காலை பதினொரு மணி. நிருதி அந்த வீட்டின் முன் போய் நின்றபோது வனஜா மொட்டை மாடியில் நின்றிருந்தாள். தனியாகத்தான் இருந்தாள். அவனை தெருக் கோடியிலேயே பார்த்து விட்டாள் என்பதை அவனும் பார்த்து விட்டான். ஆனால் அவள் அவனைக் கண்டு கொள்ளாதவள் போல அதே இடத்தில் நின்றிருந்தாள். அவன் அந்த தெருவின் இரண்டு பக்கத்திலும் பார்த்தான். எந்த வீட்டிலிருந்தும் எவரும் தென்படவில்லை. வீதி அமைதியானதுதான். பிரச்சனை இல்லாதது.
பைக்கை நிறுத்தி அவளை அண்ணாந்து பார்த்தான். மஞ்சளும் அடர் பச்சையும் கலந்த நிறத்தில் ஒரு புடவை கட்டி, பச்சைக் கலர் ரவிக்கை அணிந்திருந்தாள். அவனைப் பார்த்து விட்டதன் அடையாளமாய் 'இரு' என்பதைப்போல முகமசைத்து, ஒரு மெல்லிய புன்னகை காட்டினாள்.
அவனுக்கு அவள் நடவடிக்கை குழப்பமாகவும், சிறிது எரிச்சலாகவும் இருந்தது. 'என்னைத் தன் வீட்டுக்கு வரச் சொன்னதே அவள்தான். ஆனால் இப்போது என்னடாவென்றால் என்னைத் தெரியாதவள் போல பாவித்துக் கொண்டு நின்றிருக்கிறாளே..'
அந்த தெருவின் முன், பின் இரண்டு பக்கத்திலும் மீண்டும் ஒரு பாராவை பார்த்து விட்டு மேலே முகம் தூக்கி அவளைப் பார்த்தான். அவள் பின்னால் இருந்த தன் கூந்தலை எடுத்து முன்னால் போட்டாள். அவளின் ஆசை மனம் அதில் தெரிந்தது. குட்டிக் கூந்தல்தான். சுருட்டை முடி. அந்த கூந்தலில் பூ வைத்திருந்தாள். பூவின் கீழ் பகுதியும் கூந்தலுடன் சேர்ந்து அவளின் அம்சமான முலைகளைத் தொட்டிருந்தது.
"என்ன பண்றது?" வாய், கை அசைவுகளின் சைகையுடன் சன்னமாய் கேட்டான்.
"வெய்ட்" இடது கையை அமர்த்தினாள்.
அவனுக்கு குழப்பம் அதிகமானது. "என்னாச்சு? "
"ப்ளீஸ் வெய்ட்" அவனுக்கு மட்டும் கேட்கும்படி சன்னமாகத்தான் பேசினாள்.
"நான் போயிட்டு அப்பறம் வரவா?"
"இரு.. போகாத" அதே கையமர்த்தல்.
அவன் பைக்கை இன்னும் கொஞ்சம் முன்னால் நகர்த்திப் போய் தெருவின் ஓரமாக நிறுத்தினான். பைக் சாவியை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டபடி இறங்கி, மொபைலை எடுத்தான். வனஜாவுக்கு கால் செய்தான். அவள் உடனே எடுத்தாள்.
"சொல்லுப்பா?"
"என்னடி பண்றது?"
"ஒரு டூ மினிட்ஸ் வெய்ட் பண்ணு"
"ஏய்.. இது எனக்கு பழக்கமில்லாத ஏரியா. யாராவது பாத்தா ஏதாவது நினைக்க மாட்டாங்களா?"
"சரி இரு வரேன்"
"ஏன்.. என்ன பிரச்சனை இப்ப?"
"வரேன் இரு.. போயிடாத"
"ஓகே "
அவளை எதிர் பார்த்து நின்றான். அவள் உடனே வந்து கதவைத் திறக்கவில்லை. இரண்டு நிமிடங்கள் கழித்து மெதுவாகத்தான் வந்து கதவைத் திறந்தாள். வெளியே வரவில்லை. தலையை மட்டும் வெளியே நீட்டி பைக்கைப் பார்த்தாள். பின் "வா" என்று அழைத்தாள்.
"வண்டி இங்கயே நிக்கட்டுமா?"
"அதான் யோசிக்கறேன்" அவள் மூக்கு நுனியை இடது கை விரலால் வருடிச் சிரித்தாள்.
"எடுத்துரவா?"
"எடுத்து? எங்க கொண்டு போய் நிறுத்துவ?"
"கொஞ்சம் தள்ளி.. எங்காவது"
"ரிஸ்க் இல்லையா?"
"இங்க நிக்கறதுதான் ரிஸ்க்"
"சரி... எவ்ளோ நேரம் ஆகும்"
"டூ மினிட்ஸ்ல கொண்டு போய் பார்க் பண்ணிட்டு வந்துருவேன்"
"அதில்லப்பா.."
''பின்ன ?"
"என் வீட்ல நீ எவ்ளோ நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவ? அஞ்சு நிமிசத்துல போயிடுவியா?"
"அஞ்சு நிமிசமா?"
"ம்ம்.."
