திங்கள், 3 ஜூன், 2024

முத்தம் பெரும் நட்சத்திரம் -1

 





அந்த அரசு அலுவலகத்துக்கு ஒரு வேலையாகச் சென்றபோதுதான் அவளைப் பார்த்தான் நிருதி. 


அவன் பைக்கை அலுவலக வளாகத்தினுள் இருந்த அசோக மர நிழலில் நிறுத்தி விட்டு இறங்கி அலுவலக வாயிலில் நுழைந்த போது அந்தப் பெண் வெளியே வந்து கொண்டிருந்தாள். 


ஒரு சில ஆண், பெண்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவுமாக இருந்தனர். 


அவர்களைக் கடந்து அவளை எதிர் கொள்ளும்போது இயல்பாக அவன் மீது படிந்த அவளின் பார்வை அகன்று, பின் அவனை அறிந்தது போல சட்டென மீண்டும் அவன் முகத்தில் பதிந்து உள்வாங்கி உணர்ந்துபோல திடுக்கிட்டது. 


அவன் முகத்தில் ஆழப் பதிந்த அவள் பார்வையில் ஒரு அணுக்கம் உண்டாகிப் பின் அதை அகம் ஏற்று முகம் மலர விழிகளில் இணக்கம் பிறந்தது.


 அவன் சிறிது திகைத்தபடி அதை உணர்ந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவளைப் பார்வையால் வருடி, கண்டு கொள்ளாமல் கடந்து சென்றான்.. !!


உள்ளே போய் தனக்கான பணி அலுவரைப் பார்த்து பேசி வேலை முடிந்து திரும்பி வந்து தன் பைக்கை நெருங்கியபோது மீண்டும் அவளைப் பார்த்தான்.


 இன்னொரு மர நிழலில் நின்றிருந்த ஒரு சிவப்பு நிற ஸ்கூட்டியை ஒட்டி நின்றிருந்தவள் அவனை எதிர் பார்த்திருந்தவளைப் போல அங்கிருந்து தயக்க நடையில் மெல்ல நடந்து அவனை நாடி வந்தாள்.


 அவள் தன் மீது விழிநாட்டியபடி தன்னை நோக்கித்தான் வருகிறாள் என்பதை உணர்ந்து லேசாக குழம்பினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக அவளைப் பார்த்து நின்றான்.


 அவள் முகம் மலர்ந்திருக்க, அதே கண் நிறைந்த அணுக்கத்துடன் அணுகினாள்.


நெருங்கி வந்து தடித்த இதழ்கள் மலர்த்திச் சிரித்தாள்.. !!


''நல்லாருக்கிங்களா?'' என்று எந்த முகமனுமின்றி தன் முன் வந்து நின்று முகம் கனிந்து சிரித்தபடி கேட்ட அந்தப் பெண்ணைப் பார்த்து சில நொடிள் திகைத்தான்.


அவன் கண்கள் அவள் முகத்தில் ஆழப் பதிந்து மீண்டன.


 கொழுத்த கன்னங்களுடன் இருக்கும் நீள்வட்ட முகம். தடித்த இதழ்கள் விரிந்து சுழிய, பெரிய வெண்பற்கள் பளிச்சிட, தன்னை கூர்நோக்கி வினவும் அவளின் விழிகளில் இருக்கும் ஈர்ப்பு அவனுள்ளம் தொட்டு மீண்டது. 


ஆனாலும் அவள் யாரென்றே புரியாமல் குழப்பமாகத் தலையாட்டினான்.


''நல்லாருக்கேன். நீங்க?'' 


இள மஞ்சளும் பச்சையும் கலந்த புடவையும் பச்சையில் ரவிக்கையும் அணிந்து, தடித்த உடலும் உயரமும் கொண்ட அவளின் பெண்மைத் தோற்றத்தை உள்ளூர வியந்தபடி கேட்டான்.


''நான் நல்லாருக்கேங்க. என்னை தெரியுதா?'' உடனே கேட்ட அவளின் அடுத்த வினா அவனைக் குழம்ப வைத்தது.


