வியாழன், 28 மார்ச், 2024

சாலையோரப் பூக்கள் -1

 விடுமுறை நாள்.. என்றாலும் ஓய்வில்லை. வாரம் முழுவதும் மில்லில் வேலை..! இப்போதோ வீட்டில் வேலை, இந்த வேலை செய்வது மிகவும் அலுப்பாக இருந்தது விழிமலருக்கு..!


'ச்சை' என்று வெறுப்புத் தட்டியது.!


அம்மா... அப்பா.. உடைகள் உட்பட... அடங்க மாட்டாமல் அவர்கள் பெத்துப் போட்ட.. அவளது இரண்டு தம்பிகள்... ஒரு தங்கையின் உடைகள் எல்லாம் இப்போது.. அவள்தான் துவைத்தாக வேண்டும். !!


நிறையத் துணிகள் இருந்ததால் கை வலியே எடுத்து விட்டது.! 


சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு.. ஒரு வழியாகத் துவைத்து.. அலாசி எடுத்துக் கொண்டு துணிகளைக் காயப் போடுவதற்காக.. மாடிக்கு எடுத்துப் போனாள். !!


மாடியில் சின்னதாக ஒரு ரூம்.. அதை வாடைகைக்கு விட்டிருந்தனர.! அதில் இப்போது தங்கியிருப்பவன், துகிலன்..!!


மலரின் அப்பாவுக்கு வேண்டியவன். இந்த ஊரில் வேலை கிடைத்து வந்து இங்கேயே தங்கி இருந்தான்..!!


இப்போது அந்த மாடி ரூம் திறந்திருந்தது.


 பக்கெட்டிலிருந்த துணிகளை எடுத்து உதறி உலரப் போட்டுத் திரும்பிய போது... அறைக்குள் அவனது முதுகு தெரிந்தது. !!


'' அலோ...'' மெள்ள அழைத்தாள்.


அவள் பக்கம் திரும்பினான். அவன் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது.


புன்னகைத்து, ''விழி மலரா.. ? வாங்க..'' என்றான்.


'' லீவா.. இன்னிக்கு. .?''


'' ஆமாங்க... நீங்க. ?''


'' லீவ்தான்..!! ''


அவளுக்கு வெள்ளிக் கிழமைதான் வார விடுமுறை.! அன்றுதான் கம்பெனியில் சிப்ட் மாறும்.!!


'' சாப்டாச்சா..?'' அவன் கேட்டான்.


''ம்..ம்ம்..! நீங்க. .?'' தலையாட்டிக் கேட்டாள்.


''ஓ..!! சாப்பிட்டேன்..!!'' எனப் புன்னகைத்தான்.


அவளைப் பொருத்தவரை.. இவன் கொஞ்சம் டீசண்டான பேர்வழி..! அனாவசியமாக அரட்டையடிப்பதோ.. வீண் வாதங்களில் ஈடுபடுவதோ இல்லை.! முக்கியமாகப் பெண்களைக் கண்டால் வழியும் பழக்கம் சுத்தமாகவே இல்லை..!!


பார்க்கும் போது.. ஒரு  'ஹாய் ' அல்லது.. ஒரு  'ஹலோ.' அவ்வளவுதான்..!!


அதனால் அவனை அவளுக்குப் பிடிக்கும்..!! அண்மைக் காலமாக அவனைக் காதலிக்கலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறாள்...!!


ஆனால் அவளுக்கு இந்தக் காதல் மீதெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அது ஒரு வகையான காய்ச்சல். அந்தக் காய்ச்சலுக்கென்று ஒரு மருந்து இருக்கிறது. அந்த மருந்தை எடுத்துக் கொண்டால்.. அதன்பின் காய்ச்சலாவது கத்திரிக்காயாவது.. ?? எல்லாம் காணாமல் போய் விடும்.. !!


''அப்பறம்...?'' என்றாள்.


''சொல்லுங்க..'' என்றான் துகிலன்.


''புக்ஸ்லாம் நெறைய படிப்பிங்களா...?''


''ம்.. ம்ம்..!!''


''என்ன புக்.. இது...?'' அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


''வெற்றுப்படகு..!!'' என்றான்.


''கதையா..?'’


''இல்லைங்க.. இது ஓஷோவோட புக்...!!''


''ஓஷோவா... யாரு அது..?'' என்று அவள் புரியாமல் கேட்க... அட்டைப் படத்தைக் காட்டினான்.


நீண்ட தாடியும், தலையில் கம்பளிக் குல்லாயுமாக ஒரு தாடி வைத்த ஆளைப் பார்த்தாள். 


''யாரு இது..?'' எனக் கேட்டாள்.


''ஓஷோ..!!'' என்றான் மறுபடியும்.


''விஞ்ஞானி மாதிரி இருக்காரு..?'' 


''விஞ்ஞானி இல்லங்க.. மெஞ்ஞானி..!'' எனப் புன்னகைத்தான், ''இதெல்லாம் அவரோட சொற்பொலிவு..!!''


''ஓ..!! இவ்ளோ பெரிய புக்கா...? எப்படி இதெல்லாம் படிக்கறீங்க..?''


''ஏன். .நீங்க படிக்க மாட்டிங்களா...?''


