வெள்ளி, 26 ஜூலை, 2019

மகிழ் வதனி -3

''உஷ்.. சூ..!! என்ன இளவரசே.. இது..? விடுங்கள்.. யாராவது வரக்கூடும்..!!'' மெல்லிய சிணுங்கலுடன்.. அவளது அழகிய சுழியுடன் இருந்த  நாபிக் கமலத்தை வருடிய என் விரல்களை  அங்கிருந்து அப்புறப் படுத்தினாள் மகிழ்வதனி.

''யார்.. வருவார்கள்..?''

நிலவுப் பேரொளியில் அவள் பூ மேனி.. பொன்னில் வார்த்த.. பொற்சிலையென பிரகாசிக்க.. அவள் மீது கொண்ட காதலால்.. நான் உன்மத்தம் கொண்டிருந்தேன். என் திருமேனியால்.. அவள் பூ மேனியை.. மேவிப் புணர்ந்திட.. என் ஆண்மை ஏக்கம் கொண்டிருந்தது.

''யார் வேண்டுமானாலும் வருவார்கள்.. !! ஏன்.. முதலில் உங்கள் தங்கைதான்.. என்னைத் தேடிக் கொண்டு வருவாள்..!! உங்களை விடவும்.. உங்கள் தங்கை என்னை அதிகம் விரும்புகிறாள்..!! என்னை விட்டு ஒரு நொடி கூட பிரிந்து இருப்பதில்லை..!! நல்ல வேளை... அவள் ஒரு பெண்ணாக பிறந்தாள். அவளும் தங்களைப் போல ஒரு  ஆணாகப் பிறந்திருந்தால்.. என்னாவது என் நிலமை..!!'' என்று புன்னகைத்தாள்.

அவளது கிள்ளை மொழி.. சிலேடைப் பேச்சில் இருவரும் நகைத்தோம். அந்த நகைப்பின் இடையில் நான் .. அவளை அணைக்கத் தவறவில்லை..!

''என்னாகும்.. உன் நிலமை..?? ஒரே அரண்மனையில்.. இரண்டு இளவரசர்களுடன்...'' நான் முடிக்கும் முன்.....

''அய்யோ... ச்சீய்..!! என்ன உளறுகிறீர்கள்..?'' என்றாள்.  தட்டென தன் உடம்பை விறைத்தது.

'' ஏன்.. என்ன உளறி விட்டேன் இப்போது..? ஒரே அரண்மனையில் இரண்டு இளவரசர்களுடன்.. நீ...''

''ம்..ம்ம்.. நான்..??'' என் முகம் ஏறிட்டாள்.

''ஒரு இளவரசனை நீ காதலனாகவும்.. இன்னோர் இளவரசனை.. மகனாகவும் பாவிக்கலாமே.. என்று சொல்ல வந்தேன்..! அது ஒரு குற்றமா..??'' என் ஒரு கரத்தை விம்மியிருக்கும்  அவளின் மலர்க் கொங்கை மீது... மென்மையாகப் பட  வைத்தேன்.

''போங்கள்.. பேச்சிலும் வல்லவர்தான் நீங்கள்..! நான் போகிறேன்..!!'' என் கரத்தை நகர்த்தி விட்டு.. என்னிடமிருந்து போலிக் கோபத்துடன் விலக முற்பட்டாள்.

''காதலுக்கு அழகு.. விலகி விலகிப் போவதல்ல.. என் கண்மணியே..! இணை பிரியாத அன்றில்களாக எப்போதும்.....'' சட்டென அவள் கரங்களை எடுத்து என் முகத்தில் பதித்தேன்.

''நீங்கள் மோசக்காரர்தான்..!! வாய்ப் பேச்சில்.. மிகவும் வல்லவர்.. என்பது நன்றாக தெரிகிறது..!! விடுங்கள் என்னை.. நான் போகிறேன்..!!'' அவள் சிணுங்கல் அதிகமானது.

''ஆஹா.. இதைச் சொல்லிப் போகத்தான் திரும்பி வந்தாயோ.. தேவி..??'' அவளது வலக் கரத்தை என் உதட்டில் பதித்து.. அதில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

''நீங்கள் குறும்பு செய்யாவிட்டால்.... உங்களுடனேயே இருக்கத்தான் விரும்புகிறேன்..! ஆனால்.. தாங்கள்தான்... நான் கொஞ்சம் ஏமாந்தாலும்...'' என் முத்தம் அவள் பெண்மைக்குள்ளும்.. அதிர்வலைகளைக் கிளப்பும்.

''சரி.. சரி.. உன்னிடம் இப்போது நான் குறும்பு ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை.. என்று வாக்குறுதி அளிக்கிறேன்.. போதுமா..?'' என நான் சொன்னேன்.

''இப்போது என்றால்..??''