அவள் முகத்தை மீண்டும் ஊன்றிப் பார்த்தான்.


சற்று உடல் பருமன் என்றாலும் அவள் ஒரு அழகான பெண் என்பதில் சநதேகமில்லை. 


ஆனால் யாரிவள்.. ??


''பாத்த மாதிரி இருக்கு. ஆனா.. சரியா தெரியல'' நெற்றி வரிகள் சுருங்கச் சொன்னான். 


''நெனச்சேன்'' மூக்குத்தி அணிந்த பெரு மூக்கு விரிந்து கொழுத்த கன்னங்கள் குழையச் சிரித்தாள். 


காதில், கல் வைத்த அகலமான கம்மல்கள் அணிந்திருந்தாள். 


இயல்பாக இடது கையால் முந்தானையை இழுத்து மூடிய முந்தானைக்குப் பின்னால் கொழுத்து உருண்டு திரண்டிருக்கும் முலை எழுச்சியின் விம்மலை மறைத்தாள்.


 ஆனாலும் அது முற்றிலும் மறையாமல் ரவிக்கையின் ஓரத்தில் சரிந்து பிதுங்கித் தெரிந்தது.


''உங்க பேரு ?'' அவள் முகத்திலிருந்த பார்வையை விலக்காமலே கேட்டான் நிருதி. 


அவன் அகக் கண்கள் அவளின் முலையிருப்பை உணர்ந்து கொண்டிருந்தது. 


''கமலி" என்றாள். 


பெயர் சொல்லும்போது அவள் முகத்தில் சிறு வெட்கம் தோன்றியது. அதை அவளின் கை கால் அசைவுகளும் வெளிப்படுத்தின.


அவளின் பெயரோ முக உடல் தோற்றமோ அவனுக்கு பிடிபடவில்லை. அவள் முகத்தையும் கண்களையும் உடல் தோற்றத்தையும் சற்று வியப்புடன் ஊன்றிப் பார்த்தான்.


''கமலி..? தெரியலயே..? எங்க இருக்கிங்க?'' பார்வை வருடலுடன் கேட்டான். 


அவள் சிரித்து,

 ''மேடூர்ல இருந்தேன். ஆனா இப்ப அங்க இல்ல.'' என்றாள். 


''மேடூர். ஓஓ" அவன் முன்பிருந்த ஊர். "இப்ப நானும் அங்க இல்ல. அங்க... நீங்க...?'' எனக் கேட்டான்.


''ஊருக்கு கடைசில.. ஆத்துப் பாலத்துகிட்ட ரோட்டரத்துல என் வீடு. அப்ப நீங்க சைக்கிள்ள வருவீங்க.''


''பாலத்துகிட்டயா ?''


''ம்ம்..  பாலத்துக்கு அந்த பக்கம் ஊரை ஒட்டி சின்னதா ஒரு சாலையோட ஒரு ஓட்டு வீடு இருக்கும். அந்த பழைய ஓட்டு வீடுதான் என் வீடு. அப்ப நான் ஸ்கூல் போயிட்டிருந்தேன்.''


''ஓஓ''  


மை காட்.! சட்டென நினைவு வந்தது.


 ''அந்த.. நீங்க..'' திகைத்து திணறினான்.


 'அவளா இவள்?'


''இப்ப தெரியுதா?'' அவள் கண்கள் விரிந்து முகம் மலர்ச்சி கொண்டது.


''தெரியுது. ஆமா.. அப்ப லீனா.. சின்னப் பொண்ணா..  இப்ப இப்படி.?'' அவளின் பெருத்த உடலில் தன் பார்வையை விகல்பமின்றி ஓட்டித் திகைத்தான். 


உண்மையில் இது அவள்தானா என்கிற பிரமிப்பில் அவன் அகம் திகைத்தது.


''பெருத்துப் போய் குண்டாகிட்டேனு கேக்கறீங்களா?'' என்று விகல்பமின்றி கேட்டு மூக்கு விடைக்க, இதழ்கோணி நாணிச் சிரித்தாள். 


