வெள்ளி, 26 ஜூலை, 2019

மகிழ் வதனி -2

''நான் ஏன்.. தங்களைத் தேடிக்கொண்டு வந்தேன் என்பது தங்களுக்கே தெரியும்.. இளவரசே..!'' என் மார்பில் அவளது.. முலைக் கச்சை உரச.. நின்று.. முகம் தாழ்த்திச் சொன்னாள் மகிழ்வதனி.

''அப்படியா..? அப்படி ஒன்றும் எனக்கு தெரியாதே..?'' அவள் கையை விட்டு.. மெதுவாக அவளது நாடியைப் பிடித்து உயர்த்தினேன்.

அவள் கண்கள் என் கண்களை ஏறிட்டுப் பார்த்து.. சட்டெனத் தாழ்ந்தன.
''சரி.. அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் அமைதியையும்.. தனிமையும் நான் கெடுப்பதாகச் சொன்னீர்களே..?''

''ஆமாம்..!!'' அவள் தாடையில் என் விரலை ஓட்டினேன்.

'' உங்களுக்கு  தொந்தரவாக இருக்க நான் விரும்பவில்லை.. என் கையை விட்டால் நான் போய் விடுகிறேன்.. இங்கிருந்து...'' என்றாள்.

'' உன் கையை விடலாம்..! ஆனால்... உன்னை விட முடியாதே..!'' என் முகத்தை மெதுவாக அவள் முகத்தருகில் கொண்டு போனேன்.

''ஏன்..??'' என்னை நிமிர்ந்து பார்த்த... அவளது செவ்விதழ்கள்.. என் வாயருகில்.. கனிந்த கொவ்வைக் கனிகளாகக் காட்சி தந்தது. ஆனால் அவள் விழிகள்.. என் கவனத்தை ஈர்த்தன.

''நீ என் இதயத்தில் அவ்லவா.. அமர்ந்திருக்கிறாய்..? எப்பொழுது நீ என்னுள் குடி கொண்டாயோ.. அப்போதே என் அமைதியும்.. தனிமையும் என்னை விட்டுப் போய்விட்டது..! காதல் நோயால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.! நீதான் அதற்கு மருந்தளிக்க வேண்டும்..!!''

நாணிக் கொண்டு தலை கவிழ்ந்து நின்றாள் மகிழ்வதனி. அவள் தாடையில் ஓடிய என் விரலை.. அவளது கொவ்வைக் கனி.. இதழுக்கு நகர்த்தினேன்.
''மகிழ்...''

''ம்..ம்ம்..?''

''என்னிடம் பேசத்தானே வந்தாய்..?'' ரோஜா இதழ்போல மிகவும் மிருதுவாக இருந்த.. அவளின் செவ்விதழை வருடினேன்.

''ம். ம்ம்..!!''

''பேசேன்..?''

''எ.. என்ன பேசுவது..?''

''என்னிடம் நீ பேச வந்ததைப் பற்றி பேசேன்..?''

''நான்.. பேச வந்தது.. அதைத்தான் நீங்கள் சொல்லிவிட்டீர்களே..?''

''அப்படியானால்...?''

''ம்.. ம்ம்..! அப்படியானால்..??''

''என்னைப் போலவே.. நீயும்..?''

''ஆமாம்.. தங்களைப் போலவே.. நானும்...!!'' என மிகவும் உள்ளே அமுங்கிய குரலில் சொன்னாள்.

அவளின் கீழ் இதழைக் கிள்ளிப் பிடித்து.. இழுத்து.. என் பற்களைக் கொண்டு.. அதை நான் கவ்வி உறிஞ்சினேன். அவள் இடுப்பில் என் கைகளை வைத்து.. சிக்கென இருக்கும் அவளது சிறுத்த இடையை.. இறுக்கிப் பிடித்து.. இழுத்து... அவளது கச்சுக் காய்கள் என் நெஞ்சில் அமுங்க.. அவளை நான் இருக்கி அணைத்தேன்..!!

அவளின் தே மதுர இதழ்களை நான்.. தகித்த வாயுடன் உறிஞ்சிச் சுவைக்க... அவளது விழிகள் கிறங்கி... இமைகள் மூடின..! அவள் நெஞ்சகம் படபடவென அடித்துக் கொள்ள.. அவள் இதயத்தின்.. அதிவேகத் துடிப்பை என் நெஞ்சில் உணர்ந்தேன்..!!

மெதுவாக என்னிடமிருந்து தன்.. செவ்விதழ்களை விடுவித்து.. மீண்டும் அவள் இதழ்களை நாடிச்சென்ற.. என் உதடுகளை.. தன் வலக்கரத்தால் தடுத்தாள்.
''என் கட்டிக்கரும்பே..!!'' நான் முத்தச் சுகத்தில் கிறங்கினேன்.

''.....!!''

''என் அழகிய கண்மணிக் கரும்பை.. நான் கடித்துச் சுவைக்க வேண்டும்..!!'' என் உதடுகளைத் தடுத்த.. அவளின் மெலிந்த விரல்களுக்கு முத்தம் கொடுத்தேன்.

''அயோ.. போங்கள்.. இதெல்லாம்.... ம்கூம்...'' மறுத்துச் சினுங்கினாள்.

''ஏனாம்..? என் அன்பே..??'' அவள் இடையைத் தடவினேன்.

'' ஒ.. ஒன்று... ஒன்று சொல்ல அனுமதிக்க வேண்டும்..''

''அனுமதி எதற்கு..? என்னிடம் உனக்கு..?''

''நான்...நான் தங்களுக்கரியவள்தான்.. ஆனால்...''

''ஆனால்...??''

''தற்போது.. தீண்டல் எதுவும் வேண்டாம்..!!'' என அவள் சொல்ல.. நான் விறைப்பாக சட்டென அவளை விட்டு விலகினேன்.

''நன்று...''

''மன்னிக்க வேண்டும்.. இளவரசே..''

''மன்னித்தேன்..!!'' சுருதி சேர்க்காத குரலில் சொன்னேன்.

அவளே முன்வந்து என் கரம் பற்றினாள்.

''என மேல் கோபமா.?'' வெட்கம் இல்லாமல் என் முகம் நோக்கினாள்.

நான் வேண்டுமென்றே அவள் பக்கம் பாராமல்.. கிழக்கு நோக்கி.. முகம் திருப்பி.. நிலவை வெறித்தேன். என் கையை இறுக்கியவாறு சொன்னாள் மகிழ்வதனி.
''தவறாக என்ன வேண்டாம் இளவரசே.. என்னிடம் தங்களுக்கில்லாத உரிமையா..? நான் சொல்ல வந்ததை தவறாகப் புரிந்து கொண்டீர்கள்..! நான் உங்களுக்கு தடை சொல்லவில்லை..! நம்மைத் தேடிக் கொண்டு.. திடீரென்று.. யாராவது மேன்மாடத்திற்கு வந்து விட்டால் என்ன செய்வது..? உங்கள் தங்கை என்னைத்தான் தேடிக்கொண்டு இருப்பாள்... யாருக்கும் தெரியாமல்... தங்களைக் காண.. நான்.. இங்கு.. வந்தேன்..!!'' அவள் குரலில் மெலிதான ஒரு பதைபதைப்பு இருந்தது.

''சரி.. நீ போவதானால் போகலாம்..!!'' உள்ளூர நகைத்தவாறு நான் சொன்னேன்.

''இல்லை.. இல்லை..!!'' அவள் கச்சு முலைகளை என் தோளில் பட வைத்தாள்.
''கோபம் இன்னும் தனியவில்லை போலிருக்கிறது..?''

''சே.. சே...இந்த பெண்கள் மிகவும் பொல்லாதவர்களப்பா.. ஒரு ஆண்பிள்ளையை அமைதியாக இருக்கவே விடுவதில்லை.. ஆண்களைச் சீண்டி.. மனதை வாடச் செய்வதில் அப்படி ஒரு இன்பம் போலிருக்கிறது இந்த பெண்களுக்கு..!  அப்படி என்ன இன்பமோ.. பொல்லாத இன்பம்..?'' என்றேன் மனம் கசந்தவன் போல..!

'' இளவரசே...'' அவள் குரல் தழு தழுத்து விட்டது.  ''நான்... நான்.. தங்களிடம்.. அப்படியெல்லாம்...'' பேச முடியாமல்.. பொசுக்கெனக் கேவினாள்.

அழுகையை மறைக்க.. சட்டென என்னிடமிருந்து பிரிந்து விலகி ஓட எத்தனித்தாள். ஆனால்.. அவளை ஓடவிடாமல்... எட்டி அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன்.

'' அடடா.. என்ன இது.. என் அன்புக்கினியவளிடம்.. மன உற்சாகத்திற்காக.. சிறிது விளையாட்டுக் காட்டினால்.. அதற்கு இப்படியா அழுவது.. ம்ம்..?'' எனச் சிரித்துக் கொண்டே.. அவள் தடுப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை அணைத்து.. அவள் கண்களைத் துடைத்தேன்.
''இப்பொழுதான்.. இந்த பெண்கள் உண்மையாகவே மிகவும் பொல்லாதவர்கள் என்று தெரிகிறது. எதற்கு சிரிப்பார்கள்.. எதற்கு அழுவார்கள்.. எப்போது சிரித்து அழுவார்கள்.. என்று எதுவுமே புரிந்து கொள்ள முடியாது போலிருக்கிறது..! பெண்களின் காதல் வலையில் சிக்கிக் கொண்ட ஆண்கள் எல்லோரும் பாவம்தான்..!! என் தேவி.. பொருத்தருள்வாயாக.. ஏதோ விளையாட்டாக சீண்டினேன்..! அதற்கே.. இப்படி அழும் இந்த அழுமூஞ்சிப் பெண்ணிடம் நான்.. என்ன பாடு படப் போகிறேனோ..? என்னப்பனே.. சிவகுருநாதா...!!''

''போங்கள்.. நீங்கள் மிகவும் பொல்லாதவர்..!!'' எனச் சினுங்கி.. மூக்கை உறிஞ்சி.. வெட்கம் மறந்து என் நெஞ்சில் அவள் முகம் புதைத்தாள்.

அவளின் மிருதுவான தோள்களைத் தழுவி.. அவள் உச்சியில் முத்தம் கொடுத்தேன்.
'ஆஹா.. இதற்காகவே இவளைப் பலமுறை.. சீண்டி அழவைக்கலாம் போல் இருக்கிறதே..?'

என் நெஞ்சில் பொங்கிய காதல் உணர்வுடன்.. அவளை நன்றாகத் தழுவினேன். கரு நாகம் போல்.. பின்புறம் நீண்டிருந்த.. அவள் கூந்தலை நீவினேன். 

அவள் முதுகில் என் கைகளைப் படரவிட்டு.. அவளின் மார்க் கச்சு முடிச்சை வருடினேன். அவள் தலையில் என் உதடுகளைப் புதைத்தேன். 

அவளும் என் நெஞ்சில் தன் முகம் புதைத்து.. சூடாக மூச்சு விட்டவாறு.. அப்படியே என்னைக் கட்டிக் கொண்டு நின்று விட்டாள்.

மெலிதாய் முகிழ்த்து வரும்.. அவளின் சிறு கொங்கைகள் என் மார்பின் கீழ் பக்கத்தில் அழுந்தி... கூட்டில் அணைந்த.. வெண்புறாக் குஞ்சுகளின் அழகுகள் செய்யும் சில்மிசம் போல.. அவளது இதயத் துடிப்பை உணரச் செய்தது.. !!

சிறிது நேரம் பேச்சின்றி இருந்து விட்டோம்.
''இளவரசி...!'' மெதுவாக அழைத்தேன்.

சுய உணர்வு வந்தவள் போல.. என் நெஞ்சில் இருந்து மெதுவாக முகம் உயர்த்தி.. என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

நான் சட்டென அவளை இறுக்கி அணைத்து  அவள் கண்கள்.. கன்னங்கள்.. நெற்றி.. புருவம்.. மூக்கு... உதடுகள் என.. எல்லா இடத்திலும்  முத்தம் கொடுத்து... அவள் கழுத்தில் முத்தம் கொடுத்து.. அவள் மார்க்கச்சு மீது.. என் முகம் வைக்க..... சிலிர்த்துக் கொண்டு...சட்டென என்னை விட்டு விலகினாள்.

அடுத்த நொடியே.. அங்கிருந்து சிட்டாகப் பறந்து போய்.. என் கண்ணில் இருந்து மறைந்து விட்டாள்..!!