''பொல்லாத சந்தேகம்..? இப்போது என்றால்... இந்த இடத்தில்.. இங்கே... இந்த நொடியில்... என்று பொருள்..!!"

" அதாவது.. நாம் இங்கிருந்து போகும்வரை..??''

மிகவும் சமயோஜிதமாகத்தான் இருக்கிறாள் கள்ளி..! ஆனால் அந்தக் கள்ளியையும் கவிழ்ப்பவன்தானே.. கள்வன்..!!

''சரி..அப்படியே ஆகட்டும்..!!''

''அய்யோடி.. இப்போதுதான்.. என் நெஞ்சுக்கு நிம்மதி..!!'' என தன் மார்பில் கை வைத்துச் சொன்னாள்.

''எங்கே.. அந்த நெஞ்சை நானும்.. சற்று...'' என் கையை அவள் கொங்கைமீது வைக்க முயல.. தட்டென என் கரத்தைத் தட்டி விட்டாள்.

''ஹ்ம்ம்.. என்ன ஒரு பொல்லாத்தனம்..? ச்சி.. தங்களைக் காண வரும்போதெல்லாம்.. எப்போதும் என்னுடன் மெய்க்காவல் படையை வைத்துக் கொள்ள வேண்டும்..! அப்போதான்.. தாங்கள் ஒழுக்கமானவராக இருப்பீர்களா..!!''

''மெய்க் காவல் படையை துணைக்கு வைத்துக் கொண்டு புரியும் செயல் காதல் ஆகாது.. என் கட்டிக் கரும்பே..!!'' என நான் அவளைக் கொஞ்ச முயன்ற நேரம்..... மகிழ்வதனி சொன்னது போல... என் தங்கை மகிழ்வதனியைத் தேடிக் கொண்டு மேன்மாடத்திற்கு வந்து விட்டாள்..!!

''இரண்டு பேரும் இங்கே என்ன செய்கிறீர்கள்.. அண்ணா..?'' என் தங்கை கேட்க... மகிழ்வதனி முந்திக் கொண்டு சொன்னாள்.

''உன் அண்ணா.. தனிமையை நாடி வந்து.. அமைதியை விரும்புகிறாராம்..! விழா மண்டபத்து கொண்டாட்டங்களில் அவர் மனம் லயிக்கவில்லையாம்..! அதோ தெரிகிறதே.. தூரத்து நிலா.. அதைக் கண்டு அவரது மனம் ஆனந்தமடைகிறதாம்..! அதுதான்... நானும் அவர் மோன லயத்தைக் களைக்க முயன்று கொண்டிருந்தேன்..! நல்லவேளை.. நீ இங்கு வந்தாய்.. எனக்குத் துணையாக..!''

'' ஆம்.. தேவி..! என் அண்ணாவுக்கு.. இளம்பிராயம் முதலே.. அந்த நிலா மீது ஏனோ.. அவ்வளவு காதல்..!! நிலா உதயமாகும் நேரம் எல்லாம்.. என் அண்ணா.. மேன் மாடத்தில்தான் தனித்திருப்பார்..!! அந்த நேரத்தில் அவரை யார் தொந்தரவு செய்தாலும்.. அவருக்கு பிடிக்காது..!!'' என.. தன் பங்குக்கு.. என்னைப் பற்றித் தம்பட்டம் அடித்தாள் என் தங்கை.. அலைக்குமரி..!!

இப்படி இரண்டு வாயாடிப் பெண்கள் இருக்குமிடத்தில்.. எந்த ஆண் மகனுக்குத்தான்.. காதல் உண்ர்வு தழைத்தோங்கும்..??

அதன்பிறகு.. நான் அதிகம் பேசாமல் அமைதியை கடை பிடித்தேன்.  மகிழ்வதனியின்.. மேனி அழகை.. நிலவொளியில் என்னால் ரசிக்க மட்டுமே முடிந்தது..!!

இரவு....!! 

அரண்மனை நந்தவனத்தில் நான் தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். பலவகை மலர்களும்.. இரவில் பூத்துக் குலுங்க.. மலர்களின் சுகந்த மணத்தில் என் மனம் மயங்கியிருந்தது. இளந் தென்றலின்.. இதமான தாலாட்டில் என் மேனி சிலிர்த்துக் கொண்டிருந்தது..! வானத்து நிலவு இப்போது நடுவானில் இருந்தது..!

நிலா பெரிய வட்டமாக இல்லை.. இப்போது..! உதயமான போது இருந்ததிலிருந்து.. பாதி நிலவு இளைத்து விட்டது போல.. சின்ன வட்டமாகக் காணப்பட்டது..! அதில் களங்கமும் இப்போது சேர்ந்து கொண்டிருந்தது..! தூரத்தில் தாரகைகள் எல்லாம்.. அழகழகாய் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன..!!