''படிக்கறதா..?'' சிரித்தாள், ''புக்க கைல எடுத்தாலே... நமக்கெல்லாம்.. தூக்கம் பிச்சுகிட்டு வந்துரும். ..''


''ஓ... அப்ப உங்களுக்கு தூக்க மாத்திரையே தேவைப்படாது..?'' எனச் சிரித்தான்.


அவன் சிரிப்பை அவள் விரும்பி ரசித்தாள். 


''இவ்ளோ.. பெரிய புக்கை எப்படி.. ஒரே நாள்ள படிச்சிருவீங்களா..?'' எனக் கேட்டுக் கொண்டே.. அவனது அறைக்குள் நுழைந்தாள்.


''உக்காருங்க..'' எனச் சேரை நகர்த்திப் போட்டான், ''ஒரே நாள்ள படிக்க.. இது நாவல் இல்லீங்க..! உளவியல் சார்ந்த ஆன்மிக விசயம்..! பொருமையாத்தான் படிக்கனும்..!!''


அவள் இப்போது நைட்டியிலிருந்தாள். கருப்பில் சாயம் போய் லேசாக வெளுத்து விட்ட நைட்டி. அதன் ஜிப் போய்விட்டிருந்தது. அதற்குப் பின்னூசி குத்தி கவர் செய்திருந்தாள். 


மலர் சேரில் உட்காரவில்லை. 


ஜன்னல் ஓரமாக.. அவனது புத்தக செல்ஃப் இருந்தது. அதன் பக்கத்தில் போய்.. மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தாள். எல்லாமே பெரிய.. பெரிய புத்தகங்களாக இருந்தன..!!


அவைகளில்.. மேலே இருந்த சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள்.! அதில்.. கதை புத்தகங்கள் ஒன்றைக் கூடக் காணோம்..! அதிகமாக.. அந்த தாடிக்காரக் கிழவனின் புத்தகங்களாகவே இருந்தன.!


'ஓஷோ... ஓஷோ..' என்றிருந்தது. 


அந்தக் கண்கள் பளிச்சென்று மின்னுவதைப் போலத் தோன்றியது.


 ‘இதெல்லாம் நமக்கு ஒத்து வராதவை..!’ என நினைத்துக் கொண்டு புத்தகங்களை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அவனைக் கேட்டாள்.!


''கதை புக்கெல்லாம் படிக்க மாட்டிங்களா..?''


''படிப்பேன்..!!'' என்றான் ''ஆனா.. அதிகமா இருக்காது..!!''


''ஒன்னுமே இல்ல..! நீங்க இந்தாளோட.. ஃபேனா..?''


சிரித்தான், ''ஃபேன்லாம் இல்லிங்க...! அந்தாளப் புடிக்கும்..!!''


''ஓ..!! அப்படி என்ன பண்ணிருக்கான்.. இந்த ஆளு..?''


''அதெல்லாம்.. சொன்னா.. உங்களுக்குப் புரியாது...! விடுங்க.. கதை புக் வேணுமா..?'' எனக் கேட்டான்.


''என்ன புக் இருக்கு..? இந்த.. ராஜேஷ்குமார்.. கதை இருக்கா..?'' என்று அவள் கேட்க... அவன் வாய்விட்டுச் சிரித்தான்.


''அதெல்லாம் இல்லிங்க...''


''அதுக்கு ஏன்.. இப்படி சிரிக்கறீங்க..?'' எனத் திரும்பி அவனைப் பார்த்துக் கேட்டாள். 


அவன் சிரிப்பு அவளுக்கு வியப்பாக இருந்தது.


''இல்ல.. ராஜேஷ்குமார் நாவல் கேட்டிங்களா.. அதான்..! உங்களுக்கு க்ரைம் ஸ்டைல்தான் புடிக்குமா..?'' என்று கேட்டான்.


''ஏன்.. க்ரைம் கதை.. சூப்பராத்தான இருக்கும்..? அதும் ராஜேஷ்குமார் கதைகள்.. டீ வில கூட சீரியலா வருதே.. நான் அதெல்லாம் பாப்பேன்..!!''


''அய்யோ.. நான் தப்பா சொல்லலீங்க..!'' அவன் விவாதம் பண்ணத் தயாரில்லாதவன் போலச் சொன்னான். ''அந்த ரகமான கதைகள்.. என்கிட்ட இல்ல..''


''வாங்கி வெக்கலாமில்ல..! சரி.. வேற எந்த ரகமான கதை இருக்கு..?''


''அதெல்லாம் நீங்க படிக்க மாட்டிங்கனு நெனைக்கறேன்..'' என்று புத்தக செல்ப் பக்கத்தில் வந்தான்.


''ஏன்.. என்ன மாதிரி கதை..?''


''சமூக நாவல்..!!'' என்று அவன் செல்ப்பின் அடியிலிருந்து சில புத்தகங்களை உருவ.. இரண்டு புத்தகங்கள் தவறிக் கீழே விழுந்தன


''புதுமைப் பித்தன்.. ஜெயகாந்தன்.. கா நா சு.. தி ஜா.. பிரபஞ்சன்.. வேணுகோபால்.. அசோகமித்ரன்.. எண்டமூரி.. வைக்கம் முகமது.. ராகுல் ஜி.....'' என அவளுக்கு அறிமுகமே இல்லாத பெயர்களை அவன் சொல்லிக் கொண்டே போக.... 


