செவ்வாய், 17 அக்டோபர், 2023

உன்னைச் சுடுமோ -3

 எட்டரை மணிக்கு மேல் குளித்து ப்ரெஷ்ஷாக நிருதியின் வீட்டுக்கு வந்தாள் கிருத்திகா. 


நீலக் கலர் சுடிதாரும், பட்டியாலா பேண்ட்டும் போட்டிருந்தாள். மார்பில் துப்பட்டா போட்டு மறைத்திருந்தாள். தலைக்கு குளித்திருந்தாள். அவளின் ஈரத் தலைமுடி முதுகில் பரந்து விரிந்திருந்தது. 


அப்படி அவளைப் பார்க்க அம்சமாக இருந்தாள். அவனும் குளித்து சாப்பிட்டு முடித்திருந்தான்.. !!


“ஹாய்.. வா"


"சாப்பிட்டாச்சா?”


“ஆச்சுப்பா நீ?”


“ம்ம்.. சாப்பிட்டேன். அக்கா பசங்கள்ளாம் போயாச்சா?”


"போய்ட்டாங்க..” அவளைப் பார்த்து ரசித்து “கலக்ற போலயே..?”


“என்னது..?”


“உன் ட்ரஸ்.. அட்டகாசமா இருக்கு”


"இதுவா?"


"ஆமா.."


"நீங்கதான் மொத தடவையா இப்படி சொல்றீங்க. வேற யாரும் சொன்னதில்ல"


"எனக்கு தோணினதை சொல்லிருவேன். ஒவ்வொருத்தர் ரசனை ஒவ்வொரு மாதிரி இருக்குமில்லையா?"


“ஆமா.. தேங்க்ஸ்” லேசான வெட்கத்தில் அவள் மூக்கு விடைத்தது. 


உடையை முடியை எல்லாம் சரி செய்து, முகத்தை தடவிக் கொண்டாள். 

"என்ன நம்ம ஃபிகருதான் சரியில்ல" 


"ஏன்.. இந்த ஃபிகருக்கு என்ன?"


"தெரியலயே.. ஒருத்தனும் லவ் பண்ண மாட்டேங்கறான்" என்று சிரித்தாள். 


"அப்படியா..?"


"ஆமா.. நம்ம மொகரை ஒருத்தனுக்கும் புடிக்கல போல.."


"அப்படி இல்ல.. உனக்கேத்த ஆளை இன்னும் நீ பாக்காம இருப்பியா இருக்கும்"


"க்கும்.. அப்படி ஒருத்தன தேடி அலையவா முடியும்? இருக்குற எவனும் நம்மள ரசிக்க மாட்டேங்கறான்"


சிரித்தான்.  "உனக்கெல்லாம் ஒரு குறையும் இல்ல.. ஆள் நல்லாதான் இருக்க"


"க்கும்.. நீங்கதான் சொல்லிக்கணும்"


“ஏய்.. நெஜமா செம்ம ஃபிகர்ப்பா நீ?”


"சும்மா பொய் சொல்லாதிங்க.. சப்ப ஃபிகர்னு சொல்வாங்களே.. அந்த ரகமா இருக்கும்"


"வெறும் ஃபிகர் மட்டும் ஒருத்தனை ஈர்த்தர்றது இல்ல.. மொத்த ஒடம்போட அழகும் சேந்துதான் ஈர்க்கும். உனக்கு அதெல்லாம் பக்காவா இருக்கு"


சட்டென,  “ஓஓ.. என்ன.. என்னை சைட்டடிக்கறீங்களாக்கும்?” எனக் கேட்டாள். 


“ஆமானுதான் வெச்சுக்கயேன்” யோசிக்காமல் சொன்னான்.


“ஹை.. இருங்க. அக்கா வரட்டும் சொல்றேன்”.


“அவளே.. அவளை பல பேரு சைட்டடிக்கறதை வந்து என்கிட்ட சொல்லிட்டிருப்பா..”


"அதெல்லாமா உங்ககிட்ட வந்து சொல்லுவாங்க?" லேசான வியப்புடன் அவனைப் பார்த்தாள்.


"இதிலென்ன இருக்கு. இதெல்லாம் சாதாரணம்தானே?"


“ஆஹா.. ஓகே.. நாம போலாமா.. ??”