சிறிது நேர உலாவலுக்குப் பின்.. பனித்துளி படர்ந்த.. நுனிப்புல்மீது.. உட்கார்ந்து.. கரங்களால் தடவிப் பார்த்து.. உள்ளங்கையில் படர்ந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு.. மெதுவாகப் பின்னால் சாய்ந்து மல்லாந்து படுத்தேன்.!

ஒரு வித மோன லயிப்பில்.. வானத்தையும்.. அதனடியில் காணப்படும்.. வான மண்டலக் காட்சிகளையும்.. ரசித்துக் கொண்டிருந்த என்மேல்.. திடுமென எதுவோ ஒன்று வந்து விழுந்தது..!

'என்ன அது..?' திடுக்கிட்டு.. பின்.. நிலவொளியில் தெரிந்த அதைக் கையிலெடுத்தேன். அது ஒரு பூச்செண்டு..!!

'ஆ... இது எப்படி.. என்மேல்..? யார்..? எங்கிருந்து..?' படுத்தவாக்கிலேயே.. சுற்றிலும் என் பார்வையை ஓட்டினேன். சற்றுத் தள்ளி.. பூச்செடி மறைவில் இருந்து.. அந்த மெலிதான அசைவு தெரிந்தது..! கூடவே.. நந்தவனப் பூக்களின் வாசணை மிகுந்த நறுமணங்களையும் கடந்து.. வந்த.. அந்த புனுகு பூனை வாசணை...?? அது.. என் அன்புக்குரியவளின்.. பூ மேனி வாசணையல்லவா..!!

மகிழ்வதனி.. என்னைக் காண வந்திருக்கிறாள் என்கிற.. உணர்வே.. என்னை மிகவும் களிப்படையச் செய்தது.! எதையும் நான் அறியாதவன் போல.. மீண்டும் மல்லாந்து படுத்து.. வானத்தை நோக்கினேன். சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு பூச்செண்டு காற்றில் பறந்து வந்து என் மேல் விழுந்தது. அதை எடுத்து முகர்ந்தவாறு..

''விளையாடியது போதும்..!! மரியாதையாக என்னிடம் வந்து விடு.. மோகினிப் பெண்ணே..!! நீ யாருடன் விளையாடுகிறாய்.. என்று தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறாய்..!!'' என்றேன்.

செடி மறைவில் இருந்து.. 'க்ளுக் ' கென அவளது சிருங்காரச் சிரிப்பொலி கேட்டது.
''யாருடன் விளையாடுகிறதாம்.. இந்த மோகினிப் பெண்..??''

''தெரிந்து கொள்ள ஆவலா.. மோகினியே..?''

''ஆமாம்..!!''

''சரி.. கேட்டுக்கொள்..! நான் உதய சந்திரன்.. என்.. உயிரில் கலந்த.. அன்புக் காதலியின் பெயர் மகிழ்வதனி..!! மகிழ்வதனி என்கிற பெயரைக் கேட்டு.. அவளை நீ.. மெல்லினம் படைத்தவள் என்று எண்ணி விடாதே..!! அவள் பார்க்கத்தான்.. பூ போல இருப்பாள்..!! பழக்கத்தில் அவள் ஒரு ராட்சசி.. மனதைக் கொள்ளை கொண்டு விடுவாள்..!! பேச்சில் அவள் ஒரு அரக்கி.. மனதை நார் நாராக கிழித்து விடுவாள்..!! கோபத்தில அவள் ஒரு பத்ரகாளி.. ருத்ரதாண்டவமே ஆடி விடுவாள்..!! அகில உலகத்தையும் காத்தருளும்.. உமை மணாளனாகிய.. அந்த சிவ பெருமானே.. அவளைக் கண்டால் அஞ்சி விடுவார்.. அவ்வளவு கோபக்காரி அவள்..!! அவளது ஆருயிர்க் காதலனான.. என்னுடன் சாதாரன ஒரு இரவு மோகினிப்பெண் விளையாடுகிறாள்  என்று தெரிந்தால்... அவ்வளவுதான்.. உன் நிலமை..!!'' என நான்.. அளந்து விட்டேன்.

இப்படிச் சொன்னால் எந்தக் காதலிக்குத்தான் கோபம் வராது..? வந்தது...!!

தொடர்ந்து நான்கைந்து பூச்செண்டுகள் என்மேல் வேகமாக வந்து விழுந்த வண்ணமிருந்தது..!!

''இங்கிருந்து.. நீ கோபப்படாமல் போய்விடு மோகினிப் பிசாசே..! பொருமையில்தான் அவள் பூமாதேவி.. அவளுக்கு கோபம் என்ற ஒன்று வந்துவிட்டதோ..?? அவ்வளவுதான்..!! தரை தொடும் உன் பத்தடிக் கூந்தலில் ஒற்றை மயிர்கூட மிஞ்சாது..!! பிறகு மொட்டைத் தலையுடன் உலா வரும் உன்னை எவரும் சீந்தக் கூட மாட்டார்கள்..!! ஓடிவிடு இங்கிருந்து..!!'' என்றேன்.