''ஏய்.. அதுல என்ன பண்ணிர முடியும்?"
"அது உன் ப்ராப்ளம். எனக்கு அவ்ளோதான் டைம். அதுக்கு மேலானா நான் மாட்டிப்பேன்"
"என்ன வனு.."
"நிரு.. நான்தான் போன்லயே சொன்னேன்ல.."
அவளை கொஞ்சம் முறைத்துப் பார்த்தான். அவள் மீது கோபம் வந்தது. 'ஆனால் பாவி முண்டை அழகாயிருக்கிறாளே. மொத்த அழகையும் கண்ல காட்டி கொல்றாளே? கோபிப்பதால் லாபமில்லை. வழிக்கு வராவிட்டால்கூட போடி வெண்ணையென்று விட்டு விடலாம். இவள் வழிக்கும் வந்து வலையிலும் விழுந்து விட்டாள். இப்போது விட முடியாது. சில நாள் பழக்கம்தான். செக்ஸ் சாட் செய்து வீடியோவில் அந்தரங்கம் காட்டுவதுவரை வந்தாகிவிட்டது. மிக விரைவாகவே'
"என்ன நிரு.. என் நிலமையை நீ புரிஞ்சுக்க மாட்டியா. எனக்கு இது எவ்ளோ பெரிய ரிஸ்க்கு தெரியுமா? மாட்டினேன்னு வெய்.. என் லைப்பே போச்சு" அவன் கோபப் பார்வையைப் புரிந்து கொண்டதைப்போல குரலை வெகுவாகத் தணித்துப் பேசினாள்.
அந்த குரலின் குழைவு அவன் கோபத்தை இல்லாமலாக்கியது. "சரி.. இப்ப நான் என்ன பண்றது?"
"பணம் கொண்டு வந்துருக்கேல்ல?"
"ம்ம்.."
"ஓகே. உனக்காக ஒரு டென் மினிட்ஸ் தரேன். அவ்ளோதான் என்னால பண்ண முடியும். அதுக்கு மேல என்னை கோவிச்சுக்காதே.. என்னோட சுட்சுவேஷனையும் நீ புரிஞ்சிக்கணும்"
"ஓகே. பத்து நிமிசம்னா பைக் இங்க நின்னா ஓகேவா?"
"ம்கூம்.. அது பிரச்சனை.."
"அப்ப இரு.. மறைவா கொண்டு போய் போட்டுட்டு வரேன்"
கை நீட்டி "இப்படி போ. அங்க ஒரு சின்ன கோயிலும் மாமரமும் இருக்கும். அந்த மரத்துக்கு கீழ நிறுத்திட்டு வா. யாரும் கண்டுக்க மாட்டாங்க" என்றாள்.
"சரி.." வண்டியை எடுத்துப் போனான்.
அவன் கண்ணிலிருந்து மறைந்ததும் போனில் ராகவிக்கு அழைத்தாள்.
"ஏன்டி?"
"வந்துட்டாண்டி"
"எப்போ?"
"இப்பதான். பைக்க மறைவா நிறுத்த போயிருக்கான். இப்ப வந்துருவான்"
"பணம் கொண்டு வந்துருக்கானா?"
"ம்ம்.. கொண்டு வந்துருக்கான். இன்னும் நான் வாங்கல"
"அவன்கூடயே நேரா பேங்க்லபோய் கட்டிட்டு வந்துரு"
"அயே.. அவன்கூட எப்படிடி போக முடியும். நான் ஆட்டோலயே போயிக்கறேன். இப்ப என் பிரச்சனை அதில்ல.."
"ம்ம்?"
"அவனை எப்படி சமாளிச்சு அனுப்ப போறேன்றதுதான்"
"எப்படி சமாளிக்க போறே?"
"வேணுங்கறான். நான் ஓகே சொன்னதுனாலதான் பணமே கொண்டு வந்துருக்கான்"
"அப்ப படு"
"ஏய்.. பணத்தை வாங்கிட்டு ஒடனே படுத்தா அனு வேசித்தனமா இருக்காது"
"அப்ப ஒன் அவர் கழிச்சோ ஒரு மாசம் கழிச்சோ ஒரு வருசம் கழிச்சோ படு. உனக்கு பத்தினிங்கற பட்டம் குடுப்பாங்க. அதை கொண்டு போய் பேங்க்ல வெச்சு உன் நகையை திருப்பிக்கோ.."
"ஏத்தக்கூ.......திடி உனக்கு?"
"பின்ன.. பேசறா பாரு கண்ட்ரோல்லி. அவன் கூட பழகி அவனை மடக்குனதே அதுக்காகத்தான். இதுல வேற ஓவர் தங்கா சீன் போடுற"
"மூடிட்டு வெய். இப்ப நான் நல்ல மூடுல இருக்கேன். அதை கெடுக்காத"
"ம்ம்.. நான் தெங்க போறேன். என்னை எடைஞ்சல் பண்ணாதேங்கற? மனசு கோணாமா நடந்துக்கோடி. அப்பதான் நாளை பின்ன மறுபடியும் உதவின்னா செய்வான்"
"எங்களுக்கு தெரியும். மூடிட்டு வெய்" என்று சிரித்தபடி காலை கட் பண்ணினாள் வனஜா.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக