வெள்ளி, 4 அக்டோபர், 2024

மென் மோகம் -15

 


'என்னாச்சு?' உள்ளே ஒலித்த ஏதோ ஒரு மெலிதான இசையைக் கேட்டபடி போனில் கேட்டான் நிருதி.


'உனக்கெதுக்கு அது?' என்றாள் கமலி.


'சரிதான்.' என்றான் மெலிதான நகைப்புடன். 'நான் யாரு உனக்கு? இல்ல அதைத் தெரிஞ்சு எனக்கு  என்னாகப் போகுது?'


'அதானே..' என்றாள். 


'குட்'


'ம்ம்'


'ஓகே பை'


'இரு'


'என்ன?'


'எதுக்கு நீ சாரி சொன்ன?'


'எப்ப?'


'மத்யானம்? மெசேஜ் பண்ணிருந்த இல்ல?'


'அது.. நேத்து தேவையில்லாம உன்ன திட்டிட்டேனு தோணுச்சு'


'ம்ம்'


'எனக்கு வாழ்த்து சொன்ன உனக்கு நான் வாழ்த்து சொல்லவே இல்ல. அதோட திட்டி சண்டையும் போட்டது தப்புனு தோணுச்சு'


'தப்பு உன்மேலதான?'


'நேத்து மட்டும்'


'அதென்ன நேத்து மட்டும்?'


'நேத்து மட்டும்தான் என் தப்பு'


ஒரு சின்ன இடைவெளி. 


'எனக்கு  என்னாச்சுனே தெரியல' மெல்லச் சொன்னாள்.


'ஏன்?'


'மனசே சரியில்ல'


'........'


'ஒரு மாதிரி  ஆகிட்டேன்'


'.........'


'நிரு?'


'ம்ம்?'


'என்கூட பேச புடிக்கலையா?'


'என்கிட்ட ஒரு வார்த்தை பேசிர மாட்டியானு பல நாள் தவம் கெடந்தேன்டி'


'என்னை மன்னிச்சிரு. பேசாதது தப்புதான்'


'எத்தனை நாள் தூக்கம் இல்லாம தவிச்சேன் தெரியுமா?  ப்ப்பா.. கொடுமை'


'என்னை அவ்ளோ விரும்பினியாடா?'


'கேட்ராத. கொலவெறில இருக்கேன்'


'ஸாரிடா.. என் நெலமை அப்படி. சரி பேசாதது என் தப்புதான். விடு. இனி பேசலாம்'


'வேணாம்ப்பா.. மறுபடியும் ஒடையுறதுக்கு என்கிட்ட இன்னொரு  இதயம் இல்ல'


'வாவ்'


'என்ன வாவ்?'


'வெரி நைஸ் லைன். பின்ற'


'என் வலியைச் சொன்னா உனக்கு கிண்டலா இருக்கா?'


'சத்தியமா நான் கிண்டல் பண்ணல. உண்மையத்தான் சொன்னேன்'


'.........'


'என்னை அவ்வளவு புடிக்குமா நிரு?'


'இப்ப எதுக்கு  அது? விடு'


'ஏய் சொல்லு?'


'இப்ப இல்ல'


'மொத புடிச்சுதா?'


'........'


'சந்தோசமா இருக்குடா. நான்தான்  உன்னை புரிஞ்சுக்கல போல'


'.........'


'சரி.. உனக்கு பொண்ணு எதுவும் பாத்தாங்களா?'


'பொண்ணுக சாவகாசமே வேண்டாம்னு ஆகிருச்சு'


'ஏய்.. ஏன்?'


'உன்னாலதான்'


'நான்  என்ன செஞ்சேன்?'


'உன்கிட்ட பட்ட அவமானம், அசிங்கம் அப்படி'


'ச்ச.. நான்  அப்படி என்ன அசிங்கப் படுத்திட்டேன் உன்னை? சொல்லு பாக்கலாம்?'


'நான் எத்தனை கெஞ்சினேன். நேர்ல பாத்துகூட நீ என்கிட்ட பேசல'


'அது.. அவ்ளோ பெருசா? நீ சொல்றதை பாத்து நான் என்னமோ ஏதோனு பயந்தே போயிட்டேன்'


'அடிப்பாவி.. அப்ப உனக்கு அது ஒரு விசயமாவே இல்லையா? '


'இருக்குதான். ஆனா நீ பில்டப் குடுத்ததை பாத்து நானே பயந்துட்டேன்'


சிறிது சிறிதாக பேச்சு நீண்டது. இறுக்கம் தளர்ந்து சற்று எளிதானதைப் போலிருந்தது. 


உள்ளுறையும் வெஞ்சினம் தணிந்து இயல்பாக பேச்சு வந்தது. 


 திடுமெனக் கேட்டான். 


'அவரு இல்லையா?'


'ம்ம்.. இருக்கார்'


'நீ என்கூட சாட் பண்ணிட்டிருக்க?'


'நல்லா தூங்கிட்டிருக்கார்'


'நீயும் தூங்க வேண்டியதுதான?'