அதற்கு மேலும்.. அவளால் பொருமை காக்க முடியவில்லை. செடி மறைவில் இருந்து.. வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு என்னிடம் வந்தாள்.! நான் கண்களை மூடிக்கொண்டு மேலும் சொன்னேன்.
''நான் இவ்வளவு சொல்லியும் கேட்காமல்.. என் அருகில் வேறு வந்து விட்டாயா..?? அப்படியானால்.. நீ மொட்டைத் தலை மோகினியாகத்தான் அலையயப் போகிறாய்..!! எதற்கும்.. உன்னை ஒருமுறை.. அழகிய மோகினித் தோற்றத்தில் பார்த்து விடுகிறேன்..! அதற்கு பிறகு.. உன்னைக் காணச் சகிக்காது..!! நீ அவ்வளவு கொடூரமாக இருப்பாய்..!!'' என்று என் மூடிய இமைகளைத் திறந்து பார்த்தேன்.

அப்போதுதான்.. அவளைப் பார்ப்பது போல.. சடக்கென எழுந்து உட்கார்ந்து..
''ஓஓ.. என் மகிழ்வதனியா..?? வா தேவி..!! இப்போதுதான்.. சற்று முன்.. இங்கு ஒரு மோகினிப் பிசாசு வந்து என் மீது மலர்ச்செண்டை வீசி விளையாடிக் கொண்டிருந்தது..! உன்னைப் பார்த்ததும் அது பறந்து ஓடி விட்டது போல் இருக்கிறது..!! ஏய்ய்.. மோகினிப் பிசாசே.. எங்கேயாவது இருக்கிறாயா..?? அப்படி எங்காவது ஒளிந்து கொண்டிருந்தால்.. ஓடிவிடு இங்கிருந்து..!! இதோ.. நான் சொன்ன.. என் இதய ராணி வந்து விட்டாள்..! அவள் கண்ணில் பட்டு விடாதே..!!'' என்றேன்.

''மோகினிப் பிசாசிடம் என்னைப் பற்றி ஏதோ சொன்னதாகச் சொன்னீர்களே..??'' என்னை நெருங்கி நின்றாள்.

''ஆமாம்..!! இப்படி  அமர்.. !!" புல் தரையில் தட்டினேன்.

''இருக்கட்டும்..!! அந்த மோகினி பிசாசிடம் என்ன சொன்னீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்..!!'' அவள் குரலில் உஷ்ணம்  தெரிந்தது.

நான் அவளை.. அன்னாந்து பார்த்து... வலது கரத்தின் ஒற்றை விரலை உயர்த்திச் சொன்னேன்.
''உண்மையைச் சொன்னேன்..!!''

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிலவொளியில் என்னை முறைத்தாள்.
''அது என்ன.. வலது கரத்தின் ஒற்றை விரலை உயர்த்தி... சுழற்றி...??''

''ஓ.. அதுவா..?? அது ஒன்றும் இல்லை.. மகிழ்வதனி..!! 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த' என்கிற ஒரு நடிகர்.. பல நூற்றாண்டுகளுக்குப் பின்.. ஒரு திரைப் படத்தில் இப்படித்தான்.. வலது கரத்தை உயர்த்தி... ஒற்றை விரலைச் சுழற்றி.. வசனம் பேசி.. ரசிகர்களை மகிழ்விப்பார் என்று.. இப்போதுதான் இங்கு.. மல்லாந்து படுத்துக் கொண்டு... வானத்தைப் பார்த்து.. வான சாஸ்திரம் சொல்வதை யோக நிஷ்டையில் உணர்ந்து கொண்டிருந்தேன்..!!'' என்றேன்..!!

அவள் எவ்வளவு கடுப்பாகியிருந்தால்... 'ணங்ங்..' கென்று என் மண்டையில் ஒரு கொட்டு வைத்திருப்பாள் என்று.. பார்த்துக் கொள்ளுங்களேன்.. !! 

வியாழன், 18 ஜூலை, 2019

நீ இல்லா நேரம் -2

மறுநாள்.. !!  

சௌமியா  காபி போட்டு எடுத்துக்கொண்டு போனபோது.. அவளது அண்ணன் பூந்துகிலன் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள் ஷாலினி.. !!

ஷாலினி.. பக்கத்து வீட்டு பெண்களில் ஒருத்தி..! அவளது அண்ணனுக்கு சிறுவயது தோழியும் கூட..!!

காபியை அவர்களுக்கு கொடுத்து விட்டு.. எதிர் சோபாவில் உட்கார்ந்தாள் சௌமி. 

சாதாரணமாக ஷாலினியின் பேச்சுக்கள் அப்படி ஒன்றும் ரசிக்கும்படியாக இருக்காது என்பது சௌமியின் அபிப்ராயம்..!! 