“நான் ரெடி.. நீதான் இன்னும் தலைகூட சீவல போலருக்கு..??”


“தலைக்கு குளிச்சேன்.. கொஞ்சம் முடி காயட்டும்னு இப்படி விட்டிருக்கேன்”


அவளை ரசித்துப் பார்த்தான். அவள் கண்களும் கன்னங்களும் பளபளத்தன. அவளிடம் இளமைக்கான ஈர்ப்பு நன்றாகவே இருந்தது.


"அலோ.. போதும்" சட்டென சிரித்தாள்.


"என்ன?"


"ஓவரா சைட்டடிக்காதிங்க. அப்பறம் எனக்கு முகத்துல பரு வந்துரும்"


"ஹாஹா.. பருவா?"


"ஆமா.. கண்ணு பொல்லாதது"


"அதுசரி.. அப்ப முகப்பரு வரதுக்கு சைட்டடிக்கறதுதான் காரணமா?"


"சைட் மட்டும் இல்ல"


"பின்ன?"


"வேற.." சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள்.


"ஒரு பொண்ணு அழகாருந்தா.. சைட்டடிக்கறது இயல்புதான?"


"அது அழகாருந்தா.."


"அப்ப நீ அழகா இல்லையா?"


"அவ்ளோ அழகில்ல.." கண்ணாடி முன்னால் போய் நின்று தன்னையே பார்த்துக் கொண்டாள்.


அவளுக்கு மார்புகள் எடுப்பானவைதான். அவைகள் பலரது கண்களின் உறுத்தலுக்கு ஆளாவதை அவளால் மறுக்க முடியாது. 


துப்பாட்டாவை இழுத்து அவைகளை மூடினாள். அப்படியும் அவளின் இளமை வீக்கங்களின் மேடு எடுப்பாகத்தான் தெரிந்தது.. !!


“நீ மோமசெல்லாம் இல்லை. சூப்பர் ஃபிகர்தான். ஆனா ஏன் இன்னும் உன்னை எவனும் கொத்திட்டு போகாம விட்டு வெச்சிருக்கான்?” எனக் கேட்டான் நிருதி.


“சும்மாருங்க..” வெட்கப்பட்டு திரும்பினாள். "சூப்பர் ஃபிகர் இல்ல.. நம்மல்லாம் சுமார் மூஞ்சு ஃபிகரு"


"உன்னை பத்தி நீயே ஒரு முடிவு பண்ணி வெச்சுருக்க போலயே?"


"ஆமா.. நம்மளை ஒருத்தனும் சீண்டலேனா அப்பவே தெரிஞ்சுக்க வேண்டாமா?"


"யார் சொன்னது உன்னை சீண்டலேனு? நான்கூட உன்னை பாக்கறப்ப எல்லாம் ரசிச்சு.. சைட்டடிக்கத்தான் செய்யறேன்"


"அலோ.. சும்மா பொய் சொல்லாதிங்க"


“அட.. நெஜமாத்தான்”


“உங்கள..” என்று அவனை சீப்பால் அடிக்க வந்தாள். "என்னைவே சைட்டடிக்கறீங்களா?"


சட்டென அவள் கையைப் பிடித்தான். அவள் கை குளிர்ச்சியாக இருந்தது.


 ஆனால் அவன் கை சூடாக இருப்பதை உணர்ந்தாள் கிருத்திகா.

“என்னது உங்க கை இப்படி சுடுது?”


“நைட் தூங்கல இல்ல?”


“சூடாருக்கு” கையை விடுவித்துக் கொண்டாள்.


“ஆமா.. உன் ஏஜ் என்ன?”


”பொண்ணுங்ககிட்ட வயசை கேக்க கூடாது”


“ஹா.. ம்ம்.. இருபத்தி அஞ்சு வயசா?”


“நோ.. ட்வொண்ட்டி ஃபோர்” நாக்கைச் சுழற்றிச் சொன்னாள்.


“எனக்கு தெரிஞ்சே ரெண்டு மூணு வருஷமா உனக்கு வரன் பாத்துட்டுதான் இருக்காங்க”


“எனக்கு ஜாதகம் பாத்ததுல லேட் மேரேஜ்தான் நல்லதாம்”


“லேட் மேரேஜ்னா?”