அவள் குனிந்து கீழே விழுந்த.. இரண்டு புத்தகங்களையும் எடுத்தாள்..!! 


அதில் ஒன்று.... 'காம சூத்ரா..!!'


சிபு -4

 அஸ்மா சிறு பெண்ணின் உற்சாக மிகுதியில் இருந்தாள். அவள் உள்ளம் பூரித்திருப்பதை அவளின் உடல் மொழிகள் அத்தனையும் உணர்த்தின. 


ஆடையில் ஓர் அலட்சியம் வந்திருந்தது. ஆனால் அதை அவள் உணர்ந்தே செய்கிறாள் என்று தோன்றியது.


 தன் காதலனிடம் தன்னை முழுதாகக் காட்டிவிடும் உணர்வை அவள் எட்டியிருக்கலாம். 


எனக்காக அவள் காட்டவில்லை என்றாலும் என் கண்களுக்கு அவள் பெண்ணங்கச் செழுமைகள் தெரியாமலில்லை. 


முதிர்வை எட்டாத இளமை ததும்பும் மார்பகங்கள். ஒல்லியான உடல். அதில் சற்று பருத்ததாய் தன்னைக் காட்டிக் கொள்ள திமிரும் மார்புகள்.  அவைகள் நீரில் நனைந்து சற்று நெருக்கமாக இருக்கும் காட்சி இணைப் புறாக்களை நினைவு படுத்தின.


 அதை நான் பார்க்கிறேன் என்பதை இருவருமே அறிந்திருந்தனர். ஆனால் அதைப் பற்றின கவலையோ அக்கறையோ இருவருக்குமே இருக்கவில்லை. 


நான் தூண்டிலும் வில்லுமாய் ஒரு பாறை நிழலில் உட்கார்ந்து கொண்டேன். அவைகள் இரண்டுக்கும் வேலையே இல்லை.


 அவர்கள் நீரில் விளையாட ஆரம்பித்து நீண்ட நேரமாகியிருந்தது.


 இருவருக்கும் நீரை விட்டு மேலே வர துளியும் விருப்பமே இல்லை. ஆனால் நீண்ட நேர பகல் நீர் விளையாட்டு, உடலை களைப்படையச் செய்து சளி, காய்ச்சலையும் கொடுத்து விடும். அதைச் சொன்னால் கேட்கும் நிலையில் அவர்கள் இருப்பதாய் தெரியவில்லை. 


"கிளம்பலாம்" என்று ஒருமுறை சொல்லிப் பார்த்தேன். 


அவர்களுக்கு கிளம்ப மனமில்லைதான். ஆனாலும் அவள் நீரைவிட்டு எழுந்தாள். அவள் கையைப் பிடித்து சட்டென கீழே இழுத்தான் பாஷா.


 அவள் அதை எதிர்பார்த்ததுபோல தடுமாற்றமே இல்லாமல் சிரித்தபடி அவன் மேல் விழுந்தாள்.


 புரண்டனர். அவளைக் கட்டிக் கொண்டான். உதடுகள் முத்திக் கொண்டன.


 அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதை நான் சிறிது திகைப்புடன் பார்த்தேன்.


 அது ஒரு வெறி முத்தம். புறச் சூழ்நிலைகளை முற்றிலுமாக மறந்து போன முத்தம். இதுவே இறுதிச் சந்திப்பு என்பதைப் போன்ற முத்தம்.. !!


மேலே வந்தபோது அவள் முகமும் கண்களும் சிவந்து போயிருந்தது. உதடுகளின் சாயம்போய் வெளுத்திருந்தது. புருவங்களிலும் கண்ணிமையிலும் துளி நீர் முத்துக்கள் தேங்கியிருந்தன. மூக்கு நுனி பளபளத்து வெயிலில் மின்னியது.


 உடை உடலோடு ஒட்டி மார்பகங்கள் முன்னெழுந்து பனங்காயாய் தளும்பியிருந்தன. மார்புப் பள்ளம் அப்பட்டமாய் தெரிந்தது. குளிரில் விரைத்த மார்புக் காம்புகள் நீண்டு தடித்து, உடைக்கு மேல் துருத்தியிருந்தன. பிராவின் அச்சு வெளித் தெரிந்தது. அதன்மேல் அவள் சிம்மீசும் அணிந்திருக்கிறாள்.


 அந்த மூன்று உடைகள் இருந்தும் மார்புகளின் வட்டத்தை நீர் அம்பலமாக்கியிருந்தது. அவளின் தொப்புள் குழியின் சிறிய அச்சு வடிவம் கூடத் தெரிந்தது.


 லெக்கின்ஸ்.. சொல்லவே வேண்டாம்.


கரையில் நின்று நீரைச் சொட்ட விட்டபின் ஈர உடையைப் பிழிய மறைவான இடம் தேடிச் சென்றாள்.


 அவன் கண்கள் அவளின் பின்புறத்தையே வெறித்தன. அந்த வெறிப்பில் என்னைப் பற்றின உணர்வே இருக்கவில்லை.


 அவள் தள்ளியிருந்த சிறு நாணற்புதரின் பின்னால் மறைந்தாள்.


 முற்றிலுமாக மறைய முடியாது. அசைவுகள் தெரியும். 


பாஷா என்னிடம் வந்து நின்றான். 


"செம.." என்று சிரித்தான். 


அவன் கண்களும் முகமும்கூட சிவந்து போயிருந்தது. 


‘பையல் கள் குடித்த குரங்காயிட்டான்'


"ம்ம்" தலையசைத்தேன். 


"ஆளு எப்படி?"


"நல்ல பொண்ணுதான்"


"ஃபிகரு?"


"அதை கேக்கணுமா?" 


"இப்ப நீ என்ன நெனைக்கறே?" எனக் கேட்டான். 


"என்னது?"


"தொட்டா ஒட்டிக்குறா.."


"சரி.."


"கை வெச்சு பாக்கட்டுமா?"


"இவ்ளோ நேரம் அதான பண்ண?"


"அது.. மேலாப்ல" சிரித்து "நல்லா மூடாகிருச்சு. அவளுக்கும் இது மாதிரி மூடாகியிருக்குமா?"


"மூடாகாமயா உன்னை இவ்வளவு தூரம் விளையாட விட்றுக்கும்னு நெனைக்கற?"


"நெஜமாவா? மூடாகியிருக்குமா?"


"அடப்பாவி. லவ் பண்ற.. இது கூடவா தெரியாது?"


"அப்ப.. ஓகே ஆகிருங்கறியா?"


"இதுக்கு மேல என்ன நண்பா ஓகே ஆகணும்"


"மேட்டர்க்கு..?"


"அது உன் கைலதான் இருக்கு" என்றேன்.


அவனிடம் ஒரு தவிப்பிருந்தது. அது அவளை அடையத் துடிக்கும் தவிப்புதான். 


சிறிது பொறுத்து "இரு வரேன்" என்றுவிட்டு கூடாரமிட்ட ஜட்டியுடன் அவள் சென்ற மறைவான பகுதிக்குச் சென்றான்.


அவனும் மறைந்தான். 


மறைவான அந்தப் பகுதியிலிருந்து அவளின் சிணுங்கலும் சிரிப்பும் சற்று மிகையாகக் கேட்டது.


 என் பார்வை அவ்வப்போது அந்த மறைவுப் பகுதியை நோக்கித் திரும்பியது. சிற்சில காட்சிகள் என் கண்ணை அறைந்தன. 


அசைவுகள், இணைவுகள்.  பின்னர் முனகல்கள் மட்டும். ஓரளவு அங்கு நடப்பதை யூகித்தேன்.. !!


வெயில் நன்றாக மேலேறி வந்திருந்தது. சூரியக் கதிர்கள் சலசலப்பான ஆற்று நீரின் அலையில் நட்சத்திப் புள்ளிகளாய் மின்னியோடின. ஆற்றின் ஈரக்காற்று வெயிலின் தாக்கத்தைக் குறைத்திருந்தது. 


நான்  எழுந்து சென்று ஆற்றில் இறங்கி கால் நனைத்து முகம் கழுவினேன்.


 இரண்டு கைகளிலும் தண்ணீர் அள்ளிக் குடித்தேன்.


 நிறையக் கலங்கப்பட்டாலும் இந்த ஆற்று நீருக்கென்று தனிச்சுவை உண்டு.


 சுவையுடன் தாகமும் தணிக்கும்.. !!


புதன், 6 மார்ச், 2024

சிபு -3

 மலைப்பாதையில் இருந்து இறங்கி தார்ச் சாலையை அடைந்தோம். 


அந்த இடம் சற்று அபாயகரமானது என்றுகூடச் சொல்லலாம்.


 வளைவான சாலை. கருப்பராயனும் முனியப்பனையும் கொண்ட இரண்டு கோவில்கள் இருக்கும். 


கருப்பராயன் கோவில் பெரியது. குதிரைச் சிலையுடன் விஸ்தாரமாகக் கட்டப்பட்டிருக்கும்.


 வருடத்திற்கு இரண்டு மூன்று வெளியூர் ஆட்கள் இங்கே ஆற்றில் குளிக்க வந்து உயிர் விடுவது என்பது தொடர் கதையாகவே இருக்கும். 


அதிலும் குறிப்பாக அருகில் இருக்கும் பாலிடெக்னிக்கில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் வந்து மரணிப்பது அடிக்கடி நிகழ்ந்ததால் கல்லூரி நிர்வாகமே மாணவர்கள் அங்கு செல்லக்கூடாதென தடை விதித்திருந்தது. 


அந்த இடத்தில் ஆற்றுக்கு இறங்க ஒரே வழிதான். அதுவும் செங்குத்துப் பாதையில் இறங்குவது போலிருக்கும்.


 வளைந்து  வளைந்து செல்லும் ஆற்றோரம் பெரிய படுகைகளாக இருக்கும். அதனால் மண்பாதை நடக்க வசதியற்றதாக, செங்குத்தாக இருக்கும். ஆற்றுக்குச் சென்று விட்டால் ஆழமற்ற பகுதிகளும் உண்டு.