முதலில் ஏமாற்றம் என்னைத் தாக்கினாலும்.. என் இதயத்தில் ஒரு உவகை பிறப்பதை.. பின்னால்தான் உணர முடிந்தது. அவள் இதழ் சுவையை எண்ணியவாறு.. நான் முகம் திருப்பி நிலவைப் பார்த்தேன். இப்போது நிலவு கொஞ்சம் மேலேறியிருப்பதால்.. அதன் வட்ட வடிவழகு.. சிறிது குறைந்திருந்தது.

இப்போது அந்த நிலவுக்குக் கூட.. இரு விழிகள் இருப்பது போன்ற  ஒரு உணர்வு என்னுள் தோன்றி என்னைச் சிலிர்க்கச் செய்தது..!!

கீழே விழா மண்டபத்தில் இருந்து.. உற்சாகம் நிறைந்த.. மிகவும் ஆரவாரமான கரவொளிகள் கேட்டவண்ணமிருந்தது. அங்கே போகலாம் என்ற.. ஒரு எண்ணம் தோன்றி.. உடனே மறைந்தது..!!

என் இதயம்.. மகிழ்வதனியைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அவள் பெண்மை எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமாக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில்..... என் பின்னால் மெல்லடிகள் கேட்டன. அதனுடன்.. அவளது சுகந்த நறுமணமும்..!!

உடனே திரும்பினேன்..! சற்று முன்.. நாணம் தாங்காமல்.. என்னிடமிருந்து விடுபட்டு ஓடிய.. அதே மகிழ்வதனி..! இதழ்களில் குறுநகை படர...
'' இளவரசே...'' என்றாள்.

''ஹா..!! வா.. என் கனியமுதே..!! என் இதயப் புறா என்னைத் தவிக்கை வைத்து விட்டு.. பறந்து போய் விட்டதே என்று.. மனம் வருந்திக் கொண்டிருந்தேன்..!!'' என்றவாறு.. அவளை நோக்கி.. மெல்லடிகள் வைத்து நடந்தேன்.

''நில்லுங்கள்..!! அருகே வராதிர்கள்..!!'' என மெலிதான பதட்டக் குரலுடன்.. அவளது மெல்லடிகளைப் பின்னால் எடுத்து வைத்தாள்.

''வந்தால்...?'' அவளை நோக்கி முன்னேறினேன்.

''ம்கூம்.. வேண்டாம்..! பிறகு.. பிறகு நான்... நான்...''

எட்டி அவள் கரம் பற்றினேன்.
''ம்..ம்ம்.. பிறகு...? பிறகு.. நீ..? நீ.. ??"

அவள் முகம் தரை நோக்கிக் கவிழ்ந்தது.
''இது... இது.. முறையல்ல...''

'' எது முறையென்று சொல்லி விடுங்கள் தேவியாரே..? தங்கள் கோபத்துக்கு நான் ஆளாகி விடக் கூடாது.. அல்லவா..??'' அவளை என் பக்கம் இழுத்தேன்.

''போங்கள்..!! பொல்லாதவர்தான் நீங்கள்..!! விடுங்கள்.. என்னை..!!'' அவளது கிள்ளை மொழிச் சினுங்களில் என் செவிகள்.. களிப்புற்றன.

'' ஆமாம்.. நான்.. மிக மிக பொல்லாதவன்..!! ஆமாம்.. இது என்ன தேவி.. உன் மேகலை.. இவ்வளவு பெரியதாக இருக்கிறது..? '' என்றவாறே.. அவளின் நாபிக் கமலத்தருகே.. என் கையை வைத்தேன்.
''மேகலை பெருத்து விட்டதா.. அல்லது.. உன் இடை சிறுத்து விட்டதா..?''

''மேகலை.. எங்காவது பெருக்குமா.. இளவரசே...?'' எனச் சினுங்கலுடன் கேட்டவாறு.. என் கையைப் பற்றினாள்..!

ஆனால் என் கையை தடுக்கவில்லை.  அவளது ஆழிலை வயிற்றில் பதிந்த என் விரல்கள்  அவளின் சிறு  நாபிக் கமலத்தைத் தடவத் தொடங்கியது.. !!

மகிழ் வதனி -1

இரவு நேரத்து நிலா முற்றம்..!! கிழக்கு வானில்.. ஆரஞ்சு வண்ணத்தில் உதயமாகி.. கொஞ்சம்.. கொஞ்சமாக மேலெழுந்து வந்து கொண்டிருந்த.. எழில் மிகுந்த.. பௌணர்மி நிலைவயே.. நான் கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தேன்..!!

நிலவில் எப்போதும் காணப்படும் கலங்கம் இப்போது காணப்படவில்லை.. அதை யார் துடைத்தது என்று புரியவில்லை..! அல்லது ஆரஞ்சு வண்ணம் திரைத் துணியாக.. களங்கத்தை மறைத்துக் கொண்டிருக்கிறதோ..??

உதயமாகும்போது.. கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இந்த.. களங்கமற்ற.. வண்ண நிலவு.. மேலே மேலே என நகரும் போது.. கொஞ்சம்.. கொஞ்சமாகச் சிறியதாகி.. தூரமாகிக் கொண்டே போவது.. ஏன்..? என்பது.. எனது நீண்ட நாள் கேள்விகளில் ஒன்று..!!

ஆனாலும் நான் இந்த நிலவை ரசிக்க மறப்பதில்லை..!! நிலவு என்பது.. உண்மையில் ஆணா.. பெண்ணா.. என்கிற குழப்பத்தில்.. நான் பல நாள் உழன்றிருக்கிறேன்..! பெரும்பாலான கவிகள்.. நிலவைப் பெண்ணாகப் பாவித்துக் கவிதைகள் வடித்தாலும்.. அதற்கு 'சந்திரன்' என்கிற ஒரு ஆண் பெயரும்.. அதற்கேற்ற ஒரு கதையும் இருக்கிறதே...??

நிற்க..... இந்த ஆராய்ச்சி எல்லாம் நான் ஏன் செய்கிறேன் என்றால்.....?? என் பெயர்.. உதய சந்திரன்..! குடகு நாட்டு.. இளவரசன்..! என் பெயரில் சந்திரன் இருப்பதால்.. என்னை இந்தக் கேள்வி.. பல நாட்களாகக் குடைந்து கொண்டிருக்கிறது.. ஆனால் இன்றுவரை விடைதான் கிடைக்கவில்லை..!!

''நிலா உதயம் காண்கிறீர்களோ.. இளவரசே..?'' என எனக்குப் பின்னால்.. ஒரு கிள்ளை மொழிக் குரல் கேட்டு.. என் எண்ணச் சிறையிலிருந்து நான் மீண்டேன்..!

என் பின்னால் திரும்பினேன். பட்டுத் தூரிகையில் வரைந்த ஓவியம் போல.. மெல்லிய பட்டாடை காற்றில் ஆட.. மேன்மாடத்தில்.. என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மகிழ்வதனி..!!

ஆரஞ்சு வண்ண நிலவொளியில் அவள் வதனம்.. இன்னொரு நிலவாக பிரகாசித்தது..!!

''நான்தான்.. இளவரசே..!!'' என் மௌனம் கண்டு.. மென்னகை புரிந்தாள்.

''நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன..?'' என்றேன்.

முனுமுனுப்பாக. ''நிலவுக்கா..? கண்களா..? ஆ..! என்ன சொல்கிறீர்கள் இளவரசே..?'' என் கேள்வியின் அர்த்தம் புரியாமல்.. குழம்பி விட்டாள்.

''ஆஹ்ஹாஹா..!!'' என நான் வாய்விட்டுச் சிரித்தேன்.

''ஹ்ம்ம்.. போங்கள் இளவரசே..'' சினுங்கினாள் மகிழ்வதனி. ''நிலா உதயம் காண்கிறீர்களா.. என்று நான் கேட்டால்.. என்னென்னவோ.. சொல்கிறீர்கள் நீங்கள்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை...''

'' பேரெழில் பொங்கும்..உன் களங்கமற்ற வதனத்தைக் கண் இமைக்காமல்... கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தேன்.. இளவரசி..''

''என் முகத்தைக் கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தீர்களா..? நான் இங்கில்லாத போது.. எப்படி.. நீங்கள்...??'' அவள் என்னை குழப்பத்துடன் பார்த்தாள்.

என் வலது கரத்தை உயர்த்தி.. கிழக்கு நோக்கிச் சுட்டிக் காட்டினேன்.
'' அதோ..''

''ஓஓ..!!'' என்று வியப்பில்.. சிவந்த இதழ்களையும்.. பின் நயன விழிகளையும் அகல விரித்தாள்.
''இப்போதல்லவா புரிகிறது..!!''

''என்ன புரிகிறது.. இளவரசி..?''

''என்னைப் பார்த்ததும் கேட்டீர்களே.. நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன.. என்று..?''

''புரிந்தது கொண்டாயா..?''

''ம்ம்.. நன்றாகப் புரிந்து கொண்டேன்..! தங்களுக்கு என் மேல் உள்ள... அன்பையும்..!!'' அவள் வார்த்தை உச்சரிப்பில்.. ஒரு வெட்கத் திணறல் இருந்தது.

மெல்லடிகள் வைத்து.. அவள் என்னை நெருங்கி நின்ற போது.. அவளிடமிருந்து கமழ்ந்த.. அவள் பூ மேனியின்.. நறுமணம்.. என்னைக் களிப்படையச் செய்தது.
இளங் குமரியான.. ஒரு கன்னிப் பெண்ணின் பொன்மேனி வாசம்.. வாசனைத் திரவியங்கள் கலந்து.. வந்து.. என் சுவாசத்தில் புகுந்து.. என் உள்ளத்தை மிகவும் களிப்படையச் செய்தது..!!

''மண்டபத்தில் தங்களைக் காணாமல்.. நான்... இங்கு... தேடிக் கொண்டு வந்தேன் இளவரசே...!! ஏன் தனியாக இங்கு வந்து விட்டீர்கள்..??'' என்னைக் கேட்ட.. அவளின் இனிமையான குரல் என் செவியை இன்புறச் செய்தது.

''அமைதியை விரும்பி..!!'' என்றேன்.

''ஆ.. !!அப்படியெனில்  தங்கள் அமைதிக்கு நான்.. குந்தகம் விளைவித்து விட்டேனா..?''

''அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்..!'' என்றேன் குறும்பாக.

''ஓ..!! அப்படியானால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் இளவரசே..!! நான் வருகிறேன்..!!'' எனச் சொல்லி விட்டுத் திரும்பியவளின்.. மென் வளைக் கரத்தை எட்டிப் பிடித்தேன்.

''வருகிறேன்.. என்று விட்டு போகிறாயே..??''

''நீங்கள்தான்.. அமைதி வேண்டி.. அதை நான் கெடுப்பதாக...'' முதல் முறையாக நான் அவளைத் தொடுவதால்.. அவள் சிறிது நாணத்துடன் தலை கவிழ்ந்து நிலம் நோக்கி.. நின்றவாறு.. முனகினாள்.

''ஆம்.. இளவரசி..! என் அமைதி.. தனிமை.. எல்லாம் சீர்குலைந்து போனது.. உன்னால்..!!'' அவள் கரம் ஒரு பட்டாடை புழுபோல.. மிகவும் மிருதுவாக இருந்தது.

''அதனால்தான்.. நான் இங்கிருந்து... செல்லலாம் என்று..''

''நீ இங்கிருந்து செல்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டு விடாது.. மாறாக.. மேலும் என் மனம் அவதியுறவே செய்யும்..!!''

மிகுந்த தயக்கத்துடன்.. முகம் உயர்த்தி.. என்னைப் பார்த்தாள் மகிழ்வதனி. நான் மெலிதாகப் புன்னகை புரிந்தேன். அவள் மலர்க் கரத்தை விட்டு விடாமல் பிடித்தபடி கேட்டேன்.
''உன் கரத்தை நான் தொடலாம் அல்லவா..? அதைச் சொல்லிவிடு முதலில்..?''

வெட்கம் நிறைந்த முகத்தைச் சற்றுத் திருப்பிக் கொண்டாள்.
''சொல் இளவரசி.. உன் மலர்க் கரத்தைப் பற்றியது குற்றமா..?''

''உரிமையுள்ளவளின் கரங்களைத் தானே.. பற்றுகிறீர்கள் இளவரசே..? அது எந்த வகையில் குற்றமாகும்..??'' உள் அமுங்கிய குரலில் முனுமுனுப்பாகச் சொன்னாள்.