“இருபத்தி எட்டு வயசுக்கு மேல பண்ணனுமாம். அப்படி இல்லாம அவசரப்பட்டு அதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணா ரெண்டு கல்யாணமாம்”


“வாவ்.. ரெண்டு கல்யாணமா?”


"ஆமா.. இதுல வாவ் சொல்ல என்ன இருக்கு..?”


“நான்லாம் பாரு ஒண்ண கட்டிட்டு… ரொம்ப கொடுமை..”


“போங்க.. எனக்கும் இப்ப மேரேஜ் பண்ணிக்க இஷ்டமே இல்ல” விலகி எட்டி மீண்டும் கண்ணாடி பார்த்தாள். இடது கையை பின்னால் கொண்டு போய் கூந்தலை அள்ளி எடுத்து ஈரத்தை உதறி விட்டாள்.


“ஏன்?” அவள் பின் பக்கத்தை ரசித்தபடி கேட்டான்.


”மேரேஜ்க்கு முன்னதான் இந்த ஜாலி எல்லாம். மேரேஜாகிட்டா அவ்ளோதான்.. எதுக்கோ ஆசைப்பட்டு என்னமோ நடந்த மாதிரி ஆகிடும்” தலையைச் சாய்த்து அவனைப் பார்த்துச் சொன்னாள்.


“ம்ம்.. விவரம்தான்”


“இது ஃலைப்.. ஸோ.. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது”


”குட்.. ஆமா நீ லவ் ஏதாவது பண்றியா?”


”ச்சீ.. இல்லயே..”


“பரவால சொல்லுப்பா?”


“ஐயோ இல்ல..” மிகவும் வெட்கப்பட்டாள். "என்னை பாத்தா லவ் பண்றவளாட்டமா தெரியுது?"


அவள் கன்னத்தை கிள்ளினான்.

“அழகு கொஞ்சுதே..”


"அப்படி ஒண்ணும் அழகு கொஞ்சிரல" கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபடி சிரித்தாள். திரும்பி,

 “நீங்க இந்த மாதிரிலாம் கூட பேசுவீங்களா?”


“எந்த மாதிரி.. ??”


“தப்பா இல்ல.. ஜாலியா.. சிரிச்சு..”


“ஏன்.. பேசாம என்ன?”


“இல்ல.. நீங்க ஒரு சிடுமூஞ்சினு அந்தக்கா சொல்லுவாங்க..”


“ஹா ஹா..”


“சிரிக்கறீங்க.. ?”


“நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப..”


"என்ன தெரிஞ்சுப்பேன்?"


"ஒவ்வொரு பொண்ணோட புருஷனும் பொண்டாட்டிகிட்ட மட்டும் ஏன் சிடுமூஞ்சியா இருக்கானு"


"அது ஏன்.. சொல்லுங்க?"


"இப்ப சொன்னா உனக்கு புரியாது. கல்யாணமாகட்டும் அப்ப சொல்றேன். எதையும் அந்தந்த சுட்சுவேஷன்லருந்து பாத்தாத்தான் உண்மை புரியும். அறிவாளித்தனமா யோசிச்சா ஒரு மண்ணும் புரியாது.."


"ஓஹோ.."


"நீ கூட கல்யாணமாச்சுனா புருஷன்கூட ஜாலியா சிரிச்சு பேச மாட்ட.. சில வருசங்களுக்கு அப்பறம் சிடுசிடுனுதான் பேசுவ. எதை பேசினாலும் பொலம்பலாவோ சண்டையாவோதான் இருக்கும். ஆரம்பிக்கறப்ப நல்லாதான் இருக்கும். ஆனா நாலு வார்த்தைக்கு அப்றம் சுய மரியாதைங்கற பேர்ல ஈகோ வந்துரும். புருஷனை ஆம்பளையா பாக்க மாட்டாங்க. ஒரு மிசினாத்தான் பாப்பாங்க. அதெல்லாம் இப்ப சொன்னா உனக்கு புரியாது"


"ஓஓ.. ஆனா என்கிட்ட நல்லா.. கலகலனு ஜாலியாதான் பேசறீங்க.. ஐ லைக் யூ”


“நீயும் ஜாலியாதான் பேசுற.. நானும் ஐ லைக் யூ..” மீண்டும் அவள் கன்னத்தில் கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தம் கொடுத்தான் நிருதி.. !!



