திங்கள், 29 ஜூலை, 2024

அள்ளக் குறையாத அழகே -1


'' டேய்.. டேய்.. !! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. !! தம்பி.. தம்பி. . !! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. !! நீ என் புஜ்ஜுக் குட்டி இல்ல.. அக்காக்காக போடா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!! ப்ளீஸ்.. டா..!!'


என் பக்கத்தில் உட்கார்ந்து என் தோளைச் சுரண்டியபடி கெஞ்சிக் கொண்டிருந்தாள் என் அக்கா.


'' ஏய்.. ச்சீ போ.. ரொம்ப தொல்லை பண்ணாத.. உனக்கு வேணும்னா.. நீதான் போய் வாங்கிக்கனும் என்னை விட்று.. !! எனக்கு இப்போ.. முக்யமான வேலை இருக்கு.. !!''


அவசர அவசரமாக சாப்பிட்டபடி.. என் அக்காளை நான் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருந்தேன்.


'' ப்ளீஸ் டா.. நீ இப்பவே வாங்கிட்டு வர வேண்டாம்.. உன் வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வருவ இல்ல..? அப்ப வாங்கிட்டு வந்தின்னா போதும்.. !! ப்ளீஸ்டா.. அக்காக்காக இதுகூட செய்ய மாட்டியா ??''


'' ஏய்ய்.. லூசு.. நான் வர ஈவினிங் ஆகிரும்.. என்னாலல்லாம் முடியாது.. வேணுமானா நீயே போய்ட்டு வந்துக்கோ.. !! இப்ப நீ வீட்ல உக்காந்துட்டு என்ன பண்ண போற..?? போ.. போ.. நீயே போய்க்க.. !!''


அந்த நேரம் உள்ளே வந்த அம்மா.

''டேய்.. அவதான் இவ்ளோ கெஞ்சரா இல்ல..?? அவ போற மாதிரி இருந்தா உன்ன ஏன் இப்படி கெஞ்சிட்டிருக்க போறா.. ?? அது என்னமோ போய் வாங்கிட்டு வந்துதான் குடுத்துரேன்.. !!'' என்றை என்னைப் பார்த்துச் சொன்னாள்.


'' மா.. எனக்கு நேரம் இல்ல.. போம்மா.. ''


'' என்னடா பெரிய நேரம் இல்ல.. ?? நீ இப்ப ஊரு சுத்த தான போற..?? என்னமோ கலெக்டர் ஆபீஸ் போறவானட்டம் பேசற..?? நாலு தடியனுகளும் சேந்துட்டு.. ஒன்னு சினிமா போவிங்க.. இல்ல.. எவ பின்னாடியாவது பாலோ பண்ணிட்டு போவிங்க..? ஏன்.. உன் அக்காளுக்கு இத கூட செய்யக் கூடாதா.. ??''


''மா.. நாங்க ஒன்னும் சுத்த போகல. என் பிரெண்டுக்கு... '' சட்டென நிறுத்திக் கொண்டேன்.


'' ஆஆ.. உன் பிரெண்டுக்கு. . ??'' அம்மா சிரித்தபடி பார்த்தாள்.


உண்மையைச் சொன்னால்.. நான் சிக்கிக் கொள்வேன்.


 என்ன சொல்லலாம்..?


''என் பிரெண்டுக்கு  ட்ரஸ் எடுக்க போறோம்.. !!''


''எந்த பிரெண்டு ??''


'' அ.. அருண்... ''


'' அவனுக்கு எடுக்க நீ எதுக்கு போகணும்.. ??''


'' என்னமா நீ.. இப்படி கேட்டுட்டு..? பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்து போய் பாத்து.. செலக்ஷன் பண்ணி எடுப்போம்.. !! ஏன் நீங்க ரெண்டு பொம்பளைங்க சேந்து போய் ஒரு புடவை எடுக்க கடைவே கலைச்சு போட்டுட்டு வரதில்ல.. ??''


'' ஆ.. அதெல்லாம் வக்கனையா பேசு ?'' செல்லமாக என் தலையில் கொட்டினாள் அம்மா.


'' நீ பொய் சொல்றேனு நல்லாவே தெரியுது. சரி எங்கயோ போ.. வம்பு பண்ணாம வந்தேன்னா போதும்..! ஆனா வரப்ப மட்டும் அப்படியே போய்.. இவ சொல்றத வாங்கிட்டு வந்துரு.. ! ஆஆ.. என்னடி அது. ??'' அம்மா என் அக்காவைப் பார்த்துக் கேட்டாள்.


'' அவனுக்கு தெரியும்மா.. அவன்ட்ட சொல்லிட்டேன் .! அது ஸ்கின் மெடிசன்..! மறந்து அவ பேக்ல வெச்சிட்டு வந்துட்டேன்.. அவளும் அத எடுத்து வெச்சிருக்கா. இவன் போனா போதும்.. அவ குடுத்து விட்றுவா.. ப்ளீஸ்டா தம்பி.. எனக்காக போடா. !!'' அக்கா என் தலையை தடவி விட்டாள்.


'' எவ்ளோ தூரம் போகணும் தெரியுமா.. ??''


'' பக்கம்னா நானே போய்க்க மாட்டனா.. ?? தூரம்ன்றதாலதான உன்கிட்ட சொல்லிட்டிருக்கேன். ?? நீ போனா.. அக்கா உனக்கு இந்த மாச சம்பளம் வாங்கி.. நீ கேட்டது வாங்கி தரேன்.. ஓகே வா.. ??''