ஷாலினி உதட்டில் புன்னகை தவழ.. நுனி நாக்கு ஆங்கிலத்தை சற்று அலட்டலாக பேசுவாள்..!! 

அந்தவிதமான அலட்டலான பேச்சுக்களில் எல்லாம் சௌமிக்கு எப்போதுமே உடன்பாடு இருக்காது..!!

தன் அண்ணனுடன் பேசும்  ஷாலினியின் தன்முனைப்பான பேச்சைக் கேட்டு.. சௌமி சட்டென வாய்விட்டு சிரித்து விட்டாள்..!!

 அவளது கேலிச் சிரிப்பை பார்த்து.. தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள் ஷாலினி.
''என்ன சௌமி.. திடீர் சிரிப்பு..??''

வெறுமனே தலையை அட்டிச் சிரித்தாள்.
''நீ பேசு..''

பூந்துகிலும் கேட்டான்.
''இப்ப எதுக்கு சிரிச்ச நீ..?? ஷாலு அப்ப்படி ஒண்ணும் நீ சிரிக்கற மாதிரி பேசலயே..??''

அவர்களது பேச்சுக்கு தடையாக இருக்க சௌமி விரும்பவில்லை. தலையை ஆட்டிக் கொண்டே.. எழுந்தாள்..!

''நீங்க பேசுங்க..!!'' என அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.

''சௌமிய புரிஞ்சுக்கவே முடியாது..! நிருதிதான் பாவம்..!!'' தன் அண்ணனிடம் ஷாலினி சொல்வது கேட்டது..!!

தன் அறைக்குள் போய்.. கட்டிலில் உட்கார்ந்தாள்.

 செய்வதற்கும் வேலைகள் ஒன்றும் இல்லை. கட்டிலில் கால் நீட்டிப் படுத்து கண்களை மூடினாள்..!!

 அவளது இளம் மார்பகங்கள் விம்மியெழ.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்..!!

 சில நொடிகளில் அவளது எண்ணச் சிதறல்களை முழுமையக்கி.. அவளது கவனத்தை.. அவள் உடம்பின்மீது நிலை கொள்ளச் செய்தாள்..!!

அவளின் இதயம் துடிப்பதை.. துள்ளியமாக கவனித்தாள்..!!

 அப்படியே எந்தவித எண்ணங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல்.. அவளது இதயம் துடிக்கும்.. வெறும் உணர்வுடன் கலந்து போனாள்..!!

 எத்தனை நேரம் அப்படி இருந்தாள் என்று தெரியவில்லை.. !!

''சௌமி..!!'' கௌரியின் குரல் கேட்டு கலைந்தாள். கண்களை திறந்து கௌரியை பார்த்தாள்.

''தூங்கிட்டிருந்தியா.. ஸாரி..'' பக்கத்தில் வந்தாள் கௌரி.

சௌமி எழுந்து உட்கார்ந்தாள்.
''தூங்கல.. 'சும்மா ' படுத்திட்டிருந்தேன்..! ஸ்ருதி..??''

''தூங்கிட்டிருக்கா..!! பக்கத்துல அம்மா இருக்கு..! உன்ன பாக்கலாம்னு வந்தேன்..!!''

''உக்காரு..''

''ஒரு சின்ன டவுட் சௌமி..'' கட்டிலில் உட்கார்ந்தாள் கௌரி.

''என்ன..??''

''கனவுகளுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா..??''

''ஒரு கோப்பை தேனீர்..!!'' சிரித்தாள் சௌமி.

''அது.. கனவா நெஜமான்னே.. எனக்கு புரியல...''

'' எதுவானாலும் அதை ஒதுக்கிரு..!! விழிச்சிக்கோ..!! அதான் அழகு..!!''

''ஆனா.. சௌமி.. இப்பவும் அது எனக்கு கனவா தோணல..''

'' ம்.. ம்ம்..!!''

''ஆனா.. அது நிஜமும் இல்ல..!!''

''கரெக்ட்...''

''அப்ப அது என்ன..??''

''எனக்கும் தெரியாது..!!''