 விடுமுறை நாட்களிலும் விசேச தினங்களிலும் ஆட்கள் கார் பைக் ஆட்டோவில் எல்லாம் அங்கு குடும்பத்தோடு வருவார்கள். 


"முள்ளும் மலரும் படம் பாத்துருக்கியா?" என்று திடுமெனத்தான் அஸ்மாவிடம் கேட்டான் பாஷா. "சரத்பாபு. படாபட் ஜெயலட்சுமி நடிச்சது?"


"ஏன்?" எனக் கேட்டாள். 


"அதுல ஒரு பாட்டு வருமே.. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்னு.. ஜீப் ஓட்டிட்டே பாடுற பாட்டு"


"ஆமா.."


"அது இந்த ரோட்ல எடுத்ததுதான். இந்த வழியாத்தான் பாடிட்டே ஜீப் போகும். அப்றம் ஒரு சீன் ரஜினி தங்கச்சி ஆத்துல உக்காந்து பாத்திரம் கழுவிட்டிருப்பா பாரு. அந்த சீன் காட்றேன். அது இதே ஆறுதான்" இடத்தைக் காட்டி "இந்த எடத்துல உக்காந்துதான் பாத்திரம் கழுவிட்டிருப்பா. அந்த படத்துல நெறைய சீன் வரும். அப்பறம் ஆட்டுக்கார அலமேலு முக்காவாசி படம் இங்க எடுத்ததுதான். அது இல்லாம சரத்குமார் படம் சாமுண்டி அதுல கொஞ்சம் சீன் இங்க எடுத்துருப்பாங்க" என்று அங்கு பிடிக்கப்பட்ட படக்காட்சிகளை நினைவில் இருந்தவரை எடுத்து அவளுக்குச் சொன்னான்.


 அவளுக்கு அது சற்று வியப்பாகவே இருந்தது. அவைகள் எல்லாம் பழைய படங்கள்.. !!


சாலையிலிருந்து சரிவான மண் பாதையில் இறங்கி ஆற்றுக்குச் செல்லும்போது அவள் வழுக்கி விழுந்து விடாமலிருக்க பாஷாவின் கையைப் பற்றி தோளில் தொங்கியபடி நடந்தாள். 


அப்படியும் சில இடங்களில் தடுமாறி அவனைத் தள்ளி பக்கவாட்டுத் திட்டுகளில் மோத வைத்தாள். 


அவன் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்து தாங்கிக் கொண்டான்.


ஆற்றில் அன்று தண்ணீர் நன்றாக இருந்தது. காலைத் தண்ணீர் வந்து குறையத் தொடங்கியிருந்தது.


 பில்லூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டால் ஆறே சுத்தமாகி விடும். நகர சாக்கடையின் கழிவுகளே எங்குமிருக்காது.


 இதே தண்ணீர் திறந்து விடப்படாத மழைக்காலம் என்றால் ஆறே நாறிவிடும். குப்பையும் கூளமுமாக இருக்கும். தண்ணீரைப் பார்த்தால் குளிக்கும் எண்ணமே வராது.. !!


சலசலத்து ஓசையுடன் பாயும் ஆற்று நீரைப் பார்த்தவுடன் அவள் ஓடிப்போய் தண்ணீரில் கால் நனைத்தாள்.


 தெளிந்த நீரில் அவள் உருவம் அலையடிக்க குனிந்து கைகளில் தண்ணீரை அள்ளி அள்ளி ஆற்றில் வீசினாள். 


"சூப்பரா இருக்கு சிபு. வாயேன்" என்று மகிழ்ச்சி ததும்ப கொஞ்சல் குரலில் அவனையும் அழைத்தாள்.


அவன் அவளருகில் சென்றதும் அவன் கையைப் பற்றிக்கொண்டு தண்ணீருக்குள் இன்னும் கொஞ்சம் நகர்ந்தாள். 


"செருப்பை கழட்டிரு. வழுக்கி விட்றும்" என்றான் பாஷா.


அவள் செருப்பைக் கழற்றி மேட்டில் போட்டுவிட்டு லெக்கின்ஸை பாதத்திலிருந்து மேலே சுருட்டி விட்டுக் கொண்டாள். 


அவள் கையைப் பிடித்தபடி அவளின் முழங்கால்வரை நீரில் இறங்க வைத்தான்.


 அவனும் தன் ஜீன்ஸ் நனையாமல் சுருட்டி விட்டுக்கொண்டு ஆற்றில் இறங்கி அவளை ஒட்டிக்கொண்டு நின்றான். 


சிறு பெண்ணைப்போல அவள் குதூகலமாகி விட்டாள். 


சிறிது நேரத்தில் கழுத்தில் இருந்த துப்பட்டாவை உறுவி இடுப்பில் சுற்றி இறுக்கிக் கட்டிக் கொண்டு தண்ணீரை அளைந்து அள்ளி அள்ளி வீசினாள்.  


நான் கரையிலேயே நின்று விட்டேன். அவர்கள் நீரில் விளையாடுவதை வேடிக்கை பார்த்தேன்.


 அவன் பெரும்பாலும் சன்னக் குரலில் ரகசியமாகவே அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவள் அடிக்கடி கிளுகிளுத்துச் சிரித்தபடியிருந்தாள்.


