்து மணிக்கு அவளுக்கு  ஒரு குட்நைட் படம் அனுப்பினான். 


அதற்கு பதில் இல்லை. 


அடுத்த நாள் காலையில் அவன் தூங்கியெழுந்து கண் விழித்து தன் மொபைலை எடுத்துப் பார்த்து சிறிது மகிழ்ச்சியடைந்தான்.


 கமலி அவனுக்கு "குட்மார்னிங்" படம் அனுப்பியிருந்தாள். 


அவள் அனுப்பிய நேரம் பார்த்தான். அதிகாலை ஐந்து மணி. 


நேரமே எழுந்து விடுவாள் போல. பதிலுக்கு அவனும் ஒன்றை அனுப்பினான். 


அன்றிரவு  எட்டரை மணிக்கே அவள்  அவனுக்கு குட்நைட் அனுப்பி விட்டாள். 


அவன் பத்து மணிக்கு  அனுப்பினான். 


அவளது வாட்ஸப் ஸ்டேட்டசில் இன்றும் காதல் பாடல்கள்தான். 


இரண்டு நாட்களுக்குப் பிறகுதான், இரவு எட்டு மணிக்கு  ஆன்லைனில் அவளைப் பிடித்தான் நிருதி.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!