''சரி.. சொல்றேன் கேளு..!! நேத்து மிட் நைட்டுக்கு மேல இருக்கும்.. எண்ணங்களை வேற நான் கவனிச்சிட்டு இருக்கேனா.. ஒரே கனவு மயமா இருக்கு. தூக்கம் கூட நிறைவா தோணல. படுத்து ஒரு பத்து நிமிசத்துல எழுந்துட்ட மாதிரி இருக்கு..! ஆனா.. காலைலதான் எந்திரிச்சுருக்கேன்..! என் கனவு என்னன்னா... நேத்து நைட்.. எங்க ரூம் புல்லா பிரைட் ஆகிருச்சு.. பகல் மாதிரியே.. அப்படி ஒரு பிரைட்னஸ்.. நான் கீழ படுத்துருக்கேன்.. ஆனா.. என்னை போலவே இன்னொரு கௌரி.. என் முன்னால நின்னுட்டு டான்ஸ் பண்றா.. என்னை நானே பாக்கறதுல எனக்கு ஏக பயம்..! அந்த பயத்தோடவே என் மனசுல ஒரு அசட்டு தைரியம்.. என்ன நடக்குதுனு பாக்கலாங்கற மாதிரி..!! அப்ப என் சுய உணர்வு எனக்கு நல்லாவே இருக்கு.. நான் பயப்படறது எனக்கு தெரியுது..! எனக்கு நானே தைரியம் சொல்லிக்கறேன்.! அப்பதான் என் முன்னால நிக்கற கௌரி டான்ஸ் பண்றா.. பண்ணிட்டே கீழ படுத்துருக்கற எனக்கு கை குடுக்கறா.. நானும் கை கொடுக்கறேன்.. ஆனா ரெண்டு பேரும் இணைய முடியல.. எனக்கு ரொம்ப பயமாகி நான் கத்திட்டேன்..!! அதுல படுத்துருக்கற கௌரியாதான் என்னை நான்  பீல் பண்ணேன்..!! பயத்துல சட்னு முழிச்சிட்டேன்..!! முழிச்சு பாத்தா.. ரூம் நார்மலாதான் இருக்கு.. சந்தர் என் பக்கத்துல சாதுவா படுத்து தூங்கிட்டிருக்காரு..!! இப்பவரை அதை என்னால ஒரு கனவா ஏத்துக்க முடியல..!! அதான் உன்ன கேக்க வந்தேன்..?? உனக்கு இந்த மாதிரி நடந்திருக்கா..??''

சிரித்தாள் சௌமி.
''நெறைய தடவை நடந்துருக்கு..!! இப்ப கூட சமயத்துல எப்பவாவது வரும்..!! ஆனா நான் அதுலாம் ஆராய்ச்சி பண்றதே இல்ல..!! உனக்கு மறுபடி அந்த மாதிரி மயக்க நிலை வரும்.. அதுல பயப்பட ஒன்னுமே இல்ல..!! உனக்குள்ள என்னமோ நடக்குதுனு நெனச்சிட்டு அப்படியே மறந்துரு அத..!!''

''ம்..ம்ம்.. சரி..!!''

''முடிஞ்சவரை கடந்த காலத்தை கை விட்டர்றது நல்லது..! அதாவது காலத்தை கடந்த நிலை..!! நிகழ்காலம் ஒன்னு மட்டும் நிஜம்..!! கடந்த காலம் ஒரு கனவு..!! எதிர் காலம் ஒரு கனவு..!! நிகழ் காலம் மட்டுமே நிஜம்..!! அத கூட... காலத்தோட அடிப்படைல இல்ல..!! உண்ர்வு நிலைலதான் நிஜம்..!! காலத்த கடந்த நிலைல என்னிக்கும் இருக்கறது நம்ம உணர்வுகள் மட்டும்தான்.. அதுதான் நிஜம்..!! அங்க காலமே கிடையாது..!! நீ புரிஞ்சிக்க வார்த்தை வேனும்ங்கறதால நிகழ்காலம் ன்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டியிருக்கு..!! அதெல்லாம் தர்க்க ரீதியான பிரச்சினைக்கு கொண்டு போகும்..!! ஸோ.. எல்லாத்தையும் ஒரு சாட்சியா மாத்திரம் மட்டும் நின்னு கவனிச்சு பாரு..!! காலமற்ற.. அந்த நிகழ்கால உணர்வு.. உனக்கும் கை வரலாம்..!!''  என்று விளக்கினாள் சௌமி.

''என்னால முடிஞ்சவரை.. நீ சொல்றதை ஃபாலோ பண்றேன்..!!'' சௌமியின் கையை பிடித்துக் கொண்டு சொன்னாள் கௌரி.

பூந்துகில் அறைக்குள் நுழைந்தான்.

''நீ ஏதேதோ பேசற சௌமி..! எனக்கு சுத்தமா ஒன்னும் புரியல..!!''

''நீ எப்ப வந்த..??'' கௌரி கேட்டாள்.

''நீ உள்ள வந்ததும் ஷாலினி போய்ட்டா.. சரி உங்க கூட பேசலாம்னு வந்தேன்..! நான் டிஸ்டர்ப்பா இருப்பனோன்னு.. நீங்க ரெண்டு பேரும் பேசறத கேட்டுட்டு.. அப்படியே நின்னுட்டேன்..!!''

சௌமி சிரித்தபடி தன் அண்ணனிடம் சொன்னாள்.
''இதெல்லாம் பைத்தியங்களோட சம்பாஷனை.. நீ காதுல வாங்கிக்காத..!!''