''காதல் வழக்காடு மன்றத்தில்.. அது அப்படித்தான் இருக்கிறது.. இளவரசி..!!''

''எனில்.. தங்களுக்கு.. காதலில் தேர்ந்த அனுபவம்.. இருப்பது போல் தெரிகிறது..??'' எனக் கேட்ட.. அவள் கேள்வியின் பொருள்.. என்னைச் சற்றுத் திணறச் செய்து விட்டது.

''ஓ.. நான் சொன்னதற்கு இப்படிக் கூட ஒரு பொருள் இருக்கிறதல்லவா..?? சரிதான்.. ஆனால் இளவரசி.. நான் இன்னும்.. எந்தப் பெண்ணின் காதல் வளையிலும் விழாதவன்.. என்பதை.. சற்று பெருமையுடனே சொல்லிக் கொள்கிறேன்..!!'' என்றேன்.

''பிறகு எப்படி...அப்படிச் சொன்னீர்கள்..??''

''நான் படித்த.. காதல் கதைகள் எல்லாம் அவ்வாறுதான் இருக்கின்றன.. இளவரசி..! தவிறவும் நான் பேசியது.. ஒரு சிலேடைக்காகத்தான்.....''

''அதற்கு.. பெண்களாகிய நாங்கள்தான் கிடைத்தோமா..?? காதல் வழக்காடு மன்றத்தில்.. ஆண் - பெண் இரண்டு பேர்தானே..?? மனம் கவர்ந்தவன் தன் மலர்க்கரம் பற்றும் போது.. எந்தப் பெண்.. அதைக் குற்றமெனச் சொல்லுவாள்..?? எப்போதடா.. நம்மைத் தொடுவார் என்றல்லவா.. எந்தப் பெண்ணின் மனமும்.. ஏக்கமுறும்.. ??''

''மன்னிக்க வேண்டும்.. இளவரசி மகிழ்வதனி.. அவர்களே..! நான் ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில்... ம்கூம்... இல்லை.. இல்லை... தங்களின்.. தளிர்க்கரம் பற்றிய.. காதல் மயக்கத்தில்.. தவறுதலாக ஏதோ உளறிவிட்டேன்..!!'' என்றேன்.

என்னைச் சரணடையச் செய்து விட்ட.. மகிழ்ச்சியில்.. வெற்றிப் புன்னகை சிந்தினாள்.
''உரிமை உள்ள இடத்தில்.. ஐயம் வரக் கூடாது.. இளவரசே..!!''

'' மன்னிக்க வேண்டும்.. மகிழ்வதனி..!! அப்படியானால்......''

''ஹ்ம்ம்.. அப்படியானால்...??''

''என் உரிமை என்பது.. குற்றமாகாது..??''

''ம்கூம்..!! என்னிடத்தில்.. அனைத்து உரிமைகளும் தங்களுக்கு உண்டு..!!'' அவள் குரலில்.. அவளது அபிலாசை தெரிந்தது.

அவளின் பட்டுக்  கரத்தை சற்று இறுக்கிப் பிடித்தேன். அவளை  என் பக்கத்தில் இழுத்து.. நிறுத்தினேன். என் மார்பில் அவள் பட்டாடை தொட்டு விளையாடியது.

''மகிழ்வதனி...''

''நீளமாக வேண்டாம்..! மகிழ் என்றே அழைக்கலாம்..!!'' எனச் சொன்னாள்.

ஒருவர் பெயரை நீட்டிச் சொல்வதை விட.. சுருக்கி அழைப்பதே.. மிகவும் நெருக்கமான.. ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும்..! காதலில்.. அதை எவ்வளவு சுருக்க முடியுமோ.. அவ்வளவு சுருக்கி கொள்ள வேண்டும். !

''மகி.. என்றுகூட அழைக்கலாமே..?''

''ஓ..!! அழைக்கலாமே..!!'' என்றாள.

''ம..! என்று கூட.....''

''போங்கள்.. கிண்டலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது..!!'' செல்லமாக என் நெஞ்சில் குத்தினாள்.

முதல் முறையாக அவள் என்னைத் தொடும் உணர்வு... அவளுக்கும் அது உவப்பாகவே இருக்கும்..! அவளின் அந்தக் கரத்தையும் நான் பற்றினேன்.

'' என்னைத் தேடிக் கொண்டு...இங்கு வந்ததாக.. சொன்னாயே மகிழ..?''

''ஆ.. ஆமாம்...''

''என்ன காரணமோ..? அதை நான் அறிந்து கொள்ள.. தடை ஒன்றும் இருக்காது.. என்றே நம்புகிறேன்..?''

''இ... இல்லை..!! ஏதாவது பேசிக் கொண்டிருக்கலாமே.. என்று...''

''ஏன்.. கீழே என் தங்கை.. அவளது தோழிகள்.. உன் தமக்கை.. இன்னும் அன்னையர்கள் எல்லோரும் இருக்கிறார்களே.. அவர்களுடன்...'' எனச் சொல்லிக் கொண்டே.. அவள் வளைக் கரங்களை வளைத்து.. மெதுவாக என்னுடலுடன்.. அவள் பூ உடலைச் சேர்த்து அணைத்தேன்..!

மார்க்கச்சை கவ்விய.. முகிழ்த்து வரும்.. அவளின் இளம் கொங்கைகள்.. மெத்தென்று வந்து என் மார்பில் அணைய... அந்த நொடியில்... நான் பேச்சை மறந்தேன்.. !! 

மகிழ் வதனி -3

''உஷ்.. சூ..!! என்ன இளவரசே.. இது..? விடுங்கள்.. யாராவது வரக்கூடும்..!!'' மெல்லிய சிணுங்கலுடன்.. அவளது அழகிய சுழியுடன் இருந்த  நாபிக் கமலத்தை வருடிய என் விரல்களை  அங்கிருந்து அப்புறப் படுத்தினாள் மகிழ்வதனி.

''யார்.. வருவார்கள்..?''

நிலவுப் பேரொளியில் அவள் பூ மேனி.. பொன்னில் வார்த்த.. பொற்சிலையென பிரகாசிக்க.. அவள் மீது கொண்ட காதலால்.. நான் உன்மத்தம் கொண்டிருந்தேன். என் திருமேனியால்.. அவள் பூ மேனியை.. மேவிப் புணர்ந்திட.. என் ஆண்மை ஏக்கம் கொண்டிருந்தது.

''யார் வேண்டுமானாலும் வருவார்கள்.. !! ஏன்.. முதலில் உங்கள் தங்கைதான்.. என்னைத் தேடிக் கொண்டு வருவாள்..!! உங்களை விடவும்.. உங்கள் தங்கை என்னை அதிகம் விரும்புகிறாள்..!! என்னை விட்டு ஒரு நொடி கூட பிரிந்து இருப்பதில்லை..!! நல்ல வேளை... அவள் ஒரு பெண்ணாக பிறந்தாள். அவளும் தங்களைப் போல ஒரு  ஆணாகப் பிறந்திருந்தால்.. என்னாவது என் நிலமை..!!'' என்று புன்னகைத்தாள்.

அவளது கிள்ளை மொழி.. சிலேடைப் பேச்சில் இருவரும் நகைத்தோம். அந்த நகைப்பின் இடையில் நான் .. அவளை அணைக்கத் தவறவில்லை..!

''என்னாகும்.. உன் நிலமை..?? ஒரே அரண்மனையில்.. இரண்டு இளவரசர்களுடன்...'' நான் முடிக்கும் முன்.....

''அய்யோ... ச்சீய்..!! என்ன உளறுகிறீர்கள்..?'' என்றாள்.  தட்டென தன் உடம்பை விறைத்தது.

'' ஏன்.. என்ன உளறி விட்டேன் இப்போது..? ஒரே அரண்மனையில் இரண்டு இளவரசர்களுடன்.. நீ...''

''ம்..ம்ம்.. நான்..??'' என் முகம் ஏறிட்டாள்.

''ஒரு இளவரசனை நீ காதலனாகவும்.. இன்னோர் இளவரசனை.. மகனாகவும் பாவிக்கலாமே.. என்று சொல்ல வந்தேன்..! அது ஒரு குற்றமா..??'' என் ஒரு கரத்தை விம்மியிருக்கும்  அவளின் மலர்க் கொங்கை மீது... மென்மையாகப் பட  வைத்தேன்.

''போங்கள்.. பேச்சிலும் வல்லவர்தான் நீங்கள்..! நான் போகிறேன்..!!'' என் கரத்தை நகர்த்தி விட்டு.. என்னிடமிருந்து போலிக் கோபத்துடன் விலக முற்பட்டாள்.

''காதலுக்கு அழகு.. விலகி விலகிப் போவதல்ல.. என் கண்மணியே..! இணை பிரியாத அன்றில்களாக எப்போதும்.....'' சட்டென அவள் கரங்களை எடுத்து என் முகத்தில் பதித்தேன்.

''நீங்கள் மோசக்காரர்தான்..!! வாய்ப் பேச்சில்.. மிகவும் வல்லவர்.. என்பது நன்றாக தெரிகிறது..!! விடுங்கள் என்னை.. நான் போகிறேன்..!!'' அவள் சிணுங்கல் அதிகமானது.

''ஆஹா.. இதைச் சொல்லிப் போகத்தான் திரும்பி வந்தாயோ.. தேவி..??'' அவளது வலக் கரத்தை என் உதட்டில் பதித்து.. அதில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

''நீங்கள் குறும்பு செய்யாவிட்டால்.... உங்களுடனேயே இருக்கத்தான் விரும்புகிறேன்..! ஆனால்.. தாங்கள்தான்... நான் கொஞ்சம் ஏமாந்தாலும்...'' என் முத்தம் அவள் பெண்மைக்குள்ளும்.. அதிர்வலைகளைக் கிளப்பும்.

''சரி.. சரி.. உன்னிடம் இப்போது நான் குறும்பு ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை.. என்று வாக்குறுதி அளிக்கிறேன்.. போதுமா..?'' என நான் சொன்னேன்.

''இப்போது என்றால்..??''

''பொல்லாத சந்தேகம்..? இப்போது என்றால்... இந்த இடத்தில்.. இங்கே... இந்த நொடியில்... என்று பொருள்..!!"

" அதாவது.. நாம் இங்கிருந்து போகும்வரை..??''

மிகவும் சமயோஜிதமாகத்தான் இருக்கிறாள் கள்ளி..! ஆனால் அந்தக் கள்ளியையும் கவிழ்ப்பவன்தானே.. கள்வன்..!!

''சரி..அப்படியே ஆகட்டும்..!!''

''அய்யோடி.. இப்போதுதான்.. என் நெஞ்சுக்கு நிம்மதி..!!'' என தன் மார்பில் கை வைத்துச் சொன்னாள்.

''எங்கே.. அந்த நெஞ்சை நானும்.. சற்று...'' என் கையை அவள் கொங்கைமீது வைக்க முயல.. தட்டென என் கரத்தைத் தட்டி விட்டாள்.

''ஹ்ம்ம்.. என்ன ஒரு பொல்லாத்தனம்..? ச்சி.. தங்களைக் காண வரும்போதெல்லாம்.. எப்போதும் என்னுடன் மெய்க்காவல் படையை வைத்துக் கொள்ள வேண்டும்..! அப்போதான்.. தாங்கள் ஒழுக்கமானவராக இருப்பீர்களா..!!''

''மெய்க் காவல் படையை துணைக்கு வைத்துக் கொண்டு புரியும் செயல் காதல் ஆகாது.. என் கட்டிக் கரும்பே..!!'' என நான் அவளைக் கொஞ்ச முயன்ற நேரம்..... மகிழ்வதனி சொன்னது போல... என் தங்கை மகிழ்வதனியைத் தேடிக் கொண்டு மேன்மாடத்திற்கு வந்து விட்டாள்..!!

''இரண்டு பேரும் இங்கே என்ன செய்கிறீர்கள்.. அண்ணா..?'' என் தங்கை கேட்க... மகிழ்வதனி முந்திக் கொண்டு சொன்னாள்.

''உன் அண்ணா.. தனிமையை நாடி வந்து.. அமைதியை விரும்புகிறாராம்..! விழா மண்டபத்து கொண்டாட்டங்களில் அவர் மனம் லயிக்கவில்லையாம்..! அதோ தெரிகிறதே.. தூரத்து நிலா.. அதைக் கண்டு அவரது மனம் ஆனந்தமடைகிறதாம்..! அதுதான்... நானும் அவர் மோன லயத்தைக் களைக்க முயன்று கொண்டிருந்தேன்..! நல்லவேளை.. நீ இங்கு வந்தாய்.. எனக்குத் துணையாக..!''