'தூக்கம் வரல'


'அவர கட்டிப் புடிச்சு படுத்தேன்னா தூக்கம் வருது'


'அப்படியும் படுத்து பாத்தேன். அப்பயும் தூக்கம் வரல'


'ஏன்.. தூக்கம் வரல?'


'தெரியலப்பா'


'சண்டையா? '


'சே.. சே.. அதெல்லாம் இல்ல'


'ம்ம்..'


'அப்றம்?'


'கேளு? '


'இல்ல நீ கேளு'


'என்ன கேக்கறது?'


'ஏதாவது? '


'நான் கேப்பேன். நீ சொல்லணுமே?'


'தப்பா கேக்காத'


'சரி.. இன்னிக்கு மேட்டர் எதுவும் பண்ணலயா?'


'ஏய்.. பாத்தியா?'


'இதுவும் தப்பா?'


'ம்ம்..'


'அப்ப தூங்கு போ'


'கோபமா?'


'பின்ன என்ன...'


'இல்ல..'


'என்ன இல்ல?'


'நீ கேட்டல்ல அது?'


'எது?'


'நீ என்ன கேட்ட?'


'மேட்டரா?'


'ம்ம்..'


'ஓஓ.. இன்னிக்கு நடக்கல?'


'இல்ல'


'ம்ம்..  எத்தனை நாள் ஆச்சு அது நடந்து?'


'த்ரீ டேஸ்'


'மறுபடியும் எப்ப?'


'தெரியல'


'ம்ம்..'


'ம்ம்..'


'அப்பறம்?'


'சொல்லு?'


'நீ சொல்லு?'


'எனக்கு  எதுவுமே தோணல'


'இன்னும் கேக்கவா?'


'இல்ல.. வேண்டாம்'


'அப்ப தூங்கலாமா?'


'இப்ப என்மேல கோபம் இல்லல்ல நிரு?'


'முழுசா இல்லேனு சொல்ல முடியாது'


'பாவி..'


'சரி விடு. நீயும்  உன் கணவரை இறுக்கமா கட்டிப் புடிச்சிட்டு தூங்கு'


'ஹா ஹா ஹா.. சரி நீ என்ன செய்வ?'


'முரட்டு சிங்கிள். என்ன செய்ய முடியும்? தலையணைதான்'


'ச்சீ...'


'ச்சீதான்'


'நீயும் கல்யாணம் பண்ணிக்கோ.. பிரச்சினை சால்வ்'


'போதும். என் மூடை மாத்தாத. அது உனக்கு நல்லதில்ல. தூங்கலாம்'


'எனக்கு என்ன நல்லதில்ல?'


'ஏடாகூடமா பேசுவேன்'


'ஆமா. நீ பேசாதவன்தான் பாரு'


'அப்ப பேசலாங்கறியா?'


'அய்யய்யோ நான்  அதுக்கு  ஆளில்லப்பா. என்னை விட்று. நீ தூங்கலாம் பை'


'ஓகே பை' உள்ளே எழுந்த கடுப்புடன் போனைத் தூக்கிப் போட்டு விட்டு கண்களை மூடினான்.. !!


புதன், 2 அக்டோபர், 2024

ஈரமான தாழம் பூ -11

 கிரிஜா பாத்ரூமிலிருந்து வந்தபோது கொஞ்சம் தெளிந்திருப்பதைப் போலிருந்தாள்.

“லைட்ட ஆப் பண்ணிட்டு வா” சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் போனாள். 

ஹால் விளக்கை அணைத்துவிட்டு அவளின் படுக்கை அறையில் நுழைந்தேன்.

கிரிஜா கட்டிலில் கால்களைக் கட்டியபடி உட்கார்ந்திருந்தாள். அவள் ஒரு மாதிரி முதலிரவுக்குக் காத்திருக்கும் புதுப்பெண் போலத் தெரிந்தாள். 

உண்மையாக இருக்குமோ என்றுகூடத் தோன்றியது. அவள் திட்டமிட்டுத்தான் என்னை தன்னுடன் ஒன்றாக படுக்க அழைத்திருக்கிறாளோ?

இருக்கலாம். இல்லையென்று சொல்வதற்கில்லை. காரணம் இன்று இரவு நடந்த அந்தச் சம்பவம். ஆம். நான் அவளின் அந்தரங்கத்தைப் பார்த்து விட்டிருக்கிறேன்.!

"லைட்டு எரியட்டுமா கிரி?" மெல்லக் கேட்டேன்.

நிமிர்ந்து சொன்னாள். 

"ஆப் பண்ணிட்டு ஜீரோ வாட்ஸை போட்று"

விளக்கை அணைத்து விடிவெள்ளியைப் போட்டேன். அறை மங்கலான நீலவண்ண ஒளியைப் பிரதிபலித்தது. அவள் இன்னும் அழகாகிப் போனாள்.

கட்டிலை நெருங்கிப் போனேன். அவள் எனக்கு இடம் விட்டு உள்ளே தள்ளிப் போனாள். 