 பின்னர் அவள் சட்டென தண்ணீருக்குள் உட்கார்ந்து விட்டாள். அவன் கையைப் பிடித்தபடி உட்கார்ந்து கழுத்துவரை நனைந்தாள். அவனையும் இழுத்தாள். 


அவன் மேலே வந்து ஜீன்ஸ் பேண்ட் டீ சர்ட் என்பதால் உடைகளைக் களைந்துவிட்டு ஜட்டி பனியனுடன் நீரில் இறங்கினான். 


ஆழம் பற்றிச் சொல்லியபடி நான் கரையிலேயே நின்று விட்டேன். அந்த இடம் ஆழமில்லை. ஆனால் ஜலப்புப் பகுதி என்பதால் இழுவையிருந்தது.


 எவ்வளவு தூரம் விளையாடினாலும் உயிருக்கு ஆபத்தில்லாத பகுதி.


அவர்கள் விளையாடினார்கள். உடலும் உடையும் நனைய குதூகலித்தார்கள்.


 அவள் கூந்தல் நனையாமலிருக்க பின்னலைச் சுருட்டி கொண்டையிட்டுக் கொண்டாள். 


அவள் இடுப்பில் சுற்றிக் கட்டிய துப்பட்டா நீர் சொட்டச் சொட்ட கரைக்கு வந்து விழுந்தது. அதை எடுத்து பாறைமீது வைக்க நினைத்தேன். ஆனால் அது வேறுவகை எண்ணத்தை கற்பித்துவிடும் என்றுணர்ந்து அப்படியே விட்டுவிட்டேன். 


உடை நனைந்து உடலுடன் ஒட்டிக்கொண்டபோதுதான் அவள் எவ்வளவு செழுமையாக இருக்கிறாள் என்று கண்டு நான் வியந்தேன்.


 என் வியப்பு அவர்களுக்கு பொருட்டில்லை. ஏன் நானே பொருட்டில்லை. நான் அங்கிருப்பதையே மறந்தார்கள். நீரில் ஒன்றாய் விழுந்தார்கள். ஒன்றன் மேல் ஒன்றாக புரண்டு தவழ்ந்தார்கள். கட்டித் தழுவினார்கள். கிள்ளினார்கள். அடித்தார்கள். கடித்தார்கள். 


நனைந்து இறுகித் தழும்பும் அவளின் அழகிய மார்பகங்களை என் முன்பாகவே அவன் தொட்டான். தீண்டினான். 


அத்தனையும் நீருக்குள்தான்  என்றாலும் அங்கு நடப்பதை என்னால் கவனிக்க முடிந்தது. ரகசியத் தீண்டல்கள். 


இருவருக்கும் உணர்ச்சி முற்றி விட்டது. காதலின் கரையை உடைத்து வெடித்துவிடத் துடித்தனர். 


ஒருமுறை அவன் நீரை விட்டு எழுந்தபோது அவன் இடுப்புக்கு கீழே பெரிய கூடாரம். ஜட்டி புடைத்திருந்தது. 


அதைப் பார்த்த அவள் கன்னம் சிவக்க வாய் பொத்திச் சிரித்தாள். தண்ணீரை அள்ளி எடுத்து அவனை அறைந்தாள்.


பின்னர் மெல்லத் தவழ்ந்து கரையோரமாக தண்ணீரில் மிதந்தபடி வந்தனர். மேலே வர விரும்பவில்லை.


 அருகருகே நெருக்கமாகப் படுத்து சிரித்துப் பேசினர். தொட்டுத் தடவிக் கொண்டனர். 


"யாரும் வரமாட்டாங்கள்ள?" என்று பாஷா என்னைப் பார்த்துக் கேட்டான்.


"ஏன்?" என்றேன்.


"சும்மாதான்" சிரித்தான்.


"வெளையாடுங்க" என்றேன். 


"செம்மயா இருக்குங்க. செம ஜாலி.. சான்ஸே இல்ல" என்று மூக்கிலும் உதட்டிலும் நீர் வழியச் சொல்லிச் சிரித்தாள் அஸ்மா.. !!


வெள்ளி, 1 மார்ச், 2024

சிபு -2

 அவளிடம் அன்னியத்தன்மை இல்லை. என்னுடன் முன்பே பேசிப் பழகியவள் போல இயல்பாகவே பேசினாள். 


"தியானம் எல்லாம் செய்விங்களா?" எனக் கேட்டாள். 


"பழகிட்டிருக்கேன்" என்றேன். 


"எப்படி?" என்று என்னைக் கூர்ந்து பார்த்தாள்.


அவளுக்கு அதில் ஏதோ ஆர்வம் இருப்பதாய் தோன்றியது.


 நான் நடைமுறைப் படுத்தும் எளிதான சாதக முறைகளை அவளுக்கு விளக்கினேன்.


 பின்னர் "உடலால சாதகம் பண்றதைத் தாண்டி மனசால தியானம் பண்றது இன்னும் சிறப்பு. அகம் சுதந்திரமடையணும். நான் அதைத்தான் பண்ணிட்டிருக்கேன்" என்றேன். 


மீண்டும் "எப்படி?" எனக் கேட்டாள்.