"ஆ.. ஆமா.."


''கல்யாணமாகி குழந்தை பெத்தேன். இப்படி ஆகிட்டேன்'' 


'' ஓஓ'' 


அவள் யார் என்பது புரிந்ததும் அவளின் நட்பை எளிதாக உணர்ந்து சிரித்தான் நிருதி.. !!


அவள் பெயர் தெரியாது என்றாலும் இப்போது அவள் யாரெனத் தெரிந்தது. 


அப்போது அவள் பள்ளி செல்லும் சிறு பெண்ணாக இருந்தாள். அவள் வீட்டுக்கு அருகிலேயே பஸ் ஸ்டாப் இருந்தது.


 அங்கேதான் அவளை, அவன் நாள் தோறும் சைக்கிளில் செல்லும் வழியில் பார்ப்பான். 


சில நாள் அவளின் வீட்டிலும், சில நாள் பஸ் ஸ்டாப்பிலும் பார்ப்பான். 


அதே சமயம் அவன் தன்னைப் பார்ப்பான் என்பதை நன்கு உணர்ந்தவள்போல,  அவனின் பார்வையை ஒவ்வொரு முறையும் அவள் பார்வையும் எதிர் கொள்ளும். 


அப்படி ஒரு சில நாட்கள் அவள் விழிகள் அவனைக் கண்டு நாணத்துடனோ காதலுடனோ புன்னகைக்கவும் செய்யும்.. !!


வயதுக்கு மீறி வளர்ந்து விட்டதைப்போல நெடுநெடுவென நல்ல உயரத்துடன், ஒல்லியாக இருக்கும் அவள் மீது அவன் பார்வை தானாகவே சென்று பதியும்.


 பள்ளி உடையில் இரட்டை பின்னலில் நேர்த்தியாக இருக்கும் அவளைப் பார்க்கும் போது அவனுள் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும். 


 அவளைக் காணாத நாளில் அவன் கண்கள் அவளின் முகம் தேடி அலைபாயும். 


அது மனதளவில் நெகிழ்ந்து விட்ட காதலென்றானாலும் வெறும் பார்வையளவிலேயே கடந்து சென்றிருந்ததை இப்போது உணர்ந்தான்.. !!


அவள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண். அவள் வீடு என்பது சிறிய அளவிலான ஒரு ஓட்டு வீடுதான். 


அவளுக்கு உறவென்று இருந்தது அவளின் அம்மா மட்டும்தான்.  அப்பாவோ மற்ற உறவுகளோ இல்லை என்று அறிந்திருந்தான். 


அவளின் அம்மா கட்டிட வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். ஏழ்மையாக இருந்தாலும் அவள் மிகவும் நல்ல பெண் என்பதை அவன் அறிந்தே இருந்தான். 


அதோடு அவளின் பருவமும் வயதுக்கே உரிய இளமையழகும் அவனுள் பதிய,  அவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது.  


அவளிடம் தன் காதலைச் சொல்லி அவளைக் காதலிக்கலாம் என்று கூட அவன் நினைத்தபோதுதான் ஊர் மாறி வேறிடம் செல்ல வேண்டியிருந்தது. 


அதன்பின் அவளை மெல்ல மெல்ல மறந்தே போனான்.. !!


இப்போது அவளே அவனை அடையாளம் கண்டு தேடிவந்து பேசுவது அவனுக்கு வியப்பளித்தது. 


தன்னை அவள் இன்றும் மறக்கவில்லை என்பதை நினைத்து பெருமிதம் கொண்டான். 


அப்போது அவளுடன் ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. வெறும் பார்வைகள் மட்டும்தான்.. !!



****



''கல்யாணமாகிருச்சா உங்களுக்கு.?" அவன் முகத்தில் தன் விழிகளை நாட்டியபடி கேட்டாள்.


''ம்ம்'' மெல்லத் தலையசைத்தான். பின் ''உனக்கு எத்தனை குழந்தைக?''