'' ஆம்.. தேவி..! என் அண்ணாவுக்கு.. இளம்பிராயம் முதலே.. அந்த நிலா மீது ஏனோ.. அவ்வளவு காதல்..!! நிலா உதயமாகும் நேரம் எல்லாம்.. என் அண்ணா.. மேன் மாடத்தில்தான் தனித்திருப்பார்..!! அந்த நேரத்தில் அவரை யார் தொந்தரவு செய்தாலும்.. அவருக்கு பிடிக்காது..!!'' என.. தன் பங்குக்கு.. என்னைப் பற்றித் தம்பட்டம் அடித்தாள் என் தங்கை.. அலைக்குமரி..!!

இப்படி இரண்டு வாயாடிப் பெண்கள் இருக்குமிடத்தில்.. எந்த ஆண் மகனுக்குத்தான்.. காதல் உண்ர்வு தழைத்தோங்கும்..??

அதன்பிறகு.. நான் அதிகம் பேசாமல் அமைதியை கடை பிடித்தேன்.  மகிழ்வதனியின்.. மேனி அழகை.. நிலவொளியில் என்னால் ரசிக்க மட்டுமே முடிந்தது..!!

இரவு....!! 

அரண்மனை நந்தவனத்தில் நான் தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். பலவகை மலர்களும்.. இரவில் பூத்துக் குலுங்க.. மலர்களின் சுகந்த மணத்தில் என் மனம் மயங்கியிருந்தது. இளந் தென்றலின்.. இதமான தாலாட்டில் என் மேனி சிலிர்த்துக் கொண்டிருந்தது..! வானத்து நிலவு இப்போது நடுவானில் இருந்தது..!

நிலா பெரிய வட்டமாக இல்லை.. இப்போது..! உதயமான போது இருந்ததிலிருந்து.. பாதி நிலவு இளைத்து விட்டது போல.. சின்ன வட்டமாகக் காணப்பட்டது..! அதில் களங்கமும் இப்போது சேர்ந்து கொண்டிருந்தது..! தூரத்தில் தாரகைகள் எல்லாம்.. அழகழகாய் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன..!!

சிறிது நேர உலாவலுக்குப் பின்.. பனித்துளி படர்ந்த.. நுனிப்புல்மீது.. உட்கார்ந்து.. கரங்களால் தடவிப் பார்த்து.. உள்ளங்கையில் படர்ந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு.. மெதுவாகப் பின்னால் சாய்ந்து மல்லாந்து படுத்தேன்.!

ஒரு வித மோன லயிப்பில்.. வானத்தையும்.. அதனடியில் காணப்படும்.. வான மண்டலக் காட்சிகளையும்.. ரசித்துக் கொண்டிருந்த என்மேல்.. திடுமென எதுவோ ஒன்று வந்து விழுந்தது..!

'என்ன அது..?' திடுக்கிட்டு.. பின்.. நிலவொளியில் தெரிந்த அதைக் கையிலெடுத்தேன். அது ஒரு பூச்செண்டு..!!

'ஆ... இது எப்படி.. என்மேல்..? யார்..? எங்கிருந்து..?' படுத்தவாக்கிலேயே.. சுற்றிலும் என் பார்வையை ஓட்டினேன். சற்றுத் தள்ளி.. பூச்செடி மறைவில் இருந்து.. அந்த மெலிதான அசைவு தெரிந்தது..! கூடவே.. நந்தவனப் பூக்களின் வாசணை மிகுந்த நறுமணங்களையும் கடந்து.. வந்த.. அந்த புனுகு பூனை வாசணை...?? அது.. என் அன்புக்குரியவளின்.. பூ மேனி வாசணையல்லவா..!!

மகிழ்வதனி.. என்னைக் காண வந்திருக்கிறாள் என்கிற.. உணர்வே.. என்னை மிகவும் களிப்படையச் செய்தது.! எதையும் நான் அறியாதவன் போல.. மீண்டும் மல்லாந்து படுத்து.. வானத்தை நோக்கினேன். சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு பூச்செண்டு காற்றில் பறந்து வந்து என் மேல் விழுந்தது. அதை எடுத்து முகர்ந்தவாறு..

''விளையாடியது போதும்..!! மரியாதையாக என்னிடம் வந்து விடு.. மோகினிப் பெண்ணே..!! நீ யாருடன் விளையாடுகிறாய்.. என்று தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறாய்..!!'' என்றேன்.

செடி மறைவில் இருந்து.. 'க்ளுக் ' கென அவளது சிருங்காரச் சிரிப்பொலி கேட்டது.
''யாருடன் விளையாடுகிறதாம்.. இந்த மோகினிப் பெண்..??''

''தெரிந்து கொள்ள ஆவலா.. மோகினியே..?''

''ஆமாம்..!!''

''சரி.. கேட்டுக்கொள்..! நான் உதய சந்திரன்.. என்.. உயிரில் கலந்த.. அன்புக் காதலியின் பெயர் மகிழ்வதனி..!! மகிழ்வதனி என்கிற பெயரைக் கேட்டு.. அவளை நீ.. மெல்லினம் படைத்தவள் என்று எண்ணி விடாதே..!! அவள் பார்க்கத்தான்.. பூ போல இருப்பாள்..!! பழக்கத்தில் அவள் ஒரு ராட்சசி.. மனதைக் கொள்ளை கொண்டு விடுவாள்..!! பேச்சில் அவள் ஒரு அரக்கி.. மனதை நார் நாராக கிழித்து விடுவாள்..!! கோபத்தில அவள் ஒரு பத்ரகாளி.. ருத்ரதாண்டவமே ஆடி விடுவாள்..!! அகில உலகத்தையும் காத்தருளும்.. உமை மணாளனாகிய.. அந்த சிவ பெருமானே.. அவளைக் கண்டால் அஞ்சி விடுவார்.. அவ்வளவு கோபக்காரி அவள்..!! அவளது ஆருயிர்க் காதலனான.. என்னுடன் சாதாரன ஒரு இரவு மோகினிப்பெண் விளையாடுகிறாள்  என்று தெரிந்தால்... அவ்வளவுதான்.. உன் நிலமை..!!'' என நான்.. அளந்து விட்டேன்.

இப்படிச் சொன்னால் எந்தக் காதலிக்குத்தான் கோபம் வராது..? வந்தது...!!

தொடர்ந்து நான்கைந்து பூச்செண்டுகள் என்மேல் வேகமாக வந்து விழுந்த வண்ணமிருந்தது..!!

''இங்கிருந்து.. நீ கோபப்படாமல் போய்விடு மோகினிப் பிசாசே..! பொருமையில்தான் அவள் பூமாதேவி.. அவளுக்கு கோபம் என்ற ஒன்று வந்துவிட்டதோ..?? அவ்வளவுதான்..!! தரை தொடும் உன் பத்தடிக் கூந்தலில் ஒற்றை மயிர்கூட மிஞ்சாது..!! பிறகு மொட்டைத் தலையுடன் உலா வரும் உன்னை எவரும் சீந்தக் கூட மாட்டார்கள்..!! ஓடிவிடு இங்கிருந்து..!!'' என்றேன்.

அதற்கு மேலும்.. அவளால் பொருமை காக்க முடியவில்லை. செடி மறைவில் இருந்து.. வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு என்னிடம் வந்தாள்.! நான் கண்களை மூடிக்கொண்டு மேலும் சொன்னேன்.
''நான் இவ்வளவு சொல்லியும் கேட்காமல்.. என் அருகில் வேறு வந்து விட்டாயா..?? அப்படியானால்.. நீ மொட்டைத் தலை மோகினியாகத்தான் அலையயப் போகிறாய்..!! எதற்கும்.. உன்னை ஒருமுறை.. அழகிய மோகினித் தோற்றத்தில் பார்த்து விடுகிறேன்..! அதற்கு பிறகு.. உன்னைக் காணச் சகிக்காது..!! நீ அவ்வளவு கொடூரமாக இருப்பாய்..!!'' என்று என் மூடிய இமைகளைத் திறந்து பார்த்தேன்.

அப்போதுதான்.. அவளைப் பார்ப்பது போல.. சடக்கென எழுந்து உட்கார்ந்து..
''ஓஓ.. என் மகிழ்வதனியா..?? வா தேவி..!! இப்போதுதான்.. சற்று முன்.. இங்கு ஒரு மோகினிப் பிசாசு வந்து என் மீது மலர்ச்செண்டை வீசி விளையாடிக் கொண்டிருந்தது..! உன்னைப் பார்த்ததும் அது பறந்து ஓடி விட்டது போல் இருக்கிறது..!! ஏய்ய்.. மோகினிப் பிசாசே.. எங்கேயாவது இருக்கிறாயா..?? அப்படி எங்காவது ஒளிந்து கொண்டிருந்தால்.. ஓடிவிடு இங்கிருந்து..!! இதோ.. நான் சொன்ன.. என் இதய ராணி வந்து விட்டாள்..! அவள் கண்ணில் பட்டு விடாதே..!!'' என்றேன்.

''மோகினிப் பிசாசிடம் என்னைப் பற்றி ஏதோ சொன்னதாகச் சொன்னீர்களே..??'' என்னை நெருங்கி நின்றாள்.

''ஆமாம்..!! இப்படி  அமர்.. !!" புல் தரையில் தட்டினேன்.

''இருக்கட்டும்..!! அந்த மோகினி பிசாசிடம் என்ன சொன்னீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்..!!'' அவள் குரலில் உஷ்ணம்  தெரிந்தது.

நான் அவளை.. அன்னாந்து பார்த்து... வலது கரத்தின் ஒற்றை விரலை உயர்த்திச் சொன்னேன்.
''உண்மையைச் சொன்னேன்..!!''

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிலவொளியில் என்னை முறைத்தாள்.
''அது என்ன.. வலது கரத்தின் ஒற்றை விரலை உயர்த்தி... சுழற்றி...??''

''ஓ.. அதுவா..?? அது ஒன்றும் இல்லை.. மகிழ்வதனி..!! 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த' என்கிற ஒரு நடிகர்.. பல நூற்றாண்டுகளுக்குப் பின்.. ஒரு திரைப் படத்தில் இப்படித்தான்.. வலது கரத்தை உயர்த்தி... ஒற்றை விரலைச் சுழற்றி.. வசனம் பேசி.. ரசிகர்களை மகிழ்விப்பார் என்று.. இப்போதுதான் இங்கு.. மல்லாந்து படுத்துக் கொண்டு... வானத்தைப் பார்த்து.. வான சாஸ்திரம் சொல்வதை யோக நிஷ்டையில் உணர்ந்து கொண்டிருந்தேன்..!!'' என்றேன்..!!

அவள் எவ்வளவு கடுப்பாகியிருந்தால்... 'ணங்ங்..' கென்று என் மண்டையில் ஒரு கொட்டு வைத்திருப்பாள் என்று.. பார்த்துக் கொள்ளுங்களேன்.. !! 

வியாழன், 18 ஜூலை, 2019

நீ இல்லா நேரம் -2

மறுநாள்.. !!  

சௌமியா  காபி போட்டு எடுத்துக்கொண்டு போனபோது.. அவளது அண்ணன் பூந்துகிலன் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள் ஷாலினி.. !!

ஷாலினி.. பக்கத்து வீட்டு பெண்களில் ஒருத்தி..! அவளது அண்ணனுக்கு சிறுவயது தோழியும் கூட..!!

காபியை அவர்களுக்கு கொடுத்து விட்டு.. எதிர் சோபாவில் உட்கார்ந்தாள் சௌமி. 

சாதாரணமாக ஷாலினியின் பேச்சுக்கள் அப்படி ஒன்றும் ரசிக்கும்படியாக இருக்காது என்பது சௌமியின் அபிப்ராயம்..!! 

ஷாலினி உதட்டில் புன்னகை தவழ.. நுனி நாக்கு ஆங்கிலத்தை சற்று அலட்டலாக பேசுவாள்..!! 

அந்தவிதமான அலட்டலான பேச்சுக்களில் எல்லாம் சௌமிக்கு எப்போதுமே உடன்பாடு இருக்காது..!!

தன் அண்ணனுடன் பேசும்  ஷாலினியின் தன்முனைப்பான பேச்சைக் கேட்டு.. சௌமி சட்டென வாய்விட்டு சிரித்து விட்டாள்..!!