அவளுக்கு புரியும்படியாக சொல்ல முயற்சி செய்தேன்  "அமைதியா உக்காந்துக்கறது. கண்ணை மூடி உட்கார்ந்து கொஞ்ச நேரம் வல இட மூச்சை இழுத்து விட்டு உடம்ப லேசாக்கி அப்படியே நமக்குள்ள ஓடுற எண்ண ஓட்டங்களை, சிந்தனைகளை, ஒடம்புல அப்ப நடக்கற செயல்பாடுகளை கவனிக்கறது. மனசை கட்டுப் படுத்தறதில்ல. கவனிக்கறது. அது சுலபத்துல கை வராது. தொடர்ந்து செய்யணும். மனசு இல்லாத சேட்டையெல்லாம் பண்ணும். வேண்டாததை எல்லாம் நினைக்கும். அதை அடக்க கூடாது. அடக்க முயற்சி பண்ணா பலமடங்கு பலத்தோட எழுந்து வந்து நம்மை எண்ணக்குவியல்ல போட்டு மூழ்கடிச்சிரும். உலகத்துல இன்பமான விசயங்கள் எவ்வளவோ இருக்கப்ப நீ ஏன் பைத்தியக்காரத்தனமா யோகா தியானம் மண்டை மயிருன்னெல்லாம் வாழ்நாளை வேஸ்ட் பண்ணிட்டிருக்கேனு நமக்கு புத்தி சொல்லி குழப்பும். அப்படி அது சொல்ற எதுக்கும் மயங்கிடாம அதை ஒரு குழந்தை விளையாட்டா நினைச்சு வேடிக்கை மட்டும் பாக்கணும். அதை தொடர்ந்து செய்யணும். அப்படி செஞ்சு தியானம் கை வரப்ப நம்ம மனசுல இருக்கற எண்ண ஒட்டுதல்கள், ஆசா பாசங்கள், பற்று பந்தங்களெல்லாம் தானாவே உதிர்ந்துரும்"


அவளுக்கு அது புரியவில்லை என்பது, மீண்டும் "எப்படி?" எனக் கேட்டதில் புரிந்தது. 


நான் புன்னகைத்தேன். அவளுக்குப் பேச்சுதான் தேவை. அர்த்தமல்ல. ஆழ்நிலை உணர்வுகள் அல்ல.


 அவள் தன் காதலனுடன் காதலைக் கொண்டாட வந்திருக்கிறாள். அவளிடம் போய் யோகா தியானம் என்று பேசிக்கொண்டிருப்பது என் மடத்தனம்.


 அதுவும் இளமையின் உச்சத்தில், காதல் கொண்டிருக்கும் பெண்ணிடம் தியானம் பற்றிப் பேசுவதைவிட அபத்தம் வேறிருக்க முடியாது. 


அவளுக்குத் தேவை உணர்ச்சி பூர்வமான பேச்சுக்கள், அல்லது கதைகள், கவிதைகள், மிதக்கும் அலைகள்.


 அலையே எழும்பாத ஆழ்கடலை அவளால் புரிந்து கொள்ள முடியாது.


இதற்கிடையில் அவனும் தான் வாசித்த, அறிந்து கொண்ட ஆன்மீகம் சம்மந்தமான விளக்கவுரைகள் கொடுத்தான். 


அவனை அவள் 'சிபு' என்று சுருக்கமாகச் சொல்லித்தான் அழைத்தாள். 


எனக்கு முதலில் அது புரியவில்லை. 

"அது என்ன பேர் சிபு?" எனக் கேட்டேன். 


"சிக்கந்தர் பாஷாவை சுருக்கி சிபுனு கூப்பிடுவா" என்றான் அவன்.. !!


ஒரு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. நான் இருப்பதை அவர்கள் மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கினர். அல்லது காதல் அவர்கள் கண்ணை மறைக்கத் தொடங்கியது.


 இருவரும் நெருக்கமாகவே இருந்தனர். அவ்வப்போது தொட்டுக் கொள்வதும் அடித்துக் கொள்வதுமாய் ரகசிய சில்மிசங்களுடன் விளையாடிக் கொண்டனர்.


 அவர்களுக்கு என்முன் அப்படி நடந்து கொள்வதில் சிறிதும் கூச்சமில்லை.


 ஆனால் எனக்குத்தான் பெரிய சங்கடமாக இருந்தது. எங்காவது சென்று விடலாமா என்றிருந்தது. ஆனால் நான் இல்லாவிட்டால் அவர்களால் அங்கு இருக்க முடியாது. அது வேறு ஒருவகைப் பிரச்சினையாகிவிடும்.


காலை பத்து மணிக்கு அவர்கள் வந்தது. 


நேரம் கலகலப்பாகவே போனது. அவள்தான் அதிகம் பேசினாள். அவள் குரலும் நன்றாக இருந்தது. அவ்வப்போது சிணுங்குவதும் சிரிப்பதுமாக இருந்தாள். கிண்டல் கேலிக்கு குறைவில்லை.


 என்னுடன் கூட வெகு சீக்கிரத்திலேயே நட்பாகிப் போனாள். 