'' எது..??'' உள்ளே வந்து சேரில் உட்கார்ந்தான்.

''நாங்க பேசினது..!!''

''ம்கூம்..!! உன்ன பாத்தா அப்படி தெரியல..!! உன்கிட்ட ஏதோ ஒரு அற்புதம் நடந்துருக்கு.. ஆனா அது என்னன்னுதான் புரியல..!!''

'' வெரி சிம்பிள்.. நான் ஒரு பைத்தியம்ங்கறத இப்ப நான் உணர்ந்துட்டேன்..!!'' என்று  சிரித்தாள் சௌமி.

''உன் பேச்சு பைத்தியக்காரத் தனமானது இல்ல..''

கௌரி குறுக்கிட்டாள்.
''பூ.. ஒரு பைத்தியம் தன்னை பைத்தியம்னு உணர ஆரம்பிச்சிட்டா அது.. சுத்தமா தெளிஞ்சிருச்சுனு அர்த்தம்..!! நம்ம சௌமி இப்ப தெளிஞ்சவ..!! ஆனா நாம..?? நாமதான் ரொம்ப அறிவாளி.. ரொம்ப தெளிவானவங்கனு நினைச்சிட்டு இருக்கோம்..!! லாஜிக் புரியுதா..?? சௌமி நம்மள மாதிரி இல்ல..!!''

'' ஓ..ஓ..!!'' புரிந்து கொண்டதாய் வியப்பைக் காட்டினான் பூந்துகில்.
''என்னை நான் அறிவாளின்னில்ல நெனச்சிட்டு இருக்கேன்..!!''

''என்ன பண்ண.. நான்கூட இன்னும் அறிவாளிதான்..!!'' எனச் சிரித்தாள் கௌரி..!

சௌமி சிரித்தபடி மீண்டும் சொன்னாள்.
''நாம அறிவாளியா நடிச்சிட்டு இருக்கோம்ன்றத உணர்ந்துட்டா நமக்கு நல்லது..! அப்படி இல்லாம நாம நெஜமாவே அறிவாளிதான்னு உறுதியா நம்பினா.. அது ரொம்ப ஆபத்து..!! உண்மையான அறிவாளி தன்னோட முட்டாள்தனத்தையும் தெரிஞ்சு வெச்சிருப்பான்..! சமயத்துல அதை மதிக்கவும் செய்வான்..!! ஆனா முட்டாள் அப்படி இல்ல..! அவனோட முட்டாள்தனம் பத்தி அவனுக்கு எதுவும் தெரியாது.! எப்பவும் அவன் ஒரு அறிவாளின்னும்.. மத்தவங்களைவிட.. தான் உயர்ந்த மனுஷன்னும்.. உறுதியா நம்பிட்டிருப்பான்..!!''

''ஓ...!!''

''நாம எப்படி இருக்கோம்னு பாக்கறதுதான் சாட்சி..!! அப்படி இல்லாம.. நாம நல்லா படிச்சிருக்கோம்.. பட்டம்.. பேரு.. புகழ் எல்லாம் வாங்கிருக்கோம்னு.. மேதமையான அபிப்ராயத்துக்கு போய்டக் கூடாது..!!''

''எப்படி.. எப்படி..??''

''நாம எப்படி இருக்கோம்னு பாக்கறது அகநிலை..!! அதாவது நம் எண்ணங்கள்.. சிந்தனைகள்.. என்ன ரீதியா இருக்குனு பாக்கறது..!! உன் எண்ணங்கள் எப்படிவேனா இருக்கட்டும்.. நீ நல்லவனா இருக்கனும்னு அவசியமில்ல..! அத அப்படியே பாத்தா.. அது.. அகம்..!!"

"......."

" பணம்...வசதி.. பட்டம்.. படிப்பு.. பேரு.. புகழ் இது எல்லாம் புறநிலை..!! நாம அந்தஸ்தோட இருக்கறது நம்ம அறிவாளித்தனம் இல்ல..!! அறிவுங்கறது மெய்ப்பொருள் காண்பது..!! புற நிலைல அடையற.. மேதமைக்கும்.. அக நிலைல அடையற.. அறிவுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்ல..!! உண்மையான அறிவுன்றது அக நிழைல இருந்து தானே.. மலர்ந்து வரது.. ஒரு பூ மலர்றது மாதிரி..!! அதை வரவழைக்க முடியாது..!!''

''வரவழைக்க முடியாதுன்னா.. அப்பறம் எப்படி...நீ... இப்படி...??''

''நம்மோட இருப்பு நிலையே ஒரு பூ மாதிரி இயல்பு நிலைதான்..!! அத நம்ம நாட்டு சட்ட திட்டங்கள்.. சம்பிரதாய குல வழக்கங்கள்னு.. ஏகப்பட்ட திரைகள போட்டு மூடி வெச்சிருக்கோம்..!! அந்த திரைகள அகற்றினா போதும்..!! நம்ம அகநிலை இயல்பு நமக்கு புரிஞ்சுரும்..!!''