 அவளது கேலிச் சிரிப்பை பார்த்து.. தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள் ஷாலினி.
''என்ன சௌமி.. திடீர் சிரிப்பு..??''

வெறுமனே தலையை அட்டிச் சிரித்தாள்.
''நீ பேசு..''

பூந்துகிலும் கேட்டான்.
''இப்ப எதுக்கு சிரிச்ச நீ..?? ஷாலு அப்ப்படி ஒண்ணும் நீ சிரிக்கற மாதிரி பேசலயே..??''

அவர்களது பேச்சுக்கு தடையாக இருக்க சௌமி விரும்பவில்லை. தலையை ஆட்டிக் கொண்டே.. எழுந்தாள்..!

''நீங்க பேசுங்க..!!'' என அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.

''சௌமிய புரிஞ்சுக்கவே முடியாது..! நிருதிதான் பாவம்..!!'' தன் அண்ணனிடம் ஷாலினி சொல்வது கேட்டது..!!

தன் அறைக்குள் போய்.. கட்டிலில் உட்கார்ந்தாள்.

 செய்வதற்கும் வேலைகள் ஒன்றும் இல்லை. கட்டிலில் கால் நீட்டிப் படுத்து கண்களை மூடினாள்..!!

 அவளது இளம் மார்பகங்கள் விம்மியெழ.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்..!!

 சில நொடிகளில் அவளது எண்ணச் சிதறல்களை முழுமையக்கி.. அவளது கவனத்தை.. அவள் உடம்பின்மீது நிலை கொள்ளச் செய்தாள்..!!

அவளின் இதயம் துடிப்பதை.. துள்ளியமாக கவனித்தாள்..!!

 அப்படியே எந்தவித எண்ணங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல்.. அவளது இதயம் துடிக்கும்.. வெறும் உணர்வுடன் கலந்து போனாள்..!!

 எத்தனை நேரம் அப்படி இருந்தாள் என்று தெரியவில்லை.. !!

''சௌமி..!!'' கௌரியின் குரல் கேட்டு கலைந்தாள். கண்களை திறந்து கௌரியை பார்த்தாள்.

''தூங்கிட்டிருந்தியா.. ஸாரி..'' பக்கத்தில் வந்தாள் கௌரி.

சௌமி எழுந்து உட்கார்ந்தாள்.
''தூங்கல.. 'சும்மா ' படுத்திட்டிருந்தேன்..! ஸ்ருதி..??''

''தூங்கிட்டிருக்கா..!! பக்கத்துல அம்மா இருக்கு..! உன்ன பாக்கலாம்னு வந்தேன்..!!''

''உக்காரு..''

''ஒரு சின்ன டவுட் சௌமி..'' கட்டிலில் உட்கார்ந்தாள் கௌரி.

''என்ன..??''

''கனவுகளுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா..??''

''ஒரு கோப்பை தேனீர்..!!'' சிரித்தாள் சௌமி.

''அது.. கனவா நெஜமான்னே.. எனக்கு புரியல...''

'' எதுவானாலும் அதை ஒதுக்கிரு..!! விழிச்சிக்கோ..!! அதான் அழகு..!!''

''ஆனா.. சௌமி.. இப்பவும் அது எனக்கு கனவா தோணல..''

'' ம்.. ம்ம்..!!''

''ஆனா.. அது நிஜமும் இல்ல..!!''

''கரெக்ட்...''

''அப்ப அது என்ன..??''

''எனக்கும் தெரியாது..!!''

''சரி.. சொல்றேன் கேளு..!! நேத்து மிட் நைட்டுக்கு மேல இருக்கும்.. எண்ணங்களை வேற நான் கவனிச்சிட்டு இருக்கேனா.. ஒரே கனவு மயமா இருக்கு. தூக்கம் கூட நிறைவா தோணல. படுத்து ஒரு பத்து நிமிசத்துல எழுந்துட்ட மாதிரி இருக்கு..! ஆனா.. காலைலதான் எந்திரிச்சுருக்கேன்..! என் கனவு என்னன்னா... நேத்து நைட்.. எங்க ரூம் புல்லா பிரைட் ஆகிருச்சு.. பகல் மாதிரியே.. அப்படி ஒரு பிரைட்னஸ்.. நான் கீழ படுத்துருக்கேன்.. ஆனா.. என்னை போலவே இன்னொரு கௌரி.. என் முன்னால நின்னுட்டு டான்ஸ் பண்றா.. என்னை நானே பாக்கறதுல எனக்கு ஏக பயம்..! அந்த பயத்தோடவே என் மனசுல ஒரு அசட்டு தைரியம்.. என்ன நடக்குதுனு பாக்கலாங்கற மாதிரி..!! அப்ப என் சுய உணர்வு எனக்கு நல்லாவே இருக்கு.. நான் பயப்படறது எனக்கு தெரியுது..! எனக்கு நானே தைரியம் சொல்லிக்கறேன்.! அப்பதான் என் முன்னால நிக்கற கௌரி டான்ஸ் பண்றா.. பண்ணிட்டே கீழ படுத்துருக்கற எனக்கு கை குடுக்கறா.. நானும் கை கொடுக்கறேன்.. ஆனா ரெண்டு பேரும் இணைய முடியல.. எனக்கு ரொம்ப பயமாகி நான் கத்திட்டேன்..!! அதுல படுத்துருக்கற கௌரியாதான் என்னை நான்  பீல் பண்ணேன்..!! பயத்துல சட்னு முழிச்சிட்டேன்..!! முழிச்சு பாத்தா.. ரூம் நார்மலாதான் இருக்கு.. சந்தர் என் பக்கத்துல சாதுவா படுத்து தூங்கிட்டிருக்காரு..!! இப்பவரை அதை என்னால ஒரு கனவா ஏத்துக்க முடியல..!! அதான் உன்ன கேக்க வந்தேன்..?? உனக்கு இந்த மாதிரி நடந்திருக்கா..??''

சிரித்தாள் சௌமி.
''நெறைய தடவை நடந்துருக்கு..!! இப்ப கூட சமயத்துல எப்பவாவது வரும்..!! ஆனா நான் அதுலாம் ஆராய்ச்சி பண்றதே இல்ல..!! உனக்கு மறுபடி அந்த மாதிரி மயக்க நிலை வரும்.. அதுல பயப்பட ஒன்னுமே இல்ல..!! உனக்குள்ள என்னமோ நடக்குதுனு நெனச்சிட்டு அப்படியே மறந்துரு அத..!!''

''ம்..ம்ம்.. சரி..!!''

''முடிஞ்சவரை கடந்த காலத்தை கை விட்டர்றது நல்லது..! அதாவது காலத்தை கடந்த நிலை..!! நிகழ்காலம் ஒன்னு மட்டும் நிஜம்..!! கடந்த காலம் ஒரு கனவு..!! எதிர் காலம் ஒரு கனவு..!! நிகழ் காலம் மட்டுமே நிஜம்..!! அத கூட... காலத்தோட அடிப்படைல இல்ல..!! உண்ர்வு நிலைலதான் நிஜம்..!! காலத்த கடந்த நிலைல என்னிக்கும் இருக்கறது நம்ம உணர்வுகள் மட்டும்தான்.. அதுதான் நிஜம்..!! அங்க காலமே கிடையாது..!! நீ புரிஞ்சிக்க வார்த்தை வேனும்ங்கறதால நிகழ்காலம் ன்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டியிருக்கு..!! அதெல்லாம் தர்க்க ரீதியான பிரச்சினைக்கு கொண்டு போகும்..!! ஸோ.. எல்லாத்தையும் ஒரு சாட்சியா மாத்திரம் மட்டும் நின்னு கவனிச்சு பாரு..!! காலமற்ற.. அந்த நிகழ்கால உணர்வு.. உனக்கும் கை வரலாம்..!!''  என்று விளக்கினாள் சௌமி.

''என்னால முடிஞ்சவரை.. நீ சொல்றதை ஃபாலோ பண்றேன்..!!'' சௌமியின் கையை பிடித்துக் கொண்டு சொன்னாள் கௌரி.

பூந்துகில் அறைக்குள் நுழைந்தான்.

''நீ ஏதேதோ பேசற சௌமி..! எனக்கு சுத்தமா ஒன்னும் புரியல..!!''

''நீ எப்ப வந்த..??'' கௌரி கேட்டாள்.

''நீ உள்ள வந்ததும் ஷாலினி போய்ட்டா.. சரி உங்க கூட பேசலாம்னு வந்தேன்..! நான் டிஸ்டர்ப்பா இருப்பனோன்னு.. நீங்க ரெண்டு பேரும் பேசறத கேட்டுட்டு.. அப்படியே நின்னுட்டேன்..!!''

சௌமி சிரித்தபடி தன் அண்ணனிடம் சொன்னாள்.
''இதெல்லாம் பைத்தியங்களோட சம்பாஷனை.. நீ காதுல வாங்கிக்காத..!!''

'' எது..??'' உள்ளே வந்து சேரில் உட்கார்ந்தான்.

''நாங்க பேசினது..!!''

''ம்கூம்..!! உன்ன பாத்தா அப்படி தெரியல..!! உன்கிட்ட ஏதோ ஒரு அற்புதம் நடந்துருக்கு.. ஆனா அது என்னன்னுதான் புரியல..!!''

'' வெரி சிம்பிள்.. நான் ஒரு பைத்தியம்ங்கறத இப்ப நான் உணர்ந்துட்டேன்..!!'' என்று  சிரித்தாள் சௌமி.

''உன் பேச்சு பைத்தியக்காரத் தனமானது இல்ல..''

கௌரி குறுக்கிட்டாள்.
''பூ.. ஒரு பைத்தியம் தன்னை பைத்தியம்னு உணர ஆரம்பிச்சிட்டா அது.. சுத்தமா தெளிஞ்சிருச்சுனு அர்த்தம்..!! நம்ம சௌமி இப்ப தெளிஞ்சவ..!! ஆனா நாம..?? நாமதான் ரொம்ப அறிவாளி.. ரொம்ப தெளிவானவங்கனு நினைச்சிட்டு இருக்கோம்..!! லாஜிக் புரியுதா..?? சௌமி நம்மள மாதிரி இல்ல..!!''

'' ஓ..ஓ..!!'' புரிந்து கொண்டதாய் வியப்பைக் காட்டினான் பூந்துகில்.
''என்னை நான் அறிவாளின்னில்ல நெனச்சிட்டு இருக்கேன்..!!''

''என்ன பண்ண.. நான்கூட இன்னும் அறிவாளிதான்..!!'' எனச் சிரித்தாள் கௌரி..!

சௌமி சிரித்தபடி மீண்டும் சொன்னாள்.
''நாம அறிவாளியா நடிச்சிட்டு இருக்கோம்ன்றத உணர்ந்துட்டா நமக்கு நல்லது..! அப்படி இல்லாம நாம நெஜமாவே அறிவாளிதான்னு உறுதியா நம்பினா.. அது ரொம்ப ஆபத்து..!! உண்மையான அறிவாளி தன்னோட முட்டாள்தனத்தையும் தெரிஞ்சு வெச்சிருப்பான்..! சமயத்துல அதை மதிக்கவும் செய்வான்..!! ஆனா முட்டாள் அப்படி இல்ல..! அவனோட முட்டாள்தனம் பத்தி அவனுக்கு எதுவும் தெரியாது.! எப்பவும் அவன் ஒரு அறிவாளின்னும்.. மத்தவங்களைவிட.. தான் உயர்ந்த மனுஷன்னும்.. உறுதியா நம்பிட்டிருப்பான்..!!''

''ஓ...!!''

''நாம எப்படி இருக்கோம்னு பாக்கறதுதான் சாட்சி..!! அப்படி இல்லாம.. நாம நல்லா படிச்சிருக்கோம்.. பட்டம்.. பேரு.. புகழ் எல்லாம் வாங்கிருக்கோம்னு.. மேதமையான அபிப்ராயத்துக்கு போய்டக் கூடாது..!!''

''எப்படி.. எப்படி..??''

''நாம எப்படி இருக்கோம்னு பாக்கறது அகநிலை..!! அதாவது நம் எண்ணங்கள்.. சிந்தனைகள்.. என்ன ரீதியா இருக்குனு பாக்கறது..!! உன் எண்ணங்கள் எப்படிவேனா இருக்கட்டும்.. நீ நல்லவனா இருக்கனும்னு அவசியமில்ல..! அத அப்படியே பாத்தா.. அது.. அகம்..!!"

"......."