"ஆத்துக்கு போலாம்னு சொன்ன?" என்று அவனிடம் நினைவு படுத்தினாள். 


"போலாம். ஆனா நடக்கணும்" என்று லேசான சலிப்புடன் சொன்னான். 


"சரி. போலாம். இங்க எவ்வளவு நேரம்தான் இப்படியே உக்காந்திருக்கறது? நமக்கு நெறைய டைமிருக்கு. என்னை ஈவினிங் பஸ் வெச்சு விட்று போதும்"


"ரோடு கெடையாது. காட்டு வழிதான். கல்லும் முள்ளுமா இருக்கும். ஒரு கிலோமீட்டருக்கு மேல நடக்கணும்"


"லைப் லாங் நடக்கலாம் ஒண்ணும் தப்பில்ல" என்றாள். 


அவர்கள் இருவர் மட்டும் போனால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதிலும் பிரச்சனை. அந்த ஏரியாவுக்கு அவர்கள் பழகியவர்கள் இல்லை. 


மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் ஆற்றுப் பகுதி என்பதால் புதிதாக வரும் இளம் காதலர்கள் சென்றால் சமூக விரோதிகளிடம் சிக்கி அசிங்கப்பட நேரும்.


 அந்த சமூக விரோதிகள் யாருமில்லை. எங்கள் ஏரியாவின் தறுதலை இளவட்டங்கள்தான்.. !!


காதலர்கள் மலைப் பகுதிகளுக்குள் வந்து விட்டால் அவர்களை மடக்கி அடித்து பணம் நகையெல்லாம்கூட பிடுங்கி விடுவார்கள்.


 காதலியாக இல்லாமல் கள்ள உறவு கோஷ்டிகளும் அவ்வப்போது வருவதுண்டு. அப்படி வருபவர்கள் எனத் தெரிந்தால் அந்தப் பெண் சீரழிக்கப்படுவாள்.


 அதனால் உள்ளூர் ஆட்கள் இல்லாமல் வெளியூர்ப் பெண்கள் அங்கு செல்லக்கூடாது என்பது பொதுவான விதி.


 அது அவனுக்கும் தெரியும். அதனால் என்னையும் அழைத்துக் கொண்டான். 


கிளம்பும்முன் அவளே "ஆத்துல மீன் புடிக்க முடியுமா?" எனக் கேட்டாள். 


"ஏன்?"


"ஆசை. இந்த தூண்டில் போடுவாங்களே.. அது போட்டு புடிக்கணும். நெறைய மீன் கெடைக்கும்னு சொன்னல்ல?"


"அப்ப சொன்னேன்" என்று சிரித்தபடி திரும்பி, பாஷா என்னைப் பார்த்தான்.


 "தூண்டி இருக்கு" என்றேன். 


விடுமுறை நாட்களில் நண்பர்கள் சேரும்போது ஆற்றுக்குச் சென்று மீன் பிடிப்பதென்பது எங்களின் பெரும்பாலான பொழுதுபோக்கு. அங்கேயே வறுத்துத் தின்று வருவோம். 


தூண்டில் மட்டுமல்ல. மீன் வலையும் இருக்கிறது. ஆனால் இப்போது மீன் பிடிக்கச் செல்வதில்லை. ஜாலிக்காக, ஒரு பெண்ணின் விருப்பத்துக்காகப் போவதால் தூண்டில் போதுமானது.


 அதில் மீன் மாட்டியாக வேண்டும் என்கிற கட்டாயமில்லை.


 அதேபோல வீட்டில் உண்டிவில்லும் இருக்கும். அவள் உண்டிவில்லைப் பார்த்ததும் ஆசையாக எடுத்துக் கொண்டாள்.


 வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினோம்.


 பாதை சற்று சிரமமானதுதான். ஊசிப் புற்களும் கோரைப் புற்களும் ஒற்றையடிப் பாதையை ஒட்டி மண்டியிருக்கும்.


 ஆடு மாடுகள் நடந்து கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக, மேடும் பள்ளமுமாக இருக்கும். அதன் வழியாக ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடந்து அதன்பின் மலையிறங்க வேண்டும்.


 மலையை ஒட்டி ஒரு தார்ரோடு. அதை ஒட்டி பவானி ஆறு. 


நான் தினமும் காலை மாலை இரண்டு நேரமும் அந்த வழியாகத்தான் ஆற்றுக்குச் சென்று வருவேன்.  


 இருவரும் ஒட்டிக்கொண்டே நடந்தனர். அதிகம் இடித்துக் கொண்டு கை பற்றிக் கோத்து தள்ளாடினர்.


 மலைப் பாதை கற்களுக்குள் நடந்து பழக்கமற்ற அவளுக்கு அவ்வப்போது செருப்பு வழுக்கி விட்டுக்கொண்டே இருந்தது. 


பாதி தொலைவில் உண்டிவில்லில் கல் விடத் தெரியாமல் விட்டு கையை காயப்படுத்திக் கொண்டாள்.


 வலது புறங்கையில் கல் பட்டு சிராய்ப்பாகி ரத்தம் கசிந்து விட்டது.


 வலியில் அவள் கண்களில் கண்ணீர் திரண்டு விட்டது. அதன்பின் அவள் அதைத் தொடவே இல்லை.. !!