''ஒண்ணுதான். பையன் உங்களுக்கு?''


''ரெண்டு'' அவள் முகத்தில் இருந்த பார்வையை இறக்கி தாலியணிந்த கழுத்தையும், திமிறியெழுந்திருந்த பெரு முலைகளையும் பார்த்தபின் மெலிதான வியப்புடன் சொன்னான்.


''இப்ப ரொம்ப குண்டாருக்க''


குனிந்து தன் முலை மேடுகளைப் பார்த்து வெட்கம் கொண்டபின் நிமிர்ந்து அவன் முகம் பார்த்துச் சொன்னாள். 


''அப்ப ரொம்ப ஒல்லியாருந்தேன். எனக்கே என்னை பாக்க கூச்சமாருக்கும்''


"ஆமா" சிரித்தான். ''ஆனா.. அப்ப நாம ஒரு வார்த்தைகூட பேசினதில்ல''


''ம்ம்'' லேசான வெட்கநகை புரிந்து இடது கையால் காதோர சுருள் முடியை ஒதுக்கினாள். 


''இப்பக்கூட எப்படி பேசினேனு தெரியல. உங்கள பாத்ததும் சட்டுனு ஒரு பதட்டம் வந்துருச்சு. நீங்க பேசுவீங்கனு நெனச்சேன். ஆனா நீங்க என்னை கண்டுக்காம உள்ள போயிட்டீங்க. வெளிய வந்தப்பறம்தான் உங்களுக்கு என்னை அடையாளமே தெரியலேனு புரிஞ்சுது. சரி எதுக்கும் பேசிப் பாக்கலாமேனுதான் நின்னேன்''


''நெஜமா.. எனக்கு அப்ப அடையாளம் தெரியல. ஆனா நீ என்னை பாத்து திகைச்சத நானும் பாத்தேன்''


''ஒரு வழியா பேசிட்டோம்'' என்றாள். 


கண்கள் கனியச் சிரித்து,

 ''கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது சாப்பிடறியா?'' என்று கேட்டான்.


"எனக்கு வேண்டாம்" என்றாள். பின் குரல் தணிந்து,

 ''உங்களுக்காக வேணா.." என்று சிரித்துக் குழைந்தாள்.


''எனக்காகவா?'' திகைத்த மாதிரி கேட்டான்.


''ஏன் ?'' அவள் குரல் இன்னும் தணிந்தது.


''புரியல.'' அவள் கண்களைப் பார்த்து பின் மெல்லச் சிரித்தான்.


''சரி வா..''


அவள் சிரித்த முகத்துடன் விலகிச் சென்று தன் ஸ்கூட்டியை எடுத்து வந்தாள். 


திருமணத்துக்குப் பின் வசதியான வாழ்க்கை வாழ்கிறாள் என்று தோன்றியது. 


அவளைச் சந்தித்த உணர்வே அவனுக்குள் இனிமையாகப் படர்ந்து அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.. !! 



வியாழன், 30 மே, 2024

சாலையோரப் பூக்கள் -10

 நண்பனுக்கு கையசைத்து டாடா காட்டிவிட்டு.. லாவண்யாவுடன் நடந்தான் நந்தா.


அவளது தலை முடியை உலர்வதற்காக.. முதுகில் பரப்பிவிட்டிருந்தாள்.


''என்ன இது.. இப்படி பத்ரகாளி மாதிரி முடிய விரிச்சு போட்றுக்கீங்க..?'' எனக் கேட்டான் நந்தா.


''தலைக்கு குளிச்சேன்..'' எனச் சிரித்தாள்.


''வேலைக்கு போய்ட்டு வந்தாச்சா..?''


''ம்..ம்ம்..'' 


அவனை வீட்டிற்கு அழைத்துப் போய்.. ஒரு சேரை எடுத்துப் போட்டாள்,

 ''உக்காரு..'' என்று உள்ளே போய்.. அவள் அம்மாவிடம் தக்காளியைக் கொடுத்து, ''காபி வெய்மா.. மலரோட தம்பி வந்துருக்கான்..'' என்றாள்.