உன்னைச் சுடுமோ என் நினைவு -2

 நிருதி உடைகளை களைந்து லுங்கிக்கு மாறினான். கட்டிலில் சரிந்து படுத்தபோது அவன் மனைவி வந்தாள்.


"படுத்துட்டிங்களா?"


"ஏன்?"


"சாப்பிடலியா?"


"சாப்பிடணும்"


"சாப்பிட்டு படுத்துக்கங்க"


"ம்ம்"


"டயர்டா இருக்கீங்களா?"


"ஆமா.."


"அப்றம் ஆஸ்பத்திரி போறேன்றீங்க?"


"போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்தரலாம்"


"நான் நேத்தே போய் பாத்துட்டு வந்துட்டேன். நான் ஒருத்தி போய் பாத்தா பத்தாதா?"


"பரவால விடு.. நான் போயிட்டு வரதுனால ஒண்ணும் ஆகிராது"


"சும்மா எதுக்கு வெட்டி அலைச்சல்? அதுக்கு படுத்து நல்லா தூங்கலாமில்ல?"


"தூங்கத்தான் போறேன்.. நீ கிளம்பு"


"வீட்டுக்கு ஒருத்தர் பாக்க போனா போதும். அவங்க ஒண்ணும் நமக்கு சொந்தமில்ல. இந்த மாதிரி நாம இருந்தா அவங்க எல்லாருமா வந்து நம்மை பாக்க போறாங்க?"


"இது நம்ம விருப்பம். நான் வரேனு சொல்லிட்டேன். நீ போ.."


"ஆமா.. நான் சொல்லி எதை கேட்றுக்கீங்க. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்றம் உங்க இஷ்டம்"


"ரைட்.. விடு"


"போறீங்களா அப்போ?"


"அதான்.  என்னோட இஷ்டம்னு சொல்லிட்டியே..?"


அவனை முறைத்தாள். 

"என்னை ஒரு மனுஷியாகூட மதிக்கறதில்ல"


"அது வேறயா?" சிரித்தான். 


"இளிக்காதிங்க.. கடுப்பா வருது" முகத்தை திருப்பிக் கொண்டு போனாள். 


பிள்ளைகள் குளித்து வந்து சாப்பிட்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டன. 


"அப்ப ஆஸ்பத்ரி போறீங்களா?" வேலைக்குக் கிளம்பும்போது மீண்டும் கேட்டாள் மனைவி.


"ஆமா.."


"என்னமோ செய்ங்க.. நான் சொல்லி எதை கேட்றுக்கீங்க..?"


"அதானே.. பக்கத்து வீட்டுக்காரி எதுத்த வீட்டுக்காரி சொல்றதை கேட்டுதானே நான் வாழறேன்.. நீ சொல்லி ஏதாவது கேட்றுக்கேனா?"


கடுமையான முறைப்பு. 

"அது ஒண்ணுதான் குறைச்சல் இப்போ? நெனப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம். மூஞ்சியும் மொகறையும் பாரு.. இதையெல்லாம் எவளும் சீந்த மாட்டா"


"ரொம்ப சந்தோசம்.. வேலைக்கு போறப்ப கடுப்புல போகாத.. ரிலாக்ஸா போ.."


"அது எங்களுக்கு தெரியும். போய்ட்டு வந்து ஒழுக்கமா வீட்ல படுத்து ரெஸ்ட் எடுங்க.. அவன் கூப்ட்டான் இவன் கூப்ட்டான்னு போய் சரக்கடிச்சுட்டு நைட்டு பத்து மணிக்கு மேல வர வேண்டாம்"


"அப்பறம்?"


"நான் வரப்ப வீட்ல இருக்கணும். இல்லேனா தொலைச்சுருவேன்" 


"எதை தொலைப்ப?"


"இந்த எகத்தாள பேச்செல்லாம் வேண்டாம். நான் அடிக்கடி போன் பண்ணிட்டே இருப்பேன். எடுத்து பேசுங்க. சைலண்ட்ல போட்டா மசக் கடுப்பாகிருவேன்"


"தூங்கறப்ப சைலண்ட்லதான் இருக்கும். எடுக்கலேனா விட்று.."


"அப்படி எல்லாம் விட முடியாது. எடுக்கறவரை பண்ணிட்டே இருப்பேன்" என்றுவிட்டுப் போனாள்.. !!

விரும்பிப் படித்தவை.. !!