'' எவ்ளோ செலவு பண்ணுவ..?? நூறு ரூபாயா.. ?? அந்த பிசாத்து காசு எனக்கு வேண்டாம்.. !!''


'' ச்ச.. இல்லடா ?? நீ கேளு.. !!''


'' அப்ப கேட்டா.. நூறுக்குள்ள கேளு.. என்கிட்ட இப்ப அவ்ளோதான் இருக்கும்ப.. ??''


'' இல்ல.. இல்ல.. !! இந்த வாட்டி அப்படி சொல்ல மாட்டேன்.. !!'' எனச் சிரித்தபடி என் தலையைக் கோதி விட்டாள்.


'' சரி.. சரி.. விடு அதுக்குனு போட்டு தலைய கலைக்காத.. !!'' நான் அவள் கையை தள்ளி விட... என் கன்னத்தில் செல்லமாக கிள்ளினாள் அக்கா.


'' என் தம்பி நான் என்ன சொன்னாலும் கேட்பான்.. தெரியுமாம்மா.. !!''


'' இப்படி ஐஸ் வெச்சே காரியத்தை நிறைவேத்திககோ.. !!'' நான் சொல்ல.. அம்மாவும் சிரித்தாள்.


''அக்காதான்டா.. ?? உன் கிட்ட சொல்லி காரியத்தை நிறைவேத்திக்காம வேற யாருகிட்ட போய் கேப்பா.. !!''


அம்மா சொல்வதிலும் ஒரு நியாயம் இருந்தது.  என்ன இருந்தாலும் நான்தானே இந்த வீட்டு ஆண்பிள்ளை. அம்மா, அக்கா இருவருக்கும் துணையாக நிற்க வேண்டியவன். 


நான் அவசரமாக சாப்பிட்டு முடித்துக் கிளம்பினேன்.


"போதுமாடா?" அக்கா பாசமாகக் கேட்டாள். 


"போதும் போதும்.."


அக்கா உண்மையாகவே என் மீது பாசமானவள்தான். ஆனாலும் இப்போது கிண்டலாகப் பேசினாள். 


"நல்லா சாப்பிட்டு போடா.. என்ன அவசரம்னாலும் இப்படி அரையும் குறையுமா சாப்பிட்டு ஓடக்கூடாது. நல்லா உக்காந்து சாப்பிடணும். நல்லா வளர வேண்டிய பையன் இல்லையா?"


"ஆமா.. ஆமா.."


மீண்டும் நான் வீடு திரும்ப இரவாகி விடும், அதனால் இப்போதே போய் அக்காவின் பொருளை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என்று தோன்றியது.!


'' இப்ப போனா வீட்ல இருக்குமா உன் பிரெண்டு ??'' அக்காளை கேட்டேன்.


'' ம்ம்.. இருப்பா.. !! ஏன்.. இப்பவே போறியா ??''


'' ஆமா..! நான் வரப்ப.. கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும். இப்பவே போய் வாங்கி வெச்சிட்டா.. பிரச்சினை இல்லல்ல.. !!''


'' சரி.. நான் அவகிட்ட போன்ல சொல்லிர்றேன் போ.. !!'' என்றாள்.


'' சரி.. எனக்கு இப்ப ஒரு ஐநூறு ரூபா குடு பாக்கலாம்..!!''


'' டேய்.. என்னடா செல்லம்.. இப்பவே பெரிய அமௌண்டா கேக்கற.. ?? நான் என்ன சொன்னேன்.. இந்த மாசம் சம்ளம் வாங்கி தரேனுதான சொன்னேன்..??''


'' சரி.. இப்போ எவ்ளோ தருவ.. ??''


'' நீ கேட்டதுல ஒரு சைபர் மட்டும் கம்மி பண்ணிக்கோ.. ''


'' அம்பதா.. ?? அட.. தூ.. !!'' அவள் தோளில் அடித்தேன்.

''அம்மாவே நூறு குடுக்கும் !!''


சிரித்தாள்.

'' அம்மா சம்பளம் வேற.. என் சம்பளம் வேற இல்லடா ? உனக்கு தெரியாதா..? சரி.. நூறு தரேன்.. ஓகே வா..??'' என் கன்னத்தைக் கிள்ளினாள்.


'' குடு.. குடு.. !!'' என்றேன்.


தன் பேகைத் திறந்து பர்ஸை எடுத்து அதிலிருந்து நூறு ரூபாயை உறுவிக் கொடுத்தாள். 


வாங்கியபடி அம்மாவிடம் திரும்பினேன். 

"அம்மா.. உன் கணக்கு"


"அதான் அக்கா குடுத்துட்டாளேடா?" என்றாள் அம்மா. 


"நோ.. அது அக்கா கோட்டா. அவளுக்கு காரியம் ஆகணும்னு குடுத்தது. உன்னோட வழக்கமான கோட்டாவைக் குடு.."


அம்மா மறுக்கவில்லை. சிரித்துக் கொண்டே கொடுத்தாள்..


அதன்பின் விடைபெற்று பைக்கில் கிளம்பிப் போன இடத்தில் அப்படி ஒன்று நடக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.. !!


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அள்ள அள்ளக் குறையாத அழகே

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!