''எதுக்குடி..?'' அவனை எட்டிப் பார்த்தாள் அம்மா.


''ரோட்ல போய்ட்டிருந்தான்.. நான்தான் பேசி வெச்சு கூட்டிட்டு வந்தேன்..'' அம்மாவிடம் சொல்லிவிட்டு அவள் முன்னால் போக... அவளைத் தொடர்ந்து வந்த அம்மா நந்தாவிடம் பேசினாள்.


அவனிடம் சாதாரணமாகப் பேசிவிட்டு 'நிம்மி இன்னும் வரவில்லை' என்பதையும் ஒரு பாட்டம் பாடிவிட்டுப் போனாள்.


காபியை லாவண்யா எடுத்து வந்து கொடுத்தாள். நந்தா குடித்தான்.


மணி எட்டாக.. மீண்டும் லாவன்யாவின் அம்மா புலம்பினாள்.

''மணி எட்டாச்சுடி.. இன்னும் இவள காணம்..''


''அதுக்கு என்னை என்னமா பண்ண சொல்ற..?'' லாவண்யா எரிச்சலாகிக் கேட்டாள்.


''பஸ் ஸ்டாப்லயாவது போய் பாரேன்..''


''ஏன் அவளுக்கு வீடு தெரியாதா..? இங்க வராம பஸ் ஸ்டாப்லயே நின்றுவாளா..?'' அம்மாவைக் கேட்டாள் லாவண்யா.


''போடி.. போய் நின்னு பாத்துட்டாவது வாடி..'' அம்மா திட்டினாள்.


''நிம்மி எங்க போனா..?'' எனக் கேட்டான் நந்தா.


''காலேஜ்தான்பா போனா.. அஞ்சு அஞ்சரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவா.. ஆனா இன்னிக்கு என்னமோ இன்னும் காணம்..! எனக்கு மனசே செரியில்ல..!'' என்றாள் மிகவும் கவலையுடன்.


''பிரெண்டு வீட்டுக்கு ஏதாவது போயிருப்பா..! வந்துருவா.. அழுது பொலம்பாத..!'' என்றாள் லாவண்யா.


''நீ வீட்லயே இரு.. நான் போய் பஸ் ஸ்டாபல நிக்கறேன்..'' எனச் சொல்லிவிட்டு அம்மா கிளம்ப..


''உன்னோட பெரிய ரோதனைமா.. நானே போறேன்.. நீ வீட்லயே இரு..'' என்று எழுந்தாள்.


நந்தாவைப் பார்த்து.. ''நீ கூட போய்ட்டு வாப்பா..'' என்றாள் அம்மா.


''அது வேறயா..?'' எனச் சிரித்தாள் லாவண்யா.


நந்தா எழுந்தான்.


''அப்படியே போய்டாதப்பா.. வந்து சாப்பிட்டு போ..'' என அம்மா சொல்ல..


''சரிங்க.. நீங்க கவலப்படாம இருங்க..'' என்றுவிட்டு வெளியே போனான்..!


லாவண்யா தனது மொபைலை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் சொன்னாள்.

''அவ வேற போன்ல இருந்து கூப்பிட்டான்னா நான் பஸ் ஸ்டாப்ல நிக்கறேனு சொல்லு..'' 


நந்தாவை அழைத்துக் கொண்டு பேசிக்கொண்டே பஸ் ஸ்டாப் போனாள்.


பஸ் ஸ்டாப்பில் போய் நின்றார்கள். கொஞ்சம் தள்ளி ஆட்டோ ஸ்டேண்டில் இரண்டு ஆட்டோக்கள் நின்றிருந்தன.

டவுன் பஸ் வருவதும் போவதுமாக இருந்தது.

ஆனால் நிம்மியை மட்டும் காணோம்..!!


''நிம்மிகிட்ட போன் இல்லயா..?'' என்று கேட்டான் நந்தா.