" பணம்...வசதி.. பட்டம்.. படிப்பு.. பேரு.. புகழ் இது எல்லாம் புறநிலை..!! நாம அந்தஸ்தோட இருக்கறது நம்ம அறிவாளித்தனம் இல்ல..!! அறிவுங்கறது மெய்ப்பொருள் காண்பது..!! புற நிலைல அடையற.. மேதமைக்கும்.. அக நிலைல அடையற.. அறிவுக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்ல..!! உண்மையான அறிவுன்றது அக நிழைல இருந்து தானே.. மலர்ந்து வரது.. ஒரு பூ மலர்றது மாதிரி..!! அதை வரவழைக்க முடியாது..!!''

''வரவழைக்க முடியாதுன்னா.. அப்பறம் எப்படி...நீ... இப்படி...??''

''நம்மோட இருப்பு நிலையே ஒரு பூ மாதிரி இயல்பு நிலைதான்..!! அத நம்ம நாட்டு சட்ட திட்டங்கள்.. சம்பிரதாய குல வழக்கங்கள்னு.. ஏகப்பட்ட திரைகள போட்டு மூடி வெச்சிருக்கோம்..!! அந்த திரைகள அகற்றினா போதும்..!! நம்ம அகநிலை இயல்பு நமக்கு புரிஞ்சுரும்..!!''

''ஓ..ஓ..!!''

''ஏதாவது புரிஞ்சுதா..??'' கௌரி கேட்டாள்.

''சரியா தெரியல..! பட் ரொம்ப நல்லா.. பேசறா..!! இந்த பேச்சு சும்மா வராது..! கிரேட்..!!'' என்று தன் தங்கையைப் பார்த்து வியந்து சொன்னான்  பூந்துகில்.

சௌமி சிரித்துக் கொண்டே மீண்டும் சொன்னாள்.
''ஒருத்தர இப்படி பாராட்டக் கூட.. ஒரு தகுதி வேனும் தெரியுமா..??''

இந்த இடத்தில் கேள்வியை சரியாக அமைக்க.. போதுமான வார்த்தைகள் இல்லை என்பது போல தோன்றியது அவளுக்கு.  வார்த்தை பற்றாக் குறையால்.. அவள் பேச்சின் அர்த்தம் மாற்றி புரிந்து கொள்ளப்படும் என்பதும் அவளுக்கு புரிந்தது..!!

அவள் நினைத்தது போலத்தான் நடந்தது..!

''ஏன்.. உன்ன பாராட்டற தகுதி எனக்கு இல்லையா..??'' என்று கேட்டான் பூந்துகில்.

''ஓ.. நீ எல்லாம் தெரிஞ்ச மேதை இல்ல..??'' கௌரி சிரித்தாள்.

''நான் மேதை இல்ல.. ஆனா நான் பாராட்டினதுல என்ன தப்பு..??'' பூந்துகில் கேட்க.. அதை விளக்கத் தெரியாமல் சௌமியை பார்த்தாள் கௌரி.

சௌமி உதட்டைப் பிதுக்கிப் புன்னகைத்தாள்..!!
''இதான் வார்த்தைகள்ள இருக்கற பிரச்சினை.. நாம ஒன்னு நெனைச்சு பேசினா.. அது வேற ஒரு பொருளை கொண்டு சேர்க்கும்..!!''

''இப்ப உன் அண்ணனுக்கு எப்படி புரிய வெக்கறது..??'' கௌரி கேட்டாள்.

''இங்க உதாரணம்தான் கை குடுக்கும்..!!'' என்றவள் மெல்லிய புன்னகையுடன் தன்  அண்ணனை பார்த்துக் கேட்டாள்.
''வானம் எல்லை இல்லாததுனு சொல்வாங்க இல்லையா..??''

''ம்ம்..??''

''அதை நம்பறியா..??''

யோசித்து சொன்னான்.
''ஆ.. நம்பறேன்.!!''

'' எப்படி..??''

''வானத்தோட எல்லைய இதுவரை யாருமே கண்டு பிடிச்சது இலலையே..??''

''அப்பறம் எப்படி வானத்துக்கு எல்லை இல்லேன்னு சொல்ல முடியும்..?? இது தர்க்கம்தான்..!! அவங்க சொல்றத யோசிக்காம  இருந்தா.. அப்படியே ஒப்புக்கற மாதிரிதான் இருக்கும்..!! ஆனா அத எப்படி உறுதி படுத்த முடியுது..??''

''என்னை குழப்பற சௌமி..??''

''திருத்திக்கோ.. நான் குழப்பல.. நீ குழம்பி போயிருக்க..!! உன் நிலையே குழப்பம்தான்..!! உனக்குள்ள நீ தெளிஞ்சிருந்தா.. நான் சொன்னப்பவே உனக்கு உண்மை புரிஞ்சிருக்கும்..!! இந்த உதாரனங்கள் எல்லாம் தேவை பட்டிருக்காது..!!''

பூந்துகில்.. குழப்பத்தில் தவித்த முகத்துடன் அவளையே பார்த்தான்.

 மெதுவாக எழுந்து அண்ணன் பக்கத்தில் போனாள் சௌமி..!!

''ரிலாக்ஸ் ப்ரோ..!! அது வேற உலகம்..!! அந்த பேச்சு வந்ததால அதை பேச வேண்டியதா போச்சு..!!'' சொல்லிக் கொண்டே அவன் தோளில் கை வைத்து மெல்லக் குனிந்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்..!

''எல்லாத்தையும்... எல்லாத்தையும் மறந்துட்டு.. நீ.. நீயா இருக்க பாரு..!! உன் தங்கையோட ஒரு சின்ன அறிவுரை.. முடிஞ்சவரை.. உன்னோட மேதமையை வெளிப்படுத்தற மாதிரி பேசாம.. இயல்பா.. எதார்த்தமா.. பேசப்பாரு.. உனக்கான மாற்றம் உனக்குள்ள நிகழ ஆரம்பிக்கும்..!!''

நீ இல்லா நேரம்- 1

  வணக்கம் நண்பர்களே.. !!

நான் எழுதிய  நூறாவது கதை.. இது.. !! நூறாவது கதை என்பதால்.. சற்றே மாறுபட்ட கோணத்தில்.. எனக்கு பிடித்தமான விதத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கேன்.. !!

இந்தக் கதை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை.. !! உங்களது கருத்துக்களை தவறாது பதிவிடுங்கள்..!!

-நன்றி.. !!




ஓஷோவின் சென் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்து போயிருந்தாள் சௌம்யா.. !!

 சென் சூத்திரங்கள் பற்றிய விளக்கம்.. மிகவும் அற்புதமாக இருந்தது..!! 

பனிப் பிரதேசத்தில் பூத்துக் குலுங்கும் ஒரு புதிய மலரின் இனிய பரவசம் அவளை ஆட்கொண்டது..!! பனி மழையில் நனைந்து மனமே சில்லிட்டுப் போனது போன்ற  புத்துணர்வு..!!

புத்தம் புதிய மலரின்.. மெல்லிய மடலில்.. புள்ளி புள்ளியாய் பொழிந்து கொண்டிருக்கும் பனித்துகள் போல.. அவளது ஆத்ம மலரை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.. அவளை ஆட்கொண்ட அந்த தெய்வீக உணர்வு.. !!

நரம்பு மண்டலங்களில் படர்ந்த.. பஞ்ச பூதங்கள் அவளது உடம்பை.. ஒரு சிறு துகளாக மாற்றி மிதக்க வைத்துக் கொண்டிருந்த... அந்த ஆன்ம உணர்வில்.. நிரம்பிப் போய் ஆழ்ந்து இருந்தவள்.. வீட்டின் முன்.. ஒரு ஆட்டோ படபடத்துக் கொண்டு வந்து நின்றதையோ.. அதிலிருந்து சில வருடங்களுக்கு முன்பு.. திடீரென ஒரு நாள் வீட்டை விட்டு போன.. அவளது உடன் பிறந்த அண்ணன் லக்கேஜுடன் இறங்கியதையோ.. அவள் கவனிக்கத் தவறியிருந்தாள்..!!

''ஏய்.. சௌமி.. அப்படி என்னடி படிச்சிட்டிருக்க..??'' என்ற குரல் கேட்டு.. தன் ஆன்ம பிரதேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள்.. உடலின் பொருட்டு.. சௌமியாக உணர்ந்தாள்..!!

தன் தோளைத் தொட்டு.. கலைத்தது யாரென பார்த்தாள் சௌமி.

 கையில் குழந்தையுடன் கௌரி நின்றிருந்தாள்..!!

அவளது கண்கள் சௌமியின் கையில் இருந்த புத்தகத்தை வருடிப் போனது.!

 கௌரியின் பக்கத்தில்.. உதட்டில் தவழும் புன்னகையுடன் நின்றிருந்தவனை பார்த்த.. அடுத்த நொடியே.. சடாரென எழுந்தாள்.

''அண்ண்ண்ணா...!!''

''சௌமி..!! எப்படி டா இருக்கே..??'' கண்களிலும்.. குரலிலும் அன்பும் பாசமும்.. ஏக்கமும் தவிப்பும் பொங்க கேட்டான் அவளது அண்ணன் பூந்துகில்..!!

''நான்' அப்படியேதான் இருக்கேன்.. உன் தங்கை சௌமிதான் நல்லா வளந்துட்டா..!!'' பக்கத்தில் போய் அண்ணன் கையை பிடித்தாள். ''நீ எப்படி இருக்கே..??''

''நான் நல்லாருக்கேன் சௌமி..!! நீங்க எல்லாம்..?? நீ எப்படி வளந்துட்ட..??'' தன் தங்கையின் அழகான வளர்ச்சியைப்  பார்த்து பரவசமடைந்தான்.

சிரித்தாள்.
''ஸாரிண்ணா.. உன்னை வரவேற்க.. இப்ப அப்பா இல்ல.. அம்மா இல்ல...!! நான் மட்டும்தான் இருக்கேன்..!! அப்பறம் நம்ம கௌரி அக்கா.. இந்த செல்லக் குட்டி.. சுருதி..!!''

''பரவால்ல..!! அப்பாம்மால்லாம்.. எங்க போனாங்க..??''

''அப்பா.. இன்னும் அதே பேங்க்தான்..!! காலைலயே போய்ட்டார்..!!''

''அம்மா..??''

''அம்மா.. டூ லேட்..!! இந்த மண்ணுலகை விட்டே போயாச்சு..!!'' என்று  அவள் மிகவும்  இயல்பாக  சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அந்த செய்தி அவனுக்கு பலமான அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும்..!!


''வாட்.. அம்மா.. எறந்துட்டாங்களா..?? எப்போ..??'' அவன் முகத்திலும்.. குரலிலும் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது..!!

''ரெண்டு வருசம் ஆச்சு..!! அம்மா போயி.." சாதாரணமாகச் சொன்னாள் சௌமி.

தலையை பிடித்துக் கொண்டான்..!!
''மை காட்..!!'' அதிர்ச்சியில் தலையை பிடித்துக் கொண்டு அப்படியே மடங்கி.. சோபாவில் உட்கார்ந்தான்..!!

அவனுக்கு இந்த செய்தி புதிது.. என்பதால் அவனது அதிர்ச்சி சற்று குறையட்டும் எனக் காத்திருந்தாள் சௌம்யா. 

உதட்டில் லேசான புன் முறுவலுடன்.. கௌரியின் மார்பில் அணைந்திருந்த குழந்தையின் கன்னத்தை மெல்ல கிள்ளினாள்..!! குழந்தை கைகளை ஆட்டிச் சிரித்தாள்..!!

சில நொடிகள் கழித்து  தன் அண்ணனை பார்த்து..
''காபி கொண்டு வரேன்..!!'' என மெதுவாக சொன்னாள் சௌமி.

கண்களில் நீர் திரள.. அவளை நிமிர்ந்து பார்த்தான் பூந்துகில்.

'' அ.. அம்மா.. எப்படி..??'' அவன் குரல் நடுங்கியது.

''மாரு வலி..!!''

''ஹார்ட் அட்டாக்கா..??'' அவன் குரல் உடைந்தது.

''ம்..ம்ம்..!! பெண்களுக்கும் இப்பல்லாம் சாதாரணமா வர ஆரம்பிச்சிருச்சே..?? அதோட.. அம்மா ஒரு குட்டி யானை மாதிரி....'' மெல்லிய புன்னகையை உதட்டில் தவழ விட்டுக்கொண்டு சொன்னாள்.