"படுத்துக்கோ"

நான் கொஞ்சம் தயங்கி உட்கார்ந்தேன். அவளிடமிருந்து பூ மணம் கமகமத்தது.

எனக்கு இடம் விட்டுப் படுத்தாள். நானும் கட்டில் ஓரமாகப் படுத்துக் கொண்டேன். 

சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தது. ஆனால் அந்த அமைதி எனக்குள் இருக்கவில்லை. 

மெல்ல அசைத்தாள் கிரிஜா. என்மேல் பட்டுக் கொண்டாள். 

"நிரு.."

"என்ன கிரி?"

"எனக்கு வாழவே வெறுப்பா இருக்குடா.. "

"ச்ச.. என்ன கிரி.. இப்படி பேசிட்டே.."

"நெனைக்க நெனைக்க மண்டையே வெடிக்கற மாதிரி இருக்குடா"

"எதையும் நெனைக்காத. அமைதியா கண்ணை மூடி தூங்கு"

"கண்ணை மூடினா அந்தாளு பண்ற துரோகம்தான்டா வருது. தூக்கம் வரதில்ல.."

மெல்லப் புரண்டு அவளைப் பார்த்தேன். அவளும் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அமைதியா தூங்கு கிரி.."

"என்னால முடியலடா.."

"அதைவே நெனைக்காத.."

என் முகத்தை உற்றுப் பார்த்தாள். கை நீட்டி என் கன்னத்தைத் தொட்டாள். 

"என்னை உனக்கு புடிக்கும்தான?"

"புடிக்கும்"

"எவ்வளவு புடிக்கும்?"

"ரொம்ப.."

"அப்பறம் ஏன் தள்ளிப் போய் படுத்துட்டிருக்க?"

"இ.. இல்லயே.."

"வா.. கிட்ட வா"

"இல்ல.. பரவால.."

"ஒட்டிப் படுத்துக்கோ.."

"எடம் இருக்கு.."

"என்னை கட்டிக்கோ.."

"கி.. கிரி.."

"அந்தாளுக்கு ஒரு பாடம் புகட்டுனும்டா.."

"எ.. என்ன பாடம்.. கிரி..?"

அவளே என்னை நெருங்கி வந்து அணைத்துக் கொண்டாள். அவள் கை என் கன்னத்தையும் காதுப் பகுதியையும் தடவியது. 

எனக்குள் ஏற்பட்ட ரசாயண மாற்றத்தில் என் உடல் சூடாகி இளமை முறுக்கேறத் தொடங்கியது.

"அதுக்கு நீதான் எனக்கு சப்போர்ட் பண்ணனும்.." என்றாள்.

"ம்ம்." என் தொண்டை உலர்ந்து, குரல் நடுங்கியது.

"என்ன நடந்தாலும் சரி.. நீ என்னை விட்டு போகவே கூடாது..!" அவள் மூச்சுக் காற்று என் முகத்தில் மோதியது. 

"போக மாட்டேன்"

"என்னடா.. இது..? உன் உடம்பு இப்படி சுடுது..?"

"இ.. இல்லையே…"

என் நெற்றியை, கழுத்தை எல்லாம் தொட்டுப் பார்த்தாள். 

"கழுத்துல வேத்துருக்கு..?"

"அ.. அது கொஞ்சம்.. புழுக்கமாருக்கு கிரி.."

"பேன் ஓடுதேடா.." என்று மீண்டும் என் கன்னம், கழுத்து, நெஞ்சு எல்லாம் தொட்டுப் பார்த்தாள். தடவிக் கொடுத்தாள். 

"காச்சல் இல்லையே..?"

"இ.. இல்ல.. அதெல்லாம் இல்ல.."

என்னுடன் அணைந்து கொண்டாள். அவள் மார்புகள் என் உடலோடு உறவாடிப் புதைய, அவள் கால்களும் என் கால்களும் தொட்டுக் கொண்டன. 

"நிரு.."

"கிரி?"

"உன்னை தொல்லை பண்றேனா..?"

"இ.. இல்ல கிரி.."

"உனக்கு தூக்கம் வருதா..?"

"வந்துச்சு.. ஆனா இப்ப இல்ல.."

"எனக்கு தூக்கமே வரலைடா.."

"அதைவே நெனைக்காத"

"நெஜமா சொல்லு.. என்னை உனக்கு புடிக்கும்தான.. ?"

"நெஜமா புடிக்கும் கிரி.."

"சரி. அப்பன்னா.. எனக்காக ஒண்ணு செய்வியா?"

"என்ன கிரி.."

"நான் ஒரு புள்ள பெக்கணும்.."

"அ.. அதுக்கு.?" திணறினேன்.

"என்னை அம்மாவாக்கு.." 

"கி.. கிரி.." திடுக்கிட்டேன்.

"என்னை ஒரு அம்மாவாக்குடா.. ப்ளீஸ்.. இல்லேன்னா நான் வாழ்றதே வேஸ்ட்.." கலங்கிய குரலில் சொன்னாள் கிரிஜா.. !!