''அவளுக்கு போன் இருக்கு.. ஆனா காலேஜ்க்கு கொண்டு போககூடாது..! பயப்படறவுக்கு ஒன்னும் இருக்காது..! எங்கம்மா தேவையில்லாம பயந்து சாகறா.. அவ பிரெண்டு வீடுகளுக்கு அடிக்கடி இந்த மாதிரி போவா..!!'' என்றாள்.


''பிரெண்டுக போன் நெம்பர் இருக்கா..?''


''என்கிட்ட இல்ல.. அவ செட்ல இருக்கும்..''


''அப்பறம் என்ன.. அதுல கூப்பிட்டு பாக்கலாமில்ல..?''


'' அதுல பேலன்ஸ் இல்ல..!''


''ஒரு பத்து ருபா கார்டு வாங்கி போட்டு பேச வேண்டியதுதான..?''


''பேசலாம்...'' என இழுத்தாள் ''நான் அவ்ளோ சீரியஸா எடுத்துக்கல.. வந்துருவா அவ..!''


''ஆனா உங்கம்மா பயந்து சாகறாங்களே...'' என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… லாவண்யாவின் கையில் இருந்த  போன் அடித்தது.


எடுத்துப் பார்த்தாள் புது எண்..!

''அலோ..?'' என்றாள்.


''ஏய் நாந்தான்டி..'' என்றாள் எதிர் முனையில் நிம்மி.


''எங்கடி இருக்க சனியனே..?'' எரிச்சலுடன் கேட்டாள் லாவண்யா.


''என் பிரெண்டு வீட்டுக்கு வந்தேன்.. லேட்டாகிருச்சுடி.. இப்பதான் அம்மாகிட்ட பேசினேன். நீ பஸ் ஸ்டாப்ல நிக்கறேனு சொன்னா..! நீ வீட்டுக்கு போ.. நான் பைக்ல வந்தர்றேன்..!''


''பைக்லயா.. யாருகூட..?''


''என் பிரெண்டோட தம்பி என்னை ட்ராப் பண்றேனு சொன்னான். இப்ப கெளம்பிட்டேன்..! அரை மணி நேரத்துல வந்துருவேன்.. நீ வீட்டுக்கு போ..'' என்றாள்.


''சீக்கிரம் வந்து தொலை.. உங்கம்மாளோட தொல்லை தாங்கல..'' என்றாள் லாவண்யா.

காலைக் கட் பண்ணிவிட்டு நந்தாவிடம் சொன்னாள்.

''பிரெண்டு வீட்டுலதான் இருக்கா.. அவ பைக்ல வராளாம்.. நாம போலாமா..?'!


''எங்க.. ?''


''எங்க வீட்டுக்கு..?''


''இல்ல.. நான் இப்படியே போறேன்..'' என்றான் நந்தா.


''ஏய் வா நந்தா.. என் வீட்ல போய் சாப்பிட்டு போ..'' அவன் கையைப் பிடித்தாள்.


''எனக்கு சாப்பாடெல்லாம் வேண்டாம்..''


''வேற என்ன வேணும்..?'' என அவள் சிரித்துக்கொண்டு கேட்க...


யோசிக்காமல் சொன்னான் நந்தா.

''நீங்க வேணும்..''


திகைத்தாள். ''ஏய்..? என்ன..? நானா..?''


''ஆமா.. '' என்றான் ''என்னமோ.. இப்ப உங்கள பாத்தப்பறம்.. எனக்கு.. உங்க மேல திடிர்னு ஒரு லவ்வாகிருச்சு..''


''லவ்வா..?'' புன்னகைத்தாள் ''என்ன திடிர்னு..?''


''நேத்து.. நாம ஹோட்டல்ல சாப்பிடறப்ப.. ஒன்னு  நடந்துச்சே.. அதுக்கப்பறம்... எனக்கு உங்க நெனப்பாவே இருக்கு..'' என்றவாறு.. அவள் கை விரல்களைக் கோர்த்துப் பிடிக்க...

அவளும்.. அவன் கைவிரலை இறுக்கினாள்.....!!!!!!



விரும்பிப் படித்தவை.. !!