அவளது இந்த வினோதமான முக பாவனைகள் அவனுக்கு.. கொஞ்சம் அதிகப்படி என தோன்றியிருக்க வேண்டும்..!! 

அதைப் பற்றி.. சௌமி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. கௌரியை பார்த்து..
''நீ உக்காருக்கா..!!'' என சொல்லி விட்டு.. அவனது லக்கேஜ்களை எடுத்து வைத்தாள்..!!

அவன் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

 சௌமி போய் காபி போட்டுக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்..!!

 வாங்கிக் கொண்டு கௌரியை பார்த்தான்.
''கௌரி.. காபி..??''

''நான் அதிகமா எடுத்துக்கறதில்ல..!! நீ குடி..!!'' என கனிவுடன்  சிரித்தாள் கௌரி.

''குழந்தை யாரோடது..?? உன்னோடதா..??''

''ம்.. ம்ம்..!!'' சிரித்தாள்.

''உன்ன மாதிரியே.. அழகா இருக்கு..!! பேரு..??''

''சுருதி ..!! உனக்கு மெரேஜ் ஆகிருச்சா பூ..??''

வறண்ட உதடுகளை மலர்த்தி சிரித்தான்.
''ம்கூம்..!! இல்லே..!!''

''உன்ன திரும்ப பாப்போம்னு.. நாங்கெள்ளாம் நெனச்சுக்கூட பாக்கல..!!''

மெலிதாக புன் முறுவல் செய்தான் பூந்துகில். 

அம்மாவின் இறப்பை.. அவன் ஏற்றுக் கொண்டான் என்று புரிந்தது..!! சௌமியை பார்த்தான்..!!
''நான் போட்ட லெட்டர் கெடைச்சுதா..??''

''ம்.. ம்ம்..!! கெடைச்சுது..!!''

''அப்பாகிட்ட சொன்னியா..??'' அவன் ரொம்பவும் எதிர் பார்ப்புடன் வந்திருக்கிறான் என்று புரிந்தது. ஆனால் அவன் எதிர் பார்த்த விதமாக அவனை யாரும் வரவேற்கவில்லை..!!

அதே நேரம்.. கௌரியின் அம்மாவும்.. தம்பியும் வீட்டுக்குள் வந்தார்கள்..!!


பூந்துகில் எழுந்தான்.
''அத்தே..!! நிரு...!!''

''வாடா.. என் மருமகனே..!! பாத்து எத்தனை நாளாச்சு..?? நல்லாருக்கியா..?? எங்களையெல்லாம் அடியோட ஒதறிட்டு போக உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு..?? ஆளு நல்லா ஜம்முனு ஆகிட்டே.. கல்யாணம்லாம் பண்ணிட்டியோ..??'' அத்தை மிகவும் கனிவுடன் அவனை நலன் விசாரிக்க... சிறிது நேரம் அப்படியே போனது..!!

நீண்ட நேரம் கழித்துச் சொன்னான் பூந்துகில்.
'' நான் இருக்கப்ப இந்த வீடு கூட சாதாரண ஒரு வீடாத்தான் இருந்துச்சு..!!''

''இதெல்லாம் நீ போனதுக்கப்பறம்.. மாத்தி கட்னதுதான்..!!''

''அப்ப பாட்டி இருந்துச்சு..??''

''நீ போன ரெண்டாம் மாசம் உன் பாட்டியும் போய்ட்டா..''

எல்லோருடைய முகங்களையும் பார்த்தான் பூந்துகில்..!!

''உங்கள எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்..!! எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ்..!!''

''விடுடா.. நீ வந்ததே பெருசு..!!'' அத்தை அவனை சமாதானம் செய்தபின் சொன்னாள்.
'' உன் தங்கை சௌமியை நீ சாதாரண சௌமினு நெனைச்சிராத..''

சிரித்தாள் சௌமி.
''ஆமா.. எனக்கு ரெண்டு கொம்பு.. ஒரு வாலு.. நாலு காலு எல்லாம் இருக்கு..!! இல்லத்தே..??''

அத்தை.. அவனைப் பார்த்து சிரித்தவாறு சொன்னாள்.
''நீதான் வந்துட்ட இல்ல..?? உன் தங்கச்சியை பத்தி நீயே பாத்து தெரிஞ்சுப்ப..!!''

கௌரியிடமிருந்து குழந்தையை வாங்கினான் பூந்துகில்.
''என்ன பேர் சொன்ன..??''

''சுருதி..!!''

''ஒரே குழந்தைதானா..??'' அவன் குழந்தையின் கன்னத்தை வருடினான்.

நிருதி இடை புகுந்து சொன்னான்.
''இது.. கௌரிக்கு பொறந்த கொழந்தை இல்ல..''

'' அப்பறம்..???''

''இதோட அம்மா.. இறந்துட்டாங்க..'' கௌரியே சொன்னாள்.  ''அப்ப இது ஆறு மாச குழந்தை..!! எதிர்பாராத விதமா.. என்கிட்ட வந்த இந்த குழந்தைனால ஒரு சம்பவம் நடந்துச்சு..!! அன்னிக்கு இந்த குழந்தையை பாத்து.. உருகிப்போய்.. இந்த குழந்தைக்காக.. இவங்கப்பாவை இரண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டேன்..!! இவங்கப்பா ரொம்ப நல்லவர்..!!''

''ஓ...!!''

''எங்க கல்யாணம்கூட.. இப்ப ரெண்டு மாசம் முன்னதான் ஆச்சு..!!''

''கிரேட்..!!'' அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை..!!

அன்று இரவு...!! 

இருட்டு போர்வைக்குள் ஊர் மொத்தமும்.. உறங்கிக் கிடந்தது..!!

ஆனால்  சௌம்யாவின் அறையில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது..!!

''சௌமி..'' பாசமான குரல் கேட்டு கலைந்தாள் சௌமி.

அவள்  படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து பார்வையை திருப்பினாள். அவளுடைய அண்ணன் பூந்துகில்..!


''வாண்ணா..!!'' அவனை பார்த்து புன்னகைத்தாள்.

அவளருகே வந்து கட்டிலில் உட்கார்ந்தான்.
''இன்னும் நீ தூங்கல..??''

''தூங்கிருவேன்..!! நீ தூங்கல..??'' படுத்துக்கொண்டிருந்தவள் எழுந்து உட்கார்ந்தாள்.

''ப்ச்.. தூக்கம் வரல..!!''

'' ஏன்..??''

''நான் எதிர் பாத்து வந்தது வேற..!! ஆனா இங்க இருக்கற சூழ்நிலை வேற..!!''

'' என்ன எதிர் பாத்து வந்த..??''

''பாட்டி சந்தேகம்னாலும்.. அம்மா இருக்கும்னு நெனச்சு வந்தேன்..!! அம்மா சாவுக்காவது வந்து நான் கொள்ளி வெச்சு.. மொட்டை அடிச்சிருக்கனும்..!! எல்லாம் என் தப்புதான்..!! என்னை பத்தின எந்த விபரங்களும் நான் உங்களுக்கு தரல..!!''

மௌனமாக தன் அண்ணனை பார்த்தாள் சௌம்யா.

ஒரு நீண்ட பெரு மூச்சுக்குப் பின் சொன்னான்.
''நீ கூட ரொம்ப மாறிப் போயிருக்க.. பழைய சௌமி இல்ல..''

'' உண்மைதான்..!!'' சிரித்தாள்.

அவள் முகத்தையே பார்த்தான்.
''நீ ரொம்ப அழகாய்ட்டடா..!! உன் முகமே.. அம்மா முகம் மாதிரி அவ்ளோ அழகா இருக்கு..!!''

சிரித்தாள் சௌமி.
''சத்யா.. என்னை பாக்கறப்பல்லாம்.. உன்னை பத்தி ரெண்டு வார்த்தையாவது பேசுவாங்க..!!"

''அதெல்லாம் நான் மறந்துட்டேன் சௌமி..!! ஏன்.. ? இந்த பந்த பாசங்களே என்னை விட்டு போயாச்சு..!! ஏதோ உன் மேல இருந்த பாசம் மட்டுமதான் என் மனசுல ஒட்டிட்டு.. அப்பப்போ.. உன்னை நெனைச்சு பீல் பண்ண வெக்கும்..!! இப்போ நீ எப்படி வளந்துருப்ப.. எப்படி மாறியிருப்பனு.. உன்ன நெனச்சு பாத்துப்பேன்..!! மத்தபடி இந்த காதல்... கல்யாணம்.. கண்றாவி எல்லாம்.. வேண்டாம்னு விட்டுட்டேன்..!!''

அவன் பக்கம் நகர்ந்து அவன் தோளில் தலை சாயத்துக் கொண்டாள் சௌமி.
''இப்பவும் லவ் இல்ல..??''

''சே.. ச்சே..!!'' அவள் தோளை அணைத்துக் கொண்டு கேட்டான்.
''நிருதியும்.. நீயும் கல்யாணம் பண்ணிக்க போறிங்களா..??''

''ஆமாம்..!! ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம்..!! எங்க கல்யாணம் நடக்க ரொம்ப நாள்கூட ஆகும்..!! நீ திரும்ப வந்ததுல அப்பாவுக்கும் ரொம்ப சந்தோசம்தான்..!! இப்பல்லாம் அப்பா.. முன்ன மாதிரி எதுக்கும் கோபப்படறதில்ல..!! ரொம்ப சாதுவா மாறிட்டாரு..!!''

''ம்..ம்ம்..!! எல்லாமே மாறித்தான் இருக்கு..!!''

மெல்லக் கேட்டாள்.
''சத்யாவுக்கு சொல்லட்டுமா..??''

''என்ன..??''

''நீ வந்துருக்கறதை...??''

''இல்ல.. வேண்டாம்..!! அவ அட்ரஸ் சொல்லு.. நானே போய் பாத்துக்கறேன்..!!!''

''சரி..!!'' என்றபின்  சிரித்தவாறு சொன்னாள் சௌமி.
''அவங்க பையனுக்கு உன் பேருதான்.. பூந்துகிலன்..!!''

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

இடையினம் -2

நான் மிகவும் களைத்துப் போய்.. ஸ்ரீமதியின் கையால்.. சூடாக.. மணக்க மணக்க காபி குடிக்கலாம் என்று ஆவலாக வீட்டுக்கு வந்தால்.. இங்கே நிலமை தலை கீழாக மாறிப் போயிருந்தது.. !!

ஹால் ஒரு பக்கம் அலங்கோலமாக கிடக்க.. நவன் ஒரு மாதிரி தளர்ந்து கிடக்கிறான். அதை விட.. தன் மனைவியை அறைக்குள் வைத்து கதவை வேறு பூட்டி வைத்திருக்கிறான்..!!

அப்படி என்ன நடந்து விட்டது இந்த வீட்டில்.. ?? அவளுக்கு ஏதாவது பைத்தியம் பிடித்து விட்டதோ.. ?? அவளுக்கு ஏன் பைத்தியம் பிடிக்க வேண்டும்...?? அப்படி வெறி வந்த நிலைக்கு அவள் போயிருந்தால்.. இவன் என்ன காரியம் செய்திருக்க வேண்டும்.. ?? இவன் ஆபீஸ் போனானா இல்லையா.. ??

'' ப்ரோ... இப்ப கதவ தெறக்க போறிங்களா இல்லையா.. ??'' கதவை 'படார்.. படார் ' என அடித்துக் கொண்டு கத்திக் கேட்டாள் ஸ்ரீமதி.

நான் நவனை பார்த்தேன்.
''என்னடா பண்ணி வெச்சிருக்க.. ?? ஏன் இப்படி பூட்டி வெச்சிருக்க.. ?? என்னாச்சு உனக்கு.. ?? இங்க என்ன நடந்துச்சு.. ??'' என நான் அவனைப் பார்த்துக் கேட்ட எந்த கேள்விக்குமே அவன் பதில் சொல்லவில்லை. !!

ஒரு பக்கம் ஸ்ரீமதி தொடர்ந்து கதவை இடித்தபடி.. என்னைத் திறக்கச் சொல்லி கத்திக் கொண்டிருந்தாள். !! 

சாவி சோபாவில் அவனுக்கு பக்கத்தில்தான் கிடந்தது.! நான் சாவியை எடுக்கப் போனேன்.!!

''ப்ளீஸ்.. வேணாண்டா.." என்று  என்னை தடுத்தான்.


"டேய்.. ஏன்டா.. ??"