''ஓ..ஓ..!!''

''ஏதாவது புரிஞ்சுதா..??'' கௌரி கேட்டாள்.

''சரியா தெரியல..! பட் ரொம்ப நல்லா.. பேசறா..!! இந்த பேச்சு சும்மா வராது..! கிரேட்..!!'' என்று தன் தங்கையைப் பார்த்து வியந்து சொன்னான்  பூந்துகில்.

சௌமி சிரித்துக் கொண்டே மீண்டும் சொன்னாள்.
''ஒருத்தர இப்படி பாராட்டக் கூட.. ஒரு தகுதி வேனும் தெரியுமா..??''

இந்த இடத்தில் கேள்வியை சரியாக அமைக்க.. போதுமான வார்த்தைகள் இல்லை என்பது போல தோன்றியது அவளுக்கு.  வார்த்தை பற்றாக் குறையால்.. அவள் பேச்சின் அர்த்தம் மாற்றி புரிந்து கொள்ளப்படும் என்பதும் அவளுக்கு புரிந்தது..!!

அவள் நினைத்தது போலத்தான் நடந்தது..!

''ஏன்.. உன்ன பாராட்டற தகுதி எனக்கு இல்லையா..??'' என்று கேட்டான் பூந்துகில்.

''ஓ.. நீ எல்லாம் தெரிஞ்ச மேதை இல்ல..??'' கௌரி சிரித்தாள்.

''நான் மேதை இல்ல.. ஆனா நான் பாராட்டினதுல என்ன தப்பு..??'' பூந்துகில் கேட்க.. அதை விளக்கத் தெரியாமல் சௌமியை பார்த்தாள் கௌரி.

சௌமி உதட்டைப் பிதுக்கிப் புன்னகைத்தாள்..!!
''இதான் வார்த்தைகள்ள இருக்கற பிரச்சினை.. நாம ஒன்னு நெனைச்சு பேசினா.. அது வேற ஒரு பொருளை கொண்டு சேர்க்கும்..!!''

''இப்ப உன் அண்ணனுக்கு எப்படி புரிய வெக்கறது..??'' கௌரி கேட்டாள்.

''இங்க உதாரணம்தான் கை குடுக்கும்..!!'' என்றவள் மெல்லிய புன்னகையுடன் தன்  அண்ணனை பார்த்துக் கேட்டாள்.
''வானம் எல்லை இல்லாததுனு சொல்வாங்க இல்லையா..??''

''ம்ம்..??''

''அதை நம்பறியா..??''

யோசித்து சொன்னான்.
''ஆ.. நம்பறேன்.!!''

'' எப்படி..??''

''வானத்தோட எல்லைய இதுவரை யாருமே கண்டு பிடிச்சது இலலையே..??''

''அப்பறம் எப்படி வானத்துக்கு எல்லை இல்லேன்னு சொல்ல முடியும்..?? இது தர்க்கம்தான்..!! அவங்க சொல்றத யோசிக்காம  இருந்தா.. அப்படியே ஒப்புக்கற மாதிரிதான் இருக்கும்..!! ஆனா அத எப்படி உறுதி படுத்த முடியுது..??''

''என்னை குழப்பற சௌமி..??''

''திருத்திக்கோ.. நான் குழப்பல.. நீ குழம்பி போயிருக்க..!! உன் நிலையே குழப்பம்தான்..!! உனக்குள்ள நீ தெளிஞ்சிருந்தா.. நான் சொன்னப்பவே உனக்கு உண்மை புரிஞ்சிருக்கும்..!! இந்த உதாரனங்கள் எல்லாம் தேவை பட்டிருக்காது..!!''

பூந்துகில்.. குழப்பத்தில் தவித்த முகத்துடன் அவளையே பார்த்தான்.

 மெதுவாக எழுந்து அண்ணன் பக்கத்தில் போனாள் சௌமி..!!

''ரிலாக்ஸ் ப்ரோ..!! அது வேற உலகம்..!! அந்த பேச்சு வந்ததால அதை பேச வேண்டியதா போச்சு..!!'' சொல்லிக் கொண்டே அவன் தோளில் கை வைத்து மெல்லக் குனிந்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்..!

''எல்லாத்தையும்... எல்லாத்தையும் மறந்துட்டு.. நீ.. நீயா இருக்க பாரு..!! உன் தங்கையோட ஒரு சின்ன அறிவுரை.. முடிஞ்சவரை.. உன்னோட மேதமையை வெளிப்படுத்தற மாதிரி பேசாம.. இயல்பா.. எதார்த்தமா.. பேசப்பாரு.. உனக்கான மாற்றம் உனக்குள்ள நிகழ ஆரம்பிக்கும்..!!''

விரும்பிப் படித்தவை.. !!