" அவ இப்ப நார்மல் மூடுல இல்ல.. செம காண்டுல இருக்கா..! வெளில வந்தான்னா.. என்னை இங்கயே கொலை பண்ணிருவா..!!'' என பரிதாபமாகச் சொன்னான் நவன்.

அவன் முகத்தில் உண்மையான ஒரு பயம் தெரிந்தது. !!

'' சரி.. என்ன பிரச்சினை சொல்லு.. ??'' என்றேன்.

அவன் சொல்லவில்லை. என்ன நடந்தது என்று என்னிடம் சொல்ல முடியாதவன் போல திணறினான்.. !!

'' சரிடா.. நான் இருக்கேன் இல்ல.. ? விடு நான் பாத்துக்கறேன்.. !! அதுக்காக நீ இப்படி டோர்லாம் லாக் பண்ணி வெக்க கூடாது.. !!'' எனச் சொல்லி விட்டு சாவியுடன் போய் கதவை திறந்து விட்டேன்.. !!

உள்ளே பத்ரகாளி மாதிரி உக்கிரமாக நின்று கொண்டிருந்தாள் ஸ்ரீமதி. 

அவள் முகமெல்லாம் வியர்த்து.. தலை முடி எல்லாம் கலைந்து.. கண்கள் கோபத்தில் சிவக்க.. வேகவேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.. !

 இப்போதும் அவள் மார்பை மறைக்க துப்பட்டா  இல்லை.  நவன் சொன்னதை போல.. அவனைக் கொன்று விடுவாளோ என்று ஒரு நொடி அச்சப் படும்படியாக.. நின்று கொண்டு இருந்தாள்.. !!

'' எ.. என்னாச்சு.. ஸிஸ்.. ??'' அவள் வெளியே வராதபடி.. வாயிலை அடைத்து நின்று கொண்டு கேட்டேன்.


'' இருக்கானா அவன்.. ?? தள்ளு.. !! நான் ஜெயிலுக்கு போனாலும் பரவால்ல.. !! அவனை நான் இன்னிக்கு கொலை பண்ணத்தான் போறேன்.. !!'' என கோபமாக கத்திப் பேசினாள்.

கோபத்தில் அவள் முகம் சிவந்திருந்தது.  அவள் மார்புகள் குபுக் குபுக் என வேகமாக ஏறி இறங்க.. தொண்டை நரம்புகள் புடைத்து அடங்கின. !!

'' ஸிஸ்.. கூல் டவுன் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. எனக்காக.. என்னாச்சுனு சொல்லுங்க.. ??''


'' நீ தள்ளு ப்ரோ.. மொதல்ல நான் அவனை கொலை பண்ணிட்டு.. அப்பறம் உனக்கு பதில் சொல்றேன்.. !!'' அவள் என்னை தள்ளி விலக்க முயல வந்தாள்.

நான் நன்றாக அடைத்து நின்று கொண்டேன்.
''ஸிஸ்.. நீ இப்ப நார்மலா இல்ல.. தயவு செய்து நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்.. !! இரு.. என்ன ஆச்சு சொல்லு.. ??''

இப்போது என்னைக் கடுமையாக முறைத்தாள் ஸ்ரீமதி. அவளது கண்களின் கோபக் கனல் அத்தைனையும் திரட்டி என்னை சுட்டெரிப்பது போல முறைத்தாள்..!!
''ப்ரோ.. மரியாதையா சொல்றேன்.. விலகு... ''


'' ஒரு நிமிசம் இரு ஸிஸ்... '' நான் சொல்லி முடிக்க...


'' ஆஆஆஆ.. ச்சீ தள்ளு... '' என அடுத்த நொடி ஆவேசமாக என்னை இடித்துத் தள்ளிக் கொண்டு வெளியே போனாள் ஸ்ரீமதி.!!

நான் சுதாரித்து.. அவளுக்குப் பின்னால் ஓடினேன். எனக்கு முன்னால் வேங்கை போல பாய்ந்து போன ஸ்ரீமதி..

 நவனை சோபாவில் தள்ளி.. தன் இரண்டு கைகளாலும் வெளுத்து வாங்கத் தொடங்கினாள்.. !!

தன் மேல் விழும் அடிகளை வாங்கிக் கொண்டு.. தடுக்க முயன்று கொண்டிருந்தான் நவன்..!! அவன் திருப்பி எல்லாம் தாக்கவில்லை..!!

'' ஸிஸ்.. ஸிஸ்.. ஸிஸ்.. ஸிஸ்... '' என நான் அவளை தடுக்க முயற்சி செய்தபடி.. நவனுக்காக கெஞ்சிக் கொண்டிருந்தேன்.. !!

ஒரு பத்து நிமிடங்களுக்கு பக்கமே அவனைப் புரட்டி எடுத்திருப்பாள். அப்பறம் ஆவேசம் தனிந்தவளாக.. அவள் சோர்ந்து போய்.. எதிர் சோபாவில் தொப்பென விழுந்த போது.. நவனின் கன்னம் ஆப்பிள் போல சிவந்து போயிருந்தது..!!

பின்ன.. சும்மாவா.. தர்ம அடி அல்லவா.. ?? அதுவும் கன்னம் கன்னமாக... !!

அப்பறம் கொஞ்ச நேரம் மயான அமைதி.. !! 

நவன் சோபாவின் பின்னால் தலை சாய்த்து.. கண்களை மூடியிருந்தான்.! அவன் சட்டை பட்டன்கள் தெறித்து.. அங்கங்கே கிழிந்து போயிருந்தது..!! அவன் மார்பில் கூட தன் விரல் நகங்களால் கீறி வைத்திருந்தாள்.. !!

அதே போலத்தான்.. எதிர் சோபாவில் விழுந்த ஸ்ரீமதியும்.  பின்னால் சாய்ந்து இன்னும் வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். 

அவள் டாப்சு தளர்ந்து.. அவளது  கிளிவேஜையும் தான்டி.. நெருக்கமான மார்புகளின் கோடு என் கண்களுக்கு படு கவர்ச்சியாக தெரிந்தது.. !!

இத்தனை களேபாரத்திலும்.. இவள் அழகு மட்டும் எத்தனை அழகாக ஜொலிக்கிறது.. ?? அந்த தங்கக் கனிகளின் தரிசனம் என்னை இன்பமாய் தழுவியது.. !!

'ச்ச.. எந்த நேரத்தில் என்ன காரியம் செய்கிறேன்..நான் ?' சட்டென சுதாரித்தேன்.

அவர்கள் இரண்டு பேரும் கண்களை மூடிக்கொண்டு இருக்க.. நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.. !!

முதலில் நவன்தான் கண்களை திறந்தான். தன் மனைவியைப பார்த்து விட்டு.. அப்பறம் என்னைப் பார்த்தான்.. !!

' என்னடா ஆச்சு ?' கண்களாலேயே கேட்டேன்.

அந்த நிலையிலும் மெலிதாக புன்னகை காட்டினான்.. !! 

இவ்வளவு அடிகளை வாங்கிக் கொண்டு அவனால் எப்படி சிரிக்க முடிகிறது என எனக்கு வியப்பாக இருந்தது.. !!

அவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்ள... நான் மெதுவாகப் போய்.. ஹாலில் சிதறிக் கிடந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தேன்.. !! 

சில உடைந்த பொருட்களை விட்டு விட்டு.. உடையாத பொருட்களை எடுத்து வைத்து விட்டுப் பார்த்த போது.. ஸ்ரீமதி எங்கோ வெறித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தாள்.. !!

'' ஸிஸ்... !!'' நான் மெதுவாக அழைக்க... மெல்ல முகம் திருப்பி என்னைப் பார்த்தாள்.

நவனும் கண்களை திறந்தான்.!

'' எனக்கு ஒரு காபி கிடைக்குமா.. ?? நான் ரொம்ப டயர்டா இருக்கேன்.. !!''  என் மேல் எடுத்து எறிவதற்கு அவள் கை பக்கத்தில் எந்தப் பொருளும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின் கேட்டேன்.

என்னை முறைத்தாள் ஸ்ரீமதி. நான் சிரிக்க.. நவனைத் திரும்பி பார்த்தாள். இரண்டு பேரின் விழிகளும் ஒரு நொடி சந்தித்து விலகியது..!!

ஒரு பெருமூச்சுடன் சோபாவை விட்டு எழுந்தாள் ஸ்ரீமதி.!! டாப்ஸை இழுத்து விட்டுக் கொண்டு  மிகவும் தளர்ந்த நடையுடன் கிச்சன் நோக்கிப் போனாள்.. !!

சோபாவில் அவள் உட்கார்ந்திருந்து இடத்தில் இப்போது நான் உட்கார்ந்தேன். என் குரலை வெகுவாக தனித்துக் கொண்டு கேட்டேன்.

'' என்னடா பிரச்சினை.. ? சொல்லேன்.. ??''
'' இப்ப வேண்டாம். !! நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்தர்றேன்.. !!'' என அவனும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு எழுந்து போனான்.. !!

நான் எழுந்து போய் டிவியை ஆன் பண்ணி.. வால்யூமைக் குறைத்தேன்..!!

 நவன் முகம் கழுவி.. தலை வாரி.. உடை மாற்றிக் கொண்டு வர... கிச்சனில் இருந்து ஸ்ரீமதியும் இரண்டு காபி கப்களுடன் வந்தாள். !!

என் வார்த்தைக்கு அவள் மதிப்புக் கொடுத்து.. எனக்காக காபி கலந்து கொண்டு வந்த அவளது பண்பை எண்ணி.. வியந்தேன்.

'' தேங்க்ஸ் மை டியர் ஸிஸ்... '' என்றேன்.

அவள் இன்னும்  இறுகிய முகத்துடன்  என் பக்கத்தில் உட்கார்ந்து அவள் காபியை உறிஞ்சினாள். 

நவன் பரிதாபமாக எங்களைப் பார்ப்பதைப் போலிருந்தது. !!

'' ஸாரி ஸிஸ்.. காபி இவ்ளோதானா.. ??'' லேசான தயக்கத்துடன் மெதுவாகக் கேட்டேன்.


'' இருக்கு.. போய் எடுத்து குடிக்க சொல்லுங்க. !!'' என அமைதியாகச் சொன்னாள்.

ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வியப்பைக் காட்ட முடியாது. !! நான் சொல்லும் முன்பே.. நவன் எழுந்து கிச்சன் போனான்..! 

அவனும் காபி கப்புடன் வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்து கொள்ள.. மூவரும் அமைதியாக.. டிவியை பார்த்தபடி காபியை உறிஞ்சினோம்.. !!

'' காபி சூப்பர்ப்பா இருக்கு ஸிஸ்.."


".........."


" தேங்க் யூ ஸிஸ்...!!'' நான் அவளை இயல்பாக பேச வைக்க நினைத்தேன். ஆனால்  அவள் என்னைப் பார்க்கக்கூட இல்லை. !!

'' என்னாச்சு ஸிஸ்.. கொஞ்சம் டென்ஷன் ஆகாம.. சொல்லுஙகளேன்.. ப்ளீஸ்ஸ்ஸ்... ??'' நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெஞ்சலாக கேட்டேன்.

காபியை உறிஞ்சியபடியே மெதுவாக எழுந்தாள். ஒரு கையில் காபி கப்பைப் பிடித்தவாறு அவளது பெட்ரூம் நோக்கி  போனாள். 

நான் நவனை கேள்விக் குறியுடன்பார்த்தேன்.  அவனும் புரியாமல் குழப்பமாக உதட்டைப் பிதுக்கினான்.. !!

இடது கையின் இரண்டு விரல்களால்.. ஒரு முனையில் பிடித்தபடி ஒரு ரெட் கலர் பிராவை தூக்கிக் கொண்டு.. பெட்ரூமிலிருந்து  வந்தாள் ஸ்ரீமதி.. !!

அதன் ஒரு பக்கம் ஸ்ட்ராப் அறுந்து போயிருந்தது.. !! அதை நேராக என் முகத்தின் முன்னால் கொண்டு வந்து காட்டினாள்.. !! நான் திகைத்தேன்.. !!

பிராவை எதுக்கு இவள்.. இப்படி என் முகத்தின் முன்னால் பிடித்து ஆட்டிக் காட்ட வேண்டும்.. ??

'' ஸிஸ்.. என்ன இது.. இட்லி துணியை காட்டறீங்க.. ??'' என நான் சிரித்தேன்.

அவ்வளவுதான்.. !!

 அடுத்த நொடி அதை என் முகத்தின் மேல் கோபமாக விட்டெறிந்தாள் ஸ்ரீமதி .... !!!!!